Nov 27, 2013

எனக்கு பிடித்த குறும்படம்-2

சமீபத்தில் இந்த 'fantasy genre' படங்களை பற்றி நிறைய பேச்சு! குறைந்த பொருட்செலவில் அருமையான குறும்படங்கள்.


1) காதல் கதை + அருமையான இசை கொண்ட 'inbox'



2) angel vs devil - நச் என்று தெரிக்கும் வசனங்களும் இயல்பாய் நடிக்கும் நடிகர்களின் படைப்பு 'அந்த நேரம் அந்தி நேரம்'



3) மூஞ்சி முகர

நகைச்சுவை கலந்த கலக்கலான படம்


Nov 4, 2013

தீபாவளி bites

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்!
சனிக்கிழமை வந்ததால் ஒன்னும் புதுசா தெரியல! வார நாட்களில் ஒரு லீவு நாள் போனது தான் மிச்சம்.

டிவிட்டரில் படித்த ஒரு வரி: வயதாக வயதாக தீபாவளி சுவாரஸ்சியம் குறைந்து கொண்டே போகிறது. 

உண்மை தான் போலும்.

அம்மாச்சியின் அண்ணன் (தாத்தா) வீட்டிற்கு சென்றோம். அவர் சொன்னது இன்னும் காதில் ரீங்காரமிட்டு கொண்டிருக்கிறது. - "ஒவ்வொரு வருஷமும் எனக்கு bonus தான்." 
அவருக்கு வயது 84.

புதுசா திருமணம் ஆனால் தான் 'தல' தீபாவளி. மத்தபடி எங்களுக்கு எல்லாம் வருஷமுமே 'வயிறு' தீபாவளி தான்!

தோசை
இட்லி
குடல் கறி
பிரியாணி
மட்டன் கறி
கோழி குருமா
முறுக்கு
கேக்
கேசரி

யப்பா, இன்னொரு extra வயிறு வேணும்பா சாமி!!

தீபாவளி நிகழ்ச்சிகள் சிலவற்றை பார்க்க நேரிட்டது. ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சுட்ட கதை, தலைவா (சிங்கை தொலைக்காட்சியில்) என்று புதிதாய் வெளியிட்ட படங்களை பார்க்கும்போது கமல்ஹாசனின் கனவு நினைவாக்கிடுமோ என்று தோன்றுகிறது.

facebookல் சுட்டது:

அண்ணனை கொன்னவங்களைப் பழி வாங்குனா அது “பாண்டியநாடு “

நண்பனைக் கொன்னவங்களைப் பழி வாங்குனா அது ”ஆரம்பம்"
ஆடியன்சை பழிவாங்கினா அது “ஆல் இன் ஆல் அழகுராஜா "




என்ன மாமா, மறுபடியுமா?? :(((


சரி நம்ம கதைக்கு வருவோம்! 'love stop' குறும்படத்திற்கு (http://www.youtube.com/watch?v=3H8B4wCe_u4)

அப்பரம் அடுத்த படம் ரெடி.

first look!


Oct 8, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியே, இதற்குதானே ஆசைப்பட்டாய்!

1) இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமரா!

ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லியிருந்தேன் என நினைக்குறேன்-  விஜய் சேதுபதி என்ன பண்ணாலும் அழகா தெரியுது! இது கண்டிப்பா சாமி கொடுத்த வரம்! பட்டைய கிளப்பியிருக்காரு மவராசன்!
நாயகி கோலம் போடும் காட்சியில் அவர் 'அய்யூ அய்யூயோ அய்யூயோயோ!' என்று நாயகியை பார்த்து சொல்லும் காட்சியில் 100 மார்க் வாங்கிட்டாரு ஹீரோ!

ஜாலியாக போகும் கதையில் கொஞ்சம் கருத்து. மற்ற நடிகர்களும்
சுப்பரமணியபுரம் படத்தில் நடித்த நாயகியின் அக்கா...இந்த படத்தில் அவருக்கு கொடுத்த.....

இன்னாது? ரெண்டும் ஒரு பொண்ணு தானா! ஐயோ சாரி பா!

அனைவருமே அருமையாக நடித்து இருக்கிறார்கள். ரோபா ஷங்கர், பசுபதி, பாஸ்கர் போன்றோர் படத்தின் தூண்கள் எனலாம்!

படத்தில் இருக்கும் ரெண்டு பாடல்களுக்கு நான் அடிமை - prayer song மற்றும் என் வூட்டுல பாடல்கள்! தொடர்ந்து repeat modeல இருக்கு! அதில் ஆடிய விஜய் சேதுபதியாக இருக்கட்டும், ஆட வைத்த ராஜசுந்தரமாக இருக்கட்டும் ரசிக்கும் வண்ணம் தங்களது வேலையை செய்து இருக்காங்க. அதிலும் 'என் வூட்டுல' பாடலில் குறிப்பாக ஒரு காட்சியில் குறுக்கே போகும் நடன இயக்குனர்களைப் பார்த்து சேதுபதி "என்னவாம் இவனுக்களுக்கு" என்று சொல்வது எல்லாம் சேதுபதியின் cuteness அளவை அதிகரித்துள்ளது.


