Mar 27, 2008

இது தான் தல-கனம்!

ஆச்சிரியம் ஆனால் உண்மை! இவர் ஒரு கூலி! பேருந்தில் பொருட்களை ஏற்றுபவர். இவர் பெங்களூரில் வேலை பார்க்கிறார். இப்போது பேருந்துகள் பெரிய பொருட்களைகூட ஏற்றுமதி செய்கின்றன. பொதுவாக பேருந்து கீழே இருக்கும் பெட்டியில்தான் பொருட்களை வைப்பார்கள். ஆனால், அங்கே இடம் இல்லை என்றால், பேருந்திற்கு மேல் இருக்கும் இடத்தில் வைப்பார்கள். ஆனால்.. இவர் எதை எப்படி வைக்கிறார் என்று பாருங்கள்!!

இந்த மோட்டார் வண்டியின் இடை 200kg
ஆனால் ஒரு வண்டியை மேலே வைப்பதற்கு இவருக்கு கொடுக்கப்படும் கூலி Rs20 மட்டுமே!!

தலக்கனம் பிடித்தவர்கள் ஒரு புறம் இருக்கு. இவர் அனுபவிக்கும் தல-கனம் என்னவென்பது??

Mar 23, 2008

கல்லூரி திருவிழா(??)


"ஏய் மச்சி, மார்ச் 22nd 'அக்னி' ஷோ நடக்குது. நம்ம எல்லாம் போகனும். சீனியர்ங்கற முறையில நம்ம கல்லூரி ஷோ கண்டிப்பா போகனும். எல்லாரும் வந்துடுங்க. எல்லாருக்கும் டிக்கேட் புக் பண்ணியாச்சு"- என்று ஸ்ம்ஸ் அனுப்பினான் நண்பன் ஒருத்தன். இந்த நிகழ்ச்சி எங்க கல்லூரியில் இரு வருஷங்களுக்கு ஒரு முறை நடத்தும் நிகழ்ச்சி/போட்டி. இந்நிகழ்ச்சியில் பாட்டுப்போட்டி, நடனபோட்டி மற்றும் நாடகப்போட்டி இருக்கும். மற்ற கல்லூரிகள் பங்கேற்கும். அதற்கு எங்க கல்லூரிதான் ஏற்பாட்டாளர்க்ள் ஒருங்கிணைப்பாளர்கள் எல்லாம்.

சனிக்கிழமையாச்சே, கண்டிப்பா போகனுமா? ஏகப்பட்ட வேலை இருக்கே.. அப்படின்னு யோசிக்கும்போது 'இல்ல இல்ல.. நீ கண்டிப்பா போகனும். மூன்று வருஷத்துக்கு முன்னாடி நீ அங்கதான் படிச்சே.. உன் கல்லூரிக்கு நீ மரியாதை கொடுக்கனும்' அப்படியாக்கும் இப்படியாக்கும்னு என் மூளை கொஞ்சம் ஓவரா பீலிங்ஸ் வீட்டுச்சு! அதனால் கிளம்பி போனேன்.


நிகழ்ச்சி டிக்கெட் பார்த்தா.. அவ்வளவு பெரிசா இருக்கு. 4 பக்கம் புத்தகம் மாதிரி இருந்துச்சு. அதை படிக்க முயற்சி செய்தோம். முயற்சி முயற்சியாகவே தான் இருந்தது. அதை தாண்டி ஒன்னு செய்ய முடியல. ஏனா, கருப்பு backgroundல் light சிவப்பு கொண்ட எழுத்தில் வார்த்தைகள் இருந்தால் எப்படி படிப்பது? அதுவும் font size 11 மாதிரி தான் இருந்துச்சு!


டிக்கெட்-டை வாங்கி கொண்டு உள்ளே நுழைந்தோம். இருபது பேருக்கு மேல் யாரும் கிடையாது. நிகழ்ச்சி ஆரம்பிக்கும் நேரம் 630. அப்ப மணி 620. ஆஹா கூட்டமே இவ்வளவுதானே என்று மனம் 'பக்'கென்றது. ஆனால் பரவாயில்லை... கூட்டம் நிறையவே வர ஆரம்பிக்க தொடங்கியது அதுக்கு அப்பரம். கொஞ்ச நேரத்தில house full ஆயிடுச்சு!! 630 நிகழ்ச்சி ஆரம்பிக்கவேண்டும், ஆனா நம்ம தமிழ்ர்கள் முறைபடி நிகழ்ச்சி 7 மணிக்கு கரக்ட்டா ஆரம்பிச்சுட்டாங்க!!

