Dec 30, 2009

daddy mummy வீட்டில் இல்ல (series 3)- பகுதி 3

பகுதி 1
பகுதி 2

மனம், கால்கள், கைகள், மூக்கு, நாக்கு எல்லாமே பயத்தால் நடுங்கின. ஆனால் கலா மட்டும் ரொம்ப சாதாரணமாக அமைதியாக 'இந்தியன் மூவி நியூஸ்' மாத இதழை புரட்டி கொண்டிருந்தாள்.

சசி, "முருகா முருகா முருகா..." என்று ஓதி கொண்டிருந்தாள். சுதா மடிக்கணினியில் காலேஜ் இணைய பக்கத்திற்கு சென்றாள். காலேஜ் தேர்வு முடிவுகள் என்னும் லிங்க்கை கிளிக் செய்தாள் சுதா. விஜி, சுதா, சசி ஆகியோரின் கண்கள் பெயர் பட்டியலை மேலும் கீழும் அளந்தன. சசி சத்தமாக வாசித்தாள் முடிவுகளை.

விஜியின் grades: C, C, C, B,C
சுதாவின் grades: B,B,D,D,C
சசியின் grades: A,A,B,C,C
கலாவின் grades: C,C,D,D,D

விஜி, "ஓ ஷிட்..... மார்க்ஸ் என்ன இப்படி பிச்சைக்காரன் வாந்தி எடுத்த மாதிரி இருக்கு..." தலையில் கை வைத்தாள்.

கலா சமாதானப்படுத்தினாள் அனைவரையும், "ஏய் கேர்ள்ஸ்...cheer up cheer up! எல்லாரும் pass பண்ணிட்டோம்ல...அப்பரம் என்ன கவலை... the destiny is not important- the journey matters the most!" சிரித்தாள்.

சுதா, "ஏ... வீட்டுல இந்த மார்க்ஸ காட்டினால் செருப்பு பிஞ்சிடும்..."

கலா, "அப்போ புது செருப்பு வாங்கலாம்னு சந்தோஷப்பட்டுக்கோ மச்சி!"

சசி, " நான் செத்தேன் டி... நான் C கிரேட் வாங்கினதே இல்ல வாழ்க்கையில... கண்டிப்பா எனக்கு சங்கு தான்." கண்கள் கலங்கின.

கலா, "ஐயோ ஏன் கேர்ள்ஸ்.... கிரேட் பத்தி மட்டுமே யோசிக்குறீங்க. grades don't measure your true intelligence. இந்த A... B... இதெல்லாம் நம்ம 4 வயசா இருந்தபோது கத்துகிட்ட ஒரு எழுத்து, அவ்வளவு தான்!! that don't decide our fate and we should not allow them to decide our fate. so what if you have scored a C or D in an exam? it doesn't make u less human being. "

சுதா, "வீட்டுல எப்படி டி சமாளிக்க முடியும்? திட்டியே கொன்னுடுவாங்க. "

சிரித்துகொண்டே கலா, " ஒரு மூக்கு, ஒரு வாய படைச்ச கடவுள் எதுக்கு ரெண்டு காதுகள படைச்சான்னு நினைக்குற? பெத்தவங்க திட்டுறது அவங்க கடமை, அதுல அவங்களுக்கு கொஞ்சம் பெருமையும்கூட வச்சுக்க... ஒரு காதுல திட்ட வாங்கினா, மறு காதுல அத வெளியாக்கிடனும். தப்பி தவறி மனசுக்கு போனுச்சு அப்பரம் ரெம்ம்ம்ம்ம்ப கஷ்டம். take it easy policy... மச்சிஸ்" சினிமா நியூஸின் மறுபக்கத்தை திருப்பினாள்.

சசிக்கு சற்று கோபம் வர, "உனக்கு என்ன மனசுல பெரிய இவள்னு நினைப்பா... உன்னால தான் நான் இப்படி ஆயிட்டேன்...."

மற்ற மூன்று பெண்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. கலாவும் முழித்தாள்.

சசி தொடர்ந்தாள், "இந்த செம்ஸ்ட்டர் ரொம்ப ஆட்டம் போட்டுடோம்! clubbing, movie அது இதுன்னு.... எல்லாம் உன்னால தான் கலா!" கோபத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் கைபேசியை மெத்தையில் தூக்கி எறிந்தாள்.

கலா, "இந்த வயசுல enjoy பண்ணாம அப்பரம் எப்ப டி enjoy பண்ண போறோம்..."

சசி எதுவுமே பேசவில்லை. கலாவுக்கு சற்று எரிச்சல் வர, "ஆமா, எனக்கு ஒன்னு புரியல... சசி ஏன் இப்படி ஓவர் சீன் போடுறான்னு! பாத்து சசி, ரொம்ப கோபம் பட்டா, சின்ன வயசுலே ஹார்ட் அட்டேக் வந்துடுமா?" சிரிக்க ஆரம்பித்தாள் கலா.

