Friday, December 4, 2009

ஜஸ்ட் சும்மா (5/12/09)

குர்பான் படம் பார்த்தேன். பிடித்து இருந்தது (கரண் ஜோகர் எழுதிய கதை என்பதால் இருக்கலாம்... ஹிஹி) ஏன் என்றால் மற்ற விமர்சனங்கள் அவ்வளவாக சாதகமாக இல்லை. எந்த படமும் ஜாலியான படம் தான் - ஜாலியான நண்பர்களுடன் பார்த்தால்! அடுத்து 'பா' என்னும் ஹிந்தி படத்தை பார்க்கவுள்ளேன். அமிதாப் பச்சன் வயதிற்கு இப்படி ஒரு படம் பண்ணுவது என்பது ரொம்ம்ம்ம்ப ஆச்சிரியமான விஷயம். அவர் ஒரு வியாதியால் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார்... (13 வயது பிள்ளையாய்). நம்மூர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இந்த மாதிரி படங்களை நடிக்க சொல்லுங்களேன், யாராவது ப்ளீஸ்!!
--------------------------------------------------------------------------------------------

டாடி மம்மி வீட்டில் இல்லை- முன்பு எழுதிய கதை. அதன் பார்ட் 2 - தடைபோட யாருமில்லை. தொடர்ந்து என் வலைப்பூவை படிப்பவர்களுக்கு இக்கதை ஞாபகம் இருக்கலாம். பார்ட் 3 வரும் என்று சொல்லியிருந்தேன். பார்ட் 3 கதையை அடுத்து எழுதலாம் என்று இருக்கிறேன். ஹிஹிஹி.... (வேற எந்த கதையும் கற்பனைக்கு வரமாட்டேங்குது)

-------------------------------------------------------------------------------------------

பையா பட பாடல்களை கேட்டேன். யுவன் பாடிய பாடல் அருமை!!
-------------------------------------------------------------------------------------------

என்னபா இது...நம்ம golf player tiger woods கள்ள காதல் விவகாரம் இப்படி நாறுது! அட அந்த ஆள் மீது ரொம்ம்ம்ம்ம்ம்ப மரியாதை வச்சு இருந்தேனே! ச்சே.... இப்படி போச்சே. அட மனுஷன் தப்பு செய்றான், தடயம் இல்லாமல் செஞ்சு இருக்ககூடாதா! ஹிஹிஹி.... என் policy ரொம்ப simple: தப்பி தவறிகூட தப்பு செய்யாதே, அப்படி மீறி தப்பு செய்தால், தடயம் இருக்குமாறு செய்யாதே.
----------------------------------------------------------------------------------------

என் வலைப்பூவில் இப்போ 112 followers!!ஆஹா...இன்னுமா நம்மள இந்த உலகம் நம்புது! இருந்தாலும் அனைவருக்கும் என் நன்றி:)

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Sunday, November 29, 2009

தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்-9

தேர்வு முடிஞ்சாச்சு.. படம் பார்ப்பது, இசை நிகழ்ச்சிகளுக்கு போவது, புத்தகம் படிப்பது என்று ஆக்கபூர்வமான செயல்களில்(சைட் அடிப்பது உள்பட) நான் ஈடுபட்டு கொண்டு வருகிறேன். சிங்கையில் 'கலா உத்சவம் 2009' என்ற நிகழ்ச்சியில் டில்லியில் இருந்து 'அட்வைத்தா' என்னும் இசை குழு 45 நிமிடம் நிகழ்ச்சி நடத்தினார்கள். http://www.advaitaonline.net/aboutus.html

இதில் 7 பசங்க... அழகான பசங்க.....அதில் ரெண்டு பேரை தான் நான்...ம்ம்... அதே தாங்க!!

suhail yusuf khan- 'sarangi' என்னும் இசை கருவியை மீட்டும் விதம்...ஆஹா...simply divine! ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப impress ஆயிட்டேன்:)

chayan adhikari- இந்த குழுவின் பாடகர் மட்டும் கிடார் வாசிப்பவர். பாடல்வரிகளும் இவர் தான் எழுதுகிறார். அவர் அப்படியே தன்னை மறந்து கண்களை மூடி பாடினார் பாருங்க...... சான்ஸே இல்லங்க.

இவர்களது இசை வட்டிலிருந்து ஒரு பாடல். இந்த பாடலை கிட்டதட்ட 100 முறை கேட்டு இருப்பேன்.:) ஹிஹிஹி....

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Wednesday, November 18, 2009

பிடித்த பிடிக்காத 10 விஷயங்கள்

எனக்கு பிடித்த பிடிக்காத 10 விஷயங்கள்.
இந்த தொடர் பதிவினை எழுத சொல்லி புறா அனுப்பாத குறையாக தகவல் சொல்லிய கார்த்திக் தம்பிக்கு நன்றி.

உணவு
பிடிக்கும்: கோழி பிரியாணி
பிடிக்காது: கத்திரிக்காய்

டீவி சேனல்
பிடிக்கும்:travel & living (பல நாட்டு கலாச்சாரத்தை பற்றி காட்டுவார்கள்)
பிடிக்காது: கார்ட்டூன்ஸ் (ஐயோ சின்ன வயசுலேந்தே பிடிக்கவே பிடிக்காது!!)

இயக்குனர்
பிடிக்கும்: ஹிந்தியில் கரண் ஜோகர், தமிழில் கௌதம் மேனன், வெங்கட் பிரபு
பிடிக்காது: கே ஸ் ரவிக்குமார்

நடிகை:
பிடிக்கும்: ஹிந்தியில் வித்யா பாலன், தமிழில் என்றென்றும் எங்கள் தலைவி சிம்ரன்
பிடிக்காது: ஜெனிலியா (ரொம்ப கியூட் அப்படின்னு நினைப்பு..)

குணம்
பிடிக்கும்: சிரிப்பாக பேசும் தன்மை
பிடிக்காது: பெண்களை அடிமைகளாய் நினைக்கும் குணம் உடையவர்கள்

குளிர் பானம்
பிடிக்கும்: lemon juice
பிடிக்காது: பெப்சி

நாள்
பிடிக்கும்: லீவு நாட்கள்
பிடிக்காது: தேர்வு நாட்கள்

இடம்
பிடிக்கும்: என் அறை. உலகத்திலுள்ள எட்டாவது அதிசயம் இதுவே! ஹிஹி.
பிடிக்காது: road signs இல்லாத சாலைகள்

கார்
பிடிக்கும்: bmw
பிடிக்காது: சின்ன வாகனமா இருந்தால் பிடிக்காது

இணையதளம்
பிடிக்கும்: youtube, blogger, tamilmanam
பிடிக்காது: என் காலேஜ் இணையதளம்.

இதை தொடர அழைக்கின்றேன் இவர்களை,
கோபி அண்ணா, வினையூக்கி, சிம்பா, விக்கேனஷ்வரி அக்கா, ரீனா அக்கா

(நீங்கள் ஏற்கனவே எழுதியிருந்தால், ம்ம்...என்ன பண்ணலாம்... மறுபடியும் எழுதுங்க..ஹிஹி..)

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Tuesday, November 17, 2009

2012- படமா இது?

நேற்று 2012 படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. பரிட்சை இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு. அதுக்குள்ள படமா? அப்படின்னு சில பேர் நினைக்கலாம். பொறுங்க பொறுங்க மேட்டருக்கு வரேன். டிக்கெட் இலவசமா கிடைச்சா போகாம இருப்பீங்களா? அமிராமி மாலில் இருக்கும் 350 ரூபாய் டிக்கெட் வாங்கி படுத்துகிட்டே படம் பார்க்கலாமே, அந்த மாதிரி இங்கயும் படுத்துகிட்டே படம் பார்க்கும் தியேட்டர் இருக்கு.

அக்கா ஒரு ஃபோட்டோ எடுக்கும் போட்டியில் கலந்து கொண்டு இரண்டு சினிமா டிக்கெட்டுகளை ஜெயிச்சாங்க. அந்த டிக்கெட்டுகளை வச்சு தான் படம் பார்க்க போனோம். ஒரு டிக்கெட் விலை (S$36. ரூபாய்க்கு கணக்கு பண்ணால்...ம்ம்ம்..abt Rs 800) இப்படி ஒரு அருமையான வாய்ப்பை நழுவுவிடுவோமா??

சரி படத்துக்கு வருவோம். "படமா இது? இல்ல நான் கேட்குறேன்...படமா இது" அப்படின்னு என்னைய புலம்ப வச்ச எத்தனையோ படம் இருக்க...இந்த படம் என்னைய பிரமிக்க வைத்துவிட்டது. "இது படம் இல்லைய்யா...பாடம். a threatening wake up call."

படம் ஆரம்பம் முதல் கடைசி வரை படத்திலேயே ஐக்கியம் ஆயிட்டேன். (இன்னும் மீள முடியாது நிலைமையில் தான் இருக்கேன்). படத்துல தண்ணியை தண்ணி மாதிரி செலவு பண்ணியிருக்கானே...அப்போ காச எந்த மாதிரி செலவு பண்ணியிருப்பான். கிராபிக்ஸில் புகுந்து விளையாடி இருக்காங்க. ஒன்னும் சொல்றதுக்கு இல்ல. இந்த உலகமே பாக்க வேண்டிய படம். படத்துல பிடிச்ச வசனம் "the moment we stop fighting for each other, that's the moment we ruined humanity."

கடைசி வரைக்கும் போராடி பாக்கோனும். உலகம் உண்மையாகவே 2012 அழிய போகுதா? என்ற கேள்விக்கு நம்மை இப்பவே தயார் நிலையில் இருக்க சொல்லுது படம். பல காட்சிகள் நம்மை சீட் நுனிக்கு இழுத்து செல்லும். ' life is fair yet it is cruel.' என்பதை அழகாய் ஒரே ஒரு காட்சியில் காட்டியிருப்பார்கள். ரஷிய விமானத்தை ஓட்டி செல்பவன் மற்றவர்களை தப்பிக்க சொல்லிவிடுவான். காரணம் விமானத்தில் உள்ள எஞ்ஜீன் கெட்டுபோய்விடும். மற்றவர்கள் தப்பித்து விடுவார்கள். இவன் விமானத்தை கஷ்டப்பட்டு நிறுத்துவான். மலை உச்சியில் நின்றுவிடும். யப்பாடா என்று பெருமூச்சு விடும் நேரத்தில், விமானம் balance செய்ய முடியாமல் கீழே விழுந்து நொறுங்கிவிடும்.

அப்போ படத்துல குறையே இல்லையா என்று நினைக்கலாம். இருக்கு இருக்கு.... அமெரிக்கா ஜனாதிபதியை ரெம்ம்ம்ம்ம்ப நல்லவராய் காட்டிய விதம் எனக்கு கொஞ்சம் சிரிப்பா இருந்தது. ஹீரோவின் குடும்பம் மட்டும் எல்லாவற்றையும் கடந்து தப்பித்து போகும் விதம். இவ்வாறு, கூர்ந்து பார்த்தால் லாஜிக் இடிக்கும். இருந்தாலும், படத்தின் பிரமாண்டத்தில் இவையெல்லாம் தூசியாய் போய்விட்டது.

மனதில் எழுந்த வியப்பு: அப்படி உலகம் அழிந்தால், பணக்காரன் spaceshipல் ஏறி தப்பித்து விடுவான், அப்போ ஏழைகள்?

சீனாவில் உள்ளவர்களுக்கு மூளை எப்படிய்யா வேலை செய்யுது?

ஆக மொத்தத்தில் படம் சூப்பர்!! கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Monday, November 9, 2009

ஜஸ்ட் சும்மா(9/11/09)

பரிட்சை இன்னும் 15 நாட்களில் ஆரம்பிக்க போகுது. வகுப்பில் கிளாஸ் பரிட்சை ஒன்னு வச்சாங்க. அதுல..ம்ம்... 5 மார்க் மேல வந்தாவே பெரிய விஷயம்னு நினைக்குறேன். கேள்வியை பார்த்து படிச்சு புரிஞ்சுக்கவே மயக்கம் வந்துட்டு!

"மனிதன் புரிந்து கொள்ள இது மனித பரிட்சை அல்ல. அதையும் தாண்டி கொடூரமானது!" - சங்கம் வைக்கும் அளவுக்கு வசதியில்லாத சங்கம்.

போட்டு அடிச்சு ஏதாச்சு பண்ணி, படிக்கவேண்டிய சூழ்நிலை வந்திருக்கு. பார்ப்போம்.
_----------------------------------------------------------------------------------------

சமீபத்தில் 'கண்டேன் காதலை' படத்தை பார்த்தேன். அரை மணி நேரத்துக்கு மேல பாக்க முடியல படத்த. பரத் பேசாம வேற வேலைக்கு போகலாம். யோவ், ஹிந்தி படத்த காபி அடிக்குறீங்க....அத இந்த அளவுக்கா காபி அடிப்பீங்க!! ஐயோ ஐயோ...
-----------------------------------------------------------------------------------------

சித்து ப்ளஸ் டூ படப்பாடல் வெளியாகிவிட்டன. பாக்யராஜ் இயக்கத்தில் அவர் மகன் நடிக்கும் (நடிச்சு இருக்காரான்னு தெரியல...) படம். இசை தரண். பூவே பூவே பாடல் செம்ம பாட்டுய்யா! இந்த பாட்டு மட்டும் தான் நல்லா வந்துருக்கு. சூப்பர் பாடல்! கேட்டு பாருங்க. யூவன், சின்மயி பாடியிருக்காங்க.
-----------------------------------------------------------------------------------------

ஓபாமா சிங்கைக்கு வருகை தந்து இருந்தார்.பார்க்க தான் வாய்ப்பு கிடைக்கல. இல்லை என்றால் எங்க வீட்டு தீபாவளி முறுக்கு இரண்டு கொடுத்து விட்டுருக்கலாம் அமெரிக்காவுக்கு, அப்பரம்..மிஷேல் அண்ணி சாப்பிட வேண்டாமா? ஹிஹிஹி.......
-----------------------------------------------------------------------------------------

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Friday, November 6, 2009

கல்கி சஞ்சிகைல நம்ம பெயரு வந்து இருக்குப்பா!


நேத்திக்கு சகபதிவர் ஒருத்தர், கார்த்திகா ரஞ்சன்கிட்ட (http://www.neyamukil.blogspot.com) பேசிகிட்டு இருந்தேன். என்னோட வலைப்பூ பக்கத்த பத்தி கல்கில எழுதியிருக்கேன்னு சொன்னாங்க. ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப சந்தோஷமா இருந்துச்சு. அவங்க எனக்கு அந்த செய்தியை ஸ்கேன் செய்து அனுப்பவதாக சொன்னாங்க. கோபி அண்ணாகிட்ட இந்த விஷயத்த பத்தி சொன்னேன். உடனே அனுப்பிவச்சார் ஸ்கேன் செய்து. நன்றி அண்ணா.

இதற்கிடையில், நானும் நம்ம கண்ணால அந்த புத்தகத்துல என்ன எழுதியிருக்குன்னு படிக்கலாம்னு வாங்கி பார்த்தேன். நானும் சென்று வாங்கினேன். முதலில் எந்த பக்கத்தில் வந்து இருக்குதுன்னு தெரியாம புரட்டி புரட்டி பார்த்தேன். அப்பரம் அகப்பட்டு விட்டது பக்கம்.
அப்பரம் என்ன "எல்லாம் புகழும் ஒருவன் ஒருவனுக்கு...." பாட்டு அந்த கடையில நிக்குற எல்லாருமே என்னைய பாத்து பாடுற மாதிரி ஃவீலிங். ஹிஹி.....

என் வலைப்பதிவின் பெயர். சமீபத்தில் எழுதிய அடிக்கடி செய்து அடித்து கொண்டிருப்பவரின் பட்டியல் என்னும் பதிவை போட்டு இருந்தார்கள். சின்ன செய்தியாக இருந்தாலும், எனக்கு இது மிகப்பெரிய சாதனை. சொல்ல வார்த்தை இல்லை. கார்த்திகா அக்காவுக்கு மறுபடியும் நன்றி!!!

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Wednesday, October 21, 2009

நான் ரொம்ம்ம்ப பிஸி

ஒரு காலத்துல தினமும் 2 பதிவுகள் போட்டு கொண்டிருந்தேன். இப்ப பத்து நாளைக்கு ஒரு தடவ, ஒரு மாசத்துக்கு ஒரு தடவன்னு நிலைமை மாறிபோச்சு. காலேஜ் என்னை வாட்டி எடுக்குது! முடியல சாமி! இருந்தாலும் இத இப்பவே எஞ்ஜாய் பண்ணனும். வேலைக்கு போனா.... அதுக்கு அப்பரம் எதுவுமே பண்ண முடியாது! :)

என்ன எழுதுறது...ஒரு ஐடியாவும் வரமாட்டேங்குது. முன்பெல்லாம் எத பாத்தாலும் 'இத பத்தி ப்ளாக்ல எழுதனும்'னு தோணும். இப்ப என் சொந்த வலைப்பூவ பாத்தாகூட ஒரு மண்ணும் மண்டைக்கு வர மாட்டேங்குது. வயசாச்சுலே. அப்படி என்ன வயசுனு கேட்குறீங்களா? இப்ப தான் எல்கேஜி முடிஞ்சு யூ கே ஜி போறேன்.

இன்னும் 2 வாரத்துல இந்த காலேஜ் செம்ஸ்ட்டர் முடிஞ்சு விடும். அதுக்கு அப்பரம் இந்த 'வேட்டைக்காரி' முழு வீச்சில் வருவாள்! அது வரைக்கும் கொஞ்ச மந்தமாதா இருக்கும்னு வானிலை ஆய்வுகள் சொல்லுது!ஹிஹிஹி....

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Friday, October 9, 2009

தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்-8

தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்- curtis stone and gerard butler

curtis stone. இப்போது இவர் hallmark channelலில் take home chef எனும் நிகழ்ச்சியை நடத்திவருகிறார். சூப்ப்ப்ப்ப்ரா சமையல் செய்வார்.ஆஸ்திரேலியாவில் பிறந்தவர். பிடித்த அம்சம்- பேசும் விதம் + சிரிப்பு

அடுத்தது ஹாலிவுட் நடிகர் gerard butler. ps i love you, the ugly truth போன்ற படங்களில் நடித்துள்ளார். தாடி வைத்திருக்கும்போது அநியாயத்திற்கு அழகாய் தெரிவார்! பிடித்த அம்சம்- கண்கள்(ஹிஹி...)


முந்தைய பட்டியல்

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Wednesday, October 7, 2009

wake up sid- இன்னும் தூங்குகிறான்

கரண் ஜோஹர் தயாரிப்பில் அயன் முகர்ஜி (புதிய இயக்குனர், 25 வயசு தான்) இயக்கிய 'wake up sid' என்னும் இந்தி படத்தை பார்த்தேன். மற்ற விமர்சனங்களை படித்து ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப எதிர்பார்த்தேன். ஆனால் ஓரளவுக்கு தான் என்னை மகிழ்வித்தது.

நமது டைரியை படிப்பதுபோல் ஒரு உணர்வு கண்டிப்பா வரும் படத்தை பார்த்தால். பாடல்கள் சுமார் ரகம். 'இக்குதாரா' என்னும் பாடல் எனக்கு பிடித்து இருந்தது. திரைக்கதை கொஞ்சம் மெதுவாகவே செல்வது கொஞ்சம் போர் அடித்தது. இந்த மாதிரி படங்களில் நகைச்சுவை வசனங்கள் பட்டையை கிளப்பியிருக்க வேண்டும். ஆனால், இப்படத்தில் அது அதிகமாய் இல்லை.

படத்தில் எனக்கு பிடித்தவை
1) ஹீரோயின் கொன்கோனா ஷர்மா. அவங்கள எனக்கு ரொம்ம்ம்ம்ப பிடிக்கும். இப்படத்தில் தனது வேலையை நன்றாகவே செய்து இருக்கிறார்.
2) கல்லூரி பரிட்சையில் கோட்டைவிட்டு வீடு திரும்பும் மகனிடம் அப்பா கத்துவது( ஏதோ எப்பவோ என் வாழ்க்கையில நடந்து சம்பவம் மாதிரியே இருந்துச்சு...ஹிஹிஹி)
3) மும்பை நகரத்தை வாழ்க்கையில் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என தூண்டிய விதம்.

திரைக்கதையில் வேகம், காட்சிகளில் ஆழம், பாடல்களில் இன்னும் விறுவிறுப்பை சேர்த்து இருந்தால் நல்லா இருந்திருக்கும். என்றாலும், கரண் ஜோஹர்க்காகவே தான் இப்படத்தை பார்த்தேன். பைசா வசூல் என கேள்விப்பட்டேன். எனக்கு மகிழ்ச்சியே.

wake up sid- என் வீட்டு அலாரத்திற்கு பிடிக்கவில்லை!

