அருவாள் தேவையில்லை. tata sumo தேவையில்லை. தாடி வைத்த ஹீரோவாக இருந்தாலும் எரிச்சலை உண்டாக்கவில்லை. ஒரு ஐட்டம் நம்பர் ஆனால் சிரிக்க வைக்கும் ஐட்டம் நம்பர்.
அருவாள் தேவையில்லை (கடத்தல்காரர்களுக்கு தேவை ஐந்து rules)
tata sumo தேவையில்லை (ஒரு ஓட்டை வண்டி போதும்)
தாடி வைத்த ஹீரோ (விஜய் சேதுபதி)
நகைச்சுவை ஐட்டம் நம்பர் (காசு பணம் மணி மணி பாடல்)
சூது கவ்வும்- மக்களின் மனதை கவ்வியுள்ளது!
ரொம்ப புதுமையான ஒரு நகைச்சுவை படம்! ஹீரோ கண்களுக்கு மட்டும் தெரியும் ஹீரோயின், படத்தின் ஹீரோவுக்கு 40 வயது என்று சின்ன சின்ன விஷயங்கள் தான் படத்தை புதிதாய் காட்டியுள்ளது. நடித்த அனைவரும் டாப்! முக்கியமா விஜய் சேதுபதி!
ஒரு சின்ன கதை. எல்லாருக்கும் புரியும் கதை. ரசிக்க வைக்கும் திரைக்கதையும் வசனங்களும் இருந்தால் போதும் ஒரு நல்ல படத்தை எடுக்கலாம் என்று மறுபடியும் குறும்பட இயக்குனர்கள் நிரப்பித்து காட்டிவிட்டார்கள்! குறும்பட இயக்குனர்கள் மீது இருக்கும் மரியாரை இப்போது பல மடங்கு ஏறியுள்ளது! வாழ்த்துகள் இயக்குனரே!
2) yeh deewani hai jaawani
ரொம்ப நாளாக, நான் எதிர்பார்த்து கொண்டிருந்த படம்! எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த படம்! ரன்பீரும் தீபிகாவும் எப்படி சேர்ந்தார்கள் மறுபடியும்???...அட படத்துல சொல்லல! :))))))))))))))))
சரி கதைக்கு வருவோம். காதல் கதை தான்! இதுல என்ன புதுசு இருக்கு? ஒன்னும் இல்ல. அப்பரம் எப்படி நல்லா இருக்கு? என்று கேட்பவர்களுக்கு....
போய் படத்தை பார்த்துதான் அந்த அனுபவத்தை பெற்று கொள்ள முடியும்.
ரன்பீரும் தீபிகாவும் இணைந்து நடிக்கும் காதல் காட்சிகள் ஒவ்வொன்றும் செம்ம செம்ம செம்ம!!! தீபிகாவின் நடிப்பு கிளாஸ்! ரன்பீர் flirt செய்யும்போது அடிக்கும் வசனங்கள் அனைத்தும் டாப்!கூட நடித்தவர்களும் அருமை!
madhuri dixit ஆட்டம் பலம். அந்த பாடலில் ரன்பீர் ரொம்பவே ரசித்து ஆடியிருக்கிறார். ஒவ்வொரு frameலில் அது தெரிகிறது.
படத்தை இன்னும் கொஞ்சம் trim பண்ணியிருக்கலாம்!! மற்றபடி ஒரு feel-good படம். 29 வயதே ஆன இயக்குனரின் இரண்டாவது படைப்பு இது (முதல் படம் wake up sid) நல்ல முன்னேற்றம். ஆங்காங்கே தயாரிப்பளார் கரண் ஜோகரின் மேஜிக் தெரிந்தது! எல்லாமே பிடித்து இருந்தது!
கண்டிப்பாக பார்த்து ரசிக்கலாம்!
ஆமா...இந்த ரன்பீரும் தீபிகாவும் எப்படி சேர்ந்தார்கள்? அட படத்துல சொல்லல பா!:))))))))))))))))))
Jun 3, 2013
May 15, 2013
மூன்று பேர் மூன்று காதல்களின் எதிர்நீச்சல்!