சசிக்கு ஆத்திரம் உச்சி மண்டைக்கு ஏற, " could you please stop your laughter and ur nonsense? you r such an irritating pest! don't get on my nerves kala!" கண்களில் கண்ணீர் கொட்டியது. கோபம், எரிச்சல், வெறுப்பு கலந்த கண்ணீர்.

உடனே சுதா, " quiet quiet. அம்மாவுக்கு கேட்டுட போகுது! shhhhhhh..." சாந்தம் படுத்தினாள்.

கலா, " சசி, நீ தான் இங்க ஓவரா பண்ணிகிட்டு இருக்க... not me. for your info, you better stop your bloody nonsensical over-emotional crying session now! right now!"

மீண்டும் தொடர்ந்தாள், " இங்க பாருங்க கேர்ள்ஸ்... புத்தக அறிவு வேற, பகுத்தறிவு வேற. வாழ்க்கைல நமக்கு உதவ போறது பகுத்தறிவு தான். அத வளர்த்துக்க... நம்ம நாலு இடத்துக்கு போனும்.... காலேஜ் புக்ஸவிட்டுடு மத்த விஷயங்களை பத்தியும் படிக்கனும். life is like a road with speed breakers. இந்த கிரேட்ஸ் வந்து ஒரு speed breaker மாதிரி நினைச்சுக்குங்கோ.... road முழுக்க speed breakers இருக்க போறது இல்ல."

சசி அழுகையிலும், " life is not a road, it is a race!"
இவர்கள் இருவரும் சண்டை போட்டு கொள்வது விஜிக்கும் சுதாவுக்கும் குழப்பமாக இருந்தாலும், அவ்வபோது சிரித்து கொண்டனர்.

கலா, " ஆமை முயல் கதை கேள்விப்பட்டு இருக்கீயா? மெதுவா போன ஆமை தான் அந்த ரேஸுல ஜெயிச்சுது!"

சசி, " ஆனா, அந்த ரேஸுல இரண்டு பேரு தான் இருந்தாங்க... நம்ம போற ரேஸுல பல மில்லியன் பேர் ஓடிகிட்டு இருக்காங்க... நம்ம ஜெயிக்கனும்னா கண்டிப்பா வேகமா போய் தான் ஆகனும். மத்தவங்ககூட போட்டி போட்டு தான் ஆகனும்."

கலா மற்ற இரு பெண்களையும் பார்த்து, "ஏய் இந்த சசியோட friendshipa நான் 'divorce' பண்ணுறேண்டி ...... ஏன் மேன் இவ பாட்டி மாதிரி பேசிகிட்டு இருக்கா.... "

விஜி, "சசி, கூல் டவுன் மேன்... கலா சொல்றதிலும் ஒரு பாயிண்ட் இருக்கு. கூல் பா கூல் பா...."

சுதா, " வீட்டுல எப்படி சமாளிக்குறது?"

கலா, " வீட்டுல எல்லாரும் நல்ல மூட்ல இருக்கும்போது சொல்லு. இந்த தடவ எல்லாருமே ரொம்ப மோசமா தான் செஞ்சு இருக்காங்க. பேப்பர் கஷ்டமா இருந்துச்சு. கிளாஸுல நிறைய பேர் paper moderate பண்ண lecturersகிட்ட பேச போறாங்க. அப்படி இப்படின்னு நல்ல பீலா விடு. முகத்த சோகமா வச்சுக்கோ. அவங்க எகுறினா, நீ எப்போதுமே அமைதியா இரு. முடிஞ்சா இன்னிக்கு நைட் சாப்பாடு வேண்டாம்னு சொல்லிடு. அப்ப தான் புள்ள கவலை படுது நம்ம அதிகமா திட்ட கூடாதுன்னு பெத்தவங்க நினைப்பாங்க!! எப்படி?"

சுதா, "நீ கண்டிப்பா அடுத்த வருஷம் தேர்தல நிக்குற...."

என்ன சொன்னாலும் சசி சமாதானம் ஆகவில்லை. யாரிடமும் பேசமால் வீட்டிற்கு சென்றாள்.

லீவு முடிய கொஞ்ச நாட்கள் தான் இருந்தது. பரிட்சை முடிவுகளை சொல்லி வீட்டில் என்ன நடந்தது என்று ஒருத்தருக்கு ஒருத்தர் தகவல்களை தெரிவித்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் ஏற்படவில்லை. ஸ் எம்ஸ் மூலம் தான் தெரிந்தது, வீட்டில் செம்ம டோஸ்த் விழுந்தது என்று. ஆனால், ஒரு படத்தின் 'ஒன் லைன்' கதையை கேட்பதற்கும் முழு திரைக்கதையுடன் கதையை கேட்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா?

கலா அனைவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பினாள்- "girls, meet at carlo cafe at 5 pm tmr."

(பகுதி 4)

Dec 29, 2009

daddy mummy வீட்டில் இல்ல (series 3)- பகுதி 2

பகுதி 1

சசி, சித்தார்த்கூட சென்ற விஷயம் சுதாவின் அம்மாவுக்கு தெரிந்துவிட்டது என்றதும் அவளது மனம் வயிற்றுக்குள் சென்று மூச்சு குழாய் வழியாய் மேலே உருண்டு நாவில் நிற்பதுபோல் உணர்ந்தாள். மற்ற மூன்று பெண்களும் விளையாட்டாய் பேசிய பேச்சு பெரிய விபரிதமாய் முடிய போகிறேதே என்ற பயத்தில் கால்கள் 'டான்ஸ் இந்தியா டான்ஸ்' நிகழ்ச்சியை நடத்தின.