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Friday, October 2, 2009

ஜஸ்ட் சும்மா(2/10/09)

இந்த வாரம் லீவு. ஆக, நிறைய படங்கள் பார்க்க வாய்ப்பு இருந்தது. the ugly truth, whatever works, he's just not that int you, PS. i love you ஆகிய படங்களை பார்த்தேன். முதல் இரண்டும் தற்போது ஓடிகொண்டிருக்கும் படங்கள். மற்றவற்றை டிவிடியில் பார்த்தேன். இதில் ரொம்ப பிடித்த படம் the ugly truth. ரொம்ப சிரிப்பா இருந்துச்சு!!
பார்த்த அனைத்துமே காமெடி கலந்த காதல் கதைகள் தான்!

the ugly truth மற்றும் PS i love you படங்களில் நடித்த gerard butlerயை ரொம்ம்ம்ம்ம்ம்ப பிடிச்சு போச்சு!!!! ஹிஹி....

------------------------------------------------------------------------------------------

ஜக்குபாய் மற்றும் வேட்டைக்காரன் பாடல்களை கேட்டேன்.

வேட்டைக்காரன்: விஜய் ப்ளஸ் விஜய் ஆண்டனி....கேட்கவா வேண்டும்! ஆட்டம் போட வைக்கும் பாடல்கள். அதிரடியான வரிகள். என் அக்கா பாடலை கேட்டுவிட்டு சிரிச்சா(அவள் ஒரு அஜித் ரசிகை).... என்கிட்ட வந்து, " நான் அடிச்சா தாங்க மாட்டே...." பாடலை கேட்க சொன்னாள். அப்போது தான் முதன் முதலாக பாடலை கேட்டேன். எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. இப்பாடல் காட்சியில் விஜயின் மகன் ஆட போகிறான் என்ற தகவல் கொஞ்ச நாளைக்கு முன்னாடி வந்துச்சு!

புலி உறும்புது பாடலில் ஒரு வரி வரும், "இவன் வரலாற்றை மாற்ற போகும் வருங்காலம் டா"

ம்ம்ம்.....ரொம்ப நல்லா இருந்துச்சு. (என்னைய மாதிரி தீவிரமான ரசிகர்கள் இருக்கும்வரை விஜய் என்ன தான் மொக்கை படங்களை கொடுத்தாலும் டாப்ல தான் இருப்பார்.... உடல் மண்ணுக்கு உயிர் விஜய்க்கு!- அகில உலக விஜய் ரசிகர் மன்றம்)

அடுத்து, ஜக்குபாய் பாடல்கள். இசை அமைத்தவர் எங்க ஊரு ஆளுங்க. சிங்கப்பூரை சேர்ந்தவர்! இத சொல்லும்போதே எனக்கு அம்புட்டு பெருமையா இருக்கு!!! பெயர் ரஃபி. ஏ ஆர் ரகுமானிடம் 10 வருஷமா assistantஆ வேலை பார்த்தவர். ரொம்ப அமைதியான ஒரு நபர் ரஃபி. இங்க நிறைய டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார். அவருடைய 4 தம்பிகளும் இசையில் ஆர்வம் உடையவர்களும்கூட.

முதல் படம் இது அவருக்கு. பெரிய ஹிட் பாடல்கள் இல்லை என்றாலும், ஆப்பிள் லெப்டாப் என்னும் பாடல் கொஞ்ச நல்லா இருக்கு!! கேட்டு பாருங்க.
-----------------------------------------------------------------------------------

oprah winfrey நிகழ்ச்சியில் அபிஷேக் பச்சனும் ஜஸும் கலந்து கொண்டனர். ஹாஹா....ரொம்ப வயதான தம்பதியினர் மாதிரி தெரியுறாங்க....ஹிஹி...நிகழ்ச்சியை பார்க்க இங்க செல்லவும்

http://www.youtube.com/watch?v=_lzu4wYU7Cc&feature=related

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Thursday, October 1, 2009

அன்பே, உன்னால் மனம் crazy-4

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் வரை இருவருமே பேசிகொள்ளவில்லை. உள்ளூர இருந்த துயரத்தை இருவருமே காட்டிகொள்ளவில்லை. பயம், வருத்தம், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தனர் இருவரும். வரும் வழியில் விஷ்ணுவிற்கு அடிக்கடி ஆபிஸிருந்து ஃபோன் வந்து கொண்டிருந்தது.

"விஷ்ணு, நம்ம ஹேட் ஆபிஸ் வரைக்கும் போகனும். டில்லிக்கு இன்னிக்கே ப்ளைட் புக் பண்ணவா? சாரி...உங்க வீக்கெண்ட spoil பண்ணிட்டேனா? சாரி...ஆனா இது கொஞ்சம் அவசரம். இந்த வேலைய முடிச்சுட்டு நீங்க இன்னும் நாலு நாளு extra லீவு எடுத்துக்குங்க...பட் இன்னிக்க மட்டும்...கொஞ்சம்....." மறுமுனையில் இருந்த மேனேஜர் வற்புறத்தினார்.

கவலையில் மூழ்கி கிடந்த விஷ்ணு அமைதியாய், "சாரி சார். என்னால போக முடியாது. வேற யாராச்சயும் பாத்துக்குங்க." சொல்லிவிட்டு ஃபோனை வைத்துவிட்டார். அதை கவனித்தாள் தனுஜா. சிறிது நேரம் கழித்து, அதே ஆபிஸர் அதே வேண்டுகோளுடன். ஆனால், எதற்கும் இணங்கவில்லை விஷ்ணு.

இந்த நேரத்தில் தனுஜாவை விட்டு போக அவனுக்கு மனம் வரவில்லை. எப்போதும் கலகலப்பாக இருக்கும் வீடு அன்று சோகபூமியாய் காட்சியளித்தது. தனுஜா படுக்கையில் படுத்து இருந்தாள். அவள் தேம்பி தேம்பி அழுதாள். விஷ்ணு என்ன செய்வது என்று தெரியாமல் சோபாவில் உட்கார்ந்து இருந்தான். மதிய வேளை ஆனது. மதிய உணவை தயாரிக்கும் மனநிலையில் யாரும் இல்லை.

கொஞ்ச நேரம் கழித்து விஷ்ணு தனுஜாவை பார்க்க சென்றான். அவள் அழுவதை கண்ட விஷ்ணு அவளது கன்னங்களில் வழிந்த கண்ணீரை துடைத்தவாறு, "அழாத மா."

எழுந்து உட்கார்ந்த தனுஜா அவன் தோள்மீது சாய்ந்து கொண்டாள்.

"நீ எவ்வளவு ஆசையா இருந்த...ஐ எம் சாரி விஷ்ணு...." அவளால் அழுகையை நிறுத்த முடியவில்லை.

"நீ எதுக்குடா சாரிலாம் சொல்ற....இது யாருடைய தப்பும் கிடையாது. it meant to happen and it has happened. that's all. no one is to be blamed. ஆனா, நீ இப்படி இருக்குறது தான் எனக்கு ரொம்ப கவலையா இருக்கு. cheer up da....please...." என்று அவன் ஆறுதல் சொன்னாலும் அவன் குரலில் தெரிந்தது சோகம்.

மறுபடியும் ஃபோன் வந்தது விஷ்ணுவிற்கு. அப்போது அதை எடுத்து பேச முற்பட்ட விஷ்ணுவின் கைகளிலிருந்து தனுஜா ஃபோனை வாங்கி கொண்டாள். அவள் பேசினாள்,

"சொல்லுங்க சார்...ம்ம்ம்...சரி. no problem sir. he will be there in one hour. thanks."

"தனு, நான் போகலடா....உன்னைய இந்த நிலைமைல....no i don't want to go."

"listen vishnu, i'll be fine soon. நீ கவலை படாம போயிட்டு வா. பாவம்...ரொம்ப முக்கியமான வேலைன்னு சொல்றாருல.....நீ போ....i will be alright soon." கண்ணீர் துளிகளை துடைத்து கொண்டு புன்னகையித்தாள்.

"are you sure?"

ஆம் என்று தலையாட்டினாள். அவனுடைய பெட்டியை தயார் செய்தாள். வாசல் கதவு அருகே நின்று வழியனுப்பி வைத்த தனுஜாவின் நெற்றியில் ஆறுதல் முத்தம் ஒன்று கொடுத்தான் விஷ்ணு.

அரை மணி நேரம் கழித்து வாசல் மணி ஒலித்தது. தனுஜா கதவை திறந்தாள். ஆச்சிரியம்! அங்கே விஷ்ணு. முதன் முதலாக அவனது கண்கள் கலங்கி இருப்பதை கண்டாள். கலங்கிய கண்களுடன் விஷ்ணு, "உன்னைய விட்டு போக முடியலடா" என்று ஓடி வந்து கட்டிபிடித்தான் தனுஜாவை.

*******************************

"we'll be right back after a short commerical break." oprah winfrey சொன்னதை கேட்டு சுயநினைவுக்கு வந்தாள் தனுஜா. அச்சம்பவம் நடந்து ஓராண்டு ஆனதை நினைவு கூர்ந்தாள். அவர்களது நட்பு ஆரம்பித்த விதம், காதல் மலர்ந்த தருணம், கல்யாணம், அவனது சிரிப்பு, அவன் பொழிந்த பாசம், அன்பு. சண்டை போட்டு கொள்ளும் நேரங்களில்கூட அது சண்டையாக முடியாமல் ஏதேனும் காமெடியாகி பேசி முற்றுபுள்ளி வைக்கும் அவனது சாமர்த்தியம் என்று பலவற்றை எண்ணினாள். அவனை ரொம்ப 'மிஸ்' பண்ணுவதாக உணர்ந்தாள்.

திடீரென்று ஒரு சத்தம் அறையிலிருந்து. ஓடி சென்று பார்த்தாள். பொருட்கள் கீழே விழுந்துகிடக்க, அதன் அடியில் விஷ்ணு கிடப்பதை பார்த்து குபீர் என்று சிரித்தாள் தனுஜா.

"அடி பாவி, ஒருத்தன் இங்க விழுந்துகிடக்குறது உனக்கு காமெடியா இருக்கா...." என்றான் விஷ்ணு. பொருட்களை எடுத்து அதன் இடத்தில் வைத்தவாறு தனுஜா,

"நான் தான் சொன்னேன்ல.....ஐயாவுக்கு இந்த மாதிரி வேலையெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு."

"அது என்னமோ உண்மை தான் தனு. பாதி வேலை கூட முடியல. நீங்க பொண்ணுங்க எப்படி தான் எல்லாத்தையும் சரியா செய்றீங்களோ....உங்களுக்கு எல்லாம் தனித்தனியா சிலை வைக்கனும்!"

"இந்த ஐஸ் வச்சது போதும்....." சிரித்தாள் தனுஜா.

"i give up babe. இந்த challengeல நீ தான் ஜெயிச்ச...." விஷ்ணு சொல்ல அதற்கு தனுஜா,

"இல்ல டா...நீ தான் வின்னர்."

அவள் நினைவுகூர்ந்தவற்றை அவனிடம் சொன்னாள். இருவரும் பழைய நினைவுகளை பற்றி பேசி மகிழ்ந்தனர்.

"i think i really miss you." என்றாள்.

"ஹாஹா....thank god. finally you agreed!"

"so........." என்று இழுத்தாள் அவள். அவன் உதடுகள் அருகே சென்றது அவள் உதடுகள்.

"how about the report that you need to send?" என்றான் அவன்.

"all programs cancelled!" என்றாள்.

"you mean there is going to be something something today....."அவன் சிரித்தான்.

"not today....right now!" என்றவளின் உதடுகள் அவனது உதடுகளோடு lock ஆனது. அவ்வாறே அறை கதவும் lock ஆனது.

*PLEASE DO NOT DISTURB THEM*

***முற்றும்***

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Sunday, September 27, 2009

அன்பே, உன்னால் மனம் crazy-3

தனுஜாவை வெளியே கூட்டிகொண்டு போக விஷ்ணுவிற்கு ஆசை இருந்தாலும், உள்ளூர ஒரு பயம். ஃபோனில் மட்டுமே பேசி இருக்கிறார்கள். அவ்வபோது பண்டிகை நாட்களில் வாழ்த்து குறுந்தகவல்கள். முதன் முறை சந்திக்க போகும் தருணத்தை எண்ணி விஷ்ணுவிற்கு மகிழ்ச்சி. இருந்தாலும், அவள் அதை எப்படி எடுத்து கொள்வாள் என்று தெரியவில்லை. தனக்கு வேலை கிடைத்துவிட்டது என்னும் தகவலை அவளிடம் நேரில் சொல்ல வேண்டும் என்ற ஆசை.

குறுந்தகவல் அனுப்பினான். குறுந்தகவல் என்னும் ஒன்றை கண்டுபிடித்தவனுக்கு சிலை வைப்பான் விஷ்ணு. அது மட்டும் உறுதி!

விஷ்ணு: ஹாய் தனுஜா, என்ன பண்ற?

தனுஜா: எருமைமாட்டுலேந்து பால் எடுத்துகிட்டு இருக்கேன். பின்ன என்ன மேன்.... project work விஷயமா தலைய பிச்சுகிட்டு இருக்கேன். என்ன இந்த நேரத்துல மெசேஜ்? anything important....

விஷ்ணு:ஹாஹா....ஒன்னுமில்ல சும்மா தான்.வெளியே போகலாமா?

குறுந்தகவலை பார்த்தவுடனே ஃபோன் செய்தாள் தனுஜா.

தனுஜா, "ஹாலோ விஷ்ணு, என்ன சாருக்கு திடீரென்னு என்னைய பாக்கனும்னு தோணுது?" சிரித்தாள்.

விஷ்ணு, "ரொம்ப நாள் பேசிகிட்டு இருக்கோம்.... நேரடியா பாத்துகிட்டா நல்லா இருக்குமேனு தான்..." இழுத்தான்.

"என்ன நல்லா இருக்குமேன்னு...." அவன் இழுத்ததுபோல் இவளும் பாவனை செய்து விஷ்ணுவை கிண்டல் செய்தாள்.

"சரி உனக்கு பிடிக்கலைன்னா, விட்டுடு!" சற்று கோபம் வந்தது விஷ்ணுவிற்கு.

"ஓய் ஓய்....எதுக்கு உனக்கு இப்படி கோபம் வருது. சரி போவோம். எங்க? எப்போ?" என்றாள் தனுஜா.

அவள் ஓகே சொன்னதுமே இளையராஜாவின் RR சவுண்டுகள் அவன் மனதில் அலைபாய்ந்தன.

"how about movie? நாளைக்கு?" கேட்டான் விஷ்ணு.

"முதன் முதலா பாத்துக்கு போறோம்....யாராச்சு படத்துக்கு போவாங்களா? நாளைக்கு i am not free." தனுஜா சொன்னாள்.

"நான் தான் உன்னைய முன்னாடியே பாத்து இருக்கேனே?" அன்று பார்த்ததை தனுஜாவிற்கு ஏற்கனவே சொல்லியிருந்தான்.

"நீ பாத்து இருக்க....நான் உன்னைய பார்த்ததுகிடையாதே? சரி சரி....வரேன்... அங்க யாரு கேன பய மாதிரி இருக்காங்களோ....அது நீயா தான் இருப்பே.... அடுத்த வாரம் திங்கட்கிழம போலாம்" சிரித்தாள் தனுஜா.

"ஐயாவோட smartness நீ பாத்து அசந்துபோயிட போற... அடுத்த வாரமா? இந்த வாரம் வெள்ளிக்கிழம??" என்றான்.

"ஆமா ஆமா....ambulanceலாம் standbyல இருக்க சொல்லிடுறேன்....அழகுல பாத்து மயங்கி விழுந்துட்டேனா? எனக்கு இந்த வாரம் நிறைய வேலை இருக்கு."

"ஷ்ஷ்... சனிக்கிழம?...." என்றான் விஷ்ணு.

"ஃபிரண்ட் அக்காவோட கல்யாணம்?" என்றாள் தனுஜா.

"என்ன எப்ப பாத்தாலும் அது இருக்கு இது இருக்குனு சொல்ற. எங்க ஏரியா எம் பிய பாக்ககூட சீக்கிரம் appointment வாங்கிடலாம் போல...." என்றான்.

"நாங்கலாம் அடுத்த 6 மாசத்துக்கு ஒரே பிஸி. ஏதோ சின்ன பையன் கேட்குறானேன்னு வரேன்....வேட் பண்ண முடியலன்னா.... no problem! i am fine with it." சற்று பிகு பண்ணினாள். ஆனால், அது அவனுக்கு பிடித்து இருந்தது.

"alrite alrite, அடுத்த வாரமே பாப்போம்." என்றவன் நேரம், இடம் போன்ற தகவல்களை கொடுத்தான் அவளிடம்.

அந்த நாளும் வந்தது. குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் காத்துகொண்டிருந்தான் விஷ்ணு. சின்ன பயம், ஒருவித சந்தோஷம்.
தனுஜாவை கண்டுகொண்டான், கையாட்டினான். அவனை நோக்கி அவள் நடந்து வந்தாள்.

இருவரும் புன்னகைகளை பரிமாறிகொண்டனர்.

"ஹாய்." இருவரும் சொன்ன முதல் வார்த்தை. ஃபோனில் அரட்டையும், கிண்டலுமாக இருந்தாலும், நேரில் சந்தித்த போது இருவரும் சற்று அமைதியாக இருந்தனர்.

"என்ன தனுஜா ஃபோன்ல செமயா கிண்டல் அடிப்ப..இப்ப அமைதியா இருக்க?"

"நீ மட்டும் என்னவா.....?" என்று தனுஜா ஆரம்பிக்க, இருவரும் சகஜமாக பேசினர், சிரித்தனர், ஒருவருக்கொருவர் கிண்டல் அடித்து கொண்டனர்.

படம் பார்த்துமுடித்து வெளியே வந்தனர் இருவரும்.

"சாப்பிட போலாமா?" கேட்டான் விஷ்ணு. தனது கைபேசியை ஏதேனும் மெசேஜ் வந்து இருக்கா என்பதை பார்த்தவாறு பதில் அளித்தாள்,

"ம்ம்ம்...போகலாமே?"

"உனக்கு என்ன பிடிக்கும்?" என்று கேட்டான் விஷ்ணு.

"எனக்கு ஓசாமா பல்லு விலக்குற ஸ்டைல் ரொம்ம்ம்ம்ம்ப பிடிக்கும்" என்று நக்கல் அடிக்க, கைகளை அகல விரித்து சிரிக்க ஆரம்பித்தவன் நிறத்தவில்லை.

"ஓய்..control your laughter dude! this is a public place." என்றாள் தனுஜா.

"உனக்கு மட்டும் எப்படி இந்த மாதிரி மொக்கை ஜோக் எல்லாம் அடிக்க வருது... நான் கேட்டது சாப்பாட்டுல என்ன பிடிக்கும்னு?"

"மொட்டையா கேட்டா வேற என்னத்த சொல்றது? சாப்பாடுன்னு நீ சொல்லவே இல்லையே..." என்று பேசி கொண்டே இருவரும் ஒரு உணவகத்திற்குள் நுழைந்தனர்.

சாப்பாடு வருவதற்காக காத்து கொண்டிருக்கும் வேளையில்,

"எனக்கு வேலை கிடைச்சுடுச்சு....உன்கிட்ட சொல்ல தான் இந்த அவுட்டிங்!" என்றான்.

தனுஜா கண்களில் தெரிந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சந்தோஷம் போங்க,

"என்ன இப்ப தான் சொல்ற? congrats man...." என்று அவள் கைகளை நீட்டினாள். அவனும் நீட்டினான். அந்த ஸ்பரிசம் ஒரு கணம் அவனுக்குள் விளக்கமுடியாத மாற்றங்களை கொண்டு வந்தது. அவளையே கண்கொட்டாமல் பார்த்தான்.

"ஹாலோ, ஆர் யூ ஒகே?" அவன் கண் முன் கையாட்டினாள்.

"இல்ல....shake hands பண்ணபோது அருவி தண்ணி பின்னாடி ரிவர்ஸ்ல போய் freeze ஆனுச்சு, காத்து ஒரு நிமிஷம் நின்னு போச்சு. வானத்துல மேகங்களுக்கு ரெட் சிக்னல் விழுந்துச்சு. இந்த மாதிரி ஒரு ஃவீல் வந்துச்சு.....உனக்கு ஒன்னும் ஃவீல் ஆகலையா? என்றான் விஷ்ணு.

