Aug 11, 2014

சதுரங்க ஜிகர்தண்டா

1) சதுரங்க வேட்டை

படம் ஆரம்பிச்ச 10 நிமிடத்திலயே படம் என்னை அவ்வளவு ஈர்த்துவிட்டது. கதைக்குள்ள நேராக சென்று உண்மையிலேயே திரைக்கதையில் வேட்டையாடி இருக்கிறார் இயக்குனர்.

intervalல் climax வச்சு, ஹீரோ மாட்டி கொள்கிறார். இதுக்கு அப்பரம் எப்படிதான் கதை போகும் என்ற சுவாரசியத்தை உண்டாக்கி ஒரு நல்ல படம் கொடுத்த இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும்.

நடித்த ஹீரோ நடராஜன் செம்மயா புகுந்து விளையாடி இருக்கிறார். ஹீரோயின் குரல் தான் அவருக்கும் பலம். நடித்தவர்கள் அனைவருமே டாப் கிளாஸ் நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.



வசனங்கள பத்தி சொல்லியே ஆகனும்.

- கோழி மேல பரிதாபம் பட்டால், சிக்கன் 65 சாப்பிட முடியாது.
- பொய் சொல்லும்போது, அதுல கொஞ்சம் உண்மையும் கலந்து சொல்லனும். அப்ப தான் அது உண்மை மாதிரி இருக்கும்.


இது போல படம் முழுதும் கைதட்டி வரவேற்கும் வசனங்கள் ஏராளம்.


ரொம்ப நாளைக்கு அப்பரம் ஒரு நல்ல தமிழ் படம்.

2) ஜிகர்தண்டா

இது கொரியன் படம் ஆச்சே! இது ஜப்பானிய படம் ஆச்சே என்று புலம்பி கொண்டிருப்பவர்களே,

விடுங்க பாஸ்! காபி அடிச்சது தப்போ சரியோ,

நல்லா காபி அடிச்சாங்களா! அத பார்ப்போம்.



நமக்கே தெரியும் உள்ளூர் சினிமாவை காபி அடிச்சு, மொக்கை வாங்கறதுக்கு பதிலா, ஏதோ ஒரு நல்ல உலக சினிமாவை பார்த்து, புதுசா கொடுத்து இருக்காங்க-னு தான் சொல்லனும்.

ரசிச்சு ரசிச்சு பார்த்த படங்களின் பட்டியலில் இது கண்டிப்பா இருக்கும். இசை, திரைக்கதை, வசனம், நடிப்பு என்று அனைத்துமே ஒரு நல்ல வெற்றி படத்துக்கு ஏற்றாற்போல் இருந்துச்சு.

climax மட்டும் இன்னும் நல்லா யோசிச்சு ( இல்லேன்னா இன்னும் ரெண்டும் மூனு கொரிய படங்கள பாத்து) எடுத்து இருந்திருக்கலாம்.



பரவாயில்ல, என் ஆளு விஜய் சேதுபதி வருவதால், அந்த குறை தெரியவில்லை.

செம்ம வேட்டைக்கு போயிட்டு, ஒரு பெரிய க்ளாஸ் கூல் ஜிகர்தண்டா குடிச்சு ஒரு உணர்வு, இந்த ஜாலியான ரெண்டு படங்கள் பார்த்த பிறகு.


(முக்கியமா இந்த ஜிகர்தண்டா நம்பிக்கை ஊட்டும் படம்?
எப்படி?

எப்படியா??

சித்தார்த் 'பாய்ஸ்' படத்துல அறிமுகம் ஆனபோது, லட்சுமி மேனன் மூணாவது படிச்சுகிட்டு இருந்த புள்ள.

இப்ப சொல்லுங்க?
நம்பிக்கை வருதா இல்லையா?)



Aug 4, 2014

தமிழ் சோறு போடுமா?



தமிழ் சோறு போடுமா?
அட போங்க! அது சோறு போடுமானு தெரியாது. ஆனா, கண்டிப்பா ஐயர்லாந்து கூட்டிட்டு போகும்!

என்னது ஐயர்லாந்தா???

இப்படி தான் எனக்கும் தூக்கி வாரி போட்டது முதன் முதலில் செய்தியைக் கேட்டபோது.

