Dec 26, 2011

ஜஸ்ட் சும்மா (27/12/12)

நண்பன் பட பாடல் பட்டைய கிளப்பிவிட்டது. வெளியான முதல் நாளிலிருந்து எனது தின 'சுப்ரபாதமாக' ஒலித்து கொண்டிருக்கிறது 'அஸ்கு லஸ்கு' பாட்டு!

Ask Laska Amour Amour
Ai Ast Ast Liebe..
Ahava Bolingo Cinta Cinta
Ishq Ishq Meile..
Love Ishtam Premam Pyaaro Pyaaro
... ஒரு காதல் உந்தன் மேலே

அத்தனை மொழியிலும்
வார்த்தை ஒவ்வொன்றும் கொய்தேன்.
மொத்தமாய் கோர்த்துதான்
காதல் செண்டொன்று செய்தேன்!
16 மொழிகளில் 'காதல்' வார்த்தைகளை வைத்து ஒரு பாட்டு! பின்னிட்டாரு மதன்கார்கி!! ஒரு சிலர் நினைக்கலாம்- என்ன டா இது, தமிழ் பாட்டுல தமிழே வராதா என்று! அதற்கு பதில் அடி கொடுக்கும் வகையில் 'நாடிமானி' எனும் வார்த்தையை பயன்படுத்தி இருப்பார் பாடலில்.

நாடிமானி என்றால்? அட நம்ம stethoscope.

அப்பரம் எனக்கு ரொம்ப பிடித்தது கணக்கு ஐடியாக்களை வைத்து பாடலை எழுதியது!

முக்கோணங்கள் படிப்பேன்/ உன் மூக்கின் மேலே
(Triangles, I study on your nose)
விட்டம் மட்டம் படிப்பேன்/ உன் நெஞ்சின் மேலே
(Width and depth I understand, from your heart)
மெல்லிடையோடு வளைகோடு / நான் ஆய்கிறேன்!

(Curve line, I explore on your waistline)

(http://nandinikarky.blogspot.com/2011/12/lyrics-asklaska-setsquare-sthethoscope.html)

மதன்கார்கியின் மனைவியின் வலைப்பூ இது! அதில் இந்த பாடலை பற்றி விளக்கம் இருக்கு:)))
**********************************************************************************

3 பட பாடல்களையும் கேட்டேன். ம்ம்ம்.... கொலவெறி மட்டும் தான் அதிரடி. மற்றவை எல்லாம்..ம்ம்... ஒன்னும் சொல்றதுக்கு இல்ல!

*********************************************************************************
புது வருஷம் வர போகுது. லீவும் முடிய போகுது! வேலை மறுபடியும் ஆரம்பிக்க போகுது...ஐயோ! :((((((((((((

*********************************************************************************

ஒரு வாரத்துக்கு முன்னாடி ஒரு நாள், காலையில் எழுந்து பார்த்தேன். வீட்டில் யாருமே இல்லை! யப்பா....ரொம்ப நாள் கழித்து, தனிமை! ரொம்ப பிடித்து இருந்தது அந்த அமைதியான சூழல்! தனிமை, கொஞ்சம் பிடிக்கும்:) ரொம்ப பசிக்க ஆரம்பித்தது. ஆக, சமையலறைக்கு சென்றேன். இருந்தது வெறும் 2 ரொட்டி துண்டுகள். சும்மா sandwich சாப்பிடலாம் என்று தோன்றியது. ஆனால், அடுத்து நொடி ஒரு ஐடியா வந்தது. சூரியவம்சம் தேவையாணி இட்லி உப்புமா செய்தது போல் ஏதேனும் புதுசா செய்யகூடாதுனு?

எனக்கு தெரிந்த பொருட்களை வைத்து 'egg bread kothuprata' செய்தேன். ரொட்டி துண்டுகளை சின்னதாய் வெட்டினேன். அதில் முட்டையை ஊற்றி வெங்காயத்தையும் சேர்த்து பொரித்தேன். பிறகு, chilli pasteயை சேர்த்து உப்பு கலந்து மறுபடியும் ஒருமுறை பொரியல்! சாப்பிட்டு பார்த்தேன்...அட.. கொஞ்ச நல்லாவே இருந்ததுங்க!