சிரித்தபடியே தனுஜா, " ஏன் ஆகல? ரோட்ல மாடு நின்னு மாதிரி. குப்பையில பன்னிக்குட்டிங்க தேடுறத்த நிறுத்துன்னு மாதிரி.....சாக்கடையில எலிங்க ஓடுறது நின்ன மாதிரி இருந்துச்சே....."

மறுபடியும் சத்தம்போட்டு சிரித்தான்.

"நீ ரொம்ப தமிழ் படம் பாத்து கேட்டு போய் இருக்க?" புன்னகையித்தாள் தனுஜா.

அவளது கண்களையும் உதடுகளையும் பார்த்தவண்ணம் இருந்தான். அதை கண்டு கொண்ட தனுஜா மேசையின் மேல் இருந்த அவனது கைகளை செல்லமாய் அடித்து, " hey pervert, stop staring at me."

அவன் புன்முறுவலித்தான்.

"எங்க வேலை? எந்த கம்பெனி?"

"மும்பைல.... " என்றவுடன் அவள் முகத்தில் சோகரேகைகள் பரவுவதை பார்த்தான் விஷ்ணு.

"எப்ப போற?" என்றாள்.

"அடுத்த வாரத்துல...."

"எப்ப வருவ...?"

"திருப்பி எதுக்கு வரனும்? அங்கயே இருந்திட வேண்டியது தான்...." என்றான். தனுஜாவிற்கு கோபம் கலந்த அழுகை வர,

"அப்பரம்....எந்த இதுக்குடா என்னைய...." வாக்கியத்தை முடிக்கவில்லை. வேறு பக்கம் திருப்பிகொண்டாள் முகத்தை.

"உன்னைய....என்ன?" வேண்டுமே என்றே வெறுப்பேற்றினான்.

"ஒன்னுமில்ல." என்றாள்.

"சரி சரி....சும்மா தான் சொன்னேன். லீவு கிடைக்கும்போது திருப்பி இங்க வந்துடுவேன்." என்றான்.

"ம்ம்ம்....." அமைதிகாத்தாள் தனுஜா.

பின்னர், பலமுறை வெளியே சென்றனர். இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து இருந்தாலும், அதை சொல்லி கொள்ள தைரியம் இல்லை. தைரியம் இல்லை என்பதும் இருவருக்கும் தெரியும்.

பம்பாயில் விஷ்ணு பிஸியாக இருந்தான். தனுஜாவிற்கும் வேலை பளு அதிகரித்தது. இருவரும் பேசி கொள்ளும் வாய்ப்புகள் குறைந்தன. தனுஜாவின் பிறந்தநாள் அன்று அவளது ஆபிஸில்....

"ஏய் பேப், உனக்கு யாரோ lobbyல வேட் பண்ணுறாங்க" receptionist சொல்ல தனுஜாவும் வந்தாள். அங்கே விஷ்ணு. அவள் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. பல நாட்கள் பேசவில்லை என்ற குற்ற உணர்வு அவளது கண்களில்.

"விஷ்ணு, what a surprise dude! how have you been?"

"i am good. how are you? happy birthday thanuja"

"தேங் யூ. தேங்ஸ் தேங்ஸ்.....நீ எப்ப மும்பைலேந்து வந்த? ஏன் ஃபோன் பண்ணல?" என்று கேள்விகளை அடுக்கி கொண்டே சென்றாள்.

எந்த கேள்விகளுக்கும் பதில் சொல்லவில்லை விஷ்ணு. அவன் சொன்னது,

"ஐ லவ் யூ தனு. will you marry me?"

என்றாவது ஒரு நாள் சொல்வான் என்று காத்து கொண்டிருந்த தனுஜாவிற்கு அவன் சொன்னது அளவில்லாத சந்தோஷத்தை தந்தது.

***

" ரிப்போர்ட்ட முடிச்சுட்டீயா?" curtain துணிகளை மாற்றியவாறு விஷ்ணு.

"doing it.... do you need help to change the curtains?"

"i'll manage it dear." என்றான். அறைகளுக்கு சென்று ஃபோட்டோ ஃபிரேம்களை சுத்தம் செய்தான். அச்சமயம் கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்து கொள்வதற்காக தனுஜா டிவி பார்த்தாள்.

oprah winfrey நிகழ்ச்சியை பார்த்தாள். குழந்தைநல மருத்துவர் ஒருவர் பேசியதை கேட்டு தனுஜாவின் நினைவு அலைகள் பின்னோக்கி சென்றன....

***
"ஐ எம் சாரி mrs vishnu...but உங்களுக்கு miscarriage ஆச்சு." மருத்துவர் கூறினார்.

(தொடரும்)

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Saturday, September 26, 2009

அன்பே, உன்னால் மனம் crazy- 2

தனுஜா பொழிந்து தள்ளினாள் தனது கோபங்களை. மறுமுனையில்,

"ஹாலோ ஹாலோ, யாரு நீங்க? உங்களுக்கு என்ன வேணும்? எனக்கு ஒன்னுமே புரியல...."

தனுஜா, "தப்பு செஞ்சிட்டு, தப்பிக்க பாக்குறீங்களா? உங்ககிட்ட அளவு ஜாக்கெட் கொடுத்து ஒரு மாசம் ஆச்சு. சரியா தைக்க சொன்னா....இப்படி பண்ணி வச்சு இருக்கீங்க?"

"யாரு? சாரி....நீங்க.... ராங்கா ஃபோன் பண்ணிட்டீங்க?"

தனுஜாவுக்கு கோபம் கொந்தளிக்க, "செய்றதயும் செஞ்சுட்டு......" மறுபடியும் 'பூஜை'யை ஆரம்பித்தாள்.

தாங்கமுடியாத விஷ்ணு, "ஸாட்ப்பிட்! நீங்க ஃபோன் பண்ண நம்பர சொல்லுங்க?"

"98*********34" என்றாள்.

சிரித்தபடியே, "எல்லாம் சரி தான்....கடைசில சொன்னீங்களே 34...அது இது இல்ல...என் நம்பர் 43. தப்பா ஃபோன் பண்ணது நீங்க?"

தனுஜா கஞ்சி திண்ண கருப்பான்பூச்சிபோல்(எத்தன நாளைக்கு தான் இஞ்சி திண்ண குரங்குன்னு சொல்றது) ஆனாள்.

"ஐயோ சாரிங்க சாரி.....என் tailor பெயரும் விஷ்ணு தான்.... நான் தான் தப்பா டையல் பண்ணிட்டேன்...சாரி சாரி...." என்றாள் தனுஜா.

"குஷி ஜோதிகா மாதிரி சாரி சொன்னா விட்டுடுவோமா?"

"அப்பரம் என்ன வேணும்?" பவ்யமான குரலில் தனுஜா.

"மானம் நஷ்ட வழக்கு போடுவோம்....சி எம் வரைக்கும் கொண்டு போவோம். பஸ கொளுத்துவோம். காலேஜ் ஸட்ரைக் விடுவோம்....டில்லி வரைக்கும் போகும் இந்த மேட்டர்! ஒரு சின்ன பையன போய்....அதுவும் ஒரு நல்ல சின்ன பையன போய்....." சிரித்தான் விஷ்ணு.

"ஹாலோ மிஸ்ட்டர் இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல...."

"anyway, sorry i gtg. sorry."என்று ஃபோனை கட் செய்ய, விஷ்ணு

"சரியான ஜாக்கெட்ட போட்டு போங்க..ஹாஹா..."

தனுஜா ஃபோன் லைன்னை கட் செய்தாள். விஷ்ணு தனது கைபேசியில் அவளது நம்பரை பார்த்து, "ம்ம்ம்...she has a sweet voice." நம்பரை save செய்துவைத்து கொண்டான்.

சில மாதங்கள் கழிந்தன. ஒருநாள் விஷ்ணு தனது தூரத்த சொந்தக்காரரின் மகளின் காதுகுத்து விழாவிற்கு சென்று இருந்தான். செம்ம போர் அடித்ததால் என்ன செய்வது என்று தெரியவில்லை விஷ்ணுவிற்கு. தனது வயதில் உள்ள பையன்கள் யாருமில்லை அரட்டை அடிப்பதற்கும்.

அவனுக்கு தனுஜாவின் ஞாபகம் வந்தது.

குறுந்தகவல் அனுப்பினான் தனுஜாவிற்கு,

விஷ்ணு: ஹேய் ஜாக்கெட் பொண்ணு, எப்படி இருக்க?

சிறிது வினாடிகள் கழித்து, பதில் குறுந்தகவல் வந்தது.

தனுஜா: ஓய், யாரு இது? mind your language.

விஷ்ணு: அட பாவமே அதுக்குள்ள மறுந்துட்டீயா? நான் தான் ராங் நம்பர் விஷ்ணு... ஜாக்கெட்ட சரியா தைக்கலன்னு நம்மூர் நாட்டாமைக்கு புகார் மனு அனுப்ப பாத்தீங்களே, அந்த பாவப்பட்ட ஜன்மம்.

தனுஜா: ஓ ஓ சாரி சாரி. ஹாய். ஆமா, ஏன் திடீரென்னு ஸ் எம் ஸ்?

விஷ்ணு: ஒன்னுமில்ல சும்மா! போர் அடிச்சது..அதான்...கடலை போடலாம்னு!

தனுஜா: வாட்??? கடலை?? ஹாலோ விஷ்ணு, நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்ல.

விஷ்ணு: ஓ பட், நான் அப்படிப்பட்ட பையன்!

தனுஜா: மனசுல பெரிய காமெடியன் நினைப்பா?

விஷ்ணு: ம்ம்ம்....இப்ப என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க? ஐ மின் இருக்க?

தனுஜா: ஹாஹா...மரியாதையலாம் குறையுது! நான் என்ன பண்ணிகிட்டு இருந்தா உங்களுக்கு...ஐ மின் உனக்கு என்ன? எதுக்கு தேவையில்லாத கேள்வி?

விஷ்ணு: சரி...அப்ப நாட்டுக்கு ரொம்ப தேவையான கேள்விய கேக்குறேன்? உங்களுக்கு தெரியுமா ஜோதிகாவுக்கும் சூர்யாவுக்கும் கல்யாணம் ஆக போகுதுன்னு!! :)

தனுஜா: விஷ்ணு, you are a total crappy fellow i tell u!

விஷ்ணு: but am dead sure that you are very much enjoying it!

தனுஜா: hahaha...whatever dude! நீ படிக்குறீயா? க்ளாஸ்ல கடைசி பெஞ்சா? எப்ப பாத்தலும் பரிட்சைல ஃவேல் பண்ணிடுவீயா?

விஷ்ணு: ஹாஹா...இப்ப உனக்கு மனசுல அலைபாயுதே ஷாலினின்னு நினைப்பா?

தனுஜா: எல்லாம் பொண்ணுங்களும் ஒரு விதத்தில் ஷாலினி மாதிரி அழகு தான். இந்த பசங்கள தான்....மாதவன் மாதிரி ஒருத்தர பாக்குறது ரொம்ம்ம்ம்ம்ப rare! the world is suffering from an imbalance of good guys! tsk tsk...

விஷ்ணு: ஹாஹாஹா....நீங்க சொன்ன ஜோக்க தஞ்சாவூர் பெரிய கோயில தான் எழுதி வைக்கனும்!!

தனுஜா: hoi!! என்ன நக்கலா?

விஷ்ணு: சரி சரி...கூல் கூல்.... நான் வேலை தேடிகிட்டு இருக்கேன்.... நீங்க?

தனுஜா: ஓ..ஐயா வெட்டி ஆபிசரோ? ம்ம்ம்.... நான் ஒரு mncல வேலை பாக்குறேன்.

விஷ்ணு: ஹாலோ அப்படி ஒன்னும் கேவலமா நினைக்காத. வேலை இல்லாம வெட்டியா இருக்குறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா!! அதுக்கலாம் ஒரு தனி கலை இருக்கனும்!

தனுஜா: உனக்கு கொஞ்சம்கூட மானம், ரோஷம் சூடு சொர்ன கிடையாதா?

விஷ்ணு: சாரி பொண்ணுங்ககூட பேசும்போது அதுங்களுக்கு நான் லீவு விட்டுடுவேன்!

இதை பார்த்து விட்டு தனுஜா விழுந்து விழுந்து சிரித்தாள்.

தனுஜா: ஹாஹா.... you are such a funny funny guy! alrite, am busy now. talk to u later.

விஷ்ணு: ஹாலோ, அப்போ என் கதி? என்ன பெரிய பிஸி. இன்னிக்கு சண்டே தானே?

என்ற குறுந்தகவலை அனுப்பவதற்காக முயற்சி செய்தான். ஆனால், நெட்வோர்க் பிரச்சனை என்று கைபேசியில் காட்டியதால், விழா நடக்கும் ஹால்லுக்கு சென்றான். அங்கயும் சரியாகவில்லை. இது சிக்னல் பிரச்சனை என்பதால் ஒரு ரூம்முக்கு சென்றான்.

உள்ளே சரியான கூட்டம். சின்ன குழந்தைகள் விளையாடி கொண்டிருக்க அவன் ரூம் கதவு அருகே நின்று கைபேசியை சரி செய்து கொண்டிருந்த வேளையில் இரு பெண்கள் பேசி கொண்டே வெளியே வந்தனர்.

அதில் ஒருத்தி, "ஏய் என்ன மச்சி, கையும் ஃபோன்னுமா இருக்க? யாருகிட்ட இவ்வளவு நேரமா மெசேஜ் அனுப்பிகிட்டு இருந்த?"

இன்னொருத்தி, "அது ஒன்னுமில்ல மச்சி, அன்னிக்கு சொன்னேன்ல ஒரு ராங் நம்பர் விஷ்ணுன்னு அவன் தான். சும்மா ஸ் எம் ஸ் பண்ணிகிட்டு இருந்தான்..."

அவள், "என்னது? ராங் நம்பர் ஃபிரண்ட்ஷிப்பா? என்ன டி.....பையன் ரொம்ப கடல போடுறானா?"

இவள், "அப்படி சொல்ல முடியாது....பட்....ரொம்ப ஜாலி டைப்."

இவர்கள் பேசியதும் விஷ்ணுவிற்கு ஆயிரம் பட்டாம்பூச்சிகள் புல்லாங்குழல் வாசிப்பதுபோல் இருந்தது. தனுஜாவை அடையாளம் கண்டுகொண்டான். ஆம்ஸ்ட்ராங் நிலவில் மட்டும் கால் அடி வைத்தார் என்றால் விஷ்ணு சந்தோஷத்தால் mars, venus, neptune எல்லாவற்றிலும் கால் அடி வைத்ததுபோல் உணர்ந்தான்.

தனுஜாவை பார்த்தது 3 வினாடி என்றாலும் தன் கேமிரா கண்களால் படம் எடுத்து வைத்து கொண்டான். மனதில் அதை 'develop' செய்ய.

சில பொண்ணுங்களுக்கு அவர்களின் முகபருக்கள்கூட அழகு தான். காலை நேரத்தில் இலைகள் மேல் விழுந்துகிடக்கும் பனித்துளிகள் போல் தனுஜாவின் பொலிவான முகத்தில் கன்னங்களில் ஆங்காங்கே இருந்த பருக்கள்கூட விஷ்ணுவிற்கு அழகாய் தெரிந்தது.

***

"this is for my sweet darling."விஷ்ணு சமையல் அறையிலிருந்து ஒரு கப் ஆரஞ்சு ஜுஸ் கொண்டுவந்தான்.

"எதுக்கு டா இப்போ இது? சொன்ன வேலைய மட்டும் செய்....ஏதாச்சு செஞ்சியா இல்லையா?"

"எல்லாம் on the process of completion..... இந்த ஜுஸ குடிச்சுட்டு தெம்பா ரிப்போர்ட்ட செஞ்சி முடி. alrite. அதுவரைக்கும் உங்களிடமிருந்து விடைபெற்று கொள்வது உன் இம்சை அரசன் விஷ்ணு." சிரித்தபடி மீண்டும் சமையல் வேலைகளை முடிப்பதற்காக சென்றான். திரும்பி வந்தான்.

தனுஜாவின் லெப்டாப்பில் உள்ள 'teri ore' என்னும் இந்திபாடலை ஒலிக்க செய்யவிட்டு, "dedicating this song to you, my sweetheart."என்றபடி தனுஜாவின் கன்னங்களை கிள்ளினான்.
***

"அவள வெளியே கூப்பிடலாமா?" என்றது விஷ்ணுவின் மனசாட்சி.

(தொடரும்)

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Thursday, September 24, 2009

அன்பே, உன்னால் மனம் crazy!- 1

தனுஜா தனது லெப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தாள். காலை மணி 10 ஆனது. "என்ன ஆச்சு...இன்னும் அவன் ஃபோன் பண்ணல...." தனக்குள் முணுமுணுத்து கொண்டாள். microsoft excelலில் டைப் செய்தவற்றை save செய்துவிட்டு ஃபோன் செய்தாள் விஷ்ணுவுக்கு.

அப்போது தான் விஷ்ணு விமானத்தைவிட்டு இறங்கி பெட்டிகளை எடுக்க சென்றான். அவனது கைபேசி அலறியது.

"ஹாய் விஷ்ணு? எங்க இருக்க?"

"ஹாய் தனஜா... என் வருகைக்காக வழி மீது விழி வைத்து காத்துகொண்டிருக்கிறாயா?" என்றான் விஷ்ணு.

தனுஜா சிரித்து கொண்டே, "என்ன ஆச்சு உனக்கு. flightல local சரக்கு ஏதாச்சு குடிச்சியாக்கும்?"

"அடி பாவி!!"

"ஏன் ஃப்ளைட் லேட்?" என்று வினாவினாள் தனுஜா.

"ஒன்னுமில்ல டா, ஏதோ engine problem it seems. bombayலே 2 மணி நேரம் லேட்டா ஆகிட்டான். சரி நான் கொஞ்சம் நேரத்துல வந்துடுவேன்... alrite."

விஷ்ணுவிற்கு வேலை பம்பாயில். ஆக, இரண்டு அல்லது மூன்று மாதத்தில் ஒரு முறை தான் சென்னைக்கு வர முடியும். அப்போதுகூட ஒருசில நாட்களே விடுமுறை கிடைக்கும். ஒரு நாள் லீவு கிடைத்தாலும் பறந்துவந்துவிடுவான் தன் ஆசை மனைவி தனுஜாவை பார்க்க.

பெட்டிகளை மேசையில் வைத்துவிட்டு, சோபாவில் விழுந்தான் அசதியால்.

"how's everything there? how is work going?"அவன் பக்கத்தில் அமர்ந்தபடியே கேட்டாள் தனுஜா.

விஷ்ணு, "ம்ம்...ஏதோ போகுது? அதே வேலை...அதே ஆபிஸ்...அதே traffic jam.." சலித்து கொண்டான். பெட்டியில் இருக்கும் துணிகளை எடுத்து வெளியே வைத்தாள் தனுஜா.

"ஹாஹா....ஏன் இப்படி சலிச்சுக்குற? அங்க தான் நிறைய ஷில்பா ஷெட்டி, ராணி முகர்ஜி, பிரியங்கா சோப்ரான்னு பொண்ணுங்க இருப்பாங்களே...உனக்கு பொழுது நல்லா போகுமே?" தனுஜா விளையாட்டாய் கூறினாள்.

அவனும் சிரித்துகொண்டே, "என்ன தான் சாப்பாத்தி, நாண் இருந்தாலும், என் வீட்டு இட்லிக்கு ஈடாகுமா?" தனுஜாவின் இடுப்பை கிள்ளினான். முறைத்தாள்.
அவனது கையை தள்ளிவிட்டாள் தனுஜா. துவைப்பதற்காக துணிகளை அள்ளிகொண்டு செல்ல முற்பட்டபோது, விஷ்ணு அவளது கைகளை பற்றினான். துணிகள் தரையில் விழ, தனுஜா அவன் மேல் விழுந்தாள் சோபாவில்.

"விஷ்ணு, என்னது...விடு... இன்னிக்கு நிறைய வேலை இருக்குடா எனக்கு." என்றாள் தனுஜா அவனது பிடியில் இருந்து தப்பிக்க முற்பட்டு கொண்டே.

கண்களில் குறும்பு பார்வையுடன் அவன், " all programs cancel!"
பிடிக்கவில்லை என்று அவனது கைகளை விலக்கினாலும், தனுஜாவிற்கு அவன் செய்தது பிடித்து இருந்தது மனத்திற்குள்.

அவள், "ம்ம்ம்...ஏதோ பழமொழி சொல்வாங்களே...காஞ்ச மாடு கம்பைக் கண்டால் பாயுமாம்....அந்த மாதிரில இருக்கு..."

