Feb 22, 2012

அஸ்கு லஸ்கு (சிறுகதை)

சோபாவில் உட்கார்ந்து படம் பார்த்து கொண்டிருந்தனர் சுபாஷும் அவன் குழந்தை ஆதிஷும். ஆதீஷ், சுபாஷ் மடியில் தலை வைத்து தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தது.

சுபாஷ், " ஆதி... தூக்கம் வந்தா, உன் ரூமுக்கு போவோமா?"

ஆதிஷ், "அப்பா, please பா... கொஞ்சம் நேரம் டீவி பாக்கனும்" என்றவன் கொஞ்ச நேரத்தில் தொலைக்காட்சி பார்த்து கொண்டே தூங்கிவிட்டான். அவனைத் தூக்கி கொண்டு படுக்கையில் போட்டுவிட்டு airconயை அழ்த்திவிட்டு அறைகதவை சாத்தினான். அப்போது வீட்டுக்குள் நுழைந்தாள் சமீரா.

"வந்துட்டீயா மா." என்றான் சுபாஷ்.

"வந்தபிறகு வந்துட்டீயானா என்ன அர்த்தம்?" சலித்து கொண்டே தனது ஆபிஸ் பைகளை மேசையில் வைத்தாள். ஆபிஸில் என்னவோ நடந்திருக்கும் என்று புரிந்தது சுபாஷுக்கு. அவள் செம்ம கோபத்தில் இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டவன் கொஞ்ச நேரம் அமைதியாய் இருந்தான். அவளது கைபேசி அலறியது.

"சார், அத நான் அப்பவே அனுப்பிட்டேன். schedule என்கிட்ட இல்ல. ராம்கிட்ட இருக்கு. அவர்கிட்ட கேளுங்க. எல்லாத்தையும் ஏன் என் தல மேலேயே போடுறீங்க...அதான் எல்லாருக்கும் deployment பத்தி clearer சொல்லிட்டாங்களே. ச்சே... " கடுப்பில் பேசிவிட்டு கைபேசியை தூக்கி போட்டாள் மேசையில். நாற்காலியில் தலை சாய்த்து, கண் மூடி படுத்து இருந்தாள். நாற்காலி பின்னாடி நின்ற சுபாஷ், சமீராவின் தலையை சற்று massage செய்தான்.

"வேண்டாம்.....விடு" என்றவள் சுபாஷின் கையை விலக்கினாள்.

அவள் பக்கத்தில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தான். கண் மூடி இருந்த சமீராவை கொஞ்சம் நேரம் பார்த்தான்.

"ஆதிஷ்?" என்றாள்.

"தூங்கிட்டான்." என்றான்.

சுபாஷ், "சாப்டீயா?"

பதில் வரவில்லை. அப்படியே இருந்தாள்.

சுபாஷ், "சாப்டுறீயா?"

மௌனமாக இருந்தாள்.

"சரி, உனக்கு காபி எடுத்துட்டு வரேன்," என்றவன் எழுந்து சமையலறைக்கு சென்றான். எழுந்தவனின் கையை பிடித்து அவனை நிறுத்தினாள்.

"என்ன மா? என்ன ஆச்சு?" என்றான். சுபாஷை இறுக்க கட்டிபிடித்து கொண்டாள் சமீரா. அவன் நெஞ்சில் முகம் சாய்த்திருந்த சமீரா,

"புது சோப்பா?"

சிரித்தவன், "இல்ல. natural smell." முகம் சாய்த்திருந்த சமீரா தலை நிமிர்ந்து அவனை பார்த்து,

"idiot" என்று சொல்லிவிட்டு மறுபடியும் அவன் நெஞ்சில் முகம் சாய்த்து கொண்டாள்.

"are you ok?" என்று கேட்டான்.

"ம்ம்..." என்றாலும் அவளது குரலில் ஒரு சோகம் படர்ந்தது.

"no you are not ok. சொல்லு என்ன ஆச்சு?" என இன்னும் இறுக்கி கட்டிபிடித்து கொண்டவனிடம் சமீரா,

"தெரியலடா, இப்பலாம் ரொம்ப tension ஆயிடுறேன். ரொம்ப கோபம் வருது." என்றவள் அலுவலகத்தில் நடந்தவற்றை கொட்டி தீர்த்தாள்.