நிகழ்ச்சியில் ஒரு structure இருந்துச்சு. அதாவது ஒரு opening, closing.. இடையிடையே ஓரளவுக்கு சுமுகமாக நடந்தேறியது போட்டிகள். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் என்ற முறையில் அவர்கள் finale நடனம் ஒன்னு ஆடனும். அவர்களும் ஆடினார்கள். கடைசி பாடலாக 'secret of success' பாடலுக்கு ஆடியது நல்ல ஐடியா. ஆனால், மற்றபடி ரசிக்கும் வண்ணம் ஒன்னுமே இல்ல. மேடையே ரொம்ப சின்னதுதான். 5 பேருக்கு மேல ஆடமுடியாது. அதுலபோய் 25 ஆடின்னா என்ன அர்த்தம்!


மைக் செட், டிஸ்கோ effect lights என எவ்வளவோ செலவு பண்ணவங்க, அரங்கத்தை அலங்கரிக்க செலவு செய்யாதது ஏன் என்று தெரியவில்ல. அட, ஒன்னும் பண்ணாம இருந்தாலும் பரவாயில்ல. decoration என்ற பெயரில் 4 சேலையை கதவு ஓரமா தொங்கவிட்டது சரியான காமெடியா இருந்துச்சு. நான் முதல நினைச்சு ஏதோ அவங்க வீட்டு ஈரத்துணிய காய போட்டு இருக்காங்கன்னு!!


பார்வையாளர்கள் குறைந்த பச்சம் எதிர்பார்ப்பது, மேடையில் நடப்பதை கேட்க வேண்டும் என்பதே. ஆனால், அதுவே படு மோசமா இருந்துச்சு. ஒன்னுமே சத்தமா சுத்தமா கேட்கலை!! மைக்கை 2 km தூரத்துல வச்சு பேசினா இப்படி தான் ஆகும்!! எப்படியோ ஒரு சமயத்துல லேசா கேட்டுச்சு, மேடையில நடந்த நாடகத்தில் ஒரு பொண்ணு டையலாக் பேசினுச்சு "என் காதுல ஒன்னுமே விழலையே". என் பக்கத்துல இருந்த தோழி கொஞ்ச சத்தமா "எங்களும் தான்ய்யா!" என்றாள். ஹாஹாஹா... நாலு அஞ்சு வரிசைகளுக்கு முன்னாடி இருந்தவர்கள் எல்லாம் திரும்பி பார்த்து சிரிச்சுட்டாங்க.

நிகழ்ச்சி ஆரம்பித்து 45 நிமிடங்களிலே படு 'போர்' ஆகிவிட்டது. முக்கி விக்கி சிக்கி நிகழ்ச்சிய பார்த்தோம். எழுந்துச்சு போயிடலாம்னு இருந்தோம். ஆனா, எங்க நண்பன் ஒருத்தன் 'அதுலாம் வேணாம். நல்லா இருக்காது. மரியாதையா இருக்காது' என்றான். சரி என்ன செய்ய, நட்புக்கும் படித்த கல்லூரிக்கும் மரியாதை கொடுத்து உட்கார்ந்து நிகழ்ச்சிய பாத்தோம்.

காலம் காலமா நடக்கும் நிகழ்ச்சி தான்! ஆனால் அதில் ஏதேனும் வித்தியாசம் காட்டியிருந்திருக்கலாம். வெறும் பாடல் போட்டி என்று இல்லாமல்.. for eg) ஒரு theme கொண்ட பாடல் போட்டியாக இருந்திருக்கலாம். போட்டியில் இருந்த ஆடல்களும் சரி பாடல்களும் சரி.. ரசிகர்களை ஆட வைக்காமல் தூங்க வைத்துவிட்டன!! என்ன கொடுமை சார் இது!

இது எல்லாம் பரவாயில்ல.. ஆனா மேடையில போட்டிக்கான வந்த நீதிபதிகளுக்கு அன்பளிப்பு கொடுத்தபோது நடந்த விஷயம்தான் ரொம்ப பாவம்!! நீதிபதிகளை மேடையில் கூப்பிட்டார்கள். ஆனால், அவர்களுக்கு கொடுக்க வேண்டிய அன்பளிப்பு எங்கே என்று தெரியவில்லை. பாவம்!!

'என்ன ஒன்னும் இல்லை' என்று முகபாவத்துடன் நின்ற நீதிபதியையும் 'எனக்கு என்ன நடக்குதுன்னு தெரியல' என்று முகபாவத்துடன் நின்ற கல்லூரி தலைமையாசிரியரையும் (இவர் தான் நீதிபதிகளுக்கு பரிசு கொடுக்கவேண்டியவர்) பார்க்க ரொம்ப பாவமா இருந்துச்சு!! ரொம்ப அவமானமா போச்சு!!