அவன்," காள மாட்டுக்கு பசிக்குது, பசு மாட்டுக்கு பசிக்கலையா?" மயக்கவைக்கும் குரலில்.

"ச்சீ..you shameless flirt."சிரித்துகொண்டே கீழே விழுந்த துணிகளை அள்ளி கொண்டு வாஷிங் மிஷினில் போட்டாள். பின்னாடியே தொடர்ந்து சென்றான் விஷ்ணு. தண்ணீர் குழாயை அழுத்தினாள்; detergent powderயை போட்டாள். பின்னாடியிலிருந்து அவளை இறுக்க கட்டிபிடித்து, "i really miss you da!" விஷ்ணு அவளது காதுமடலை கடித்தான்.

"நீ என்னைய மிஸ் பண்ணவே இல்லையா?" தொடர்ந்தான் விஷ்ணு.

"ஏன் இல்ல? அன்னிக்கு ஒரு நாள்....." என்று முடிப்பதற்குள் விஷ்ணு குஷியாகி,

"அப்பரம் என்ன ஆச்சு?"

தனுஜா, " அன்னிக்கு ஒரு நாள் toilet tubelight கெட்டு போச்சு. மாட்ட முடியல எனக்கு. அப்ப தான் உன்னைய மிஸ் பண்ணேன்...நீ இருந்திருந்தா சரியா போட்டு இருந்திருப்பே இல்ல..." வேண்டும் என்றே கிண்டல் அடித்தாள்.

"அடி பாவி.... இவ்வளவு தானா. இந்த காலத்து பொண்ணுங்களுக்கு புருஷன் மேல் அக்கறை இல்ல! what a pity? what a pity?"செல்ல கோபத்துடன் நெற்றியில் அடித்துகொண்டான்.

"என்னப்பா பண்றது? we are all busy career woman. ஆபிஸ்ல ஏகப்பட்ட வேலை. வீட்டுக்கு வந்தா...வீட்ட பாத்துக்கனும். இருக்குறது 24 மணி நேரம் தான். இதுக்கு நடுவுல டீவி பாக்கனும், ஃபிரண்ட்ஸ் கூட வெளியே போகனும். spa, manicure, pedicure, waxing, threading....exercise, yoga... இவ்வளவு இருக்கு. இதுல எங்க டைம் இருக்கு புருஷன பத்தி யோசிக்க?" நக்கல் அடித்தாள் தனுஜா. குளிர்சாதன பெட்டியை திறந்து காய்கறிகளை எடுத்தாள்.

அமைதியான குரலில், "உண்மையாவே ஒரு ஃவீலிங்ஸும் இல்லையா?"

அவள் மறுபடியும், "என்னா ஃவீலிங்ஸ்??" வடிவேலு பாணியில் சொல்ல, விஷ்ணு விழுந்து விழுந்து சிரித்தான்.

சமையலறையில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்து மேசையில் இருந்த கேரட்டை கடித்தபடியே, "ம்ம்ம்....ஒரு சிங்கம் இங்க புலம்பிகிட்டு இருக்கு. நீ கண்டுக்கவே மாட்டேங்குற?"

சுற்றும்முற்றும் பார்த்து, "சிங்கமா? எங்க? எங்க?" தேடினாள் தனுஜா.

"நான் தான் டி அது!"

"என் அம்மா என்னைய ஏமாத்திட்டாங்களே! என்னைய ஒரு மனுஷனுக்கு கட்டிவைக்க சொன்னா...மிருகத்துக்கு இல்ல கட்டிவச்சுட்டாங்க!" சிரித்தாள் தனுஜா.

"ஓவர் குசும்பா போச்சு உனக்கு." விஷ்ணு, தனுஜாவை இழுத்து தன் மடியில் உட்கார வைத்துகொண்டான்.

"i really miss you and your jokes da." விஷ்ணு தனுஜாவின் கண்களை பார்த்து கூறினான்.

புன்னகையித்தபடி தனுஜா, "அதுக்கு இப்ப என்ன பண்ணலாம்ங்கற?"

"இன்னிக்கு 'சம்திங் சம்திங்' கிடையாதா?" கிறுங்கடிக்க வைக்கும் குரலில் விஷ்ணு.

"ஓய்....nothing doing!" வெடுக்கென்று எழுந்தாள்.

"கொஞ்சம் விட்டா போதுமே... நான் கடவுள் ஆர்யா மாதிரி தலகீழ நின்னாலும் முடியாது!!! நைட்டுக்குள்ள headofficeக்கு ரீப்போர்ட் அனுப்பனும். and somemore ..today...... curtain மாத்தனும். சோபா துடைக்கனும். rooms vaacum பண்ணனும். photo frames arrange பண்ணனும்....." என்று அன்று செய்துமுடிக்க வேண்டியவற்றை கூறினாள் தனுஜா.

"alrite alrite....ஒன்னு செய்வோம். இன்னிக்கு we'll reverse our roles. இன்னிக்கு முழுக்க நான் தனுஜா மாதிரி இருக்கேன். எல்லாத்தையும் நான் செய்றேன். நீ விஷ்ணு மாதிரி இரு. விஷ்ணு என்னென்ன செய்வானோ அத செய். யாரு அவங்க ரோல கரெக்ட்டா செய்றாங்களோ, அவங்க சொல்றபடி தோத்தவங்க செய்யனும். alrite? sounds fun man......" விஷ்ணுவின் கண்கள் விரிந்தன.

"நீ என்ன செய்வ வீட்டுல இருந்தா? நாள் முழுக்க டீவி பார்ப்ப? இது ஒரு பெரிய வேலையா?" தனுஜா சொல்ல அதற்கு விஷ்ணு,

"ஹாலோ!! சும்மா இருக்குறதுல எவ்வளவு கஷ்டம் இருக்கு தெரியுமா? நீ ஒரு நாள் இருந்து பாரு...அப்பரம் தெரியும் என் கஷ்டம்." சிரித்தான்.

அவன் தொடர்ந்தான், "அது மட்டுமா செய்வேன்....அப்பெப்ப வந்து உன்னைய disturb பண்ணுவேன்ல....அந்த மாதிரியும் செய்யனும்."

"அதானே பாத்தேன்.... நீ திருந்த மாட்ட?" தனுஜா பொய் கோபத்துடன்.

"time starts now....." சொல்லிகொண்டே, சமையல் வேலைகளை ஆரம்பித்தான் விஷ்ணு. பெருமூச்சுவிட்டவாறு தனுஜா ஹால்லுக்கு வந்தாள். தனது ஆபிஸ் ரீப்போர்ட்டை செய்ய தொடங்கினாள் . லேப்டாப்பில் பாடல்களை ஒலிக்க செய்தாள். "டெலிஃபோன் மணி போல் சிரிப்பவள் இவளா..." என்ற இந்தியன் படப்பாடல் ஒலிக்க, சமையலறையிலிருந்த விஷ்ணுவை எட்டி பார்த்தாள்.

***
3 ஆண்டுகளுக்கு முன்பு......

"ஹாலோ, மிஸ்ட்டர் விஷ்ணு உங்களுக்கு அளவு ஜாக்கெட் கொடுத்தா...அத வச்சு சரியா தைக்க தெரியாதா? நீங்களாம் எதுக்கு கடை வச்சு இருக்கீங்க? what the hell man...and i need this blouse tonight for a wedding function!!" சரமாரியாக பொழிந்தாள் தனுஜா.

(தொடரும்)

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Tuesday, September 22, 2009

என்னை போல் ஒருத்தி...-300வது போஸ்ட்

உன்னை போல் ஒருவன்னு எல்லாரும் பேசிகிட்டு இருக்குற நேரத்துல இது என்ன என்னை போல் ஒருத்தின்னு நினைக்குறீங்களா?

ஒன்னும் இல்ல(வேட்....அதுக்குன்னு கிளம்பி போயிடுறதா..? வேட் வேட்...)

இது என் 300வது போஸ்ட். என்னை போல் ஒருத்தின்னு தலைப்பு வச்சா கொஞ்சம் வித்தியாசமா இருக்குமேன்னு நினைச்சு எழுதியது:)

300 பதிவுகளா? என்னாலேயே நம்ப முடியல!!
எவ்வளவு!!
கிட்டதட்ட 4 ஆண்டுகள் 4 மாதங்கள் ஆகிவிட்டன வலைப்பதிவு தொடங்கி! இவ்வளவு ஆண்டுகளாக தொடர்ந்து ஆதரவு கொடுத்துவரும் அனைவருக்கும் இந்த வலைப்பூவை follow செய்து வரும் 85 பேருக்கும் கோடி நன்றிகள்!

நீங்கள் இல்லை என்றால் நான் இல்லை!

மனசாட்சி: ஏ தோடா...என்ன அரசியல குதிக்க போறீயாக்கும்? தேவையில்லாம டையலாக் விடுற?

நான்: அரசியல் இப்போதுக்கு இல்ல...

மனசாட்சி: ஆமா ஆமா....தமிழ்நாட்டுல ரெண்டு பேரு இப்படி தான் சொல்லிகிட்டு திரியுறாங்க...

நான்: இப்போ நீ தான் அரசியல் பண்ணுற?

மனசாட்சி: அட பாவி, கடைசியில என்னையேவா??!!!

இது சும்மா!!!
அனைவருக்கும் நன்றிகள். தொடர்ந்து உங்களது ஆதரவை கொடுத்து வாருங்கள். என்னால் முடிந்த நல்ல பதிவுகளை எழுத முயற்சிக்குறேன்:)

(by the way, இன்னிக்கு தான் 300வது போஸ்ட் எழுதவேண்டும் என்று ஒரு சின்ன பேராசை. ஏன் என்றால், இன்று தான் நான் குழந்தையாக இருந்தபோது முதல் முதலில் அழுதது. அட...என் பிறந்த நாள்ன்னு சொல்ல வந்தேன்!)

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Sunday, September 20, 2009

dil bole hadippa &ஈரம்

இந்த வார இறுதியில் ரெண்டு படங்கள் பார்த்தேன். ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளுக்கு அப்பரம் ரெண்டு சூப்பர் படங்களை பார்த்த சந்தோஷம் மனசு முழுவதும்!!

ஈரம்- ஷங்கரின் தயாரிப்பில் வந்துள்ள படம். முதல் பாதி crime thriller. இரண்டாம் பாதியில் திகில்! நல்ல ஒரு கலவை. நடிப்பை என்னமா கொட்டியிருக்காங்க ஆதி, நந்தா, சிந்து மோகன். சிந்து மோகம் சமுத்திரம் படத்தில் முரளியின் ஜோடியா வந்தவங்க.

யம்மா சிந்து, சிம்ளி சூப்பர்ப்!! குறிப்பா சாகும் காட்சியில் கண்கள் ஓரமா கண்ணீர் துளி வரும் பாருங்க.... வாவ் வாவ்!!

நந்தா, உங்களுக்கு படங்கள் சரியா ஓடலன்னு கவலை வேணாம். இனி, நிச்சயம் உங்களுக்கு பெரிய படங்கள் வரும். என்ன ஒரு வில்லத்தனமான நடிப்பு....*கைதட்டல்கள்*

ஆதி: ம்ம்ம்ம்.....'தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்' பட்டியலில் நான் உங்களை சேர்த்து வைத்து இருக்கேன்.:))

இன்னொரு ப்ளஸ்: இசை. பாய்ஸ் படத்தில் இந்த மல்கோவா மாமி கதை எழுதும் பயலா வந்த தமனின் இசை! oh my god, u are talented man!பாடல்கள் அருமையான melodies...வாழ்த்துகள்
-----------------------------------------------------------------------------

தில் போலே ஹடிப்பா.

ராணி முகர்ஹி ஷாஹித் கபூர் நடித்து வெளிவந்துள்ள படம். கொஞ்சம் bend it like beckham, chak de india, she's the man ஆகிய ஆங்கில மற்றும் ஏற்கனவே வந்த ஹிந்தி படங்கள் போல இருந்தாலும் சிரித்து மகிழ வைக்கும் படம்! ஆரம்பம் முதல் கடைசி வரை சிரித்து கொண்டே இருக்கலாம்!

ராணி ஆண் வேடத்தில்(veer pratap singh) வரும் காட்சிகள் எல்லாம் கைதட்டல்கள் பறக்கின்றன. அவ்வளவு cute!! veer pratap singhயை தூக்கி மடியில் வைத்து கொள்ளலாமா என்று தோன்றும்! ஹாஹா.... பாடல்கள் பக்கா பஞ்சாப் வாசம்! ஆடி கொண்டே இருக்கலாம்!

மொத்தத்தில் நல்ல படங்களை பார்த்த திருப்தி இப்போதான் கிடைச்சு இருக்கு!

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Tuesday, September 15, 2009

எனக்கே என்னை தெரியாமல்-5

சூடான காபியுடன் ரினிஷா உட்கார்ந்து இருந்தாள் தேவியின் வீட்டில். ஹாலில் இருந்த curtainயை திறந்துவிட்டு ஜன்னல்களை சாற்றினாள்.

"ரொம்ப மழையா இருக்குல." தேவி சொன்னாள்.

"thank you devi."

மழையில் நனைந்த தன்னை வீட்டிற்கு அழைத்தமைக்கு நன்றி சொன்னாள் ரினிஷா. இருவரும் ரொம்ப நேரம் பேசினர். அவர்களுக்கிடையே நிறைய விஷயங்கள் ஒத்துபோயின. ஒரே மாதிரியான விருப்பங்கள்கூட. ரினிஷாவின் கணவன் சந்தேகபேர்வழியாக இருந்தபோதிலும் கஷ்டப்பட்டு வாழ்க்கையை ஓட்டிகொண்டிருப்பதை கேட்ட தேவி,

"தனியா போயிடு ரினிஷா....எதுக்கு கஷ்டம்?"

புன்னகையித்தாள் ரினிஷா. "பார்ப்போம் வாழ்க்கை எப்படி போகுதுன்னு." என்றாள்.

ஆனால், தேவி தான் ஒரு லெஸ்பியன் என்னும் உண்மையை சொல்லவில்லை. மறைப்பதற்காக அல்ல, ஆனால் அதற்கான அவசியம் ஏற்படவில்லை. இருவரும் நல்ல நண்பர்களாகின. தேவியின் பாக்ஸிங் மாஸ்ட்டரும் ரினிஷாவின் நண்பர் ஆனார். மூவரும் நிறைய இடங்களுக்கு சென்றனர். வாழ்க்கை கொஞ்சம் சந்தோஷமாக தெரிந்தது.

அப்படி ஒரு நாள், மூவரும் உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்தபோது தேவி கை கழுவ சென்றாள். அச்சமயம் காபி குடித்து கொண்டிருந்த மாஸ்ட்டர்,
"தேவி, இப்படி சந்தோஷமா இருந்து பாத்தது கிடையாது. நீங்க ரெண்டு பேரும் ஃபிரண்ட்ஸ் ஆனாபிறகு, அவளுக்கு எல்லாம் கிடைச்சு ஒரு ஃவீல் நினைக்குறேன். அதான்..... சந்தோஷமா இருக்கா.... இப்படி ஒரு பொண்ணுகூட ஃபிரண்ஷிப் வச்சு இருக்குற உங்களுக்கு தான் நன்றி சொல்லனும்" என்றார் மாஸ்ட்டர். நல்ல எண்ணத்தில் அவர் சொன்னார். ஆனால், அது உண்மையை போட்டு உடைக்கும் சந்தர்ப்பமாக அமைந்துவிட்டது.

ரினிஷாவிற்கு ஒன்னும் புரியவில்லை.

"மாஸ்ட்டர்...நீங்க என்ன சொல்லவறீங்க?" புருவங்களை உயர்த்தினாள்.

"நீங்களே சொல்லுங்க.... லெஸ்பியன்ஸ்கூட ஃபிரண்டா இருக்க...எத்தன பேரு விருப்பப்படுவாங்க.." என்றார்.

ரினிஷாவிற்கு அதிர்ச்சி!!! ஒன்றும் சொல்லாமல் கிளம்பிவிட்டாள் அவசர வேலை இருப்பதாக சொல்லிவிட்டு. செய்தி தெரிந்த தேவி, பலமுறை ஃபோன் செய்து பார்த்தாள். ஆனால், ரினிஷா எடுக்கவில்லை.

அன்று இரவு தேவியின் வாசல் மணி ஒலித்தது. பெட்டியுடன் ரினிஷா. தேவி தலைகுனிந்து நின்றாள். தோழியிடம் உண்மையை சொல்லாமல் போன வருத்தம் அவள் முகத்தில் படர்ந்தது.

ரினிஷா தேவியை கட்டிபிடித்து அழுதாள்.

"நான் ஒரு உண்மைய உன்கிட்ட சொல்லனும். உன்னைய பாத்த முதல் சந்திப்பிலேயே....ஏதோ ஒரு மாதிரியா இருந்துச்சு. உன்னைய ரொம்ப பிடிச்சு போச்சு. அது ஒரு சாதாரண ஃபிரண்ஷிப்பை மீறிய ஒரு ஈர்ப்பு. சொல்ல தெரியல. நீ தப்பா நினைச்சுப்பேன்னுதான் சொல்லாம விட்டுடேன்......" அழுகையின் நடுவே.

தேவிக்கு ஆச்சிரியமாக இருந்தது.

"இப்ப இந்த நேரத்துல ஏன்...."

"அவர விட்டுடு வந்துட்டேன்."
-----------------------------------------------------------------------------------------

கீதா கதையை கேட்டு விட்டு, "ஆனா, நம்ம societyல இதலாம் ஒத்து வருமான்னு யோசிச்சீங்களா அப்போ."

அதற்கு ரினிஷா, "நான் கொடுக்கும் அன்புக்கு ஒரு இருப்பிடம் தேவைப்பட்டுச்சு. அது என் ex husbandகிட்ட கிடைக்காதுன்னு தெரிஞ்ச பிறகு..... வந்துட்டேன். மத்தவங்க ஆயிரம் சொல்வாங்க. நல்ல மனசு இருக்குற ஒருசில பேர் எங்கள புரிஞ்சுகிட்டாவே சரி. அது போதும் எங்களுக்கு." என்றாள்.

கீதாவிற்கு அன்றைய பொழுது மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. இருவரின் வாழ்க்கை கதையை கேட்டு ஆச்சிரியப்பட்டாள். தன் வாழ்க்கையை எப்படி அமைத்து கொள்வது என்பதை பற்றி யோசனை செய்ய ஆரம்பித்தாள்.

நேரம் ஆகிவிட்டதால் கீதா, "ரொம்ப நன்றிங்க.....really appreciate your time. i had a great evening today. thanks alot."மனமுவந்து நன்றிகளை கூறினாள்.

அப்போது ஒரு குட்டி பொண்ணு அறையிலிருந்து ஓடி வந்து ரினிஷாவின் கால்களை கட்டிபிடித்து, "mummy, look at this. i won the game." கையில் இருந்த video game playerயை காட்டி சிரித்தது.

"யாரு இந்த குழந்தை?" என்று கீதாவின் முகத்தில் உதித்த கேள்வியை கண்டுகொண்ட ரினிஷா,

"my child from my previous marriage." என்றாள்.

கீதா குழந்தையிடம் சென்று, "ஹாலோ, உங்க பேரு என்ன?" என்று கேட்டு தன் பையில் இருந்த ஒரு சாக்லெட்டை கொடுத்தாள்.

"சரி நான் கிளம்புறேன்...." என்றாள் கீதா. வழியனுப்பி வைக்க வாசல்வரை வந்தனர் ரினிஷாவும் தேவியும்.

"ஏதாச்சுன்னா...ஃபோன் பண்ணு." என்றாள் தேவி கீதாவிடம்.

கீதா உடனே, "ம்ம்ம்.... குழந்தைக்கு தெரியுமா?....நீங்க ரெண்டு..." எச்சில் முழுங்கினாள். கேட்க கூடாத கேள்வியை கேட்டுவிட்டதாய் முழித்தாள்.

சிரித்து கொண்டே ரினிஷா, "அவள பொருத்தவர....அவளுக்கு ரெண்டு அம்மா இருக்காங்க...."

*முற்றும்*

(யப்பா சாமி, ஒரு வழி முடிச்சுட்டேன். இந்த பாகம் ரொம்ப சீக்கிரமா முடிஞ்சுட்டு. கதைக்கு எப்படியாச்சு முற்றும் போட்டுவிட வேண்டும் என்பதற்காக தான் முடிச்சேன். ஐயோ....எந்த நேரத்துல எழுத ஆரம்பிச்சேன்னு தெரியல. ஒரே பிஸி... ப்ளாக் பக்கமே தலவச்சு படுக்கல......இனியாவது உருப்படியா எதாச்சு எழுதுறேன். i guess i will be back to form soon!)

