Jun 23, 2009

daddy mummy வீட்டில் இல்ல (series 2)- பகுதி 5

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4

"ஓ...நோ!!" கத்தினாள் சுதா. அவள் சத்தம் போட்டதை கேட்டு விஜியும் கலாவும் தலைதெறிக்க ஓடி வந்தனர். நொறுங்கிய கண்ணாடி துண்டுகளை பார்த்தனர் நால்வரும். என்ன செய்வது என்று தெரியவில்லை. அதன் விலையை பார்த்தனர். சசிக்கு மயக்கம் வந்துவிட்டது.

விஜி, "ஒரு restaurant இருந்தாலும் பரவாயில்ல...காசு இல்லன்னா மாவு ஆட்ட சொல்வாங்க.....இங்க என்னய்யா பண்ண சொல்வாங்க?"

கலா, " இந்த கடை முதலாளி முன்னாடி நின்னு record dance ஆட சொல்வாங்க...எனக்கு வாய்ல நல்லா வருது. இந்த கழுதைங்க கையையும் காலையும் வச்சுகிட்டு சும்மா போக வேண்டியது தானே? ரெண்டு வயசு பிள்ளைங்கன்னு நினைப்பு இதுங்களுக்கு!" என்று சுதாவையும் சசியையும் கிண்டல் அடித்தாள். மற்ற மூவரும் பயத்தால் நடுங்க, கலா மட்டும் எப்போதும் போலவே கூலாக கலயாத்து கொண்டிருந்தாள்.

"ஹாஹா...முதல தடவ மாட்டிகிட்டபோது ஒரு சித்தார்த் நம்ம கதைக்குள்ள வந்தான்...இப்போ எந்த ஜெயம் ரவி வர போறானோ?" என்று சிரித்தாள் கலா.

"be serious கலா...எனக்கு பயமா இருக்கு!" என்று அழுதாள் சசி.

கடையின் நிர்வாகி ஓடி வந்தார். நால்வரையும் பார்த்தார்.

"இந்த கண்ணாடி பீஸ் என்ன விலை தெரியுமா?" என்று நிர்வாகிக்கு கோபம் வந்தது.

"excuse me mr....." என்ற கலா, அவர் சட்டை பையிலிருந்த பெயர் அட்டையை பார்த்து,

"mr kanthaa saamy..." என கந்தசாமி என்னும் பெயரை பிரிட்டீஷ் இளவரசி எவ்வாறு பேசுவாங்களோ அவ்வாறு பேசினாள்.

ஆங்கில கலந்த தமிழில், கலா "எங்க daddy யாரு தெரியுமா? mr chandragopal தெரியுமா?" என்றாள்.

அவள் பேசிய விதமும் விரல்களை நீட்டி பேசிய விதமும் நிர்வாகியை கொஞ்சம் பயத்தால் ஆட வைத்தது.

"மிஸ்டர் சந்திர கோபால்... தெரியாதே?" என்றார்.

"அப்போ நல்லதா போச்சு...." முணுமுணுத்தாள் கலா.

"அவர் எவ்வளவு பெரிய ஆளு தெரியுமா, you damn it!" கண்ணாடி துண்டுகளை மேலும் உதைத்தாள்.

கலாவின் தசாவதாரத்தை கண்டு ரசித்து கொண்டிருந்தனர் மற்ற மூவரும்.

"ஆறு அடி இருப்பாரா?" என்றார் நிர்வாகி.

"ஏய் ஏய்....you....kidding with me? you....." என்று கோபம் வருவதுபோல் நடித்தவள் தனது கைபேசியை எடுத்து ஏதோ ஒரு நம்பருக்கு டயல் செய்தாள். அது ஏதோ ஒரு நாட்டிற்கு connect ஆனது.

"எங்க daddy நினைச்சாருன்னா, இந்த மாதிரி 100 கடை வாங்க முடியும்! mind it!" என்று நிர்வாகியிடம் பேசிவிட்டு கைபேசியை தன் காதில் வைத்தாள்.

"daddy, you know what has happened...." என்றவள் ரொம்ப நேரம் புலம்பி தீர்த்தாள். இதை பார்த்து கொண்டிருந்த நிர்வாகி உண்மை என்று பயந்துவிட்டான். பேசி முடித்தவள் நிர்வாகியிடம் கைபேசியை நீட்டி,

"இந்த மேன்...my dad wants to talk to you."

