Dec 26, 2017

திரி- 2 (தொடர்கதை)


Coffee-vending machineல், இருக்கும் QR code ஒன்றை ஸ்கேன் செய்தான் சீலன் தனது கைபேசியிலுள்ள application மூலம். machineல் உள்ளே இருந்த காபி குவளைகள் பளிச்சென்று மின்னியது. தனக்கு ஒரு latte குவளையும், காபி மிஷினில் சாய்ந்தபடி நின்று கொண்டிருந்த யுவிக்கு ஒரு cappacino குவளையும் ஆர்டர் செய்ய பொத்தான்களை அழுத்த அவனது விரல்கள் முற்பட்டபோது, சீலனின் கையை தடுத்து, யுவி, “எனக்கு வேணாம். I will just share your latte.” என்றான்.

‘confirm’ ஆர்டர் பொத்தானை அழுத்துவதற்கு முன், யுவி, 25% sugar என்பதை அழுத்திவிட்டு சீலன் முகத்தைப் பார்த்து, “you’re getting old, pappu”
யுவி சொன்ன உண்மையை ஆமோதித்தவாறு, புன்னகையித்தான் ‘பப்பு’.

சூடான காபியை நுகர்ந்தபடியே சீலன், “ammamma embarrasses me all the time. எத்தன தடவ சொன்னாலும் கேட்க மாட்டேங்கறாங்க.” காபி குவளையை உதட்டில் வைத்து கொஞ்சம் குடித்துவிட்டு, யுவியிடம் குவளையை நீட்டினான். 

“இப்ப யாரு?”

“ஏதோ அபியாம்.”


குவளையை வாங்கி கொண்ட யுவி, சீலனின் மீசையில் லேசாய் படர்ந்த காபி சொட்டுக்களை துடைத்தவாறு, “அம்மம்மாகிட்ட சொல்லு, அபி வேணாம். யுவி போதும்னு.”

சின்னதாய் புன்னகையுடன் சீலன், “I wish it was that easy.”


கைபேசியில் குறுந்தகவலுக்கு பதில் அளித்தபடி காபி மிஷினை நோக்கி நடந்தவந்த ஜெகன், சீலனைப் பார்த்து ஆச்சிரியமாய், “ஹேய் சீலன், எப்படி இருக்கீங்க?”

“ஐ எம் குட். நீங்க ஜெகன்?”

“always fantastic.”

பக்கத்திலிருந்த யுவியை ஜெகனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான் சீலன். ஜெகனும் ஒரு காபியை வாங்கி கொண்டான். காற்பந்து, புது வருடம், கார் விலை ஆகியவற்றை பேசி கொண்டிருந்தனர் மூவரும். சீலன் முகத்தைக் கவனித்த ஜெகன்,

“you look dull. என்ன? பாட்டி… torture தாங்க முடியலயா?”

“பாட்டி சொன்னாங்களா?”

“சீலன், you are old enough to take your own decisions. உங்க மனசுக்கு என்ன தோணுதோ அத செய்ங்க, ரொம்பலாம் யோசிக்க கூடாது..” என்று சொல்லிவிட்டு ஜெகன் வாய்விட்டு சிரித்தான்.

சிரித்து கொண்டே ஜெகன், “hey why not both of you come join me tonight at dollar room. செம்மயா இருக்கும் பார்ட்டி இன்னிக்கு.” என்று சொல்லிவிட்டு கண் சிமிட்டி, “special party. You know what I mean, right?” 

பதில் புன்னகை வீசிய சீலன் வேண்டாம் என்று நாசுக்காய் சொன்னான்.

மறுபடியும் ‘mark boi’யிடமிருந்து அலைபேசி வர, கிளம்பினான் ஜெகன்.

காபியை உறுஞ்சி குடித்தான் யுவி. மழை வர அறிகுறிகளை காட்டிய வானம் கொஞ்சமாய் இருண்டது. சுற்றியிருந்த மரங்களிலிருந்த இலைகள் வீணையை மீட்டிய விரல்கள்போல் விளையாடி அசைய, குளிர் காற்று சீலனின் முகத்தில் வீச, 10-வினாடி நிம்மதியையும் அதே நேரத்தில் ஒருவித சஞ்சலத்தையும் தந்தது.
பெருமூச்சு விட்ட சீலன், “எல்லாத்தையும் சொல்லிடலாம் ஆனா….”

காபி குவளையை சீலனிடம் நீட்டிய யுவி, “அப்பரம் என்ன?”

“it’s going to hurt everyone.”

“இப்ப மட்டும் என்ன?”

முழித்தான் சீலன்.

“மத்தவங்க கஷ்டப்பட கூடாதுனு நீ உனையே கஷ்டப்படுத்திகிட்டு இருக்க, பப்பு. What is the worse that can happen?”

“இல்ல விடு யுவி. இத பத்தி நிறைய பேசியாச்சு. அப்பரம் கடைசில சண்டை தான் வரும்.”
“you are not true to yourself. And I am equally confused. என் நிலமல யோசிச்சு பாரு. What am I suppose to do?”

“எவ்வளவு வருஷம் ஆனாலும் வேட் பண்ணலாம்னு சொன்ன?”

மௌனம் பேசியது. மௌனம் மட்டுமே பேசியது. குடித்து முடித்துவிட்ட காபி குவளையை தூக்கி ஏறிந்தான் சீலன். வலது கட்டவிரலால் தனது இடது கைரேகை ஒவ்வொன்றாய் வருடி கொண்டிருந்தான் சீலன்.

“யுவி, நான் வெளியே வேட் பண்றேன். அம்மம்மா வந்தாங்கனா, கார்கிட்ட அழைச்சுட்டு வந்துரு.”

“why are you running away from the problem?”

யுவி அவ்வாறு கூறியதும், மனதில் எரிமலை வெடித்ததுபோல் இருந்தது. புருவங்களை சுருக்கி, சீலன் ஒரு குழப்ப பார்வை விட்டான். முறைத்தான். அவ்விடத்தைவிட்டு வேகமாய் நடந்தான். 


கோயிலிருந்து 300மீட்டர் தூரத்திலுள்ள ஒரு பஸ் டாப். காலியான இருக்கை இரண்டு இருந்தன. அதில் ஒன்றில் அமர்ந்து, தன் கோபத்தை தணிக்க கண்களை இறுக்க மூடி கொண்டு வாய் வழியாய் சுவாசத்தை உள் இழுத்தான்.

பின்தொடர்ந்த யுவி, “see, this is you. Always running away from the problem.”

 வேகமாய் நடந்து வந்த காரணத்தால் அவனுக்கு நெஞ்சு படபடக்க ஆரம்பித்தது என நினைத்து கொண்ட சீலனுக்கு உண்மையாகவே anxiety attack வந்தது. தனக்குள் என்ன நடக்கிறது என்று புரிந்தும் புரியாலும் மூச்சை இழுத்து பிடித்தான்.

யுவி, “கொஞ்சம் வருஷத்துக்கு முன்னாடி, நம்ம Canada போய் settle ஆகலாம்னு சொன்னே. அப்பரம்… வேணாம்ணு சொன்னேன்.” பேருந்து நிறத்து இடத்தில் கத்தினான். அவ்வழியே சென்ற ஒரு சீன கிழவி அவர்களை ஒரு மாதிரியாய் பார்த்தார்.