"புரியுது மா. சில managerகள் அப்படி தான் போட்டு வாட்டி எடுப்பாங்க. கஷ்டம் தான். இன்னும் கொஞ்சம் நாளைக்கு பாரு... இல்லன்னா நீயும் உன் வேலையும் போதும்டா-னு சொல்லி transfer வாங்கிடு. ரொம்ப கஷ்டமா இருந்துச்சுன்னு, கொஞ்ச நாளைக்கு வீட்டுலே இரு. உனக்கும் breakஆ இருக்கும். mind freshஆ இருக்கும். புதுசா யோசிக்கலாம். don't worry. aal izz well. if all is not well, then push the manager in the well." என்று சொல்லிவிட்டு புன்னகையித்தான்.

"hahaha...." வாய்விட்டு சிரித்தாள் சமீரா.

தொடர்ந்தாள் சமீரா, "thanks டா. i feel better now."

சுபாஷ், "இன்னொனும் செய்யலாம்."

சமீரா, "என்ன?"

சுபாஷ், "இப்படி gapஏ இல்லாமல் இறுக்கி கட்டிபிடிக்கலாம்." என்றவன் அவளை ஜன்னல் அருகே இழுத்து சென்றான்.

சமீரா, "டேய்... என்ன பண்ணுற? விடு. ஆதிஷ் வந்துட போறான்."

சுபாஷ், "கட்டி பிடிச்சதுனால தான் அவனே வந்தான்." என்று கண் சிமிட்டினான்.

சமீரா, "oh my god, what a cheesy line? ச்சீ போடா...." என அவன் பிடியிலிருந்து தப்பிக்க முயற்சித்தாள்.

"முடியாது. சும்மா இருந்த சங்க எடுத்து அமலா பால் மாதிரி பப்ப பப்பா பப்பபாண் ஊத்திட்டு இப்ப போகனும்னு சொல்லுறீயா? nothing doing. kiss me now." என்று கட்டளையிட்டான்.

"ப்ச்....நான் இன்னும் குளிக்கலடா. I feel very stuffy." என பதில் அளித்தாள்.

"ஒன்னும் தேவையில்ல. குடும்பத்துல ஒரு ஆளு குளிச்சா போதும். kiss me." என்று சொல்லிவிட்டு அவனது உதடுகளை அவளது உதடுகள் அருகே கொண்டு சென்றான். சமீரா, தனது ஆள்காட்டி விரல்களால் அவனது உதடுகளை தடுத்தாள்.

"நீ வர வர மோசமா போயிகிட்டு இருக்க. உனக்கு இதலாம் யாரு சொல்லி கொடுக்குறாங்க?" என புருவங்களை சுருக்கி கேட்டாள் சமீரா.

"ஏய்...நான் அனுப்புற links எல்லாம் நீ படிக்கறது இல்லையா?" என்றான்.

"என்ன links??" என்றாள்.

"enpoems.blogspot.com கதைகள் links? அவங்க எழுதற கதை எல்லாம் ஒரே கதை தான். ஒரு குழந்தை தூங்கும். கதைல வர wife கோபமா, இல்ல tiredஆ இருப்பாங்க. husband romance பண்ணுவாரு." புன்னகையித்தான்.

சமீரா, "so அந்த மாதிரி கண்டத படிச்சு தான் கெட்டு போயி இருக்கீயா? ஏன் வேற நல்லா விஷயமே உனக்கு படிக்க தெரியாதா?"

சுபாஷ், " எனக்கு அது தான் நல்லா விஷயம்."

சமீரா, "சரி இப்ப என்ன பண்ணனும்?"

சுபாஷ், "huh...ரெண்டு பேரும் சேர்ந்து மாவு பிசஞ்சு, பூரி பண்ணுவோமா? யாரடி இவ... உங்கிட்ட ஒரு கிஸ் வாங்க இவ்வளவு போராடனுமா?" என்று விளையாட்டாய் கோபித்து கொண்டான்.

அவனது கன்னங்களில் கைவைத்தாள் சமீரா. மெதுவாய் அவன் முகம் அருகே சென்றாள். குஷியான சுபாஷ் கண்களை மூடி கொண்டான்.

அறையை திறந்து வெளியே வந்தான் ஆதிஷ் கண்களை கசிக்கி கொண்டு, "அப்பா, toilet போனும்?"

சமீராவும் சுபாஷும் வாய்விட்டு சிரித்தனர்.

