May 3, 2010

விண்ணை தாண்டி வந்தாளே-5

பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4

ice-3 cafe க்குள் நுழைந்தோம். அஞ்சலி banana split icecream float ஆர்டர் செய்தாள். நான் ஒரு வெண்ணிலா+ சாக்லெட் ஐஸ்கீரிம் ஆர்டர் செய்தாள்.

"அடிக்கடி இங்க வருவீயா, அஞ்சலி? மெனு கார்ட் பார்க்கம ஆர்டர் செஞ்சுட்டே?"

"ம்ம்.. இந்த கடையோட branch நிறைய இடத்துல இருக்கு. நிறைய தடவ போய் இருக்கேன். you should try the fruity fiesta. awesome, you know?"

நான் சிரித்தபடி, "ஒரு மாசத்துக்கு உன் சாப்பாட்டு செலவே ரொம்ம்ம்ம்ப ஆகும்னு நினைக்குறேன்."

"ஏய், வளர குழந்தை மேல கண்ணு வைக்காதே. இந்த மாதிரி restaurants, treat எல்லாம் சொந்த செலவுல போறது கிடையாது. friends' birthday party, அப்பரம் ஃபிரண்டுக்கு புதுசா boyfriend கிடைச்சா அதுக்கு ஒரு ட்ரீட். break-up ஆனா கூட ட்ரீட் கேட்டு இப்படி ஒவ்வொரு cafe, restaurantக்கு போய் சாப்பிட வேண்டியது தான்!" ஐஸ்கீரிம் அவள் உதட்டோரம் லேசாக சிந்த அதை tissue paperல் துடைத்தாள்.

அவள் ஐஸ்கீரிம் கிண்ணத்தை என்னிடம் நீட்டி, " try this. soooooo yummy!"

அஞ்சலி, "வேற spoon கேளு."

நான், "பரவாயில்ல. உன் spoon போதும்." என்றேன். அச்சமயம் எங்களது வெட்கங்கள் பக்கத்தில் நின்று எங்களது கன்னங்களை சீண்டின. நான் அவளை ரொம்ப நேரம் அப்படியே பார்த்தது அவளுக்கு ஒரு மாதிரியாய் உணர, "excuse me. i need to go the ladies." என்றாள்.

கொஞ்சம் நேரம் கழித்து ஓடி வந்தாள் பரபரப்புடன், "oh no! i'm dead."

"என்ன ஆச்சு?"

அவள் எதற்கும் பதில் சொல்லவில்லை. அவசர அவசரமாய் மேசையில் கிடந்த அவளது கைபேசி, டைரி, பேனா ஆகியவற்றை பையில் போட்டாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது ஒரு சின்ன குழந்தை அஞ்சலியின் கையை பிடித்து,

" அத்தே!!!" என்றது.

அஞ்சலியின் அண்ணி கழிவறையிலிருந்து வெளியே வர, "அஞ்சலி, ஏன் என்னைய பாத்து ஓடி வந்த?" என்றவர், என்னை கவனித்தார்.

எனக்கு புரிந்துவிட்டது.

நான் எழுந்து நின்றேன், "ஹாலோ" இஞ்சி திண்ண குரங்கு போல் காட்சியளித்தேன்.

"what is all this?" கத்தினார். அஞ்சலி பயத்துடன், "அண்ணி கத்தாதீங்க! அஜய மீட் பண்ணலாம்னு...." இழுத்தாள்.

"அப்போ வீட்டுல பொய் சொல்லிட்டு வந்திருக்க? கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி ஊர் சுத்துறது கொஞ்சம்கூட நல்லா இல்ல." என்று அறிவுரை கூற ஆரம்பித்தார். அங்கு இருந்தவர் அனைவரும் டிவியில் மெகா சீரியல் பார்ப்பதுபோல் எங்களையே பார்த்து கொண்டிருந்தனர்.

அஞ்சலி கெஞ்சினாள்,"அண்ணி, ப்ளீஸ்... வாங்க வீட்டுக்கு போகலாம். அப்பரம் பேசிக்கலாம். சாரி அஜய்."

