Showing posts with label 2 வார்த்தை கதைகள். Show all posts
Showing posts with label 2 வார்த்தை கதைகள். Show all posts

Jun 2, 2009

2 வார்த்தைகளில் கதை எழுதலாமாம்!

சுஜாதா எழுதிய 'சிறு சிறு கதைகள்' என்னும் புத்தகத்தில் படித்தது- 2 வார்த்தைகளில் கதை எழுதலாமாம். அவர் சில உதாரணங்களை கொடுத்து உள்ளார். அவை....

தலைப்பு: கரடி வேஷம் போட்டவனின் கடைசி வார்த்தைகள்
கதை: ஐயோ சுட்டுடாதே!

தலைப்பு:2050ல் குழந்தை
கதை: தங்கச்சின்னா என்னம்மா?

தலைப்பு: வசந்தாவின் கணவன்
கதை: சுசீலாவோடு எப்படி?

சரி படிக்கும்போதே ரொம்ப சுவாரஸ்சியமா இருந்துச்சு. நானும் முயற்சி செய்யலாம்னு...

1) தலைப்பு: மாமியாரின் கோபம்
கதை: பொண்ணு பொறந்திருக்கு!

2) தலைப்பு:காதல் கசக்குதய்யா!
கதை: "இந்தாங்க.... invitation."

3) தலைப்பு: முடிவு
கதை: "மச்சி, ஊத்திகிச்சுடா!"

4)தலைப்பு:கனவுகள்
கதை: வேலை போச்சு!

5) தலைப்பு: திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
கதை: "யாரும்மா இவரு?"

இந்த கடைசி கதை மட்டும் சிலருக்கு புரியாமல் இருக்கும். அது என்ன மேட்டர்ன்னா... பலர் வெளிநாடுகளில் வேலை செய்கிறோம். லீவு நாட்களில் சொந்த ஊருக்கு செல்லும்போது, பிள்ளைகளுக்கு தங்களது அப்பாவையே அடையாளம் காண முடியவில்லை. அந்த அளவுக்கு இருக்கு நிலைமை. அது தான் அந்த கதை! புரிஞ்சுதோ????