ஆனால், சமையல் என்பது ரொம்ப ரொம்ப கஷ்டமான விஷயம். அது எல்லாருக்கும் சுலபத்தில் இஷ்டமான ஒன்றாக இருப்பதில்லை! இதை பலமுறை பல போஸ்ட்களில் சொல்லி இருக்கிறேன். என்னை பொறுத்தவரை, சமையல் என்பது 'therapy' போல்

எப்பவாவது செய்வது, எப்போதுமே செய்ய முடியாதுங்க:))))))))))))))))

*********************************************************************************

தோழி ஒருத்திக்கு கிரிஸ்மஸ்க்காக ஒரு சின்ன பொம்மை வாங்கி கொடுத்தேன். அதுக்கு பெயர் வைக்க ரொம்ப யோசித்தோம். பெயர் வைப்பது என்றால் எங்களுக்கு ரொம்ப இஷ்டம்.

தோழி: வித்தியாசமான பெயரா இருக்கனும்.
நான்: ம்ம்ம்....வித்தியாசமான பெயர்னா? அப்போ நீ வித்தியாசன்னு தான் வைக்கனும்.
தோழி: சூப்பர்!! வித்தியாசன்!:))))))
*********************************************************************************



Dec 21, 2011

நிலா அது வானத்து மேலே- (2)

பகுதி 1

பரவாயில்ல நாங்க பஸ்ல போறோம்'னு சொல்லிட்டு கிளம்பி வந்தோம். அச்சமயம் ஒரு பெண் வாகன ஓட்டுநர் (கையில் சிகரெட்) வந்தார். $15க்கு ஓகே சொல்லி ஏறினோம். ஆனால் அவர் main roadலில் போகாமல் சந்துகளில் போனார். ஆள் நடமாட்டமே இல்லை அவ்விடத்தில்....

ஏதோ ஒருவித பயம் மற்ற பெண்களுக்கு. எனக்கு microwave ovenல் உட்கார்ந்து இருப்பது போல் இருந்தேன். அம்புட்டு வெயில்! வாகனத்தில் ஏசி வேற இல்லை! கையில் ஒரு முட்டை இருந்திருந்தால், omeletteஆக மாறி இருக்கும்!

அவர் சந்துகளில் போனதற்கு ஒரு காரணம் இருந்தது. main சாலையில் அதிக traffic என்பதால் அவர் அவ்வாறு செய்தார். அப்போது தான் புரிந்தது- யாரையும் தப்பா நினைக்ககூடாதுன்னு!:))) அவர் எங்களை இறக்கிவிட்டு மீண்டும் இரண்டு மணி நேரத்தில் வருவதாக சொல்லிவிட்டு சென்றார். நாங்கள் நல்லா shopping செய்தோம். ice-lemon tea வாங்கினோம்- சாக்கடை தண்ணிகூட நல்லா இருக்கும்னு அப்போது தான் தோன்றியது!:((

பிறகு, வண்டியில் மீண்டும் கப்பலுக்கு சென்றோம். நான் முதலில் சொன்னதுபோல் கப்பல் உணவை மீண்டும் சுவைத்தோம்! தோழிக்கும் தங்கைக்கும் 'ஐஸ் கீரிம்' man என்று ஒருவர் மீது ஒரு கண்ணு என்று சொல்லியிருந்தேன் அல்லவா- அவருடன் போய் ஃபோட்டோ எடுக்கனும்னு ஒரே அடம் என் தங்கைக்கு! (தூக்கி வளர்த்த துயரம்...)

இந்த மானகெட்ட விளையாட்டுக்கா நான் வரவில்லை என்று சொல்லிவிட்டு சாப்பிட சென்றுவிட்டேன். அதுங்க எப்படியோ போய் ஃபோட்டோ எடுத்து கொண்டனர். ஹாஹா..ஹாஹா...ஆனால், அவர் கண்களை மூடியவாறு எடுத்துவிட்டனர்.

மறுநாள், phuket (thailand) சென்றோம். கடற்கரை ஓரம்! ரொம்ம்ம்ம்ம்ப நல்லா இருந்துச்சு. இந்த வெயில் தவிர இடம் ரொம்ப அருமையா இருந்துச்சு. burger king கடையில் ice-milo வாங்கினோம்- அமர்தம்!! அவ்வளவு இனிப்பா சுவையா இருந்துச்சு. ஆனால், அங்கயும் இந்த 'லொல்லு பசங்க' தொல்லை தாங்கமுடியல்ல. நாங்கள் இந்தியர்கள் என்று தெரியும். ஆக, இந்த கடைக்காரர்கள் (ஆண்கள்) எங்களை பார்த்து, "என்ன சாப்னியா?" (சாப்பிட்டீயா?) என்று கிண்டல் செய்தது சலிப்பை உண்டு பண்ணியது!