அறை கதவை முழுவதுமாய் திறந்தார் சுதாவின் அம்மா, "ஆமா கோகிலா, நான் பார்த்தேனே...நேத்திக்கு அவ அந்த சித்தார்த்கூட வெளியே போறத... அப்போ தான் அவன் மாமியார் பார்த்தா...அதுக்குள்ள தொடரும்னு போட்டான்... பாவிபய.. இனி திங்கட்கிழம வரைக்கும் வேட் பண்ணனுமே..." என்றார் தொலைபேசியில். சுதாவின் அம்மா தன் தோழியிடம் சீரியல் கதையை பற்றிதான் பேசுகிறார் என்று தெரிந்து பிறகு தான் போன உயிர் திரும்பி வந்தது நால்வருக்கும். சாப்பிட கேக் கொண்டு வந்தார் சுதாவின் அம்மா. அதை சுதா கையில் கொடுத்துவிட்டு தொலைபேசியில் மீண்டும் தீவிரமாய் பேச தொடங்கினார்.

அவர் அறையை விட்டு சென்றபிறகு, கலா குபீர் என்று சிரிக்க ஆரம்பித்துவிட்டாள். அதை தொடர்ந்து, விஜி, சுதா. சசி இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாதவளாய் உட்கார்ந்து இருந்தாள். அவளை சுயநினைவுக்கு கொண்டு வர கலா, சசியின் கைபேசியை பார்த்து, "ஏய் சித்தார்த் calling you di." என்று பொய் சொன்னாள்.

அதற்கு சசி, "எங்க? எங்க?" என்று அடிச்சு போட்ட கறுப்பான்பூச்சி போல் குதித்தாள். அதை பார்த்து மறுபடியும் சிரித்தனர் மற்ற பெண்கள். கோபம் அடைந்த சசி, "பொறுங்கடி.... நீங்களும் ஒரு நாள் இப்படி மாட்டுவீங்க... அப்ப இருக்குது உங்களுக்கு..."

சுதா கடிகாரத்தை பார்த்தாள். "ஏய் என் ஃபோன கொடுக்க ரவி இப்ப வந்துடுவான்.... வாங்க போவோம்."

"இவ என்னடி வயலுக்கு வேலை பாக்க போற மாதிரி எல்லாரையும் கூப்பிடுறா... நீயே போயிட்டு வா!" விஜி, சுதாவின் படுக்கையில் படுத்து கொண்டே பதில் அளித்தாள். சுதாவின் அம்மா கொண்டு வந்த கேக் துண்டுகளை ரசித்து ருசித்து சாப்பிட்டு கொண்டிருந்தாள் கலா.

"ப்ளீஸ் டி வாங்க போலாம்..." எல்லாரையும் கெஞ்சி அழைத்தாள் சுதா.

"கடவுளே, ஏன் என்னைய இந்த களுசட கூட்டத்தோட சேர வைக்குற." சிரித்துகொண்டே கலா, "சரி சரி வா போவோம்...."

சுதாவின் அம்மாவிடம், "மா, நாங்க கொஞ்சம் வெளியே போயிட்டு வறோம்." நைஸாக ஸ்கேப் ஆனாள் சுதா. சுதா ரவியை பக்கத்து தெருவுக்கு வர சொன்னாள்.

"ஏய் சுதா, ரவி யாருன்னு எப்படி கண்டுபிடிப்ப?" சசி புத்திசாலித்தனமான ஒரு கேள்வியை கேட்டாள். அதற்கு சுதா, "நான் ரவிகிட்ட சொன்னேன் ஒரு அழகான பொண்ணு, 3 அட்ட பிகரோட நிப்பா... அந்த அழகான பொண்ணு தான் சுதான்னு. " புன்னகையித்தாள்.

"அடியே அருந்ததீதீதீதீ!!!" தொதித்து எழுந்தாள் விஜி! அடிக்க வந்த விஜியை தடுத்தாள் சுதா. "ஏய் நான் சும்மா சொன்னேன் டி.... அவர்கிட்ட நான் ஒன்னுமே சொல்லல.... பாத்துக்கலாம் விடு..." என்றாள் சுதா. அனைவரும் ஆளுக்கொரு திசையில் பார்வையை வைத்திருந்தனர்.

காத்திருந்து காத்திருந்து கால்வலி வந்த கலா, "ஏ என்ன மேன் சுதா, அவன பொங்கலுக்கு வர சொன்னா, கிரிஸ்மஸுக்கு தான் வந்து சேருவான் போல.... இவன கல்யாண பண்ணிக்காத... கல்யாணத்துக்கு வர சொன்னா... straightaa honeymoonக்கு தான் வந்து சேரவான்."

