Apr 20, 2010

விண்ணைத் தாண்டி வந்தாளே- 3

பகுதி 1)

பகுதி 2

பயத்தை கட்டுப்படுத்தி கொண்டு தைரியத்தை அழைத்தேன். வரமாட்டேன் என்று அடம்பிடித்தது. அவள் கால்களை கவனித்தேன். செம்ம high heels போட்டு இருந்தாள்.
'இத வச்சு அடிச்சா, கண்டிப்பா தாங்காது!' என்று மனம் எச்சரித்தது. இருப்பினும், அதையும் தாண்டி உண்மையை சொல்ல வாயை திறந்தேன்.

"அஞ்சலி, உங்கிட்ட ஒரு உண்மைய சொல்லனும். actually I like you. நமக்கு engagement நடந்தபோது நம்ம மொட்ட மாடில நின்னுகிட்ட இருந்தோம்ல, அப்ப தான் i decided you are the one for me. பாத்த உடனே புடிச்சு போனதுனு சொல்ல மாட்டேன். உன்னோட straightforwardness, sense of humour, நீ நீயா இருக்குற தெரியுமா... அந்த quality. i really like it. i didn't fall in love with you instantly, but just grew in love as days went by."

அவளுக்கு அதிர்ச்சி! சிலைபோல் நின்றாள்.

நான் தொடர்ந்தேன், " i know this might be a shock for you. i'm sorry. ரொம்ப நாளா சொல்லிடனும்னு தான் இருந்தேன். but பயமா இருந்துச்சு. இன்னும் 4 மாசம் தான் இருக்கு கல்யாணத்துக்கு. அதுக்கு முன்னாடி சொல்லிடனும்னு தான் இருந்தேன். look i am really really sorry."

அவள், "so, இத்தன நாளா நீ கொடுத்த ப்ளான் எல்லாம்?"

நான் சிரித்து கொண்டேன், " flop ஆகும் plans தான். ஆனா, successful plans பத்தி யோசிக்குறதவிட மொக்கையான ப்ளான்ஸ் பத்தி யோசிக்குறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?"

என் சிரிப்பு அவளுக்கு எரிச்சலை தந்ததுபோலும், முறைத்தாள்.

" i didn't expect this from you. i feel cheated."

"hey i am sorry. sorry." எனக்கு அதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

"உன்னைய ரொம்ப நல்ல ஃபிரண்டா நினைச்சு இருந்தேனே. இப்படி பொய் சொல்லி ஏமாத்திட்டீயே?" என்று அவள் சொல்லாமல் சொன்னாள் அவளது கண்களால். அந்த கண்களில் தெரிந்த ஏமாற்றம், கோபம், சோகம் என் மனசாட்சியை குத்தியது.

அவள் மௌனமாக இருந்தாள். கொஞ்சம் நேரம் கழித்து, " i am disappointed. you have betrayed. I feel cheated.bye." என்று சொல்லிவிட்டு கிளம்பினாள். அவளது கையை பிடித்து தடுக்க முயன்றபோது, அவள்

"please don't touch me. you cheap fellow" முகத்தில் கோபம் தெரிந்தது. என்னை அருவருப்பாக பார்த்தாள்.

"ப்ளீஸ்.. அஞ்சலி! i am sorry. really really sorry. i didn't mean to hurt you. கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாத்தையும் சொல்லிடனும்னு நினைச்சு தான் உங்கிட்ட சொன்னேன்." என்று மன்றாடினேன். அவள் ஏதையும் கேட்பதாக இல்லை. சென்றுவிட்டாள். பாரம் குறைந்ததுபோல் இருந்தாலும் தேவையில்லாமல் அவள் மனதை புண்படுத்திவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சி என்னை வாட்டியது.