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Tuesday, August 25, 2009

எனக்கே என்னை தெரியாமல்-4

கை நிறைய மாத்திரைகள். தன் அறை படுக்கையில் உட்கார்ந்து இருந்தாள். காலையில் பள்ளிக்கு கொண்டு சென்ற பாட்டிலில் கொஞ்சம் தண்ணீர் இருந்தது. திறந்து கொஞ்சம் குடித்தாள் தேவி. துயரம் தொண்டையை அடைத்தது. மனம் படபடத்தது. கைகள் நடுங்கின.


தான் செய்வது முட்டாள்தனம் என்று மூளைக்கு புரி்ந்தாலும், புண்பட்ட மனத்திற்கு நிம்மதி வேண்டிய சூழ்நிலை. அவசியம். தேவை. வாய் அருகே மாத்திரைகளை கொண்டு சென்றபோது கைபேசி அலறியது.


"ஹாய் தேவி, a very good and surprising news. you have been selected to represent our kick-boxing club in the international contest in canada. congrats ya. am so happy and proud of you!! get ready to rock on. see you tmr. need to explain the contest procedures. good nitez." என்று பாக்சிங் மாஸ்ட்டரிடமிருந்து குறுந்தகவல் வந்தது.


ஸ் எம் ஸை பார்த்துவிட்டு அழ ஆரம்பித்தாள், 20 நிமிடங்களுக்கு. சந்தோஷமும் துக்கமும் ஒரே நேரத்தில் தேவியால் ஏற்று கொள்ள முடியவில்லை. சந்தோஷமான செய்தி அவள் மனதிற்கு நிம்மதியை கொடுத்தது. சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் வந்த செய்தி அவளை எந்த ஒரு முட்டாள்தனமான காரியத்தையும் செய்யவிடாமல் தடுத்தது.


அந்த குறுந்தகவலை பல முறை பார்த்து மகிழ்ச்சி அடைந்தாள். தொலைந்த வாழ்க்கை ஒரு சின்ன குறுந்தகவல் மூலம் வரும் என்று நினைக்கவில்லை. உடனே தனது கிக் பாக்சிங் மாஸ்ட்டருக்கு ஃபோன் போட்டு தன் பிரச்சனையை கூறினாள், பள்ளியில் நடந்ததையும் கூறினாள். தான் தற்கொலை முயற்சிக்கு முற்பட்டதாகவும் கூறினாள்.


அவருக்கு பெரிதும் அதிர்ச்சியாக இருந்தது. இதுநாள் வரை தேவியை ஒரு மாணவியாக, தைரியமான பெண்ணாக பார்த்தவருக்கு அவள் சொன்ன ஷயங்கள் விஜித்திரமாக இருந்தது. இருப்பினும், அவள் மீது அதிக மரியாதை வந்ததே தவிர அவளை ஒதுக்கவில்லை. மாஸ்ட்டர் ஆறுதலாக பேசியது அவளுக்கு ஆனந்த கண்ணீரை வரவழைத்தது.


உலகில் கடவுளே இல்லை என்று நினைக்கும்போது தான் ஏதோ ஒரு ரூபத்தில் கடவுள் வருவார். தேவிக்கு அந்நேரம் தெய்வமாக தெரிந்தவர் மாஸ்ட்டர் தான். தற்கொலை முயற்சியை கைவிட்டாள்.


மாஸ்ட்டரின் ஊக்கத்தால் போட்டிக்காக தீவிரமாக பயிற்சி செய்தாள். பள்ளியில் மறுபடியும் சேர்த்து கொள்ளும்படி தேவி சார்பாக மாஸ்ட்டர் பேசினார். ஆனால், எதுவுமே வேலைக்கு ஆகவில்லை. கடைசியில் வேறு ஒரு பள்ளியில் கஷ்டப்பட்டு சேர்ந்து படிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டாள் தேவி. மிகுந்த சிரமத்துடன் பள்ளி படிப்பை முடித்து, sports science மேற்கல்வி படிப்பை படித்தாள்.


பல போட்டிகளில் பங்குபெற்று தனது குருவுக்கு பெருமையை தேடி தந்தாள். தானாகவே ஒரு உடற்பயிற்சி நிலையத்தை உருவாக்கி, பலவித உடற்பயிற்சிகளை சொல்லிகொடுத்து கொண்டிருக்கிறாள் தேவி. காலேஜ் படிக்கும்போதே, தனது சிகை உடை அலங்காரத்தை முற்றிலுமாக மாற்றிகொண்டாள்.


தன் மனதிற்கு ஒரு உருவம் வேண்டும் என்பதற்காக தான் மாற்றி கொண்டாளே தவிர வெளிஉலகத்திற்கு தான் ஒரு lesbian என்று காட்டவேண்டும் என்பதற்காக ஒரு போதும் தன்னை மாற்றிகொள்ளவில்லை.

***

"actually கீதா, தேவியோட இந்த quality தான் என்னைய ரொம்ப ஈர்த்துச்சு. அவ யாருன்னு அவளுக்கு தெரியும்....ஆனா அத வெளிப்படையா காட்டனும்னு அவசியம் இல்லேன்னு நினைக்குற ஆளு. that's what i really really like about her." ரினிஷா சொல்லவும் தேவி குளித்துமுடித்து வரவும் சரியாக இருந்தது.


தேவி, "நீங்க யாரும் இன்னும் சாப்பிடாம இருக்கீங்க? let's eat. i am damn hungry man." என்றபடி மேசையை சுத்தம் செய்தாள். ரினிஷா உணவை மேசையில் கொண்டு வந்து வைத்தாள். சொன்ன கதையை கொஞ்சம் கொஞ்சமாக ஜீரணித்து கொண்டு இருந்தாள் கீதா. இன்னும் மீளாத கீதா,


"எப்படி தேவி....இவ்வளவு கஷ்டங்களையும்....?" என்றாள்.


சிரித்துகொண்டே, "இதலாம் ஒரு கஷ்டம்னு நினைக்க முடியாது. உலகத்துல எத்தனையோ பேரு.....take for instance....கை கால் இல்லாதவங்க, சந்தோஷமா வாழ்க்கைய ஓட்டிகிட்டு இருக்காங்க ஏதோ ஒரு வகையில. அவங்களோட நிலைமைய பாக்கும்போது நம்மளோடது எல்லாம் nothing."


கீதாவிற்கு உணவு பரிமாறப்பட்டது.


"இன்னும் கொஞ்சம் போடவா?" ரினிஷா உபசரித்தாள்.


சாப்பிட்டு முடித்தபிறகு, ரி்னிஷா பழங்கள் கொண்டு வந்தாள். அதற்கு தேவி, "டியர், நான் உன்கிட்ட எத்தன தடவ சொல்லியிருக்கேன். fruits should be taken before meals. not after meals. indigestion வரும் பா...." சற்று கோபித்து கொண்டாள்.


சிரித்தபடி ரினிஷா, "ஓ...shut up man! நீயும் உன் factsம். ஏதோ சாப்பிட்டோமா இருந்தோமான்னு இல்லமா எப்ப பாத்தாலும் ஒரு கருத்து....." தேவியின் முடியை செல்லமாய் கலைத்துவிட்டாள்.


"சரியா சாப்பிடாம இருந்தா, இந்த மாதிரி கண்ட இடத்துல கொழுப்பு வந்திடும்." ரினிஷாவின் இடுப்பை கிள்ளினாள் தேவி.


"oh just shut up man!" சிரித்துகொண்டு மேசையில் இருந்த தட்டுகளை எடுத்து சென்றாள்.


இருவரின் கிண்டலை பார்த்து ரசித்தாள் கீதா. தேவியிடம் கீதா, "ரினிஷாவ உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா?"


புன்னகையித்தாள் தேவி. சோபாவில் உட்கார்ந்திருந்த கீதா-தேவியுடன் சேர்ந்து கொண்டாள் ரினிஷா.


"ரினிஷா, நீங்க எப்படி தேவிய மீட் பண்ணீங்க? அந்த கதைய சொல்லவே இல்ல...." கீதா கேட்டாள்.


"ஓ...bedtime story கேக்கனுமா?" கிண்டல் அடித்தாள் தேவி. தொடர்ந்தாள் கதையை....


***

ரினிஷா நிறைய பொது தொண்டு செய்வதில் ஆர்வம் உடையவள். பல்வேறு மருத்துவமனைகளில் ரத்த தானம் முகாம் நடத்தி வந்தாள். தேவிக்கு இரத்த தானம் கொடுக்கும் பழக்கம் உண்டு. அப்படி ஒரு முறை தேவி தன் வீட்டு பக்கத்தில் இருக்கும் மருத்துவமனையில் ரத்த தானம் கொடுக்கும்போது தான் முதன்முறையாக ரினிஷாவை பார்த்தாள்.

அன்று ரினிஷா வழக்கம்போல் எல்லாரிடமும் சிரித்துபேசி கொண்டு இருந்தாள். registration formயை கவுண்ட்டரில் கொடுத்தாள் தேவி. அங்கு இருந்து ரினிஷா விவரங்களை சரி பார்த்தாள்,

"ம்ம்ம்.....name.......home address......date of birth......" பிறந்த தேதியை பார்த்தபிறகு ஆச்சிரியம் அடைந்தாள்.

"அட நானும் 19th august தான்...ஆனா உங்களவிட ஒரு வயசு கம்மி" புன்னகையித்தபடி சொன்னாள் ரினிஷா. புதிய நபர்களிடம் அதிகம் பேசாத தேவி எப்போதும் போலவே புன்னகையை பதிலாய் வீசினாள்.

முகாமை முடித்துவிட்டு கிளம்ப தயாரானாள் ரினிஷா.

தேவி வந்த வேலையை முடித்து கொண்டு தன் பைக்கை ஸ்ட்டார்ட் செய்யும்போது மழை ஜோராக பெய்ய தொடங்கியது.

நனைந்தபடியே மருத்துவமனை கேட் அருகே நின்றுகொண்டிருந்தாள் ரினிஷா call taxiக்காக. அவளை கடந்து வேகமாக சென்றாள் தேவி தனது பைக்கில். ஆனால் ஏனோ தெரியவில்லை தேவி பைக்கை reverse செய்தாள். ரினிஷா பக்கம் வந்தாள்......

(தொடரும்)

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Sunday, August 23, 2009

கந்தசாமி- நொந்து maggi noodlesaa போயிட்டேன் சாமி!

தமிழ் சினிமாவின் கஷ்டகாலமோ இல்ல என் கஷ்டகாலமோ நான் சமீபத்தில் பார்த்த எந்த படமும் நல்லாவே இருப்பதில்ல! (ஏன் கந்தசாமி..ஏன்? நான் கடவுள சொன்னேன்?)

நேத்திக்கு நைட் ஷோ பார்த்தேன். சாரி.... படத்து தூங்கிட்டேன். கடைசி ஒரு மணி நேரம் நல்லா தூங்கிட்டேன். படம் முடிஞ்சி அக்கா எழுப்பிவிட்டாள். படத்தைவிட பின்னாடி, ஏதோ அடிதடி நடந்துச்சு....அது இன்னும் சுவாரஸ்சியமா இருந்துச்சு!!

சில கேள்விகள்:

1) சுசி கணேசன், உங்களுக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசையா? முழு படத்தில் ஹீரோவா நடிக்கலாமே. இந்த படத்துல வந்த மாதிரி ஒரு சின்ன ரோல் பண்ணாம, முழு நீள படத்தில் நடிங்க, கலைப்புலி தாணுவே காசு போடுவாரு!

2) கலைப்புலி தாணு ஐயா, வெளியே போயிட்டு வர ஆட்டோ செலவுக்கு காசு ஏதேனும் வேணும்ன்னா சொல்லுங்க...... கந்தசாமி கடவுள்கிட்ட லெட்டர் எழுதி போடுவோம்!

3) சேவல் முருகன் அவதாரம்.... சரி ஏதோ ஒத்துகிறேன்....அப்பரம் ஏன்ய்யா மியாவ் மியாவ் பூனைக்குட்டி பாட்டு வந்துச்சு? பூனைக்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்?

4) அடுத்த படத்தில் ஸ்ரேயாவுக்கு (அப்படி அந்த வாய்ப்பு அவங்களுக்கு இருந்தா), தோழி வேடம் இருந்தால் என்னைய கூப்பிடுங்க. தோழி அவங்களுக்கு அறைவிடுற மாதிரி ஒரு சீன் வைங்க. நான் அந்த தோழி ரோல் செய்யுறேன்..... ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

5) ஸ்ரேயாவுக்கு சரியா payment கொடுக்கல்ல....டப்பிங் 'ஜகஜோதியா' இருக்கு!

6) விக்ரம் அங்கிள், ஆமா அங்கிள்....உங்க முகத்துல வயதான கலை தெரியுது... அதான் அப்படி கூப்பிட்டேன். அங்கிள் ப்ளீஸ், இனிமேலு இந்த மாதிரி சூப்பர்ஹீரோ படம் பண்ணாதீங்க. எனக்கு வாந்தி, பேதி, மயக்கம், தலைவலி இப்படி பன்றி காய்ச்சல் symptomsம் வருது!

7) மெக்சிகோ நாட்டுக்கு கதை ஏன் போனுச்சு? சரி கதையே இல்லேங்கிறீங்களா, சரி ரைட்டு விடுங்க.

8) வடிவேலு சார், நீங்க வேற ஏதாச்சு business செய்யுங்களேன்....அதான் காமெடி ஸ்டாக் முடிஞ்சு போச்சே!

9) பிரபு தாத்தா, உங்கள நினைச்சா எனக்கு சிப்பு தான் வருது. எங்க ஊருல ஒரு போலீஸ் வேலை இருக்கு. வந்து பாக்குறீங்களா?

10) கடைசி ஒன்னே ஒன்னு கேட்டுகிறேன். 'என் பெயரு மீனாகுமாரி' பாடலை பார்த்து முகம் சுளித்து வாய், மூக்கு எல்லாம் கோணிக்கிட்டு போச்சு. மருந்து அனுப்பி வைங்க, 'கந்தசாமி' படக்குழுவினரே!! அந்த பாடலை பார்த்து, அழ ஆரம்பிச்ச என் சித்தி பையன் இன்னும் அழுதுகிட்டு இருக்கான். மந்திரிச்சு விடனும்னு நினைக்குறேன். யாராச்சு சாமியார் கிடைப்பாங்களா?

சூப்பர்ஹீரோ படம் அடுத்து சூர்யா 'ஆதவன்' அப்படி பண்ணுறாராம். சூர்யா, பாத்து பண்ணுங்க!!

கந்தசாமி- நொந்து maggi noodlesஆ போயிட்டேன் சாமி!

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Friday, August 21, 2009

எனக்கே என்னை தெரியாமல்-3

"ட்ட்ரீரீரீங்........ட்ட்ரீரீரீங்...." வாசல்மணி ஒலி எழுப்பியது. கதவை திறந்தாள் ரினிஷா.


"ஹாய்....கீதா...வல்கம்" புன்னகையுடன் ரினிஷா. வரும்வழியில் கற்பனை செய்ததைவிட பல மடங்கு அழகாய் இருந்தாள் ரினிஷா.


பதிலுக்கு கீதா நன்றி என்பதுபோல் சற்று தலையாட்டினாள். வீட்டை சுற்றிபார்த்தாள் கீதா. "வாவ்...so beautiful man! எப்படி இவ்வளவு அழகா வச்சு இருக்கீங்க வீட்ட? nice man...really nice." பூரிப்பு அடைந்தாள் கீதா.



மாறாத புன்னகையுடன் ரினிஷா, "நம்மள சுத்தி எல்லாமே அழகா இருக்கனும்னு நினைக்குற ஒரே இடம் வீடு தான். வெளியே போனோம்னா, அத எதிர்பார்க்க முடியாதுல.....அதான்....."



ரினிஷா சொன்னதில் உள்ள ஆழ்ந்த அர்த்தம் கீதாவிற்கு புரிந்தது. பிடித்தும் இருந்தது. "நீங்க ரெண்டு பேரும் பேசிகிட்டு இருங்க.... i'll go freshen up. alrite?" என்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்றாள் தேவி. அவள் சென்றபிறகு, கீதாவும் ரினிஷாவும் பேசிகொள்ளவில்லை. ஹால் ஒரே அமைதியாகவே இருந்தது. கீதாவிற்கு எப்படி, எதை கேட்பது என்று தெரியவில்லை. கீதாவின் முகத்தில் ஓடிய குழப்ப நிலைகளை அறிந்த ரினிஷா,



"என்னமோ கேட்கனும்னு இருக்க...ஆனா....சொல்ல கஷ்டப்படுற....." புன்னகையிட்டாள். தொடர்ந்தாள் ரினிஷா,



"don't worry.....எதுவா இருந்தாலும் சொல்லுங்க..... "



கீதா, "இல்ல....நீங்களும் தேவியும் எப்படி....."



ரினிஷா, "எப்படின்னா?...."



கீதா, "இல்ல...எப்படி ஒன்னா....ஒரே வீட்டுல.....actually how did u people got to know each other."

கொஞ்சம் சிரித்தாள் ரினிஷா. "இன்னிக்கு நைட் ஒரு flashback கேட்டே ஆகனும்னு இருக்க போல...." மறுபடியும் சிரித்தாள்.

***

சின்ன வயதிலிருந்தே 'tomboy' போல தான் திரிந்தாள் தேவி. இதற்கு காரணம் அவர்கள் வீட்டில் இருந்தவர்கள் என்று ஒரு வாக்கியத்தில் சொல்லிவிட முடியாது. பாட்டியிடம் வளர்ந்தவள். அப்பா இன்னொருத்தி வீட்டில். அம்மாவோ சூதாட்டாக்காரி. பல இடங்களில் கடன். தேவியின் இரண்டு அண்ணன்களும் தேவியை போட்டு அடித்து விளையாடுவதையே பொழுது போக்காக வைத்திருந்தார்கள். நிம்மதி இல்லாத சூழலில் இருந்து விடபட வேண்டும் என்று தேவி ஆசைப்பட்டாள்.

எது செய்வதாக இருந்தாலும் தனியாக செய்தாள். குடும்பத்தின் மீது வெறுப்பு. தனித்து வாழ வேண்டும் என்று திட்டவட்டமாக முடிவு செய்தாள். தன்னை தைரியமான நபராக மாற்றி கொள்ள கராத்தே, கிக்-பாக்சிங் போன்ற நடவடிக்கைகளில் ஈடுப்பட்டாள். பள்ளி ஹாக்கி குழுவில் இருந்தாள்.

தன் கிக் பாக்சிங் மாஸ்டர் தான் தேவிக்கு பெரிய inspiration. அவரின் mannerism, style, பேசும்விதம் இவற்றால் பெரிதும் கவரப்பட்டாள். ஆனால் சதாரண பெண் போல் அவரின் மீது ஆசை வரவில்லை. அதையும் தாண்டி ஒரு எண்ணம். அவரை போலவே இருக்க வேண்டும், அவரை மாதிரியே மாற வேண்டும் என்று பைத்தியம் போல் சுற்றினாள்.

அவர் செய்யும் உடற்பயிற்சிகளையும் weight-lifting பயிற்சிகளையும் தேவியும் பின்பற்றினாள். நீட்டமாக இருந்த முடியை வெட்டினாள். மாஸ்டர் வலது கையில் போட்டிருக்கும் வளையம் போலவே தானும் போட்டு கொண்டாள். தன் அறை அலமாரியில் நிறைய polo t-shirts தொங்க ஆரம்பித்தன. தனக்குள் ஏதோ ஒன்று மாறுவதை உணர்ந்தாள். இருப்பினும் அது அவளுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. அவளின் மாற்றங்கள் மற்ற யாருக்கும் தெரியவில்லை. வீட்டில் யாரேனும் கவனித்தால் தானே.

பள்ளி இறுதியாண்டில் பாட்டின் இறப்பு அவளை பாதித்தது. இருந்த ஒரு துணையும் இல்லை. அண்ணன்கள் அவளின் உடை மாற்றங்களை பார்த்து, "டேய் எனக்கு தங்கச்சி இல்லடா. தம்பி பொறந்து இருக்கான்." என்று கிண்டலும் கேலியும் செய்தார்கள். அப்போது தான் உணர்ந்தாள் தான் செய்யும் விஷங்கள் மற்றவர்கள் கண்களில் தென்படுவதை.

அழுது புரள ஒரு மடி இல்லை. ஆறுதலுக்கு அவ்வளவாக தோழிகளும் இல்லை. பாலைவானத்தில் தண்ணீர் தேடினாள் தேவி. மற்றவர்களின் கேலி பேச்சுக்கு ஆளாகினாள். வகுப்பு மாணவர்களிடம் பேசுவதை முற்றிலும் தவிர்த்தாள்.

