Oct 31, 2008
அண்ணாத்தே கொடுத்த 'தல'வலி
main hoon na ஹிந்தி படத்த அப்படியே காபி அடித்திருந்தால் கண்டிப்பா சொல்றேன், படம் ஹிட்டாக இருந்திருக்கும். ஆனா, இப்படி சொதப்பி, கொல்ல பண்ணி, படத்த கதற கதற எடுத்திருக்காங்கய்யா....
ஏன்? ஏன்? ராஜு, ஏன் உங்களுக்கு இந்த கொல வெறி. தம்பி எடுக்குறான்... சரி நம்மலும் எடுக்காலாம்னு நினைச்சு எடுத்தீங்களா?
படத்தின் ஆரம்ப காட்சியில் வில்லன் சுமன் தான் அஜித் என்று நினைத்து தியேட்டரில் ஒரே விசில் சத்தம். கொஞ்சம் close upல பாத்த பிறகு தான் தெரிஞ்சுது அது அஜித் இல்லன்னு. செம்ம காமெடியா போச்சு! போண்டா சாப்பிடனும்னு நினைச்சு, மசாலா தோசைய சாப்பிட்டு, அது சரியா செரிக்காம, ஓம தண்ணி குடிச்ச மாதிரி படம் இருக்கும். நயன் தாரா ஏழைவீட்டு டீச்சரா நடிச்சு இருக்காங்க. ஏன்னா, அவங்களுக்கு ஒரு முழு ஜாக்கெட் வாங்கிபோடகூட காசு இல்ல.
நகைச்சுவை என்ற பெயரில் கோமாளித்தனம். செம்ம மொக்கை. அஜித் காமெடியில் ஆங்காங்கே ராஜுவின் சாயல்! இந்த கதாபாத்திரத்திற்கு 25கிலோ ஏத்தினாராம். ம்ஹும்.... நல்லா இருங்கப்பா!
அண்ணன்(ராஜு) கொடுத்த 'தல'வலி தாங்கா முடியல....
Oct 28, 2008
2 சூர்யா, 1 விஷால், 1 நயன்ஸ்
மதிய வேளையில் அக்கா தோழி வீடு, இன்னொரு 2 family friend வீட்டுக்கும் போய் collection! மொத்தமா சூப்பர் collection. தீபாவளி அன்னிக்கு ரீலிஸ் ஆகும் படங்களுக்கு collection ஆகுதோ இல்லையோ... எங்களுக்கு செம்ம collection!
ஒவ்வொரு வீட்டிலும் செம்ம வெட்டு வெட்டு...சாப்பாட சொன்னேங்க....
2 சுத்து பெருத்து போன மாதிரி இருக்கு. :)
கிடைத்த காச வச்சு தீபாவளி படம்- ஏகன் பாக்க போனோம்.....ஐயோ ஐயோ....அத பத்தி அப்பரம் சொல்றேன்.
எனிவேஸ், அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துகள்!
Oct 13, 2008
Cனிமா சினிமா, ஸினிமா, Siனிமா..
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
1 வயது இருக்கும்போதே சினிமா பார்க்க ஆரம்பித்தேன். 'பந்தம்' திரைப்படம் மூனு வேளையும் வீட்டில் ஓடுமாம்.. அம்மா சொல்வாங்க... பேபி ஷாலினி குழந்தை நட்சத்திரமாக வந்த படம். "big uncle big uncle" என்று சொல்லும் அந்த குரலை எப்படி மறக்க முடியும்.
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
சரோஜா!:)
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
onlineல் சத்யம் படம் பார்த்தேன். தமிழ் படத்தில் பாட்டு, fight, தேவையில்லாதா sentiment சீன், மொக்கையான காமெடி சீன் இவை அனைத்தும் forward செய்துவிட்டேன். படத்தை 45 நிமிடங்களில் பார்த்து முடித்தேன். விஷாலுக்காக மட்டுமே பார்த்தேன். செம்ம cuteஆ இருக்காரு.... ஆனால், ஒரு காக்க காக்க மாதிரி படத்தில் நடித்திருந்தால்...பட்ட கஷ்டத்துக்கு பலன் கிடைத்திருக்கும் என்று உணர்ந்தேன்.
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
நிறைய உண்டு. இப்ப நினைவுக்கு வருவது 'காதல்' திரைப்படம். படத்தை தோழிகளோடு திரையரங்கில் பார்த்தேன். படம் முடிந்து அரை மணி நேரமாவது அழுது இருப்பேன். எல்லாரும் என்னை சமாதானம் படுத்தியபோதும், என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. ரொம்ப feelingsஆ போச்சு.....
5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
அப்படி ஏதும் இல்லை.
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
திரையில் பார்ப்பது வேறு. அதற்கு பின்னால் நடப்பது வேறு. ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞரும் படும் கஷ்டம். யப்பா.... பாவம் தான்! எனக்கு இந்த பின்னால் ஆடும் நடனமணிகளை பார்த்தால், பாவமா இருக்கும். எவ்வளவு கஷ்டம். என்னுடைய ஆங்கிள் ஒருத்தர் என்னிடம் சொன்னார்....வெளிபுர நடனம் ஆடும்போதுகூட, இந்த டான்ஸ்ர்களுக்கு துணி மாற்றகூட சரியான இடம் கிடைக்காதாம். ஹீரோ/ஹீரோயின் பின்னால் முதல் வரிசையில் ஆடுபவர்கள் சீனியர். ஆக பின்னால், ஆடுபவர்கள் புதிது அல்லது சரியாக ஆட தெரியாதவர்களாம். எந்த வரிசையில் இருக்கிறார்களோ, அந்த வரிசைபடி சலுகைகள் கிடைக்குமாம்!...
