என்னடா இந்த பொண்ணு விமர்சனம் எல்லாம் சொல்ல ஆரம்பிச்சுடுச்சுனு நினைக்க வேண்டாம். வேற எப்படி என்னோட மன கஷ்டத்த கொட்டுறது....:) நானும் இது ஒரு நல்ல படமுனு நம்பி போனேன். இப்படி நம்பவச்சு.... அத என் வாயால எப்படி சொல்றது. சரி சரி... என்ன படம்னு சிக்கிரம் சொல்லு அப்படினு நீங்க சொல்லறது என் காதுல கேட்குது!! அந்த படம்- சீனு ராமசாமி இயக்கிய 'கூடல் நகர்'. படத்தோட பேரு எல்லாம் நல்லாதான் இருக்கு. படம்தான்...ம்ம்ம்.... சொல்றேன்... சொல்றேன்...
பரத் இரட்டை வேடம். காதல் சந்தியா மற்றும் பாவனா. இவர்கள் நடித்த படம்தான் இது. மதுரையை தளமாக கொண்ட படம். அட இயக்குனர்களே, இனி எத்தனை தடவதான் இதே ஊருல படம் எடுப்பீங்க? சரி எடுக்குறீங்களே,,, அத சரியா எடுக்கவேணாம்? கதை.. ஒன்றுமே இல்லை. அண்ணனை கொலை செய்துவிடுவார் வில்லன் (ஏன்னா... வில்லனோட பொண்ணு பாவனா.. பாவனாவை காதல் செய்வார் அண்ணன் பரத்) அண்ணனை கொலை செய்தவரை கொலை பண்ணுவார் தம்பி பரத். தம்பி பரத் சந்தியாவை காதல் செய்யும்! இந்த கதை தமிழ் சினிமா ஆரம்பித்த காலத்திலிருந்தே எடுத்துக்கிட்டு வராங்க. அரைத்த மாவை அரைத்து அரைத்து புளித்து போச்சு!
நடிப்பு என்ற வகையில் பார்த்தால், பரத் நல்லாவே செய்யுறாரு. (தம்பி, உனக்கு நல்ல எதிர்காலம் இருக்குதய்யா!) காதல் சந்தியா, முடிந்த அளவு நல்லா செய்ய முயன்று இருக்கிறார். சொந்த குரலில் பேசி இருக்கிறார் போல. ஏங்கோ படித்தேன் இப்படத்தில் நடித்த சந்தியா பழைய காலத்து சரிதாவை ஞாபகப்படுத்துகிறார் என்று. அப்படி எல்லாம் ஒன்று இல்லை மக்களே!! சரிதா நடிப்புக்கும் சந்தியா இப்படத்தில் நடித்ததற்கும் எவ்வளவு பெரிய வேறுபாடு இருக்கு. சரிதா மாதிரி நடிக்க இன்னும் காலம் பிடிக்கும் சந்தியாவுக்கு!! இதில் பாவம் நம்ம பாவனா!! என்ன நினைச்சு படத்தில் நடிக்க ஒத்துகிட்டாங்கலோ. ஒரு முக்கியத்துவமே இல்லாத கதாபாத்திரம். சும்மா சுடிதாரிலும் நல்ல தாவணியிலும் வந்து போகிறார். வசனம்கூட 2 பக்கத்துக்கு மேல் தாண்டி இருக்காதுனு நினைக்கிறேன். இவருக்கு நடிப்பு சும்மார்தான் (அட நடிச்சாதானே..) இரட்டையர்களுக்கு அம்மா வேடத்தில் இந்து (நாடகங்களில் நடிப்பவர்). இவருக்கும் வயதான அம்மா வேடத்திற்கும் பொருத்தமே இல்லை.