ஒரு நாள் ஹாக்கி பயிற்சி முடிந்து உடை மாற்றுவதற்காக அனைத்து பெண்களும் changing roomகளுக்கு சென்றன. அப்போது தனியாக உட்கார்ந்து காலணிகளை கழற்றிகொண்டிருந்தாள். குளித்துவிட்டு வந்தனர் சில பெண்கள்; உடம்பில் துண்டுகளை மட்டும் கட்டி கொண்டு. தேவி உட்கார்ந்திருக்கும் எதிர்புரத்தில் தான் அந்த 4 பெண்கள் பேசி சிரித்து கொண்டிருந்தனர். தாங்கள் பேசும் சுவாரஸ்சியத்தில், அதில் இருந்த ஒரு பெண் தன் துண்டு அவிழ்ந்துவிடும் நிலையில் இருப்பதைகூட கவனிக்கவில்லை. துண்டின் நிலையை கண்ட தேவி அந்த பெண்ணிடம் சொல்வதற்காக அவளை நோக்கி ஓடினாள்.

தேவி அந்த துண்டை பிடித்தாள்; அவிழ்ந்துவிட்டது!

தேவி தான் வேண்டும் என்றே துண்டை அவிழ்த்துவிட்டாள் என்று ஒருத்தி கத்தினாள். அனைவருக்கும் அதிர்ச்சி! அந்த பெண் தேவியின் கன்னத்தில் பளார் என்று அறைந்தாள். பெற்ற பெண்கள் தேவியை சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடித்து நொறுக்கினார்கள். வலி, வேதனை, அவமானம்!

பள்ளி நிறுவனத்திற்கு செய்தி தெரிந்துவிட்டது. தேவி ஒரு பெண்ணாக இல்லாமல் வேறு ஒருவிதமாக நடந்துகொள்வதை குற்றம் என்றனர்.தேவியின் இந்த சிந்தனை தான் பெண்களிடம் தவறாக நடந்துகொள்ள அவளை தூண்டியது என்றனர்.

உண்மை எனவென்று தெரியாமல் பேசுகிறார்களே என்று தேவி வடித்த கண்ணீர் துளிகள் எல்லை இல்லை. தேவியை பள்ளியில் இருந்து நீக்கினார்கள். பள்ளியில் பிரச்சனை எல்லாம் முடிந்து வீட்டிற்கு போகும்போது மணி 11. கயிறா? தலைவலி மாத்திரையா? கீழே விழுவதா? என்று பல யோசனைகள். மரண வலியை விலை கொடுத்து வாங்கினாள்.

"சார், மூன்னு பாக்கெட் தலவலி மாத்திர கொடுங்க...." பணத்தை நீட்டினாள் கடைக்காரரிடம்.

(தொடரும்)

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Tuesday, August 11, 2009

எனக்கே என்னை தெரியாமல்-2

பகுதி 1


திடுக்கிட்டு போனாள் அவள். தேவி புன்னகையுடன், "ஐ எம் தேவி..." என்றாள்.


ஆச்சிரியத்துடன் அவள், "நீங்க யாரு...."


"உங்கள கொஞ்ச நேரமா கவனிச்சேன். mostly, அந்த பேப்பர யாரும் கண்டுகொள்ள மாட்டாங்க. அப்படி நீங்க தேடி வந்து பாத்தீங்கன்னா...you really need some help i think. ஒன்னும் பயப்படாதீங்க... நான் இந்த அக்னி மன்றத்துல தான் இருக்கேன்." என்றாள் தேவி, கை குலக்குவதற்காக கைகளை நீட்டினாள்.


ஏதோ தொலைந்து போன குழந்தையை மறுபடியும் பார்த்ததுபோல் அந்த பெண்மணி முகத்தில் ஒரு மறுமலர்ச்சி, மகிழ்ச்சி, நிம்மதி. சற்று தன்மையான குரலில், "அப்ப நீங்க...." என்று இழுத்தாள்.


"yes... you are right. i am a lesbian."


அந்த பெண்மணிக்கு மறுபடியும் ஆச்சிரியம். "ஓ...நான் கீதா..." தேவியுடன் கைகுலுக்கி கொண்டாள். ஆனால், மறுநொடியே ஒரு சோக ரேகை பரவியது கீதாவின் முகத்தில். அதை முற்றிலும் புரிந்து கொண்ட தேவி,


"வா கீதா...அந்த காபி ஷாப்புல பேசலாமா?" என்று சொன்னாள்.


"2 cappuccino." ஆர்டர் செய்தாள் தேவி.



"என்னால முடியல தேவி. ஏன் எனக்குள்ள இப்படி...." கண்கள் குளமாகி கன்னங்களில் அருவியாய் ஊற்றியது. தேவி எதுவும் பேசவில்லை. கீதாவை சற்று நேரம் அழவிட்டாள். உலகத்திலுள்ள பல பிரச்சனைகளின் முதல் எழுத்தும் கண்ணீர் தான், முற்றுப்புள்ளியும் கண்ணீர் தான். மேசையில் இருந்த tissue paperரை எடுத்து கொடுத்தாள் தேவி.

அழுகையின் நடுவே, "thanks" தேவி கொடுத்ததை வாங்கி கொண்டாள்.

"நான் ஏன் இப்படி இருக்கேன்?" கீதா தேம்பி அழுதாள்.

"எப்படி?" தேவி கேட்டாள். இந்த கேள்வி கீதாவிற்கு ஆச்சிரியமாக இருந்தது.

boy-cut hairstyle, baggy shirt, wrist band,one side ear stud-கீதாவின் தோற்றம். தன்னை ஒரு முறை பார்த்தவாறு, "இந்த மாதிரி டிரஸ் பண்ணியிருக்கேன்.... என்னால normal girlஆ இருக்க முடியல." அழுகை நின்றது.

ஆர்டர் செய்த cappuccino வந்தது. அதை குடித்துகொண்டே தேவி, "so இப்படி டிரஸ் போட்டா lesbianனு யாரு சொன்னது?"

இந்த கேள்வி கீதாவை சிந்திக்க வைத்தது. மேலும் குழம்பி போனாள்.

"இங்க பாரு கீதா...dressing sense and fashion have got nothing to do with who you are. உன் மனசுக்குள்ள இருக்குற ஃவீலிங்ஸ் தான் முக்கியம். there are lesbians who wear normal girls' outfits.....sarees....punjabi suits.... நம்ம society இருக்குற பெரிய தப்பே அது தான். we try to label people according to what they wear. இந்த மாதிரி superficial things எல்லாம் தூக்கி போடு. உன் மனசுல என்ன தோணுது?" கீதாவின் சில குழப்பங்களுக்கு விடை அளித்ததுபோல் இருந்தாலும் அவள் மேலும் குழப்பம் அடைந்தாள்.

கீதா, " என்னால ஒரு பொண்ணு மாதிரி நடந்துக்க முடியல....i am not feminine at all."

வேறு ஏதேனும் ஆர்டர் வேண்டுமா என்று கேட்பதற்காக வந்தான் சர்வர்.

"இல்ல வேண்டாம்ப்பா..." அனுப்பிவைத்தாள் தேவி.

மீண்டும் கீதாவிடன் தொடர்ந்தாள் தேவி, "இப்ப உனக்கு எத்தன வயசு?"

கீதா, "காலேஜ் first year படிக்குறேன்."

தேவி, "சில பேருக்கு 13, 14 வயசுலே தெரிஞ்சிடும். சில பேருக்கு உன் வயசுல தான் புரியும். ஆனா இன்னும் சில பேருக்கு..... கல்யாணம் ஆனபிறகு தான் புரியும்.... சிலருக்கு 55, 60 வயசு வரைக்கும்கூட தெரியாமலேயே வாழ்ந்துகிட்டு இருப்பாங்க....the most important thing is to take time to self-reflect on yourself. நம்ம இப்படி தான்னு முடிவு எடுத்துட கூடாது உடனே."

கீதா, "நீங்க சொல்றது எனக்கு புரியல்ல...."

தேவி, " Are your feelings for women stronger than your feelings for men? .....Do you get more excited about the idea of kissing a man or kissing a woman? Who do you see yourself settling down with in the future? Are you more physically attracted to men's or women's bodies?
Who do you fantasize about more, men or women?....." என்று வரிசையாக கேள்வி மழை பொழி்ந்தாள்.

இப்படிப்பட்ட கேள்விகளை எதிர்பாராத கீதா முழித்தாள்.

"இந்த கேள்விகளுக்கு பதில் இருக்கனும்னு அவசியமில்ல. எல்லாத்துக்கும் ஆம் என்ற பதில் வரனும்னு அவசியம் இல்ல. மனசு சம்மந்தப்பட்ட விஷயம். ஆனா...முடிவு உன் கையில தான். மத்தவங்களுக்காக உன்னைய மாத்திக்க வேண்டியது இல்ல. மாத்திக்காம இருக்கவும் தேவையில்ல." தேவியின் கேள்வியும் பதிலும் கீதாவின் மனதை திறப்பதுபோல் இருந்தது.

கீதா, "ஏன் இந்த complications.....?"

தேவி, "நம்ம இருக்குற உலகம் அப்படி. lesbians/gays ஏத்துக்குற மனபக்குவம் இல்ல. கடவுள் எப்படி ஆண் பெண் படைச்சாரோ அப்படி தான் என்னையும் படைச்சார். if people think we are going against nature.... that's wrong. in fact we are embracing nature. we accept the changes within ourselves...... which is natural!"

தேவியுடன் அமைந்த உரையாடல் ஒருவித புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது கீதாவிற்கு. தாழ்வுமனபான்மை நீங்கியது போல் உணர்ந்தாள். "நீங்க எப்படி உணர்ந்தீ்ங்க? சின்ன வயசுலே...you knew you were like this?" கீதாவிற்கு தேவியின் வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமா இருந்தது.

சிரித்தவாறு, "i learnt it the hard way. இந்த மாதிரி எடுத்து சொல்ல ஆளு இல்ல. எந்த மன்றமும் கிடையாது...."

கீதா, "அப்பரம் எப்படி?"

தேவி, "கஷ்டப்பட்டு..... கொஞ்ச அடிப்பட்டு.... நிறைய அழுகை...அவமானம்... வெறுப்பு.... தற்கொலை முயற்சிகூட பண்ணியிருக்கேன்..... " சிரித்தாள்.

கண்கள் ஆச்சிரியத்தில் விரிந்தன கீதாவிற்கு. வாயை விரல்களால் பொத்தியபடி, "ஐயோ! அப்பரம் என்ன ஆச்சு?"

அச்சமயம் தேவியின் கைபேசி அலறியது மறுமுனையில் ரினிஷா. தேவி நடந்தவற்றை கூறினாள் ரினிஷாவிடம்.

ரினிஷா, "oh god, is she ok now? you wanna invite her for dinner at our place tonight. நேரம் ஆச்சு டா."

தேவி, "ok sure. don't worry. we'll be there soon."

பேசிமுடித்தபிறகு தேவி கீதாவை அவள் வீட்டிற்கு அழைத்தாள். தேவியை பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் கீதாவை, "no problem... let's go." என்று சொல்ல வைத்தது. கீதாவின் மனதில் ஓடி கொண்டிருந்த கேள்வியை கேட்டுவிட வேண்டும் என்று துடிதுடித்தாள்.

பைக்கில் ஏறுவதற்கு முன் கீதா, "தேவி....ரினிஷா வந்து....உங்க..." இழுத்தாள்.

தேவி, "we are in a relationship. staying together." தனது helmetடை போட்டுகொண்டாள்.

(தொடரும்)

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Monday, August 10, 2009

எனக்கே என்னை தெரியாமல்-1

தேவி தன் வேலையை முடித்துவிட்டு 'அக்னி' மன்றத்திற்கு சென்றாள். வேலை இடத்திலிருந்து 20 நிமிடங்கள் தூரம் தான். பைக் கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தாள். முடி கலைந்திருந்தது. சீப்பை எடுத்து சரியாய் சீவி கொண்டாள். பைக்கை ஸ்டார்ட் செய்து 80km/hr வேகத்தில் ஓட்டினாள். மன்றத்தை அடைந்ததும் அலுவலக அறைக்குள் நுழைந்தாள். அலுவலக ஃபோன் மணி ஒலித்தது. தேவி எடுத்தாள்.

"ஹேலோ இது அக்குனியா??....." மறுமுனையில் இருந்தவன் பீர் அடித்துவிட்டு உளறுகிறான் என்பதை அறிந்து கொண்டாள் தேவி.

பொறுமையாக தேவி, "ஆமா...சொல்லுங்க"

"நாங்க இங்க 10 பசங்க இருக்குறோம்.... ஜாலியா இருக்க பொண்ணுங்க வேணும்... அனுப்ப முடியுமா? என்ன ரேட்டு?" என்று உளறிகொண்டே சிரிக்க, அவன் பின்னாடி இருந்தவர்களும் சேர்ந்து சிரிக்கும் சத்தம் கேட்டது தேவிக்கு. உடனே ஃபோனை வைத்தாள். மறுபடியும் ஃபோன் ஒலித்தது.

"hey you f***ing bitc***..... என்னடி உனக்கு இவ்வளவு கொழுப்பு....வா டி பேசாம?" என்றான் அதே குடிக்காரன்.

பொறுமையை இழந்த நேரத்தில் தேவி ஃபோனில் கத்தலாம் என்று வாயை திறக்கும்போது அங்கு வந்தாள் விம்ஸ். புருவங்கள் சுருங்கி, கோபத்தில் கன்னம் சிவக்க, காட்சியளித்த தேவியிடம் விம்ஸ், "என்ன ஆச்சு?"

ஃபோன் ரிசீவரை கையில் பொத்தியபடி நடந்தவற்றை விம்ஸிடம் கூறினாள். விம்ஸ் உடனே ஃபோனை வாங்கி கொண்டாள், போதையில் உளறியவனின் அட்ரஸை வாங்கிகொண்டாள் நாசுக்காய். அடுத்த நொடி காவலர்களுக்கு ஃபோன் செய்து புகார் செய்தாள்.

"இந்த பொறுக்கி பசங்கள இப்படி தான் டீல் பண்ணனும் தேவி! take it easy man! cool..." என்று தேவியின் தோளில் தட்டினாள்.

"do you want coffee?" காபி dispenser பக்கத்தில் சென்ற விம்ஸ். வேண்டாம் என்பதுபோல் தலை அசைத்தாள் தேவி. சிறிது நேரத்தில் மன்றத்திற்கு 10 பேருக்கு மேல் வந்தனர். அலுவலக conference அறையில் மீட்டிங் ஆரம்பித்தது 645 மணி அளவில். மன்ற தலைவர் ஒரு கோப்பை மேசையில் வைத்தார்.

கோப்பில் அச்சடிக்கப்பட்ட வார்த்தைகள்- Agni Welfare Organisation for Lesbians. அங்கு அறையில் இருந்த அனைவரும் லெஸ்பியன்கள் தேவி உட்பட.

"அக்னி" பாதிக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட லெஸ்பியனுகளுக்காக உருவாக்கப்பட்ட மன்றம். இதில் பல உறுப்பினர்கள் உள்ளனர். இன்று வந்திருந்த 10 பேர் மன்றத்தின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள். பல கஷ்டங்களுக்கு நடவே சிரமப்பட்ட இந்த மன்றத்தை நடத்தி வருகிறார்கள். முழு நேரமாக வேறு வேலைகள் செய்தாலும் பகுதி நேரமாக மன்றத்திற்காக வேலை செய்கிறார்கள்.

மீட்டிங்கில் பலவற்றை பேசி ஆராய்ந்தனர். இந்த மாதம் மன்றத்திற்கு உதவி கேட்டு வந்தவர்களின் எண்ணிக்கை, மன்றத்தை பற்றி எவ்வாறு பொது மக்களிடம் தெரிவிக்கலாம் ஆகியவற்றை பற்றி பேச்சு நடக்கையில் விமஸ் அந்த குடிக்காரன் பிரச்சனையை சொன்னாள். மன்றத்தலைவர்,

"நம்ம ஒரு நல்லது பண்றதுக்காக, ரயில்வேஸ், பஸ், சூப்பர்மார்க்கேட்ல brochures வைக்குறோம்...ஆனா இந்த மாதிரி ஆளுங்க அதுல இருக்குற நம்பர பாத்து...ச்சே..." தலையில் கைவைத்தார்.

“இதுக்கு ஒரு முடிவு கட்ட முடியாதா?” என்றார் ஒருவர்.

“இந்த உலகத்துல கடைசி மனுஷன் இருக்குற வரை அது கஷ்டம்.” புன்னகையித்தார் இன்னொருவர்.

கையில் இருந்த மாத ரீப்போர்ட்டை படித்தார் தலைவர், “இந்த மாதம் உதவிக்கு வந்தவங்க 87 பேர். இவங்கள 42 உறுப்பினரா சேந்துட்டாங்க. இவங்கள 37% வேலை பாக்குறாங்க. 41% படிச்சுகிட்டு இருக்காங்க. 22% பேர் 55 வயதை தாண்டியவங்க."

மீட்டிங் தொடர்ந்தது. மணி 8. விடைபெற்று கொண்டு அனைவரும் வீட்டிற்கு கிளம்பினர்.

போகும் வழியில் விம்ஸ், "தேவி, நாங்கலாம் டினர் சாப்பிட போறோம். join us man!"

தேவி, "இல்ல..... ரினிஷா எனக்காக வேட் பண்ணிக்கிட்டு இருப்பா...i got to go." புன்னகையித்தாள்.

விமஸ், "no problem then. you take care dude. see you soon!"



தனது பைக்கை ஸ்ட்டார்ட் பண்ண போகும்போது ரினிஷாவிடமிருந்து ஒரு ஸ் எம் ஸ், 'dear, get some cheese and a loaf of bread.' குறுந்தகவலை படித்துமுடித்த தேவி தனது பையில் கைபேசியை போட்டாள். சூப்பர்மார்க்கெட்டுக்கு நடையை கட்டினாள். பொருட்களுக்கு காசு கட்டுவதற்காக கியூவில் நின்றபோது ஒன்றை கவனித்தாள் தேவி-'அக்னி' மன்ற தகவல்களை கொண்ட information paperகள் கை துடைக்கவும் பொட்டலம் மடிக்கவும் பயன்படுத்தப்படுவதை. அவளுக்கு கோபம் வந்தது. இருந்தாலும், ஒன்றும் சொல்லவும் முடியவில்லை, ஏதேனும் செய்யவும் முடியவில்லை.



கொஞ்ச நேரம் அதையே கவனித்து கொண்டிருந்தாள். சிறு பிள்ளைகள் அந்த தாட்களை எடுத்து பேப்பர் விமானம் செய்வதை பார்த்தாள். அச்சமயம் ஒரு பெண்மணி, சுமார் 20 வயது இருக்கும் யாரும் கவனிக்காத நேரம் பார்த்து ஒரு பேப்பரை தன் பையில் திணித்தாள். அந்த பெண்மணியின் கண்கள் திருதிருவென்று முழித்தன. தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதிசெய்ய சுற்றும்முற்றும் பார்த்தாள்.

அந்த பெண்மணி ஒரு மூலைக்கு சென்று தகவல் பேப்பரிலிருந்த ஃபோன் நம்பரை தனது கைபேசியில் குறித்துகொண்டாள். தேவி அந்த பெண்மணியின் கண்களை பார்த்தாள். கண்கள் கலங்கியிருந்தன. தேவி அவளை நோக்கி நடந்தாள். திரும்பி நின்றுகொண்டிருந்தவளின் தோளில் கைவைத்தாள் தேவி.....

(பகுதி 2)

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Tuesday, August 4, 2009

லவ் ஆஜ் கல்- தமிழ் படங்களுக்கு இணையாக ஒரு படம்!

இப்ப வர தமிழ் படங்கள் சில பாக்க முடியலன்னா, ஹிந்தி படங்களும் அவ்வாறு வந்தால் நாங்கலாம் என்ன செய்றது? அட போங்கப்பா...லவ் ஆஜ் கல் பாடல்கள் செம்ம பாட்டா இருக்கே. படமும் சூப்பரா இருக்கும்னு நம்பி தோழி ஒருத்தியின் பேச்சை நம்பி போனேன். ம்ஹும்.... நம்பி கெட்டவர்களின் பட்டியலில் என் பெயரையும் சேர்த்து கொள்ளுங்க!

