Nov 29, 2009

தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்-9

தேர்வு முடிஞ்சாச்சு.. படம் பார்ப்பது, இசை நிகழ்ச்சிகளுக்கு போவது, புத்தகம் படிப்பது என்று ஆக்கபூர்வமான செயல்களில்(சைட் அடிப்பது உள்பட) நான் ஈடுபட்டு கொண்டு வருகிறேன். சிங்கையில் 'கலா உத்சவம் 2009' என்ற நிகழ்ச்சியில் டில்லியில் இருந்து 'அட்வைத்தா' என்னும் இசை குழு 45 நிமிடம் நிகழ்ச்சி நடத்தினார்கள். http://www.advaitaonline.net/aboutus.html

இதில் 7 பசங்க... அழகான பசங்க.....அதில் ரெண்டு பேரை தான் நான்...ம்ம்... அதே தாங்க!!

suhail yusuf khan- 'sarangi' என்னும் இசை கருவியை மீட்டும் விதம்...ஆஹா...simply divine! ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப impress ஆயிட்டேன்:)

chayan adhikari- இந்த குழுவின் பாடகர் மட்டும் கிடார் வாசிப்பவர். பாடல்வரிகளும் இவர் தான் எழுதுகிறார். அவர் அப்படியே தன்னை மறந்து கண்களை மூடி பாடினார் பாருங்க...... சான்ஸே இல்லங்க.

இவர்களது இசை வட்டிலிருந்து ஒரு பாடல். இந்த பாடலை கிட்டதட்ட 100 முறை கேட்டு இருப்பேன்.:) ஹிஹிஹி....

Nov 18, 2009

பிடித்த பிடிக்காத 10 விஷயங்கள்

எனக்கு பிடித்த பிடிக்காத 10 விஷயங்கள்.
இந்த தொடர் பதிவினை எழுத சொல்லி புறா அனுப்பாத குறையாக தகவல் சொல்லிய கார்த்திக் தம்பிக்கு நன்றி.

உணவு
பிடிக்கும்: கோழி பிரியாணி
பிடிக்காது: கத்திரிக்காய்

டீவி சேனல்
பிடிக்கும்:travel & living (பல நாட்டு கலாச்சாரத்தை பற்றி காட்டுவார்கள்)
பிடிக்காது: கார்ட்டூன்ஸ் (ஐயோ சின்ன வயசுலேந்தே பிடிக்கவே பிடிக்காது!!)

இயக்குனர்
பிடிக்கும்: ஹிந்தியில் கரண் ஜோகர், தமிழில் கௌதம் மேனன், வெங்கட் பிரபு
பிடிக்காது: கே ஸ் ரவிக்குமார்

நடிகை:
பிடிக்கும்: ஹிந்தியில் வித்யா பாலன், தமிழில் என்றென்றும் எங்கள் தலைவி சிம்ரன்
பிடிக்காது: ஜெனிலியா (ரொம்ப கியூட் அப்படின்னு நினைப்பு..)

குணம்
பிடிக்கும்: சிரிப்பாக பேசும் தன்மை
பிடிக்காது: பெண்களை அடிமைகளாய் நினைக்கும் குணம் உடையவர்கள்

குளிர் பானம்
பிடிக்கும்: lemon juice
பிடிக்காது: பெப்சி

நாள்
பிடிக்கும்: லீவு நாட்கள்
பிடிக்காது: தேர்வு நாட்கள்

இடம்
பிடிக்கும்: என் அறை. உலகத்திலுள்ள எட்டாவது அதிசயம் இதுவே! ஹிஹி.
பிடிக்காது: road signs இல்லாத சாலைகள்

கார்
பிடிக்கும்: bmw
பிடிக்காது: சின்ன வாகனமா இருந்தால் பிடிக்காது

இணையதளம்
பிடிக்கும்: youtube, blogger, tamilmanam
பிடிக்காது: என் காலேஜ் இணையதளம்.

இதை தொடர அழைக்கின்றேன் இவர்களை,
கோபி அண்ணா, வினையூக்கி, சிம்பா, விக்கேனஷ்வரி அக்கா, ரீனா அக்கா

(நீங்கள் ஏற்கனவே எழுதியிருந்தால், ம்ம்...என்ன பண்ணலாம்... மறுபடியும் எழுதுங்க..ஹிஹி..)

Nov 17, 2009

2012- படமா இது?

