Feb 28, 2010

நம்மள போட்டுத் தாக்கணும். தலைகீழா போட்டு திருப்பணும்.என்ன அடிச்சது அந்தக் காதல்

முதல் தடவ 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் trailerயை பார்த்தபோது, இந்த வரிகள்(போஸ்ட்டின் தலைப்பு) என்னை ரொம்ப கவர்ந்திடுச்சு. படம் கொஞ்சம் கொஞ்சம் வாரணம் ஆயிரம் சாயலில் இருக்கே என்று நினைத்து இது ஒன்னும் தேராதுனு நினைச்சேன்.

படத்த நேத்திக்கு பார்த்தேன்.

"என்னை போட்டுத் தாக்கணும். தலைகீழா போட்டு திருப்பணும்."

உண்மையில் என்னை தாக்கியது, என்னை தலைகீழாய் திருப்பியது. படம் ஆரம்பம் முதல் இறுதிவரை புன்னகையித்தபடியே இருந்தேன். படம், அவ்வளவு அழகு! கௌதம், கௌதம், கௌதம்..... எனக்கு என்ன சொல்றதுனு தெரியல்ல. காதல் சொட்ட சொட்ட ஒரு படத்த கொடுத்து இருக்கீங்க- உங்க மனைவி ரொம்ப லக்கி!!:)

கௌதம் அவர்களின் சொந்த வாழ்க்கை பயணம் தான் இப்படம். அவர் கடந்த காலத்தை பற்றி நிறைய நேர்முக பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். ஆக, அவரால் காட்சிகளை அவ்வளவு இயல்பாய் திரைக்கு கொண்டு வந்து உள்ளார்.

இசை, பாடல்கள், நடிப்பு, இயல்பான வசனங்கள்- அனைத்தும் படத்தின் வெற்றிக்கு வழி வகுத்து உள்ளன.

திரிஷாவுக்கு சிம்புக்கும் சண்டை ஏற்பட, மறுநாள் திரிஷா எதுவுமே நடக்காததுபோல் போவார் ஒரு புன்னகையுடன், அப்போ ஒரு வசனம் வரும் (narration)

"அவ சிரிப்பு கவிதையா இருந்துச்சு. எனக்கு கோபமா வந்துச்சு"

கௌதம்...எப்படிய்யா இப்படிலாம்... அட போங்க! எனக்கு பாராட்ட இன்னொரு புது மொழி வேண்டும்!

விண்ணைத் தாண்டி வருவாயா- என்னை தாண்டி போனுச்சு, என்னைய தாக்கிட்டு போச்சு!

Feb 25, 2010

ஜஸ்ட் சும்மா (25/2/10)

10 வாரம் work attachment இருப்பதால், தலைக்கு மேல வேலை வந்தாச்சு!
---------------------------------------------------------------------------
விண்ணை தாண்டி வருவாயா, கார்த்திக் காலிங் கார்த்திக் (ஹிந்தி) ஆகிய படங்கள் இந்த வார இறுதியில் வெளியாகவுள்ளன. விண்ணை தாண்டி வருவாயா பார்க்க போலாம்னு இருக்கேன்:)
--------------------------------------------------------------------------

நேற்று சச்சின் இரட்டை சதம் அடித்து சாதித்து காட்டிவிட்டார். ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப சந்தோஷமாக இருந்துச்சு. இங்கு சிங்கையில் கிரிக்கெட் அவ்வளவு பிரபலம் இல்லை என்றாலும், சச்சின் யார் என்று பலருக்கு தெரியும். சச்சின் ஒரு இந்தியன். நானும் ஒரு இந்தியன். அந்த வகையில் தனிப்பட்ட வகையில் இன்னும் அதிக சந்தோஷம். எனது இமெயில் ஐடியை கவனித்தால் தெரியும், அதில் 1973 என்று இருக்கும். காரணம்- சச்சின் பிறந்த வருடம் அது. அந்த அளவுக்கு சச்சின் மீது ஒரு பெரிய மதிப்பு, மரியாதை. ரொம்ப பிடிக்கும்!! இந்தியா கிரிக்கெட்டில் தோல்வி அடையும்போதும், சச்சின் சிலநேரங்களில் டக் அவுட் ஆகும்போது, கிண்டல் செய்யும் பலரும் இப்போது கொண்டாடுகின்றனர் அவரது சாதனையை பார்த்து. எது வந்தாலும், யாரு என்ன சொன்னாலும், தான் ஒரு கிங் என்பதை நிருபித்து காட்டிவிட்டார்! சச்சின், hats off man!!
------------------------------------------------------------------------------
ஒரு கதை எழுதும்னு ஆசையா இருக்கு. ஆனா, நேரம் கிட்டவில்லை.
-----------------------------------------------------------------------------

ஒரு ஆங்கில ப்ளாக் ஆரம்பித்துவுள்ளேன். www.smashingbangles.blogspot.com

நேரம் இருக்கும்போது எட்டி பாருங்க!

