Nov 24, 2011

ஜஸ்ட் சும்மா (24/11/11)

rockstar, oh my friend, mere brother ki dulhan and pyaar ka punchnama ஆகிய படங்களை இந்த ஒரே வாரத்தில் பார்த்தேன். (வேலைக்கு எல்லாம் போகலயா? என்று நீங்க கேட்பது புரியுது)

'லீவு' ஆரம்பித்துவிட்டது, மச்சி!!!

ஓகே, back to story. rockstar- ஹிந்தி படத்தை திரையரங்கில் பார்த்தேன். பத்து நிமிடங்களுக்கு அப்பரம் தூங்கிவிட்டு இரண்டு மணி நேரம் கழித்து தான் கண் விழித்தேன். மொக்கை, மரண மொக்கை. இவ்வளவு காசு கொடுத்து படம் பார்க்கும் பெண்களுக்கு, பெரிய ஏமாற்றம்- ஒரு தடவ கூட சட்டையை கழட்டுவில்லை ரன்பீர்!!! இது அநியாயம்! மத்தபடி, திரைக்கதையில் குழப்பங்கள். ஏர் ஆர்மானுக்கு காசு கொடுக்கவில்லை என்னவோ தெரியவில்லை, முதல் பாதியில் background musicக்கே இல்லை! தூக்கம் நல்லவே வந்துட்டு!!

oh my friend- தெலுங்கு படம். ரொம்ப சாதாரணமான கதை! ஆனால், ஸ்ருதிஹாசன் பின்னிட்டாங்க! 7ஆம் அறிவு படத்துக்கு அப்பரம், அவ்வளவு தான் அவங்க கதைன்னு நினைச்சேன்! ஆனா, ஸ்ருதி..ம்ம்ம்... பெரிய எதிர்காலம் இருக்கு (சொந்த குரலில் பேசி நடிக்காத வரை...தூள் கிளப்புங்க!)

mere brother ki dulhan- சொந்த அண்ணனுக்கு பெண் பார்க்கிறார் இம்ரான். ஆனால், கடைசியில் அந்த பெண்ணையே காதலிக்கிறார். இது எல்லாம் ஒரு கதையா? என்று நீங்க நினைக்க வேண்டாம். படம்- அம்புட்டு காமெடி! காட்சிகள், இசை, இம்ரான் மற்றும் கத்ரீனா நடிப்பு அருமையிலும் அருமை! பார்த்து, ரசித்து, சிரித்து மகிழலாம்!

pyaar ka hunchnama- மூன்று இளையர்கள் மூன்று பெண்களை காதலிக்கிறார்கள். அவர்கள் படும் பாடு! நல்ல கதை. கொஞ்சம் slow and raw! இருந்தாலும் யதார்த்தமான கதை. இந்த புத்திகெட்ட பெண்களிடம்(சிலர்) மாட்டி கொண்டு பாடுபடும் ஆண்களை நினைத்தால் ரொம்ப பாவமா இருக்கிறது. சில பெண்கள் உண்மையாகவே ராட்சசிதான்! பாவம்ங்க பசங்க!:(((((

*********************************************************************

மயக்கம் என்ன? படமும் dezi boys படமும் எப்போ வரும்னு காத்து கொண்டு இருக்கிறேன்!!

**********************************************************************

ம்ம்ம்....அடுத்த என்ன கதை எழுதலாம்!!?? ம்ம்ம்......

1 comment:

ANaND said...

Haaai nan than first tu..

Ore vaaratthula 4 padamaaaa...kudutthu vatcha aalunga neenga

Apparam unga peeelinga pathi ranbeer kitteyeum manmohan sing kitteyeum pesuran ka

Aduthu enna ealuthalaam .. Verenna mayakamenna thirai vimarsanam than