நேற்று 2012 படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. பரிட்சை இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு. அதுக்குள்ள படமா? அப்படின்னு சில பேர் நினைக்கலாம். பொறுங்க பொறுங்க மேட்டருக்கு வரேன். டிக்கெட் இலவசமா கிடைச்சா போகாம இருப்பீங்களா? அமிராமி மாலில் இருக்கும் 350 ரூபாய் டிக்கெட் வாங்கி படுத்துகிட்டே படம் பார்க்கலாமே, அந்த மாதிரி இங்கயும் படுத்துகிட்டே படம் பார்க்கும் தியேட்டர் இருக்கு.

அக்கா ஒரு ஃபோட்டோ எடுக்கும் போட்டியில் கலந்து கொண்டு இரண்டு சினிமா டிக்கெட்டுகளை ஜெயிச்சாங்க. அந்த டிக்கெட்டுகளை வச்சு தான் படம் பார்க்க போனோம். ஒரு டிக்கெட் விலை (S$36. ரூபாய்க்கு கணக்கு பண்ணால்...ம்ம்ம்..abt Rs 800) இப்படி ஒரு அருமையான வாய்ப்பை நழுவுவிடுவோமா??

சரி படத்துக்கு வருவோம். "படமா இது? இல்ல நான் கேட்குறேன்...படமா இது" அப்படின்னு என்னைய புலம்ப வச்ச எத்தனையோ படம் இருக்க...இந்த படம் என்னைய பிரமிக்க வைத்துவிட்டது. "இது படம் இல்லைய்யா...பாடம். a threatening wake up call."

படம் ஆரம்பம் முதல் கடைசி வரை படத்திலேயே ஐக்கியம் ஆயிட்டேன். (இன்னும் மீள முடியாது நிலைமையில் தான் இருக்கேன்). படத்துல தண்ணியை தண்ணி மாதிரி செலவு பண்ணியிருக்கானே...அப்போ காச எந்த மாதிரி செலவு பண்ணியிருப்பான். கிராபிக்ஸில் புகுந்து விளையாடி இருக்காங்க. ஒன்னும் சொல்றதுக்கு இல்ல. இந்த உலகமே பாக்க வேண்டிய படம். படத்துல பிடிச்ச வசனம் "the moment we stop fighting for each other, that's the moment we ruined humanity."

கடைசி வரைக்கும் போராடி பாக்கோனும். உலகம் உண்மையாகவே 2012 அழிய போகுதா? என்ற கேள்விக்கு நம்மை இப்பவே தயார் நிலையில் இருக்க சொல்லுது படம். பல காட்சிகள் நம்மை சீட் நுனிக்கு இழுத்து செல்லும். ' life is fair yet it is cruel.' என்பதை அழகாய் ஒரே ஒரு காட்சியில் காட்டியிருப்பார்கள். ரஷிய விமானத்தை ஓட்டி செல்பவன் மற்றவர்களை தப்பிக்க சொல்லிவிடுவான். காரணம் விமானத்தில் உள்ள எஞ்ஜீன் கெட்டுபோய்விடும். மற்றவர்கள் தப்பித்து விடுவார்கள். இவன் விமானத்தை கஷ்டப்பட்டு நிறுத்துவான். மலை உச்சியில் நின்றுவிடும். யப்பாடா என்று பெருமூச்சு விடும் நேரத்தில், விமானம் balance செய்ய முடியாமல் கீழே விழுந்து நொறுங்கிவிடும்.

அப்போ படத்துல குறையே இல்லையா என்று நினைக்கலாம். இருக்கு இருக்கு.... அமெரிக்கா ஜனாதிபதியை ரெம்ம்ம்ம்ம்ப நல்லவராய் காட்டிய விதம் எனக்கு கொஞ்சம் சிரிப்பா இருந்தது. ஹீரோவின் குடும்பம் மட்டும் எல்லாவற்றையும் கடந்து தப்பித்து போகும் விதம். இவ்வாறு, கூர்ந்து பார்த்தால் லாஜிக் இடிக்கும். இருந்தாலும், படத்தின் பிரமாண்டத்தில் இவையெல்லாம் தூசியாய் போய்விட்டது.

மனதில் எழுந்த வியப்பு: அப்படி உலகம் அழிந்தால், பணக்காரன் spaceshipல் ஏறி தப்பித்து விடுவான், அப்போ ஏழைகள்?

சீனாவில் உள்ளவர்களுக்கு மூளை எப்படிய்யா வேலை செய்யுது?

ஆக மொத்தத்தில் படம் சூப்பர்!! கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.

