Apr 13, 2015

சுஹாசினி பேச்சும், பாலு தேவர் மூச்சும்

சுஹாசினி சமீபத்தில் செய்தியாளர்கள் முன்னாடி பேசிய பேச்சு, எனக்கு பாலு தேவர் காட்சியை கண் முன் கொண்டு வந்தது.


அந்த சின்ன பையன் கேள்வி கேட்டதை போல்,
மவுசுங்கறது நீங்க கையில பிடிச்சது.
விமர்சனங்கறது நீங்க படிச்சு வாங்கின பட்டமா?? என்று அறைந்தார்.

விமர்சனம் எழுத என்ன தகுதி எனக்கு, என்று நானே ஒரு மூலையில் உட்கார்ந்து மூளையை கசக்கி யோசித்தேன்.


1) மணிரத்னம் படத்தை அவர் promo செய்தாரோ இல்லையோ இணையம் வழி நாங்க அதிகமாகவே promo செய்து இருப்போம். (கடல், ராவணன் படங்கள் உட்பட)

2) இன்றைக்குகூட மணிரத்னம் படத்தை டிவியில் போட்டால், மத்த எல்லாம் வேலையையும் அப்படியே போட்ட படி விட்டுவிட்டு, முழு படத்தையும் உட்கார்ந்து பார்ப்போம். தளபதி, அஞ்சலி, நாயகன், ரோஜா படங்கள் சில உதாரணம்

3) இன்றுகூட காலையில் தினமும் கேட்கும் சில பாடல்களில், 'ராசாத்தி...' (திருடா திருடி) மற்றும் காதல் சடுகுடு (அலைபாயுதே) சில.

4) எத்தனையோ தோல்வி படங்கள் கொடுத்த பிறகும், இப்ப உள்ள பசங்க குறும்படம் எடுப்பதாக இருந்தால்கூட... "ஹேய் மச்சான், நம்ம மணிரத்னம் மாதிரி படம் எடுக்கணும்'னு சொல்லும் அளவுக்கு உயர்த்தி வைத்தவர்களில் சிலர் இந்த மவுசு பிடிக்க தெரிந்தவர்கள் தான்.


so.... புரிந்ததா kanmani?