யோகா வகுப்பில் சொல்லி கொடுத்ததை அறைகுறையாக செய்ய தொடங்கினான் சீலன். யுவி கத்துவது கொஞ்சம் கேட்டது. மண்டையில் ஏதோ அலைகள் கல்லை இடிப்பதுபோல் உணர்ந்தான். இந்த மாதிரி நிறைய முறை anxiety attack வந்திருக்கிறது. அப்போதும் இதே மாதிரி ஏதேதோ செய்து மனதை ஒரு நிலைப்படுத்த முயற்சி செய்வான்.

“அப்பர்ம்…. இல்ல இங்க இருப்போம்….35 வயசு ஆன பிறகு ஒரு வீடு வாங்கலாம். ஒன்னா இருக்கலாம்னு சொன்னேன். இப்போ… back to square one.”

கண்களை திறந்தான். இருண்ட வானம் அப்படியே இருந்தது. தலை இன்னும் சுற்றி கொண்டிருந்தது. லேசாக வேர்வை. கட்டைவிரல் நடுங்கியது. தண்ணீர் குடித்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது. யுவி பையில் ஏதேனும் இருக்குமா என யுவியிடம், “யுவி, do you have water?”

யுவி காதில் எதுவும் விழவில்லை.

“சீலன், உனக்கு உங்க அப்பா அம்மா அம்மம்மா எல்லாரும் முக்கியம். But not me….”

இரு கரங்களாலும் தலையை பிடித்தவாறு கீழே குனிந்தான். வாந்தி வருவதுபோல் இருந்தாலும் சமாளித்து கொண்டான். மறுபடியும் யுவியிடம்,
“ யுவி, தண்ணி இருக்கா?”

யுவி எந்த பதிலும் சொல்லவில்லை.

யுவியை விட்டு விட்டு மெதுவாய் கார் நிறுத்திய இடத்திற்கு நடந்தான் சீலன். வாகன பின்புறத்தை பிடித்தவாறு நின்றுகொண்டிருந்தார் பாட்டி. பாட்டியை கண்டவுடன் இன்னும் மின்னல்வேகத்தில் கால் அடி வைத்தான் அவன் மயக்கதில் துடித்தாலும். கார் கதவை திறந்தவாறு, “அம்மம்மா, கோயிலுக்குள்ளயே வேட் பண்ண வேண்டியது தானே?”

“எங்க யுவி?”

“அவன் mrtல போறேனு சொல்லிட்டான்.”

“ஏண்டா கொஞ்சம் வேட் பண்ணி நமக்குகூட வந்துருக்கலாம்ல.”

கார் ஏசியை போட்டுவிட்டு, தண்ணீர் பாட்டிலிருந்து தண்ணீரை மடமடவென்று குடித்து முடித்தான். கைபேசியை chargeல் ஏற்றிவிட்டு, reverse gearயை மாற்றினான். வாகனம் பின்னாடி நகர, பாட்டி, “சீலா, அபி அம்மாகிட்ட பேசினே. கிறிஸ்துமஸ் லீவு அன்னிக்கு அபி free தான். நீ போய் பாத்து பேசுறீயா? நல்ல பொண்ணுடா.”

கைபேசி குறுந்தகவல் ஒலி எழுப்பியது. ஸ்கீரினை unlock செய்தபோது, ஒரு whatsapp செய்தி தெரிந்தது. யுவியிடமிருந்து,

“I don’t think this is working out. Again. Bye.”

தகவலை படித்துவிட்டு கைபேசியை chargeல் வைத்துவிட்டு, reverse gearலிருந்து ‘Drive’ gearக்கு மாற்றிவிட்டு, காரை வேகமாய் செலுத்தினான்.


*முற்றும்*

Dec 21, 2017

திரி -1 (தொடர்கதை)

வெள்ளை நிற சுவருக்கு பின்னால் செருப்பு வைக்கும் இடத்தில் மழைநீர் தேங்கி கிடந்ததது. அதனால் கோயில் வாசலிலே பல செருப்புகள் குவிந்து கிடந்தன. அங்கு ஒரு அறிவிப்பு பலகை 'இங்கே காலணிகளை வைக்க கூடாது'. அப்பலகையில் இன்னும் சில பிராத்தனை குறிப்புகள் இருந்தன- கோயிலில் யாரும் காலில் விழ கூடாது. கைபேசி சத்தம் கூடாது. காலணிகளை அணிந்து உள்ளே நுழைய கூடாது.

வியாழக்கிழமை காலை நேரம். கூட்டம் அவ்வளவாக இல்லை. ஆரஞ்சு வேட்டி யூனிவோமில் மூவர் அடங்கிய துப்பரவு குழு, இரவு முழுதும் எரிந்து தீர்ந்துபோன நெய் விளக்குகளையும் எள்ளு விளக்குகளையும் அகற்றி குப்பை தொட்டியில் போட்டு கொண்டிருந்தனர். கோயிலுக்கு பின்னால் சிறப்பு பூஜைக்காக வைக்கபட்டிருந்த மணல் சாக்குகள், உதிர்ந்து கிடந்த ரோஜா பூக்கள், மஞ்சள் கொத்துகள், பால் பாக்கெட் அட்டைகள், சாம்பிராணி டப்பா, பல வண்ண சேலைகள் அனைத்தையும் வேக வேகமாய் அப்புறப்படுத்தினர்.

கோயிலில் இருக்கும் சாமி சிலைகளைவிட அதிகமான எண்ணிக்கையில் கிடந்த சிவப்பு நிற நாற்காலிகள் கோயில் நுழைவு கதவுக்கு பின்னால் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதிலிருந்து 4 நாற்காலிகளை எடுத்து, விநாயகர் சிலைக்கு முன்னால் போட்டு உட்கார்ந்தனர் சில பாட்டிமார்கள். குருபெயர்ச்சிக்கு கொடுத்த முக்கியத்துவத்தை உடற்பயிற்சிக்கு கொடுத்திருந்தால், பளிங்கு தரையில் அமர்ந்திருக்கலாம்.

சாமி சிலை ஓரமாய் நின்று பேசிகொண்டிருந்தனர் பூசாரி இருவர். அவர்கள் கால்களில் விழுந்து வணங்கினர் ஒரு பெண்மணியும் அவரின் பதின்ம வயது மகளும் . விழுந்து எழுந்த பெண்மணி அர்ச்சனை சீட்டை பூசாரியிடம் நீட்டினார். பூசாரி, "ஹா...jasvin kaur...welcome welcome. good morning." அவரும் புன்னகையித்தபடி அர்ச்சனை சீட்டை வாங்கி மடித்து வைத்து கொண்டார்.
கோயிலை சுற்றி வந்த சீலன், பாட்டி கூட்டத்துக்கு அருகே சென்றான். அவன் பாட்டியிடம்,

அம்மம்மா, உங்களுக்கு வேற எதாச்சும் வேணுமா? பொங்கல் வச்சு இருக்காங்கனு நினைக்குறேன். நான் எடுத்துட்டு வரவா?"
பாட்டி ஆச்சிரியமாக, “அதுக்குள்ள சாமி கும்ட்டீயா?”

“எல்லாரும் நல்லா இருக்கனும். 3 words. இத சொல்ல எவ்வளவு நேரம் ஆகும்?”

“சீக்கிரம் கல்யாணம் ஆகனும்னு வேண்டிக்கோ,” என்று கூறிய பாட்டி ஒரு புகைப்படத்தை சீலன் கையில் திணித்தார்.

