ஆட்டோக்காரன் நான் ஆட்டோக்காரன் என பாடலை கம்பீரமாக, இந்தியாவில் பாட தகுதி உள்ளவர் ஒருவர் என்றால் அது அண்ணாதுரையாக தான் இருக்க முடியும்.
தனது ஆட்டோவில், மாத இதழ், செய்திநாள், லாப்டாப், wifi, ஆசிரியர்களுக்கு இலவசம், குழந்தைகள் தினம் அன்று குழந்தைகளுக்கு இலவசம். அப்துல் கலாம் தினம் அன்று சலுகை என எண்ணி பார்க்க முடியாத அளவுக்கு அசர வைக்கும் இவரது தொழில் பக்தி.
அவரிடம் கேட்டபோது, அவர் சொன்னது, "customers தான் எனக்கு தெய்வம். அதனால தான் நான் சாம்பாதிக்கும் பணத்த, அவங்களுக்கு செய்யனும்னு ஆசைபடுறேன்." என்றார்.
இவ்வளவு வசதிகள் இருந்தும், அதே கட்டணம் தான். கிட்டதட்ட மாதம் 10,000 வரை செலவு ஆகிறது, வீட்டில் இதனை செய்ய அவ்ளளவு ஊக்குவிப்பு இல்லை என்றபோதிலும், அண்ணாதுரை தொடர்ந்து செய்கிறார் அவரது பணியை.
இப்போது புதிதாக அவரது 'app' ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அண்ணா, கண்டிப்பா நீங்க பெரிய ஆளாக வருவீங்க! வாழ்த்துகள் அண்ணா!
Showing posts with label இன்றைய இளையர்கள். Show all posts
Showing posts with label இன்றைய இளையர்கள். Show all posts
Mar 22, 2016
Sep 19, 2015
உங்க அம்மா யாருடைய "பிட்டு படம்"?
"உங்க அம்மா, யாருடைய பிட்டு படம்?" என நீங்க நினைக்குறீங்க. அம்மாவும், பெண் என்பதால்....அம்மாவைப் பார்த்து இப்பாடலை பாடுவீங்களா?
என்ன நீ இப்படி அசிங்கமா கேட்குற என்று குமுறும் பலருக்கு, இதோ இதன் உண்மை காரணம்.
இந்த பதிவு எழுத முக்கியமான காரணம் இளம் சூராவளி, குட்டி தளபதி, புரட்சி சின்ன தளபதி, மக்களின் செல்ல பிள்ளை, கன்னி பெண்களின் கனவு கணவா, VIRGIN பசங்களின் ஓபாமா! - ஜீ.வி
படம், பாடல், வசனங்கள் என கொடுத்ததை எல்லாம் அள்ளி பருகி, துப்ப வேண்டும் என்று தோன்றுகிறது. இதுக்கு தான் ஏற்கனவே "A" சான்றிதழ் கொடுத்துங்களே அப்பரம் என்ன சத்தம்?
1) "A" படங்கள் என்பது ஒரு குறிப்பட்ட வயது பசங்களுக்கு பெண்களுக்கு என்று இருந்தாலும், பெண்களை கேவலப்படுத்தி, அசங்கிபடுத்தி வசனங்களை எடுக்க வேண்டுமா?
2) ஓ delhi belly, AMerican pie படங்கள் எல்லாம் பாக்குறீங்க? தமிழ்ல எடுத்தா என்ன?
யோவ்! இப்படங்களில் பெண்களை கேவலப்படுத்தி பேசவில்லை. பொது விஷயங்களையும் பிரச்சனைகளையும் கொஞ்சம் தைரியமாக சொல்வதே bold movies . திரிஷா இல்லேனா நயன்தாரா- இப்படத்தில் என்ன பொது பிரச்சனை இருந்துச்சு??
3) "நீ எனக்கு பிட்டு படம்?" பாடல்.
ஜீவி பிரகாஷ் மட்டும் குறை கூற முடியாது. இயக்குனர், தயாரிப்பாளர், பாடல் எழுதியவர்- யாருக்குமே இது அபத்தமா தெரியல்லையா? ஒரு தவறை எல்லாரும் சேர்ந்து செய்தால் அது எப்படி சரியாகும்?
டீ கடைகளிலும், டிவியிலும், ரேடியோவிலும், விழாக்களிலும் பாடலை கேட்கும்போது எப்படி இருக்க போகுது?
4)
அம்மா, பாட்டி, சித்தி, பெரியம்மா, தங்கச்சி, அக்கா எல்லாரும் டைனோசர் காலத்துல இருந்தவங்க இல்ல. அப்போ இவங்களும்.......