எதிர்நீச்சல் மற்றும் மூன்று பேர்.......ஐயோ...அந்த படத்தை தான் பார்த்தேன்!
1) எதிர்நீச்சல்

எதிர்பார்த்த மாதிரி படம் ஆஹா ஓஹோனு எனக்கு தோணல. இரட்டை வசனம்இல்லாத (பெயரை வச்சு வந்த காமெடி எல்லாம்?)....ம்ம்ம்...... குத்து பாடல்கள் இல்லாத(தனுஷும் நயனும் ஆடியது எல்லாம்??)...ம்ம்ம்.... சரி ஒரு முறை பார்க்கலாம். குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் படமாய் அமையாவிட்டாலும் சிவ கார்த்திகேயனின் கல்லாபெட்டியில் சில்லறை குலுங்கி குலுங்கி விழ வைத்த படம்.
முதல் பாதி ஒரு கதை போலவும். இரண்டாம் பாதி வேறு கதை போலவும் இருப்பதால், அவ்வளவாய் ரசிக முடியவில்லை. இருந்தாலும், marathonக்கு பயிற்சி எடுக்கும் சில காட்சிகள் எல்லாம் சுவாரஸியமாய் இருந்துச்சு:)
2) மூன்று பேர் மூன்று காதல்
ஹாஹாஹாஹாஹாஹா....ஐயோ குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்த படம்! ஐயோ முடியலங்க!
அர்ஜுன் தாத்தா,
சேரன் பெரியப்பா
விமல் மாமா
சேர்ந்து நடித்த மூன்று பேர் முதியோர் காதல் படம் சூப்பர்!!!
விமல் 'chartered accountant' (நான் எதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சேனு தோணிச்சு)
சேரன் cambridgeல் படித்த வாலிபன் அதுவும் PHD முடித்தவன் (வேலையை நிறுத்திட்டு ஏங்காச்சு பூ விக்க போகலாம்னு தோணிச்சு)
அப்பரம் நம்ம கிச்சா அப்பளம் அர்ஜுன் நீச்சல் சொல்லி கொடுப்பவர். இது கொஞ்சம் பரவாயில்ல!
விமலும் சத்தியனும் அடிக்கடி 'ஒரு chartered accountant' ஆன நம்ம.... என கூறும்போது குபீர் சிரிப்பு தான் வந்துச்சு!
அர்ஜுன், காதல் காட்சிகளில் எல்லாம், ஐயோ ராமா (கவுண்டமணி பாணியில் படிக்கவும்) என்ற உணர்வை தருகிறார்.
கமல், ரஜினி கூட தான் காதல் காட்சிகளில் நடிக்குறாங்க. அவங்கள எல்லாம் நீ ஒன்னும் சொல்றது இல்ல. அப்படினு நீங்க கேட்கலாம். என்ன தான் அவங்க வயசுக்கு அது கொஞ்சம் ஒரு மாதிரியாய் இருந்தாலும், திரையில் பார்க்கும்போது அழகாய் காட்டிவிடுகிறார்கள் இயக்குனர்கள்!

(பானு இதற்கு முன்னால், இப்போது)
மூன்று ஹீரோயின்கள் வேற! பானு தவிர மற்ற இருவரும், கடைசி பஸ புடிச்சு ஊருக்கு போயிடலாம்! அதிலும் விமலின் ஜோடி....ஆஹா ஆஹா...விமலுக்கு ஏற்ற ஜோடி. விமலும் இந்த புள்ளயும் 'நான் நடிக்க மாட்டேன். நீங்க வேணும்னா நடிச்சுங்கோ' என்று அடம்பிடித்து இருக்கிறார்கள். அது ஒவ்வொரு காட்சியிலும் வந்த என்னை ப்ளார் ப்ளார்னு அறைந்துவிட்டு போனது.
தப்பு செய்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கனும் என்ற கருத்து எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. இயக்குனர், இதை மட்டும் மையமாய் வைத்து பின்னி பெடல் எடுத்து இருக்கலாமே!