Feb 20, 2010

4 வருஷம் படிப்பு முடிஞ்சாச்சு!

4 வருஷம் காலேஜ் படிப்பு முடிஞ்சாச்சு. வர திங்கட்கிழமை 10 வாரம் work attachment. அதுக்கு அப்பரம் graduation ceremony. அப்பரம், வேலை! ஓ மை காட்!!! என்னால நம்ப முடியல. இன்னும் எனக்குள் இருக்கும் சின்ன பிள்ளை விளையாடி கொண்டிருக்கிறது சந்தோஷமாக.

சொந்த காலில் நிற்க வேண்டும் என்பது எல்லோரின் ஆசை தான். இருந்தாலும், காலம் இவ்வளவு வேகமா சுற்றுகிறேது என்று நினைக்கும்போது கொஞ்ச பயமா இருக்கு. காலேஜ் படிக்கும்போது அந்த வேலை இருக்கு, இந்த பரிட்சை இருக்கு. ரொம்ப stressஆ இருக்கு- என்று நிறைய புலம்பி இருக்கேன்!!! இப்போ, மிஸ் பண்றேன் நண்பர்களை, காலேஜ் கேண்டினை, கார்பார்க்கை! காலேஜ் கடைசி நாள் வெளியே சிரித்து கொண்டிருந்தேன். ஆனால், உள்ளுக்குள் அழுகையோ அழுகை.

ஒவ்வொரு நண்பரின் பேச்சு/செயல்/ஜோக்ஸ் எல்லாமே மிஸ் பண்ண போறேன். :(((

Feb 15, 2010

ஜஸ்ட் சும்மா (16/2/10)

கோவா படம் பார்த்தாச்சு. வெங்கட் பிரபுவின் முதல் படம் தான் மாஸ்! கதை இல்லாமல் எத்தனை நாளைக்கு தான் ஓட்ட முடியும்! இருந்தாலும், கோவா படத்தை அதன் நகைச்சுவையாக கண்டிப்பா பார்க்கலாம். அதுவும் ஜெய் இங்கிலீஷ் பேசும் விதம், படம் முழுக்க நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார். படத்தை பார்த்து வெளியே வந்ததும், தோழிகள் அனைவரும் ஒரு சபதம் எடுத்து கொண்டோம்.

"நம்ம கண்டிப்பா இந்த வருஷம் langakwi போக வேண்டும்."

படம் கோவாவில் கொஞ்சம் தான் எடுத்தார்கள். மற்றபடி லங்காவியில் தான் முக்கால்வாசி படத்தை எடுத்து இருக்கிறார்கள். சூதாட்ட மையத்தி்ல் என்ன தான் இருக்குனு பார்க்க ஆசையா இருக்கு!:)
----------------------------------------------------------------------------------

'my name is khan' படத்தை இரண்டு தடவ பார்த்தேன். அவ்வளவு பிடிச்சு இருந்துச்சானு கேட்காதீங்க. முதல் நாள் ஷோவை ஒரு குரூப் தோழிகள்/தோழர்களுடன் பார்த்தேன். அப்பவே படம் எனக்கு போர் அடிச்சு போச்சு. மறுநாளே, இன்னொரு குரூப் தோழிகளுடன் பார்க்க வேண்டிய சூழ்நிலை. என்னால முடியல! கரண் ஜோகரை ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடிக்கும். அவருடைய பலம்- குடும்பம், டான்ஸ், பாட்டு! மற்றபடி சீரியஸான விஷயங்களை பற்றி அவர் இனிமேல் எடுக்க வேண்டாம் என்பதை அவரிடம் யாரேனும் சொல்லுங்களேன்.

