Mar 24, 2007

இந்தியா byebye to உலக கோப்பை 2007!

நேற்று நடந்த போட்டியில் 'அதிரடியாக' தோற்று வீடு கிளம்புகிறது நமது இந்திய சிங்கங்கள்!! ஸ்ரீலங்கா அணி பிரமதமாக ஆடி இந்தியாவை வீழ்த்தி விலாசியது. நான் என்னத்த சொல்ல.... கொஞ்சம் வயத்தெறிச்சலாகவும் கோபமாகவும் இருக்கிறது. இப்படி மோசமா விளையாடுவார்கள் என்று சற்றே நினைக்கவில்லை!

அந்த முதல் ஆட்டக்காரர் உத்தப்பா(இந்திய அணி) 21 வயசுதான் நினைக்கிறேன். அனுபவம் இல்லாதவர்! ரொம்ப அவசரப்பட்டு லாவகமாக பந்தை 'அழகாக' ஸ்ரீலங்கா பந்து வீச்சாளரிடம் கொடுத்து நமக்கு எல்லாம் 'அல்வா' கொடுத்தார். அப்பவே எனக்கு பயம் வந்துவிட்டது. நம்ம ஆளுங்க ஏதோ தப்பு பண்ண போதுங்கனு. தெரியாமல் செய்தால் தப்பு, தெரிந்து செய்தால் திமிரு! இதில் இவர்கள் எந்த வகை என்று தெரியவில்லை.

அப்பரம் கங்குலி, சிறப்பாக ஆரம்பித்தாலும், அவரும் அவசரப்பட்டுவிட்டார். ஸ்ரீலங்காவின் முரளிதரன் அற்புதமாய் பந்தை பிடிக்க கங்குலியும் போய்விட்டார். அப்போது பயம் உச்சிக்கு போய்விட்டது. அடுத்து ஷேவாக், இவர் வந்து சில சிக்ஸர்களையும் பவ்ண்டிரிகளையும் அடிக்க ஆரம்பித்தார். சற்று நம்பிக்கை வந்தது.

அதுக்கு அப்பரம் ஒன்னு நடந்தது பாருங்க. எனக்கு ரத்த கொதிப்பே வந்துட்டு. நம்ம சச்சின் வந்தார். ஆரம்பிக்க போவதற்குமுன் தரையை இரண்டு தட்டு தட்டுனாரு. பேட்டை சரி செஞ்சாரு. சுற்றும் முற்றிலும் பார்த்தாரு. பந்து வீசப்பட்டது. பந்து 'ஸ்டமை' அடிக்க, சச்சின் 'டக்' ஔட்டு ஆகி வெளியேற்றப்பட்டார். இதுக்கு அப்பரம் இருந்த நம்பிக்கை எல்லாம் சுக்குநூறாகி போய்விட்டது.

இதுங்க தேராதுங்கனு முடிவுக்கு வந்துவிட்டேன். ஒன்னு இல்ல... ஒவ்வொரு பந்துக்கும் ஒரு ரன் எடுத்து நிதானமாக விளையாடி இருந்தாலே போதும். இப்ப என்ன பண்ணுறது.மிஞ்சியது அவமானம் தான்!! எல்லாம் போட்டிகளிலும் வெல்வது என்பது கடினம்தான். மற்ற சாதாரண போட்டி என்றால் பரவாயில்ல. இது உலக கிண்ணம் போட்டி! இதுல கண்டிப்பா ஜெயித்தே இருக்கவேண்டும். இந்தியா அணியிடம் திறமை இருக்கு. எத்தனை திறமை இருந்தாலம் அதை சரியான நேரத்தில் பயன்படுத்தி இருக்கவேண்டும்.

பாருங்க, புதிதாக வந்த சில அணிகள் அப்படிதான் விளையாடுறாங்க. பார்ப்பதற்கு அவ்வளவு பெருமையா இருக்கு. நம்ம ஆளுங்க.. எல்லாத்தையும் தொலைத்து நிற்கிறார்கள். சொல்வது சுலபம், செய்வது கடினம். எனக்கும் தெரியும்! ஆனா இப்படிப்பட்ட போட்டிகளில் என்னதான் நடந்தாலும் விளையாட்டில் கவனம் வேண்டும்!!! உலகமே இப்போது இந்திய அணியை பார்த்து கைகொட்டி சிரிக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டார்கள்.

ஆமா நம்ம ஆளுங்க எங்க விளையாட்டு பயிற்சி செய்ய நேரம் இருக்கு. விளம்பர படங்களில் நடிக்கவே நேரம் சரியா இருக்கும் போல. காலையில் பயன்படுத்தும் பல்பொடி முதல் இரவு பயன்படுத்தும் கொசுவத்தி வரை எல்லா விளம்பரங்களில் நம்ம இந்திய அணி வீரர்கள்தான். விளையாடுவதில் விட இதில்தான் ஆர்வம் அதிகம் போல. 1983 ஆம் ஆண்டு நமக்கு பெருமை வந்தது போல இந்த தடவையும் பெருமை சேர்ப்பார்கள் என்று நினைத்தேன். ஆனா, அவர்கள் சேர்த்துகொண்டதோ பல கோடி இந்தியர்களின் வயத்தெறிச்சலை மட்டும்தான்.

இனி இவர்களை பற்றி சொல்ல ஒன்னுமே இல்ல. தனக்காக விளையாடாமல் தன் நாட்டிற்காக விளையாடி இருந்திருந்தாலே போதும். வெற்றி பெற்றிருக்கலாம்! என்னொரு கவ்வாஸ்கர் வருவாரா? இன்னொரு கபில் தேவ் வருவாரா? பதிலாக்காக காத்திருக்க வேண்டும் 2011 ஆம் ஆண்டு அடுத்த உலக கோப்பை வரை.

இதுல ஒரே ஒரு ஆறுதல்... என்னதான் இந்தியாவிற்கு பாகிஸ்தானுக்கும் சண்டை சச்சரவு இருந்தாலும். துன்பத்தில் இரண்டுமே ஒன்னு சேர்ந்துட்டாங்க!