Apr 12, 2016

கலி- திரையரங்கில் என் முதல் மலையாளம் படம் அனுபவம்!

பொதுவா, மலையாள படங்களை டிவிடியில அல்லது டிவில தான் பார்ப்பேன்.
ஆனா, கலி படம் trailer வந்தபிறகு, இப்படத்தை கண்டிப்பா first day first show பார்த்தே ஆக வேணும்னு ஒரு தெறி....  வெறி ஐ மின்!

பிரேமம் பார்த்த மயக்கம் இன்னும் தெளியாம இருக்க, மலையாள படங்கள் மீது அதிகம் காதலும் மாரியாதையும் இருப்பது ஒன்னும் பெரிய ஆச்சிரியம் இல்ல.


சிங்கையில் ஏப்ரல் 9ஆம் தேதி தான் வெளியிட்டாங்க இப்படத்தை.
திரையரங்குக்குள் நுழைந்தேன்.

இப்படி ஒரே இடத்தில் இவ்வளவு மலையாள வார்த்தைகளை கேட்பேனு எதிர்ப்பார்க்கல. திரையரங்கில் கேட்ட மலையாள வார்த்தைகள் அனைத்தும் ஏதோ புரியாத மொழியில் கேட்ட symphony மாதிரி இருந்துச்சு. ஒவ்வொரு மொழியும் அழகு, அதிலும் இம்மொழி நயன்தாரா அழகு.

என் பக்கத்தில் உட்கார்ந்த இருந்த பொண்ணு, அநேகமா அகில உலக டுல்கர் ரசிகர் மன்ற தலைவியா தான் இருக்கனும். வெறும் திரையை பார்த்தே "டுல்கர்!!!!!!! டுல்கர்!!!!" என கத்தி, விசில் அடித்தது.

*************************************************

"ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு"- இது தான் படத்தின் கதை. இவ்வளவு தான்!

என்னது இவ்வளவு தானா?

ஆனா, திரைக்கதையும், நடிப்பும், இசையும், ஒளிப்பதிவும், கதகளி ஆடியிருக்கும் படம் தான் கலி!

திரைக்கதை

இயக்குனர் சமீர் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி இருக்கிறார். முதல் பாதியில் கலகலப்பு என்றால், இரண்டாம் பாதி முழுக்க விறுவிறுப்பு. காதல் காட்சிகள் ஆகட்டும், ஹீரோ வெறித்தனமா சண்டை போடும் காட்சிகள் ஆகட்டும், ஒவ்வொன்றும் யதார்த்ததின் உச்சம்.

நடிப்பு




நமக்கு பிடிச்ச பொண்ணு,
 நமக்கு  எனக்கு பிடிச்ச பையன்,

இரண்டு பேரும் சேர்ந்து நடித்தால், எப்படி பிடிக்காமல் போகும்?? தென்றலாய் வந்த பிரேமம் மலர், இப்படத்தில் அடுத்த கட்டத்திற்கு போய் இருக்காங்க.
சாய் பல்லவியின், நடிப்பு தென்றலையும் தாண்டி, ஒரு புயல் என்றே சொல்லலாம்.

ஒரு காட்சியில் சாய் potato chips சாப்பிடுவாங்க. அச்சத்தம் பிடிக்காததால், கோபப்பட்டு டுல்கர் தட்டை தட்டிவிடுவார். potato chips சிதறி போகும். உடனே டுல்கர் தனது தவற்றை உணர்ந்துவிடுவார். அவர் சாய், பக்கம் பார்ப்பார். அதற்கு சாய் பல்லவி ஒரு reaction கொடுப்பாங்க பாருங்க!

செம்ம ஜி! செம்ம ஜி! 

"நான் அடிச்ச தாங்க மாட்டே, நாலு மாசம் தூங்க மாட்டே" என்ற வெறித்தனத்தை படம் முழுக்க தனது நடிப்பாலும், முக பாவனையாலும், பின்னி பெடல் எடுத்து இருக்கிறார் டுல்கர். சில நேரங்களில், நம்மையே திரையில் பார்ப்பது போல் தெரியும். யதார்த்த நடிப்பு. எத்தன விஷயத்துக்கு ஆபிஸ்ல கோபப்பட்டு இருப்போம்?

இசை

இசையமைப்பாளர் கோபி, பாடல்களின் இசையை ஏதோ ஆங்கில பாடல்களிலிருந்து திருடிவிட்டதாக குற்றச்சாட்டு இருந்தாலும், படத்துக்கு பாடல்கள் பொருத்தமாய் அமைந்து விட்டன.

இரண்டு பாடல்களிலுமே அழகு அள்ளிவீசுகிறது.

