Dec 30, 2009

daddy mummy வீட்டில் இல்ல (series 3)- பகுதி 3

பகுதி 1
பகுதி 2

மனம், கால்கள், கைகள், மூக்கு, நாக்கு எல்லாமே பயத்தால் நடுங்கின. ஆனால் கலா மட்டும் ரொம்ப சாதாரணமாக அமைதியாக 'இந்தியன் மூவி நியூஸ்' மாத இதழை புரட்டி கொண்டிருந்தாள்.

சசி, "முருகா முருகா முருகா..." என்று ஓதி கொண்டிருந்தாள். சுதா மடிக்கணினியில் காலேஜ் இணைய பக்கத்திற்கு சென்றாள். காலேஜ் தேர்வு முடிவுகள் என்னும் லிங்க்கை கிளிக் செய்தாள் சுதா. விஜி, சுதா, சசி ஆகியோரின் கண்கள் பெயர் பட்டியலை மேலும் கீழும் அளந்தன. சசி சத்தமாக வாசித்தாள் முடிவுகளை.

விஜியின் grades: C, C, C, B,C
சுதாவின் grades: B,B,D,D,C
சசியின் grades: A,A,B,C,C
கலாவின் grades: C,C,D,D,D

விஜி, "ஓ ஷிட்..... மார்க்ஸ் என்ன இப்படி பிச்சைக்காரன் வாந்தி எடுத்த மாதிரி இருக்கு..." தலையில் கை வைத்தாள்.

கலா சமாதானப்படுத்தினாள் அனைவரையும், "ஏய் கேர்ள்ஸ்...cheer up cheer up! எல்லாரும் pass பண்ணிட்டோம்ல...அப்பரம் என்ன கவலை... the destiny is not important- the journey matters the most!" சிரித்தாள்.

சுதா, "ஏ... வீட்டுல இந்த மார்க்ஸ காட்டினால் செருப்பு பிஞ்சிடும்..."

கலா, "அப்போ புது செருப்பு வாங்கலாம்னு சந்தோஷப்பட்டுக்கோ மச்சி!"

சசி, " நான் செத்தேன் டி... நான் C கிரேட் வாங்கினதே இல்ல வாழ்க்கையில... கண்டிப்பா எனக்கு சங்கு தான்." கண்கள் கலங்கின.

கலா, "ஐயோ ஏன் கேர்ள்ஸ்.... கிரேட் பத்தி மட்டுமே யோசிக்குறீங்க. grades don't measure your true intelligence. இந்த A... B... இதெல்லாம் நம்ம 4 வயசா இருந்தபோது கத்துகிட்ட ஒரு எழுத்து, அவ்வளவு தான்!! that don't decide our fate and we should not allow them to decide our fate. so what if you have scored a C or D in an exam? it doesn't make u less human being. "

சுதா, "வீட்டுல எப்படி டி சமாளிக்க முடியும்? திட்டியே கொன்னுடுவாங்க. "

சிரித்துகொண்டே கலா, " ஒரு மூக்கு, ஒரு வாய படைச்ச கடவுள் எதுக்கு ரெண்டு காதுகள படைச்சான்னு நினைக்குற? பெத்தவங்க திட்டுறது அவங்க கடமை, அதுல அவங்களுக்கு கொஞ்சம் பெருமையும்கூட வச்சுக்க... ஒரு காதுல திட்ட வாங்கினா, மறு காதுல அத வெளியாக்கிடனும். தப்பி தவறி மனசுக்கு போனுச்சு அப்பரம் ரெம்ம்ம்ம்ம்ப கஷ்டம். take it easy policy... மச்சிஸ்" சினிமா நியூஸின் மறுபக்கத்தை திருப்பினாள்.

சசிக்கு சற்று கோபம் வர, "உனக்கு என்ன மனசுல பெரிய இவள்னு நினைப்பா... உன்னால தான் நான் இப்படி ஆயிட்டேன்...."

மற்ற மூன்று பெண்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. கலாவும் முழித்தாள்.

சசி தொடர்ந்தாள், "இந்த செம்ஸ்ட்டர் ரொம்ப ஆட்டம் போட்டுடோம்! clubbing, movie அது இதுன்னு.... எல்லாம் உன்னால தான் கலா!" கோபத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் கைபேசியை மெத்தையில் தூக்கி எறிந்தாள்.

கலா, "இந்த வயசுல enjoy பண்ணாம அப்பரம் எப்ப டி enjoy பண்ண போறோம்..."

சசி எதுவுமே பேசவில்லை. கலாவுக்கு சற்று எரிச்சல் வர, "ஆமா, எனக்கு ஒன்னு புரியல... சசி ஏன் இப்படி ஓவர் சீன் போடுறான்னு! பாத்து சசி, ரொம்ப கோபம் பட்டா, சின்ன வயசுலே ஹார்ட் அட்டேக் வந்துடுமா?" சிரிக்க ஆரம்பித்தாள் கலா.

சசிக்கு ஆத்திரம் உச்சி மண்டைக்கு ஏற, " could you please stop your laughter and ur nonsense? you r such an irritating pest! don't get on my nerves kala!" கண்களில் கண்ணீர் கொட்டியது. கோபம், எரிச்சல், வெறுப்பு கலந்த கண்ணீர்.

உடனே சுதா, " quiet quiet. அம்மாவுக்கு கேட்டுட போகுது! shhhhhhh..." சாந்தம் படுத்தினாள்.