விஜி சிரித்தகொண்டே, " சுதாவுக்கு அது தான் ஈஷ்டம்னு நினைக்குறேன்." முறைத்தாள் சுதா. இவர்கள் பார்த்திராத திசையிலிருந்து ரவி வந்தான்.

இந்த பெண்கள் கூட்டத்தை நெருங்கியவன், "ஹாலோ excuse me girls... sorry நான் இந்த ஏரியாவுக்கு புதுசு. இங்க சுதான்னு ஒரு பொண்ணு தங்கியிருக்காங்க. அவங்க ஃபோன தொலைச்சுட்டாங்க. அத கொடுக்க வந்திருக்கேன். அவங்க யாரு...எங்க இருப்பாங்க...actually இந்த இடத்துக்கு தான் வர சொன்னாங்க.... well do you know sutha? are you living in this area?" சிரித்த முகத்துடன் நின்றான் ரவி.

கலா சசியின் முகத்தை பார்த்தாள். சசி விஜியின் முகத்தை பார்த்தாள். மூவரும் சுதாவின் முகத்தை பார்த்தனர். சிரிப்பை அடக்க முடியவில்லை!!

'ஏ ஏ ஏ ஏ....பலே பலே பலே பலே பலே பலே பலே பலே பலே பலே'

ரவி ஒரு பஞ்சாபி. தலையில் தர்பன் கட்டியிருந்தான். யாரும் எதிர்பாராத வகையாக ரவி காட்சியளித்தது அனைவருக்கும் ஆச்சிரியத்தை தந்தது. எச்சில் முழுங்கிய சுதா, "ஹாய், நீங்க தேடி வந்த... சுதா... நான் தான்." கண்கள் அவன் முகத்தைவிட்டு அகலாமல்.

"ஓ what a surprise!" என்றான்.

"எங்களுக்கும் தான்." சிரிப்பை அடக்கியபடி மற்றவர்கள் கோரஸாக பாடினர். மற்ற பெண்களை பார்த்து புருவம் உயர்த்தி ரவி, "சாரி...நீங்க....?"

சுதா அறிமுகப்படுத்தினாள்.

"உங்க முழு பெயர்?" கலாவுக்கு வாய் அரித்தது.

"ரவிஷாந்த் ஷர்மா கபூர்"

"நீங்க எப்படி இவ்வளவு நல்லா தமிழ் பேசுறீங்க?" காபி வித் அனு போல் கையில் கோக் வைத்து கொண்டு விஜி கேட்டாள்.

சிரித்தான் ரவி. "இல்லங்க... நாங்க இருக்குற ஏரியாவுல நிறைய தமிழ் மக்கள் இருக்காங்க... ப்ளஸ்.. மொழிகள பத்தி research பண்ணிகிட்டு இருக்கேன்... so i love languages... tamil is one of the ancient languages in the world. சின்ன வயசுலேந்தே தமிழ் தெரியும்"புன்னகையித்தான்.

சுதா கொஞ்சம் மயக்கத்திலேயே இருந்தாள்.

"சரிங்க...nice to meet you girls. i got to go. i have to attend a seminar today. so take care. keep in touch." விடைபெற்று கொண்டான் ரவி.

அவன் சென்றபிறகு, கலா சுதாவை பார்த்து, "உங்க அப்பா பிரகாஷ் ராஜ் மாதிரி அவுறத confirm."

சசி, "அப்ப இது புது படம்- சுதாவும் நானும்."

விஜி, "வாங்க கேர்ஸ்.... சப்பாத்தி மாவு வாங்கிட்டு போவோம். இப்பலேந்து நார்த் இந்தியன் சாப்பாடு எப்படி செய்யுறத கத்துக்கனும் பாரு...." கைகொட்டி சிரித்தாள்.

"அடுங்குங்க டி...." சுதா எச்சரித்தாள்.

"he said keep in touch. what does that mean?" சுதாவின் கண்களில் வெட்கம் மின்னியது.

"அப்படின்னா, உன் மாமியார் கால அமுக்கிவிடனும்னு அர்த்தம்." கலா கிண்டல் செய்தாள்.

" shut up idiot!" சுதா கத்தினாள்.

"அவரோட நம்பர வாங்கினீயா?" விஜி கேட்டாள்.

"இல்லையே.....ஓ ஷிட்!!!" முகத்தில் சோகம் பரவியது.

கலா ரொம்ப கூலா, "ஹாலோ அறிவுக்கு பொறாந்த அறிவுகளா... சுதா உன் வீட்டு ஃபோன்ல caller id இருக்குல... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தானே அவன் ஃபோன் பண்ணான்.... வீட்டுக்கு போய் நோட் பண்ணிக்கிச்சா போச்சு!"

"ஓ மை காட்!!!! எப்போதுமே எங்களுக்கு நீ தான் தலிவா!" சுதா கலாவை கட்டிபிடித்தாள்.

வீட்டை வந்து அடைந்ததும், சுதா ரவியின் நம்பரை நோட் செய்து கொண்டாள். தொலைக்காட்சி பார்த்தனர். கலா வேண்டுமென்றே ஹிந்தி சேனலுக்கு மாற்றினாள். சமையலறையிலிருந்த சுதாவின் அம்மா, "யாரடி அவ புரியாத மொழில டிவி பாக்குறது...." சத்தம் போட்டார்.

