Apr 11, 2015

எனக்கென்ன யாருமில்லையே!- காதல் தோல்வி கவிதை

மழை காலத்தில்
'ஐ மிஸ் யூ' மெசெஜ்கள்
குவியும் அவள் கைபேசியில்
இப்போது வெறும் மழை சாரல்
மட்டும் பட்டு பட்டு போனது!
கைகோர்த்து தோள் சாய்ந்து
படம் பார்த்த நினைவுகளெல்லாம்
திரையரங்கு தரையில் கிடக்கும்
பாப்கான் போல சிதறி போனது!
மனம்
மண்ணுக்குள் புதைந்த
கல்லறையாக
கண்ட காதல்
மண்ணில்
விழுந்த சில்லறையாக
வாழ்கிறாள் தாடி இல்லா
பெண் தேவதாஸாக!

1 comment:

Time Traveller said...

உலகினுள் ஆயிரம் உள்ளங்கள் உனக்கென
உரிமை கொள்ளும் நெஞ்சங்கள் உனக்கென
ஓரிடத்தில் சேரும் அன்பு உலகிடத்தில் சேரும்போது
மானுடத்தில் வாழும் என்றும் மேன்மை காதல்.