Nov 14, 2016

அச்சம் என்பது மடமையடா- மழை சாரலை ரசித்தபடியே கையில் ஒரு cappacino cup ஏந்தியவாறு...

ஜன்னல் ஓரமாய் நின்று, மழை சாரலை ரசித்தபடியே கையில் ஒரு cappacino cup ஏந்தியவாறு, உள்ளங்கையில் இதமாய்  காபி சூடு பரவ, அப்படியே இதழ் வரை கொண்டு போகும் காபி குவளையிலிருந்து ஆவி முகத்தில் படர, சூடு ஆற்றி குடிக்க, நுனி நாக்கில் சுவை படும்போது செம்மயா ஒரு உச்சபச்ச ஆனந்தம் ஒன்னு வரும் பாருங்க- அது தான் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் முதல் 50 நிமிடங்களின் சொர்க்கம். 

விண்ணை தாண்டி வருவாயா படத்தை 10 தடவ பார்த்து இருப்பேன். கௌதம் மேனனின் தீவிர ரசிகை இத கூட பண்ணலனா எப்படி? அதே 'ஹோசானா' தழுவுல் நிரம்பி வழிந்த முதல் 50 நிமிடங்களை அணுஅணுவாய் ரசித்தேன். அந்த 50 நிமிடங்களில் கிட்டதட்ட 4 பாட்டு வந்திருக்கும். ரகுமானின் பாடல்கள் கேட்கவும் பார்க்கவும் ஒலி/ஒளி விருந்தாக இருந்தது.  பாகவதர் படம் மாதிரி, தொட்டதக்கெல்லாம் பாட்டு வந்தாலும்கூட , it is AR Rahman music man! அப்படினு மனசு பூரிப்பு அடைந்து படத்தை தொடர்ந்து பார்த்தேன், "my gautham is back!" என்று முணுமுணுத்தபடி. 




இடைவேளை வந்தது. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் மாதிரி, அதுக்கு அப்பரம் படத்த காணும்.  'தள்ளி போகாதே' பாடல் ஆரம்பித்த காட்சியிலிருந்து, படம், கதை , திரைக்கதை- அனைத்தும் பிச்சி, கிழிஞ்சி, அவிழ்ந்து, உடைந்து ஒவ்வொன்றும் தள்ளி எங்கெங்கோ போச்சு! விண்ணை தாண்டி வருவாயா படத்துல ஒரு வசனம் வருமே- "காதல் நம்மள தாக்கனும். தலை கீழா போட்டு திருப்பனும்." இது தான் இரண்டாம் பாதில நடந்து கதை. இல்ல இல்ல. எனக்கு நடந்த சம்பவம்.

இரண்டாம் பாதில, ஏன் சண்டை? யாருக்கு சண்டை? எதுக்கு இந்த ஓட்டம்? யாரு இவங்களெல்லாம்? எங்க போறாங்க? இது எந்த ஊரு? என்ன நடக்குது?- தலை சொரிந்து பார்த்த அனுபவம் தான் இரண்டாம் பாதி. எந்த ஒரு தீவிர காரணமும் இல்லாமல் துரத்துவதெல்லாம், ஏற்ற கொள்ள முடியாத திரைக்கதை.

'kali' என்ற மலையாளம் படம். கிட்டதட்ட AYM மாதிரி தான். முதல் பாதி காதல், இரண்டாம் பாதி பரபரப்பு. இரவு நேரத்தில் சாலையோர கடையில் ஹீரோவும் ஹீரோயினும் சாப்பிட செல்ல, அங்க ரவுடிகளுக்கும் இவர்களுக்கும் சண்டை ஏற்பட, ரொம்ப இயல்பாய், யதார்த்தமாய், மனதை பதற வைக்கும் விதமாய் திரைக்கதையில் மின்னியது 'kali'. 
AYM கூட அப்படி அமைந்திருக்க வேண்டிய படம் தான். 


ஆனா, கௌதம் நம்மள பாட்ஷா தம்பி மாதிரி ஆகிட்டாரு!

"சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க...(நீ ஏன் இந்த மாதிரி படம் எடுத்தீங்க?)
சொல்லுங்க...."


500ரூபாய், 1000ரூபாய் நோட்டுக்களை தடை செய்த மாதிரி, கௌதம் படங்களில் 'voice over narration 'னை தடை செய்ய வேண்டும். ஆவூனா, பேசியே கதைய சொல்றாரு.   எண்ணெய் ஊற்றி தாளித்துவிடவும்-னு ஏதோ சமையல் குறிப்பு மாதிரி, கடைசில படத்தை ' voice over narration'ல் முடித்தது அநியாயம், கௌதம்.

A Director Makes Only One Movie in His Life. Then He Breaks It Into Pieces and Makes It Again.
- Jean Renoir





இந்த பொன்வார்த்தைகள் போல, கௌதம் தனது படங்களின் அடிப்படையாக வைத்து கொண்டாலும், இம்முறை ரொம்பவே சொதப்பிவிட்டார். இரண்டாம் பாதியில், சிம்பு ஒரு காட்சியில், மஞ்சிமா மோகனிடம், "I want to fight alone. I don't want you to come with me. you go back home. where do you want me to drop you?" என்கிறார். அட பாவி கிட்டதட்ட ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரை தவிர மற்ற அனைவரையும் சுட்டு பொசுக்கிவிட்டு, இப்ப அந்த புள்ள எங்க போகும்??



கௌதம் பாணியிலே படத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால், "this is fucking messed up!" 

கௌதமே ஹரி மாதிரி படத்த எடுத்து வச்சு இருக்காரே? அப்போ, ஹரி எந்த மாதிரி வெறித்தனமா 'சிங்கம் 3' எடுத்து இருப்பார்னு நினைச்சு பார்த்தால் தான் கொஞ்சம் அச்சமா இருக்கு. 

அச்சம் என்பது மடமையடா- ஒரு தவறு செய்தால்...... அதை தெரிந்து செய்தால்......