"சீலா, இந்த photo பாரு. அழகா இருக்காளே? பெர் அபி. 25 வயசு தான். உனக்கு ஒகே வா?"

"ப்ச்…..அம்மம்மா, don't do this to me." சற்று வெறுப்படைந்த சீலன் அப்புகைப்படத்தை பாட்டியிடமே திரும்பி கொடுத்தான். கூட்டம் நடுவே நாற்காலியில் உட்கார்ந்து இருந்த பாட்டியின் தோழி, சீலனின் கையை பிடித்து கொண்டார்.

சீலனின் கையை விடாமல், அப்பாட்டி, "உனக்கு வயசு 34 ஆச்சு. your ammama wants to see you get married. you don't do this to her anymore." என்று கண்டிப்புடன் கூற, இன்னொரு சிறுவயது பெண் புகைப்படத்தை எடுத்து கூட்டத்தில் உள்ள அனைவரும் தெரியுமாறு நீட்டினார். பாட்டிகள் அனைவரும், தங்களது உறவினர்களுக்குள் சந்தோஷமாக இருக்கும் கல்யாணம் ஆகாதவரிகளின் photo அல்லது ஜாதக விபரங்களை சேகரித்து ஒருத்தருக்கு ஒருத்தர் இப்படி பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தனர். தீவிரவாத ஒருங்கிணைப்புபோல் செயல்படும் இவர்களின் குறிக்கோள், அவர்கள் சுடுகாட்டை சுத்தி பார்ப்பதற்குள், யாருக்காவது சுயம்வரத்தை  செய்து வைத்துவிட வேண்டும் என்பதே.

தனது பாட்டியை கோயிலுக்கு அழைத்து வரவேண்டிய சூழல் ஏற்படும்போதெல்லாம் சீலனுக்கு இதே கதி தான்.

"ammama, I am going to get coffee." என்று சொல்லிவிட்டு தற்காலிகமாக தப்பித்து சென்றான் coffee vending machine அருகே.

அர்ச்சனை சீட்டு ஒன்றை வாங்கி கொண்டு கோயிலுக்குள் நுழைந்தார் வெள்ள வேட்டி பச்சை சட்டையுடன் ஜெகன்.

"வணக்கம் ஜெகன் சார். happy birthday." என்றார் பூசாரி.
வலது கையை மட்டும் சற்று தூக்கி  லேசாக அசைத்துவிட்டு ஜெகன் இரு கைகளையும் கூப்பி கண்களை மூடி சாமி கும்பிட, பூசாரி அர்ச்சனை செய்ய ஆரம்பித்தார். பக்தர்களுக்கு தீர்த்தமும் திருனீரும் கொடுக்கப்பட்டன. பூசாரி, ஜெகன் உள்ளங்கையில் தீர்த்தத்தை ஊற்றினார்.

 அப்போது ஜெகன்,
"வாசல இத்தன செருப்பு கிடக்கு. அப்பரம் எதுக்கு board வச்சுருக்கோம். get the workers to clear them." என்று சற்று கண்டிப்புடன்  ஜெகன் கூற, அதற்கு,

பூசாரி, "அப்படியா? த்தோ எடுக்க சொல்லிடுறேன்." என்றவர் விறுவிறு என்று ஓடி சென்றார் சுத்தம் செய்யும் குழுவிடம் சொல்ல

கோயில் வளாகத்தை சுற்றி வந்த ஜெகன் சிறுகுழந்தையுடன் வந்த பக்தன் ஒருவரிடம், "bro, கோயிலுக்குள்ள shoe போட்டு வரகூடாது. உங்க பொண்ணு காலுல இருக்குற shoe…... அடுத்த தடவ வரும்போது…கொஞ்சம் பாத்துக்குங்க bro"

அப்பக்தன் ஆச்சிரியம் அடைய, "what!!"

மீண்டும் அப்பக்தன்,"குழந்த, bro. ஒரு வயசு தான் ஆகுது. " தூக்கி இடுப்பில் வைத்திருந்த குழந்தையை காட்டி பதில் பேசினான்.

"bro, குழந்தையா இருந்தாலும் நம்ம வீட்டுல இருக்குற சாமி ரூம்க்கு செருப்பு போட்டு போக விடவோமா? அந்த மாதிரி தான் இதுவும்….”

"What nonsense is this? I am going to complain...."

ஜெகன், "sure sir. போய் சொல்லுங்க," என்று சொல்லிவிட்டு புருவங்களை உயர்த்தி, நமட்டு சிரிப்பு சிரித்தான்.

அதற்குள் அங்க வந்த அப்பக்தனின் மனைவி, " just remove the shoes. don't start a fight at the temple?" குழந்தையின் காலணிகளை அவிழ்த்து பையில் போட்டார் மனைவி.

பாட்டிகள் கூட்டம் இன்னும் கலையாமல் மும்முரமாக பேசி கொண்டிருக்க,
ஜெகன் அவ்வழியே சென்றான்.

"hello young ladies. how is everyone today?"  என்றவன் அமர்ந்திருந்த சீலனின் பாட்டியை கட்டி பிடித்தான். எழ முடியாமல் உட்கார்ந்தபடியே சீலனின் பாட்டியும் அவனை கட்டி தழுவினார். மற்ற பாட்டிகளும் அவனுக்கு கை கொடுத்து வணக்கங்களை கூறினர்.

சீலனின் பாட்டி, "என்ன வியாழக்கிழம காலையிலே கோயில் பக்கம்?"
"nothing much, aunty. it's my birthday today and...." என்று முடிப்பதற்கு அனைத்து பாட்டிகளும் அவனது கைகளை குலுக்கி வாழ்த்து சொல்ல துடித்தனர்.

சீலனின் பாட்டி, “அப்பரம் என்ன celebration இன்னிக்கு? நிஷா எங்க?”

" அவங்க Melbourne போய் இருக்காங்க work விஷயமா."

பாட்டி கூட்டத்திலிருந்து ஒருவர், "ஜெகன், உனக்கு மிஸ்டர் அருண் ராஜ் தெரியுமா?"
அவனும் தலையையாட்டி, “ermm…. He has a daughter right? you need her info. Am I right?

வாய் பிளந்து குஷியாக சிரித்த பாட்டி, “இதுக்கு தான் ஜெகன் வேணும்கிறது. கப்புனு புடிச்சுகிட்டான் பாருங்க!” மற்றவர்களிடம் அவன் புகழ் பாடினார்.
அதற்கு ஜெகன் அப்பாட்டியின் வலது தோள்பட்டையோடு வாரி அணைத்தபடி, "anything for you aunty!”

 ஜெகனின் கன்னங்களை தடவி, அவனது கையை பிடித்து கொண்டு நன்றி கூறினார் அப்பாட்டி. ஜெகனின் கைபேசி அலறியது. குறுந்தகவல் வந்த காரணத்தால், அவன், “ok ladies. See you soon.” என்றவன் அவ்விடத்தைவிட்டு விலகினான்.

இரண்டு whatsapp செய்திகள் வந்தன.
From Darling Wife:
Baby, happy birthday! Love you…Muahhh. just reached Melbourne. Going to the hotel now. Will call you later. Missing you already baby.

From Mark Boi:
Boss, Tonight at Dollar Room.
Thai girl. 3k for 2 hours. High Demand. Reply asap.

முதல் குறுந்தகவலுக்கு ‘love you’ என்றும்
இரண்டாவது குறுந்தகவலுக்கு ‘love it’ என்றும் பதில் அனுப்பிவிட்டு coffee-vending machine பக்கம் நடந்தான்.