இருந்தாலும், 'customer'யை ஈர்க்கும் உத்தி என்று மனதை சமாதானம் செய்து கொண்டு வந்தோம். ஆனால், ஒரு கேள்வி- இதுவே நாங்க ஒரு ஆண் தோழரோடு சென்று இருந்தால், கிண்டல் நடந்து இருக்குமோ??? ஆக, சின்ன பொண்ணுங்கன்னா...கிண்டல் அடிக்கலாமா? என்னமோ போங்க!

ஆனா, என்ன நடந்தாலும் நாங்க சிரித்து கொண்டு எங்கள் கொண்டாடத்தை தொடர்ந்தோம்!

கப்பலில் முக்கால்வாசி நபர்கள் வட இந்தியர்கள் என்பதால் ஒரே ஹிந்தி தான் போங்க! மூன்று நாட்களில் அவ்வளவு இந்தி சொற்களை கற்று கொண்டோன். அறை தொலைக்காட்சியில் zee tv வேற தெரிந்ததா? அதையும் விடவில்லை. ஏதோ ஒரு ஹிந்தி நாடகம்- அந்த ஹீரோயின் microwave ovenல் சில்வர் பாத்திரத்தில் ஒன்றை வைப்பார். அது வெடித்துவிடும். இதை ரெண்டு நாளா காட்டி கொண்டிருந்தான். நாங்கள் எங்களால் முடிந்த அளவு காமெடியும், கலாட்டாவும் அடித்து ரசித்து பார்த்தோம்!

கப்பலில் சென்ற பயணம்- ரொம்ப பிடித்துபோய், வீட்டிற்கு திரும்பவே ஆசை இல்லை. எனக்கு அழுகையே வந்துடுச்சு! வேலையில் ரொம்ப நொந்து போயிருந்த எனக்கு, இது உண்மையாகவே ஒரு ஜாலியான நேரம்!

Dec 17, 2011

நிலா அது வானத்து மேலே- (1)

4d3night cruise tour சென்றுவந்தேன் தோழிகளோடு. வீட்டில் இதுக்கு அனுபதி வாங்குவதே பெரிய விஷயம். எப்படியோ ஓகேன்னு சொன்ன பிறகு, அனுபதி கொடுத்ததற்கே பெரிய பார்ட்டி வச்சு கொண்டாடனும். ஒரு வழியாய் கிளம்பி, சென்ற ஞாயிற்றுகிழமை superstar virgo கப்பலில் சென்றோம்.

நான்கு மணிக்கே உள்ளே சென்றுவிட்டோம். வலது காலை எடுத்து வைத்து சென்றபோது தான் உணர்ந்தேன் கப்பல் உலகம் என்பது வேறு ஒரு உலகம் என்று. அப்படி ஒரு பிரம்மாண்டம். கப்பலில் உள்ளவர்களில் 80% இந்தியர்கள். அதில் 79% honeymoon couples. வட இந்தியர்கள் என்பதால் புதுமண பெண்கள் கையில் வளையல்கள் இருந்தன.

கப்பலில் வேலை பார்க்கும் அனைவரும் அவ்வளவு அழகா இருந்தாங்க- அது பெண்களா இருந்தாலும் சரி ஆண்களா இருந்தாலும் சரி. பொங்கலுக்கே வெடி வெடிப்போம், தீபாவளி வந்தா சும்மாவா. பெயர் தெரியாது, ஆனா, எங்களுக்கு (நான், அக்கா, தங்கை, எனது மற்றும் இரண்டு தோழிகள்) பிடித்தவர்களுக்கு நாங்களே பெயர் வைத்தோம்.

housekeeping வேலை பார்த்தவர்- சீனர். அவருக்கு நாங்கள் வச்ச பெயர் 'சிரிச்ச மச்சான்'. அவர் முகத்தில் எப்போதுமே ஒரு புன்னகை இருக்கும். எங்களது அறையில் இருந்த கழிவறையில் சின்ன பிரச்சனை. எத்தனை முறை சொன்னாலும், சலிப்பு இல்லாமல் எங்களுக்கு உதவினார். அவருடன் ஒரு ஃபோட்டோ எடுத்து கொண்டோம். அவருக்கு அம்புட்டு சந்தோஷம் அதில். இதுவரை யாரும் அப்படி செய்தது இல்லை என நினைக்குறேன்!:)

அப்பரம், தோழி ஒருத்திக்கு அங்கிருந்த chef மீது ஒரு கண்ணு. அவர் ஒரு இரவு எல்லாருக்கும் ஐஸ்கீரிம் கொடுத்து கொண்டிருந்தார்- ஆக, அவருக்கு, 'ஐஸ்கீரிம் man' என பெயர் வைத்தோம்.