அன்று இரவு ஃபோன் செய்தேன் அவளுக்கு. ஆனால் அவள் ஃபோனை எடுக்கவில்லை. இப்போது நாலு மாச தான் இருக்கு கல்யாணத்துக்கு, அஞ்சலிக்கு பிடிக்கவில்லை. அவளால் வீட்டிலும் சொல்ல முடியாது. விருப்பம் இல்லாத கல்யாணத்திற்கு அவளை நானே தள்ளிவிட்டேன். நிம்மதியாக அவளால் எப்படி இந்த கல்யாணத்தை.... என் வாயை வச்சுகிட்டு சும்மா இல்லாம நானும் அவளை காயப்படுத்திவிட்டேன்.....

i hate myself!!!! என்று பேனாவினால் 1000 முறை கிறுக்கினேன் ஒரு தாளில். தூங்க முற்பட்டேன் ஆனால் இயலவில்லை. தலையணை பக்கத்தில் கிடந்த கைபேசியை 100 முறை பார்த்தேன் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும், அவள் ஃபோன் செய்ய மாட்டாளா என்று. நடு இரவில் எழுந்து அவள் பேஸ்புக்கில் எழுதினேன் - sorry!

மறுநாள் அவள் ஆபிஸுக்கு செல்லலாம் என்று முடிவு எடுத்தேன். அவள் ஆபிஸை அடைந்ததும், என் கைபேசி மணி அழைத்தது. எனக்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை. அஞ்சலி தான் என்று நினைத்து கைபேசியை பார்த்தபோது அதில் தெரிந்தது என் ஆபிஸ் மேனேஜரின் நம்பர்.

"அஜய், நீங்க இப்ப எங்க இருக்கீங்க?"

நான், "ஒரு முக்கியமான ஃபிரண்ட்ட பாக்க வந்தேன்."

"ஓ sorry to disturb you. can you come to office now? urgent matter..."

எனக்கு ஒன்னும் புரியவில்லை. மேனேஜர் இப்படி தயக்கத்துடன் பேசி நான் பார்த்தது இல்லை. ஆக அஞ்சலியை பார்க்கவில்லை. நேராக என் ஆபிஸுக்கு கிளம்பினேன்.

மேனேஜர் என்னை பார்த்து, "sorry அஜய். I don't know how to tell you but I have to say this. உங்களுக்கு வேலை போச்சு. recession timeல இப்படி தான்...." அவருக்கு கஷ்டமாய் போனது.

இடி விழுந்ததுபோல் நின்றேன்! ஏன்? எப்படி? எதனால்? ஏன் நான்? என்று கேள்விகள் மனதில் ஓடின ஆனால் அவரிடம் கேட்கவில்லை. கேட்க சக்தி இல்லை. உடலில் வலிமை இழந்ததுபோல் உணர்ந்தேன். மேனேஜர் ஆறுதல் வார்த்தை பேசினார். எதுவும் என் காதுகளில் விழவில்லை. நல்ல போஸ்ட்டுல தானே இருந்தேன். ஏன் நான்? ஏன் நான்?

கல்யாணம் வேற இன்னும் 4 மாசத்துல நடக்க போகுது... இப்போ என் நிலைமை என்ன? அஞ்சலி வீட்டுல என்ன சொல்லுவாங்க. அஞ்சலி என்ன நினைப்பா? வேலை போனது, அஞ்சலி ஃபோன் செய்யாமல் இருந்தது- எனக்கு தலையே சுற்றியது. கோபம் வந்தது எனக்கு. உடனே அஞ்சலிக்கு ஃபோன் செய்தேன். இந்த முறை அவள் பேசினாள்!

அவள், "ஹாலோ!"

நான், " அஞ்சலி. உனக்கு ஒரு சந்தோஷமான செய்தி. எனக்கு வேலை போச்சு. இப்போ உன் வீட்டுல சொல்லிடு- மாப்பிள்ளைக்கு வேல இல்ல. அவன் ஒரு வேஸ்ட் fellow. உனக்கு பிடிக்கலனு சொல்லிடு. are you happy? இப்போ நிம்மதியா இருக்கா உனக்கு? thanks. bye."

ஃபோன்னை கட் செய்தேன். கோபத்தில் பேசியது கொஞ்ச நேரம் கழித்து தான் முட்டாள்தனமாக தோன்றியது. 10 நிமிடங்கள் கழித்து அவளே ஃபோன் செய்தாள்.

