தனுஜா பொழிந்து தள்ளினாள் தனது கோபங்களை. மறுமுனையில்,
"ஹாலோ ஹாலோ, யாரு நீங்க? உங்களுக்கு என்ன வேணும்? எனக்கு ஒன்னுமே புரியல...."
தனுஜா, "தப்பு செஞ்சிட்டு, தப்பிக்க பாக்குறீங்களா? உங்ககிட்ட அளவு ஜாக்கெட் கொடுத்து ஒரு மாசம் ஆச்சு. சரியா தைக்க சொன்னா....இப்படி பண்ணி வச்சு இருக்கீங்க?"
"யாரு? சாரி....நீங்க.... ராங்கா ஃபோன் பண்ணிட்டீங்க?"
தனுஜாவுக்கு கோபம் கொந்தளிக்க, "செய்றதயும் செஞ்சுட்டு......" மறுபடியும் 'பூஜை'யை ஆரம்பித்தாள்.
தாங்கமுடியாத விஷ்ணு, "ஸாட்ப்பிட்! நீங்க ஃபோன் பண்ண நம்பர சொல்லுங்க?"
"98*********34" என்றாள்.
சிரித்தபடியே, "எல்லாம் சரி தான்....கடைசில சொன்னீங்களே 34...அது இது இல்ல...என் நம்பர் 43. தப்பா ஃபோன் பண்ணது நீங்க?"
தனுஜா கஞ்சி திண்ண கருப்பான்பூச்சிபோல்(எத்தன நாளைக்கு தான் இஞ்சி திண்ண குரங்குன்னு சொல்றது) ஆனாள்.
"ஐயோ சாரிங்க சாரி.....என் tailor பெயரும் விஷ்ணு தான்.... நான் தான் தப்பா டையல் பண்ணிட்டேன்...சாரி சாரி...." என்றாள் தனுஜா.
"குஷி ஜோதிகா மாதிரி சாரி சொன்னா விட்டுடுவோமா?"
"அப்பரம் என்ன வேணும்?" பவ்யமான குரலில் தனுஜா.
"மானம் நஷ்ட வழக்கு போடுவோம்....சி எம் வரைக்கும் கொண்டு போவோம். பஸ கொளுத்துவோம். காலேஜ் ஸட்ரைக் விடுவோம்....டில்லி வரைக்கும் போகும் இந்த மேட்டர்! ஒரு சின்ன பையன போய்....அதுவும் ஒரு நல்ல சின்ன பையன போய்....." சிரித்தான் விஷ்ணு.
"ஹாலோ மிஸ்ட்டர் இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல...."
"anyway, sorry i gtg. sorry."என்று ஃபோனை கட் செய்ய, விஷ்ணு
"சரியான ஜாக்கெட்ட போட்டு போங்க..ஹாஹா..."
தனுஜா ஃபோன் லைன்னை கட் செய்தாள். விஷ்ணு தனது கைபேசியில் அவளது நம்பரை பார்த்து, "ம்ம்ம்...she has a sweet voice." நம்பரை save செய்துவைத்து கொண்டான்.
சில மாதங்கள் கழிந்தன. ஒருநாள் விஷ்ணு தனது தூரத்த சொந்தக்காரரின் மகளின் காதுகுத்து விழாவிற்கு சென்று இருந்தான். செம்ம போர் அடித்ததால் என்ன செய்வது என்று தெரியவில்லை விஷ்ணுவிற்கு. தனது வயதில் உள்ள பையன்கள் யாருமில்லை அரட்டை அடிப்பதற்கும்.
அவனுக்கு தனுஜாவின் ஞாபகம் வந்தது.
குறுந்தகவல் அனுப்பினான் தனுஜாவிற்கு,
விஷ்ணு: ஹேய் ஜாக்கெட் பொண்ணு, எப்படி இருக்க?
சிறிது வினாடிகள் கழித்து, பதில் குறுந்தகவல் வந்தது.
தனுஜா: ஓய், யாரு இது? mind your language.