சாப்பாடு என்று சொல்லும்போது இதை நான் சொல்லியே ஆகனும். buffet styleல் தினமும் ஆறு வேளை சாப்பாடு- காலை உணவு, காலை தேநீர் டைம், மதிய உணவு, மாலை தேநீர் டைம், இரவு சாப்பாடு, late supper டைம். ஒவ்வொரு வேளையும் கிட்டதட்ட 25 வகை உணவு இருக்கும். சைவம் அசைவம் அனைத்தும் இருக்கும். duck, turkey, lamb இது போன்ற அசைவ உணவும் இருந்தது!!:)

இது தவிர dessertம் உண்டு- பல வகை கேக், பாயாசம். ஆமாங்க, இந்திய உணவும் இருந்தது- ரசம், சாம்பார், நாண், தயிர், அட ஊறுகாய் கூட இருந்தது.... இட்லி கூட இருந்தது அதுவும் சதுரவடிவில்!

கப்பலில் மொத்தம் 13 மாடிகள். பல கேளிக்கை நடவடிக்கைகள். எப்போதுமே கப்பலில் பல இசை நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி, ஆடல் பாடல் கொண்டாட்டமாக தான் இருக்கும். நீச்சல் இடம் இருந்தது. இரவில் நாங்கள் 13ஆம் மாடியில் இருந்து, காற்று வாங்குவோம். ஒரு இரவு 'celebrity disco' சென்றோம். ஆனால் நினைத்த அளவு கூட்டம் இல்லை. ஆங்கில பாடல்களும் 'chammak challo' பாடலும் போட்டார்கள்.

ஒரு நாள் மலேசியாவில் இருக்கும் penangல் இறக்கினார்கள். 8 மணி நேரம் கப்பல் அங்கு நிற்கும். ஆசைப்பட்டவர்கள் அவ்வூரை சுற்றி பார்க்கலாம். நாங்களும் சரி சும்மா ஒரு ஷாப்பிங் போயிட்டு வரலாம்னு கிளம்பினோம். இறங்கியவுடன் ஈக்கள்போல் எங்களை சுற்றி வளைத்தனர் அங்கிருந்து வாகன ஓட்டுனர்கள்- ஒரு மணி நேரத்துக்கு எவ்வளவு காசு. அங்கு போகலாம். இந்த மலைய பாக்கலாம்னு ஒரே தொந்தரவு. ஆனால், எங்கள் மனதில் பீதியை கிளப்பியது ஒன்று.

எங்களை பார்த்தவுடன் ஒரு தமிழ் வாகன ஓட்டுனர், "இந்த பொண்ணுங்கள freeயவே ஓட்டிக்கிட்டு போகலாம்' என சொல்ல. என் அக்காவுக்கு கோபம் கொந்தளித்தது. அங்கு நின்று கொண்டிருந்த முக்கால்வாசி வாகன ஓட்டுனர்கள் தமிழர்கள் தான். என்னடா இது இப்படி பேசுறாங்களேன்னு ஒரே வருத்தமா போச்சு.

சரி பேருந்து ஏறி போகலாம்னு பார்த்தா, ஒரு routeம் புரியல. சரி வாகனம் எடுக்கலாம்னு இன்னொரு 'தமிழ் அண்ணன்'கிட்ட போய் கேட்டோம். அவர் $20 ஆகும் என்றார்.
யோவ் யார்கிட்ட. நாங்க பாக்க சின்ன பசங்க. இப்படி ஏமாத்துறதா?- அப்படி சொல்லலாம்னு நினைச்சேன்.
'பரவாயில்ல நாங்க பஸ்ல போறோம்'னு சொல்லிட்டு கிளம்பி வந்தோம். அச்சமயம் ஒரு பெண் வாகன ஓட்டுநர் (கையில் சிகரெட்) வந்தார். $15க்கு ஓகே சொல்லி ஏறினோம். ஆனால் அவர் main roadலில் போகாமல் சந்துகளில் போனார். ஆள் நடமாட்டமே இல்லை அவ்விடத்தில்....

(பகுதி 2)