சிவா மனசுல சக்தி படத்த பார்த்து நொந்து போன நிலைமை தான் லவ் ஆஜ் கல் படம் பார்த்தபிறகு வந்தது. ஆரம்பிக்கும்போதே, என்னடா இது ஒரு background இசையும் காணும். ஏதோ போதுன்னு ஒரு நினைப்பு வந்துச்சு. அதுக்கு அப்பரம் லண்டனிலிருந்து இந்தியா, அப்பரம் அமெரிக்கா...இப்படி இடங்களை மாற்றி, கதையின் திசையும் திசை தெரியாமல் காண போகுது. பாடல்கள் நல்லா இருக்கு. ஆனா, நடன அசைவுகள் இன்னும் நல்லா இருந்து இருக்கலாம்! சைவ், நீங்க ஏன் ஏதோ vibrating mobile phoneயை முழுங்கிவிட்ட மாதிரி ஆடுறீங்க? சைவ் அலிகான் சிங் வேடத்தில் ரொம்ப நல்லா பொருந்துகிறார். இவரின் முதல் தயாரிப்பாம் இப்படம். படம் வர்த்தக ரீதியாக பிச்சிகிட்டு போகுதாம். வாழ்த்துகள். என்னைய மாதிரி ரசிகர்கள் அதிகம் இல்லாத வரைக்கும் எந்த படமும் வெற்றி படம் தான்!

தீபிகா- சும்மா சொல்ல கூடாது. ரொம்ம்ம்பவே அழகா சிரிக்குறாங்க!!

இந்த படம் என்னை பொருத்தவரை இன்னொரு ஜப் வீ மெட்!

(அப்பரம் லக் படமும் பார்த்தேன். ஒன்னும் சொல்ற மாதிரி இல்ல.... நான் இனிமே கன்னட படங்கள் பார்க்கலாமான்னு இருக்குறேன். ஸ்ருதிஹாசனே, ஏன்? ஏன்? இதுக்கு மேல உங்ககிட்ட நான் எதுவும் சொல்ல விரும்பல!)

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Sunday, August 2, 2009

லவ் ஆஜ் கல்

சைவ் அலிகான் தயாரித்து நடித்து வெளிவந்திருக்கும் படம் தான் லவ் ஆஜ் கல்.(love aaj kal). நேரடியாக மொழிபெயர்த்தால்- காதல் அப்போதும் இப்போதும்! jab we met படத்தை எடுத்தவர் தான் இப்படத்தையும் இயக்கி இருக்கிறார். ஜப் வீ மேட் படம் சகிக்கல! ஆனா, இந்த படம் அப்படி இருக்காதுன்னு ஒரு ஆசை!(படத்தை பார்த்த தோழி சொன்னாள் நல்லா இருக்குன்னும்)

இப்படத்தில் பாடல்களை கேட்டேன். simply awesome!!

twist(remix)- ஆட்டம் போட வைக்கும் பாடல். இன்று காலையிலிருந்து இப்பாடலை தான் கேட்டு கொண்டே இருக்கிறேன்.
aahun(remix)- ப்ரீத்தம் தான் இசையமைப்பாளர். சும்மா பின்னி பெடல் எடுத்து இருக்கிறார். ரொம்ம்ம்ம்ம்ப பிடிச்ச பாடல்.
thoda thoda pyar- பாங்ரா வகையை சேர்ந்த பாடல். கண்டிப்பா, பாடலை கேட்டீங்கன்னா, மெய்மறந்து ஆடுவீங்க....

இப்படி பாடல் அனைத்தும் சூப்பர் ஹிட்!!! படத்தை மிக விரைவில் பார்க்க போகிறேன்:) விமர்சனத்தை பிறகு எழுதுறேன்.

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Sunday, July 26, 2009

ஜஸ்ட் சும்மா (26/7/09)

ப்ளாக் பக்கம் வந்து கிட்டதட்ட 3 வாரமா ஆச்சு! சில பேர் இமெயில் மூலமா தொடர்பு கொண்டு ஏன் ப்ளாக் பண்ணல்லன்னு கேட்டாங்க(இது தான் வாசகர் கடிதமோ) அவர்களுக்கு ரொம்ப நன்றி அக்கறை காட்டியதற்கு. வேலை பளு அதிகம்! ஆனா, இனி கொஞ்சம் குறைவாக தான் இருக்கு. அதனால், தொடரும் என் இம்சைகள்!
-----------------------------------------------------------------------------------

ப்ளாக் பக்கம் வராமல் இருந்தாலும், மற்ற வலைப்பூ பதிவுகளை படித்து வந்தேன். இப்போ புதுசா பிடிச்ச 10, பிடிக்காத 10 அப்படின்னு நிறைய பாக்குறேன். ஹாஹா...h1n1 காய்ச்சல் மாதிரி ரொம்ப வேகமாவே பரவுது!!
----------------------------------------------------------------------------------------
அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை பார்க்க நேரம் கிடைத்துவிட்டது. உடனே போய் பார்க்கலாம்னு நினைக்கிறேன்.
-----------------------------------------------------------------------------------------

ரொம்ப நாளாச்சா பதிவு எழுதி...... நிறைய எழுத வரமாட்டேங்குது!:)

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Tuesday, July 7, 2009

ஜஸ்ட் சும்மா(7/7/09)

நேத்திக்கு நியூ யோர்க் ஹிந்தி படத்தை பார்த்தேன்.simply superb. படம் பட்டைய கிளப்பிட்டு! ரொம்ம்ம்ம்ம்ப பிடிச்சு இருந்துச்சு. john abrahamக்கு அழகு இருக்குன்னு தெரியும் ஆனா...இவ்வளவு சூப்பரா நடிப்பாருன்னு கொஞ்சம்கூட எதிர்பாக்கல! அப்பரம் நித்தின் முக்கேஷ்....oh my god.... he is brilliant!

நான் 6 பேருடன் படம் பார்க்க போனேன்.அதில் 4 பேருக்கு படம் பிடிச்சு இருந்துச்சு. எங்களுடன் வந்த என் அக்காவுக்கு தான் படம் சுத்தமா பிடிக்கல! இன்னொரு தோழிக்கும் பிடிக்கல! என்ன பொண்ணுங்களோ இவங்க..... மதியம் படம் பார்த்துவிட்டு வீடு திரும்பினோம். இரவில் ஒருத்தி ஸ் எம் ஸ் அனுப்பினாள். "மச்சி, john abraham என் கண்ணுக்குள்ளயே இருக்குறான்."

நான் பதில் அனுப்பினேன், "உன் கண்ணுக்குள்ளயுமா இருக்குறான்?"
_________________________________________________________________

வேலை பளு அதிகமா போச்சு! மன உளைச்சலால் கிட்டதட்ட 1.5 கிலோ உடல் எடை குறைந்துவிட்டது 5 நாட்களில்! என்னமோ போங்க.....
________________________________________________________________

வாமனன் படத்தில் வரும் "ஒரு தேவதை" பாடல் அருமை!!! கேட்டு கொண்டே இருக்கலாம்னு தோணுது.
_______________________________________________________________

இன்று பேருந்தில் வரும் போது மனதில் தோன்றியது, "ஏய், நம்ம கவிதை எழுதி ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளாச்சுல?"

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Saturday, July 4, 2009

தண்ணிக்குள்ள மீன் அழுதா, கரைக்கொரு தகவலும் வருவதில்லை!

10.00pm

இன்னும் சந்தோஷ் வீடு திரும்பவில்லை. வீட்டில் உள்ளவர்கள் அவனது கைபேசிக்கு தொடர்பு கொண்டு பார்த்தார்கள். ஆனால், அவன் எடுக்கவில்லை. வீட்டில் இருக்கும் அவனது அப்பா, சந்தோஷ் நண்பர்களின் தொடர்பு எண்ணங்களை தேடி கொண்டிருந்தார். அம்மா அழுது கொண்டிருந்தார்.

"அவன் கொஞ்ச நாளாவே சரியிலேங்க...." என்றார் அம்மா.

"அண்ணனுக்கு வேலை பிடிக்கலமா. என்கிட்ட ரெண்டு நாளுக்கு முன்னாடி சொல்லிகிட்டு இருந்துச்சு..... சொல்லும்போது ரொம்ப பாவமா இருந்துச்சு. he is really depressed. " தங்கை சோகத்துடன்.

"அவன் என்ன சின்ன பிள்ளையா? எதாச்சுன்னா வாய தொறந்து பேச வேண்டியது தானே...சும்மா....உம்முன்னா மூஞ்சி மாதிரி வச்சு இருந்தா....யாருக்கும் என்ன புரியும்?" கடிந்து கொட்டினார் அப்பா.

"ஒவ்வொரு தடவையும் அண்ணா வந்து தனக்கு வேலை பிடிக்கலைன்னு சொல்லும்போதெல்லாம் அப்படி தான் இருக்கும்...அப்படி தான் இருக்கும்னு சொன்னீங்க தவிர அண்ணனோட feelingsஎ புரிஞ்சுக்க முயற்சி பண்ணவே இல்லையே நீங்க?" தங்கை அப்பாவின் குற்ற உணர்ச்சியின் வலியை ஏற்றினாள்.

சற்று முறைத்தார் அப்பா.

அன்று மாலை 7pm.

சந்தோஷ் தன் நண்பன் ரவியுடன் தொலைபேசியில் பேசி கொண்டிருந்தான். ஆபிஸில் இருந்த சந்தோஷ்,

"ம்ம்..சொல்லுடா?"

மறுமுனையில் ரவி, "என்னடா புது வேலையில join பண்ணியிருக்க...ஒரு உற்சாகமும் இல்ல குரல...."

"பிடிக்கலடா"

"என்னடா பிடிக்கல?" ரவி அக்கறையுடன்.

"வேலை பிடிக்கல...."

"ஏண்டா?"

"ரவி, உனக்கு தான் தெரியும்ல... எனக்கு ஆரம்பத்துலேந்து இந்த படிப்பும் வேலையும் பிடிக்கல..... chartered accountantஆ தான் வரும்னு எங்கப்பா ஒத்து கால நின்னாங்க.... எனக்கு சுத்தமா பிடிக்கல?"

ரவி,"அப்பரம் உன் aim தான் என்னடா?"

"டான்ஸ்! i want to learn different forms of dance. i want to start my own dance company." ஏக்கத்துடன் சந்தோஷ்.

"இத பத்தி வீட்டுல பேசினீயா?" என்று கேட்டான் ரவி.

"இல்ல! பேச பிடிக்கல. என் வீட்டுல யாருக்கிட்டயும் நான் பேசுறது இல்ல. எனக்கு stressஆ இருக்குன்னு சொன்னா....என் அம்மாவும் அப்பாவும்... நீ என்ன சின்னபுள்ளையா... டான்ஸ கத்துகிட்டு நீ என்ன பண்ண போற... என் மகன் ஒரு கூத்தாடின்னு சொல்ல சொல்றீயான்னு கேட்குறாங்க....அவங்க சொல்ற ஒவ்வொரு வார்த்தையும்....ச்சே...." மனம் நொந்து பேசினான் சந்தோஷ்.

"டேய் விடுடா..... கொஞ்ச நாள்ல சரியா போயிடும்!"

"நான் வாழ்ந்த இந்த 25 வருஷமா அப்படி தான் நினைச்சுகிட்டு வாழ்ந்துகிட்டு இருக்கேன்.... வருஷம் போக போக.... சோகம் தான் மிஞ்சுது.... முடியலடா...." தழுதழுத்த சந்தோஷ்.

"டேய்.... என்னடா நீ.... நல்ல நக்கல் அடிச்சு...எல்லாரையும் கலாய்ச்சு...பேசிகிட்டு இருக்குற நீ...இப்படி மனசு உடைஞ்சு பேசாத டா....உன்னைய இப்படி பாக்குறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. cheer up!" ஆறுதல் பேசினான்.

தொடர்ந்தான் ரவி, "நான் வேணும்னா அங்கிள்கிட்ட பேசிபாக்கவா?"

சந்தோஷ், "வேண்டாம்.... நீ பேசினா...எங்கப்பா...ஓ கூட்டாளியோட கூட்டு சேந்துகிட்டு பேச வைக்குறீயா? என்ன ரவுடியா நீ அப்படி இப்படின்னு தேவையில்லாம பேசுவாரு....."

"ஐயோ... அப்பரம் எப்படி டா? டேய்... உனக்கு கல்யாணம் ஆனா பிறகு... உன் ambitionஎ தொடரலாமே?"

"எப்படிடா முடியும்? வரபோற பொண்ணுகிட்ட நான் கல்யாணத்துக்கு அப்பரம் வேலைய விட்டுடுவேன் டான்ஸரா போவேன்னு எப்படி சொல்ல முடியும்? நல்லா இருக்காதுடா. என் வாழ்க்கையே நான் முழுசா ஒரு நாள்கூட வாழ்ந்தது கிடையாது. இதுல இன்னொருத்தியா.....அதெல்லாம் நடக்காத காரியம்." என்றான் சந்தோஷ்.

ரவி, "டேய் அப்படி சொல்லாதடா..... வாழ்க்கையில முத பாதி கஷ்டம் படுறவங்க, இரண்டாவது பாதில நிம்மதியா இருப்பாங்க. உன்னைய புரிஞ்சிக்கிற மாதிரி ஒரு பொண்ணு வருவா டா?"

சந்தோஷ் வருத்தமாய், "சினிமாவுல மட்டும் தான் அதலாம் நடக்கும்."

ரவி, "இதுக்கு வேற வழியே கிடையாதா?"

சந்தோஷ், "மரணம் தான் ஒரே வழி."

ஆச்சிரியம் அடைந்தான் ரவி. "டேய், just shut up man! சும்மா இப்படிலாம் பேசாத... நீ இப்ப வீட்டுக்குபோய் நல்லா படுத்து தூங்கு. கண்டத பத்தி நினைக்காத. சரியா?"

ம்ம்... என்றபடி ஃபோனை வைத்தான் சந்தோஷ். சந்தோஷின் குரலும் அவன் பேசிய கடைசி வார்த்தையும் ரவிக்கு நெருடலாய் இருந்தது. கொஞ்ச நேரம் கழித்து ஒரு ஸ் எம் ஸ் அனுப்பினான் ரவி, "hey dude, are you okay? do you want to meet up somewhere?"

உடனே பதில் அளித்தான் சந்தோஷ், "i am ok da. am really tired and stressed out. office work is really piling up. i need rest. i am back home. will call you soon. thanks da."

இப்படி பதில் அளித்து கொண்டிருந்த சந்தோஷ் உட்கார்ந்திருந்த இடம்- பீச்!

மணி 9.30 pm.

கடல் அலைகள் அவனை வா வா என்று அழைப்பதுபோல் உணர்ந்தான். கைபேசி அலறியது. displayயில் வீட்டு நம்பர் தெரிந்தது. அவன் எடுக்கவில்லை.

அவன் வாழ்க்கையில் நடந்த பலசம்பவங்களை நினைத்துபார்த்தான். நான்காம் வகுப்பில் கணக்கு வராததால் பக்கத்துவீட்டு பையனோட ஓப்பிட்டு பார்த்து அவர் அப்பா சொன்ன வார்த்தை, "அவனோட மூத்தரத்த குடி!" ஞாபகம் வந்தது.

ஏழாம் வகுப்பு படிக்கும்போது ஒரு நாள் வெளியே சென்றபோது தெரியாமல் காலணி கிழிந்துவிட்டது. அதற்கு அவன் அப்பா, "நீ வாழ்க்கைல உருபுட மாட்டே.. ஒரு செப்பல கூட சரியா போட தெரியுல." என்று அந்த கிழிந்த செருப்பாலே தெருவில் அடித்தார்.

காலேஜ் படிக்கும்போது cultural show practice முடிந்து தாமதாய் வீட்டிற்கு வந்தபோது "இவனுக்கு சாப்பாடு போடாத. அப்ப தான் சூ** கொழுப்பு குறையும்."என்றார் அவன் அப்பா.

சந்தோஷிற்கு இஷ்டமான காரியத்தில் அவனை ஈடுபட ஊக்கம் அளித்ததே கிடையாது. விரக்தி, நிம்மதியில்லாத உறக்கம், வீட்டில் பேசுவதை குறைத்தது, இப்படி அவன் வாழ்க்கை ஒரு திசையில் திசைமாறி சென்றதை எண்ணி பீச் மணலில்

"i hate my life.i want to die." என்று கிறுக்கி கொண்டிருந்தான்.

இரவு மணி 10.00

வாழ்க்கையை முடித்துகொள்ள முடிவு எடுத்தான். கடலை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவனது கால்கள் நனைந்தன. நடந்தான். முட்டி வரை தண்ணீர் வந்தது. நடந்தான். மரணத்தின் வாசல் கதவை தட்டினான்.

இரவு மணி 1045.

சந்தோஷ் காணவில்லை என்று போலிஸில் ரீப்போர்ட் கொடுக்க சென்றனர் அவனது பெற்றோர்களும் தங்கையும். போலிஸுக்கு ஒரு ஃபோன் வந்தது.

போலீஸ், "இதோ வரேன்!" என்றவர் சந்தோஷ் குடும்பத்தினரிடம், "சார், ஒரு dead body கிடைச்சுருக்கு. ஒரு வேளை...."

என்று முடிப்பதற்குள் சந்தோஷின் அம்மா கதறி அழ ஆரம்பித்தாள். தங்கைக்கு துக்கம் தாங்கமுடியவில்லை.

"அவன் ஒரு சனியன் பிடிச்சவன் சார், எங்களுக்கு நிம்மதியே கொடுக்க மாட்டான்." என்று தலையில் அடித்து கொண்டார் அவன் அப்பா.

இரவு மணி 11.00

சந்தோஷுக்கு வாழ பிடிக்கவில்லை என்றால் அவனுக்கு மரணம்கூட பிடிக்கவில்லை. முழுதாய் நனைந்தவன் ஈரத்துடன் மணலில் உட்கார்ந்து கிறுக்கினான், "i hate to live and i hate to die!"

*முற்றும்*

(பிள்ளைகளுக்கு நல்லது பண்றேன் நல்லது பண்றேன் என்று அவர்களது வாழ்க்கையை கெடுத்த, கெடுத்து கொண்டிருக்கும், கெடுக்க போகும் பெற்றோர்களே, உஷார்ர்ர்ர்ர்!)

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Sunday, June 28, 2009

ஜஸ்ட் சும்மா(28/6/09)

ரெண்டு மாசம் லீவு முடிஞ்சு போச்சு. நாளைக்கு காலேஜ் மறுபடியும் ஆரம்பிக்க போகுது(என் தலைவலி மருந்து எங்கே?) எனக்கு அழுகாச்சியா வருது! ஐயோ காலேஜ் lectures, assignments.... இத நினைச்சாலே மனம் முதல் வயிறு வரை கலக்குகிறது!:(
-----------------------------------------------------------------------------------------
நான் keyboard 1st grade தேர்வு எழுதினேன். 1st classல் பாஸ் பண்ணிட்டேன். கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. ரொம்ப சந்தோஷமா போச்சு. 74/100 மார்க். ஒரே ஒரு மார்க் வாங்கி இருந்தால், distinction வாங்கியிருக்கலாம்! என் கீபோர்ட் குருவுக்கு நன்றி:)
-----------------------------------------------------------------------------------------

தடை போட யாருமில்ல தொடர்கதை எனக்கு நல்ல அனுபவத்தை கற்று கொடுத்தது. அதாவது காமெடியாக கதையை நகர்த்தி செல்வது ரொம்ம்ம்ம்ம்ம்ப கஷ்டம்! அவசரத்தில் முடித்ததால் எனக்கே முடிவு பிடிக்கவில்லை. இன்னும் நிறைய எழுதியிருக்கலாமோன்னு இருந்துச்சு! ஆனால் சில மாதங்கள் கழித்து கண்டிப்பா சீசன் 3 வரும்! ஹிஹி...:)
---------------------------------------------------------------------------------------

வரும் ஜூலை மாதம், நிறைய படங்கள் வெளிவருபோகின்றன. அவை, அச்சமுண்டு அச்சமுண்டு மற்றும் ஆயிரத்தில் ஒருவன்! ரெண்டுமே பார்க்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்புடன் இருக்கிறேன்.
------------------------------------------------------------------------------------------

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Saturday, June 27, 2009

நாடோடிகள்- தார் strong ஆனா ரோடு மேடுபள்ளமா இருக்கு மாமே!

நாடோடிகள்- ரொம்ப எதிர்பார்த்த படம். ஏதோ ஒரு வகையில் என் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாமல் போனது இப்படம்.

நல்ல கதை, நெத்தியடியான கருத்து. நண்பரின் காதலை ஜெயிக்க வைக்க போராடும் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை தந்துள்ள படம். ஆனால், திரைக்கதை ரொம்ப மெதுவாய் சென்று, ஒரு இடத்தில் வேறு எங்கோ சென்று, மறுபடியும் அதே trackல் வந்து, சுத்தி....பிறகு கதையை முடித்து இருக்கிறார்கள். கிட்டதட்ட 3 மணி நேரம். எடிட்டர் சார், கொஞ்சம் வெட்டி இருக்க கூடாதா?