இயக்குனரின் மகன் 'ஸ்டாப் தி பாட்டு' என்ற பாடலுக்கு ஆடுகிறார்.
அழகாய் சிரிக்கிறார்,
அழகாய் இருக்கிறார்,
அழகாய் பார்க்கிறார்.

ஆனால், முகத்தில் எந்த ஒரு பாவனையும் இல்லாமல் ஆடுகிறார். (விடுங்க பாஸ், அந்த காலத்துல விஜய்க்கும் ஆட வராதாம்!) நல்லா ஆட கத்துங்க சார்! அப்ப தான் பெரிய ஹீரோவா வர முடியும்! (ம்ம்ம்...விஜய் சேதுபதி ஒரு பாட்டுக்கு கூட ஆடலயே, எப்படி பெரிய ஹீரோவானாரு?? ம்ம்ம்...)
அப்ப இந்த படமும் அவுட்டா? என்று கேட்பவர்களுக்கு. குடும்பத்தோடு அல்லது நண்பர்களோடு சேர்ந்து உட்கார்த்து கமெண்ட் அடித்து படம் பார்க்க வேண்டுமா?- இதுவே சிறந்த படம்!
*************************************************************
எனக்கு சிரிக்கனும்- 'திருமதி தமிழ்' பாக்கனும்னு ஆசையா இருக்கு!!!
1) எதிர்நீச்சல்
எதிர்பார்த்த மாதிரி படம் ஆஹா ஓஹோனு எனக்கு தோணல. இரட்டை வசனம்இல்லாத (பெயரை வச்சு வந்த காமெடி எல்லாம்?)....ம்ம்ம்...... குத்து பாடல்கள் இல்லாத(தனுஷும் நயனும் ஆடியது எல்லாம்??)...ம்ம்ம்.... சரி ஒரு முறை பார்க்கலாம். குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் படமாய் அமையாவிட்டாலும் சிவ கார்த்திகேயனின் கல்லாபெட்டியில் சில்லறை குலுங்கி குலுங்கி விழ வைத்த படம்.
முதல் பாதி ஒரு கதை போலவும். இரண்டாம் பாதி வேறு கதை போலவும் இருப்பதால், அவ்வளவாய் ரசிக முடியவில்லை. இருந்தாலும், marathonக்கு பயிற்சி எடுக்கும் சில காட்சிகள் எல்லாம் சுவாரஸியமாய் இருந்துச்சு:)
2) மூன்று பேர் மூன்று காதல்
ஹாஹாஹாஹாஹாஹா....ஐயோ குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்த படம்! ஐயோ முடியலங்க!
அர்ஜுன் தாத்தா,
சேரன் பெரியப்பா
விமல் மாமா
சேர்ந்து நடித்த மூன்று பேர் முதியோர் காதல் படம் சூப்பர்!!!
விமல் 'chartered accountant' (நான் எதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சேனு தோணிச்சு)
சேரன் cambridgeல் படித்த வாலிபன் அதுவும் PHD முடித்தவன் (வேலையை நிறுத்திட்டு ஏங்காச்சு பூ விக்க போகலாம்னு தோணிச்சு)
அப்பரம் நம்ம கிச்சா அப்பளம் அர்ஜுன் நீச்சல் சொல்லி கொடுப்பவர். இது கொஞ்சம் பரவாயில்ல!
விமலும் சத்தியனும் அடிக்கடி 'ஒரு chartered accountant' ஆன நம்ம.... என கூறும்போது குபீர் சிரிப்பு தான் வந்துச்சு!
அர்ஜுன், காதல் காட்சிகளில் எல்லாம், ஐயோ ராமா (கவுண்டமணி பாணியில் படிக்கவும்) என்ற உணர்வை தருகிறார்.