நிகழ்ச்சிய தொகுத்து வழங்கும் பாணியில் சிறிது வித்தியாசம். சதாரணமா 2 host மேடையில் நின்னு பேசுவாங்க. ஆனா அப்படி இல்லாமல். ஒரு அரசருக்கு கலைகள் என்றாலே பிடிக்காது. அவருக்கு எப்படி இந்நிகழ்ச்சியில் வந்த பாடல்களையும் ஆடல்களையும் பார்த்து கலையின் மீது ஆர்வம் வந்தது என்பதுபோல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது வித்தியாசமாக இருந்தது. ஆனால், பேசியது ஒன்னுமே கேட்காததால் சுத்தமா அடிப்பட்டு போச்சு!!

பேசாம நாங்க நண்பர்கள் எல்லாம் அஞ்சப்பர் கடையில போய் கோழி பிரியாணி சாப்பிட்டு இருக்கலாம், டிக்கெட் வாங்கிய காசுக்கு பதிலா. ஒரு மாதத்திற்கு முன்னால் இந்நிகழ்ச்சியின் விளம்பரத்தை பார்த்தேன் - "எல்லாரும் கண்டிப்பா வரனும். நிகழ்ச்சியி கடைசியில ஒரு twist இருக்கு!"

நிகழ்ச்சி நேரத்தில் முக்காவாசி சமயம் பக்கத்தில் இருந்த தோழியிடம் பேசி கொண்டே இருந்ததால்( அப்பரம்.. 'போர்' அடிச்சா.. இப்படி தான் ஆகும்), ஒரு பக்கமா உட்கார்ந்து பேசிட்டேன். அதனால, இடுப்பு ஒரு பக்கமா twist ஆயிடுச்சு!! இந்த twist தவிர வேற எந்த twistயை பார்க்கல... மனசுலையும் ஒன்னும் நிக்கல்ல!!

Mar 21, 2008

பள்ளிகூடம் குகைக்குள்ளே இருக்குய்யா!

























சீனாவில் இப்படி ஒரு அதிசயம். குகைக்குள்ளே சிங்கம் கேள்விப்பட்டு இருக்கோம். இங்க பாருங்க.. குகைக்குள்ளே ஒரு பள்ளிகூடம்!! ஆச்சிரியமாகவும் அதிசயமாகவும் இருக்கு!

Mar 16, 2008

இப்ப நான் என்ன செய்ய!!??

நல்லா இருந்த என்னைய கோபப்படவச்சவரை என்ன செய்யலாம்??

வெள்ளிக்கிழமை காலையில காலேஜ்க்கு போய்கிட்டு இருந்தேன் என் கார்ல. எப்போதும் போலவே காலையில 845 கிளம்பிவிட்டேன். ஆனா ஒரே traffic jam. ரொம்ப தூரத்துல ஒரு பெரிய crane வண்டி பழுத்தாயிபோச்சு. அதனால போகிற வண்டியல்லாம் அடுத்த laneக்கு மாத்திகொண்டு இருந்தான்ங்க. சரி மெதுவாகதான் நகருது. நாமும் மெதுவாகவே போவோம்னு. ரொம்ப கவனத்தோட இருந்தேன். சும்மா rear mirrorலில் எவ்வளவு தூரத்துக்கு பின்னாடி வண்டி நிக்குதுனு எட்டி பார்த்தேன். அப்ப பார்த்தா, பயங்கரமா புகை வந்துகிட்டு இருந்துச்சு. ரொம்ப பயந்து போயிட்டேன். என்னடாது நம்ம வண்டியிலவா புகை வருது?னு பயமா போச்சு.


இப்படியே சிந்தனை போய்கிட்டு இருக்க, திடீரென்று, பின்னாடியிலிருந்து "டங்' அப்படி ஒரு சத்தம். பின்னாடி வந்து கொண்டிருந்த வண்டிக்காரன் என் வண்டிய இடிச்சுட்டான்!!! பாவி பாவி!! ஜிம்ல 2 மணி நேரம் உடற்பயிற்சி செஞ்ச பிறகு வேர்த்து கொட்டும்... ஆனா அவன் வண்டிய இடிச்ச அந்த ஒரு நொடியில நாடி நரம்பு எல்லாம் ஆடி போய் அருவி மாதிரி வேர்த்து கொட்டிவிட்டது.






சத்தம் கேட்டு என் வண்டிய off செய்துவிட்டு இறங்குவதற்குள் ஆயிரம் பயங்கள் என் மனதில் மின்னல் அடித்தன- "எப்படி அப்பாகிட்ட சொல்றது? அம்மா திட்டுமே? அப்பா வேற ஊருல இல்ல. அவரு வந்தாருன்னா என்ன ஆகும்? இனிமேல காலேஜ்க்கு போக வண்டி கொடுக்கலைன்னா..? என்ன செய்ய? பேருந்துல போயிட்டு வரவே நாலு மணி நேரம் ஆகுமே? உடம்பு தாங்குமா?" என்ற கேள்விகள்!!

