காலை மணி 9.
"another boring day. the same office. the same old-looking fellows. I'm bored!" அலுத்து கொண்டாள் சந்தியா.
"same here..." பெருமூச்சுடன் ரம்யா, தனது ஆபிஸ் கேபினில் உள்ள கணினியில் இமெயில் பார்த்தபடியே சந்தியாவுடன் கூறினாள்.
சந்தியா ரம்யாவிடம், " ஏய் where's anjali?"
***
அன்று காலை மணி 5. அஞ்சலி எழுந்தாள். அனைவரும் எழுவதற்கு முன் எழுவது அவள் பழக்கம். அவள் எழுந்துவுடன் செய்யும் முதல் வேலை முருகன் பக்தி பாடல்களை போடுவது. பாடல்களை கேட்டு கொண்டே வீட்டு வேலைகளை செய்து முடித்தாள். வீட்டில் உள்ளவர்களுக்கு காலை உணவு சமைத்து மேசையில் வைத்தாள். தங்கையின் கைசெலவுக்காக சிறிது தொகையை அவளது கை பையில் திணித்துவிட்டு தங்கையை எழுப்பினாள்.
அஞ்சலிக்கு சேலை அணிய தான் பிடிக்கும். பிங் நிற சேலையை அணிந்து கொண்டு ஹாலுக்கு வருகையில் அப்பா எழுந்து வந்தார்.
அப்பா, "என்னமா கிளம்பிட்டீயா?"
அஞ்சலி, " ஆமா பா.... ஏன் பா இவ்வளவு சீக்கிரம் எழுந்திருச்சுட்டீங்க..? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாமே பா?"
அப்பா சிரித்துகொண்டே, "இருக்கட்டும் மா..." என்றவர் செய்தித்தாளை எடுத்தார்.
"நீ சாப்ட்டீயா?" கேட்டார் அப்பா அஞ்சலியிடம்.
பூஜை அறையிலிருந்து அஞ்சலி, "பூஜைய முடிச்சுட்டு வந்திடுறேன் பா!"
அஞ்சலி காலையில் 20 நிமிடங்களாவது பூஜை செய்வாள். சிறு வயதிலிருந்தே அவள் அம்மா கற்றுகொடுத்த பாடம் இது. அஞ்சலியின் அம்மா சமையலறையிலிருந்து சூடான இட்லியை எடுத்து வந்து மேசையில் வைத்தார்.
பூஜை முடித்த அஞ்சலி, " ஏன் மா... நான் எடுத்துட்டு வருவேன்ல...நீங்க ஏன் கஷ்டபடுறீங்க?"
அம்மா புன்னகையித்தபடி, " சரி நீ முதல சாப்பிடு!" என்று அஞ்சலியிடம் கூற, அதற்கு அஞ்சலி,
"இல்ல மா...போன வெள்ளிக்கிழமை கோயிலுக்கு போய் இருந்தப்ப அய்யர் சொன்னார்...அடுத்த 9 வாரத்துக்கு வெள்ளிக்கிழம வெள்ளிக்கிழம விரதம் இருந்தா நல்லதுனு.... நான் ராத்திரி வந்து சாப்பிட்டுக்கிறேன்...நீங்க சாப்பிடுங்க?" என்றபடி லெப்டாப்பை எடுத்து கொண்டு ஆபிஸுக்கு செல்லும்போது மணி 8.
அஞ்சலி வீட்டிலிருந்து ஆபிஸுக்கு போக அரை மணி நேரமாகும். 8.30 மணிக்கே ஆபிஸில் இருந்திருக்க வேண்டும். 11 மணி ஆகியும் அஞ்சலி அங்கு இல்லை.
என்ன நடந்திருக்கும்?
பஸ் விபத்தா?
சாலை மறியலா?
அஞ்சலிக்கு உடல் நலம் சரியில்லையா? (காலையிலிருந்து ஒன்னும் சாப்பிடவில்லையே, அஞ்சலி!)
ஏன் அஞ்சலி ஆபிஸில் இல்லை?