Dec 20, 2017

சிம்பு கலந்து கொண்ட workshopல் நடந்தது என்ன?

கதவை திறந்தால், ஏசி குளிர் சுளீர் என்று முகத்தில் படர, சிம்பு உள்ளே நுழைந்தார். இருட்டாக இருந்த அறையில் switch எங்கே என தேடி அழுத்தியபோது, அரவிந்த்சாமி அறை ஓரத்தில் உட்கார்ந்து கையிலிருந்த fidget spinnerரோடு விளையாடி கொண்டிருந்தார்.



சிம்பு (பற்களை கடித்து கொண்டு, வாயை பாதிக்கு மேல் திறந்தும் திறக்காமலும்): சார், என்ன... சார்? இரு...ட்டு...லே இர்ர்ர்ர்கீ...ங்கா?

அரவிந்த்சாமி: வாங்க சிம்பு. என்ன இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க?

சிம்பு: நானும் சீக்கிரம் வரும் ஆளு தான் சார்.

அரவிந்த்சாமி தொடர்ந்து fidget spinnerல் விளையாடி கொண்டிருக்கிறார் வேறு எதுவும் பேசாமல்.

சிம்பு (முணுமுணுத்தபடி, தாடியை சொரிந்தவாறு): இப்ப புரியுது ஏன் காஜோல் இவர வேண்டாம்னு பிரபுதேவாகூட போனாங்கனு.

அப்போது உள்ளே நுழைந்தார் மணிரத்னமும் சுஹாசினியும். சுஹாசினி வலது கையில் மருந்து மாத்திரைகளும், இடது கையில் வசனங்கள் அடங்கிய தாட்களும் இருந்தன. மணிரத்னம் சிம்பு மற்றும் அரவிந்த் கைகளை குலுக்கி வரவேற்றார்.

மணி: i am happy you came.

சிம்பு: சார், i am happy you casted me in this film.

மணி ஒரு செண்டிமீட்டர் புன்னகையை வீசினார்.

சிம்பு: மேடம், அது என்ன மருந்து?

சுஹாசினி: நீ எப்போ மேடைல "மணி சாரும் என் fanஆ இருப்போரோ'னு சொன்னீயோ அப்போவே எனக்கு பயம் வந்துச்சு. அதான் for precaution. மணிக்கு ஏற்கனவே உடம்ப சரியில்ல.

சிம்பு: சார் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு செல்பி எடுத்தோம் சார்.

மணி: ஒகே.

சிம்பு: நன்றி சார்.

மணி: யாருக்கு அனுப்புறீங்க.

சிம்பு: என் ரசிகர்களுகிட்ட சொல்லி, இத மீடியாவுல போட சொல்றேன் சார். அப்ப தான் நம்புவாங்க எனக்கு வேலை கிடைச்சுருக்குனு.

மணி: ரசிகரா?

சிம்பு: அது ஒரு 10,15 பேர் இருக்காங்க. என் தீவிர ரசிகர்கூட்டம். அவங்க இல்லாம நான் இல்ல....

கைவிரல்களையும் கைகளையும் ஆட்டி பேசி கொண்டிருக்கையில் ஜோதிகா உள்ளே வந்தார். சுஹாசினியை கட்டிபிடித்து ஹாய் சொல்லிவிட்டு மணியிடம் வணக்கம் கூறினார்.

சிம்பு: ஹாய் ஜோ எப்படி இருக்கீங்க?

ஜோ: ஹாய் சிம்பு. am fine. நீங்க எப்படி இருக்கீங்க?

சிம்பு: நாச்சியார் டெர்ல்லர் பாத்தேன். செம்மங்க.... எனக்கே போட்டியா வருவீங்கனு நினைக்கல.  பீப் சாங் மாதிரி இந்த படத்துலயும் ஒன்னு இருக்கனும்னு கேட்போங்க. மணி சார் கண்டிப்பா ஒத்துப்பாரு. ஏனா அவர் என் fanங்க.

சின்ன பையன் ஆகாயத்தில் பட்டத்தை பறக்கவிட்டு அனாந்து பார்த்து சந்தோஷம்படுவதுபோல் குதித்தான் சிம்பு. எதுவும் பேசாமல் ஜோ சுஹாசினியிடம் சென்றார். ஐஸ்வர்யா ராஜேஷ் வந்தார்.

சிம்பு: ஹாய் ஐஸ்.

ஐஸ்வரியா: என் பெயர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

சிம்பு: கூட கொண்டு வரலயா?

ஐய்வரியா: மொக்க ஜோக்.

சிம்பு: உங்க பெயர் சொன்னா, எனக்கு பழைய ஞாபகமெல்லாம் வருது. but பர்ர்வால adjust பண்ணிக்கிறேன்.

மணி: ok ladies and gentlemen, எல்லாரும் செண்டர்ல உட்காருங்க.

சிம்பு: கீழயா?

சுஹாசினி: ஆமா.

சிம்பு: என்னங்க....நான் எவ்வளவு பெரிய ஸ்டார் தெரியுமா?

மற்றவர்கள் அனைவரும் தரையில் அமர்ந்துவிட்டு சிம்புவை பார்த்தனர்.

சிம்பு: ஓ...எல்லாரும் உட்காந்திட்டாங்களா. சரி பர்ர்வால நானும் உட்காரேன்.

மணியும் சுஹாசினியும் அனைவருக்கும் வசனத்தாளை கொடுத்தனர்.

சிம்பு: மணி சார். எங்க விஜய் சேதுபதியும் வாஃட் வசிலும்?

மணி: அவங்க இன்னிக்கு வரமாட்டாங்க.

சிம்பு: அவங்க வர்லனா எப்படி rehearsal பண்றது?
அவங்களுக்கு பதிலா VTV கணேஷம் மொட்டை ராஜேந்தரையும் போடுங்க சார்.

சுஹாசினி மணி காதில் மட்டும் விழும்படி: மணி, do you really want simbu to be in this film?

மணி ஒரு செண்டிமீட்டர் புன்னகையை வீசினார்.

மணி: ok this is scene 12. all characters are in the dense forest area in kashmir.....

அவர் சொல்லி முடிப்பதற்குள், அரவிந்த தரையில் சாய்ந்து புரண்டு, இல்லாத கொடி மேல உருண்டு கொண்டிருக்க, ஜோவும் ஐஸ்வர்யாவும் வாய் பிளந்து ஆச்சிரியம் அடைந்தனர்.

சுஹாசினி: அரவிந்த் எந்திரிங்க. காஷ்மீர்னாவே அது தானா?..... get up arvind. இது ரோஜா பார்ட் 2 இல்ல.

மணி: ok everyone listen. all characters are in the dense forest area in kashmir. you are the forest officers on a mission. you are there for a campfire night. and so this is the scene...சிம்பு நீங்க start பண்ணுங்க.

8 பக்கம் கொண்ட வசனத்தாளை புரட்டி புரட்டி பார்த்துவிட்டு முழித்தார் சிம்பு.

சிம்பு: எனக்கு என்ன பிரச்சனை-னா..... சார் ஒன்னுமே புரியல சார்.

சுஹாசினி: இது பாரதியார் கவித, சிம்பு. படிங்க.....

சிம்பு: காவென்று கத்திடுங் காக்கை......முட்டை 

ஜஸ்வர்யா: மேடம், என்னய கிண்டல் பண்றான் மேடம்.