அதிலும் "வார்த்தின்களே" பாடலில் தலைவி, சிவப்பு சேலையில் ஒரு ஆட்டம் ஆடுவாங்க பாருங்க.... (3.56- 4.22)


கலி பல்லவிய பார்த்து, பசங்க எல்லாம் காலி!! 

குற்றச்சாட்டு பெரிய விஷயமாக தெரியவில்லை, ஏன் என்றால் பிண்ணனி இசையில் மனுஷன் புகுந்து விளையாடி இருக்கிறார். பிண்ணனி இசையில் பயன்படுத்தப்பட்ட முக்கியமான வாத்தியம்- செண்ட மேளம். செண்ட மேளம் சத்தம் காட்சியை அதிர வைக்கிறது. திரையரங்கு முழுதும் ஒரே நிசப்தம் இரண்டாம் பாதியில். மேள சத்தம் மட்டும் தனியே ஒரு கதை சொல்கிறது. அவ்வளவு வலு சேர்க்கிறது பிண்ணனி இசை.

ஒளிப்பதிவு

இருள். பயம். ஒளிப்பதிவு.

இது மூன்றும் நம்மை கட்டி போடுகிறது. சில படங்களில் இந்த இருட்டை காட்டுகிறேனு கண்ணுக்கு ஒன்னுமே தெரியாம படம் போகும். நம்மளே torchlight எடுத்து காட்சிகளை தேடனும்.


ஆனால், இப்படத்தில் ஒளிப்பதிவாளர் எப்படி தான் இருளை இப்படி வித்தியாசமாய் காட்டினார்னு தெரியல!

மனசு பதறுது, கை கால் உதறது.

ஒரே ஒரு விஷயம் இரண்டாம் பாதியில் நடக்கிறது. அதை மட்டுமே வைத்து கொண்டு ஒளிப்பதிவில் மாயஜாலம் செய்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர்! பின்னிட்டீங்க ஜி!

***********************************************

உங்க mind voice: அப்ப, இனி நீ நிறைய மலையாள படங்களை திரையரங்கு போய் பார்ப்ப?

நான்: கண்டிப்பா....

பின்னே....



Mar 22, 2016

ஆட்டோக்காரன் நான் ஆட்டோக்காரன்- amazing auto driver அண்ணாதுரை

ஆட்டோக்காரன் நான் ஆட்டோக்காரன் என பாடலை கம்பீரமாக, இந்தியாவில் பாட தகுதி உள்ளவர் ஒருவர் என்றால் அது அண்ணாதுரையாக தான் இருக்க முடியும்.

தனது ஆட்டோவில், மாத இதழ், செய்திநாள், லாப்டாப், wifi, ஆசிரியர்களுக்கு இலவசம், குழந்தைகள் தினம் அன்று குழந்தைகளுக்கு இலவசம். அப்துல் கலாம் தினம் அன்று சலுகை என எண்ணி பார்க்க முடியாத அளவுக்கு அசர வைக்கும் இவரது தொழில் பக்தி.

அவரிடம் கேட்டபோது, அவர் சொன்னது, "customers தான் எனக்கு தெய்வம். அதனால தான் நான் சாம்பாதிக்கும் பணத்த, அவங்களுக்கு செய்யனும்னு ஆசைபடுறேன்." என்றார்.

இவ்வளவு வசதிகள் இருந்தும், அதே கட்டணம் தான். கிட்டதட்ட மாதம் 10,000 வரை செலவு ஆகிறது, வீட்டில் இதனை செய்ய அவ்ளளவு ஊக்குவிப்பு இல்லை என்றபோதிலும், அண்ணாதுரை தொடர்ந்து செய்கிறார் அவரது பணியை.

இப்போது புதிதாக அவரது 'app' ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அண்ணா, கண்டிப்பா நீங்க பெரிய ஆளாக வருவீங்க! வாழ்த்துகள் அண்ணா!


Mar 20, 2016

கூடமேல கூட வச்சு பாடலை PARIS நகரத்தில் காட்சியமைக்கப்பட்டிருந்தால்......

இந்த வாரம் முழுக்க லீவு என்பதால் கிட்டதட்ட வாழ்க்கையையே facebookகிலும் youtubeலும் அர்பணித்துவிட்டேன். அதில் என்னை கவர்ந்த 3 வீடியோக்களின் தொகுப்பு தான் இது.

1) குறும்படம்: ஜீ-பூம்-பா

இயக்குனர் பாலாஜியே (காதலில் சொதப்புவது, மாரி படம் இயக்குனர்) இப்படத்தில் குறும்படத்தின் நாயகன். என்ன தான் கதைனா பார்த்தா?