"இனிமே புரிஞ்சுக்க வேண்டிய மொழி ஆண்ட்டி....." கலா சத்தமாய் கூற, சுதா கலாவின் கையை கிள்ளினாள்.

"ஏன் கலா உலறுர.... மாத்தங்குடி சேனல... இப்போ சீரியல் நேரம்... மாத்துங்க மாத்துங்க..... " என்று கைகளை கழுவியபடி ஹாலுக்கு வந்தார் சுதாவின் அம்மா. மற்ற பெண்களுக்கு போர் அடித்ததால், சுதாவின் அறைக்குள் சென்றனர். அப்போது விஜியின் கைபேசி அலறியது, " ஹாய் மச்சிஸ், semester results are out. check them online." வகுப்பு தோழியிடமிருந்து மெசேஜ்.

அதை பார்த்து வாய் பிளந்தபடி விஜி, "ஓ ஷிட்.... results are out!!"
சசி, " இரண்டு வாரம் கழிச்சு தானே வரும்னு சொல்லியிருந்தாங்க...."
சுதா, "ஏய் சீக்கிரம் அந்த லெப்டாப்பை எடு...." மடிக்கணினி கலாவின் பக்கத்தில் இருந்தது!

அதை அறக்க பறக்க திறந்தாள்.......

(பகுதி 3)

சைட் அடிக்கப்பட்டுக் கொண்டிருப்பவர்கள்- 10

3 idiots படம் பார்த்த பிறகு, ஷர்மன் ஜோஷி மீது ஒரே லவ்வ்வ்வ்வ்வ்வ்வ்ஸ்ஸ்ஸு!! சிறப்பு அம்சம்: மூக்கு & அப்பாவியா தோன்றும் அவரது கண்கள்.
மனுஷன் படத்துல பின்னு பின்னுனு பின்னியிருக்கிறார். ஒரு பத்து பேர் இருந்தால், இவர் அவர்கள் நடுவே இருந்தால்கூட பளிச்சென்று தெரிவார் :) படத்தில் அமீர் கூட அருமை- நடிப்பு, நடை, body language. இருந்தாலும், எனக்கு ஷர்மன் ஜோஷி மீது தான் கண்ணு. ஹிஹிஹிஹி....

அடுத்தவர், டான்ஸ் இந்தியா டான்ஸ் நிகழ்ச்சியில் வரும் terence lewis. சிங்கையில் திடீரென்று subscribe செய்யாத சேனல்கள்கூட தெரிந்தது இரண்டு நாட்களுக்கு. அதில் star gold, star plus, zee tv, sony tv என்று பல இந்தி சேனல்கள் தெரிந்தன. பொங்கலுக்கே நான் வெடி வெடிப்பேன், தீபாவளி வந்தால் சும்மா விடுவேனே! இரவு முழுவதும் உட்கார்ந்து எல்லாம் இந்தி சேனல்களை மாற்றி மாற்றி பார்த்தேன். மொழி புரியுதோ புரியலையோ, காதுகளுக்கு இனிமை, கண்களுக்கு குளிர்ச்சி... என்ற ஒரு ரகமா போனது இரண்டு நாட்கள். அப்போது தான் டான்ஸ் இந்தியா டான்ஸ் நிகழ்ச்சியில் வரும் நடுவர் terence lewis இருந்தார்.

ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப அழகாய் சிரிக்கிறார். it is not just a smile. வாய்விட்டு சிரிக்கிறார். சிலர் வாய் விட்டு சிரித்தால், காட்டுமிராண்டி மாதிரி இருக்கும். ஆனால், இவர் அப்படி இல்லை. வாய்விட்டு சிரிப்பவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்! ஆக ஆக ஆக.... எனக்கும்ம்ம்ம்ம்...இவரை..... *ஐயோ போங்க எனக்கு வெட்கமா இருக்கு*

Dec 17, 2009

daddy mummy வீட்டில் இல்ல(series 3)- பகுதி 1

இது சீசன் 3.

****************************************

கண்ணாடி கடையில் கலா சொன்னது ஞாபகம் வந்தது- ஹாஹா...முதல தடவ மாட்டிகிட்டபோது ஒரு சித்தார்த் நம்ம கதைக்குள்ள வந்தான்...இப்போ எந்த ஜெயம் ரவி வர போறானோ.

அந்த ஞாபகம் வர அனைவரும் சிரித்தனர்.

மறுமுனையில் இருந்த ரவி, "ஹாலோ ஹாலோ....என்ன ஒரே சத்தமா இருக்கு?"

"ஒன்னுமில்ல" என்று சுதா வெட்கப்பட்டாள்.

கலா, "அடே மச்சி, வெட்கப்படுறாளே! மறுபடியும் மறுபடியும் சாச்சுபுட்டான் மச்சான். " என்று சொல்லியபடியே மெத்தையில் விழுந்தாள்.