அஞ்சலி, அவள் அண்ணி, குழந்தையுடன் காரில் ஏறி சென்றாள். அண்ணி ஏசுவதை நிறத்தவே இல்லை. பாவம் அஞ்சலி! வீட்டில் அவளுக்கு கெட்ட பெயர் என்னால்.

நான் வீடு திரும்பினேன். பைக்கில் சென்று கொண்டிருந்தபோது என் கைபேசி அலறியது. அஞ்சலி தான் என்று நினைத்து ஓரமாக நிறுத்தினேன் பைக்கை.

"ஹலோ!" மறுமுனையில் பேசியவரின் வார்த்தைகளை கேட்டு நான்,

"what!!?? என்ன சொல்றீங்க? எந்த ஹாஸ்பிட்டல்?"

பைக் பறந்தது கே.ஜி மருத்துவமனைக்கு. நான் பார்த்த காட்சி என் மனதை பிளந்தது.

அம்மா பிணமாய் ICU வார்ட்லிருந்து வெளியே கொண்டு வரப்பட்டார். நெஞ்சில் அடித்து அழுது கொண்டிருந்த அப்பாவிற்கு ஆறுதல் சொல்லிகொண்டிருந்தார் சித்தப்பா. சொந்தக்காரர்கள் சிலர் கதறி அழுதனர். என்னால் ஜீரணிக்க முடியவில்லை. என்ன நடந்தது? ஒன்றும் புரியவில்லை. கொஞ்ச நேரம் முன்னால் சந்தோஷமாக இருந்த நான், இப்ப எனக்கு...

தலையே சுற்றியது. உலகமே இருண்டதுபோல் உணர்ந்தேன்.

அப்பா ஒரு பக்கம் அழ, அம்மா இறந்துகிடக்க- எனக்கு மயக்கம் வந்தது.

(இரண்டு நாள் கழித்து வீட்டில்)
அம்மாவின் படத்திற்கு மாலை, பக்கத்தில் ஊதுபத்தி. அதை பார்க்க பார்க்க துக்கம் தொண்டையை அடைத்தது. வந்தவர்களிடம் என்ன நடந்தது என்று அப்பா சொன்னார்.

" ரோட் ஓரமா தான் நடந்துவந்தா. வேகமா வந்த ஒரு லாரி balance பண்ண முடியாம... அவள மோதிட்டு. பக்கத்துள்ள கம்பி கிடந்து இருந்துச்சு... அதுல போய் அவ விழுந்துட்டா... மண்டைல பெரிய அடி.... ஹாஸ்பிட்டலுக்கு..கொண்டு போறதுக்குள்ள..." அதற்கு மேல் அப்பாவால் பேச இயலவில்லை. ஒவ்வொரு முறையும் வந்தவர்களிடம் இதை சொல்லி சொல்லி அவருக்கு துயரம் அதிகமானது. வந்தவர்களை சித்தப்பா கவனிக்கட்டும் என்று சொல்லிவிட்டு அப்பாவை வேற இடத்தில் உட்கார சொன்னேன்.

இரவு ஆனது. எல்லாரும் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

a house is made of bricks but a home is made of love. ஒரு வீடு இல்லமாக மாறுவது ஒரு பொண்ணு கையில். அது எவ்வளவு உண்மை என்பதை அம்மா இல்லாத போது தான் உணர்ந்தேன். வீட்டில் ஒரே அமைதி. அந்த அமைதி என்னை வாட்டியது. என் அறை ஜன்னல் பக்கமாய் நின்று கொண்டிருந்தேன். யாரோ என் அறை கதவை திறப்பது போல் இருந்தது. திரும்பி பார்த்தேன்.

அஞ்சலி.

என் அருகே வந்தாள். "அஜய்..ஐ எம்.. சாரி" என்றதும் என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை. அவளை கட்டிபிடித்து அழுதேன்.

அவள் என்னை கொஞ்ச நேரம் அழவிட்டாள். படுக்கையில் உட்கார வைத்தாள்.