இறங்கி என் வண்டிக்கு என்ன ஆயிற்று என்று பார்த்தேன். கடவுள் இருக்கான்ய்யா!! வண்டிக்கு ஒன்னும் ஆகல. கண்ணுக்கு தெரியாத ஒரு சின்ன கீறல். நல்ல வேளை!! வண்டி தயாரித்த toyota கம்பெனிக்காரன் நிஜமாகவே வாக்கு தவறாதவன் தான்! ரொம்ப ஸ்டார்ங்கா வண்டிய செய்து இருக்கான்.

புகை எங்கிருந்து வந்தது என்று பார்த்தால்... என் வண்டியை இடித்தவன் வண்டியிலிருந்து வந்தது. அவன் கார் என்ஜீன் ஏதோ கோளாறு. அதனால் புகை, அவனுக்கு வந்த பயத்தாலே.. உடனே பிரேக் போட முடியாமல் இடித்துவிட்டான். சற்று வயதானவர் தான்(இந்தியர் அல்ல). இருந்தாலும் தவறு அவர் மேலதான். ஒரு வண்டிக்கு பின்னால் இன்னொரு வண்டி போகும்போது அந்த இடைவேளை - 'இரு வண்டி gap' இருக்குமாறு ஓட்ட வேண்டும். இங்கு சிங்கையில் வண்டி ஓட்டும் உரிமம் எடுக்கும்போது கற்று கொடுக்கும் முதல் பாடமே இது தான்.

"என்னங்க இப்படி செய்து விட்டீங்க. சின்ன புள்ளைங்க நான். பயந்துட்டேன். பாத்து ஓட்டகூடாதா.. எனக்கு இப்ப காலேஜுக்கு லேட்டா போச்சு.." என்று கொஞ்சம் அதிகமாகவே உரத்த குரலில் அவரிடம் பேசினேன்(ஆங்கிலத்தில்). எனக்கு வந்த பரபரப்பில் என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவரும் மன்னிப்பு கேட்டார். ஆனால், தவறு என் மேல் இல்லாமல் இருந்தாலும் என் அப்பா என்னை திட்டுவாரே என்ற பயத்தினால் எனக்கு பயம் கலந்த பரபரப்பு அதிகமாயிற்று. வண்டியில் சின்ன கோடு விழுந்தாலே எங்க அப்பாவுக்கு பிடிக்காது. சரி போலீஸ்க்கு போகும் அளவுக்கு பெரிய பிரச்சனை இல்லாவிட்டாலும், அவருடைய கார் எண்ணையும் அவர் தொலைப்பேசி எண்ணையும் எடுத்து கொண்டேன்.

காலேஜ்க்கு ரொம்ப தாமதமாக சென்றேன். பாடத்தை கவனிக்க முடியவில்லை. அவரை அப்படி பேசி இருக்ககூடாது என்றது மனம். மன்னிக்க தெரிந்தவன் மனுஷன் மன்னிப்பி கேட்க தெரிந்தவன் பெரிய மனுஷன் என விருமாண்டி டையலாக் மனசுல வர..சரி வீடு திரும்பியது அவருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவர் வண்டி இப்ப எப்படி இருக்கு. மன்னித்துவிடுங்கள் நான் பேசியதற்கு என்று சொல்லலாம் என முடிவு செய்து அவர் கொடுத்த எண்ணுக்கு அழைத்தேன். ஒரு பெண் பேசினாள். அவர் என்னிடம் சொன்ன பெயரை சொல்லி இவர் இருக்காரா என்று கேட்டதற்கு, "சாரி மேடம் அப்படி யாரும் இங்க இல்ல. ராங் நம்பர்" என்றாள்.

அட பாவி, தவறான நம்பரை கொடுத்து ஏன் என்னை ஏமாற்ற வேண்டும். நான் அவரிடம் நம்பர் வாங்கும்போதே சொன்னே. போலீஸ்க்கு போக மாட்டேன். சும்மா ஒரு தகவலுக்குதான் எடுத்து கொள்கிறேன் என்று. தவறு இப்போ யாரு மேல? இது நடந்த பிறகுதான் உண்மையாகவே அவர் மீது எனக்கு கோபம் வருகிறது. 'தம்பி' படத்துல வர மாதவன் போல் என் மனம கத்தியது. "இப்ப நான் என்ன செய்ய!!??"

Mar 8, 2008

அத்தை மகன் சிவா (part 3)

முந்தைய பாகங்களை படிக்க, இங்க கிளிக் செய்க
அத்தை மகன் (part 1)

அத்தை மகன் (part 2)

(தொடர்ச்சி)..