6.தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
ம்ம்ம்... அதானே வேலையே! indiaglitz.com மற்றும் cinesouth.com தினமும் படிப்பேன்.
7.தமிழ்ச்சினிமா இசை?
புது பாட்டு வந்தால் உடனே கேட்டுவிட்டு, தோழிகளிடம் discussion நடக்கும். இந்த பாட்டு, எந்த பாடலின் தழுவல், யார் எந்த ஆங்கில பாடலை காப்பி அடித்திருக்கிறார் என்பதை பற்றி பேசுவதுண்டு.
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
ஆங்கிலம்- நான் வாழ்க்கையில் முதன் முதலாக வீட்டில் பொய் சொல்லிவிட்டு சென்று பார்த்த படம் 'bend it like beckham'. முதன் முதலாக திரையரங்கில் பார்த்த ஆங்கில படம். முதன் முதலாக நண்பர்களுடன் வெளியே சென்ற நாள் அதுவே. இப்படி நிறைய 'முதன் முதலாக' நடந்ததால் இந்த படம் ரொம்ப பிடிக்கும். பல வகையில் மனதை தாக்கிய படமும்கூட.
9ஆம் வகுப்பு படித்த வருடம் அது. அந்த வருடம் தான்,காற்பந்து உலக கிண்ண போட்டிகள் நடந்து கொண்டிருந்தது. படத்தை பார்த்து மறுநாளே, பள்ளி திடலில் ஒரே காற்பந்தாட்டம் தான்!
korean movie-the grandmother
thai movie- alone
hindi movie- chak de india, Khabi kushi kabhi kham, kal ho naa ho
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
அப்படி ஒரு தொடர்பும் இல்லை. ஆனால் அப்படி ஏதேனும் ஒரு ஆள் தெரிந்தால்... ஏதேனும் ஒரு producerர பிடித்து bend it like beckham படத்தை தமிழில் எடுக்க சொல்வேன்...ஹிஹிஹி..:)
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நிறைய புதுசா செய்யும் திறமையாளர்கள் உண்டு. ஆக... நல்லா வரும் தமிழ் சினிமா.
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
அப்படி ஏதேனும் இல்லை என்றால்..ரொம்ப tension ஆயிடுவேன். பைத்தியம் பிடித்துவிடும் என்று நினைக்குறேன். ஹாஹா... தமிழர்களுக்கு...என்ன ஆகுமா?ம்ம்ம்ம்.... நல்ல முன்னேறிவிடுவார்கள்... ஹிஹி...:)
அடுத்து அழைப்பது,
கார்த்திக்
நவீன்
கார்த்திகா
இரயில் பயணத்தில் ஒரு காதல் கவிதை!
இனிய இரவு
ஜன்னல் வெளியே மழை
குளிர் காற்று
பக்கத்தில் நீ
உன் மடியில் நான்
இது போதும்டா.
வாழும் போதே
சொர்க்கத்தை
உணர்ந்துவிட்டேன்!
காதல் பார்வையுடன்
என் கை பிடித்து கேட்டாய்
"எத்தனையோ கவிதை
எழுதி இருக்கே
எனக்காக இப்ப
ஒரு கவிதை
சொல்லேன்..ப்ளீஸ்"
உடனே எனக்கு
தோன்றியது
"நான் கொஞ்ச அழுகு
நீ கொஞ்சும் அழுகு"
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgMAEHzE57zgG1sULFab889L9w2fIDLxmJNcMYyVihj5So-2HrPBKGeaZpwMnA67BJMh3yXIkLHg2rGdCJMkgCF3ytOT1MnSPfxWfZpKURskb9rW3NZFnaErCpaiBgzr6OmPJycV7libFU-/s320/selam4.jpg)
காதலுக்கு கண் இல்லையாம்.
ச்சே.. அப்படி ஒரு காதல்
வேண்டாம் நமக்கு.
என் காதலுக்கு
கண் வேண்டும்,
இல்லையெனில்
இந்த கருப்பு நிலாவை
எப்படி ரசிப்பது?
ரொம்ப குளிருது.
ஜன்னலை சாத்தவா?
இல்ல
உன்னை போர்வையா
அள்ளி போத்தவா?
சேலை மாற்றவேண்டும்
என்று என்னை
வெளியே அனுப்புகிறாயே.
'compartment'க்கு கிடைத்த பாக்கியம்
இந்த
'companion'க்கு கிடைக்காதா?
என்னை
தனியே விட்டு,
உன் நண்பனிடம்
நீ செல்போனில் பேசிய
அந்த இரண்டு நிமிடங்களில்
என் உயிர் 'செல்'களெல்லாம்
தனிமையில்
தவித்தன!
(இதே concept வச்சு நம்ம காதல் இளவரசன் நவீன் காதல் கவிதைகளை அள்ளி வீசுவார் என்று கூறியுள்ளார். விரைவில் எதிர்பார்க்கலாம்....:)