அஞ்சலி, " are you okay? where are you now?" அவள் அமைதியாய் பேசினாள். அவள் அமைதி என் முட்டாள்தனத்தை மறுபடியும் ஞாபகப்படுத்தியது. நான் சாந்தமாய், "ம்ம்... at my office."

(என் ஆபிஸ் எதிரில் உள்ள காபி ஷாப்பில்)

"என்ன ஆச்சு?" அஞ்சலி ஆறுதலாய் கேட்டாள்.

"தெரியல்ல..." ஒற்றை வார்த்தைகளுக்கு மேல் என்னால் பதில் சொல்ல முடியவில்லை.

"எத்தனையோ plans சொல்லியிருப்பேன். i think this is the best plan that god has created for you. உன் வீட்டுல சொல்லிடு. உனக்கு இனிமே problem இருக்காது."

அவள், "என்ன problem இருக்காது?" நான் சொன்னது புரியாததுபோல் கேட்டாள்.

"அஞ்சலி, உனக்கு என்னைய பிடிக்கல. இந்த கல்யாணத்தலயும் இஷ்டம் இல்ல. எனக்கு தெரியும். இப்ப ஒரு நல்ல விஷயம் நடந்து இருக்கு. மாப்பிள்ள பிடிக்காம போறதுக்கு ஒரு நல்ல காரணம் கிடைச்சு இருக்கு. make use of it. be happy anjali. வேல இல்லாதவன எப்படி கல்யாணம் பண்ணிப்ப நீ? உன் medicure, pedicure, massage, spa, entertainment செலவுகளுக்கு எல்லாம் என்னால ஒன்னும் கொடுக்க முடியாது. எல்லாத்தையும் உன் வீட்டுல சொல்லிடு. you are escaped from this, anjali." மனதில் பட்டதை கொட்டினேன்.

அவள் அமைதியாய், " பரவாயில்ல nail cutter வச்சு சமாளிச்சுக்கிறேன்." புதிர் போடுவது போல் பேசினாள். எனக்கு சுத்தமாய் ஒன்னும் புரியவில்லை.

தொடர்ந்தாள் அஞ்சலி, " i think i like you."

(பகுதி 4)

16 comments:

angel said...

me the 1sr

Dev said...

Hey, good one ya........I just love the way you narrate the story.

Harini said...

Good going...

Anonymous said...

nice narrating.... keep it up.....
Kuna

Karthik said...

make the next one come soon! this part is superb! :)

gils said...

aiaiao....sathiyamaanga..ennoda lifela nakakka koodia incidents mathiriye iruku!!!! chaancela...loved every bit of this..adutha parta seekrama podunga..ilaati enaku mailla thatti vidunga

FunScribbler said...

@angel, deva,harini,anonymous,karthik, gils,

thanks people!

@gils, hey suda suda i will post the next part very soon. :))

Thilak said...

next psrt seekiram podungappa...
(almost I forgot the story & I have to read all the parts again )...

I like the way u write the story...
ur writing style & cable sankar's writing style looks are almost identical ( I mean the narrating style both of them looks like screenplay).

Keep writing...

ajay said...

unga veedu enga irukunu sonna vandhu ukandhu adutha part kadha keka nan ready.... mmm sekiram post panunga..

Elam said...

Really its a good narration.. waiting for next part.

Elam said...

Really its a good narration ... waiting for next part.

ஜீவன்பென்னி said...

செம ஸ்பீடு,அடுத்ததுக்கு வேய்ட்டிங்.

Venkatesh R said...

நல்ல எழுத்துநடை. அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்.

FunScribbler said...

@thilak,

//ur writing style & cable sankar's writing style looks are almost identical ( I mean the narrating style both of them looks like screenplay).//

thanks for the support. cable sankar anna is a great writer! i'm still a kid, thilak!:)

FunScribbler said...

@ajay, you need to travel abit to come to my hse (i am in singapore dude)

@elam, jeevan, venkatesh: thanks dude:))

Jay said...

அருமை நண்பரே. தொடர்ந்து எழுதுங்க தலை.

I just can't wait for the next episode.. just love it.. felt it as i'm the hero of the story..

just love it man.. keep up the good work.