இயக்குனர் ஒரு பேட்டி அளித்து இருந்தார். அதில் அவர் கூறியது "இந்த இரு பெண்களின் கதாபாத்திரம் நான் வாழ்க்கையில் சந்தித்த இரு பெண்களின் கதைதான்". இப்படி ரொம்ப ஓவர் பில்டப் கொடுத்து நம்பி போன எனக்கு வச்சார் பாருங்க ஆப்பு! முதல் பாதி ரொம்ப மெதுவாக நகர்ந்தது திரைக்கதை. இரண்டாம் பகுதியில் எதிர்பார்த்த மாதிரி திரைக்கதை போனதால்.. சுவார்ஸ்சியம் இல்லாமல் போச்சு! மதுரை பாஷையில் பரத் பேசும்போது பருத்திவீரன் கார்த்தி, காதல் பரத் ஆகியவற்றை ஞாபகம்படுத்தியது. விறுவிறுப்பு இல்லாமல் போன கதையினால் தோய்வு அடைந்தது திரைக்கதையும் படத்தை பார்த்துகொண்டிருந்த நானும்!!
பாடல்களும் ஓரளவுக்கு சும்மார். சபாஷ்-முரளி இசை. 'தமிழ் செல்வி' என்ற பாடல் அருமை. இருப்பினும் மற்ற பாடல்கள் 'டக்' ஔட்! பிண்ணனி இசை சிறப்பாக இல்லை. என்னதான் படம் சொதப்பலா இருந்தாலும் ஒரு சில காட்சிகள் என்னை கவர்ந்தது.
* பாவனா தூக்குமாட்டி இறந்துவிடுவார். அப்போது அவரின் மூன்று வயது தம்பி வந்து பார்க்கும். அதுக்கு என்ன நடக்குதுனு தெரியாமல் தூக்கில் தொங்கும் அக்காவை பார்த்து சிரிக்கும். ரொம்பவே யதார்த்தமான காட்சி!
* சந்தியாவை ,தம்பி பரத் பார்த்து ஜொல்லுவிடும்போது சந்தியா சொல்லும் "இந்தேரு, இதுலாம் ஒன்னு வச்சுக்காதே. எற்கனவே, இப்படி செஞ்ச நாலு பேர விலக்கமாத்தால அடிச்சுருக்கேன். வேணுனா போய் கேட்டுபாரு." இப்படி சொல்லும்போது சந்தியாவுக்குள் இருக்கும் அந்த காமெடியன் தெரிந்தது.
இதுபோன்று விரல்விட்டு எண்ணிவிடகூடிய ஒருசில காட்சிகளே உண்டு. நல்ல படம் பார்க்கலாம் என்று நினைத்தால் இப்படத்தை தவிர்ப்பதே சாலசிறந்தது. அப்பாடா, என் மனசு இப்பதான் பாரம் குறைஞ்சு இருக்கு!! வேலை வெட்டி., வெட்டி வேலை இல்லாதவர்களாக நீங்க இருந்தால்மட்டுமே படத்தை போய் பார்த்து 3 மணி நேரம் உங்களின் பொறுமையின் எல்லையை சோதித்து கொள்ளலாம்.(அப்பரம் ஏன் புள்ள, நீ போய் பார்த்தேனு கேட்காதீங்க... அழுதுடுவேன்:)
மொத்தத்தில்
கூடல் நகர்- நல்ல கதை, திரைக்கதை இல்லாமல் நம்மை அலையவிட்ட தேடல் நகர்!
Apr 19, 2007
Mar 24, 2007
இந்தியா byebye to உலக கோப்பை 2007!
நேற்று நடந்த போட்டியில் 'அதிரடியாக' தோற்று வீடு கிளம்புகிறது நமது இந்திய சிங்கங்கள்!! ஸ்ரீலங்கா அணி பிரமதமாக ஆடி இந்தியாவை வீழ்த்தி விலாசியது. நான் என்னத்த சொல்ல.... கொஞ்சம் வயத்தெறிச்சலாகவும் கோபமாகவும் இருக்கிறது. இப்படி மோசமா விளையாடுவார்கள் என்று சற்றே நினைக்கவில்லை!
அந்த முதல் ஆட்டக்காரர் உத்தப்பா(இந்திய அணி) 21 வயசுதான் நினைக்கிறேன். அனுபவம் இல்லாதவர்! ரொம்ப அவசரப்பட்டு லாவகமாக பந்தை 'அழகாக' ஸ்ரீலங்கா பந்து வீச்சாளரிடம் கொடுத்து நமக்கு எல்லாம் 'அல்வா' கொடுத்தார். அப்பவே எனக்கு பயம் வந்துவிட்டது. நம்ம ஆளுங்க ஏதோ தப்பு பண்ண போதுங்கனு. தெரியாமல் செய்தால் தப்பு, தெரிந்து செய்தால் திமிரு! இதில் இவர்கள் எந்த வகை என்று தெரியவில்லை.