கமல், ரஜினி கூட தான் காதல் காட்சிகளில் நடிக்குறாங்க. அவங்கள எல்லாம் நீ ஒன்னும் சொல்றது இல்ல. அப்படினு நீங்க கேட்கலாம். என்ன தான் அவங்க வயசுக்கு அது கொஞ்சம் ஒரு மாதிரியாய் இருந்தாலும், திரையில் பார்க்கும்போது அழகாய் காட்டிவிடுகிறார்கள் இயக்குனர்கள்!
(பானு இதற்கு முன்னால், இப்போது)
மூன்று ஹீரோயின்கள் வேற! பானு தவிர மற்ற இருவரும், கடைசி பஸ புடிச்சு ஊருக்கு போயிடலாம்! அதிலும் விமலின் ஜோடி....ஆஹா ஆஹா...விமலுக்கு ஏற்ற ஜோடி. விமலும் இந்த புள்ளயும் 'நான் நடிக்க மாட்டேன். நீங்க வேணும்னா நடிச்சுங்கோ' என்று அடம்பிடித்து இருக்கிறார்கள். அது ஒவ்வொரு காட்சியிலும் வந்த என்னை ப்ளார் ப்ளார்னு அறைந்துவிட்டு போனது.
தப்பு செய்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கனும் என்ற கருத்து எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. இயக்குனர், இதை மட்டும் மையமாய் வைத்து பின்னி பெடல் எடுத்து இருக்கலாமே!
இயக்குனரின் மகன் 'ஸ்டாப் தி பாட்டு' என்ற பாடலுக்கு ஆடுகிறார்.
அழகாய் சிரிக்கிறார்,
அழகாய் இருக்கிறார்,
அழகாய் பார்க்கிறார்.
ஆனால், முகத்தில் எந்த ஒரு பாவனையும் இல்லாமல் ஆடுகிறார். (விடுங்க பாஸ், அந்த காலத்துல விஜய்க்கும் ஆட வராதாம்!) நல்லா ஆட கத்துங்க சார்! அப்ப தான் பெரிய ஹீரோவா வர முடியும்! (ம்ம்ம்...விஜய் சேதுபதி ஒரு பாட்டுக்கு கூட ஆடலயே, எப்படி பெரிய ஹீரோவானாரு?? ம்ம்ம்...)
அப்ப இந்த படமும் அவுட்டா? என்று கேட்பவர்களுக்கு. குடும்பத்தோடு அல்லது நண்பர்களோடு சேர்ந்து உட்கார்த்து கமெண்ட் அடித்து படம் பார்க்க வேண்டுமா?- இதுவே சிறந்த படம்!
*************************************************************
எனக்கு சிரிக்கனும்- 'திருமதி தமிழ்' பாக்கனும்னு ஆசையா இருக்கு!!!
Apr 21, 2013
தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள்-24
சித்தார்த்....இவர் சித்தார்த்...........
சாரி, இதுக்கு மேல பேச்சு வரல:))) கொஞ்சம் பொறுங்க....:))))
வயசு 34. 34???!!?? வருஷம் போக போக இவர் இன்னும் இளமையா போய்கிட்டு இருக்காரு! இவர் ரொம்ப நாள் சினிமால இருக்காரே, ஏன் திடீரென்னு 'சைட்' என்பீர்கள்.சமீபத்தில் 'உதயம் nh4' படம் trailer பார்த்ததினால் வந்தது!!
அடுத்து....

ரவி ராம்பால். இப்போது நடக்கும் ஐபில் ஆட்டங்களை அவ்வபோது பார்த்து கொண்டு இருக்கிறேன். அதில் ரொம்ப கவர்ந்தவர் ரவி ராம்பால். அதாவது சிலரை பார்த்தவுடனே 'அட' என்று சொல்ல வைக்கும். அப்படிப்பட்டவர் தான் இந்த ரவி ராம்பால்!!
அடுத்து....
ஜெடேஜா. பிடித்த அம்சம்- திறமை. கடந்த சில ஆட்டங்களில் இவரின் அபார வெற்றி இவர் பக்கம் ஈர்த்துள்ளது. மற்றபடி பார்க்க போனால்..ம்ம்... இப்படி trimmed hair and beard தான் இவருக்கு அழகு!!