அட இப்படம் short and sweet  என சொல்ல வைத்தது. வீட்டில் பார்த்த மாப்பிளையை காபிஷாப்பில் பார்க்கும் செல்கிறாள் நாயகி. அங்க என்ன நடக்குது தான் கதை. இதில் என்னொரு சுவாரஸ்சியம் என்னவென்றால், முழு நீள படத்தின் ஒரு காட்சியாம் இக்குறும்படம்! அப்படி செதுக்கி இருக்கார் இயக்குனர் விக்னெஷ் விஜய்குமார்.

2) கூடமேல கூட வச்சு பாடலை parisல் எடுத்திருந்தா....

தமிழ் சினிமாக்களில் வெளிநாட்டு படபிடிப்பு பாடல்கள் ரொம்ப சாதாரணமா போச்சு. ஆனா சில பாடல்கள் எந்த லொக்ஷ்னலில் எடுத்தாலும், அழகாக தான் இருக்கும். நாம் அனைவருக்கும் பிடித்த "கூட மேல கூட வச்சு" பாடலை, பாரிஸ்சில் வசிக்கும் இக்காதல் ஜோடி இப்பாடலுக்கு மேலும் உயிர் கொடுத்திருக்கிறார்கள்.

சமீபத்தில் நான் பார்த்து ரசித்த வீடியோ


3) குறும்படம்: husBANned.

செம்ம ஜாலியான ஒரு குறும்படம். கணவர்களின் கஷ்டங்களை புட்டு புட்டு வைக்கும் படம்.

எனக்கு பிடித்த வசனம்.

கணவர்: sunday வராத வாரம் இருக்கலாம். ஆனா சண்டையே வராத வாழ்க்கை கிடையாது.

அவரது நண்பன் (கல்யாணம் ஆக போகும் நண்பன்): செத்து போச்சு!

க: என்னது?

ந: உங்க sense of humor

க: அதான் married life!


Mar 19, 2016

நான் , விஜய் சேதுபதிய heavyயா லைக் பண்ண காரணம் என்ன?

ஏற்கனவே, விஜய் சேதுபதி (வி. சே) பத்தி தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள் ல எழுதியிருக்கேன்.

  • வி.சே என்ற நடிகர் எப்போ எனக்கு தெரிய வந்தார். "thuru" குறும்படம் பார்த்த போது, எனக்குள் தோன்றியது "அட இவர் ரொம்ப நடிக்குறார் பா!"

அன்று சொன்னது போல் தான், முதலில் அவர் சிரிப்பு! புன்னகை.

ஏதோ ஒன்னு பண்ணது!


  • மக்களுக்கு பிடிச்ச மாதிரி....சரி சரி....எனக்கு பிடிச்ச மாதிரி திரையில் வரும் விஜய் சேதுபதி. நானும் ரவுடி தான், சேதுபதி, காதலும் கடந்து போகும் ஆகிய படங்களில் அவர் நடிக்கும் விதம் ஏதோ ஒன்னு பண்ணது! 


  • அவர் கொடுக்கும் பேட்டிகளிலும் சரி, அவரை பற்றி மற்றவர் பேசும்போதும் சரி, வி.சே ரொம்ப 'shy type' ஆளு. ஆனா, அந்த பழக்கத்தை மாற்ற தான் நடிக்க வந்ததாக சொன்னார்கள். இதுவும் இன்னொரு காரணம். basically i am a shy type girl என்பதால் வி.சே போன்றவர்களை ரொம்ப பிடிக்கும்.

  • வித்தியாசமான முக பாவனைகள். சமீபத்தில் வந்த காதலும் கடந்து போகும் படத்தில், இரண்டு காட்சிகளில் இதை பார்த்தேன்.
"ஏதா பண்ணுண்ணா!" என்று சொல்லும் modulation....க க க போ!! 




"நாயா?" என்று பதில் சொன்ன விதமும்.......ப்பா!!!!!!!!!



  • கூட மேல கூட வச்சு பாடல்:  இப்பாடல் யூடியுப்ல மட்டும் கிட்டதட்ட 55 லட்சம் வீயுஸ் கிடைச்சுருக்கு. அதில் பாதி என்னால தான் இருக்கும்னு நினைக்குறேன். ஏனா, இப்பாடலை எடிட்டு செய்தவரைவிட, நான் இப்பாடலை அதிக முறை பார்த்து இருப்பேன். இப்பாடலும் இன்னொரு காரணம்.

    வி.சே பிறந்த நாளுக்கு கவிதை கூட எழுதியிருக்கேன் பாருங்க....

    காட்டு தாடி உன் அழகில்லை
    சேட்டு பையன் கலர் இல்லை
    இருந்தும் கனவுகள் முழுதும் 
    நீ வராத நாள் இல்லை.

    நீ ம்ம் என்று சொல்லி பார்
    உன் கூடவே வருவேன்.
    என் எடை ஒத்துழைத்தால்
    அந்த கூடலூர் 
    கூடையில்கூட
    வருவேன்!