படம் ரொம்பவே மெதுவாக நகர்கிறது. fanaa, new york, kurbaan என்று தீவிரவாதம் பற்றி பல படங்கள் வெளிவந்துவிட்டன. ஆகவே ரொம்பவே சலிப்பு தட்டிவிட்டது! ஷாருக்கானிடம் ஒரு அசாதாரனமான ஒரு தைரியம் இருக்கு. இப்படிப்பட்ட ஒரு ரோலில் நடிக்க நிறைய துணிச்சல் தேவை. அதற்கு அவரை பாராட்டியே ஆக வேண்டும். ஆனால், பல இடங்களில் அவரால் இயல்பாய் நடிக்கவரவில்லை. asperger's syndrome கொண்ட ஒரு ஆளாக தெரியவில்லை. ஷாருக் தெரிகிறார் தவிர அந்த குறைபாடு கொண்ட மனிதர் தென்படவில்லை.

பாடல்கள் ஓரளவுக்கு பரவாயில்லை. ஓபாமா போன்ற தலைவர்கள் போல் இருக்கும் ஒருவரை காட்டி, செம்ம காமெடி செய்துவிட்டார் கரண்.

வசனங்கள் தான் திரைக்கதைக்கு பலம் சேர்த்துவுள்ளது.
-----------------------------------------------------------------------------------

இரண்டு நாட்களாகவே மனதில் ஒரு சிந்தனை ஓடிகொண்டிருக்கிறது- i want to publish a novel. and that too in english.
அதை எப்படி ஆரம்பிப்பது? என்ன செய்வது என்று புரியவில்லை?
-----------------------------------------------------------------------------------

அனைவருக்கும் அன்பர் தின வாழ்த்துகள்!!
-----------------------------------------------------------------------------------

இப்ப வர வர என்னுடைய பதிவின் அளவு குறைந்து கொண்டே வருகிறது! ஹிஹிஹி... அப்ப நாங்க ரொம்ப பிஸினு அர்த்தம்:)))

Feb 11, 2010

மன்னிப்பாயா

இது அமுதாவிற்கு பிடிச்ச கடற்கரை. அதிகம் கூட்டம் இருக்காது. சுற்றுலா பயணிகள் சிலர் பேர் வருவார்கள். மற்றபடி பெரிய அளவில் கூட்டம் இல்லாத ஒரு அழகான இடம். அழகான பெண்களுக்கு அழகான இடம் பிடிப்பது ஒன்றும் அதிசயமில்லை.

ரோஷன் மணலில் விளையாடி கொண்டிருந்தான். நானும் அமுதாவும் ஒரு மரத்தடி நிழலில் உட்கார்ந்து இருந்தோம். அவள் என் தோளில் சாய்ந்து கொண்டாள். கொஞ்சம் காலமாகவே நான் அதிகம் பேசுவதை குறைத்து கொண்டேன். யார் மேலையும் கோபம் இல்லை. கோபம் எல்லாம் எனக்கு என் மேலே தான்.

மடியில் வைத்திருந்த என் கையை அவள் பிடித்தாள். அவள் கைவிரல்களும் எனதும் சங்கமம் ஆயின. சாய்ந்தபடியே அவள், " ராம், ஏன் ரொம்ப அமைதியா இருக்க?"

நான், "ம்ம்..ஒன்னுமில்லமா.."

அவளது விரல்கள் என் விரல்களோடு விளையாடி கொண்டிருந்தன. நான் அதை கவனித்தேன்.ரசித்தேன். என் பார்வை மட்டும் மேகம்,கடல், அலைகள், மணல், ரோஷன் என மாறி மாறி சென்றன. கொஞ்ச நேரம் கழித்து அமுதா,

"do you want something?"

நான், "இல்லமா..i am fine. do you want anything?"

சாய்ந்து கொண்டிருந்த அமுதா எழுந்தாள். என் முகத்தை திருப்பினாள் அவள் முகத்திற்கு நேராக.

"yes" என்றாள்.

"what மா?" சாந்தமாய் கேட்டேன்.

"kiss me" என்றாள் உதட்டோரம் ஒரு சின்ன சினுங்கலுடன்.

"what!!!" இம்முறை what என்பது ஆச்சிரியக்குரியுடன் போனது. அவள் கண்களை பார்த்தேன். ஆண்களை வெட்கப்பட வைக்கும் சக்தி/திறமை பெண்களின் கண்களுக்கு உண்டு.

"வேணுமா? வேண்டாமா?" கேள்விபதில் புதிர் போட்டி நடத்தினாள் என் கூச்சத்துடன்.

"அமு... this is a public place மா." சுற்றும்முற்றும் பார்த்தேன்.

