Oct 21, 2009

நான் ரொம்ம்ம்ப பிஸி

ஒரு காலத்துல தினமும் 2 பதிவுகள் போட்டு கொண்டிருந்தேன். இப்ப பத்து நாளைக்கு ஒரு தடவ, ஒரு மாசத்துக்கு ஒரு தடவன்னு நிலைமை மாறிபோச்சு. காலேஜ் என்னை வாட்டி எடுக்குது! முடியல சாமி! இருந்தாலும் இத இப்பவே எஞ்ஜாய் பண்ணனும். வேலைக்கு போனா.... அதுக்கு அப்பரம் எதுவுமே பண்ண முடியாது! :)

என்ன எழுதுறது...ஒரு ஐடியாவும் வரமாட்டேங்குது. முன்பெல்லாம் எத பாத்தாலும் 'இத பத்தி ப்ளாக்ல எழுதனும்'னு தோணும். இப்ப என் சொந்த வலைப்பூவ பாத்தாகூட ஒரு மண்ணும் மண்டைக்கு வர மாட்டேங்குது. வயசாச்சுலே. அப்படி என்ன வயசுனு கேட்குறீங்களா? இப்ப தான் எல்கேஜி முடிஞ்சு யூ கே ஜி போறேன்.

இன்னும் 2 வாரத்துல இந்த காலேஜ் செம்ஸ்ட்டர் முடிஞ்சு விடும். அதுக்கு அப்பரம் இந்த 'வேட்டைக்காரி' முழு வீச்சில் வருவாள்! அது வரைக்கும் கொஞ்ச மந்தமாதா இருக்கும்னு வானிலை ஆய்வுகள் சொல்லுது!ஹிஹிஹி....

Oct 9, 2009

தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்-8

தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்- curtis stone and gerard butler

curtis stone. இப்போது இவர் hallmark channelலில் take home chef எனும் நிகழ்ச்சியை நடத்திவருகிறார். சூப்ப்ப்ப்ப்ரா சமையல் செய்வார்.ஆஸ்திரேலியாவில் பிறந்தவர். பிடித்த அம்சம்- பேசும் விதம் + சிரிப்பு

அடுத்தது ஹாலிவுட் நடிகர் gerard butler. ps i love you, the ugly truth போன்ற படங்களில் நடித்துள்ளார். தாடி வைத்திருக்கும்போது அநியாயத்திற்கு அழகாய் தெரிவார்! பிடித்த அம்சம்- கண்கள்(ஹிஹி...)


முந்தைய பட்டியல்

Oct 7, 2009

wake up sid- இன்னும் தூங்குகிறான்

கரண் ஜோஹர் தயாரிப்பில் அயன் முகர்ஜி (புதிய இயக்குனர், 25 வயசு தான்) இயக்கிய 'wake up sid' என்னும் இந்தி படத்தை பார்த்தேன். மற்ற விமர்சனங்களை படித்து ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப எதிர்பார்த்தேன். ஆனால் ஓரளவுக்கு தான் என்னை மகிழ்வித்தது.

நமது டைரியை படிப்பதுபோல் ஒரு உணர்வு கண்டிப்பா வரும் படத்தை பார்த்தால். பாடல்கள் சுமார் ரகம். 'இக்குதாரா' என்னும் பாடல் எனக்கு பிடித்து இருந்தது. திரைக்கதை கொஞ்சம் மெதுவாகவே செல்வது கொஞ்சம் போர் அடித்தது. இந்த மாதிரி படங்களில் நகைச்சுவை வசனங்கள் பட்டையை கிளப்பியிருக்க வேண்டும். ஆனால், இப்படத்தில் அது அதிகமாய் இல்லை.

படத்தில் எனக்கு பிடித்தவை
1) ஹீரோயின் கொன்கோனா ஷர்மா. அவங்கள எனக்கு ரொம்ம்ம்ம்ப பிடிக்கும். இப்படத்தில் தனது வேலையை நன்றாகவே செய்து இருக்கிறார்.
2) கல்லூரி பரிட்சையில் கோட்டைவிட்டு வீடு திரும்பும் மகனிடம் அப்பா கத்துவது( ஏதோ எப்பவோ என் வாழ்க்கையில நடந்து சம்பவம் மாதிரியே இருந்துச்சு...ஹிஹிஹி)
3) மும்பை நகரத்தை வாழ்க்கையில் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என தூண்டிய விதம்.