*முற்றும்*

Feb 20, 2012

2 மொக்கை, 1 சூப்பர், 1 சுமார்!

கடந்த வாரத்தில் 4 படங்கள் பார்த்தேன் - ek main aur ekk tu, டோனி, காதலில் சொதப்புவது எப்படி?, முப்பொழுதும் உன் கற்பனைகள்.

2 மொக்கை:

பார்த்தில் முதல் மொக்கை 'முப்பொழுதும் உன் கற்பனைகள்'. ஐயோ யோ, இயக்குனர் வெற்றி படங்களை தயாரித்தவர், கௌதம் மேனனின் நண்பர் என்பதால் என்னவோ, தலைப்பில் மட்டும் தான் அழகு. கதை, திரைக்கதை, நடிப்பு- ரொம்பவே கொடுமை. 'ஒரு முறை' பாடல் பரவாயில்லை. rich look படத்திற்கு but poor கதை!
ஆனால், நான் ரசித்தது ஒன்னே ஒன்னு தான் 'அதர்வா'. :)))))))))))))

பிச்சி போட்ட பரோட்டா மாதிரி அவர் தமிழ் இருந்தாலும், அதை ரசித்தேன் அகில உலக 'அதர்வா' ரசிகர் மன்றம் தலைவி என்பதால்! அவருக்காக கவிதைகூட எழுதியிருக்கேன்.

நீ அதர்வா?
இல்லை
என்னைத் தாக்கிய
அதிர்வா?

இவர் அடுத்ததாக இயக்குனர் பாலாகிட்ட படம் பண்ணுறாராம். என்னமோ போங்க சார், எனக்கு மனசே சரியில்லை!! இப்படி ஒரு அழகிய முகத்தை போய் தாடி வைக்கனும், தலைக்கீழா நிக்கனும் அப்படின்னு சொல்லி என்ன பண்ண போறாரோ!!??
----------------------------------------------------------------------------------------

அடுத்த மொக்கை- ek main aur ekk tu.

ரொம்பவே எதிர்பார்த்தேன். படம் ஒரு laughter riot என்று நினைத்து பார்த்தால், சிரிப்பே பக்கத்தில் வர மாட்டேங்குது. அப்படி ஒரு கதையில்- காமெடியை அள்ளி வீசியிருக்க வேண்டாமா? பெரிய ஏமாற்றம். இருப்பினும், என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும், கரீனா கபூர் புகுந்து விளையாடுகிறார்! அவரின் வேலையை நன்றாகவே செய்து இருக்கிறார்.

---------------------------------------------------------------------------------------
1 சுமார்- காதலில் சொதப்புவது எப்படி?

வித்தியாசமான திரைக்கதை. கதை சொன்ன விதம் வித்தியாசம். ஏற்கனவே பார்த்த குறும்படம் என்பதால் என்னவோ, அதை compare பண்ணாம இருக்க முடியவில்லை. எனக்கு குறும்படம் தான் பிடித்து இருக்கிறது. சில விஷயங்களை பண்ணாம இருந்திருந்தால் அதன் மதிப்பு தக்க வைக்க முடியும். இப்போ நானே, ஓரளவுக்கு ஏதோ எழுதுவதால், பொருளாதாரம் பத்தியோ அல்லது விஞ்ஞானம் பத்தியோ எழுதினால் தாங்குமா? உலகம் தாங்காது இல்ல! அதே மாதிரி தான் இப்படமும்- அப்படியே குறும்படமாகவே வைத்திருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

சரி விடுங்க...எடுத்தாச்சு! சித்தார்த் வருகிறார்- அதற்காகவே படத்தை பார்க்க முடிந்தது.

-----------------------------------------------------------------------------------

1 சூப்பர்- டோனி!!!

அருமையிலும் அருமை. 'நண்பன்', 'சந்தோஷ் சுப்பரமணியம்' வகையில் பெற்றோர்கள் பிள்ளைகளை புரிந்து கொள்ள வேண்டும் என நமக்கு எடுத்து கூறும் ஒரு படம். படத்தில் வந்த ஒவ்வொரு வசனமும் சூப்பர்!!! பல காட்சிகள் அப்படியே என் வீட்டில் நடந்திருக்கின்றன- கணக்கு வராததால் அக்காவை அடித்தது. கிரிக்கெட் பார்த்த போது, 'அது உனக்கு சோறு போடுமா?' என்று அம்மா என்னை பார்த்து கேட்டது, பிடிக்காத படிப்பை தான் படிக்க வேண்டும் என்று சொல்லியது.