சுதா ரவியிடம் தன் வீட்டு முகவரியை கொடுக்கமால் தன் வீட்டு அருகே இருக்கும் இன்னொரு தெருவின் முகவரியை கொடுத்து அங்கு வர சொன்னாள் ரவியை.

விஜி உடனே, "ஏய் வீட்டுக்கு வர சொல்ல வேண்டியது தானே. அப்படியே இரண்டு பேரையும் வச்சு நிச்சயதார்த்தம் முடிச்சு கல்யாண தேதியையும் முடிவு பண்ணிடலாம் பாரு...." கலாவும் சசியும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

"ஓய்... என்ன நக்கலா... சும்மா ஃபோன் பண்ணான்...அதுக்குள்ள அநியாயத்துக்கு இப்படி கலாய்க்குறீங்களே. நீங்களாம் உருபுட மாட்டீங்க!!" செல்லகோபத்துடன் சுதா.

"ஏய் தோடா கண்ணகி சாபம் விடுறாங்களாம்! நம்மெல்லாம் எரிஞ்சு போயிடுவோமா!! ஹிஹி..." கிண்டல் செய்தாள் கலா.

"எனிவே, வெட்க கெட்ட பிரபுதேவாவா இருக்குறதவிட விவரமான சிம்புவா இருக்குறது மேல்... யூ சி!" உலக மகா புதுமொழியை ஓதினாள் சுதா.

சசி தன் கண்ணாடியை சரிசெய்தவாறே, "என்னடி.... உனக்கு இப்படி பேச சொல்லி யாரு சொல்லிகொடுக்குறா..."

"ஆமா.... சுதா சொல்றது சரி தான். ரவியின் குரல் வேணும்னா இளமையா இருக்கலாம். ஆனா அவனுக்கு ஏற்கனவே கல்யாணமாகி புள்ளகுட்டியெல்லாம் இருந்துச்சுன்னா.." கலா கூறினாள்.

"ஐயோ அத விடுங்கடி.... அவரு வந்தபிறகு பாத்துக்கலாம். இப்போ நம்ம எதுக்கு இங்க வந்தோம்? சசியோட டேட்டிங் கதைய பத்தி கேட்க தானே!! சொல்லுடி மின்ன்ன்ன்னனல்!! " என்றாள் விஜி சசியை உரசியபடி.

"ஒன்னும் நடக்கல...." என்றாள் சசி.

"நீங்க இரண்டு பேரும் எங்க நடந்தீங்க? அத சொல்லு." சுதா பொறுமையை இழந்தாள்.

சசி தன் டேட்டிங் கதையை தொடர்ந்தாள், "நீங்க என்னைய பஸுல ஏத்திவிட்ட பிறகு....."
----------------------------------------------------

சசி ஒரு மணி நேரத்திற்கு முன்பே சென்றுவிட்டாள். இதற்கு பெயர் தான் ஆர்வகோளாறு ப்ளஸ் வயசுகோளாறு! பையன் சித்தார்த்தும் இதே ரகம் தான். அவன் இரண்டு மணி நேரத்திற்கு முன்பே அங்கு நின்று கொண்டிருந்தான். இருவரின் பார்வைகளும் சந்தித்து கொண்டன. அப்போது 'நம்தனம் நம்தனம் நம்தனம்' என்னும் இளையராஜா பிண்ணனி இசை வரும் என்று எதிர்பார்த்தீங்க என்றால் நீங்கள் ரொம்ப தமிழ் படங்கள் பார்க்குறீர்கள் என்று அர்த்தம். அந்த நேரத்தில் பக்கத்தில் நின்று கொண்டிருந்த நாய்களின் சத்தம் தான் காதுகளை கிழித்தன.

'ஹாய்...' என்றான் சித்தார்த். சிரித்தாள். கண்ணாடியை சரி செய்து கொள்ளவில்லை. ஏன் என்றால் அன்று அவள் போட்டிருந்தாள் contact lens. இருவரும் billiards விளையாட சென்றார்கள். சசிக்கு விளையாட தெரியாது. ஆக அவன் அவளுக்கு சொல்லிகொடுப்பான் என்று சசி எதிர்பார்த்தாள். அச்சமயம் மின்சாரம் தடை ஏற்பட்டது. அந்த இடத்தில் generatorரும் வேலை செய்யவில்லை என்று விளையாட்டு மன்றத்தின் உரிமையாளர் கூற, அங்கிருந்து எல்லாரும் வெளியேறினர் சசி சித்தார்த் உட்பட.

ஆஹா, வடை போச்சே!! என்ற முகத்துடன் சசியும் சித்தார்த்தும் காட்சியளித்தனர். பின்னர், இருவரும் சாப்பிட போக முடிவு எடுத்தனர்.

"fast food or restuarant?" என்று சித்தார்த் கேட்க, சசிக்கு மகிழ்ச்சி.

அவனே முடிவு செய்யாமல் தன் விருப்பத்திற்கும் இடம் கொடுக்கிறானே என்று சசி சந்தோஷப்பட்டாள். 'ஜெண்டில்மேன்ய்யா.' என்றது அவள் மனம்.

