
நேத்திக்கு சகபதிவர் ஒருத்தர், கார்த்திகா ரஞ்சன்கிட்ட (http://www.neyamukil.blogspot.com) பேசிகிட்டு இருந்தேன். என்னோட வலைப்பூ பக்கத்த பத்தி கல்கில எழுதியிருக்கேன்னு சொன்னாங்க. ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப சந்தோஷமா இருந்துச்சு. அவங்க எனக்கு அந்த செய்தியை ஸ்கேன் செய்து அனுப்பவதாக சொன்னாங்க. கோபி அண்ணாகிட்ட இந்த விஷயத்த பத்தி சொன்னேன். உடனே அனுப்பிவச்சார் ஸ்கேன் செய்து. நன்றி அண்ணா.
இதற்கிடையில், நானும் நம்ம கண்ணால அந்த புத்தகத்துல என்ன எழுதியிருக்குன்னு படிக்கலாம்னு வாங்கி பார்த்தேன். நானும் சென்று வாங்கினேன். முதலில் எந்த பக்கத்தில் வந்து இருக்குதுன்னு தெரியாம புரட்டி புரட்டி பார்த்தேன். அப்பரம் அகப்பட்டு விட்டது பக்கம்.
அப்பரம் என்ன "எல்லாம் புகழும் ஒருவன் ஒருவனுக்கு...." பாட்டு அந்த கடையில நிக்குற எல்லாருமே என்னைய பாத்து பாடுற மாதிரி ஃவீலிங். ஹிஹி.....
என் வலைப்பதிவின் பெயர். சமீபத்தில் எழுதிய அடிக்கடி செய்து அடித்து கொண்டிருப்பவரின் பட்டியல் என்னும் பதிவை போட்டு இருந்தார்கள். சின்ன செய்தியாக இருந்தாலும், எனக்கு இது மிகப்பெரிய சாதனை. சொல்ல வார்த்தை இல்லை. கார்த்திகா அக்காவுக்கு மறுபடியும் நன்றி!!!