பல காட்சிகளை பார்த்து, என்னை அறியாமலேயே அழுதேன். ரொம்பவே அழுதேன். பெற்றோர்கள் சொல்வது எல்லாம் நம்ம நல்லதுக்கு தான் என்று மனதை ஏமாற்ற முடியவில்லை. 'படிக்காதவங்கவிட படிச்ச பெற்றோர் தான் தப்பு பண்றாங்க' என்ற வசனம் top class.

பள்ளிகூடத்தில் social teacher கிட்ட பிரகாஷ், 'உங்களுக்கே ஒரு subject தான் தெரியுது. ஆனா புள்ளைங்க மட்டும் எல்லாமே படிக்கனுமா?' எவ்வளவு உண்மையான கருத்து!!! கல்வி என்ற ஆயுதத்தால் தாக்கப்பட்ட ஒரு ஜீவன் நான்!!

பெற்றோர், பிள்ளைகள், ஆசிரியர்கள்- என எல்லோரும் பார்க்க வேண்டிய படம்!!!

simply super!!!!!!!!!!

------------------------------------------------------------------------------------

Feb 8, 2012

காதலில் சொதப்பாமல் இருப்பது எப்படி?


உங்கள எப்படிங்க correct பண்றது என்று புலம்பி கொண்டிருக்கும் பல பேருக்கு இந்த போஸ்ட் கொஞ்சம் பிடிச்சிருக்கும்.

இப்போ facebook வந்த காரணத்தால், புதிய நண்பர்களை கண்டுபிடிப்பது என்பது கொஞ்சம் சுலபமா போச்சு! சரி, விஷயத்துக்கு நேரா வரேன். பசங்களுக்கு அவங்களுக்கு பிடிச்ச பெண்ணின் மனதில் இடம் பிடிப்பது எப்படி? அதுக்கு ரெண்டு விஷயம் ரொம்ப தேவை- 1) திறமை 2) பொறுமை.

திறமை- உங்களுக்கு பிடிச்ச பெண்ணுக்கு 1008 நண்பர்கள் facebookல் இருந்தாலும், நீங்க அவங்க மனசுல இடம் பிடிக்கும் திறமை வேண்டும்.

பொறுமை- பொறுத்தார் பூமி ஆழ்வார். இன்னும் கொஞ்சம் பொறுமையாய் இருந்தால், ஒரு பொண்ணு மனசையும் ஆளமுடியும்.

tip no 1: எடுத்தவுடனே அவள் ஃபோன் நம்பரை கேட்பது, ஒரு strict traffic police ஆபிசர்கிட்ட லஞ்சம் கொடுப்பதுபோல். செம்மயா விழுவும்!

ஹாய், எப்படி இருக்கீங்க, எங்க படிக்குறீங்க என்று எல்லாம் கேட்டுவிட்டு, பேச்சை தொடரும் உத்தி/திறமை வேண்டும்.

(அது எப்படிங்க? என்று நீங்க கேட்பது எனக்கு கேட்குது)

அவள் info pageல் பிடித்த புத்தகம், பாடகர், இசை, படம் என்று அவளுக்கு பிடித்து விஷயங்களை போட்டு இருப்பாள். அதை வைத்து 'காயை' நகர்த்த வேண்டும்.

உதாரணம், அவளுக்கு shah rukh khanயை பிடித்து இருக்கு என்று வைத்து கொள்வோம். facebook chat-ல்...

நீங்க: உங்களுக்கு shah rukh khanயை ரொம்ப பிடிக்கும் போல் இருக்கு.

அவள்: yes.


நீங்க: எத்தன வருஷமா அவரோட fan?


அவள்: ரொம்ப வருஷமா. 5வது படிக்கும்போதே.


நீங்க: எல்லா படத்தையும் பார்த்துடுவீங்களா?


அவள்: ஆமா. நீங்க? உங்களுக்கு யார பிடிக்கும்?