திரைக்கதையில் வேகம், காட்சிகளில் ஆழம், பாடல்களில் இன்னும் விறுவிறுப்பை சேர்த்து இருந்தால் நல்லா இருந்திருக்கும். என்றாலும், கரண் ஜோஹர்க்காகவே தான் இப்படத்தை பார்த்தேன். பைசா வசூல் என கேள்விப்பட்டேன். எனக்கு மகிழ்ச்சியே.

wake up sid- என் வீட்டு அலாரத்திற்கு பிடிக்கவில்லை!

Oct 2, 2009

ஜஸ்ட் சும்மா(2/10/09)

இந்த வாரம் லீவு. ஆக, நிறைய படங்கள் பார்க்க வாய்ப்பு இருந்தது. the ugly truth, whatever works, he's just not that int you, PS. i love you ஆகிய படங்களை பார்த்தேன். முதல் இரண்டும் தற்போது ஓடிகொண்டிருக்கும் படங்கள். மற்றவற்றை டிவிடியில் பார்த்தேன். இதில் ரொம்ப பிடித்த படம் the ugly truth. ரொம்ப சிரிப்பா இருந்துச்சு!!
பார்த்த அனைத்துமே காமெடி கலந்த காதல் கதைகள் தான்!

the ugly truth மற்றும் PS i love you படங்களில் நடித்த gerard butlerயை ரொம்ம்ம்ம்ம்ம்ப பிடிச்சு போச்சு!!!! ஹிஹி....

------------------------------------------------------------------------------------------

ஜக்குபாய் மற்றும் வேட்டைக்காரன் பாடல்களை கேட்டேன்.

வேட்டைக்காரன்: விஜய் ப்ளஸ் விஜய் ஆண்டனி....கேட்கவா வேண்டும்! ஆட்டம் போட வைக்கும் பாடல்கள். அதிரடியான வரிகள். என் அக்கா பாடலை கேட்டுவிட்டு சிரிச்சா(அவள் ஒரு அஜித் ரசிகை).... என்கிட்ட வந்து, " நான் அடிச்சா தாங்க மாட்டே...." பாடலை கேட்க சொன்னாள். அப்போது தான் முதன் முதலாக பாடலை கேட்டேன். எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. இப்பாடல் காட்சியில் விஜயின் மகன் ஆட போகிறான் என்ற தகவல் கொஞ்ச நாளைக்கு முன்னாடி வந்துச்சு!

புலி உறும்புது பாடலில் ஒரு வரி வரும், "இவன் வரலாற்றை மாற்ற போகும் வருங்காலம் டா"

ம்ம்ம்.....ரொம்ப நல்லா இருந்துச்சு. (என்னைய மாதிரி தீவிரமான ரசிகர்கள் இருக்கும்வரை விஜய் என்ன தான் மொக்கை படங்களை கொடுத்தாலும் டாப்ல தான் இருப்பார்.... உடல் மண்ணுக்கு உயிர் விஜய்க்கு!- அகில உலக விஜய் ரசிகர் மன்றம்)

அடுத்து, ஜக்குபாய் பாடல்கள். இசை அமைத்தவர் எங்க ஊரு ஆளுங்க. சிங்கப்பூரை சேர்ந்தவர்! இத சொல்லும்போதே எனக்கு அம்புட்டு பெருமையா இருக்கு!!! பெயர் ரஃபி. ஏ ஆர் ரகுமானிடம் 10 வருஷமா assistantஆ வேலை பார்த்தவர். ரொம்ப அமைதியான ஒரு நபர் ரஃபி. இங்க நிறைய டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார். அவருடைய 4 தம்பிகளும் இசையில் ஆர்வம் உடையவர்களும்கூட.