போன வருடம் கதை எழுதும் போட்டியில் கலந்து கொண்டேன். நான்கு மொழி பிரிவில், என் கதை தமிழ் பிரிவில் ஜெயித்தது. முதல் பரிசாக கொஞ்சம் பணமும், ஐயர்லாந்தில் நடந்த கதை எழுதும் பயிலரங்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.

வேலை, இம்சை, திங்கட்கிழம பத்தி கவலை, மீட்டிங் என எல்லாத்தையும் தூக்கி போட்டு விட்டு, புது புது அரத்தங்கள் ரகுமான் போல் ஜாலியான  ஒரு escape!!




ஒரு மாத விடுதி செலவு, சாப்பாட்டு செலவு, மத்த செலவுகள் அனைத்தும் sponsored!! கடவுள் இருக்கான்-டா!!

விடுதி என சொல்ல கூடாதுஇவ்விடத்தை. ஒரு அழகான வீடு. வீட்டிற்கு பின்னால், அருவி, கொஞ்சம் தொலைவில் கடல், மரம், ஆறு என இயற்கை நிறைந்த இடம். 15 நாடுகளிலிருந்து வந்திருந்தவர்கள் ஒன்றுகூடி பயிலரங்கில் கலந்து கொண்டோம்.

வழி நடத்தியவர்,  டேவிட். இவர் அமெரிக்காவை சேர்ந்தவர். பயிலரங்கு என கூட சொல்லமுடியாது. அப்படி ஒரு ஜாலி gathering. ஆங்கிலத்தில் நடந்த இந்த பயிலரங்கு காலையில் ஆரம்பித்தால் மதியம் 12 முடிந்துவிடும். டேவிட், கதை எழுதும் உத்திகள் பலவற்றை சொல்லி தந்தார்.

மதிய உணவுக்கு பின்னர், நமக்கு பிடித்ததை செய்யலாம்.

மலை ஏறுதல், massage, அருவிக்கு போகலாம், அது ஒரு சின்ன கிராமம் என்பதால், நடக்க வசதியான இடங்கள் நிறைய உண்டு.

 நான் தங்கியிருந்த அறை.



 படுக்கைக்கு மேல் அடிக்கி வைக்கப்பட்ட புத்தகங்கள்.

 தினமும் கூடும் இடம். இது தான் meeting இடம். (முதல் சில நாட்கள் எனக்கு ஆனந்த கண்ணீரே வந்துருச்சு. வேலையிட மீட்டிங் அறையை நினைத்து பார்த்து. )

 ஐயர்லாந்தில் இரவு 9 மணிக்கு தான் பொழுது சாயும். இரவு உணவு முடிந்து, அனைவரும் ஒன்றாக படம் பார்ப்போம்.


(கீழ் படம்: நாங்கள் தங்கியிருந்து வீட்டிற்கு முன்னால் இருந்த வீடு.)



 இரவு உணவு உண்ணும்போது, பாடல் ஆடல் என ஐயர்லாந்து கலாச்சாரத்தை பத்தி நிறைய தெரிந்து கொண்டோம்.

ஒரு மாதம், இதோ ஒரு வேறு உலகத்துக்கு போயிட்டு வந்த மாதிரி ஒரு உணர்வு. இந்த வலைப்பக்கம் ஆரம்பிக்கும்போது, கதை கவிதை என எதுவுமே எழுத தெரியாது. இப்ப 8 வருஷம் ஆச்சு வலைப்பூ ஆரம்பிச்சு. ஏதோ கொஞ்சம் கதை, கவித எழுத தைரியம் வந்து இருக்கு. நீங்க சொல்லும் கருத்துகள் வச்சு தான் எனக்கு ஊக்கமே வந்துச்சு.

வாசகர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். ஐயர்லாந்து கனவு எல்லாம் நினைச்சு கூட பார்க்காத ஒன்று. கடவுள், பெத்தவங்க செஞ்ச புண்ணியம், அப்பரம் வாசகர்களாகிய உங்க ஊக்கம் தான் காரணம். தனஷ் சொல்வதுபோல், "இது என் கனவு திவ்யா!" என்று இப்ப நினைச்சாலும் கண்கள் சந்தோஷ கண்ணீர் வடிக்கும்.

 கோடி நன்றிகள்!

தமிழ் சோறு போடுமா?
கண்டிப்பா போடும். ஏனா ஐயர்லாந்தில் பல நாள் தயிர் சாதம்கூட கிடைத்தது!