(கோபம் வரமாதிரி காமெடி பண்ணிய இயக்குனருக்கு, ஒரு டைனோசர் பொம்மை அனுப்பவும்)
***************************************************
சரி இம்புட்டு கோபம் பிட்டு....ச்சீ கோபம் பட்டு என்ன ஆக போகுது?
சிங்கை தமிழ் வானொலி நிலையத்தில் ஒலிப்பரபாகும் பாடல்களை சென்சார் செய்துவிட்டு தான் ஒலிப்பரப்ப படும்.
அப்படி சென்சார் செய்யப்பட்ட சில பாடல்கள்
1)
கண்டாங்கி கண்டாங்கி
கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும்
2) why this kolaveri di...
hand la glass
glass la
eyes-u full-aa tear-u
3) சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல
உலகம் புரிஞ்சு டிரவ்ஸர் கிழிஞ்சு
இனி வைச்சிக்கிட என் கிட்ட தான் ஒன்னும் இல்ல (2)
(cancel செய்த வார்த்தைகள் வானொலியில் ஒலிப்பரப்ப மாட்டார்கள்)
*********************************************
இப்படி சென்சார் செய்யப்பட்டால் திருந்திடுமா இளைஞர் சமுதாயம்?
கண்டிப்பா இல்ல தான். தேவர் மகன் சிவாஜி சொன்னதுபோல் "இது என்ன பெருமையா? கடமை!"
நமக்கு ஒரு பொறுப்பு இருக்கு. இது நம்ம கடமை. இம்மாதிரியான கொச்சை பாடல்களை தடுக்க முடியாவிட்டாலும், இது தப்பு என்று சொல்ல நாம் அனைவரும் ஏதேனும் ஒன்னு செய்ய வேண்டும்- ஊடகங்களுக்கு அதில் அதிக பொறுப்பு இருக்கு.
இந்த பதிவும் ஏதோ ஒரு வகையில் அப்பொறுப்பை செய்து விட முயல்கிறது.
இந்த மாதிரியான பாடல்களால் ஏற்பட்ட பாதிப்பு எப்ப தெரியும் தெரியுமா?
சூப்பர் சிங்கரில் சின்ன குழந்தைகள் "நீ எனக்கு பிட்டு படம் டி...." என பாட,
அதற்கு வெட்கமில்லாமல் பெற்றோர்கள் ஆட,
அதை கேட்டுவிட்டு நடுவர்கள்... "பிட்டு....அந்த டு...landing note இன்னும் emotionalஆ பாடனும் கண்ணா?" என்று சொல்வார்கள் தெரியுமா அன்று புரியும் நமக்கு.
அதற்கு வெட்கமில்லாமல் பெற்றோர்கள் ஆட,
அதை கேட்டுவிட்டு நடுவர்கள்... "பிட்டு....அந்த டு...landing note இன்னும் emotionalஆ பாடனும் கண்ணா?" என்று சொல்வார்கள் தெரியுமா அன்று புரியும் நமக்கு.
Mar 2, 2013
கல்யாணமெல்லாம் இப்ப என்ன ரேஞ்ல போய்கிட்டு இருக்கு தெரியுமா?
படிப்பெல்லாம் இப்ப என்ன ரேஞ்ல போய்கிட்டு இருக்கு தெரியுமா? என்று கவுண்டர் சொன்னது தான் ஞாபகத்திற்கு வருது?
ஏன்? என்று நீங்கள் கேட்பது புரியது!
ஒரு காலத்தில் 21வது பிறந்தநாள் கொண்டாட்டம் சீசன் இருந்துச்சு. இப்ப அவ அவ வயசாகி கல்யாணம் சீசன் வந்துருச்சு!! யப்பா சாமி!!! எம்புட்டு செலவு?
கல்யாணமெல்லாம் இப்ப என்ன ரேஞ்ல போய்கிட்டு இருக்கு தெரியுமா?
ஒவ்வொரு கல்யாணத்திற்கு சென்று மொய் பணம் ஈயாய் போனது தான் மிச்சம்! அந்த காலத்தில் கல்யாண விழா ஒரு தடவையோடு முடிந்துவிடும்.
இப்போது,
1)நிச்சயதார்த்தம்
2)bacherolette party
3)சங்கீத்
4)வளையல் விழா
5)கல்யாணம்
6)reception
சில நேரங்களில் யாருக்கு கல்யாணம், இது என்ன function என்ன நடக்குது எங்க போறோம், அப்படினு யோசிச்சு குழம்பி போன சமயம் எல்லாம் உண்டு.