மொத்தத்தில் ஒரு ஜாலியான படம் பார்த்த சந்தோஷம்.

2) ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

எனக்கு படம் சுத்தமா பிடிக்கல!

ஒரு மண்ணும் இல்லாத கதை தான் உனக்கு பிடிக்குது. சினிமா என்பது சும்மா ஜாலி இல்ல. காமெடி மட்டும் படம் இல்ல. இந்த படம் எப்படி film makingல உருகி எடுத்து இருக்கிறார் தெரியுமா? இந்த திரைக்கதை என்ன மாதிரி pattern தெரியுமா? அந்த shotல அந்த ஓடிவரும்போது...
அப்படி எல்லாம் எண்ணெயில் வழுக்கி விழுந்த கடுகு போல் வெடிக்காதீங்க!

மிஷ்கின் படங்களில் போலீஸ் ரோல் ஒன்னு இருக்கும். நிறைய ஓட்டம். அப்பரம் ராத்திரி effect. நடிப்பு சொல்லி தருவதால், அனைத்து கதாபாத்திரங்களும் அவரை போலவே ஓடுவதும், கண்களை விரிப்பதும் என்று  எனக்கு என்னமோ மிஷ்கினை தான் எல்லாம் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார் என தோன்றுகிறது.




பாடல்களே இல்லை. ஒரு விதத்தில் நல்லது தான்!

இளையராஜாவின் பின்னணி இசை நல்லா இருந்துச்சு. but அப்பப்போ அஞ்சலி படம் பார்த்த மாதிரி ஒரு effect!!

சமீபத்தில் மிருகங்கள் தலைப்பில் வந்த படம் எதுவுமே எனக்கு பிடிக்கல..ம்ம்ம்...

ஓநாயும் ஆட்டுகுட்டியும்
சிங்கம்
குட்டி புலி
பட்டத்து யானை
தங்கமீன்கள்


என்னது தங்கமீன்கள் பிடிக்கலையா????
பஞ்சாயத்த கூட்றா!!!!
இயக்குனர் ராம்ம கூப்றா!!!

Sep 28, 2013

நயன்தாராவின் brother ஆர்யா!


ராஜா ராணி படம் பார்க்க தூண்டிய நிறைய விஷயங்களில் ஒன்று இயக்குனர். முதல் பட இயக்குனர் என்றாலும் அவர் பேட்டிகளில் காட்டிய நம்பிக்கை. அட, இந்த சின்ன வயசுல....
என்று மால்குடி சுபா போல் பாராட்ட வச்சது.
படம் பார்த்தேன் நேற்று.

கலர் படம்! இது கலர்ஃல்லான படம்!

பிடித்த விஷயங்கள்


1) படத்தில் வந்த வீடுகள். நயன் ஆர்யா வீடாகா இருந்தாலும் சரி, சத்தியராஜ் வீடாகா இருந்தாலும் சரி, ஆர்யாவின் பாஸ் வீடாகா இருந்தாலும் சரி, அவ்வளாவு அழகு!!

கலை இயக்குனரே, சபாஷ்!!

2) படத்தில் செம்ம அழகா தெரிந்தவர் சத்தியராஜ். அப்பாவாக நடித்து, கலக்கிவிட்டார்! அழகிலும் சரி நடிப்பிலும் சரி ஒரு படி மேலே சென்றுவிட்டார்.

நயன் காதல் தோல்வி அடைந்தவுடன், நயன் அழுவும் காட்சியில், சத்தியராஜ், "நீ அழதே, எனக்கும் அழகை வரது." என்று சொல்லும்போது டாப் கிளாஸ் நடிப்பு இருவருமே!


3) சில cute and sharp வசனங்கள்.

4) நயன் நயன் நயன்!!!! இந்த இரண்டு வருடத்தில் எங்கோ சென்று நடிப்பு பயிற்சி எடுத்து இருக்கிறாரோ என்ற சந்தேகம் வந்துவிட்டது. அப்படி ஒரு அழகான நடிப்பு.

5) நயன் தனது அப்பாவை 'டார்லிங் டார்லிங்' என்று அழைக்கும்போது....

6) ஜீவியின் பிண்ணனி இசை! அற்புதம்! பாடல்களில் கொஞ்சம் 'வடை போச்சே' தான்.









இவ்வளவு அழகான கூட்டத்தை வைத்துகொண்டு, கதையில் இன்னும் அழுத்தத்தை கொடுத்திருக்கலாமோ என தோன்றுகிறது. அப்பரம், ஆரம்பித்திலிருந்தே ஏன் நயன் ஆர்யா மோதி கொள்கிறார்கள்? அதற்கு என்ன காரணம்? புரியல. உட்கார்ந்து பேசி இருக்கலாமே!

அடிக்கடி வரும் மருத்துவமனை காட்சிகள்- பிடிக்கவில்லை!

அப்பரம் அடிக்கடி 'brother brother''னு சொல்வது..ம்ம்ம்....

மொத்தத்தில், நான்கு ஐந்து படம் பார்த்த ஃலிங் வருது! ஒரு முறை பார்க்கலாம்!