அப்பரம் கங்குலி, சிறப்பாக ஆரம்பித்தாலும், அவரும் அவசரப்பட்டுவிட்டார். ஸ்ரீலங்காவின் முரளிதரன் அற்புதமாய் பந்தை பிடிக்க கங்குலியும் போய்விட்டார். அப்போது பயம் உச்சிக்கு போய்விட்டது. அடுத்து ஷேவாக், இவர் வந்து சில சிக்ஸர்களையும் பவ்ண்டிரிகளையும் அடிக்க ஆரம்பித்தார். சற்று நம்பிக்கை வந்தது.
அதுக்கு அப்பரம் ஒன்னு நடந்தது பாருங்க. எனக்கு ரத்த கொதிப்பே வந்துட்டு. நம்ம சச்சின் வந்தார். ஆரம்பிக்க போவதற்குமுன் தரையை இரண்டு தட்டு தட்டுனாரு. பேட்டை சரி செஞ்சாரு. சுற்றும் முற்றிலும் பார்த்தாரு. பந்து வீசப்பட்டது. பந்து 'ஸ்டமை' அடிக்க, சச்சின் 'டக்' ஔட்டு ஆகி வெளியேற்றப்பட்டார். இதுக்கு அப்பரம் இருந்த நம்பிக்கை எல்லாம் சுக்குநூறாகி போய்விட்டது.
இதுங்க தேராதுங்கனு முடிவுக்கு வந்துவிட்டேன். ஒன்னு இல்ல... ஒவ்வொரு பந்துக்கும் ஒரு ரன் எடுத்து நிதானமாக விளையாடி இருந்தாலே போதும். இப்ப என்ன பண்ணுறது.மிஞ்சியது அவமானம் தான்!! எல்லாம் போட்டிகளிலும் வெல்வது என்பது கடினம்தான். மற்ற சாதாரண போட்டி என்றால் பரவாயில்ல. இது உலக கிண்ணம் போட்டி! இதுல கண்டிப்பா ஜெயித்தே இருக்கவேண்டும். இந்தியா அணியிடம் திறமை இருக்கு. எத்தனை திறமை இருந்தாலம் அதை சரியான நேரத்தில் பயன்படுத்தி இருக்கவேண்டும்.
பாருங்க, புதிதாக வந்த சில அணிகள் அப்படிதான் விளையாடுறாங்க. பார்ப்பதற்கு அவ்வளவு பெருமையா இருக்கு. நம்ம ஆளுங்க.. எல்லாத்தையும் தொலைத்து நிற்கிறார்கள். சொல்வது சுலபம், செய்வது கடினம். எனக்கும் தெரியும்! ஆனா இப்படிப்பட்ட போட்டிகளில் என்னதான் நடந்தாலும் விளையாட்டில் கவனம் வேண்டும்!!! உலகமே இப்போது இந்திய அணியை பார்த்து கைகொட்டி சிரிக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டார்கள்.
ஆமா நம்ம ஆளுங்க எங்க விளையாட்டு பயிற்சி செய்ய நேரம் இருக்கு. விளம்பர படங்களில் நடிக்கவே நேரம் சரியா இருக்கும் போல. காலையில் பயன்படுத்தும் பல்பொடி முதல் இரவு பயன்படுத்தும் கொசுவத்தி வரை எல்லா விளம்பரங்களில் நம்ம இந்திய அணி வீரர்கள்தான். விளையாடுவதில் விட இதில்தான் ஆர்வம் அதிகம் போல. 1983 ஆம் ஆண்டு நமக்கு பெருமை வந்தது போல இந்த தடவையும் பெருமை சேர்ப்பார்கள் என்று நினைத்தேன். ஆனா, அவர்கள் சேர்த்துகொண்டதோ பல கோடி இந்தியர்களின் வயத்தெறிச்சலை மட்டும்தான்.