"உனக்கு என்ன வந்துச்சு. அவங்களுக்கு பணம் இருக்கு. செலவு பண்றாங்க?" என்று நீங்கள் கேட்பது புரியது. பல் இருப்பவன் பக்கோடா சாப்பிடட்டும்! பக்கத்துல நிக்குறவனை ஏன் வாங்கி தர சொல்றீங்க?
சமீபத்தில் ஒரு தோழி (நெருங்கிய தோழி அல்ல) கல்யாணத்துக்கு கூப்பிட்டாள்..இல்ல அது receptionனு நினைக்குறேன்...wait wait..அதுவா..ம்ம்... சரி ஏதோ ஒன்னு! அதுக்கு கூப்பிட்டால், போக முடியவில்லை. அதற்கு பெரிய சண்டை! அட பாவிகளா! என்ன கொடுமையா இது!
இந்த facebook பல விஷயங்களில் உதவியாக இருந்தாலும், சில நேரங்களில் பெரும் தொல்லையாக உள்ளது. 'event' என்று ஒன்றை ஆரம்பித்து அவர்கள் பட்டியலில் இருக்கும் 2034 பேரையும் கூப்பிடுவார்கள். சும்மா என்றோ ஒரு முறை 'ஹாய்' சொன்னவர்களெல்லாம் கூப்பிட்டால், என்ன பா நியாயம் இது! சரி, அவர்களை ஏன் நீ 'friend'ஆக சேர்த்துகிட்ட, அப்படினு கேட்குறீங்களா?
சரி தான் சரி தான்! என்னைய உதைக்கனும்!:((
வீட்டில் கச்சிதமாய் கொண்டாடும் பழக்கம் இருந்தாலும் பரவாயில்ல!! ஆ..ஊனா...ஹோட்டல்! மாளிகை! இப்போதைய trend- கப்பலில் கொண்டாடுவது! சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்தேன். அதில் சங்கீத் விழா கொண்டாடப்பட்டது (இது வடஇந்திய கலாச்சாரம், எப்போது நம்ம கடன் வாங்கி கொண்டோம்னு தெரியல)
அந்த விழாவில் மாப்பிள்ளை வீட்டார் 'flashmob' செய்தார்கள். அதவாது திடீரென்று நின்னு ஆடுவார்கள். பார்க்கும்போது எனக்கு 'குபீர்' சிரிப்பு தான் வந்துச்சு. நீங்க, சந்தோஷமா செய்யுங்க! தப்பில்ல. ஆனால், ஆடம்பர செலவை குறைத்து கொண்டால் நல்லா இருக்கும். அதற்கு பதில், ஏழைகளுக்கு உதவலாமே....(ஓ அது, நடிகர் நடிகைகள் பிறந்த நாள் அன்று செய்வாங்களா?)
அப்பரம் அந்த நிகழ்ச்சில பேசிய பாட்டி சொன்னது, "மாப்பிள்ளையும் பொண்ணும் சந்தோஷமா இருக்கனும். ஆசைக்கு ஒன்னு. ஆஸ்திக்கு ஒன்னு பெத்துக்கனும். ஏனா...என்ன தான் இருந்தாலும், பையன் வேணும். அப்ப தான் சொத்து விட்டு போகாது..." என்றார்.
ஹாஹாஹாஹாஹா.... பாட்டி போங்க பாட்டி! கோபம் வர மாதிரி காமெடி பண்ணாதீங்க!!
Feb 14, 2013
இன்னிக்கு ஏதோ காதலர் தினமாம்?
இந்த நாள்- 14 பிப்ரவரி அன்று உலகத்தில் உள்ளவரை 4 வகையில் பிரிக்கலாம்!
1) காதல் காதல் காதல்

தமிழ்ல ஒரு வாக்கியம் சரியா எழுத தெரியாத பயலுக எல்லாம் கவித கவிதையாய் கொட்டி தீர்ப்பான்! ரோஜா பூவுக்கு வாய் இருந்தால், துப்பும்! அம்புட்டு ரோஜா பூக்களை வாங்கி குவிப்பான். காதலன்/காதலி வீட்டுக்கு பூ அனுப்புவாங்க. அவுக வேலை பார்க்கும் ஆபிஸுக்கு பூ அனுப்புவாங்க!!
இப்படி ஒரு நாளில் ஒரு மாசம் சம்பளத்தை செலவு பண்ணுவாங்க!
2) நான் சிங்கம்! நான் single!!