முதல் படம் இது அவருக்கு. பெரிய ஹிட் பாடல்கள் இல்லை என்றாலும், ஆப்பிள் லெப்டாப் என்னும் பாடல் கொஞ்ச நல்லா இருக்கு!! கேட்டு பாருங்க.
-----------------------------------------------------------------------------------

oprah winfrey நிகழ்ச்சியில் அபிஷேக் பச்சனும் ஜஸும் கலந்து கொண்டனர். ஹாஹா....ரொம்ப வயதான தம்பதியினர் மாதிரி தெரியுறாங்க....ஹிஹி...நிகழ்ச்சியை பார்க்க இங்க செல்லவும்

http://www.youtube.com/watch?v=_lzu4wYU7Cc&feature=related

Oct 1, 2009

அன்பே, உன்னால் மனம் crazy-4

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் வரை இருவருமே பேசிகொள்ளவில்லை. உள்ளூர இருந்த துயரத்தை இருவருமே காட்டிகொள்ளவில்லை. பயம், வருத்தம், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தனர் இருவரும். வரும் வழியில் விஷ்ணுவிற்கு அடிக்கடி ஆபிஸிருந்து ஃபோன் வந்து கொண்டிருந்தது.

"விஷ்ணு, நம்ம ஹேட் ஆபிஸ் வரைக்கும் போகனும். டில்லிக்கு இன்னிக்கே ப்ளைட் புக் பண்ணவா? சாரி...உங்க வீக்கெண்ட spoil பண்ணிட்டேனா? சாரி...ஆனா இது கொஞ்சம் அவசரம். இந்த வேலைய முடிச்சுட்டு நீங்க இன்னும் நாலு நாளு extra லீவு எடுத்துக்குங்க...பட் இன்னிக்க மட்டும்...கொஞ்சம்....." மறுமுனையில் இருந்த மேனேஜர் வற்புறத்தினார்.

கவலையில் மூழ்கி கிடந்த விஷ்ணு அமைதியாய், "சாரி சார். என்னால போக முடியாது. வேற யாராச்சயும் பாத்துக்குங்க." சொல்லிவிட்டு ஃபோனை வைத்துவிட்டார். அதை கவனித்தாள் தனுஜா. சிறிது நேரம் கழித்து, அதே ஆபிஸர் அதே வேண்டுகோளுடன். ஆனால், எதற்கும் இணங்கவில்லை விஷ்ணு.

இந்த நேரத்தில் தனுஜாவை விட்டு போக அவனுக்கு மனம் வரவில்லை. எப்போதும் கலகலப்பாக இருக்கும் வீடு அன்று சோகபூமியாய் காட்சியளித்தது. தனுஜா படுக்கையில் படுத்து இருந்தாள். அவள் தேம்பி தேம்பி அழுதாள். விஷ்ணு என்ன செய்வது என்று தெரியாமல் சோபாவில் உட்கார்ந்து இருந்தான். மதிய வேளை ஆனது. மதிய உணவை தயாரிக்கும் மனநிலையில் யாரும் இல்லை.

கொஞ்ச நேரம் கழித்து விஷ்ணு தனுஜாவை பார்க்க சென்றான். அவள் அழுவதை கண்ட விஷ்ணு அவளது கன்னங்களில் வழிந்த கண்ணீரை துடைத்தவாறு, "அழாத மா."

எழுந்து உட்கார்ந்த தனுஜா அவன் தோள்மீது சாய்ந்து கொண்டாள்.

"நீ எவ்வளவு ஆசையா இருந்த...ஐ எம் சாரி விஷ்ணு...." அவளால் அழுகையை நிறுத்த முடியவில்லை.

"நீ எதுக்குடா சாரிலாம் சொல்ற....இது யாருடைய தப்பும் கிடையாது. it meant to happen and it has happened. that's all. no one is to be blamed. ஆனா, நீ இப்படி இருக்குறது தான் எனக்கு ரொம்ப கவலையா இருக்கு. cheer up da....please...." என்று அவன் ஆறுதல் சொன்னாலும் அவன் குரலில் தெரிந்தது சோகம்.

மறுபடியும் ஃபோன் வந்தது விஷ்ணுவிற்கு. அப்போது அதை எடுத்து பேச முற்பட்ட விஷ்ணுவின் கைகளிலிருந்து தனுஜா ஃபோனை வாங்கி கொண்டாள். அவள் பேசினாள்,

"சொல்லுங்க சார்...ம்ம்ம்...சரி. no problem sir. he will be there in one hour. thanks."

"தனு, நான் போகலடா....உன்னைய இந்த நிலைமைல....no i don't want to go."