சுஹாசினி: சிம்பு...ப்ளீஸ்.

சிம்பு: ஒகே ஒகே...  காவென்று கத்திடுங் காக்கை என்றன்
கண்ணுக் கினிய கருநிறக் காக்கை.


தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தார் ஜோ.

ஜஸ்வர்யா: ஏன் அலறீங்க?

ஜோ: வீட்டுல ராமாயணம் தொல்ல தாங்க முடியலனு தான் இந்த படத்த ஒத்துக்கிட்டேன். இங்கயும் புரியாத மொழில கவித அது இதுனா....... 

Dec 18, 2017

அருவி- இன்னும் hangoverல Rolling Sir!

படம் இடைவேள விட்டபோதே இந்த படத்த பத்தி ஷேர் செய்யனும்னு துடிச்சது மனசு. ஆனா, வருங்கால CM விஷால் ஐயா ஒரு படத்த பாத்தா, 3 நாளைக்கு அப்பரம் தான் அத பத்தி பேசனும்னு சொல்லிட்டார். அதனால மனசு கட்டுப்படுத்திகிட்டேன்.


இடைவேள போதே கிட்டதட்ட ஒரு கதை முடிஞ்ச மாதிரி ஒரு உணர்வு. இதுக்கு அப்பரம் எப்படி படம் நகரும்? நிஜ அருவிய பாக்க சில தூரம் பயணித்து ஒரு மல உச்சிக்கு நடந்து போய் ஒரு இடத்துல நின்னா, நம்ம மேல சாரல் பட்டு ஒரு பிரமிப்பு அடைவோம்ல அந்த மாதிரி இந்த படம். பல வருட காலம் தமிழ் சினிமா உருண்டு ஓடி வந்து நமக்கு அளித்த அதிசயம் "அருவி"

இயக்குனர் அருண ஒத்த வார்த்தல வாழ்த்துகள்னு சொல்லி முடிச்சிட முடியாத அளவுக்கு தன் எழுத்தால் வசீகரம் பண்ணியிருக்கிறார். கே ஸ் ரவிகுமார்கிட்ட assistantஆ இருந்த அருண் தான் இப்டத்த எடுத்தார்னு நினைக்கும்போது ஆச்சிரியமா இருக்கு! நல்ல படம் எடுக்க நல்ல கதையவிட நல்ல மனசு தேவை. அது அருண்கிட்ட நிறையவே இருக்கு. படத்துல பல இடத்துல அத கண்கூடா பாக்க முடியுது. அருவி கதாபாத்திரத்துக்கு இணையா எனக்கு பிடிச்ச இன்னொரு கதாபாத்திரம்- Emily. 



panasonic GH4 cameraல தான் முழு படத்தையும் எடுத்தாங்களாம். மூனு மாசம் ஒத்திகை. அனைத்து கதாபாத்திரங்களும் முழு படத்தையும் stage play போல நடித்து காட்டிவிடும் அளவுக்கு ஒத்திகை நடந்திருக்கு. இப்படி அருண் மற்றும் குழுவின் உழைப்பு மெய்சிலிர்க்க வைக்குது.

இடைவேளை முடிஞ்சு ஒரு காட்சில அருவி அந்த முதலாளிய பாத்து கேட்கும், "நீ எப்ப எதுக்கு கடைசியா அழுதேனு." அதுக்கு அவன் தனது ஊரில் இருக்கும் பனியாரம் சுடும் பாட்டிய பத்தி ஒரு கதை சொல்வான். சொல்லிமுடித்தவிட்டு தேம்பி தேம்பி அழுவான். எனக்கு பொசுக்கென எட்டிபாத்துச்சு கண்ணீர். ஒரு கெட்டவனுக்காக நான் ஏன் இவ்வளவு feel பண்ணுறேன்? அது தான் 'அருவி'. இப்படி நம்மள ஒரு mixed emotional rollercoaster பயணத்தில அமர வைச்சு கூட பழகும் மனிதர்கள வேற மாதிரி பாருங்கடானு சொல்லுது.

கென்யாவோ இல்ல வேற ஒரு நாடானு தெரியல. அங்க மலைவாசி மக்களின் பழக்கம் ஒன்னு இருக்கு. தப்பு செஞ்சவன ஊர்மக்கள் நடுவுல உட்கார வச்சு அவன் பண்ண நல்ல விஷயங்கள எடுத்து சொல்லி அவன் நல்லவனு அவனுக்கே புரிய வைப்பாங்களாம். அருவி படத்துல வந்த பனியாரம் பாட்டி காட்சிய பாத்தபோது எனக்கு இது தான் நினைவுக்கு வந்துச்சு.

'liberty song'னு ஒரு பாட்டு. பள்ளி பருவத்தில் வரும் அருவி தனது ஆசிரியரால் அடிவாங்கும் காட்சி ஒன்னு ஆரம்பத்துல வரும். கொஞ்ச நாள் கழிச்சு, அந்த ஆசிரியரை பாக்க நேரிடும். அவரிடம் சென்று, "வணக்கம் சார் நான் தான் அருவி" என்று சொல்லிவிட்டு கல்லை தூக்கி அவரது கார் கண்ணாடியில் வீசிவிட்டு ஓடுவார் அருவி. அதுக்கு அருவி, "எத்தன தடவ கீறி இருப்பான் தெரியுமா?" என்று தோழியிடம் சொல்வாள். 

மனசு கனத்திடுச்சு. எவ்வளவு பெரிய விஷயத்த ரொம்ப ஆழமா சொல்லிட்டு போய்கிட்டே இருக்கும் திரைக்கதை, 'அருவி'ய எல்லாரும் தூக்கிவச்சு கொண்டாட காரணம்னு அது தான்னு நினைக்கிறேன். டிவிட்டர் பக்கத்துல சிலர் தூக்கிவச்சு கொண்டாடும் அளவுக்கு இதல என்ன இருக்குனு ஒரு கேள்வி கேட்குறாங்க.

பரவாயில்ல சார். தூக்கி வச்சு கொண்டாட வேணாம். atleast தூக்கிவச்சுபோம். 'அருவி' இந்த உலகத்த பார்க்கட்டும். இந்த உலகம் 'அருவி'ய பார்க்கட்டும். இல்லேனா, ஹிந்தில ரீமேக் பண்றேன் தெலுங்குல ரீமேக் பண்றேனு ஒரு குரூப் கிளம்பும். அவங்ககிட்டலேந்து காப்பாத்தறத்துக்காவது, 'அருவி'யை தூக்கி வச்சிபோம். கடைசி வரைக்கும் 'அருவி' நம்ம புள்ளையா நம்ம படமா இருக்கட்டும்.


"விஜய் நடிச்ச படம்ங்கற. நல்ல படம்ங்கற...எப்படி டா கண்டுபிடிக்கறது?"

"கை வை டா பாப்போம்."

"எனக்கு பயம் இல்ல. ஏனா எனக்கு இழக்கறதுக்கு எதுவும் இல்ல."

"நான் உண்டு என் ஜட்டி உண்டுனு இருப்பேன்."

"120 ரூபாய் கொடுத்து குப்ப படத்த பாக்குறோம்."

இப்படி படம் முழக்க ரசிக்கும் வண்ணம் வசனங்கள அள்ளி தெறிக்கவிட்டு இருக்காங்க.

இசை- beautifully unconventional. sweetly haunting. பிந்துமாலினி மற்றும் வேதாந்தின் பாடல்காள் ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்லுது. 