"cry to your heart's content. அழது முடிச்சுடு. அப்ப தான் பாரம் குறையும். but இனிமேலு அங்கிளுக்கு நீ தான் huge supportஆ இருக்கனும். your support, confidence and your smile should bring him back to normal."

நான், "என்னால முடியல அஞ்சலி. எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச வேலை போச்சு. அப்பரம் என்னோட best friend மாதிரி பழகின அம்மாவும் போய்ட்டாங்க." தேம்பி தேம்பி அழுதேன்.

"i feel like dying, anjali."

"அஜய்!! ப்ளீஸ்..." என் கண்ணீரை துடைத்தாள்.

மௌனமாக இருந்தோம்.
ஹாலுக்கு அழைத்து சென்றாள் என்னை. அப்பா dining tableல் உட்கார்ந்திருந்தார். அஞ்சலி வாங்கி வந்த சாப்பாடு மேசையில். எங்கள் இருவரையும் சாப்பிட சொல்லி கெஞ்சி கேட்டாள். அப்பாவுக்கும் எனக்கும் சாப்பிட மனமில்லை. ரொம்ப நேரம் கெஞ்சி பார்த்தாள் அஞ்சலி.

அஞ்சலி, "அப்பா, நீங்க இப்ப சாப்பிடலன்னா? நான் அப்பரம் உங்கள பாக்க வரவே மாட்டேன்!" என்றாள்.

அஞ்சலி 'அப்பா' என்று அவரை அழைத்ததும் அவருக்கு ஆச்சிரியமாய் இருந்தது. அடுத்த நொடியே அப்பா அஞ்சலி சொன்னதை செய்தார். அப்பா கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்கு மாறினார். அஞ்சலியும் அப்பாவும் ரொம்ப நேரம் பேசினார்கள். அப்பா அவ்வபோது புன்னகையித்தார். எனக்கு அவரை பார்க்க சந்தோஷமாக இருந்தது.

நேரம் ஆகிவிட்டால் அஞ்சலி கிளம்பினாள்.

அப்பா, "அஞ்சலி, நீ தப்பா நினைக்கலன்னா.... இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு போ மா. அஜய்க்கும் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்."

அஞ்சலி, "எனக்கும் இருக்க ஆசை தான் பா. ஆனா, வீட்டுல நிறைய பிரச்சனை ஓடிகிட்டு இருக்கு. இன்னிக்கே ஏதோ பொய் சொல்லிட்டு தான் வெளியே வந்து இருக்கேன்... but அப்பா, you don't worry. இனிக்கு இல்லன்னா என்ன. இனி வாழ்க்கை fullaa இங்க தானே இருக்க போறேன்." என்றதும் எனக்கு ஆச்சிரியமாய் இருந்தது.

அஞ்சலி வீட்டில் கடைசி வரைக்கும் ஒத்து கொள்ளவில்லை.

(ஒரு வருடம் கழித்து...)

"Two hearts that beat as one.
one soul inhabiting two bodies
two lives entwined together forever."

love-Actually Copyrights 2007

என்றது எங்களது திருமண வாழ்த்து அட்டை. நான் ஆரம்பித்த சொந்த நிறுவனம் தான் love-actually. அதில் அச்சடிக்கப்பட்ட முதல் வாழ்த்து அட்டை எங்களது. திருமணம் பிரமாண்டமாய் நடத்தப்படவில்லை. அஞ்சலி வீட்டில் யாரும் வரவில்லை. நண்பர்கள் மற்ற ஒருசில சொந்தக்காரர்கள் முன்னிலையில் நடந்த திருமணம்.

அவளுக்கு நான் கொடுத்த முதல் பரிசு தான் - மோதிரம்.

***

நான் அவள் மோதிர விரலை தொட்டு பார்த்து கொண்டிருந்தேன். எனது நினைவு அலைகள் கரையோரமாய் சேர, நான் சற்று நிமிர்ந்து பார்த்தேன்,அஞ்சலி இன்னும் தனது லெப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தாள். அப்போது அவளுக்கு புதிதாய் ஒரு இமெயில் வர, மகிழ்ச்சி அடைந்தாள்.