அவளது ஆள்காட்டி விரல் என் உதடுகள் மேல் படர்ந்தபடி, "this is not a public place. this belongs only to me." என பதில் அளித்தாள். வெட்கம் கலந்த புன்னகையுடன் நான் அவளது முகத்தை பார்த்தேன்.

தூரத்தில் ரோஷன் மணலுடன் விளையாடிய படி இருந்தான். எங்களை கவனிக்கவில்லை. அமுதாவின் உதடுகளுக்கும் எனது உதடுகளுக்கும் இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்தது. சிறிது நேரம் உதடுகள் டென்னிஸ் ஆட்டம் ஆடின.

நினைவுகள் பின்னோக்கி சென்றன.நான் செய்த துரோகம், தவறு, முட்டாள்தனம் நினைவில் மிதந்தன. நிச்சயக்கப்பட்ட திருமணம். திருமணம் முடிந்த கொஞ்ச நாட்களில் வேலையிலிருந்து நீக்கம். மன உளைச்சல். போதைக்கு அடிமை. போதை பொருள் விற்றல். குடும்பத்தை சரியாக கவனிக்காமல் போக, பல பண பிரச்சனையிலும், ரவுடி கும்பலிலும் மாட்டிகொண்டேன். அமுதா கர்பமாக இருக்க, நான் சிறையில் இருந்தேன். ஏமாற்றம், துரோகம், என்னையே நம்பி வந்தவளை ஏமாற்றிவிட்டேன் என்ற குற்ற உணர்ச்சி என்னை கொஞ்சம் கொஞ்சமாய் உலுகியது.

சிறையில் கற்றுகொண்டவை ஏராளம். தியானம், மனதை கட்டுப்பாடுடன் வைத்து கொள்ளுதல் என்று என்னை புதிதாய் பிறக்க செய்தது என் 5 வருட சிறை வாழ்க்கை. வெளியே வந்ததும் என்னை ஏற்றுபாளா என்று தெரியவில்லை. ஒற்றை பெற்றோராக ரோஷனை வளர்த்த விதம், தன் நிறுவனத்தில் பெரிய அதிகாரியாக வர அவளின் உழைப்பு என அனைத்தையும் கண்டு வியந்தேன்.

"அப்பா, am so happy to see you back." என்று ரோஷன் என்னை பார்த்து முதன் முதலாக சொன்ன போது யாரோ என்னை சாட்டையால் அடித்ததுபோல் உணர்ந்தேன். முதல் குழந்தை. முதல் பிரசவம். அப்போது அமுதா பக்கத்தில் நான் இல்லை என்பது என்னை மேலும் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கியது. நான் வெளியூர் போய் வந்ததாக ரோஷனிடம் சொல்லிவைத்திருந்தாள் அமுதா.

பழையதை பற்றி எதுவும் கிண்டவில்லை. நான் என்னமோ பக்கத்து தெருவிற்கு போயிட்டு வந்ததுபோல் ரொம்ப சாதாரணமாக பழகினாள் என்னிடம். நான் வெளியே வந்த முதல் நாள், அன்று இரவு அமுதா என்னிடம்,

"ராம், நீ எத பத்தியும் நினைக்காத. கெட்ட கனவு நினைச்சு எல்லாத்தையும் மறுந்துடு.நானும் மறுந்துடுறேன். மறந்துட்டேன். புதுசா ஆரம்பிப்போம்." நம்பிக்கை தந்தாள்.

எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அழுகை வந்தது. ஏன்? அதுவும் புரியவில்லை. அதற்கு பிறகு, முடிவு எடுத்தேன். வாழ்க்கை இனி அமுதாவிற்கும் ரோஷனுக்கும் மட்டுமே சொந்தம். அவர்கள் தான் என் உலகம். ஒரு வேலையில் சேர முயற்சி செய்தேன். சிறை கைதிக்கு என்ன தருவார்கள்? இது வரைக்கும் 124 வேலை இடங்களில் கேட்டு பார்த்துவிட்டேன். ஒன்றும் கைகூடவில்லை. அமுதாவின் கம்பெனியில் வேலை பார்க்க கூப்பிட்டாள் அமுதா. நான் தான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். என்னால் அவளுக்கு கஷ்டம் எதுவும் வேண்டாமே.

நான் இனி ஒரு வேஸ்ட் என்று அமுதாவின் அப்பா அவளிடம் பலமுறை சொல்லியிருக்கிறார், அமுதாவிற்கும் எனக்கும் விவாகரம் செய்ய முயற்சி செய்தியிருக்கிறார். ஆனால், ஒருபோதும் என்னை விட்டுகொடுத்தது இல்லை அமுதா. இதனாலேயே அடிக்கடி சண்டை அவர்கள் இருவருக்கும். அமுதாவின் இத்தனை அன்பை பெற நான் என்ன செய்து இருக்கிறேன்? என்ன செய்ய போகிறேன்?

