Apr 4, 2018

முதல் e-kavithai நூல்- கா _ _ Comes First.


ஏற்கனவே எழுதிய கவிதைகள் சிலதும், சமீபத்தில் எழுதியதையும், ஒன்றாக சேர்த்து உருவாக்கிய e-kavithai. படிச்சு பார்த்துட்டு சொல்லுங்க, மக்கா!

கீழே  உள்ள லிங்-கை அழுத்தவும்,

http://online.anyflip.com/hnnb/fguh/mobile/index.html#p=1

Apr 3, 2018

நீங்களும் உங்க காதல் காட்சிகளும்.

கோபம் வர மாதிரி காமெடி பண்றது இது தான் நினைக்குறேன். சமீபத்துல பார்த்த ரெண்டு மூனு காதல் காட்சிகள் பயங்கரமா முகம் சுளிக்க வச்சுட்டு. சூரி சொன்ன மாதிரி, "ஒரே irritatingஆ இருக்கு மாப்பிள்ள"

மதுரவீரன்.

ஷண்முக பாண்டியனும் ஹீரோயின் மீனாட்சியும் பேசிகிட்டு இருக்காங்க. பக்கத்துலே காமெடியன் பாலா. 

பாலா: ராத்திரி பூரா மீன் குழம்பு எப்படி செய்யுறது கத்துகிட்டு, உனக்கு மீன் குழம்பு வச்சு கொண்டு வந்திருக்கா டா. அப்படினு என்னான்னு தெரியுமா?

ஷண்முகம்: தெரியல.

பாலா: அவளுக்கு உன்ன புடிச்சு இருக்குடா. 

ஹீரோயின் ஹீரோவ பாக்க, ஹீரோ அவள பாக்க, பாட்டு ஆரம்பிக்க, நான் தூங்க.

no 1) ஒரு புள்ள ராத்திரி முழுக்க தூங்காம இருந்திருக்கு. அப்படினு அதுக்கு insomnia. தூங்கமின்மை பிரச்சனை இருக்கு. அந்த புள்ளைக்கு உடனடியா மருத்துவ உதவி தேவை.

no 2) மீன் குழம்பு வைக்கறதுக்கும் காதலுக்கும் என்ன சம்மந்தம்? அதுவும் ராத்திரி முழுக்க மீன் குழம்பு வச்சு இருக்குனு? மீன் என்னத்தாக்கு ஆகறது? அப்படி என்ன அவசரம்? உலக உணவு சங்கம் மீன் குழம்ப அடுத்த நாள் தடைகிட பண்ண போறாங்களாம் என்ன?

no 3) படம் முழுக்க, வேற எந்த ஒரு காதல் அறிகுறியும் காதலில் விழுவதற்கான காரணமோ அழுத்தமோ இல்ல. அப்பரம் என்ன ம....மீன் குழம்புக்குய்யா காதல் காட்சினு பெயர்ல கண்ராவித்தனத்த திணிக்கிறீங்க?

***************

படம்: இவன் தந்திரன்.

ஹீரோயின் வேலை இண்டர்வியு போறாங்க. அங்க ஆபிசர் ஒரு கேள்வி கேட்கறாங்க.

ஆபிசர்: 20 வருஷத்துல நீங்க என்னவா ஆகனும்னு ஆசைப்பட்றீங்க?

ஹீரோயின்: இடுப்புல மடிப்பு வேணும், ஒன்னு இரண்டு தல முடி நரைக்கனும்.... தனியா இருக்க பயப்படனும்....

காதல் வசனம் எழுத சொன்னா, ஏன் காட்டுமிராண்டி வசனம் எழுதுறீங்க?  
இது எந்த மாதிரியான அன்பு, காதல்?

எனக்கு கோபத்தைவிட பயம் தான் அதிகரித்தது. படத்துல சொன்னது ஒரு பொண்ணா இருந்தாலும், இதை யோசித்து (யோசிக்காமல்) எழுதினது ஒரு ஆண். அப்போ இவ்வளவு உங்க நினைப்பா? இத தான் நீங்க காதல்னு வகைப்படுத்துறீங்களா? 

ஆண், பெண் பேதம் வித்தியாசம் பேசல. இருந்தாலும் யோசிச்சு பாருங்க. இதுவே ஒரு ஹீரோ....

"எனக்கு முடியெல்லாம் கொட்டனும். சொட்டை விழனும். கிட்னில ரெண்டு கல்லு வரனும்..."

எப்படி பேசினா? காதல்னு ஒத்துப்போமா? அப்பரம் ஏன் ஹீரோயினுக்கு இந்த மாதிரி வசனம்?

படத்துல தண்ணி பாடல், பெண்கள இழிவுப்படுத்தும் பாடல் இப்போ கொஞ்சம் குறைஞ்சிகிட்டு வர நேரத்துல இந்த மாதிரி வசனம் பீதிய கிளப்புதய்யா! 

*******************