Jan 1, 2015

ஜஸ்ட் சும்மா (1/1/15)

 
தூணை ஓடி போய் கட்டிபிடிக்கும் சிவாஜி போல தான், நானும் என் ப்ளாக்கை கட்டிபிடிக்க வேண்டும் என தோன்றுகிறது. கிட்டதட்ட 2 மாசம் ஆச்சு, இந்த பக்கம் வந்து!!

தினமும் எழுத துடிக்கும் எனக்கு ஏன் பழைய மாதிரி எழுத வர மாட்டேங்குது ஆராய்ச்சி பண்ணி பார்த்தேன். மூன்று காரணங்கள் கண்டுபிடிச்சேன்.

காரணம் 1) பேஸ் புக்
காரணம் 2) பேஸ் புக்
காரணம் 3) பேஸ் புக்

தக்காளி, பேஸ் புக் விட்டு வந்துடுலாம்னு பார்த்தா, கத்திய ஒரு தடவ எடுத்துட்டோம் அத தூக்கி போட முடியாது. வேலு நாய்க்கர் மாதிரி அதேலேய அழிஞ்சிடுவோம். அப்படி, பேஸ் புக் எங் ப்ளாக் எழுதும் பழக்கத்தை அழிச்சுடுமோனு ஒரு சின்ன பயம் இருக்கு!!

இருந்தாலும், எழுதுவேன்!!

******************************************************************************

புது வருடம் அன்று ஒன்றை செய்தால், தொடர்ந்து அந்த ஆண்டில் அப்பழக்கம் தொடரும் என்று பெரியவங்க சொல்லி இருக்காங்க!! ஆக, இன்று நல்ல கோழி பிரியாணி அடித்து, நிம்மதியான தூக்கம் போட்டு, உடற்பயிற்சி செய்து, ப்ளாக் எழுதி இருக்கேன்.

பார்ப்போம்..... பெரியவங்க சொல்வது சரியா இல்லையானு!

**********************************************************************

பீகே- படம் பார்த்தேன்! எனக்கு ரொம்ப பிடித்த படம். வாய்ப்பு இருந்தால், இப்படி ஒரு படத்தை எடுக்க வேண்டும், வீட்டில் உள்ளவர்கள் என்னை வெளியே தூக்கி போட்டாலும் பரவாயில்ல. ஹிஹிஹி.....

*************************************************************

இந்த ஹிப் ஆப் தமிழா செம்ம பாட்டு போடுறாருப்பா!!

1 comment:

ANaND said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ...

உங்கள் சபதங்கல் நிறைவேறவும் வாழ்த்துகள் ..!