பிங்- சமுதாயத்தின் சாபகேடு
தொடரி- நமக்கு தான்,நமக்கு தான்!
**************************************************
இந்த வருடத்தின் மிகச்சிறந்த ஹிந்தி படம் 'பிங்' என்று சொல்லலாம். இப்போது சமுதாயத்தில் நடந்து கொண்டிருக்கும் பெண்களுக்கு எதிரான சாபகேட்டை அப்படியே சித்தரித்த விதம்- எழுத்தாளர் ritesh shah.
வேலைக்கு போகும் மூன்று இளம்பெண்கள் டில்லியில், தனியாக வீடு எடுத்து தங்குகிறார்கள்- "ஐயோ, தனியாவா?"

என்று பலரின் மனதில் அச்சத்தை உண்டாக்கும் விதத்தில் தான் தற்போது நம்ம இந்தியா இருக்கிறது. இது யார் விட்ட சாபகேடோ? இல்ல யார் வளர்த்துவிட்ட சாபகேடோ?
பெண்கள் வெளியே சென்றது குற்றம்.
தெரியாத ஆண்களோடு சென்றது குற்றம்.
அங்கே ஒன்றாக இரவு உணவு சாப்பிட சென்றது குற்றம்.
இப்படி குற்றங்களை பெண்களின் மீது சுமத்திய பின் அவர்களுக்கு என்ன ஆகிறது என்பதை, ஒவ்வொரு காட்சியில், நாமே நம்மை அரைந்து கொள்ளும்படி இருந்தது படம்.
இதலாம் நாம் தினமும் செய்தியில் படித்தாலும், திரைப்படமாக பார்க்கும்போது, ஏற்படும் ஒரு பயம் கலந்த கலவரம் நமக்குள் புகுந்து கொள்வது தான் படத்தின் மிகப்பெரிய பலம், மிகப்பெரிய வெற்றி.
பெண்களுக்கு எதிரான குற்றம், சொல்ல முடியாத வலியை தருவது ஒரு பக்கம் என்றால், அதை எதிர்த்து போராடி, சட்டபடியாக ஜெயிப்பது அதைவிட வலி மிகுந்தது என்பதை 'பிங்' படத்தில் வரும் கோர்ட் காட்சிகள் சிறந்த உதாரணம். வசனங்கள் சாட்டையடியாக நம் மேல் விழுகிறது. இதை, மிக அழகாக எடுத்து சென்ற திரைக்கதை தான் முக்கிய ஹீரோ.
தாப்சி:
'அடி வெள்ளாவி வெச்சுத்தான்
வெளுத்தாங்களா உன்ன
வெய்யிலுக்கு காட்டாம
வளத்தாங்களா' -
வெறும் பாடல்வரிகளுக்கு மட்டும் தாப்சியை பயன்படுத்திய தமிழ் சினிமாவிலிருந்து, வந்த ஒரு திறமைசாலி தான் என்பதை நிருபித்து இருக்கிறார். மிகவும் பெருமையாக இருந்தது அவரின் நடிப்பை பார்க்கும்போது.
அமிதாப்:
தியெட்டரில் 4வது வரிசையில் தான் உட்கார்ந்து தான் படத்தை பார்த்தேன். அங்கிருந்து ஸ்கீரினுக்குள் குதித்து, அமிதாப்-பை கட்டி அணைக்க வேண்டும் என இருந்தது. நடிகராக இல்லாமல், ஒரு நம்பிக்கையாக ஜொலித்தார். இந்த கேடுகெட்ட உலகத்தில், இப்படி யாராவது ஒருத்தர் நமக்காக இருப்பார் என்பதை நடிப்பு மூலம் காட்டியதற்கு, கொடி நன்றிகள்.
'இந்த virgin பையன் சாபம் உன்ன சும்மா விடாதுடி' என்று கேவலமாக மார்தட்டி கொண்டிருக்கும் ஹீரோக்கள் நிறைந்த தமிழ் சினிமாவிலிருந்து எவ்வளவு தூரம் ஹிந்தி சினிமா பக்குவப்பட்டிருக்கிறது என்பதற்கு ஒரு சான்று இதோ 'பிங்' படத்தில். ரொம்ப முக்கியமான காட்சி.