என்ன டா படத்தில் நடித்த அதீத்தி பாலன் பத்தி ஒன்னும் சொல்லலையேனு நினைக்க வேண்டாம். அந்த புள்ளய பத்தி தனியா ஒரு போஸ்ட் போட்டால் கூட எல்லாத்தையும் சொல்லிட முடியுமானு தெரியல. இப்போதைக்கு அந்த புள்ளகிட்ட ஒன்னே ஒன்னு தான் சொல்ல தோணுது.

"இறுக்கி அணைச்சு ஒரு உம்மா" தரணும்.



Dec 10, 2017

கொடிவீரன்- மசாலாவ அரைக்க சொல்லுமா!!

இதுக்கு முன்னாடி வனமகன் படத்துல தான் பிண்ணனி இசையைக் கேட்டு வயிறு வெடிக்கிற அளவுக்கு விழுந்து சிரிச்சேன். அந்த 'அலுக்கி குலுக்கி சிறுக்கி சிம்ல சிம்மா ஏஏஏஏஏஏஏ' பிண்ணனி இசை இன்னும் காதுல ஒலிச்சிகிட்டு இருக்க. ஹாரிஸ் ஜெய்ராஜ மிஞ்ச இன்னொருத்தன் பொறந்து வரனும்னு  நம்பிக்கையோட வாழ்க்கைய நடத்திக்கிட்டு இருக்கும்போது தான் 'கொடிவீரன்' கொடிகம்பத்துல வந்து சிக்கினான். இல்ல, நம்மதான் அவங்கிட்ட சிக்கிட்டோம்.



வில்லன், ஒரு அப்பாவிய அடிச்சி வீசுறான். இது எம்.ஜி.ஆர் தாத்தா காலத்து ஹீரோ introduction ஆச்ஜேனு நீங்க நினைக்ககூடாது. அந்த நினைப்ப வேரோடு வெட்டி எறியவும். ஹீரோவின் தங்கச்சி அடிதடி நடக்கும் இடத்துல நிக்குது.

"உன் முன்னாடி பறந்து வந்த tyre ஒன்னும் சும்மா வரல. எங்க அண்ணன்       சூடாயி வந்துச்சு."

"சண்டை நடக்கிற இடத்துல கண்ணன் வருவானோ இல்லையோ எங்க அண்ணன் வருவான்."

"இந்த ஊரே எங்க அண்ணன் ஆடி பாத்துருக்க. அடிச்சு பாத்தது இல்ல. இப்ப பார்ப்ப."

ஒரு படத்துல இத்தன பஞ் இருக்கலாம். ஆனா ஒரு சீன் முழுக்க இது தான்.

அடுத்த ஷாட்- தாடி வச்ச சசிகுமார் லாரி பின்னாடியிலிருந்து முன்னாடி வரார். slow motionல நெத்தியில பட்டையோட. இவரு பட்டையோட வரல. பட்டைய கிளப்ப வந்திருக்காரு.

(அட ச்சே.... என்ன எனக்கும் இந்த வியாதி தொத்திகிச்சு. )

சசிகுமாரின் நெத்திய close upல காட்ட
 "ரகள ரகள ரகள டா. இவன் ரகளையோட சகல டா!" னு பிண்ணனி வாசிக்கும்போது, சிரிச்ச ஆளுதான் நான் அடுத்த 10 நிமிஷத்துக்கு படத்தில எந்த காட்சிய மிஸ் பண்ணேனே தெரியல.

நானே சத்தம் போட்டு, 'மசாலா அரைக்க சொல்லுமா' னு கத்திடலாமானு தோணுச்சு.

சசிகுமார் தன் தங்கச்சிக்கு கல்யாணம் நடக்குமா இல்லையானு தெரிஞ்சிக்க கோயிலுக்கு போவார். அங்க கல்லுல வட்டம் போடும் காட்சி ஒன்னு. இப்படி  நம்மள திட்டம் போட்டு   தூக்கும் காட்சியெல்லாம் ஏகப்பட்டது இருக்கு.

முறை மாமன் படத்துல பேதி மாத்திரை காமெடியில எத்தன மாத்திரை டா போட்டீங்கனு கவுண்டமணி கேட்க அதுக்கு ஜெய்ராமும் செந்திலும், "ஒன்னு போட்டோம். அதுக்கு அப்பரம் ரெண்டு. அப்பரம் மூனு" என்று எத்தன மாத்திரய கலந்தாங்கனு தெரியாம குழம்பிபோய் நிப்பாங்க.

அந்த மாதிரி இந்த படத்துல எத்தன தங்கச்சி கதாபாத்திரம் இருக்குனு யாருக்குமே சத்தியமா தெரியாது.

இந்த படத்துல சசிகுமாருக்கு ஒரு தங்கச்சி.
அப்பரம் வில்லன் பசுபதிக்கு ஒரு தங்கச்சி.
அதுக்கு அப்பரம் வித்தார்த்துக்கு ஒரு தங்கச்சி.

லைட்மேன், கேமிராமேன், tea-boy, stunt master, editor, இப்படி எல்லாருக்கும் இப்படத்துல தங்கச்சி இருக்காங்க.

உங்க வீட்டில ஒருத்தர தண்ணி கொண்டு வர சொல்றீங்க, அதுக்கு அவர்,

"தண்ணி கொண்டு வர சொல்றீயா இல்ல தனியா கொண்டு வர சொல்றீயா?"

நீ: சீக்கிரம் கொண்டு வா.

அவர்: சீக்கிரம் வரட்டா இல்ல விக்ரமோட வரட்டா?

இப்படி உலறும் கதாபாத்திரங்களோட பேசினா எப்படி மண்டை வலிக்குமோ அப்படியான ஒரு படம் தான் 'கொடிவீரன்'.

வசனம் என்னும் பெயர்ல வச்சு செஞ்சிருக்காங்க.

பசுபதியின் மச்சான் அவருக்கு ஒரு மோதிரத்தை போடுவான். அதுக்கு பசுபதி, "என்ன.....நம்ம இனத்தோட அடையாளமா?"

மச்சான், "இல்ல மாமா. உங்க குணத்தோட அடையாளம்."

இன்னொரு காட்சில, "எத்தன நாளைக்கு தான் வில்லங்கமா இருப்ப. கொஞ்ச நாளைக்கு வெள்ளக்காரனா இரேன்."

"அப்போ அதுல நம்ம காரியமும் இருக்குது. வீரியமும் இருக்குது."

"இந்த ஊர் என்னைய ஆடியும் பார்த்திருக்கு. அடிச்சும் பாத்திருக்கு.
நார் நாரா கிழிச்சு பாத்தது இல்லையே!"

இதுபோன்ற வசனங்கள back-to-back பேசி பேசி, நம்ம ஒரு வழிபண்ணாரு இயக்குனர் முத்தையா.

இயக்குனர், சமீபத்தில் ஒரு பேட்டியில், "நம்மெல்லாம் அடையாளத்த இழந்துகிட்டு வரோம். அத காட்ட தான் கிராமத்து படங்கள எடுக்குறேன்."

நம்மகிட்ட பல்லு இருக்கறதனால அதயே காட்டிகிட்டு இருந்தா, முட்டாள்தனமா இருக்கும். தெரியும். அதே மாதிரி தான் அடையாளம். தேவையான நேரத்தில், கொஞ்சம் புத்திசாலித்தனாகவும் உலக நடப்பு தெரிந்து காட்ட வேண்டும்.