சூரியன் தன் வேலையை முடித்து கொண்டு மறையும் வேளையில் தெரிந்த ஒரு அழகான இருள் கலந்த வெளிச்சம் வானத்தில் பரவி இருந்தது. கோபுரங்கள்போல் கம்பீரமாய் நின்ற கட்டடங்கள், நீல வண்ண கம்பளம்போல் ஓடிய கடல்நீர், வரிசையாய் சென்ற வாகனங்கள் என சிங்கையின் அழகை ராட்டினத்திற்குள் உட்கார்ந்து ரசித்து கொண்டிருந்தான் சிவா.

"என்னது சிவா ஒன்னுமே சொல்லாம இருக்கான்" என்று சீதாவின் மனம் படபடத்தது. அன்று சிவா ரொம்பவே அழகாக இருந்தான். வெள்ளை நிற சட்டை அவன் மாநிறத்திற்கு எடுப்பாய் இருந்தது. மீசையை கொஞ்சம் டிரிம் செய்து இருந்தான். மாறாத அந்த புன்னகை, அதில் சிறிதாய் விழும் கன்னத்தில் குழி. முகத்தில் தெரிந்த நிதானம். சுற்று சூழலை ரசித்துகொண்டிருந்த அவன் கண்கள், ஏதோ சொல்ல துடித்த அவனது உதடுகள் என்று அழகை பட்டியலிட்டு கொண்டே போகலாம்!

ஆனால் சீதா தான் ரசிக்க முடியாமல் திண்டாடினாள்! என்ன சொல்ல போகிறான் என்ற மனதுடிப்பு, போன semesterரில் படிக்காம போன calculus பரிட்சைக்குகூட இந்த அளவுக்கு பயம் இல்லை.

(ஆமா ஆமா.. காதலும் படிக்காம எழுதும் பரிட்சை தானே..)

அவஸ்தை தாங்க முடியாமல் தலை குனிந்து உட்கார்ந்து இருந்தாள் தனது கைபேசியை அப்படியும் இப்படியும் கைகளில் மாற்றி மாற்றி.

"எதாச்சு சொல்லேண்டா" என்று சீதாவின் உள்மனம் கோபம் கொண்டது.

அப்போது சிவா,
"ரொம்ப அழகா இருக்கே!" என்றான்.

சீதா ஒன்றும் புரியாதவளாய் ஆச்சிரியத்தில் தன் புருவம் உயர்த்தி சிவாவை தலை நிமிர்ந்து பார்த்தாள். சிவா ராட்டினத்தின் கண்ணாடி சன்னல் வழி பார்த்து

"ரொம்ப அழகா இருக்கே, சிங்கப்பூர்!" என்று சுற்று புறத்தை பார்த்து மறுபடியும் சந்தோஷத்தில் கூறினான்.

'ச்சே..'' என்று மனம் லேசாய் வருத்தப்பட்டது.

"சிவா?" என்றாள் தயக்கத்துடன்.

"ம்ம்ம்..." என்றான் சிவா.

"ஏதோ முக்கியமான விஷயம் சொல்லனும்னு வந்தே.. " என்று சீதா சொல்லி முடிக்கையில், சிவா,

"ரொம்ப நாளா சொல்லனும்னு இருந்தேன். ஆனா எப்படி சொல்லறதுதான் தெரியல... நேத்திக்கு அத்தை, கல்யாணம் அப்படி இப்படினு பேச்சை ஆரம்பிச்சுட்டாங்க. சீதா, நான் உண்மைய சொல்லிடுறேன். நான் ஒரு பொண்ண காதலிக்கிறேன். அவகிட்ட சொல்லலை! எப்படி சொல்றதுனு தெரியல.. நீ தான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்" என்று உடைத்துவிட்டான் உண்மையை மட்டுமல்ல சீதாவின் மனதையும் சேர்த்தே.

குழப்பம், கோபம், அழுகை அழுகையாய் வந்தது சீதாவுக்கு. மனம் கலங்கியது. வார்த்தைகள் தொண்டை குழியில் அடைக்க கஷ்டப்பட்டு பேச ஆரம்பித்தாள்,

"காதலா? நீயா... " என்று சீதா ஆச்சிரியமாக கேட்டாள்.

"இல்ல சீதா.. உனக்கு shockஆ தான் இருக்கும்... இருந்தாலும் நீதான் எனக்கு உதவி பண்ணனும். அவகிட்ட சொல்லனும். ஒரு ஐடியா கொடுக்கனும்." என்று சிவா சீதாவை பார்த்து கெஞ்சினான்.

தன் அழுகையை கட்டுபடுத்தி கொண்டு, "யாரு அந்த பொண்ணு, கோமதியா?" என்றாள்.