எப்போ அவள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டாளோ, அப்போதே உங்களுடன் பேச்சை தொடர ஆசைப்படுகிறாள் என்று அர்த்தம். :) ஒரே topicகில் பேச்சை விடாமல், பலவற்றை சுவாரஸ்சியமாய் சொல்லுங்க, பேசுங்க.



tip no 2: அவள் போடும் எல்லா facebook statusக்கும் 'like' போட்டு நீங்க ரொம்ப வெட்டியா இருக்கீங்கனு காட்டாதீங்க. facebook comments போடும் போது, நகைச்சுவையாகவே அல்லது அறிவுபூர்வமாகவோ போடுங்க. சில நேரங்களில் அவள் ரொம்ப நொந்துபோய் கவலையாய் ஒரு status போட்டால், அதற்கு நீங்க அவளுக்கு தனியாய் ஒரு facebook message அனுப்புங்க.

hi ராஜி

எப்படி இருக்கீங்க? கொஞ்ச நாளாவே, உங்க status எல்லாம் ரொம்ப நொந்துபோய் எழுதுறீங்க? cheer up buddy! கவலைய விடுங்க. ரொம்ப சோகமா போனாலும் உடம்ப நல்லது இல்ல. அதுக்கும் சோகத்த மனசுலே பூட்டி வைக்காம statusஆ போடுறதும் நல்லது தான். atleast உங்க friends ஆறுதலா இருப்பாங்க. கவலையா இருந்தா, friendsகூட வெளியே போயிட்டு வாங்க, இல்லன்னா comedy விடியோஸ் பாருங்க. whenever I am down, I just go to sleep. that's the best remedy for me:) times will be tough but we are tougher! :)

இப்படி ஒரு மெசேஜை போட்டுவிட்டு கூடவே அவங்களுக்கு ஏதேனும் காமெடி clip linkயை அனுப்பிவிடுங்க. 6 ballயையும் 6 சிக்ஸர் போட்ட மாதிரி, சார்! இதுல ரொம்ப முக்கியமான விஷயம், அவங்களுக்கு என்ன சோகம்னு நீங்க கேட்டுவிட கூடாது. அவங்களோட privacyக்கு நீங்க மரியாதை கொடுக்கனும். அவங்களா சொன்னால் தான், அது சரி. 'en frienda pola yaaru machan' என்று அவள் உங்களை பத்தி நினைப்பாள், அப்பரம் நீ தான் என் மச்சான் என்று கூடிய விரைவில் சொல்வாள்!!

(எத்தன நாளைக்கு தான் ஃபோன் நம்பர் வாங்காம, facebookலே இருக்குறது? அப்படினு நீங்க கேட்பது புரியது. அதுக்கு தான் அடுத்த tip)

tip no 3: நேரடியா ஃபோன் நம்பரை கேட்க கூடாது. நீங்கள் ஒரு volunteer charity programme செய்யுறீங்க இல்ல ஒரு sports event தயார் பண்ணுறீங்க, அதுக்கு ஆள் தேவை இல்ல ஒரு முக்கியமான book தேவை அதுக்கு தெரிஞ்சவங்க வேணும் என்று சொல்லிவிட்டு. அப்படி யாரேனும் தெரிந்தால், அவங்க நம்பர் வேணும். எனக்கு உடனே என் நம்பருக்கு message பண்ணுங்க என்று சொல்லிவிட்டு உங்க நம்பரை கொடுத்துவிட்டு உடனே 'facebook chat' லிருந்து offlineக்கு வந்துவிட வேணும். உங்க நம்பர் கொடுத்த மாதிரியும் இருக்கும், அவங்க message பண்ணும் வாய்ப்பும் இருக்கும்.

இங்க தான் பொறுமை தேவை. உடனே நம்பர் வராது. tip no 3யை அவளை நன்கு தெரிந்தபிறகு, 4 அல்லது 5 மாதம் கழித்து பயன்படுத்துவது நல்லது.



பசங்களே, முக்கியமான விஷயம் 'நம்பிக்கை'. தெரியாத பொண்ணு facebookல் உடனே நம்பர் கொடுக்கனும், பாக்கனும், பீச்-க்கு போனும் அப்படின்னு ஒரே பாடலில் பெரிய ஆளாய் ஆகிவிட வேண்டும் என்று கனவு காணகூடாது. (ஒரே பாடலில், தனுஷ் வேண்டும் என்றால் பெரியா ஆளாய் வந்துவிட முடியும். நம்மள ரொம்ப சாதாரணமான மனுஷங்க. அதை புரிந்து பொறுமையாய் இருந்தால், நல்லதே நடக்கும்.)

காதலில் சொதப்பாமல் இருங்க!!