விளையாட்டு திடலில் இருந்து விலக மனமில்லாத குழந்தைபோல் மெதுவாய் அவளின் இதழ்கள் என் இதழ்களிலிருந்து பிரிந்து சென்றன. எச்சில் முழுங்கினேன் நான். எங்களுக்கு பின்னால்,அவ்வழியே சென்ற வயதான வெள்ளைக்கார தம்பதியினர், "that was a good one!" சத்தம்போட்டு கூறினர் எங்களை பார்த்து. பின்னாடி திரும்பி பதிலுக்கு அமுதா,

"thanks dude! have a great day with your lady too!" சிரித்தாள்.

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. வெட்கம் என் உறுப்புகளில் ஊடுருவியது. மறுபடியும் அமுதா என்னை பார்த்தாள். நான் அவளது கண்களை பார்ப்பதை தவிர்த்தேன். தவிர்ப்பதுபோல் நடித்தேன். சற்று முன் நடந்ததை எண்ணி புன்னகையித்தேன். கவனித்துவிட்டாள் அமுதா. அவளது வலது கையை என் கன்னத்தில் வைத்து,

"நீ எப்போதுமே இப்படியே சிரிச்சுகிட்டு சந்தோஷமா இருக்கனும். அடிக்கடி ஒரு முகத்துல ஒரு சோகம் தெரியுது டா. அப்படி உன்னய பாக்கும்போது எனக்கு என்னமோ மாதிரி இருக்கு டா. எதா இருந்தாலும் என்கிட்ட சொல்லு...ம்ம்..சரியா.." கன்னத்தை தடவி விட்டாள்.

அச்சமயம், ரோஷன் தூரத்தில் இருந்து சத்தம்போட்டு கூப்பிட்டான், "அம்மா, இங்க வாங்களேன். i need your help to build this castle."

அமுதா, "i'll back sweety." என் காது அருகே மெதுவாய் சொல்லிவிட்டு சென்றாள்.

இப்படி அளவுக்கு அதிகமான காதலை என் மேல் கொட்ட நான் தகுதியானவனா? எதையும் எதிர்பார்க்காமல் வருவதற்கு பெயரோ காதல்?

அமுதாவும் ரோஷானும் மணலுடன் சேர்ந்து விளையாடி கொண்டிருப்பதை கண்கொட்டாமல் பார்த்தேன்.

ரோஷன், வளரும் குழந்தை.
அமுதா, வளர்ந்த குழந்தை.

(happy valentine's day wishes to all)

Feb 1, 2010

ஜஸ்ட் சும்மா (1/2/10)

இந்த வருஷத்தின் முதல் மாதம் முடிவடைந்து விட்டது. அதுக்குள்ள ஒரு மாசம் ஓடிபோச்சான்னு நினைக்க தோணுது. இந்த ஒரு மாசத்துல நீ என்ன கிழிச்சேன்னு கேட்காதீங்க. தினம் தேதியகூட கிழிச்சபாடில்லை.
-------------------------------------------------------------------------------------------------
கோவா படம் இன்னும் சிங்கையில் ரிலீஸ் ஆகல. சென்ற வாரம் ரிலீஸ் ஆயிடும்னு ரொம்ப எதிர்பார்த்தேன். இந்த வாரம் கண்டிப்பா வெளிவர வேண்டும்!!! படம் எப்படி இருந்தாலும் பார்த்தே ஆகவேண்டும். வெங்கட் பிரபுவிற்கு தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இங்கே ஆவலுடன் வேட்டிங்!!:)
-------------------------------------------------------------------------------------------------

நேற்று பார்த்திபனின் காபி வித் அனு நிகழ்ச்சியை பார்த்தேன் (சிங்கையில் ஒரு வாரம் கழித்து தான் போடுவான்). நடிகர் பார்த்திபன் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் என்னை அவ்வளவாக கவரவில்லை. ஆனால், ஒரு தந்தை பார்த்திபனாக உச்சத்தில் உட்கார்ந்து இருக்கிறார். ஒரு அப்பா இப்படி தான் இருக்கவேண்டும் என்று அவர் சாதித்து காட்டியிருக்கிறார். பிள்ளைகளை பற்றி பேசும்போது அவர் கண்களில் தெரிந்த மகிழ்ச்சி, ஒரு பெருமிதம், பெருமை அப்படியே தெரிந்தது. பார்க்க பார்க்க எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. எது செய்தாலும் நம் பிள்ளை நம் பிள்ளை தான், அவன்/அவள் எந்த துறையில் இருந்தாலும் அது அவனுக்கு/அவளுக்கு நல்லது என்று பார்த்திபன் போல் நினைக்கும் பெற்றோர்கள் மிகவும் குறை.

