Jan 29, 2007

போக்கிரி- விமர்சனம்

"இந்த பொங்கலுக்கு செம்ம collection தான்" இப்படினு ஒரு டயலாக் போக்கிரி படத்தில்... உண்மைதான் போங்க! வெளுத்து வாங்கிட்டாரு நம்ம தளபதி. இயக்குனர் பிரபுதேவாவுக்கு இப்படி ஒரு திறமையா என்று முக்கில் விரல் வைக்கும் அளவிற்கு தனது முத்திரையை பதித்துவிட்டார்.

கதைபடி பார்த்தா.. அதே ரவுடி, போலிஸ், பழிவாங்கும் கதை தான்!அரைத்த மாவு தான்! இருந்தாலும் இந்த மாவை புது வடிவில் ஒரு சூப்பர் தோசையாக மாற்றியுள்ளார் இயக்குனர்! இந்த படத்தின் மிக பெரிய plus விஜய், அசின், நெப்போலியன் and பிரகாஷ்ராஜ். நான்கு பேரும் சும்மா பூந்து விளையாடி இருக்கிறார்கள் நடிப்பு களத்தில்.

ஜோதிகாவின் இடத்தை பிடிக்க யாரால முடியும்! குறும்புத்தனமா அதே சமயத்தில் சிரியஸா நடிக்க யாரால முடியும் அப்படினு நம்ம யோசிச்சிகிட்டு இருக்கோம். அதுக்குலாம் பதில் சொல்ல வந்துட்டார் அசின். பாடல் காட்சிகளிலும் சரி, நடிப்பிலும் சரி, நம்ம அசின் இன்னோரு படி மேலே போய் இருக்கிறார்.

நெப்போலியனின் dialogue delivery மிகப்பிரமாதம்! பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் பேசும் காட்சியில் நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறார்! simply superb! அப்பரம் நம்ம பிரகாஷ் ராஜ்... வில்லனாக இருந்தாலும் பல சமயங்கில் நல்ல காமெடி செய்து நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார்.

திரைக்கதையின் விறுவிறுப்பு பாடல் காட்சியில் இருந்தது. ஒவ்வொரு பாடலும் ஒரு வகை. நடன அமைப்பு வித்தியாசம்! பாடல்கள் அனைத்தும் சூப்பர் hit! மணிஷர்மாவிற்கு ஒரு ஓ போட வேண்டும்! விஜயின் ராசியான இசையமைப்பாளராக ஆகிவிட்டார்! பாடல் காட்சியில் புதுமை! கண்டிப்பாக 2007 ஆண்டில் சிறந்த பாடல்களில் ஒன்றாக போக்கிரி பட பாடல் இடம் பிடிக்கும்.
பாடல்களில் வரும் உடைகளிலும் புதுமை!அது என்னமோ தெரியுல்ல.. அசினுக்கும் விஜயிக்கும் மாம்பழத்திற்கும் அப்படி ஒரு ஒற்றுமை! சிவகாசியில் "வடு மாங்க.." சொல்லி பாடிய இவர்கள் இப்படத்தில் "மாம்பழமா மாம்பழம்.. மல்கோவா மாம்பழம்" எனப்பாடி ஆட்டம் போட வைத்துள்ளார்கள்! கூடிய விரைவில் "மாம்பழம்" எனப் படத்தலைப்பு வைத்து நடித்தாலும் ஆச்சிரியம் இல்ல!

விஜய் படம்னா என்ன அப்படி பெரிசா இருக்கும்.. அதே மாதிரிதானே நடிக்குறாரு.. அப்படினு பலர் எண்ணலாம். ஆனால் இந்த படத்தில் அவர் சற்றே வித்தியாசமாக நடித்து இருக்கிறார் என்றே சொல்லவேண்டும். அவர் அவராகவே இருந்து நடித்தது அருமை! அதுவும் அந்த introduction scene..நம்ம ஆளுங்கலாம் எப்படிதான் இப்படி யோசிக்குறாங்கனு தெரியுல்ல.. முன்பு எல்லாம், ஹீரோ வந்தால்.. காலை மட்டும் காட்டுவார்கள், பிண்ணாடி பலத்த காற்று வீசும்.. இல்லை என்றால்.. பூ மேலேந்து விழும். இப்படி போய்கிட்டு இருந்துச்சு.. ஆனா இந்த படத்துல, விஜய் முதல் சீனிலே ரவுடிகளால் துரத்தபடுவார்... அங்க ரோட்டுல இருந்த காய்கறி கூடையை தள்ளிவிட்டுடு வாரு... தளபதி அப்படி மேலே freeze.. காய்கறிகள் அவரு மேலே விழும்... shot freeze..அப்படியே 360 degree angle ஒரு சுற்று... பக்கத்துல உட்கார்ந்து படம் பார்த்த என் சித்தி மகள் ஒரே whistle!! ம்ம்ம்... இப்ப்டி போகுதுங்க..