365 நாளும் காதல் இருக்கனும். இன்று மட்டும் கொண்டாடுவது மூட்டாள் தனம் அப்படினு சொல்லும் கட்சி. காதலிப்பவர்களை கிண்டல் பண்ணும் கூட்டம் இது. கடவுள் எனக்காக ஒருத்தரை/ஒருத்தியை பார்த்து வைத்து இருக்கிறார். அவர் ஒரு நாள் என்னை பார்க்க வருவார் அப்படினு வைதேகி காத்திருந்தாள் விஜய்காந்த் மாதிரி உட்கார்ந்து இருப்பவர்கள். தேவையில்லாமல் கிண்டல், கேலி செய்து facebookகளில் அதிக 'லைக்'களை சேர்ப்பவர்கள்.
இன்னிக்கு ''happy thursday" அப்படினு சொல்லி காதலர்களை வெறுப்பேத்துபவர்கள்!
3) காதல் கலாச்சாரத்தை கவுகுது!

கலாச்சாரத்தை காப்பாத்தனும். கருப்பான்பூச்சியை காப்பாத்தனும்னு கண்டபடி இந்த தினத்தை எதிர்ப்பவர்கள்! ஒரு காரணமும் இருக்காது! ஆனால், எதிர்ப்பார்கள்!
பாரதியார் தினம் எந்த நாள் தெரியுமா?
அவர் இறந்த நாள் எந்த நாள் தெரியுமா?
என கேட்டு இளையர்களை மடக்குவதாய் நினைப்பு!!!
பாரதியார் தினம் தெரியாமல் இருக்கலாம்...ஆனால் அவர் சொன்ன 'ஜாதிகள் இல்லையடி பாப்பா'னு காதலிப்போர் இளையர்கள்!
நீங்க- 'என் ஜாதிக்கு ஒன்னுனா, நான் வெட்டுவேன்!' என்கிறீர்கள்!!!
***************************************************************************
அப்பரம் அந்த நான்காவது குரூப்?
அட அது நம்ம தான் (நான் உள்பட)
4) எல்லாரும் அன்பர் தான். இன்று அன்பர தினம் தான்.

காதலிப்போரே, வாழ்க!
single சிங்கமே, all the best!
கலாச்சாரத்தை காப்பாத்துவோரே, ம்ம்ம்...நடத்துங்க!!
கெட்டவங்களோ, நல்லவங்களோ, அனைவரும் அன்பர்கள் தான்! ஏதோ காதலர் தினம் அப்படினு சொல்லி அவர்களை நாம் தனியாக விட வேண்டாம். அன்பர் தினம் என்று அனைவரும் கொண்டாடுவோம்!!
மற்றவர்களை சந்தோஷமா வச்சு இருங்க, அதுவே போதும்! சண்டை வேண்டாம். போர் வேண்டாம். சந்தோஷமா வாழ்வோமே- என்று நினைப்பவர்கள் நாங்கள்!!
****************************************************************************
1) காதல் காதல் காதல்
தமிழ்ல ஒரு வாக்கியம் சரியா எழுத தெரியாத பயலுக எல்லாம் கவித கவிதையாய் கொட்டி தீர்ப்பான்! ரோஜா பூவுக்கு வாய் இருந்தால், துப்பும்! அம்புட்டு ரோஜா பூக்களை வாங்கி குவிப்பான். காதலன்/காதலி வீட்டுக்கு பூ அனுப்புவாங்க. அவுக வேலை பார்க்கும் ஆபிஸுக்கு பூ அனுப்புவாங்க!!
இப்படி ஒரு நாளில் ஒரு மாசம் சம்பளத்தை செலவு பண்ணுவாங்க!
2) நான் சிங்கம்! நான் single!!
365 நாளும் காதல் இருக்கனும். இன்று மட்டும் கொண்டாடுவது மூட்டாள் தனம் அப்படினு சொல்லும் கட்சி. காதலிப்பவர்களை கிண்டல் பண்ணும் கூட்டம் இது. கடவுள் எனக்காக ஒருத்தரை/ஒருத்தியை பார்த்து வைத்து இருக்கிறார். அவர் ஒரு நாள் என்னை பார்க்க வருவார் அப்படினு வைதேகி காத்திருந்தாள் விஜய்காந்த் மாதிரி உட்கார்ந்து இருப்பவர்கள். தேவையில்லாமல் கிண்டல், கேலி செய்து facebookகளில் அதிக 'லைக்'களை சேர்ப்பவர்கள்.
இன்னிக்கு ''happy thursday" அப்படினு சொல்லி காதலர்களை வெறுப்பேத்துபவர்கள்!
3) காதல் கலாச்சாரத்தை கவுகுது!