இருவரும் ஒரு இத்தாலி உணவகத்திற்குள் சென்று உணவு உண்டனர்.
--------------------------------------------------------------------------------------

"அப்பரம் காச அவன் கட்டுனா... ஜெண்டில்மேன்ய்யா.... வீட்டுக்கு வந்துட்டோம். அவ்வளவு தான்." சசி கதையை முடித்தாள்.

விஜி தூங்கி விழுந்தாள். சுதா முறைத்து கொண்டிருந்தாள். கலாவிற்கு வாயில் நல்லா வந்தது, வாந்தி இல்ல, கெட்ட வார்த்தைகள்.

"ஏண்டி இது தான் உங்க ஊருல கிளுகிளுப்பான டேட்டிங் கதையா? இதுக்கு நான் பாட்டி வடைய சுட்ட கதைய கேட்டுருப்பேனே....உன்னையெல்லாம்...." பக்கத்தில் இருந்த புத்தகத்தை தூக்கி சசியிடம் எறிந்தாள் கலா.

"ஏய், don't misuse them. this is அஷ்ட்ட லட்சுமி!" என்றாள் சசி. தூக்க மயக்கத்திலிருந்த விஜி, "யாரு? ஜோதி லட்சுமியா? எங்க எங்க?"

"பாரு பச்சை குழந்தை டி விஜி..... நீ டேட்டிங் போன கதையை கேட்டு சந்தோஷப்படலாம்னு வந்தா... இப்படி மொக்கை போட்டுடீயேடி... ச்சே.... உனக்கு ஏண்டி இந்த பன்றிகாய்ச்சலெல்லாம் வந்து தொலைய மாட்டேங்குது!!" கலா கத்தினாள் சசியை பார்த்து.

"இங்க பாரு... டேட்டிங் எல்லாம் எங்க personal matter. சித்தார்த் கூட இத பத்தி யாருக்கிட்டயும் சொல்லவேண்டாம்னு தான் சொன்னாரு. ஏதோ பிரண்ட் ஆச்சேன்னு சொன்னா... ரொம்ப தான் உங்களுக்கு...." சிரித்தபடியே சொன்னாள் சசி.

" என்னது personalaa? சித்தார்த் அதுக்குள்ள எப்படி அவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆனாரு!" விஜி சத்தம் போட்டாள்.

சுதா, " personalaa....பொறு பொறு... இத எப்படி public மேட்டரா ஆக்குறேன்னு பாரு. அம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாமா, நம்ம சசி என்ன பண்ணா தெரியுமா? நேத்திக்கு...." என்று சுதா தன் அம்மாவை கூப்பிட்டாள்.

கதவு திறக்கும் சத்தம் கேட்க, சுதாவின் அம்மா, "தெரியுமே நேத்திக்கு அந்த சித்தார்த்கூட அவ வெளியே போறத நான் பாத்தேனே!" என்றாள்.

கலா, விஜி, சுதா, சசி முகத்தில் ஈயாடவில்லை. சசியின் மண்டையில் சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ங்குது!!!

(பகுதி 2)

Dec 11, 2009

நான் சமைச்சா தாங்கமாட்டே, நாலு மாசம் தூங்க மாட்டே!




உலக வரலாற்றில் முதன் முறையாக சமையல் அறை என் வீட்டில் எங்கே இருப்பது என்பதை கண்டுபிடித்துவிட்டேன். அங்கு சென்று நான் என் முதல் சாதனையை செய்துவிட்டேன். தோசை செய்தேன். (ஓய்...யாருப்பா அங்க சிரிக்குறது... இவ்வளவு ஈசியான சமையல்..இதுக்கா இந்த பில்டப்புன்னு நீங்க நினைக்கலாம். பெரியவங்க சீக்கிரம் நடப்பது சகஜமான ஒன்னு, ஆனா அதுவே ஒரு குழந்தை முதல் அடியை எடுத்து வைத்து நடக்கும்போது அது அதற்கு சாதனையாக தோன்றும். நான் குழந்தைப்பா!)

தோசை மாவு இருக்கு. சாதாரண தோசைய செஞ்சு சாப்பிட்டால், அது எப்படி முடியும்??...நம்ம எவ்வளவு பெரிய ஆளு! அதிரடியா செஞ்சு சாப்பிடனும்னு நினைச்சு சமையல் புத்தகத்தை எடுத்தேன். அதில் ' chilli mushroom thosai' செய்முறையை பார்த்தேன். ஆனா அதை செய்யவில்லை. அதை சற்று மாற்றி என் ஸ்டைலில் செய்தேன். (நாளைக்கு இந்த உலகம் என்னைய பாத்து ஈயடிச்சான் காபின்னு சொல்லிடகூடாது பாருங்க அதுக்கு தான்...)

என் தோசைக்கு நான் வைச்ச பெயர் 'chilli potatoe thosai'. (ஆமா பெரிய மாற்றம் அப்படின்னு உங்க mindvoice பேசுறது எனக்கு கேக்குது) இருந்தாலும் எதுக்கும் அசரமாட்டாள் இந்த அசுர சூறாவளி! சொந்தமா யோசிச்சு, கையில் கிடைத்த காய்கறிகளை போட்டு ஒரு கலவையா தோசையை செய்து முடித்தேன். முதல் ரெண்டு தடவை தோசை, தோசை மாதிரி வரவில்லை.