Apr 8, 2013
சென்னையில் ஒரு கேடி பில்லாவும் பரதேசியும்.
இந்த வார இறுதி நாட்களில், 3 படங்கள்.
1) சென்னையில் ஒரு நாள்
ஏற்கனவே வந்த மலையாள படத்தை பார்த்துவிட்டதால், இந்த படம் அவ்வளவு புதிதாக தெரியவில்லை. அந்த படத்தில் இருந்த ஒரு சில 'மேஜிக்' இதில் இல்லை.
இருந்தாலும், சில காட்சிகள் ரொம்பவே நல்லா இருந்துச்சு. அதிலும் அந்த கார், பெரிய லாரி மோதி கொள்ளாமல் பயங்கரமாய் சர்சர் என்று வாகனம் போன காட்சிகள் எல்லாம் சூப்பர்! நடித்த அனைவருமே ரொம்ப நல்ல செய்து இருந்தாங்க.
தமிழ் டாக்கிஸ் யூடியுப் விமர்சனம் சொன்னதுபோல், "சேரன் நடிக்குறார்னு பயந்து படத்த பாக்காம போயிடாதீங்க. அவர் ரொம்ப நல்லா நடித்து இருந்தார்."
இதே மாதிரி நல்ல கதாபாத்திரங்களில் நடிங்க சார்! உங்கள எல்லாருக்கும் பிடிக்கும்.
2) கேடி பில்லா கிள்ளாடி ரங்கா- சூப்பர் ஹிட் படம் என்றார்கள்!
படத்தை பார்த்துவிட்டு, 'இது ஒன்னும் அவ்வளவு பெரிய காமெடி இல்ல' என்று தான் தோன்றியது. ஒரு கட்டத்தில் செம கடுப்பாய் வந்தது. சிரிப்பே வராமல் எவ்வளவு நேரம் தான் நானும் 'இந்தா காமெடி வந்துடும். அந்தா காமெடி வந்துடும்'னு எதிர்பார்க்குறது?
சும்மா ஃபேஸ்புக் பக்கங்களின் தலைப்பின் சாயலில் காமெடி டயலாக் சொன்னால், சிரிப்பு வருமா?
இதை காமெடி படம் என்றால், உள்ளத்தை அளித்தா போன்ற படத்தை எல்லாம் என்ன சொல்வீங்க!!!???
the convent boy விமல் அவர்களே, நடிப்பு வந்தால் அதை கொஞ்சமாவது எடுத்து பாக்கெட்-ல போட்டுக்குங்க. தூர தூக்கி போடாதீங்க.
சிவா கார்த்திகேயா, பெண்களை கிண்டல் பண்ணி சுண்டல் சாப்பிடும் இந்த கதாபாத்திரம் உனக்கு இனிமேல் வேண்டாம்ய்யா!!! இப்படி பேசினால் தான், கை தட்டல் கிடைக்கும்னு நிறைய பேர் சொல்லுவாங்க. கை தட்டல் வாங்க, வேற நல்ல வழியெல்லாம் இருக்குது தல!
சூரி, சந்தானத்துக்கு வந்த நிலை உங்களுக்கு வர வாய்ப்பு இருக்கு. டபுள் மீனிங் வசனம் பேசினால் அடுத்த 'சந்தானம்' நீங்க தான் பாஸ்!!
இயக்குனரே,................. சரி விடுங்க. இந்த அரையாண்டு பரிட்சைல என்னை பொருத்தவரை பாஸ் ஆகல. அடுத்த முழு ஆண்டு பரிட்சைலவாது நல்லா வர முயற்சி பண்ணுங்க.
அப்பரம் யுவன பத்தி சொல்ல மறந்துட்டேனே!!! சரி அது மறந்ததாகவே இருக்கட்டும்.
3) பரதேசி.