Nov 9, 2009

ஜஸ்ட் சும்மா(9/11/09)

பரிட்சை இன்னும் 15 நாட்களில் ஆரம்பிக்க போகுது. வகுப்பில் கிளாஸ் பரிட்சை ஒன்னு வச்சாங்க. அதுல..ம்ம்... 5 மார்க் மேல வந்தாவே பெரிய விஷயம்னு நினைக்குறேன். கேள்வியை பார்த்து படிச்சு புரிஞ்சுக்கவே மயக்கம் வந்துட்டு!

"மனிதன் புரிந்து கொள்ள இது மனித பரிட்சை அல்ல. அதையும் தாண்டி கொடூரமானது!" - சங்கம் வைக்கும் அளவுக்கு வசதியில்லாத சங்கம்.

போட்டு அடிச்சு ஏதாச்சு பண்ணி, படிக்கவேண்டிய சூழ்நிலை வந்திருக்கு. பார்ப்போம்.
_----------------------------------------------------------------------------------------

சமீபத்தில் 'கண்டேன் காதலை' படத்தை பார்த்தேன். அரை மணி நேரத்துக்கு மேல பாக்க முடியல படத்த. பரத் பேசாம வேற வேலைக்கு போகலாம். யோவ், ஹிந்தி படத்த காபி அடிக்குறீங்க....அத இந்த அளவுக்கா காபி அடிப்பீங்க!! ஐயோ ஐயோ...
-----------------------------------------------------------------------------------------

சித்து ப்ளஸ் டூ படப்பாடல் வெளியாகிவிட்டன. பாக்யராஜ் இயக்கத்தில் அவர் மகன் நடிக்கும் (நடிச்சு இருக்காரான்னு தெரியல...) படம். இசை தரண். பூவே பூவே பாடல் செம்ம பாட்டுய்யா! இந்த பாட்டு மட்டும் தான் நல்லா வந்துருக்கு. சூப்பர் பாடல்! கேட்டு பாருங்க. யூவன், சின்மயி பாடியிருக்காங்க.
-----------------------------------------------------------------------------------------

ஓபாமா சிங்கைக்கு வருகை தந்து இருந்தார்.பார்க்க தான் வாய்ப்பு கிடைக்கல. இல்லை என்றால் எங்க வீட்டு தீபாவளி முறுக்கு இரண்டு கொடுத்து விட்டுருக்கலாம் அமெரிக்காவுக்கு, அப்பரம்..மிஷேல் அண்ணி சாப்பிட வேண்டாமா? ஹிஹிஹி.......
-----------------------------------------------------------------------------------------

Nov 6, 2009

கல்கி சஞ்சிகைல நம்ம பெயரு வந்து இருக்குப்பா!


நேத்திக்கு சகபதிவர் ஒருத்தர், கார்த்திகா ரஞ்சன்கிட்ட (http://www.neyamukil.blogspot.com) பேசிகிட்டு இருந்தேன். என்னோட வலைப்பூ பக்கத்த பத்தி கல்கில எழுதியிருக்கேன்னு சொன்னாங்க. ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப சந்தோஷமா இருந்துச்சு. அவங்க எனக்கு அந்த செய்தியை ஸ்கேன் செய்து அனுப்பவதாக சொன்னாங்க. கோபி அண்ணாகிட்ட இந்த விஷயத்த பத்தி சொன்னேன். உடனே அனுப்பிவச்சார் ஸ்கேன் செய்து. நன்றி அண்ணா.

இதற்கிடையில், நானும் நம்ம கண்ணால அந்த புத்தகத்துல என்ன எழுதியிருக்குன்னு படிக்கலாம்னு வாங்கி பார்த்தேன். நானும் சென்று வாங்கினேன். முதலில் எந்த பக்கத்தில் வந்து இருக்குதுன்னு தெரியாம புரட்டி புரட்டி பார்த்தேன். அப்பரம் அகப்பட்டு விட்டது பக்கம்.
அப்பரம் என்ன "எல்லாம் புகழும் ஒருவன் ஒருவனுக்கு...." பாட்டு அந்த கடையில நிக்குற எல்லாருமே என்னைய பாத்து பாடுற மாதிரி ஃவீலிங். ஹிஹி.....

என் வலைப்பதிவின் பெயர். சமீபத்தில் எழுதிய அடிக்கடி செய்து அடித்து கொண்டிருப்பவரின் பட்டியல் என்னும் பதிவை போட்டு இருந்தார்கள். சின்ன செய்தியாக இருந்தாலும், எனக்கு இது மிகப்பெரிய சாதனை. சொல்ல வார்த்தை இல்லை. கார்த்திகா அக்காவுக்கு மறுபடியும் நன்றி!!!