இந்த படத்தின் இன்னொரு பலம். வசனங்கள்!! punch dialogues too! பல இடங்களில் பளிச் வசனங்கள் திரைக்கதைக்கு மெருகு ஊட்டியுள்ளது.

1) அசின் தன்னை பிடித்திருக்கா என்று விஜயிடம் கேட்க, விஜய் பிடிக்கலை என்பார். அதுக்கு அசின் "பதில் சொல்லாதே.. உண்மைய சொல்லு!" என்பார்.

2) விஜயின் punch dialogue "நான் ஒரு தடவ முடிவு பண்ணிட்டேனா, என் பேச்சை நானே கேட்க மாட்டேன்"

MINUS:-
தமிழ் படம் என்றாலே சில குறைகள் இருக்கதான் செய்யும். அதுக்கு இந்த படம் ஒரு விதிவிலக்கு அல்ல. வடிவேலு காமெடி அவ்வளவாக எடுப்படவில்லை! அசினோடு சுட்டும் விழி சுடரே பாடலுக்கு ஆடி ரசிகர்களை சிரிக்கவைத்ததும் மட்டுமே அவர் அதிகபடியாக செய்து காமெடி! மற்றபடி தொய்வு அடைந்த வடிவேலு காமெடி!

நிறைய ரத்தம். நிறைய வெட்டு குத்து! இதுவே படித்தில் பாதி பகுதியை எடுத்து கொண்டது. இன்னும் கொஞ்சம் family orientated matters இருந்திருந்தாலும் தாய்மார்களுக்கு பிடித்திருக்கும். (ஏன்னா படத்தை பார்த்த எனது சித்தி.. "என்னய்யா ஒரே சண்டையா இருக்கு, பாட்டு மட்டும் இல்லனா, படம் ஒரே போரு அடித்திருக்கும்" என்றார்.)

கிளைமெக்சில் கொஞ்சம் வேறு விதமாகவோ அல்லது ஒரு சின்ன திருப்புத்துடன் முடித்திருக்கலாம். கிளைமெக்ஸ் கொஞ்சம் சப்புனு முடிச்சுட்டான்!


படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த நாங்கள் (அத்தை, சித்தி குடும்பத்தாருடன் நானும்), வீட்டுக்கு பேருந்தில் போவதா அல்லது taxiயில் செல்வதா என்று பேசிகொண்டு இருந்தோம்... சரி பேருந்தில் போகலாம் என்று சிலரும்.. taxiயில் போகலாம் என்று சிலரும் பேசிக் கொண்டு இருந்தார்கள். உடனே நான் " சிக்கிரம் சொல்லுங்க.. நேரம் ஆச்சு. முடிவா என்னதான் சொல்லுறீங்க" என்றேன்.

அதுக்கு என் சித்தி மகன், நான்கு வயது தான் இருக்கும்.. உடனே " நான் ஒரு தடவ முடிவு பண்ணிட்டேனா, என் பேச்சை நானே கேட்க மாட்டேன்." என்றான். ஹாஹாஹா... அங்க நிற்கிறாரு நம்ம தளபதி! இந்த படம் ஜெயித்துவிடும் என்று நினைத்துகொண்டேன்.

மொத்ததில், பொங்கல் படங்களில் தளபதி முன்னிலையில் இருக்கிறார் (பாவம் தல அஜித்)விஜய் ரசிகர்களுக்கு இந்த பொங்கல் போக்கிரி பொங்கல்தான் போங்க...

போக்கிரி- சூப்பர் பொங்கல் விருந்து!

Jan 14, 2007

சரணடைந்தேன்!

சும்மா பார்க்கிறேன் என்று
சூராவளியை ஏற்படுத்தினாய்.
என் வேலையை செய்யவிடாமல்
பார்வையினாலேயே என்னை
உன் பக்கம் இழுத்தாய்!
தொடாமலேயே என் அழகை
அளவெடுத்தாய்.
காதோரம் கவிதை பாடினாய்
கழுத்தோரம் வீணை மீட்டினாய்
எல்லாம் பிடித்தும்
பிடிக்காதவாளாய் நான் நடித்தேன்
ஒரு கணம் என்னை பார்த்து
"ஐ லவ் யூ" என்றாய்!
நடிப்பை தொடர முடியாமல்
உன்னிடம் சரணடைந்தேன் நான்!

Jan 2, 2007

காதல் காதல் காதல்!

முழுங்கி விடும் பார்வையில்
என்னை மூழ்கடித்தாய்
முத்தம் தருகிறேன் என்று
என் மூச்சை நிறத்தினாய்.
வெட்கத்தை வேண்டுமென்றே
வரவழைத்து ஏன்னடா
என்னை இப்படி கொல்கிறாய்?