ஏன்னா நம்ம அஞ்சலி இப்படிப்பட்ட அஞ்சலியே இல்லை!! இந்த மாதிரி பொண்ணுங்கள venusலயும் marsலயும் பார்க்கலாம் தவிர earthல பாக்க முடியாதே!
உங்களது கடந்த இரண்டு நிமிடங்களை கொஞ்சம் rewind பண்ணுங்க....
***
சந்தியா ரம்யாவிடம், " ஏய் where's anjali?"
அன்று காலை மணி 8 ஆகியும் அஞ்சலி இன்னும் படுக்கையைவிட்டு எழுந்திருக்கவில்லை. நேற்று தோழியின் 'break up' partyக்கு சென்றுவிட்டு இரவு....அதாவது விடியற்காலை 3 மணிக்கு தான் வீட்டிற்கே வந்து சேர்ந்தாள்.
அஞ்சலியின் அப்பா, " அஞ்சலி....ப்ளீஸ் எழுந்திரி. ஆபிஸுக்கு நேரமாச்சு உனக்கு. தினமும் காலையில உன்னைய எழுப்புறதே என் வேலையா போச்சு!! உங்க அம்மா... நீ இன்னும் எழுந்திரிக்கலையான்னு சத்தம் போட்டுகிட்டு இருக்கா...."
போர்வையை விலக்கியபடி சோம்பல் முறித்த அஞ்சலி, "good morning dad!" அப்பாவை கட்டிபிடித்தாள்.
"சரி சரி... சீக்கிரம் போய் கிளம்பு. உங்க அம்மா அங்க கத்திகிட்டு இருக்கா..." அப்பா அஞ்சலியை அறையை விட்டு அனுப்பினார்.
செய்தித்தாளை புரட்டினார் அப்பா. அவரை பார்த்து சிரித்து கொண்டே அஞ்சலி, "dad, உங்க வயசு பசங்க எல்லாம் இந்த டைம் பீச்ல walking போறாங்க. நீங்க ஏன் சும்மா வீட்டுல இருக்கீங்க?" என்றாள் 'பசங்க' என்ற வார்த்தையை கிண்டலாய் சொல்லிகொண்டே.
சமையலறையிலிருந்து வெளியே வந்த அம்மா, "shut up anjali. is this how you talk to your dad?"
அஞ்சலி, "அப்பாகிட்ட தான் மா இப்படிலாம் பேச முடியும். பக்கத்துவீட்டுக்காரனோட இப்படி பேசுனா.... அவர் பொண்டாட்டி சந்தேகப்பட மாட்டாங்களா?" என்று நக்கல் அடித்தபடி குளிக்க சென்றாள்.
அஞ்சலிக்கு ஜீன்ஸ் ப்ளாக் ஷ்ர்ட்டுதான் பிடிக்கும். அதை அணிந்துவந்தாள். மேசையில் இருந்த bread toastயை ஒரு கடி கடித்தாள்.
அம்மா, "anjali, இன்னிக்கு வெள்ளிக்கிழம. why can't you wear something traditional. punjabi suit or that pink saree that i bought last week?"
அஞ்சலியிடம் யாரோ அவளின் கிட்னியை தானமாக கேட்டதுபோல் அப்படி ஒரு ஷாக் முகத்தில்.
"எப்படி மா...உங்களால இப்படி சொல்ல முடியது? அதுக்கு நீங்க என்னைய நாலு கெட்ட வார்த்தையால திட்டி இருக்கலாம். me, wearing a saree?? no way, mom! என் கல்யாணத்துக்கே நான் ஜீன்ஸ்ல தான் இருப்பேன்!" அஞ்சலி இன்னொரு கடி கடித்தாள் bread toastஐ.
ஷு மாட்டிக்கொண்டிருந்த அஞ்சலியின் தங்கை, " ஓ உனக்கு கல்யாண ஆசை வேற இருக்கா? அம்மா... எப்படியாச்சு இவள எங்கயாவது தள்ளிவிட்டுடுங்க!"
தங்கையின் கைசெலவுக்காக மேசையில் வைத்திருந்த பணத்தை எடுத்தாள் அஞ்சலி.
தங்கை, "அம்மா, இங்க பாருங்கம்மா...இவள...."