"ச்சே... ச்சே அவ இல்ல.. " என்று புதிர் போட்டான்.

"அப்புறம் வேற யாரு... நம்ம கிராமத்து பொண்ணா?" வினாவினாள் சீதா.

"ஊருல இருக்குற பொண்னு தான்." என்று மறுபடியும் ஒரு முறை சீதாவின் மனதை காயப்படுத்தினான் சிவா. இதற்கு மேல் சீதாவிற்கு பேச வார்த்தை வரவில்லை. காதல் சொல்லாமலேயே இறந்துவிட்டதே என்ற சோக கடலில் மூழ்கினாள் சீதா.

"நான் ஒரு ஐடியா வச்சு இருக்கேன். கேளு சீதா.. நான் அவளுக்காக ஒரு பரிசு பொருள் வாங்கி வச்சு இருக்கேன். அத அவகிட்ட அனுப்பபோறேன். அது மூலம் அவ என் காதலை புரிஞ்சுப்பா.. இந்த ஐடியா ஓகே தானே? " என்று சந்தோஷமாய் சிவா ஆர்வத்துடன் கேட்டான்.

சரி என்பதுபோல் மட்டும் தலையாய் லேசாக ஆட்டினாள் சீதா. 42 நிமிடங்கள் முடிந்துவிட்டன. ராட்டினத்திலிருந்து இருவரும் கீழே இறங்கினர். சிவா மகிழ்ச்சியுடன் சீதா வருத்தத்துடன் வீடு திரும்பினர். தன் அறையினுள் சென்ற சீதா சோகத்தையும் துக்கத்தை அழுகையால் தீர்த்துவிட்டாள். மனதில் விழுந்த இடி கண்களில் மழையாய் பொழிய, கண்கள் சிவந்தன. முள் காதலை குத்தியது. மனசு வலித்தது. தூங்காமல் இதை பற்றியே நினைத்து அழுது கொண்டிருந்தாள். கோபம் யார் மேல் காட்டுவது? சிவாவின் மீதா காதலின் மீதா அல்லது தன் மீதே காட்டுவதா என்று புரியாமல் கதறினாள். வீட்டில் இருக்க பிடிக்கவில்லை சீதாவுக்கு. அதனால் தன் தோழி வீட்டில் இரண்டு நாள் தங்கினாள், group project செய்கிறோம் என்று அம்மாவிடம் பொய் சொல்லிவிட்டு.

இரண்டு நாள் கழித்து வீடு திரும்பினாள். மனம் முழுமையாக ஆறுதல் அடையாவிட்டாலும் ஏதோ ஒரு அளவுக்கு மனம் சாந்தி அடைந்து இருந்தது. வீட்டின் வெளியே சிவாவின் காலணி இல்லை. சீதா வீட்டுக்குள் நுழைந்ததும், "அம்மா.. சிவாவோடு shoes வெளிலே காணும்? எங்க போய் இருக்காரு? என்றாள் தன் பையை சோபாவில் வைத்துவிட்டு.

"சிவா.. இப்ப தான் கிளம்பி போனுச்சு.. அவனுக்கு office quarters கிடைச்சுட்டு அதான் அங்க கிளம்பிட்டான். " என்று சீதாவின் அம்மா பதிலளித்தார்.

"ஓ எங்ககிட்டலாம் சொல்லிட்டு போக மாட்டாரோ..." என்று சற்று கோபம் கலந்து நக்கலுடன் கேட்டாள் சீதா.

"அட நீ ஒருத்தி.. அவன் உன்கிட்ட சொல்லிட்டு போகனும்னு இவ்வளவு நேரமா காத்திருந்தான். உன் handphoneக்கும் அடிச்சு பார்த்தான். நீ switch offல வச்சுருந்தே. உன் friend வீட்டுக்கு அடிச்சு பார்த்தா.. நீ கிளம்பி வந்துட்டேனு சொன்னா.."என்றாள் சீதாவின் அம்மா சற்று முறைத்து கொண்டே.

மனம் விரும்பாவிட்டாலும் கால்கள் தானாவே சிவாவின் அறையை நோக்கி சென்றன. சுத்தமா அவனது பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்து கொண்டான். சீதாவின் மனம் போல் அறையும் காலியாகவே இருந்தது. சீதாவின் பார்வை ஒரு முறை அறை முழுவதும் சுற்றிவந்தது. அப்போது அங்கு மேசையில் ஒரு பார்சல் தென்பட்டது. அதை எடுத்து பார்த்தாள். அது சிவா தன் காதலிக்கு அனுப்பவேண்டிய பார்சல். அதை அங்கேயே மறந்து வைத்துவிட்டான். வேண்டாம் என்று மூளை சொன்னாலும் சரி போய் கொடு என்று மனம் சொல்லியது.