இனி இவர்களை பற்றி சொல்ல ஒன்னுமே இல்ல. தனக்காக விளையாடாமல் தன் நாட்டிற்காக விளையாடி இருந்திருந்தாலே போதும். வெற்றி பெற்றிருக்கலாம்! என்னொரு கவ்வாஸ்கர் வருவாரா? இன்னொரு கபில் தேவ் வருவாரா? பதிலாக்காக காத்திருக்க வேண்டும் 2011 ஆம் ஆண்டு அடுத்த உலக கோப்பை வரை.
இதுல ஒரே ஒரு ஆறுதல்... என்னதான் இந்தியாவிற்கு பாகிஸ்தானுக்கும் சண்டை சச்சரவு இருந்தாலும். துன்பத்தில் இரண்டுமே ஒன்னு சேர்ந்துட்டாங்க!
அந்த முதல் ஆட்டக்காரர் உத்தப்பா(இந்திய அணி) 21 வயசுதான் நினைக்கிறேன். அனுபவம் இல்லாதவர்! ரொம்ப அவசரப்பட்டு லாவகமாக பந்தை 'அழகாக' ஸ்ரீலங்கா பந்து வீச்சாளரிடம் கொடுத்து நமக்கு எல்லாம் 'அல்வா' கொடுத்தார். அப்பவே எனக்கு பயம் வந்துவிட்டது. நம்ம ஆளுங்க ஏதோ தப்பு பண்ண போதுங்கனு. தெரியாமல் செய்தால் தப்பு, தெரிந்து செய்தால் திமிரு! இதில் இவர்கள் எந்த வகை என்று தெரியவில்லை.
அப்பரம் கங்குலி, சிறப்பாக ஆரம்பித்தாலும், அவரும் அவசரப்பட்டுவிட்டார். ஸ்ரீலங்காவின் முரளிதரன் அற்புதமாய் பந்தை பிடிக்க கங்குலியும் போய்விட்டார். அப்போது பயம் உச்சிக்கு போய்விட்டது. அடுத்து ஷேவாக், இவர் வந்து சில சிக்ஸர்களையும் பவ்ண்டிரிகளையும் அடிக்க ஆரம்பித்தார். சற்று நம்பிக்கை வந்தது.
அதுக்கு அப்பரம் ஒன்னு நடந்தது பாருங்க. எனக்கு ரத்த கொதிப்பே வந்துட்டு. நம்ம சச்சின் வந்தார். ஆரம்பிக்க போவதற்குமுன் தரையை இரண்டு தட்டு தட்டுனாரு. பேட்டை சரி செஞ்சாரு. சுற்றும் முற்றிலும் பார்த்தாரு. பந்து வீசப்பட்டது. பந்து 'ஸ்டமை' அடிக்க, சச்சின் 'டக்' ஔட்டு ஆகி வெளியேற்றப்பட்டார். இதுக்கு அப்பரம் இருந்த நம்பிக்கை எல்லாம் சுக்குநூறாகி போய்விட்டது.
இதுங்க தேராதுங்கனு முடிவுக்கு வந்துவிட்டேன். ஒன்னு இல்ல... ஒவ்வொரு பந்துக்கும் ஒரு ரன் எடுத்து நிதானமாக விளையாடி இருந்தாலே போதும். இப்ப என்ன பண்ணுறது.மிஞ்சியது அவமானம் தான்!! எல்லாம் போட்டிகளிலும் வெல்வது என்பது கடினம்தான். மற்ற சாதாரண போட்டி என்றால் பரவாயில்ல. இது உலக கிண்ணம் போட்டி! இதுல கண்டிப்பா ஜெயித்தே இருக்கவேண்டும். இந்தியா அணியிடம் திறமை இருக்கு. எத்தனை திறமை இருந்தாலம் அதை சரியான நேரத்தில் பயன்படுத்தி இருக்கவேண்டும்.
பாருங்க, புதிதாக வந்த சில அணிகள் அப்படிதான் விளையாடுறாங்க. பார்ப்பதற்கு அவ்வளவு பெருமையா இருக்கு. நம்ம ஆளுங்க.. எல்லாத்தையும் தொலைத்து நிற்கிறார்கள். சொல்வது சுலபம், செய்வது கடினம். எனக்கும் தெரியும்! ஆனா இப்படிப்பட்ட போட்டிகளில் என்னதான் நடந்தாலும் விளையாட்டில் கவனம் வேண்டும்!!! உலகமே இப்போது இந்திய அணியை பார்த்து கைகொட்டி சிரிக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டார்கள்.