அஞ்சலி, "அம்மா பாருங்க என்னைய....ரொம்ப அழகா இருக்கேன்ல!"
தங்கை, "oh shut up anjali! that was soooooooo lame!"
அஞ்சலி, "you loser!!"
அஞ்சலி லெப்டாப்பை எடுக்க அறைக்கு சென்றாள். லெப்டாப்பை எடுத்தபடி, "bye sweethearrrrrrrrrt!" என்று சுவரில் ஒட்டப்பட்ட john abraham படத்திற்கு முத்தம் கொடுத்தாள்.
மணி 10.15. ஆபிஸில் 9 மணிக்கு இருக்க வேண்டும். இப்படிப்பட்ட 'உழைப்பாளிகள்' இருந்தால் நாடு கண்டிப்பா முன்னேறும்.....reverseல!
அஞ்சலி பஸில் ஏறியதும் ஒன்றை கண்டாள்....ஒருவனை கண்டாள்....எட்டாவது அதிசயம் பஸ்ல இருக்கு, மச்சி!
அஞ்சலியின் மனம், "oh my god! he's dammmmmmmn cute!"
பாகம் 2
Dec 8, 2010
Dec 1, 2010
எவன் டி உன்ன பெத்தான், கையில் கிடச்சா செத்தான்!
தலைப்பிலுள்ள வார்த்தைகளுக்கு சொந்தக்காரர், நாம் தேடினாலும் கிடைக்காத ஒரு முத்து, உலக எழுதி வாங்க முடியாத சொத்து, சிவப்பு வைரமுத்து, தாடி வைக்காத வாலி, இலக்கணம் பிடிக்காத பா.விஜய், இலக்கியம் அறியாத நா.முத்துக்குமார் (உஷ்ஷ்ஷ்....இதுக்கு மேல என்னால முடியல...)
தலைப்பிலுள்ள வார்த்தைகளுக்கு சொந்தக்கார் உங்கள் சிம்பு! அவர் நடித்து (அப்படின்னு நினைக்குறேன்...) வெளிவரும் படம் 'வானம்'. அந்த படத்தில் இடம்பெற்ற பாடலில் உள்ள வரிதான் இது 'எவன் டி உன்ன பெத்தான், பெத்தான், பெத்தான், கையில கிடச்சா செத்தான் செத்தான் செத்தான்!'
பாடலை கேட்டவுடன், எனக்கு 'குபீர்'னு சிரிப்பு வந்துவிட்டது. பேஸ்புக்கில் இந்த பாடலின் யூடியுப் லிங்கை போட்டேன், அதற்கு நண்பர்கள் கொடுத்த கருத்துகள் அதைவிட காமெடி. சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணா போயிட்டு.
சிம்பு கதைக்கு வருவோம்.....ஏன் பா ராசா, உன்னையெல்லாம் இப்படி எழுத சொல்லி யாரு கத்துகொடுக்கறது?? அப்பாவா?
என்னமோ போ...சிரிப்பு போலீஸ் மாதிரி...சிரிப்பு கவிஞர் மாதிரி தான் நீ எனக்கு தெரியுற! என்ன இருந்தாலும், பாடலின் வெற்றி உறுதி! நானே 100 முறை கேட்டுவிட்டேன்! (சிரிச்சு ரொம்ப நாளாச்சு பா!!!)
தலைப்பிலுள்ள வார்த்தைகளுக்கு சொந்தக்கார் உங்கள் சிம்பு! அவர் நடித்து (அப்படின்னு நினைக்குறேன்...) வெளிவரும் படம் 'வானம்'. அந்த படத்தில் இடம்பெற்ற பாடலில் உள்ள வரிதான் இது 'எவன் டி உன்ன பெத்தான், பெத்தான், பெத்தான், கையில கிடச்சா செத்தான் செத்தான் செத்தான்!'
பாடலை கேட்டவுடன், எனக்கு 'குபீர்'னு சிரிப்பு வந்துவிட்டது. பேஸ்புக்கில் இந்த பாடலின் யூடியுப் லிங்கை போட்டேன், அதற்கு நண்பர்கள் கொடுத்த கருத்துகள் அதைவிட காமெடி. சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணா போயிட்டு.