அந்த வகையில், பார்த்திபன் சார், நீங்க உண்மையாகவே ஆயிரத்தில் ஒருவன் தான் சார்!
-----------------------------------------------------------------------------------------

பிள்ளைகளின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும் முடிவை சில பெற்றோர்களே அனுபதி கொடுக்கிறார்கள். பெற்றோர்களுக்கு ஒருவித பயம், பாசம் என்றே சொல்லலாம். ஆனால், கையிலேயே பட்டாம்பூச்சியை வைத்து அழகு பார்ப்பதைவிட, அதை பறக்கவிட்டு அழகு பார்ப்பதே உண்மையான மகிழ்ச்சி.

நேற்று நீயா நானா நிகழ்ச்சியை கொஞ்சம் நேரம்தான் பார்த்தேன். பார்த்த பத்து நிமிடங்களில் கோபி சொன்ன கருத்து ரொம்ப பிடிச்சு இருந்தது. பேசுவதை பற்றி சொன்னார். புரட்சிகரமான பேச்சு, சமுதாயத்தை சீர்திருத்தம் செய்யும் பேச்சு பற்றி சொன்னார். பெரிய அளவிளான பேச்சு மட்டும் அல்ல, வீட்டிலேயோ, பிள்ளைகளிடமோ, பக்கத்துவீட்டுக்காரிடமோ பேச வேண்டும். அதற்கு ஒருவர், updated speakerராக இருக்க வேண்டும்.

பலவற்றை படிக்க வேண்டும். மற்றவர்களின் பேச்சை கேட்க வேண்டும். நாட்டு நடப்பு பற்றி அறிந்து இருக்க வேண்டும். இசை, சினிமா, விளையாட்டு ஆகியவற்றை பற்றி கொஞ்சமாவது தெரிந்து இருக்கவேண்டும்.

கோபி சொன்ன கருத்து, "பிள்ளையிடம் போய் பேச வேண்டும். டோனி கேப்டனா இருக்கறது நல்லதா, சச்சின் விளையாட்டுலேந்து ஓய்வு எடுக்கனுமா? 20-20 கிரிக்கெட்ட பத்தி நீ என்ன நினைக்குற? இப்படி பேச வேணும். ஆனா அத எல்லாம் விட்டுபுட்டு கிரிக்கெட் பார்த்து நீ என்ன செய்ய போற? என்று கேட்க கூடாது." என்றார்.

எனக்கு இந்த கருத்து தான் ரொம்ப பிடிச்சு இருந்தது. நீ இத ஏன் செய்யுற? என்ற கேள்வி, ஒரு உறவு தொடராம இருப்பதற்கு காரணமாய் அமைந்துவிடுகிறது. ஏன் என்றால் அந்த கேள்வி கேட்ட பிறகு, பதில் பேச தோணாது. பிடிக்காது. பேச்சு ரொம்ப முக்கியம். தொழில் சார்ந்த விஷயங்களை மட்டும் பேசாமல், பலவற்றை பேச வேண்டும். அதை பெற்றோர்களும் பிள்ளைகளும் புரிந்து கொள்ள வேண்டும்.
--------------------------------------------------------------------------------------------

நேற்று இந்த ஆங்கில பாடலை கேட்க வாய்ப்பு கிடைத்தது.

இந்த பாடலில் பிடித்த வரிகள்

"They say time is a healer
It's more like a concealer for a scar
Cause it never really leaves us"


அருமை அருமை அருமை!! பாடிய விதமும் அதைவிட அருமை. இந்த வரிகளை பார்த்த பிறகு, எனக்கும் பொங்கியது வார்த்தைகள்.


Words hurt
Pricks your heart
cheers fallen apart

i'm miles away from the world
smiles are gone ice cold
a broken mirror, a torn kite,a crumbled paper
If you had feel like either one,
you had lived a life.
If you're feeling like all three,
you're living my life!

எப்படிங்க இருக்கு??
----------------------------------------------------------------------------------------------