ஆமா நம்ம ஆளுங்க எங்க விளையாட்டு பயிற்சி செய்ய நேரம் இருக்கு. விளம்பர படங்களில் நடிக்கவே நேரம் சரியா இருக்கும் போல. காலையில் பயன்படுத்தும் பல்பொடி முதல் இரவு பயன்படுத்தும் கொசுவத்தி வரை எல்லா விளம்பரங்களில் நம்ம இந்திய அணி வீரர்கள்தான். விளையாடுவதில் விட இதில்தான் ஆர்வம் அதிகம் போல. 1983 ஆம் ஆண்டு நமக்கு பெருமை வந்தது போல இந்த தடவையும் பெருமை சேர்ப்பார்கள் என்று நினைத்தேன். ஆனா, அவர்கள் சேர்த்துகொண்டதோ பல கோடி இந்தியர்களின் வயத்தெறிச்சலை மட்டும்தான்.
இனி இவர்களை பற்றி சொல்ல ஒன்னுமே இல்ல. தனக்காக விளையாடாமல் தன் நாட்டிற்காக விளையாடி இருந்திருந்தாலே போதும். வெற்றி பெற்றிருக்கலாம்! என்னொரு கவ்வாஸ்கர் வருவாரா? இன்னொரு கபில் தேவ் வருவாரா? பதிலாக்காக காத்திருக்க வேண்டும் 2011 ஆம் ஆண்டு அடுத்த உலக கோப்பை வரை.
இதுல ஒரே ஒரு ஆறுதல்... என்னதான் இந்தியாவிற்கு பாகிஸ்தானுக்கும் சண்டை சச்சரவு இருந்தாலும். துன்பத்தில் இரண்டுமே ஒன்னு சேர்ந்துட்டாங்க!
Feb 28, 2007
எப்போதும், ஏன்?
கூட்ட நெரிசல்
எவ்வளவு இருந்தாலும்
கண்கள் அலை பாயும்!
நமக்கு ஏற்ற வயது பையன்களை
விட்டு வைப்பதில்லை நமது பார்வை
காரில் பயணம்
கண்ணாடி வழி
காதல்!
பேருந்தில் பயணம்
பக்கத்து சீட்டில்
காதல்!
இரயிலில் பயணம்
கம்பி பிடித்து
காதல்!
சாலை கடந்து போகையில்
திரும்பி பார்க்க வைக்கும்
காதல்!
எவ்வளவு இருந்தாலும்
கண்கள் அலை பாயும்!
நமக்கு ஏற்ற வயது பையன்களை
விட்டு வைப்பதில்லை நமது பார்வை
காரில் பயணம்
கண்ணாடி வழி
காதல்!
பேருந்தில் பயணம்
பக்கத்து சீட்டில்
காதல்!
இரயிலில் பயணம்
கம்பி பிடித்து
காதல்!
சாலை கடந்து போகையில்
திரும்பி பார்க்க வைக்கும்
காதல்!
நிலைமை
சல்மான் கான்
விவேக் ஒப்ராய்
இதற்கு பின்பு தான்
அமிஷேக் பச்சனே
ஐஸ்வர்யா ராயுக்கு!
முதல் காதல் உடைய
இரண்டாம் காதல் கரைய
முன்றாவது முறைதான் முழு நிலவாய்!
உலக அழகிக்கே இந்நிலைமை
உள்ளூர்வாசி நமக்கு எந்நிலைமையோ?
விவேக் ஒப்ராய்
இதற்கு பின்பு தான்
அமிஷேக் பச்சனே
ஐஸ்வர்யா ராயுக்கு!
முதல் காதல் உடைய
இரண்டாம் காதல் கரைய
முன்றாவது முறைதான் முழு நிலவாய்!
உலக அழகிக்கே இந்நிலைமை
உள்ளூர்வாசி நமக்கு எந்நிலைமையோ?
Subscribe to:
Posts (Atom)