பசுபதி தங்கச்சி விதவையான பிறகு, அவளை ஊர் மக்கள் முன்னிலையில் உட்கார வைத்து மொட்டை அடிப்பது, அதுக்கு அப்பரம் அவருக்கு சேலை கொடுக்கும் காட்சியெல்லாம், என்ன அடையாளம்னு தெரியல? அழிக்கப்பட வேண்டியவை.

"ஒரு ஆம்பள இன்னொரு ஆம்பளைக்கு லவ் லட்டர் கொடுத்தா தான் தப்பு, ஒரு ஆம்பள பொண்ணுக்கு கொடுத்தா தப்பு இல்ல." என்னும் வசனங்களிலிருந்தே தெரிகிறது பின்னோக்கிய சிந்தனைகளின் உச்சம்.

வாழ்க்கையில் எவ்வளவோ போராடி, ஓரினசேர்க்கை ஆண்களும் பெண்களும், திருநங்கைகளும் பலவற்றில் சாதித்து கொண்டிருக்கும் இச்சூழலில் இதுபோன்ற வசனங்கள் மிகப் பெரிய கொடூரம்.

இதைவிட கொடூரம்- சசிகுமாரின் romance காட்சிகள்.

நாடி நரம்பெல்லாம் 'சசிகுமார் சசிகுமார்'னு ஊறிபோன ரசிகர்களால்கூட ஜீரணிக்க முடியாத காதல் காட்சிகள்.


Oct 15, 2017

அர்ஜுன் ரெட்டி பதிலாய் அனிதா ரெட்டியாக இருந்திருந்தால்...

facebook முழுக்க 'அர்ஜுன் ரெட்டி' தெலுங்கு சினிமாவ புரட்டி போட போற படம். படத்துல நாலு சீன்ல சட்டைய கழட்டினாலே  அது 'cult film'னு             
நினைக்கிற  இக்காலத்தில் இது எந்தளவுக்கு உண்மை என்று புரியாமல் தான் படத்தை பார்க்க ஆரம்பித்தேன்.


கூகலில் தேடினேன் இதன் அர்த்ததை- cult film is often revolutionary or ironically enjoyed. ஆஹா ஆமாப்பா! அதே தான்! இப்படம் ஒரு அனுபவம். சமீப காலங்களில் இப்படி ஒரு அனுபவம் கிடைத்ததில்லை. அந்த அனுபவத்தை தர தமிழ் படங்களும் கொடுக்க முற்பட்டதில்லை.   அர்ஜுன் ரெட்டி- ரொம்பவே ரசித்து பார்த்தேன். கதையின் பல அம்சங்கள் பிடிக்கவில்லை. (அதை பற்றி அப்பரம் சொல்கிறேன்)

இருந்தாலும், 'cult' film தான். தான் சொல்லவந்ததை  இயல்பாக, யாருக்கும் பயப்படாமல், மூன்று மணி நேரத்தில் கதையை தோய்வு இல்லாமல் எழுதி இயக்கிய புது இயக்குனர் சந்தீப்புக்கு, 'you're a fucking awesome talented film-maker, man!"


in-dept characterisation- அர்ஜுன் ரெட்டி. இவன் எப்படிப்பட்டவன் என்பதை முதல் இரண்டு மூன்று காட்சிகளிலே நமக்கு புரிந்துவிடுகிறது. அதுவும் அழத பழசான காட்சி அமைப்புகள் இல்லை. இப்படிப்பட்ட குடிகாரனா ஒரு மருத்துவர் என்று ஆச்சிரியப்பட வைக்கிறார் இயக்குனர். அப்படி ஆச்சிரியப்பட வைக்கும் தருணத்தில் நம்மை 'flashback'க்கு அழைத்து செல்கிறார். சரியான இடங்களில், மிக பொருத்தமான அளவில் flashbackகள் நிறைந்த திரைக்கதையில் பாதி வெற்றியை எழுதியிருக்கிறார் எழுத்தாளர் சந்தீப்.

மூன்று மணி நேரத்தில் ஒரு நவீன தேவதாஸின் வாழ்க்கையை சித்தரித்ததை தாண்டி, நம்மையும் அவ்வாழ்க்கைக்குள் கைபிடித்து நடக்க வைத்துள்ள படம் இந்த அர்ஜுன் ரெட்டி. கதாபாத்திரங்களின் உணர்வுகளைத் திரிக்காமல் ஒளிக்காமல் உண்மைக்கு மிக நெருக்கமாகத் திரையில் துணிவுடன் காட்டியிருப்பது ஓர் அசலான சினிமாவுக்கான அடிப்படைத் தேவை என்பதை ‘அர்ஜுன் ரெட்டி’ உணர்த்திவிடுகிறது.



குழந்தைத்தனம் நிரம்பி வழியும் முகம் ப்ரீத்தியாக நடித்திருக்கும் ஷாலினி பாண்டேவுக்கு. எந்த உணர்ச்சியையும் எளிதில் காட்டிவிடாதவர், வீட்டில் நடக்கும் பிரச்னைக்குப் பிறகு, விஜயைக் கட்டிப்பிடித்து சமாதானப்படுத்த முற்படும் காட்சி, பூங்காவில் மீண்டும் அர்ஜுனைச் சந்திக்கும்போது அழுதுகொண்டே கோபமாகத் திட்டும் காட்சி போன்றவற்றில் மிரட்டுகிறார்.

"women have restrictions at home, arjun" என்று ஷாலினி சொல்ல, எவ்வளவு தான் படித்து இருந்தாலும், பெரிய இடத்தில் இருந்தாலும், பல பெண்களின் நிலைமை, இயலாமை அது தான். அதை ஒற்றை வரியில் சொன்ன விதம், சபாஷ்!  




ஷாலினி அர்ஜுன் வீட்டுக்கு சென்று அவனை சமாதானப்படுத்தும்போது, அவனது அறையை சுற்றி பார்த்துவிட்டு, "இங்க தான் நமக்கு first night நடக்க போகுதா?" என்று கேட்க, அதுக்கு அவன் எரிச்சலாய், "bloody 549th night?" என்பதெல்லாம் தமிழுக்கும் சரி, தெலுங்கு சினிமாவுக்கு சரி ரொம்பவே புதுசு. கொச்சையாக இருக்கே என்று சிந்திக்கவிடாமல், நம்மையும் தலையாட்டி புன்னகை செய்ய வைத்திருக்கிறது கதையோட்டமும், அவர்கள் காதலின் ஆழமும். 

இப்படி வெற்றி கொடிகளை பல இடங்களில் நட்ட படத்தில் எனக்கு நெருடல்களாக தெரிந்தன பல விஷயங்கள்.

1) அர்ஜுன் என்பவன்  யார் என்றே தெரியவில்லை என்ற போதிலும், மருத்தவம் படிக்கும் ஷாலினி, எப்படி ஒரு பையன் திடீரென்று கூப்பிட்டு, முத்தம் கொடுத்தால் ஏற்றகொள்கிறாள், செருப்பை கழட்டி அடிக்காமல்?

2) அர்ஜுன் is a male chauvinist. கல்லூரி வகுப்பில், ஒரு குண்டான பெண்மணியுடன் ஷாலினியை உட்கார வைத்து, அவளை தோழி ஆக்கிக்கோ, " one fat chick and a beautiful chick make a good combo." என்று வசனம் பேசிய சிகரெட் நாத்தம் பிடிச்ச பய, சிறிது காலம் கழித்து, நண்பனின் தங்கைக்கு பார்த்த மாப்பிள்ளை, பெண்களை பத்தி இழிவா பேசியதற்கு சண்டை பிடிக்கிறான்! எப்படி, பாஸ்?