"listen vishnu, i'll be fine soon. நீ கவலை படாம போயிட்டு வா. பாவம்...ரொம்ப முக்கியமான வேலைன்னு சொல்றாருல.....நீ போ....i will be alright soon." கண்ணீர் துளிகளை துடைத்து கொண்டு புன்னகையித்தாள்.

"are you sure?"

ஆம் என்று தலையாட்டினாள். அவனுடைய பெட்டியை தயார் செய்தாள். வாசல் கதவு அருகே நின்று வழியனுப்பி வைத்த தனுஜாவின் நெற்றியில் ஆறுதல் முத்தம் ஒன்று கொடுத்தான் விஷ்ணு.

அரை மணி நேரம் கழித்து வாசல் மணி ஒலித்தது. தனுஜா கதவை திறந்தாள். ஆச்சிரியம்! அங்கே விஷ்ணு. முதன் முதலாக அவனது கண்கள் கலங்கி இருப்பதை கண்டாள். கலங்கிய கண்களுடன் விஷ்ணு, "உன்னைய விட்டு போக முடியலடா" என்று ஓடி வந்து கட்டிபிடித்தான் தனுஜாவை.

*******************************

"we'll be right back after a short commerical break." oprah winfrey சொன்னதை கேட்டு சுயநினைவுக்கு வந்தாள் தனுஜா. அச்சம்பவம் நடந்து ஓராண்டு ஆனதை நினைவு கூர்ந்தாள். அவர்களது நட்பு ஆரம்பித்த விதம், காதல் மலர்ந்த தருணம், கல்யாணம், அவனது சிரிப்பு, அவன் பொழிந்த பாசம், அன்பு. சண்டை போட்டு கொள்ளும் நேரங்களில்கூட அது சண்டையாக முடியாமல் ஏதேனும் காமெடியாகி பேசி முற்றுபுள்ளி வைக்கும் அவனது சாமர்த்தியம் என்று பலவற்றை எண்ணினாள். அவனை ரொம்ப 'மிஸ்' பண்ணுவதாக உணர்ந்தாள்.

திடீரென்று ஒரு சத்தம் அறையிலிருந்து. ஓடி சென்று பார்த்தாள். பொருட்கள் கீழே விழுந்துகிடக்க, அதன் அடியில் விஷ்ணு கிடப்பதை பார்த்து குபீர் என்று சிரித்தாள் தனுஜா.

"அடி பாவி, ஒருத்தன் இங்க விழுந்துகிடக்குறது உனக்கு காமெடியா இருக்கா...." என்றான் விஷ்ணு. பொருட்களை எடுத்து அதன் இடத்தில் வைத்தவாறு தனுஜா,

"நான் தான் சொன்னேன்ல.....ஐயாவுக்கு இந்த மாதிரி வேலையெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு."

"அது என்னமோ உண்மை தான் தனு. பாதி வேலை கூட முடியல. நீங்க பொண்ணுங்க எப்படி தான் எல்லாத்தையும் சரியா செய்றீங்களோ....உங்களுக்கு எல்லாம் தனித்தனியா சிலை வைக்கனும்!"

"இந்த ஐஸ் வச்சது போதும்....." சிரித்தாள் தனுஜா.

"i give up babe. இந்த challengeல நீ தான் ஜெயிச்ச...." விஷ்ணு சொல்ல அதற்கு தனுஜா,

"இல்ல டா...நீ தான் வின்னர்."

அவள் நினைவுகூர்ந்தவற்றை அவனிடம் சொன்னாள். இருவரும் பழைய நினைவுகளை பற்றி பேசி மகிழ்ந்தனர்.

"i think i really miss you." என்றாள்.

"ஹாஹா....thank god. finally you agreed!"

"so........." என்று இழுத்தாள் அவள். அவன் உதடுகள் அருகே சென்றது அவள் உதடுகள்.

"how about the report that you need to send?" என்றான் அவன்.

"all programs cancelled!" என்றாள்.

"you mean there is going to be something something today....."அவன் சிரித்தான்.

"not today....right now!" என்றவளின் உதடுகள் அவனது உதடுகளோடு lock ஆனது. அவ்வாறே அறை கதவும் lock ஆனது.

*PLEASE DO NOT DISTURB THEM*

***முற்றும்***