கலாச்சாரத்தை காப்பாத்தனும். கருப்பான்பூச்சியை காப்பாத்தனும்னு கண்டபடி இந்த தினத்தை எதிர்ப்பவர்கள்! ஒரு காரணமும் இருக்காது! ஆனால், எதிர்ப்பார்கள்!
பாரதியார் தினம் எந்த நாள் தெரியுமா?
அவர் இறந்த நாள் எந்த நாள் தெரியுமா?
என கேட்டு இளையர்களை மடக்குவதாய் நினைப்பு!!!
பாரதியார் தினம் தெரியாமல் இருக்கலாம்...ஆனால் அவர் சொன்ன 'ஜாதிகள் இல்லையடி பாப்பா'னு காதலிப்போர் இளையர்கள்!
நீங்க- 'என் ஜாதிக்கு ஒன்னுனா, நான் வெட்டுவேன்!' என்கிறீர்கள்!!!
***************************************************************************
அப்பரம் அந்த நான்காவது குரூப்?
அட அது நம்ம தான் (நான் உள்பட)
4) எல்லாரும் அன்பர் தான். இன்று அன்பர தினம் தான்.
காதலிப்போரே, வாழ்க!
single சிங்கமே, all the best!
கலாச்சாரத்தை காப்பாத்துவோரே, ம்ம்ம்...நடத்துங்க!!
கெட்டவங்களோ, நல்லவங்களோ, அனைவரும் அன்பர்கள் தான்! ஏதோ காதலர் தினம் அப்படினு சொல்லி அவர்களை நாம் தனியாக விட வேண்டாம். அன்பர் தினம் என்று அனைவரும் கொண்டாடுவோம்!!
மற்றவர்களை சந்தோஷமா வச்சு இருங்க, அதுவே போதும்! சண்டை வேண்டாம். போர் வேண்டாம். சந்தோஷமா வாழ்வோமே- என்று நினைப்பவர்கள் நாங்கள்!!
****************************************************************************
Jun 25, 2008
எதிர்நீச்சல்
நீச்சல் குளத்தில்
தள்ளினாய்
நீச்சல் தெரியாதவன்
எப்படியாவது
நீச்சலடித்து கற்று கொள்வான்!
நீச்சல் பிடிக்காதவன்
என்ன செய்வான்?
மூழ்கி தானே போவான்.
புரிந்து கொள்ளமாட்டீர்களா?
வேலை பிடிக்கவில்லை என்றான்
"நல்ல வேலையில் இருக்கிற
உனக்கு, என்ன கேடு வந்துச்சு?"
என்றீர்கள்!
பிடிக்கவில்லை என்றேனே
ஏன் எனக்கு பிடிக்கவில்லை
என்று கேட்க
ஒரு ஜீவன் இல்லையே!
பிடிக்காத இடத்தில்
உதட்டில் சிரிப்பு
உள்ளத்தில் தவிப்பு!
கோபம் வருகிறதே
கோபத்தை வெளிப்படையாக
காட்டமுடியவில்லை என்று
அழுகை வருகிறதே.
கண்ணீரை துடைக்க
என் கைகுட்டைகூட
வர மறுக்கிறது
மடியில் சாய்ந்து
அழ ஒரு ஆளில்லை
என் மனச்சாட்சிக்கு
ஒரு மடி இல்லை!
தள்ளினாய்
நீச்சல் தெரியாதவன்
எப்படியாவது
நீச்சலடித்து கற்று கொள்வான்!
நீச்சல் பிடிக்காதவன்
என்ன செய்வான்?
மூழ்கி தானே போவான்.
புரிந்து கொள்ளமாட்டீர்களா?
வேலை பிடிக்கவில்லை என்றான்
"நல்ல வேலையில் இருக்கிற
உனக்கு, என்ன கேடு வந்துச்சு?"
என்றீர்கள்!
பிடிக்கவில்லை என்றேனே
ஏன் எனக்கு பிடிக்கவில்லை
என்று கேட்க
ஒரு ஜீவன் இல்லையே!
பிடிக்காத இடத்தில்
உதட்டில் சிரிப்பு
உள்ளத்தில் தவிப்பு!
கோபம் வருகிறதே
கோபத்தை வெளிப்படையாக
காட்டமுடியவில்லை என்று
அழுகை வருகிறதே.
கண்ணீரை துடைக்க
என் கைகுட்டைகூட
வர மறுக்கிறது
மடியில் சாய்ந்து
அழ ஒரு ஆளில்லை
என் மனச்சாட்சிக்கு
ஒரு மடி இல்லை!
Subscribe to:
Posts (Atom)