கைகள் சற்று நடுங்கியவாறு நிர்வாகி, "ஹாலோ சார்....." என்று இழுத்தான்.
உடனே அவன் கலாவிடம்,

"அவர் என்ன சொல்றாருன்னு தெரியல்ல....எந்த ஊர்ல இருக்காரு?"

கலா, "he is talking from dubai."

கலா கைபேசியை பிடுங்கி தன் காதில் மீண்டும் வைத்து பேசினாள், "ok dad...ok..sure..no problem...it is ok dad. i will take care. no no...you need not come here!"

பேசி முடித்தவள் நிர்வாகியிடம், "இங்க பாரு மேன்...என் அப்பாவுக்கு ரொம்ப கோபம் வந்துடுச்சு...இங்க உடனே helicopterல வரேன்னு சொன்னாரு. நான் தான் வேண்டாம்னு சொல்லியிருக்கேன். இந்த கண்ணாடி பீசுக்கு நான் pay பண்ணுறேன். do you accept credit card?"

"நோ மேடம். system out of order. so cash only."

"damn it....என்ன கடை வச்சு நடத்துற...." என்றவள் மறுபடியும் கைபேசியை எடுத்து பேசினாள். அப்போது தூரத்தில் இரண்டு துபாய் ஷேக்குகள் கடை வீதியை சுற்றி பார்த்து கொண்டிருந்தனர்.

கலா நிர்வாகியிடம், "பணத்த உடனே கொண்டு வர சொல்லிட்டேன். என் அப்பாவோட assistants தான் அவங்க..." என்றவள் அந்த இரண்டு ஷேக்குகளை பார்த்து கை நீட்டி காட்டினாள்.

"அவங்ககிட்ட பணத்த வாங்கிக்கோ மேன்....." என்றவள் நைஸா நால்வரையும் கூட்டி கொண்டு வெளியே வந்துவிட்டாள். சற்று தூரம் நடந்தவர்கள் பின்னர் ஓட ஆரம்பித்தனர். ரொம்ப தூரம் ஓடினர். கால் வலி ஏற்பட ஒரு juice கடையில் juice வாங்கி கொண்டனர்.

"எனக்கு ஆபிள் ஜுஸ் வேணும்..." என்றாள் சுதா.

"இவ கெட்ட கேட்டுக்கு ஆபிள் ஜுஸா..." என்று கையில் இருந்த பையை கொண்டு சுதாவின் மண்டையில் அடித்தாள்.

"யாரு மேன் துபாய்லேந்து பேசினா...உனக்கு ஆஸ்கார் அவார்ட் கொடுக்கலாம் மச்சி." என்றாள் விஜி.

"யாருக்கு தெரியும்...ஏதோ ஒரு நம்பர்...அது எங்கேயோ போச்சு. arabic language மாதிரி பேசினாங்க....அதான் துபாய்ன்னு சொல்லிட்டேன். வாழ்க துபாய்!" என்றால் கலா ஜுஸை குடித்து கொண்டே.

"thanks கலா! நீ இல்லேன்னா...." என்றாள் சசி.

"கண்டிப்பா record dance தான் ஆடி இருக்கோனும் ...." என்று நக்கல் அடித்தாள் கலா.

மற்றவர்கள் சிரித்து பேசிகொண்டிருந்த வேளை சுதா தனது பையில் ஏதோ ஒன்றை தீவிரமாக தேடி கொண்டிருந்தாள். திடீரென்று கத்த ஆரம்பித்தாள், "oh shit... i lost my handphone!!!"
( பகுதி 6)

6 comments:

மயாதி said...

இந்த வயசிலேயே தொடர் எழுதும் துணிச்சல்?

நீங்க பெரிய ஆளுங்க...

அது சரி எப்படி தடை போடா யாரும் இல்லை என்று சொல்வீர்கள் /?
பிச்சு புடுவன் பிச்சு...
ஒழுங்கா படிங்க பார்ப்பம்...

அப்படியே தொடர்ந்தும் எழுதுங்க

Gajani said...

superb superb superb ......................

ivingobi said...

amma thaaye sathiyama solluraen.....
nee engayoooooooooooooooooooooooooooooo phoitta kalakku.....
nijamana santhosathudan vaazhthukkalum.....

ivingobi said...

மரியாதையா ஓட்டு போட்டு போங்க..

Poattachu poattachu....

gils said...

wow.. :) enaku apdiye shriya pesara mathiri irunthichi intha kadai scene :D semma flow of dialog :) adutha parta seekrama podunga..ilati maila first copy anupinalum ok :)

Karthik said...

ippa padichitten. :)))