முதலில் இப்படத்தை பார்க்க அவ்வளவு ஆர்வம் இல்லை. அவரின் 'நான் கடவுள்' படம் கொடுத்த 'பயம்'. நம்ம வாழ்க்கையே கொஞ்சம் பரதேசி நிலைமைல தான் போயிகிட்டு இருக்கு. அதுல இந்த படத்த வேற பாக்கனுமா-னு யோசித்தேன். படத்தை பார்த்தேன். அட, பரவாயில்ல கொஞ்ச நல்லா தான் இருக்கு.
நிறைய காட்சிகளில், நாம் நமது வாழ்க்கையில் நடப்பவற்றை பார்க்க முடிந்தது.
கஷ்டப்பட்டு படிச்சு, பட்டம் வாங்கி, வேலைக்கு போகும்போது தெரிவதில்லை நாமும் நவீன பரதேசிகள் என்று.
அடிமையாக்கப்படுவோம்
வீட்டை மறந்து
சில நேரங்களில்
அனாதையாக்கப்படுவோம்.
என்ன தான் உடல் நலம் சரியில்லை என்றாலும் வேலைக்கு போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட நாட்கள் எல்லாம் உண்டு. மருந்து செலவுக்கும் முதலாளிக்கும் பயந்து தன்ஷிகா கொஞ்சம் கொஞ்சமாய் சாகும் காட்சியில் உணர்ந்தேன் நானும் ஒரு 'பரதேசி' என்று.
தன்மானத்தை புதைத்தோம்
வருமானத்திற்காக!
இந்த மாதிரி படம் முழுவதும் இன்றைய சூழலுக்கு ஒற்றுமை இருந்தது. கடைசியில் அதர்வா, வேதிகாவை பார்த்து, "இந்த நரகத்துக்கள்ள விழுந்துட்டியே?" என்று வாய்விட்டு அழும் காட்சி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திங்கட்கிழமையை நினைச்சு நாம் அழுவதைபோலவே இருந்ததுச்சு.
நடிப்பு என்ற வகையில் எல்லாருமே நல்லா செய்து இருந்தாங்க. அதர்வாவின் பிச்சுபோட்ட பரோட்டா தமிழ் தான் ஆங்காங்கே தலை தூக்கியது. இருந்தாலும், நல்லாவே நடித்து இருந்தார்.
1) சென்னையில் ஒரு நாள்
ஏற்கனவே வந்த மலையாள படத்தை பார்த்துவிட்டதால், இந்த படம் அவ்வளவு புதிதாக தெரியவில்லை. அந்த படத்தில் இருந்த ஒரு சில 'மேஜிக்' இதில் இல்லை.
இருந்தாலும், சில காட்சிகள் ரொம்பவே நல்லா இருந்துச்சு. அதிலும் அந்த கார், பெரிய லாரி மோதி கொள்ளாமல் பயங்கரமாய் சர்சர் என்று வாகனம் போன காட்சிகள் எல்லாம் சூப்பர்! நடித்த அனைவருமே ரொம்ப நல்ல செய்து இருந்தாங்க.
தமிழ் டாக்கிஸ் யூடியுப் விமர்சனம் சொன்னதுபோல், "சேரன் நடிக்குறார்னு பயந்து படத்த பாக்காம போயிடாதீங்க. அவர் ரொம்ப நல்லா நடித்து இருந்தார்."
இதே மாதிரி நல்ல கதாபாத்திரங்களில் நடிங்க சார்! உங்கள எல்லாருக்கும் பிடிக்கும்.
2) கேடி பில்லா கிள்ளாடி ரங்கா- சூப்பர் ஹிட் படம் என்றார்கள்!
படத்தை பார்த்துவிட்டு, 'இது ஒன்னும் அவ்வளவு பெரிய காமெடி இல்ல' என்று தான் தோன்றியது. ஒரு கட்டத்தில் செம கடுப்பாய் வந்தது. சிரிப்பே வராமல் எவ்வளவு நேரம் தான் நானும் 'இந்தா காமெடி வந்துடும். அந்தா காமெடி வந்துடும்'னு எதிர்பார்க்குறது?
சும்மா ஃபேஸ்புக் பக்கங்களின் தலைப்பின் சாயலில் காமெடி டயலாக் சொன்னால், சிரிப்பு வருமா?
