Feb 10, 2009

the real slumdog millionaire

அட இவ்வளவுதானா-ஸ்லம்டாக் மில்லியனேர்

முதலில் இந்த படத்தின் online linkயை எனக்கு கொடுத்து உதவிய வினையூக்கிக்கு மற்றும் சஞ்சய் அண்ணாவுக்கும் நன்றி!:)

பரபரப்புக்கு பஞ்சமில்லை. இந்த படத்தை பார்த்தே ஆகவேண்டும் என்று அடம்பிடித்து தேடி கண்டுபிடித்து பார்த்தேன். படம் பார்த்தபிறகு 'அட ச்சே, இவ்வளவு தானா?' என்றது மனம்.

முதல் பாதி, அருமை. விறுவிறுப்பு இருந்தது. ஆனா, இரண்டாம் பாதியில் ரொம்பவே பாலிவுட் ஸ்டைல்! இரயில் நிலையத்தில் கிளைமெக்ஸ், அதுக்கு அப்பரம் ஒரு டான்ஸ்! அட பாவமே!

திரைக்கதை வித்தயாசமாக தோன்றினாலும், கொஞ்ச நேரத்திற்கு அப்பரம் சலிப்பை தட்டியது. ஏகப்பட்ட கேள்விகள் எழுந்தன. உதராணத்திற்கு, தூப்பாக்கியை கண்டுபிடித்தவர் யார்? என்ற கேள்விக்கு, ஹீரோவின் அண்ணன் ஒரு முறை தூப்பாக்கி கொண்டு வில்லன்களை சுடுவதால், அதற்கு பதில் தெரியுமாம்! நம்ப முடியவில்லை!!!!

வசனங்கள் நல்லா இருந்துச்சு. குழந்தைகளின் நடிப்பு டாப்! ஏனோ தெரியவில்லை இக்குழந்தைகளுக்கு அதிகப்படியான விருதுகள் கிடைக்கவில்லை. சொல்ல போனால், இவர்களுக்கு தான் விருதுகள் வந்து குவிந்து இருக்க வேண்டும்.

ஒரு சில காட்சிகள் கைதட்ட வைத்தது. அமிதாப் பச்சன் வருகிறார் என்று ஊரே சத்தம்போடுகிறது. சிறு வயது ஹீரோ கழிவறையில் இருக்கிறார். ஆனால், அண்ணன் வெளியே உள்ள கதவை பூட்டிவிடுகிறார். வெறித்தனமான அபிதாப் பச்சனின் ரசிகரான ஹீரோ வெளியே வர முடியாமல் தவிக்கிறார்.

என்ன செய்வது என்று தெரியாமல், ஒன்றை முடிவெடுக்கிறார். கழிவறையில் கீழே தான் ஒரே வழி. ஆனால், அங்கு தான் பலரின் மலம் கிடக்கிறது. அதையும் பாராமல் ஹீரோ அதில் விழுந்து வெளியே வருகிறார், தனது ஹீரோவை பார்க்க! அசத்தலான சிந்தனை, நடிப்பு!

இப்படி ஒரு சில அருமையான காட்சிகள். அப்படியே documentary film ஸ்டைலில் படத்தை எடுத்து சென்று இருந்தால், சூப்பரா இருந்திருக்கும். (ஆனா...ஆஸ்கார் அளவுக்கு வந்திருக்குமோ தெரியுல...)

நாவலின் அடிப்படையில் வந்த கதை என்பதால், அந்த நாவலை படிக்க ஆர்வம் வந்துள்ளது.

ஆனா, இன்னொரு ஆச்சிரியம். இந்த படமா ஆஸ்காருக்கு போவுது?

அப்படி என்றால், மணிரத்னம் எடுத்த பாதி படங்கள் ஆஸ்காரை வென்று இருக்க வேண்டுமே! ஏ ஆரின் பிரமிக்க வைத்த எத்தனையோ பாடல்கள் இருக்க, இந்த படம் மூலம் அவருக்கு ஒரு ஆஸ்கார் கிடைக்க போவது என்று நினைத்தால், சந்தோஷ கலந்த வருத்தம் தான் மிஞ்சுகிறது.

சரி எதுவாக இருந்தாலும் பரவாயில்லை,

ஆஸ்காரை தொட்டுவிட்டது!- ஒரு இந்தியனாக எனக்கு பெருமை

ஏ ஆருக்கு ஆஸ்கார் கிடைத்தால், ஒரு தமிழனாக இன்னும் பெருமைப்பட்டு கொள்வேன்!:)

Feb 4, 2009

கிரிஷுக்கும் சங்கீதாவுக்கும் கல்யாணம்!


பாடகர் கிரிஷுக்கும் சங்கீதாவுக்கும் கல்யாணம்! கிரிஷுக்கு என்றே ஒரு பெரிய ரசிகை கூட்டம் இருக்குது இங்க. இவருக்கு கல்யாணம் ஆன பிறகு, நிறைய பொண்ணுங்க 'எங்கிருந்தாலும் நீ வாழ்க'ன்னு சோகமா பாடிகிட்டு திரியுறாங்க. அழுவாத குறை தான்!


ஆனா, கிரிஷ் அப்பாவுக்கு இந்த கல்யாணத்துல அவ்வளவு இஷ்டம் இல்லையாம். கல்யாணத்துக்குகூட வரவில்லை! (ஒரு படங்களில்கூட அவரை காணும்...)


ம்ம்...என்னமோ நடக்குது...மர்மமா இருக்குது!

Feb 3, 2009

சிலம்பரசனின் slumdog millionaire

ஐயோ ஐயோ... எனக்கு சிப்பு தான் வருது!

slumdog millionaire படம் தமிழாக்கம் செய்து, வரும் feb 14th வெளியீடு காண போகிறது. அதில் ஹீரோவுக்கு குரல் கொடுத்தவர் இன்று தனது 25வது பிறந்தநாளை கொண்டாடும் சிலம்பரசன்!

ஏன் இவர்? எதுக்கு? எப்படி? ஐயோ....அப்படின்னு தலையில் அடித்து கொள்பவர்களே, சாந்தி! சாந்தி!

ஆஸ்கார் விருது வாங்கும் தருவாயில் இருக்கும் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. சிலம்பரசன் இதில் வேற இருக்கிறார்...

ஆஸ்கார் மட்டும் ஜெயிச்சிட்டோம்... அப்பரம் அவ்வளவு தான்!என்னால தான் ஜெயிச்சிருக்கோம்ன்னு பேட்டி பேட்டியா கொடுத்தாலும் கொடுப்பாரே!:(