"அம்மா.. சிவா இங்க மேசையில ஏதோ ஒன்னு வச்சுட்டு போயிட்டாரு." என்று அறையிலிருந்து சமையலறையில் இருக்கும் அம்மாவுக்கு கேட்கும்படி கத்தினாள்.

"அடடே அப்படியா... சரி சிக்கிரம் போ.. கீழ தான் car waiting areaவுல இருக்கும் சிவா. அங்கதான் ஆபிஸ் காரு வருதுனு சொன்னான்... சிக்கிரம் போ டி." என்று சீதாவின் அம்மா சொல்லி கொண்டே அறைக்குள் வந்தார்.

"சரி சரி.. போறேன்.. " என்றாள் சீதா சற்று வேண்டாவெறுப்பாக.

மெதுவாக நடந்து car waiting areaவுக்கு சென்றாள். அங்கு சிவா உட்கார்ந்து இருந்தான். சீதா வருவதை பார்த்த சிவா எழுந்து நின்று அவளை நோக்கி நடந்தான் புன்னகையுடன், "ஏய் சீதா... எப்படி இருக்கே..இரண்டு நாளா ஆள காணும்.project work எல்லாம் முடிச்சாச்சா... " என்றான்.

"ம்ம்..." என்று சீதா பார்சலை சிவாவிடம் நீட்டினாள்.

"என்னது.." என்றான் சிவா.

"உன் காதலிக்கு ஏதோ பரிசு பொருள் அனுப்ப போறேனு சொன்னே... அத மறந்து வச்சுட்டு வந்துட்டே.. " என்று பார்சலை அங்கே இருந்த பெஞ்சில் வைத்துவிட்டு நடையை கட்டினாள்.

"ஏய் சீதா..wait..என் காதலிக்கிட்டதான் கொடுத்துட்டு வந்தேன்..."என்று குழப்பினான் சிவா.

சிரித்து கொண்டே, " நீ தான் பா அது!" என்று கூறினான்.ஒன்றும் புரியவில்லை சீதாவிற்கு.

"நானா...?" சீதாவின் முகம் ஆச்சிரியத்தின் உச்சிக்கு சென்றது.

"ஏய்..ஓகே பா...i will stop my game. ம்ம்..நான் உன்ன காதலிக்கிறேன்." என்று அமைதியாய் சொன்னான் சிவா, ஆச்சிரியத்தால் விரிந்த சீதாவின் கண்களை பார்த்து.

"நீ என்னசொல்லுற சிவா... நீ என்னையவா but அந்த கிராமத்து பொண்ண காதலிக்குறேனே..சொன்னியே?" என்று குழம்பியவளாய் சீதா.

"ஆமா... ஊருல இருக்கானு சொன்னேன். சிங்கப்பூருல இருக்கானு சொல்லவந்தேன்." என்று 'சிங்கப்பூருல' என்ற வார்த்தையை அழுத்தி கூறினான். சீதாவின் மனம் பறந்தது. பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பித்தன சீதாவின் வயிற்றுக்கும் துண்டைக்கும். தன் காதலை சொல்லவந்து சிவாவே வந்து சொல்கிறான் என்று சீதாவிற்கு ஆனந்த தாண்டவம் ஆடவேண்டும் என்று இருந்தது.

"சரி நான் தைரியமா சொல்லிட்டேன்... இப்ப நீ சொல்லு." என்றான் சிவா.

"நான் என்ன சொல்ல... " என்று அப்பாவியாய் சீதா.

"ஏய் சீதா.. எனக்கு எல்லாம் தெரியும். நீ தான் என்ன முதல காதலிக்க ஆரம்பித்தே... all details i know ma" என்று ஹீரோ பேசுவது போல் பேசியதும் சீதாவிற்கு உலகமே சுற்றியது.

" அது உனக்கு எப்படி தெரியும்" என்றாள் சீதா.

"உன் blog தான் காட்டி கொடுத்துச்சு." என்றான் சிவா.

"blogல..எனக்கும் ஒன்னு இருக்குனு உனக்கு எப்படி தெரியும்? ஆனா.. என் blogக்குலக்குட என் பெயரையோ ஊரையோ போடலையே. அப்பரம் எப்படி.. என் friendsக்குகூட தெரியாதே. அப்பரம் எப்படி சிவா உனக்கு மட்டும்...தெரியும்" என்று சஸ்பென்ஸ் தாங்க முடியாதவளாய் சீதா கட கடவென்று பேசி முடித்தாள்.