விஷ்ணு: அட பாவமே அதுக்குள்ள மறுந்துட்டீயா? நான் தான் ராங் நம்பர் விஷ்ணு... ஜாக்கெட்ட சரியா தைக்கலன்னு நம்மூர் நாட்டாமைக்கு புகார் மனு அனுப்ப பாத்தீங்களே, அந்த பாவப்பட்ட ஜன்மம்.
தனுஜா: ஓ ஓ சாரி சாரி. ஹாய். ஆமா, ஏன் திடீரென்னு ஸ் எம் ஸ்?
விஷ்ணு: ஒன்னுமில்ல சும்மா! போர் அடிச்சது..அதான்...கடலை போடலாம்னு!
தனுஜா: வாட்??? கடலை?? ஹாலோ விஷ்ணு, நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்ல.
விஷ்ணு: ஓ பட், நான் அப்படிப்பட்ட பையன்!
தனுஜா: மனசுல பெரிய காமெடியன் நினைப்பா?
விஷ்ணு: ம்ம்ம்....இப்ப என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க? ஐ மின் இருக்க?
தனுஜா: ஹாஹா...மரியாதையலாம் குறையுது! நான் என்ன பண்ணிகிட்டு இருந்தா உங்களுக்கு...ஐ மின் உனக்கு என்ன? எதுக்கு தேவையில்லாத கேள்வி?
விஷ்ணு: சரி...அப்ப நாட்டுக்கு ரொம்ப தேவையான கேள்விய கேக்குறேன்? உங்களுக்கு தெரியுமா ஜோதிகாவுக்கும் சூர்யாவுக்கும் கல்யாணம் ஆக போகுதுன்னு!! :)
தனுஜா: விஷ்ணு, you are a total crappy fellow i tell u!
விஷ்ணு: but am dead sure that you are very much enjoying it!
தனுஜா: hahaha...whatever dude! நீ படிக்குறீயா? க்ளாஸ்ல கடைசி பெஞ்சா? எப்ப பாத்தலும் பரிட்சைல ஃவேல் பண்ணிடுவீயா?
விஷ்ணு: ஹாஹா...இப்ப உனக்கு மனசுல அலைபாயுதே ஷாலினின்னு நினைப்பா?
தனுஜா: எல்லாம் பொண்ணுங்களும் ஒரு விதத்தில் ஷாலினி மாதிரி அழகு தான். இந்த பசங்கள தான்....மாதவன் மாதிரி ஒருத்தர பாக்குறது ரொம்ம்ம்ம்ம்ப rare! the world is suffering from an imbalance of good guys! tsk tsk...
விஷ்ணு: ஹாஹாஹா....நீங்க சொன்ன ஜோக்க தஞ்சாவூர் பெரிய கோயில தான் எழுதி வைக்கனும்!!
தனுஜா: hoi!! என்ன நக்கலா?
விஷ்ணு: சரி சரி...கூல் கூல்.... நான் வேலை தேடிகிட்டு இருக்கேன்.... நீங்க?
தனுஜா: ஓ..ஐயா வெட்டி ஆபிசரோ? ம்ம்ம்.... நான் ஒரு mncல வேலை பாக்குறேன்.
விஷ்ணு: ஹாலோ அப்படி ஒன்னும் கேவலமா நினைக்காத. வேலை இல்லாம வெட்டியா இருக்குறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா!! அதுக்கலாம் ஒரு தனி கலை இருக்கனும்!
தனுஜா: உனக்கு கொஞ்சம்கூட மானம், ரோஷம் சூடு சொர்ன கிடையாதா?
விஷ்ணு: சாரி பொண்ணுங்ககூட பேசும்போது அதுங்களுக்கு நான் லீவு விட்டுடுவேன்!
இதை பார்த்து விட்டு தனுஜா விழுந்து விழுந்து சிரித்தாள்.
தனுஜா: ஹாஹா.... you are such a funny funny guy! alrite, am busy now. talk to u later.
விஷ்ணு: ஹாலோ, அப்போ என் கதி? என்ன பெரிய பிஸி. இன்னிக்கு சண்டே தானே?