அப்படியே அர்ஜுன் இடைப்பட்ட காலத்தில் மாறியிருந்தாலும், எப்படி மாறினான் என்பதை எந்த ஒரு காட்சியிலும் காட்டவில்லையே, பாஸ்.

3) அர்ஜுன் கோபக்காரன். படம் முழுக்க எதுக்கு எடுத்தாலும் கோபம். குடிபோதை வேற. வேலையை இழக்கிறான். ஷாலினியை விட்டு பிரிகிறான்.

ஆனா, கடைசில அவனுக்கு எல்லாமே கிடைத்துவிடுகிறது. அப்போ என்ன பண்ணாலும், யாரை அடித்தாலும் சரி, கடைசியில எந்த தண்டனையும் இல்லாமல் வெற்றியும் சந்தோஷமும் கிடைத்துவிடுகிறது. அவன் தேவதாசாக தனியாக வீட்டில் வாழ்ந்த நாட்களில் கூட அவன் அவ்வளவு பெரிய கஷ்டத்தை ஒன்றும் சுமக்கவில்லை. கர்ப்பனி பெண்ணாக தனியாக இருந்த ஷாலினியை விடவா இவன் கஷ்டப்பட்டு இருப்பான்?

4) climax காட்சியில் பூங்கா பெஞ்சில் அமர்ந்து, ஷாலினி அர்ஜுனிடம், " கல்யாணம் ஆன மூனாவது நாளே வீட்ட விட்டு வெளியே வந்துட்டேன். உன் புள்ள இது. என் புருஷம் சுண்டுவிரல்கூட பட்டத்தில்ல" என்று சொல்லும்போது, அட ச்சை! என்ன டா இது. சந்தீப் மிகப்பெரிய எழுத்தாளன் சிந்தனையாளன் என்று நினைத்தோமே, கடைசில இவனும் ஒரு சினிமாக்காரன் தானா என்று தோன்றியது.

5) அர்ஜுன் ரெட்டியின் அர்த்தமில்லாத ஆத்திரத்தை தேவையில்லாமல் கொண்டாடிய படமோ இது?

இப்படி நினைச்சு பாருங்க.

அனிதா ரெட்டி என்று ஒரு கோபக்கார புள்ள.


அனிதா மொட்டைமாடியில் காலையில் படுத்துகிடக்க, அங்கு காயந்த துணியை எடுக்க வந்த, ஆண்ட்டி "என்ன என் நைட்டிய போத்தி இருக்க" என்று கூற, அதற்கு அனிதா போத்திய நைட்டிய கழுட்டி, ஆண்ட்டி தன் கையில் வைத்திருந்த அங்கிள் சட்டையை மட்டும் அணிந்து கொண்டு, தண்ணீர் டேங்கில் பியர் பாட்டிலை மொண்டு குடிக்கிறாள்,

'அர்ஜுன் ரெட்டி' ஒரு cult movie என்பவர்கள் 'அனிதா ரெட்டி' என்றிருந்தால் அதையும் கொண்டாடி இருப்பார்களா?

இப்படி தான் எனக்கு படம் முழுக்க சிந்தனை ஓடியது.

இப்படி தானே நிலம்பரி கோபம் அடைந்தாள், கடைசில அவங்கள கொன்றது.

இப்படி தானே திமிர் படத்தில் நடித்த கோபக்கார ஷரேயாவையும் கொன்றார்கள்.

'கொடி' படத்தில் நடித்த திரிஷாவுக்கு இதே நிலைமை தான்.

பொண்ணுங்க பண்ணா ரத்த காவா.
பசங்க பண்ணா தக்காளி தொக்கா?

அட போங்கய்யா!

************************************

அகோரி இல்ல, சுடுகாடு இல்ல, டீ தோட்டம் இல்ல, பீச் ஹாவ்ஸ் இருக்கு. ஏகப்பட்ட ஜலபுலஜங்ஸ் சீன்னு இருக்கு. அதுல ஒரு 12 lip-to-lip சீன் இருக்கு. 37 தடவ படத்துல நிறைய பேரு பேச்சு வார்த்தைல 'fuck' வார்த்தைய ரொம்பவும் யதார்த்தமா பயன்படுத்துறாங்க.

இப்போ இந்த படத்துல எது புரிஞ்சுதுனு இயக்குனர் பாலா, இத தமிழ்ல ரீமேக் பண்ண கிளம்பிட்டாரு??


அப்பா விக்ரம் தன் மகன் துருவ தமிழ்ல அறிமுகப்படுத்த போறாரம் பாலாவ வச்சு.

தம்பி துருவ், என் அனுபவுத்துல சொல்றேன். எப்படி பெத்தவங்கள புரிஞ்சுகிறது கஷ்டமோ அத மாதிரி, பிள்ளைங்க நமக்கு எது புடிக்கும் புடிக்காதுனு கடைசி வரைக்கும அவங்களுக்கு புரியாது.
இது தான் நல்லதுனு நமக்கிட்ட வந்து சொல்வாங்க. அதயெல்லாம் கேட்கனும்னு அவசியமில்ல.

பிடிக்காத கல்யாணத்துல பொண்ணோ மாப்பிளையோ முதல் நாள் ஓடி போறது இல்லையா? அந்த மாதிரி படம் shooting முதல் நாள் எங்கயாச்சும் ஓடி போய்டு தம்பி!

இல்ல, இல்ல, அப்பா சொன்ன சரி தான். நான் பாலா கையில அடி வாங்கினா தான் சினிமாவுல சீமாசானத்துல உட்காந்து ரசிகர் மன்ற 6 அடி மாலை போடுவாங்கனு நீ நினைச்சினா, கடைசில எலும்புகூடு மாலைகூட கிடைக்காது தம்பி.

Oct 8, 2017

தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்- 30

For Maathevan-
கண்டவனையெல்லாம்
interview எடுத்து

காண்டாக்குற

கன்னங்குழி சிரிப்புல
Cool ஆகுற.

எடை கூடியும் அழகா தெரியுற
புள்ளத்தாச்சி பொண்ணு
போல
உன் எடை கூடியும்
அம்சமா இருக்குற.

கருப்பு சட்டை
வெள்ளை வேட்டில
"கருப்பு வெள்ளை பூக்கள் உண்டா"
முத்துகுமார் வரிகள
ஞாபகம்படுத்துற,
கஜினி சூர்யா போல
என் உலகத்த
மறக்கடிக்குற.

நீ சொல்லிய Movie review
பலவற்றில எனக்கு
உடன்பாடு இல்ல
இருந்தாலும் ரசிச்சு
பாத்து இருக்கேன்
படிக்காத மாணவன்
கிறுக்கி தள்ளிய தேர்வு
பதிலகளை திருத்தும்
ஆசிரியர் போல.

நீ பேசும் தமிழுக்கு
என்னை அடிமையாக்கியவனே,
30 வயசுல
Semi-retiredஆன
என் வயிற்று பட்டாம்பூச்சிகளுக்கு
CPR கொடுத்தவனே!

படம் முடிந்து
Generalஆ
Exitடை தேடும்
General Audience போல
நானும் தேடுகிறேன்
இந்த
ஆலாதி Admirationக்கு
ஒரு பெயரை.