" அன்னிக்கு உன் லேப்டோப் யூஸ் பண்ணபோது உன்னோட blogger.com இருந்து நீ logout பண்ணல. என்னடா இதுனு போய் பார்த்தா.... ஹாஹா... அப்பரம் எல்லாம் புரிஞ்சுச்சு எனக்கு!" என்று சிவா நடந்ததை கூறினான்.வெட்கம் மெதுவாய் அவள் முகத்தில் பரவியது.

"ஏய் என்ன இருந்தாலும்.. நீ புத்திசாலி மா.. இத்தன வருஷமா என்ன காதலிக்குற.. ஒரு நாள்கூட என்கிட்ட வந்து சொல்லல.. கள்ளி!" என சிவா, சீதாவின் பறந்துகிடந்த கூந்தலை சரிசெய்து பின்னால் போட்டு, தன் கைகளால் சீதாவின் கன்னங்களை தாங்கி,

"but seriously ma...நீ என்னைய எவ்வளவு காதலிக்கிறேனு புரிஞ்சுகிட்டேன் உன் blog மூலமா.. எனக்காக என்னனமோ செஞ்சு இருக்கே... i really like it ma. நீ ஊருக்கு வரும்போது எல்லாம் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். உன்கிட்ட நிறைய பேசனும்னு ஆசையா இருக்கும். ஆனா ஏதோ கொஞ்ச பயமா இருக்கும். எனக்கும் உன்மேல அப்பவே ஆசை இருந்துச்சு. உன்கிட்ட சொல்லதான் பயம். நீ இங்கயே வளந்த பொண்ணு வேற.. தப்பா என்னய நினைச்சுடுவீயோதான் அப்ப சொல்லல... இப்ப சொல்லுறேன் i love you சீதா!"

இப்படி நெருக்கமாக நின்று பேசியதும் சீதாவுக்குள் பல வேதியல் ஓட்டங்கள்! சீதா தன் கண்களால் அவன் கண்களை பார்க்க முடியவில்லை. காரணம் நாணம்!

சிவா, " சீதா, என்னய பாரேன் மா.. நான் இவ்வளவு அழகான்னு ஒரு நாளும் நினைச்சுது இல்ல. ஆனா நீ எழுதியத பார்த்து நான்கூட இவ்வளவு அழகானு ஆச்சிரியமா இருந்துச்சு.. எத்தன கவிதை... எத்தன விஷயங்கள். you are such a sweet girl ma!" என்றான் சிவா. அவன் பேச பேச வேதியல் மாற்றங்கள் ஓட, ஆட, தாண்டி குதித்து செல்ல, ஒரு கட்டத்தில் அழகாய் பூத்தது சீதாவுக்குள்.சிவா பேசி கொண்டே இருக்கும்போது, சீதா சிவாவை கட்டிபிடித்து,

"i love you மாமா
i love you மாமா
i love you மாமா" என்று பல முறை கூறினாள். எப்போதுமே சிவா என்று அழைத்த அவள் இன்று முதன்முதலாக மாமா என்று கூப்பிட்டாள். காதலில் மட்டும்தான் அழுகையும் சந்தோஷமும் சேர்ந்தே வரும். இக்கலவையின் வெளிபாடாய் ஒரு துளி கண்ணீர் சீதாவின் கண்களில்.

"என்னது மாமாவா?? எப்பலேந்து இது... இதுவரைக்கும் சிவா... இப்ப மாமாவா!!" என்று சிரித்தான் சிவா.

"ஏய் கிண்டல் பண்ணாதேப்பா..." என்று சீதா சிரித்து கொண்டே தன் கண்ணீரை துடைத்தாள்.

"சரி இப்ப என்ன பண்ணுறது..." என்றாள் சீதா.

"எதுக்கு" என்றான் சிவா.

"அப்பா அம்மாகிட்ட சொல்லவேண்டாமா..." என்றாள் சீதா.

அதுக்கு சிவா, " சொல்லுவோம்... உன் படிப்பு முடியட்டும் அப்பரம் நல்ல வேலைக்கு போ.. நான் இங்க என் வேலையில் நல்ல இடத்த பிடிக்கிறேன். இதுக்கு எல்லாம் இன்னும் 2 , 3 வருஷம் ஆகம்...அப்பரம் சொல்லலாம்..." என்றான்.

"அதுவரைக்கும்?" என்று சீதா கேட்டதற்கு, சிவா

"காதலிப்போம்!" என்றான்.

அதை கேட்ட சீதா சிவாவை இறுக்க கட்டி பிடித்து அவன் புன்னகை கன்னத்துக் குழியில் 'இச்' என ஒரு முத்தம் வைத்தாள்.

(தொடரும்... கதைய சொல்லலேங்க... காதலை சொன்னேன்!!)
--------------------------------------**************முற்றும்***-------------

கதையை படித்த அனைவருக்கும் எனது நன்றி!!!