அமிதாப்: are you a virgin?
தாப்சி: *முழிப்பார்*
அமிதாப்: answer me yes or no. don't shake your head.
பார்ப்பவர்களின் மனதில் எந்த ஒரு சலனமும் ஏற்படாத வகையில் அமைந்த வசனம்!
படத்தில் வந்த கோர்ட் காட்சிகள் அனைத்தும் ஒரே டேக் தானாம். 6 கேமிராக்களை வைத்து படமாக்கப்பட்டதாம். அமிதாப், ஒவ்வொரு காட்சிக்கும் 2 அல்லது 3 மணி நேரம் ஒத்திகை பார்ப்பவர். ஆனால், தாப்சி அப்படி இல்லை. இயல்பாக உணர்வுகள் வர வேண்டும் என்பதற்காக இந்த ஒத்திகையும் இல்லாமல், பேசிய வசனம் தான் மேற்கோள் காட்டிய காட்சி. அமிதாப் கேள்விக்கு, தாப்சி இயல்பாய் பயந்து முழிக்க, அமிதாப் குரலை உயர்த்தி பேசிய வசனம் தான் அது. இது எதுவுமே எழுதப்படவில்லை. தானாக பேசிய வசனம்.
'பிங்' படத்திற்காக எழுதுப்பட்ட கிளைமேக்ஸ் வேறு. தங்களது எதிராக எல்லாம் ஆதாரங்களும் இருப்பதால், கேஸ்சை தோற்றதாக தான் முதலில் இருந்ததாம். ஆனால், மக்களுக்கு நம்பிக்கையும் தைரியமும் இருக்க வேண்டும் என்பதற்காக, மாற்றியமைக்கப்பட்டது கிளைமேக்ஸ்.
எனக்கு இரண்டுமே பிடித்திருக்கும். ஆக மொத்தத்தில், 'பிங்' போன்ற படங்கள் தான் குடும்பங்கள் கொண்டாட வேண்டிய வெற்றி படங்கள்.
*************************************************************
தொடரி- சினிமாவின் சாபகேடு
ஒன்னு, ரெண்டு நல்ல தமிழ் படங்கள் வரும். யப்பா, தமிழ் சினிமா வேற ரேஞ்சுல போய்கிட்டு இருக்கு என்று சந்தோஷப்பட்டு முடிப்பதற்கு, 'தொடரி' போன்ற படங்கள் வந்து அந்த சந்தோஷத்தை தரமட்டம் ஆகிடும்.
தமிழ் படங்களில் நாயகிகளை 'லூசு'த்தனமாக காட்டுகிறார்கள் என்று குற்றச்சாட்டை இப்படத்தில் மீண்டும் நிருப்பித்து இருப்பது ஒரு வருத்தம் என்றாலும், பிரபு சாலமன் படத்திலா இப்படி என்பது தான் மிகப்பெரிய அதிர்ச்சி.
ரயில் எதை நோக்கி போகிறது என்பதைகூட யூகித்துவிடலாம், ஆனால் கதை எந்த பக்கம் போகிறது என்பது அறியாமலேயே நாமும் தள்ளாடி போகிறோம்.
ஊடகங்களை கிண்டல் செய்தது சரி. ஏதோ ஒரு வகையில் காமெடி என்று வைத்து கொள்ளலாம். அது என்ன 'மலையாள திமிர்' என்று அப்பட்டமாக சொன்னதெல்லாம் எந்த வகையில் சரி, பிரபு சேட்டா?
கதைக்கும் திரைக்கதைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பிரபு சாலமான, கிளைமேக்ஸ் நேரத்தில் ரயில் மேல பாட்டு வைத்தார்? இது யார்விட்ட சாபகேடு, சேட்டா?
குழந்தைகளாலும் ரசிக்க முடியாத கிராபிக்ஸ் காட்சிகள் கொண்ட 'தொடரி' படம் பார்த்து என்னாலயும் எந்த வகையில் ரசிக்க முடியவில்லை.