Jul 11, 2008

சம்பளம் எப்படி வந்துச்சு?

சம்பா என்றால் அரிசி
அளம் என்றால் உப்பு. முந்தைய காலத்தில் மக்கள் அரிசி மற்றும் உப்புக்காக தான் வேலை செய்தார்கள். ஆகவே தான் அதற்கு பெயர் சம்பளம் என்று வந்தது.

ம்ம்ம்... ஆஹா இன்னிக்கு யாராய்யா அரிசிக்கும் உப்புக்கும் வேலை பாக்க போறா?
அவ்வ்வ்...:))

(இது, விஜய் டீவியின் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியை பார்த்தபிறகு வந்த பாதிப்பு இல்லங்க...):)

Jul 7, 2008

அவருக்கு என்ன பரிசு கொடுக்கலாம்?

காதலனுக்கு/கணவரோக்கு பரிசு வாங்கி கொடுக்கலாம் என்று நினைத்து கொண்டிருக்கும் பெண்களுக்கு ஒரு சில டிப்ஸ்...

'Do's

- அவருக்கு பிடித்த டிவிடி படங்களை சிலவற்றை வாங்கி அதை ஒரு அழகான boxல் போட்டு கொடுக்கலாம். (ஆண்களுக்கு gadgets என்றால் ரொம்ப பிடிக்கும்..)

- leather stuff. leather சம்மந்தப்பட்டது பொருட்களை வாங்கலாம். leather wallet என்று ஏகப்பட்டவை உள்ளன. (leather makes man feel 'macho' :)




- சாக்லெட்! (அட அவங்களுக்கு பிடிக்குமா? என்று நீங்க நினைக்கலாம்) இந்த ஒரு பைசா சாக்லெட்டை சொல்லவில்லை. ஸ்பெஷல் சாக்லெட் விற்கும் சில கடைகள் உள்ளன. அப்படி ஒன்றை வாங்கி கொடுக்கலாம் (valentine's spl, wedding anniversay spl போன்றவைக்கு தனிப்பட்ட சாக்லெட் உண்டு)


- spa. ஏதேனும் ஒரு spa இடத்திற்கு அழைத்து சென்று அவங்களுக்கு பிடித்த spa message செய்ய ஏற்பாடு செய்யலாம்.(swedish spa, jaccuzi என்று பல உண்டு)

Dont's (இவற்றை கனவிலும்கூட செய்துவிட வேண்டாம்)

- socks. பரிசாக கொடுக்க இதைவிட வேறு ஒரு காமெடியான பொருள் உலகில் இல்லை

-candles. இதை வைத்து ஆண்களுக்கு என்ன செய்ய முடியும்? (சொல்ல போனால், அதை வைத்து என்ன செய்யலாம் என்பதுகூட சிலருக்கு தெரியாது.)

- deodorants. (தப்பா நினைச்சிப்பாங்க)

-கழுத்து சங்கிலியில் உங்க படத்தை போட்டு கொடுப்பது. (அதான் நீங்களே அவர்கூட இருக்கீங்களே.. அப்பரம் எதுக்கு அது வேற)

Jul 1, 2008

விளையாட்டாய் என் ஆடைக்குள்ளே நீ வேண்டும்...

ஆண் கவிதை ஒன்று
பெண் கவிதைக்கு
ஒரு கவிதை
எழுதுகிறது!
மூன்றாம் உலகப்போருக்கு
தயார்
என்கின்றன
உன் உதடுகளும்
என் கன்னங்களும்.

உன் விரல்கள்

என்னை வருடியது போதும்!

employment exchangeல்

காத்திருக்கும்

இளைஞனைப் போல்

பாவமாய் நிற்கும்

உன் இதழ்களுக்கு

அந்த வேலையை

கொடுத்துவிடு, பிளீஸ்!


விரல்கள் விட்டுசென்ற
விரல்தடங்களை
மெதுவாய் கடந்து
செல்கின்றன
உன் உதட்டு ரேகைகள்!


செடியில் கண்டேன்
ரோஜா பூவுக்கு கீழ்
முட்களை
உன்னிடத்தில் உணர்ந்தேன்
முட்களுக்கு கீழ்
ரோஜா பூக்களை!
உன் மீசையையும்
உதடுகளையும் தான்
சொல்கிறேன்!

போகாதே நண்பா!

இன்று காலையில் நண்பன் லீவுக்காக துபாய் சென்றுவிட்டான். அவன் தந்தை அங்க வேலை பார்க்கிறார். நண்பனும் அவன் அம்மாவும் இன்று காலையில் சென்றனர். மூன்று வாரம் அங்க இருப்பான். நேத்திக்கு ஃபோன் பண்ணி, "happy holidays. happy journey." என்று சொன்னேன். கொஞ்சம் சோகமா போயிட்டேன். என்னோட best fren, best pal, என்கூட பிறக்காத தம்பி என்றே சொல்லலாம்.

எனக்கு தம்பி இல்லையே என்று நான் எண்ணியதுண்டு. ஆனா, +1 படிக்க போனபிறகு, அந்த குறையை தீர்த்து வைத்தவன். ரொம்ப நல்லவன்! அவனை எனக்கு +1 முதல் தெரியும். ஒன்றை நான் அடிக்கடி சொல்வேன் - எனக்கு தமிழில் ஆர்வம் வந்ததற்கு காரணமே தோழன் தான். ஒரு நாள் பள்ளிக்கு அவன் எழுதிய சில தமிழ் கவிதைகளை கொண்டு வந்து கொடுத்தான். படித்து பார்த்து பிரமித்துவிட்டேன். சீரியஸான விஷயங்களை காமெடியாக எழுதியிருந்தான் அழகு தமிழில். அட நம்ம நண்பனா, கவிஞன் என்று ஆச்சிரியப்பட்டேன். நம்மகூடவே சும்மா அரட்டை அடிச்சு சுத்தி திரிஞ்சுகிட்டு இருந்தவனுக்குள்ள இப்படி ஒரு திறமையா என்று வியந்துவிட்டேன்.

அப்போது அவன் சொன்னான் "ஏன் நீயும் எதாச்சு எழுது, உனக்கும் நல்லா வரும்." என்று சொன்னதால், நான் போய் அன்றிரவே ஏதோ ஒன்று எழுதினேன். அப்படி ஆரம்பித்தது என் முதல் கவிதையும் எனக்குள் இருந்த தமிழும். எனக்கு குரு அவன் தான்!

அதுக்கு அப்பரம் எத்தனையோ சமயங்களில் எனக்கு ஊக்கம் கொடுத்திருக்கிறான்.. செம்ம ஜாலியான ஆளு. இரண்டு நாளைக்கு ஒரு தடவ ஃபோன் பண்ணி பேசுவான். சொல்ல போனால் என்னோட energy booster அவன் தான்! அப்படி ஒரு தோழனை மூன்று வாரம் பார்க்க முடியாது என்று நினைக்கையில் கொஞ்சம் கஷ்டமா இருக்கு... ம்ம்ம்...