Feb 22, 2016

தள்ளி போகாதே!


காதல் ஒரு முரண்பாடு.
2 அந்நியர்கள் காதலில் விழுவது,
ஒரு முரண்பாடு.
காதலுக்கு கண் இல்லை
உன்னை பார்த்த முதல்
மனதில் அலைபாயும்
தொல்லை.

ஒரு மந்திர புன்னகை
உன்னை பார்க்கும் போதெல்லாம்
வயிற்றில் பட்டாம்பூச்சிகள்.
இந்த விசித்திரமான உணர்வு.
நான் உன்னை பற்றி எழுத உட்கார்ந்தேன்.
 என் மனதில் ஒரு ப்ளாஷ் மின்னல்.

மற்ற  ஜோடி போன்ற, முதல் 4 ஆண்டுகள்
ஆனந்த பூங்காற்று.
பின்னர் புயல் போல் பிரிவு.
வேலை என் வாழ்க்கையில் ஆதிக்கம் செய்ய.
உன்னோடு நேரம் செலவழிக்க இயலவில்லை.
உன் நினைவுகளெல்லாம் ஒரு கானல் நீர் போல் தோன்றியது!
வடுக்கள் இருந்த போதிலும்
நீ அழகு டா.
தளும்புகள் இருந்தாலும்
நீ அழகன் டா!


நான் நம்பிக்கை இழந்து போது
நீ இருந்தாய் என் கண்ணீருக்கு கைகுட்டையாய்.

உண்மையான காதல் என்ன,
 எனக்கு காட்டினாய்.
என் இதயம் நொறுங்கிய போது,
உன் மௌனம்
என் தாலாட்டு. 
என் குமறல்களை
ரசித்தாய்
அமைதியாய் கேட்டு.

இன்னும் அந்த துரதிருஷ்டவசமான இரவு, நினைவில்.
உன் மூச்சு நின்று போது,
உனக்கு ஒரு அங்குலம்கூட நகர முடியவில்லை.
என் இதயம் துடிப்பது நின்றது.
நான் மீண்டும் உன்னை பார்க்க  மாட்டேன் நினைத்தேன்.
 நீ அந்த இரவை வென்றாய்.
மறுபடியும் வந்தாய்.


என்னை தினமும் வீட்டுக்கு
அழைத்து சென்றாய்
இன்று என்னை தனியே
விட்டு செல்கிறாய்!
சந்தனமாய் இருந்த நீ
இன்று
சாம்பலாய் போனாய்!
 என்றென்றும் என் நினைவில்.

காதலித்த கார்,
காதலித்து பார்!

**********************************************************************************

சிங்கப்பூரில் ஒரு காரை 10 வருடங்கள் தான் வைத்து இருக்க முடியும். அதற்கு அப்பரம் ஒப்படைக்க வேண்டும் கார் நிறுவனரிடம். அவங்க இயந்திரம் படத்தில் ரோபோ ரஜினி போல்
அண்ணாமலை படத்தில் வரும் மனோரமா வீடு போல்
நொறுக்கி தள்ளிவிடுவார்கள்.

ஒரு காரின் ஆயுள் காலம் 10 வருடம்.
2006ல் வாங்கிய கார், இப்போது இல்லை என்று நினைக்கும்போது......

Feb 1, 2016

இறுதி சுற்று.....தமிழ் சினிமாவின் உறுதி சுற்று.



படத்துக்கு விமர்சனம் பலர் எழுதியிருக்கலாம். படத்தின்  ட்ரைலெர் வந்தவுடனே எனக்கு பிடித்துவிட்டது. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் பட்டியலில் இறுதி சுற்றி நுழைந்து கொண்டது. முதல் நாள் முதல் ஷோ. (சிங்கையில் முதல் ஷோ 4.30pmக்கு தான் வெளியிடப்பட்டது)

அபிமானம். கமல் சொன்னதுபோல் அபிமானத்திற்கு இன்னொரு பெயர் உண்டு. அது என்னை பொருத்தவரை "இறுதி சுற்று"

படம் பிடிக்க காரணங்கள்:

1) பெண் இயக்குனர்,சுதா. மணிரத்னம் ஜி பள்ளியில் இருந்து வந்தவர். கலக்கி இருக்கிறார் போங்க!


2) ரித்திகா சிங். சொல்ல வார்த்தை இல்லை. தமிழ் பேசும் பாணியாக இருக்கட்டும். உடல் மொழி. தனுஷ் வெறியர் என ஆட்டம் ஆடுவதாக இருக்கட்டும். மெர்சல் performance! தெறிக்கவிட்டு இருக்கிறார். 


3) மேடி மேடி ஒ ஒ மேடி! இன்னும் இந்த பாட்டுக்கு அவ்வளவு மவுசு. அவரை போலவே. அலைபாயுதே படத்தில் மைக்கில் வந்த மாதவனும் சரி, இப்போ இப்படத்தில் மைக்கில் வரும்போது சரி, 15 வருடங்கள் ஆனபிறகும் அதே வசீகரம். கோபமாக வரும் காட்சியில் அவர் நடிப்பார் பாருங்க. கண்களுக்கு மட்டும் தனியே ஆஸ்கார் கொடுக்க வேண்டும் என இருந்தது. எப்படி மேடி? 1.5 வருடங்களாய் அமெரிக்காவில் குத்து சண்டை பயிற்சி எடுத்தது எல்லாம் வீணாக வில்லை. அப்படியே ஒரு குத்து சண்டை பயிற்சிவிப்பாளர்க்கான உடல் அசைவுகள். 

4) சந்தோஷ் நாரயணன். இசை பேசுகிறது. நம் உதடுகளில் அவரது மெல்லிசை தனியே தாளம் போடுது. 

5) வசனங்கள். ஒரு படத்தில் முக்கியமான பலம் என்பது வசனங்கள். குத்துசண்டை பஞ்ச் மட்டும் அல்ல, வசனங்களும் பஞ்ச் கொடுக்கின்றன. 

"நீ தொந்தி யோட சுத்துற அரகிழமா இருந்தாலும், நீ சிரிச்சா நல்லா தான்யா இருக்குற!" என்று சொன்ன போது தியெட்டரில் பெண்கள் கூட்டத்தின் விசில் சத்தம் கூரையை பிய்த்தது. 

"உனக்கு சொன்ன புரியாது? செத்த மீனெல்லாம் மறுபடியும் செத்துட போது." என்ற பல காமெடி வசனங்கள் இப்படத்தில். 

இப்படி காமெடி மற்றும் உணர்ச்சிபூர்வமான வசனங்கள் ஏராளம்.

6) நாசர்- அது எப்படி என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் வெளுத்து வாங்குறார் மனுஷன்!!! 

தமிழ் சினிமாவில் கெத்து ஆக்ஷன் கதைகள், கலர் கலராய் சட்டை போட்டு கொண்டு ஆட்டம் ஆடிக்கிட்டு ஊர் சுத்தும் கதைகள் என பல காவியங்கள் மத்தியில் "இறுதி சுற்று" தமிழ் சினிமாவின் "உறுதி சுற்று" தான்.