அஞ்சலி, "ஏய் அஜய் இங்க பாரு. அப்பாகிட்டலேந்து இமெயில் வந்து இருக்கு."

அப்பா தற்போது அமெரிக்காவில் இருக்கும் சித்தாப்பா வீட்டில் இருக்கிறார். அப்பாவின் இமெயிலை படித்தவுடன் அஞ்சலி அவருக்கு பதில் எழுதினாள்:

helloooooooooo appa!!!!!!! great to see your email at this time. I'm still awake trying to finish up some report here. I'm sOooooo Dead TIRED! How I wish you were here to make your sweet lassi! i miss your sweet lassi, pa! We MISS you so much pa. ajay, nivi and nisha are doing great. you take care of yourself and enjoy your stay at america! don't jollufy too much with the vellaikaaris there! hahahaha:)) appa, come back soon for summer holidays!

with love,
anjali, ajay, nivi and nisha

அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு, அஞ்சலி, "யப்பா... finally."லெப்டாப்பை மூடினாள். என்னை பார்த்தாள். கடிகாரத்தை பார்த்தாள்.

அஞ்சலி, "மணி இப்ப 3.30 am. நீ தூங்கி இருந்திருந்தா இந்நேரம் கனவுல தீபிகா படுகோன்கூட டூயட் பாடிகிட்டு இருந்திருக்கலாம்." என்றாள் சிரித்து கொண்டே.

நான், "ஐ லவ் யூ, அஞ்சலி."

அவள், " it's 3.30 am now. you are crazy, i tell you."சிரித்தாள்.

இருவரும் ரொம்ப நேரம் பேசினோம் காலை மணி 6 ஆனதுகூட தெரியாமல்.

*முற்றும்*

8 comments:

Venkatesh R said...

உங்கள் கதை நல்ல இருக்கு. ரசித்தேன்

Dev said...

//அஞ்சலி, "மணி இப்ப 3.30 am. நீ தூங்கி இருந்திருந்தா இந்நேரம் கனவுல தீபிகா படுகோன்கூட டூயட் பாடிகிட்டு இருந்திருக்கலாம்." என்றாள் சிரித்து கொண்டே.

நான், "ஐ லவ் யூ, அஞ்சலி."

அவள், " it's 3.30 am now. you are crazy, i tell you."சிரித்தாள்.//

I enjoyed these lines...Good story:) Keep it Up.....Expecting more from you thamizh....

சதீஸ் கண்ணன் said...

'பீல் குட்' முடிவு.
ரசித்து படித்தேன்.

SIVA said...

விஜய் படத்துல சம்பந்தமேயில்லாம வர்ற பஞ்ச் டயலாக்,பாட்டு மாதிரி அஜய் அம்மாவை ஏங்க கொன்னீங்க...இதுவரைக்கும் நீங்க எழுதின கதைகளினால படிக்கற பசங்க,புள்ளங்களைத்தான் கொன்னீங்க... ஏதாவது லேடீஸ் செண்டிமெண்டா...nice story....but i thought u r following Gowthmann's style..only diff..he share his own past expreince.. u sharing your future wishes....isn't it!!!

gils said...

grrrr.....supera poitruntha storyla ethuku ammava potu thalineenga..oru mega serial epect vanthirchi :( bad mango...

aana semma storynga...wonderful flow..thuli kuda pace miss agama..azhaga solirukeenga..i didnt even had to read prev posts to remember the scenes :) chaancela mango..kalakiteenga

Jay said...

nice write up.. love it.

Raja said...

Idu ungaluke konjam overa illa...nala poi kitu irrudha Storya ippadi suddena mudichi yenka (atleast yen)kovatha sambatichtingale..

Anyway...grt story, grt flow... :)

ivingobi said...

Hi Gaayu... hw r u... naan unga blog a romba miss pannitten... its o k apdiye konjam en blog pakkamum vaanga... http://kavidhaikkadhalanivingobi.blogspot.com/.....