என்ற குறுந்தகவலை அனுப்பவதற்காக முயற்சி செய்தான். ஆனால், நெட்வோர்க் பிரச்சனை என்று கைபேசியில் காட்டியதால், விழா நடக்கும் ஹால்லுக்கு சென்றான். அங்கயும் சரியாகவில்லை. இது சிக்னல் பிரச்சனை என்பதால் ஒரு ரூம்முக்கு சென்றான்.
உள்ளே சரியான கூட்டம். சின்ன குழந்தைகள் விளையாடி கொண்டிருக்க அவன் ரூம் கதவு அருகே நின்று கைபேசியை சரி செய்து கொண்டிருந்த வேளையில் இரு பெண்கள் பேசி கொண்டே வெளியே வந்தனர்.
அதில் ஒருத்தி, "ஏய் என்ன மச்சி, கையும் ஃபோன்னுமா இருக்க? யாருகிட்ட இவ்வளவு நேரமா மெசேஜ் அனுப்பிகிட்டு இருந்த?"
இன்னொருத்தி, "அது ஒன்னுமில்ல மச்சி, அன்னிக்கு சொன்னேன்ல ஒரு ராங் நம்பர் விஷ்ணுன்னு அவன் தான். சும்மா ஸ் எம் ஸ் பண்ணிகிட்டு இருந்தான்..."
அவள், "என்னது? ராங் நம்பர் ஃபிரண்ட்ஷிப்பா? என்ன டி.....பையன் ரொம்ப கடல போடுறானா?"
இவள், "அப்படி சொல்ல முடியாது....பட்....ரொம்ப ஜாலி டைப்."
இவர்கள் பேசியதும் விஷ்ணுவிற்கு ஆயிரம் பட்டாம்பூச்சிகள் புல்லாங்குழல் வாசிப்பதுபோல் இருந்தது. தனுஜாவை அடையாளம் கண்டுகொண்டான். ஆம்ஸ்ட்ராங் நிலவில் மட்டும் கால் அடி வைத்தார் என்றால் விஷ்ணு சந்தோஷத்தால் mars, venus, neptune எல்லாவற்றிலும் கால் அடி வைத்ததுபோல் உணர்ந்தான்.
தனுஜாவை பார்த்தது 3 வினாடி என்றாலும் தன் கேமிரா கண்களால் படம் எடுத்து வைத்து கொண்டான். மனதில் அதை 'develop' செய்ய.
சில பொண்ணுங்களுக்கு அவர்களின் முகபருக்கள்கூட அழகு தான். காலை நேரத்தில் இலைகள் மேல் விழுந்துகிடக்கும் பனித்துளிகள் போல் தனுஜாவின் பொலிவான முகத்தில் கன்னங்களில் ஆங்காங்கே இருந்த பருக்கள்கூட விஷ்ணுவிற்கு அழகாய் தெரிந்தது.
***
"this is for my sweet darling."விஷ்ணு சமையல் அறையிலிருந்து ஒரு கப் ஆரஞ்சு ஜுஸ் கொண்டுவந்தான்.
"எதுக்கு டா இப்போ இது? சொன்ன வேலைய மட்டும் செய்....ஏதாச்சு செஞ்சியா இல்லையா?"
"எல்லாம் on the process of completion..... இந்த ஜுஸ குடிச்சுட்டு தெம்பா ரிப்போர்ட்ட செஞ்சி முடி. alrite. அதுவரைக்கும் உங்களிடமிருந்து விடைபெற்று கொள்வது உன் இம்சை அரசன் விஷ்ணு." சிரித்தபடி மீண்டும் சமையல் வேலைகளை முடிப்பதற்காக சென்றான். திரும்பி வந்தான்.
தனுஜாவின் லெப்டாப்பில் உள்ள
'teri ore' என்னும் இந்திபாடலை ஒலிக்க செய்யவிட்டு, "dedicating this song to you, my sweetheart."என்றபடி தனுஜாவின் கன்னங்களை கிள்ளினான்.
***
"அவள வெளியே கூப்பிடலாமா?" என்றது விஷ்ணுவின் மனசாட்சி.
(தொடரும்)
மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)