சிம்பு கதைக்கு வருவோம்.....ஏன் பா ராசா, உன்னையெல்லாம் இப்படி எழுத சொல்லி யாரு கத்துகொடுக்கறது?? அப்பாவா?
என்னமோ போ...சிரிப்பு போலீஸ் மாதிரி...சிரிப்பு கவிஞர் மாதிரி தான் நீ எனக்கு தெரியுற! என்ன இருந்தாலும், பாடலின் வெற்றி உறுதி! நானே 100 முறை கேட்டுவிட்டேன்! (சிரிச்சு ரொம்ப நாளாச்சு பா!!!)
Nov 22, 2010
GUZAARISH- எல்லாருக்கும் பிடிக்காது
சஞ்சய் படம் என்றாலே கொஞ்சம் சர்ச்சை இருக்கும். நிறைய தில் வேணும் சில காட்சிகளை எடுக்க. சென்சார் போர்ட் ஆட்களை சமாளிக்க வேணும். ஏன் நான் அப்படி சொல்றேனா.... இந்த படத்தில் அப்படி ரெண்டு மூனு காட்சி வருது. நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்க.
கதை- euthanasia பற்றி. வாழ்க்கையை தானே முடித்துகொள்வது என்று அர்த்தம். தற்கொலை என்று அதை என்னொரு விதமாகவும் சொல்லலாம். ஆனால், இது சட்டரீதியாக அனுபதி கேட்பது. நிறைய 'நச்' வசனங்கள் இப்படத்தில்.
மொத்த படத்திற்கு பலம் ஹ்ர்த்திக் ரோஷனின் நடிப்பு- யோவ், இத்தன நாளா எங்கய்யா ஒலிச்சு வச்சு இருந்த இந்த மாதிரி நடிப்ப???
பிரமாதம்!!!! பல இடங்களில் என்னை அறியாமலேயே சத்தமாக கைதட்டினேன்.
கண்டிப்பா அடுத்த வருஷம், விருது உண்டு உமக்கு!
படம்- எல்லாருக்கும் பிடிக்காது! கொஞ்சம் art film மாதிரி இருக்கும். இரண்டாம் பாதி முதல் பாதியைவிட மெதுவாய் செல்கிறது.
இருப்பினும், நல்ல நடிப்பிற்கும் கொஞ்சம் வித்தியாசமான கதைக்களத்திற்கும் இப்படத்தை பார்க்கலாம். நிச்சயமாக பார்க்கலாம்:)
கதை- euthanasia பற்றி. வாழ்க்கையை தானே முடித்துகொள்வது என்று அர்த்தம். தற்கொலை என்று அதை என்னொரு விதமாகவும் சொல்லலாம். ஆனால், இது சட்டரீதியாக அனுபதி கேட்பது. நிறைய 'நச்' வசனங்கள் இப்படத்தில்.
மொத்த படத்திற்கு பலம் ஹ்ர்த்திக் ரோஷனின் நடிப்பு- யோவ், இத்தன நாளா எங்கய்யா ஒலிச்சு வச்சு இருந்த இந்த மாதிரி நடிப்ப???
பிரமாதம்!!!! பல இடங்களில் என்னை அறியாமலேயே சத்தமாக கைதட்டினேன்.
கண்டிப்பா அடுத்த வருஷம், விருது உண்டு உமக்கு!
படம்- எல்லாருக்கும் பிடிக்காது! கொஞ்சம் art film மாதிரி இருக்கும். இரண்டாம் பாதி முதல் பாதியைவிட மெதுவாய் செல்கிறது.
இருப்பினும், நல்ல நடிப்பிற்கும் கொஞ்சம் வித்தியாசமான கதைக்களத்திற்கும் இப்படத்தை பார்க்கலாம். நிச்சயமாக பார்க்கலாம்:)
Nov 9, 2010
I don't care. நான் இன்னிக்கு எழுதியே தீருவேன்!