எனக்கு ஆண்டவன் கொடுத்த கிட்னியையும் சேர்த்து யோசிச்சேன். ஏன் தோசை இப்படி போகுதுன்னு. வேற தோசை கல்லை எடுத்தேன், எண்ணையை கொஞ்சமாக ஊற்றினேன், சரியா வந்துடுச்சு!

ஆப்ரேஷன் 'தோசை' வெற்றிகரமாக முடிந்ததால் மறுநாள் மதிய சாப்பாட்டையே தயாரிக்க முற்பட்டாள் இந்த சூறாவளி. 'sambal chicken sanjay', 'keerai kanchana' and 'fish cutlet gupta'. சிவப்பு மிளகாயை போட்டு செய்த கோழி, கீரை மற்றும் மீன் கட்லெட். சாதாரண உணவு தான்...இருந்தாலும் நம்ம என்ன செஞ்சாலும் அதில் ஒரு வித்தியாசம் வேண்டும், ஒரு பில்டப் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆக தான் ஒவ்வொரு பெயருக்கு பின்னால் ஒரு நார்த் இந்தியன் பெயர். கேட்டா, நான் செஞ்சது வட இந்திய சமையல்ன்னு சொல்லி பீலா விடதான்.

ரெண்டு நண்பர்களை சாப்பிட கூப்பிட்டேன். அவர்கள் தங்களது குலதெய்வங்களை நன்கு வேண்டிகொண்டு தான் வீட்டிற்கு வந்தார்கள். சாப்பிட்டார்கள். நல்லா இருக்குன்னு சொன்னாங்க! (அப்படி தான் சொல்லியாகனும் பாருங்க) நானும் சாப்பிட்டு பார்த்தேன். 'இப்படி ஒரு சூப்பரான சமையலை சாப்பிட்டதே இல்லை' என்று மனதார என்னையே நான் பாராட்டி கொண்டேன். காக்கையும் தன் குஞ்சும் பொன் குஞ்சும். எனக்கும் என் சமையல் சூப்பர் சமையலே!!

Dec 4, 2009

ஜஸ்ட் சும்மா (5/12/09)

குர்பான் படம் பார்த்தேன். பிடித்து இருந்தது (கரண் ஜோகர் எழுதிய கதை என்பதால் இருக்கலாம்... ஹிஹி) ஏன் என்றால் மற்ற விமர்சனங்கள் அவ்வளவாக சாதகமாக இல்லை. எந்த படமும் ஜாலியான படம் தான் - ஜாலியான நண்பர்களுடன் பார்த்தால்! அடுத்து 'பா' என்னும் ஹிந்தி படத்தை பார்க்கவுள்ளேன். அமிதாப் பச்சன் வயதிற்கு இப்படி ஒரு படம் பண்ணுவது என்பது ரொம்ம்ம்ம்ப ஆச்சிரியமான விஷயம். அவர் ஒரு வியாதியால் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார்... (13 வயது பிள்ளையாய்). நம்மூர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இந்த மாதிரி படங்களை நடிக்க சொல்லுங்களேன், யாராவது ப்ளீஸ்!!
--------------------------------------------------------------------------------------------

டாடி மம்மி வீட்டில் இல்லை- முன்பு எழுதிய கதை. அதன் பார்ட் 2 - தடைபோட யாருமில்லை. தொடர்ந்து என் வலைப்பூவை படிப்பவர்களுக்கு இக்கதை ஞாபகம் இருக்கலாம். பார்ட் 3 வரும் என்று சொல்லியிருந்தேன். பார்ட் 3 கதையை அடுத்து எழுதலாம் என்று இருக்கிறேன். ஹிஹிஹி.... (வேற எந்த கதையும் கற்பனைக்கு வரமாட்டேங்குது)

-------------------------------------------------------------------------------------------

பையா பட பாடல்களை கேட்டேன். யுவன் பாடிய பாடல் அருமை!!
-------------------------------------------------------------------------------------------

என்னபா இது...நம்ம golf player tiger woods கள்ள காதல் விவகாரம் இப்படி நாறுது! அட அந்த ஆள் மீது ரொம்ம்ம்ம்ம்ம்ப மரியாதை வச்சு இருந்தேனே! ச்சே.... இப்படி போச்சே. அட மனுஷன் தப்பு செய்றான், தடயம் இல்லாமல் செஞ்சு இருக்ககூடாதா! ஹிஹிஹி.... என் policy ரொம்ப simple: தப்பி தவறிகூட தப்பு செய்யாதே, அப்படி மீறி தப்பு செய்தால், தடயம் இருக்குமாறு செய்யாதே.
----------------------------------------------------------------------------------------

என் வலைப்பூவில் இப்போ 112 followers!!ஆஹா...இன்னுமா நம்மள இந்த உலகம் நம்புது! இருந்தாலும் அனைவருக்கும் என் நன்றி:)