கலா, " சசி, நீ தான் இங்க ஓவரா பண்ணிகிட்டு இருக்க... not me. for your info, you better stop your bloody nonsensical over-emotional crying session now! right now!"

மீண்டும் தொடர்ந்தாள், " இங்க பாருங்க கேர்ள்ஸ்... புத்தக அறிவு வேற, பகுத்தறிவு வேற. வாழ்க்கைல நமக்கு உதவ போறது பகுத்தறிவு தான். அத வளர்த்துக்க... நம்ம நாலு இடத்துக்கு போனும்.... காலேஜ் புக்ஸவிட்டுடு மத்த விஷயங்களை பத்தியும் படிக்கனும். life is like a road with speed breakers. இந்த கிரேட்ஸ் வந்து ஒரு speed breaker மாதிரி நினைச்சுக்குங்கோ.... road முழுக்க speed breakers இருக்க போறது இல்ல."

சசி அழுகையிலும், " life is not a road, it is a race!"
இவர்கள் இருவரும் சண்டை போட்டு கொள்வது விஜிக்கும் சுதாவுக்கும் குழப்பமாக இருந்தாலும், அவ்வபோது சிரித்து கொண்டனர்.

கலா, " ஆமை முயல் கதை கேள்விப்பட்டு இருக்கீயா? மெதுவா போன ஆமை தான் அந்த ரேஸுல ஜெயிச்சுது!"

சசி, " ஆனா, அந்த ரேஸுல இரண்டு பேரு தான் இருந்தாங்க... நம்ம போற ரேஸுல பல மில்லியன் பேர் ஓடிகிட்டு இருக்காங்க... நம்ம ஜெயிக்கனும்னா கண்டிப்பா வேகமா போய் தான் ஆகனும். மத்தவங்ககூட போட்டி போட்டு தான் ஆகனும்."

கலா மற்ற இரு பெண்களையும் பார்த்து, "ஏய் இந்த சசியோட friendshipa நான் 'divorce' பண்ணுறேண்டி ...... ஏன் மேன் இவ பாட்டி மாதிரி பேசிகிட்டு இருக்கா.... "

விஜி, "சசி, கூல் டவுன் மேன்... கலா சொல்றதிலும் ஒரு பாயிண்ட் இருக்கு. கூல் பா கூல் பா...."

சுதா, " வீட்டுல எப்படி சமாளிக்குறது?"

கலா, " வீட்டுல எல்லாரும் நல்ல மூட்ல இருக்கும்போது சொல்லு. இந்த தடவ எல்லாருமே ரொம்ப மோசமா தான் செஞ்சு இருக்காங்க. பேப்பர் கஷ்டமா இருந்துச்சு. கிளாஸுல நிறைய பேர் paper moderate பண்ண lecturersகிட்ட பேச போறாங்க. அப்படி இப்படின்னு நல்ல பீலா விடு. முகத்த சோகமா வச்சுக்கோ. அவங்க எகுறினா, நீ எப்போதுமே அமைதியா இரு. முடிஞ்சா இன்னிக்கு நைட் சாப்பாடு வேண்டாம்னு சொல்லிடு. அப்ப தான் புள்ள கவலை படுது நம்ம அதிகமா திட்ட கூடாதுன்னு பெத்தவங்க நினைப்பாங்க!! எப்படி?"

சுதா, "நீ கண்டிப்பா அடுத்த வருஷம் தேர்தல நிக்குற...."

என்ன சொன்னாலும் சசி சமாதானம் ஆகவில்லை. யாரிடமும் பேசமால் வீட்டிற்கு சென்றாள்.

லீவு முடிய கொஞ்ச நாட்கள் தான் இருந்தது. பரிட்சை முடிவுகளை சொல்லி வீட்டில் என்ன நடந்தது என்று ஒருத்தருக்கு ஒருத்தர் தகவல்களை தெரிவித்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் ஏற்படவில்லை. ஸ் எம்ஸ் மூலம் தான் தெரிந்தது, வீட்டில் செம்ம டோஸ்த் விழுந்தது என்று. ஆனால், ஒரு படத்தின் 'ஒன் லைன்' கதையை கேட்பதற்கும் முழு திரைக்கதையுடன் கதையை கேட்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா?

கலா அனைவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பினாள்- "girls, meet at carlo cafe at 5 pm tmr."

(பகுதி 4)

6 comments:

பித்தனின் வாக்கு said...

suuperu, good story telling. keep it up ma

Karthik said...

naan innum motha partye innum padikkala.. athukkulla innona?

naanga padichittu wait panna mattum late pannunga.. aavv

இராஜ ப்ரியன் said...

superuuuuuuuuuuu........

சிம்பா said...

இன்னும் இன்னும் உங்ககிட்ட இருந்து நேரிய எதிர்பார்கிறேன். :))

sri said...

woaah thats some very good writing, ada ponga enakkey bore adichiduchu enimel vera maari edhavadhu sonnadhan differenta erukkum.

endha kadhaikku character inspirateion engerundhu vachudhuchu ? .. :)
miss kala

FunScribbler said...

@karthik, hahaha sorry bro. will update the story soon.
@simba, sure sure will try to improve myself. thanks for the support:)
@srivats, hahaha this is readers' request i guess.. so will write a damn mokkai story the next time.