ஒவ்வொரு நாளும் ஏதாச்சு பத்தி எழுதனும்னு தான் ஆசை. ஆனா வீட்டுக்கு வந்துட்டா.... படுக்கையில் படுத்து தூங்குவதை தவிர வேறும் எதுவும் உருபடியா செய்றதுல்ல. காலேஜ் நாட்களில் நிறைய நேரம் கிடைக்கும். தினமும் எழுத முடிந்தது. ஆனா... எழுத ஆசை இருந்தாலும் மூட் இல்ல.
நிறைய விஷயங்கள் ஒரே சமயத்தில் நடக்குது வாழ்க்கையில். வேலை!- எவண்டா இத கண்டுபிடிச்சது???
adults world is dangerous. வேலை இடத்தில் கற்று கொண்ட பாடம். எல்லார்கிட்டயும் நல்ல பெயர் வாங்க முடியாது. கொஞ்சம் வெற்றி ஏணியில் ஏற வேண்டும் என்றால் ஒரு சிலரை கீழே தள்ளி தான் ஆக வேண்டும். புதுசா வேலைக்கு வந்தவர்களை வாட்டி எடுக்கும் விதம்- உஷ்ஷ்ஷ்ஷ்....ஒரு சின்ன குழந்தைய போய் (அட அது நான் தாங்க......) இப்படி இந்த மாதிரி 'உலகத்தில்' தள்ளி வீட்டீங்களே?? இந்த பாவம் சும்மா விடுமா?
காலேஜ் நாட்களில் புலம்பவது கூட ஜாலியா இருக்கும். (ப்ளாக்கில் நிறைய எழுதியுள்ளேன்) ஆனால், இப்போது புலம்பவதற்கு கூட நேரம் இல்லை!!
ஒவ்வொரு மனிதனுக்கும் சில கோட்பாடுகள் இருக்கும். அதன் படி நடக்கு முற்படுவான்! ஆனால் அதற்கு முரணாக செயல்பட வேண்டும், குறிப்பா வேலை இடத்தில் பிடிக்காத பலவற்றை செய்ய வேண்டும் என்றால்....எரிச்சலை தவிர வேறு என்ன வரும்??
உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்!!! சரி அத விடுங்க!
எல்லாருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். வா, குவாட்டர் கட்டிங்- படம் பார்க்கலாமா? (யாருச்சும் சொல்லங்களேன்?)
நிறைய விஷயங்கள் ஒரே சமயத்தில் நடக்குது வாழ்க்கையில். வேலை!- எவண்டா இத கண்டுபிடிச்சது???
adults world is dangerous. வேலை இடத்தில் கற்று கொண்ட பாடம். எல்லார்கிட்டயும் நல்ல பெயர் வாங்க முடியாது. கொஞ்சம் வெற்றி ஏணியில் ஏற வேண்டும் என்றால் ஒரு சிலரை கீழே தள்ளி தான் ஆக வேண்டும். புதுசா வேலைக்கு வந்தவர்களை வாட்டி எடுக்கும் விதம்- உஷ்ஷ்ஷ்ஷ்....ஒரு சின்ன குழந்தைய போய் (அட அது நான் தாங்க......) இப்படி இந்த மாதிரி 'உலகத்தில்' தள்ளி வீட்டீங்களே?? இந்த பாவம் சும்மா விடுமா?
காலேஜ் நாட்களில் புலம்பவது கூட ஜாலியா இருக்கும். (ப்ளாக்கில் நிறைய எழுதியுள்ளேன்) ஆனால், இப்போது புலம்பவதற்கு கூட நேரம் இல்லை!!
ஒவ்வொரு மனிதனுக்கும் சில கோட்பாடுகள் இருக்கும். அதன் படி நடக்கு முற்படுவான்! ஆனால் அதற்கு முரணாக செயல்பட வேண்டும், குறிப்பா வேலை இடத்தில் பிடிக்காத பலவற்றை செய்ய வேண்டும் என்றால்....எரிச்சலை தவிர வேறு என்ன வரும்??
உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்!!! சரி அத விடுங்க!
எல்லாருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். வா, குவாட்டர் கட்டிங்- படம் பார்க்கலாமா? (யாருச்சும் சொல்லங்களேன்?)
Subscribe to:
Posts (Atom)