இதை காமெடி படம் என்றால், உள்ளத்தை அளித்தா போன்ற படத்தை எல்லாம் என்ன சொல்வீங்க!!!???
the convent boy விமல் அவர்களே, நடிப்பு வந்தால் அதை கொஞ்சமாவது எடுத்து பாக்கெட்-ல போட்டுக்குங்க. தூர தூக்கி போடாதீங்க.
சிவா கார்த்திகேயா, பெண்களை கிண்டல் பண்ணி சுண்டல் சாப்பிடும் இந்த கதாபாத்திரம் உனக்கு இனிமேல் வேண்டாம்ய்யா!!! இப்படி பேசினால் தான், கை தட்டல் கிடைக்கும்னு நிறைய பேர் சொல்லுவாங்க. கை தட்டல் வாங்க, வேற நல்ல வழியெல்லாம் இருக்குது தல!
சூரி, சந்தானத்துக்கு வந்த நிலை உங்களுக்கு வர வாய்ப்பு இருக்கு. டபுள் மீனிங் வசனம் பேசினால் அடுத்த 'சந்தானம்' நீங்க தான் பாஸ்!!
இயக்குனரே,................. சரி விடுங்க. இந்த அரையாண்டு பரிட்சைல என்னை பொருத்தவரை பாஸ் ஆகல. அடுத்த முழு ஆண்டு பரிட்சைலவாது நல்லா வர முயற்சி பண்ணுங்க.
அப்பரம் யுவன பத்தி சொல்ல மறந்துட்டேனே!!! சரி அது மறந்ததாகவே இருக்கட்டும்.
3) பரதேசி.
முதலில் இப்படத்தை பார்க்க அவ்வளவு ஆர்வம் இல்லை. அவரின் 'நான் கடவுள்' படம் கொடுத்த 'பயம்'. நம்ம வாழ்க்கையே கொஞ்சம் பரதேசி நிலைமைல தான் போயிகிட்டு இருக்கு. அதுல இந்த படத்த வேற பாக்கனுமா-னு யோசித்தேன். படத்தை பார்த்தேன். அட, பரவாயில்ல கொஞ்ச நல்லா தான் இருக்கு.
நிறைய காட்சிகளில், நாம் நமது வாழ்க்கையில் நடப்பவற்றை பார்க்க முடிந்தது.
கஷ்டப்பட்டு படிச்சு, பட்டம் வாங்கி, வேலைக்கு போகும்போது தெரிவதில்லை நாமும் நவீன பரதேசிகள் என்று.
அடிமையாக்கப்படுவோம்
வீட்டை மறந்து
சில நேரங்களில்
அனாதையாக்கப்படுவோம்.
என்ன தான் உடல் நலம் சரியில்லை என்றாலும் வேலைக்கு போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட நாட்கள் எல்லாம் உண்டு. மருந்து செலவுக்கும் முதலாளிக்கும் பயந்து தன்ஷிகா கொஞ்சம் கொஞ்சமாய் சாகும் காட்சியில் உணர்ந்தேன் நானும் ஒரு 'பரதேசி' என்று.
தன்மானத்தை புதைத்தோம்
வருமானத்திற்காக!
இந்த மாதிரி படம் முழுவதும் இன்றைய சூழலுக்கு ஒற்றுமை இருந்தது. கடைசியில் அதர்வா, வேதிகாவை பார்த்து, "இந்த நரகத்துக்கள்ள விழுந்துட்டியே?" என்று வாய்விட்டு அழும் காட்சி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திங்கட்கிழமையை நினைச்சு நாம் அழுவதைபோலவே இருந்ததுச்சு.
நடிப்பு என்ற வகையில் எல்லாருமே நல்லா செய்து இருந்தாங்க. அதர்வாவின் பிச்சுபோட்ட பரோட்டா தமிழ் தான் ஆங்காங்கே தலை தூக்கியது. இருந்தாலும், நல்லாவே நடித்து இருந்தார்.
Subscribe to:
Posts (Atom)