சுந்தர் சி பாபுவின் இசை, ஒரு காத்தாழ கண்ணால அல்லது வாளைமீனுக்கும் போன்ற பாடல்களை தராமல் போனது ஏனோ? பாடல்கள் எதுவுமே மனதில் ஒட்டவில்லை.

நடிப்பு பொருத்தவரை, சசிகுமார் சுப்பரமணிபுரம் படத்தில் வந்தது போலவே தெரிகிறார். உடம்பை இன்னும் கொஞ்சம் ரிலேக்ஸா விடுங்க....நல்லா emote பண்ணி நடிங்க....உங்களுக்கு எத்தன பெண் ரசிகர்கள் தெரியுமா சிங்கையில்? இன்னும் நல்லா செஞ்சா, உருகிவிட தயாராக இருக்காங்க.:) நடனம் சுத்தமாக வரவில்லை சசிக்கு. இருந்தாலும் நல்ல முயற்சி. body language, voice modulation ஆகியவற்றில் கவனம் செலுத்தலாம்!

கல்லூரி படத்தில் நடித்த பரணி இப்படத்தில் இன்னும் அதிகமாய் நடிக்க நல்ல வாய்ப்பு. முடிந்தவரை பயன்படுத்தியிருக்கிறார். சத்தமாக பேசும்போது வார்த்தைகள் சரியாக விளங்கவில்லை. :( கல்லூரியில் நடித்த மாதிரியே இருந்துச்சு.

கஞ்சா கருப்பு காமெடிக்கு உதவி செஞ்சு இருக்கிறார். அவ்வளவு தான்! சொல்லி கொள்ளும் அளவு அப்படி ஒன்னுமில்ல.

என்னை பொருத்தவரை சென்னை 28 விஜய் தான் கதாபாத்திரத்திற்கு தகுந்தாற்போல் நடித்து உள்ளார். ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. நல்ல character artisteஆக வர வாழ்த்துகள்!

படத்தில் வந்த ஹீரோயின்கள்: சசிக்கு வந்த ஜோடிக்கு நல்ல நடிப்பு. அழுவும்போதும், சிரிக்கும்போது, காமெடி செய்யும்போது சிறப்பாய் செய்துள்ளார். சசிக்கு தங்கச்சியாக நடித்த பெண் நிஜமாகவே ஒரு காது கேட்க முடியாதவள்/ வாய் பேச முடியாத பொண்ணு. ஆனால், அவரை பேசி, நடிக்க வைத்துள்ளார் சமுத்தரக்கனி! இந்த இடத்துல உங்கள கண்டிப்பா பாராட்டியே ஆகனும்!

வசனங்கள்- நெத்தியடியான வசனங்கள்!

அரசியல்வாதியாக வரும் நபர் அடிக்கும் லூட்டி ரொம்ப ஜாலியா இருந்துச்சு.
ஒரு காட்சியில் கிணத்தில் குதித்து சாக போகிவிடுவான் சசியின் நண்பன் சரவணன். சசியும் மற்ற நண்பர்களும் சரவணனை மடியில் போட்டு "சரவணா சரவணா" என்று கதறுவார்கள்.

அப்போது அரசியல்வாதி தன் ஆட்களுடன் வந்து சரவணாவை தலைகீழ் நிற்க வைத்து முதுகில் அடித்து அவனை ஒரு குலுக்கு குலுக்கி காப்பாற்றிவிடுவார்கள். அதற்கு அப்பரம் அரசியல்வாதி சொல்வார், "இப்படி பண்ணனும். சும்மா சரவணா சரவணான்னு சொன்னா புழைச்சுடுவானா?"

செம்ம காமெடி பஞ்!

ஆங்காங்கே இயக்குனர் முன்பு எடுத்த அரசி சீரியலின் காட்சிகள் போல் சில தென்பட்டன! :)
கிளைமெக்ஸ் இன்னும் கொஞ்சம் உணர்வுபூர்வமாக இருந்திருக்கலாமோ!

எனிவே,
நாடோடிகள்- தார் ஸ்ட்ராங், ஆனா ரோடு மேடுபள்ளமா இருக்கு மாமே!

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Wednesday, June 24, 2009

தடை போட யாருமில்ல-6

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5

"நீங்களாம் பிரச்சனைய பாக்கெட்டுக்குள்ளே வச்சு இருப்பீங்களா? என்ன கொடுமை ஐயப்பா இது!" என்று வானத்தை பார்த்தாள் கலா.

சுதா பரபரப்பாக தேடி கொண்டிருந்தாள் தனது கைபேசியை. "gone! am dead!" என்றாள் சுதா.

"வீட்டுல சங்கு தான் எனக்கு." சுதா சலித்து கொண்டாள்.

"all the best!" என்றாள் விஜி சுதாவை நக்கல் அடிக்க.

"விடு விடு..... அந்த வெத்தல பெட்டி டப்பா மாதிரி இருக்குற ஃபோன் போனா போகுது புதுசா வாங்கிகலாம். " கிண்டல் அடித்தாள் கலா.

"அதுல என் sweetheart surya படமெல்லாம் இருக்குதுய்யா!" சுதா உருகினாள்.

"அடி பாவி.... உங்க அக்கா முதல் மாச சம்பளத்துல வாங்கி கொடுத்த ஃபோன் போச்சேன்னு கவலைப்படாம.....சூர்யா படம் போச்சேன்னு கவலைப்படுற பாத்தீயா? உன்னைய மாதிரி பொண்ணுங்க இருக்குறனால...." என்று கலா வாக்கியத்தை முடிக்க முற்பட்டபோது உடனே சசி,

"மோசமான தமிழ்படம் கூட நல்லா ஓடுது! அது தானே சொல்ல வந்தே. பாஸு பாஸுன்னு build-up கொடுப்பீயே....இந்த டயலாக்க மட்டும் மாத்தவே மாட்டீயா?"

"shut up man! உன்னைய மாதிரி பொண்ணுங்க இருக்குறனால தான் பன்றி காய்ச்சல் வருதுன்னு சொல்ல வந்தேன்...." என்றாள் கலா!

விஜி, "வெரி குட் சமாளிfications!" சிரித்தாள்.

ஒரு வழியாய் வீட்டிற்குச் சென்றனர் அனைவரும். சனிக்கிழமையும் வந்தது. சசிக்கு வெட்கம் கலந்த பயமும் வந்தது. சித்தார்த்தை பார்க்க தயாரானாள். மற்ற மூவரையும் அவள் வீட்டு பக்கத்தில் இருக்கும் பேருந்து நிலையத்தில் சந்தித்தாள். அவர்கள் சசியின் அலங்காரத்தை பார்த்து,

"மருமகளே மருமகளே வா வா...." என்று கிண்டல் அடித்து பாடினர்.

சசி அவர்கள் பாடுவதை பொருட்படுத்தாமல், " கேர்ள்ஸ்...எல்லாம் நல்லா இருக்கா...லிப்ஸ்டிக் ஓகேவா?" என்று கையிலும் கழுத்திலும் போட்டிருந்த அணிகலன்களை தொட்டு பார்த்து சரி செய்து கொண்டாள்.

"நான் பாத்து வளந்த குழந்தை இப்போ என்னையவே சரி பாக்க சொல்லுது?" என்று பாட்டி போல் பெருமூச்சு விட்டாள் கலா.

"என்ன கலா, சசி dating போறான்னு உனக்கு பொறாமையா? is fire burning in your stomach?" சுதா கேட்டாள்.

"ஐயோ இந்த விளையாட்டுக்கு நான் வரலப்பா...எந்த ஆஞ்ஜநயா பக்தையும் dating போக மாட்டாள். அதுவும் இல்லாமல் நான் ரொம்ப decent familyய சேந்து பொண்ணு...இப்படிலாம் பண்ண மாட்டேன்." சிரித்து கொண்டே கலா பதில் சொன்னாள்.

"அப்போ சசி கெட்ட பொண்ணா?" விஜி கேட்டாள்.

"ஐயோ சசி ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்ல பொண்ணு. நாட்டிற்கும் வீட்டிற்கும் இப்படிப்பட்ட பொண்ணு இருந்தா போதும்...கலாச்சாரம் ஓகோன்னு போயிடும்." என்றாள் கலா சிரித்தவாறு.

"ப்ளீஸ் மேன்....சசிய கிண்டல் பண்ணாதீங்க...அப்பரம் குழந்தை அழுதிட போகுது!" சுதா சசிக்கு ஆதரவாய் பேசினாள். பேருந்து வந்தது சசியும் புறப்பட்டு சென்றாள்.

"போறாளே பொண்ணு தாயி...." என்று பாரதிராஜா பட பாடலை பாடிய படி கலாவும் மற்றவர்களும் அவர்கள்தம் வீட்டிற்கு சென்றனர்.

மறுநாள் காலையில் அனைவரும் சுதாவின் வீட்டில் ஆஜரானார்கள். சுதாவின் அறையில் உட்கார்ந்து இருந்தார்கள், ஆனால் சசி மட்டும் இன்னும் வரவில்லை.

"என்ன மேன் இந்த சசி இவ்வளவு லேட் பண்ணுறா? நேத்திக்கு என்ன ஆனுச்சுன்னு கேட்க எவ்வளவு interestingஆ இருக்குறோம்..." கலா கூறினாள்.

"ஆமா ஆமா...பச்சை தண்ணிகூட பல்லுல படாம இருக்குறா கலா, பாவம்!" என்றாள் விஜி.

"ஹலோ எனக்கே வா!" என்றாள் கலா அப்போது சசி சுதாவின் அறைக்குள் நுழைந்தாள்.

"என்ன சசி....ரொம்ப tiredஆ இருக்கே?" என்று 'tired' என்ற வார்த்தையை மட்டும் அழுத்தி கூறினாள் கலா. விஜியும் சுதாவும் சிரித்தனர்.

"shut up you woman!" கத்தினாள் சசி.

"சரி, சொல்லு என்ன ஆச்சு நேத்திக்கு....எப்படி இருந்துச்சு dating!" கேட்டாள் சுதா ஆர்வத்தோடு.

"dating இல்ல. outing!" என்று சுதா சொன்னதை திருத்தினாள் சசி.

சுதா, "ஐயோ அதவிடு....எப்படி பேசினான் சித்தார்த்?"

விஜி, "any touching touching?"

கலா, "no no.... i think they did something something." கைகளை அகல விரித்து சத்தம் போட்டு சிரித்தாள்.

சசிக்கு கோபம் வர, "வாய மூடுங்க டி.... he is a gem. he is such a gentleman. உங்கள மாதிரிலாம் இல்ல. அவரு ரொம்ப decent!"

"ஐயோ எனக்கு நெஞ்சு வலிக்குதே!" என்று வேடிக்கையாய் நெஞ்சில் கை வைத்து சாய்ந்தாள் கலா.

சுதா, "ஓய்.... எங்களையே நீ கலாய்க்கிறீயா?"

கலா, "ஒரு ராத்திரில சசி இப்படி மாறிடுவான்னு கொஞ்சம் கூட நினைக்கல....போங்கய்யா...நான் Afghanistanக்கு migrate ஆகிட போறேன்...இந்த கொடுமையலாம் என்னால தாங்க முடியாது!"

விஜி, "சசி, என்ன பண்ணீங்க நேத்து? billiards விளையாட கத்து கொடுத்தாரா?"

கலா, "இல்ல இல்ல....அவரு இவ்வளவு பெரிய decent உத்தமரு. சசி ஒரு உத்தமி. ரெண்டு பேரும் உலக பொருளாதாரம், தீவிரவாதம், தண்ணீர் பிரச்சனை, ozone layer ஓட்டை விழாம எப்படி காப்பாத்தலாம் அப்படின்னு அறிவுபூர்வமாண விஷயங்கள மட்டும் தான் பேசி இருந்திருப்பாங்க.... அப்படி தானே சசி?"

ஒன்றும் பேசாமல் உட்கார்ந்து இருந்தாள் சசி.

விஜி, "என்ன சசி, ஒன்னுமே சொல்லாம இருக்குற. கலா உன்னைய இப்படி ஓட்டுறா?"

சசி, "இருக்கட்டும் இருக்கட்டும். அடி படுற கல்லு தான் சிற்பமாகும்."

உடனே கலா, "பாத்து டி கர்பமாகிட போது!"

கலாவின் timing comedyயை கேட்டு அனைவரும் சிரித்தனர். சசி பக்கத்தில் இருந்த தலையணையை கலாவின் முகத்தில் அமுக்கினாள் விளையாட்டாய்.

அச்சமயம் சுதாவின் வீட்டு ஃபோன் ஒலி எழுப்பியது. அறையிலிருந்த மேசையில் ஃபோன் இருந்தது. அதை speaker modeல் போட்டாள்.

"ஹாலோ, யாரு பேசுறது?" என்றாள் சுதா.

"ஹாலோ....இந்த moblie no...." என்றவர் காணாமல் போன சுதாவின் கைபேசி எண்களை சொன்னார்.

"ஆமா அது என்னோட ஃபோன் தான். காணாம போச்சு கொஞ்ச நாளைக்கு முன்னாடி....எங்க கிடைச்சது? எப்படி?" தன் கைபேசி மீண்டும் கிடைத்த சந்தோஷத்தில் சுதா. விளையாடி கொண்டிருந்த மற்றவர்கள் தொலைபேசி அருகே வந்தனர்.

"ஓ....இன்னிக்கு படம் பார்க்க போன போது, என் seat கீழே இருந்துச்சு.... i think you dropped it. ஃபோன்ல....home அப்படின்னு ஒரு contact நம்பர் இருந்துச்சு...சோ...அதான் ஃபோன் பண்ணி பாத்தேன். உங்க வீட்டு address சொன்னீங்கன்னா....நான் வந்து கொடுத்துடுறேன்...." என்றார் அவர்.

"ஓ...இல்ல பரவாயில்ல....நான் வந்து வாங்கிகிறேன்..." என்றாள் சுதா.

"இல்லங்க பரவாயில்ல.... நான் வீட்டுக்கு போற வழில வந்து கொடுத்துடுறேன்..." என்றார். முகவரியை கொடுத்தபிறகு அவர்,

"சாரி...உங்க பெயரு?"

"ஐ எம் சுதா. நீங்க?" என்றாள்.

"மை நேம் இஸ் ரவி!" என்றதும் சுதா, "ரவியா????"

கண்ணாடி கடையில் கலா சொன்னது ஞாபகம் வந்தது- ஹாஹா...முதல தடவ மாட்டிகிட்டபோது ஒரு சித்தார்த் நம்ம கதைக்குள்ள வந்தான்...இப்போ எந்த ஜெயம் ரவி வர போறானோ.

அந்த ஞாபகம் வர அனைவரும் சிரித்தனர்.

மறுமுனையில் இருந்த ரவி, "ஹாலோ ஹாலோ....என்ன ஒரே சத்தமா இருக்கு?"

"ஒன்னுமில்ல" என்று சுதா வெட்கப்பட்டாள்.

கலா, "அடே மச்சி, வெட்கப்படுறாளே! மறுபடியும் மறுபடியும் சாச்சுபுட்டான் மச்சான். " என்று சொல்லியபடியே மெத்தையில் விழுந்தாள்.

*முற்றும்*

(இத்துடன் இந்த sequel 2/season 2 முடிச்சுட்டு. ஐயப்பா சாமி...தொடர்கதை எழுதுறது ரொம்ப கஷ்டம்ய்யா! உஷ்ஷ்ஷ்......... ஆபிள் ஜுஸ் ப்ளீஸ்.)

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Tuesday, June 23, 2009

தடை போட யாருமில்ல- 5

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4

"ஓ...நோ!!" கத்தினாள் சுதா. அவள் சத்தம் போட்டதை கேட்டு விஜியும் கலாவும் தலைதெறிக்க ஓடி வந்தனர். நொறுங்கிய கண்ணாடி துண்டுகளை பார்த்தனர் நால்வரும். என்ன செய்வது என்று தெரியவில்லை. அதன் விலையை பார்த்தனர். சசிக்கு மயக்கம் வந்துவிட்டது.

விஜி, "ஒரு restaurant இருந்தாலும் பரவாயில்ல...காசு இல்லன்னா மாவு ஆட்ட சொல்வாங்க.....இங்க என்னய்யா பண்ண சொல்வாங்க?"

கலா, " இந்த கடை முதலாளி முன்னாடி நின்னு record dance ஆட சொல்வாங்க...எனக்கு வாய்ல நல்லா வருது. இந்த கழுதைங்க கையையும் காலையும் வச்சுகிட்டு சும்மா போக வேண்டியது தானே? ரெண்டு வயசு பிள்ளைங்கன்னு நினைப்பு இதுங்களுக்கு!" என்று சுதாவையும் சசியையும் கிண்டல் அடித்தாள். மற்ற மூவரும் பயத்தால் நடுங்க, கலா மட்டும் எப்போதும் போலவே கூலாக கலயாத்து கொண்டிருந்தாள்.

"ஹாஹா...முதல தடவ மாட்டிகிட்டபோது ஒரு சித்தார்த் நம்ம கதைக்குள்ள வந்தான்...இப்போ எந்த ஜெயம் ரவி வர போறானோ?" என்று சிரித்தாள் கலா.

"be serious கலா...எனக்கு பயமா இருக்கு!" என்று அழுதாள் சசி.

கடையின் நிர்வாகி ஓடி வந்தார். நால்வரையும் பார்த்தார்.

"இந்த கண்ணாடி பீஸ் என்ன விலை தெரியுமா?" என்று நிர்வாகிக்கு கோபம் வந்தது.

"excuse me mr....." என்ற கலா, அவர் சட்டை பையிலிருந்த பெயர் அட்டையை பார்த்து,

"mr kanthaa saamy..." என கந்தசாமி என்னும் பெயரை பிரிட்டீஷ் இளவரசி எவ்வாறு பேசுவாங்களோ அவ்வாறு பேசினாள்.

ஆங்கில கலந்த தமிழில், கலா "எங்க daddy யாரு தெரியுமா? mr chandragopal தெரியுமா?" என்றாள்.

அவள் பேசிய விதமும் விரல்களை நீட்டி பேசிய விதமும் நிர்வாகியை கொஞ்சம் பயத்தால் ஆட வைத்தது.

"மிஸ்டர் சந்திர கோபால்... தெரியாதே?" என்றார்.

"அப்போ நல்லதா போச்சு...." முணுமுணுத்தாள் கலா.

"அவர் எவ்வளவு பெரிய ஆளு தெரியுமா, you damn it!" கண்ணாடி துண்டுகளை மேலும் உதைத்தாள்.

கலாவின் தசாவதாரத்தை கண்டு ரசித்து கொண்டிருந்தனர் மற்ற மூவரும்.

"ஆறு அடி இருப்பாரா?" என்றார் நிர்வாகி.

"ஏய் ஏய்....you....kidding with me? you....." என்று கோபம் வருவதுபோல் நடித்தவள் தனது கைபேசியை எடுத்து ஏதோ ஒரு நம்பருக்கு டயல் செய்தாள். அது ஏதோ ஒரு நாட்டிற்கு connect ஆனது.

"எங்க daddy நினைச்சாருன்னா, இந்த மாதிரி 100 கடை வாங்க முடியும்! mind it!" என்று நிர்வாகியிடம் பேசிவிட்டு கைபேசியை தன் காதில் வைத்தாள்.

"daddy, you know what has happened...." என்றவள் ரொம்ப நேரம் புலம்பி தீர்த்தாள். இதை பார்த்து கொண்டிருந்த நிர்வாகி உண்மை என்று பயந்துவிட்டான். பேசி முடித்தவள் நிர்வாகியிடம் கைபேசியை நீட்டி,

"இந்த மேன்...my dad wants to talk to you."

கைகள் சற்று நடுங்கியவாறு நிர்வாகி, "ஹாலோ சார்....." என்று இழுத்தான்.
உடனே அவன் கலாவிடம்,

"அவர் என்ன சொல்றாருன்னு தெரியல்ல....எந்த ஊர்ல இருக்காரு?"

கலா, "he is talking from dubai."

கலா கைபேசியை பிடுங்கி தன் காதில் மீண்டும் வைத்து பேசினாள், "ok dad...ok..sure..no problem...it is ok dad. i will take care. no no...you need not come here!"

பேசி முடித்தவள் நிர்வாகியிடம், "இங்க பாரு மேன்...என் அப்பாவுக்கு ரொம்ப கோபம் வந்துடுச்சு...இங்க உடனே helicopterல வரேன்னு சொன்னாரு. நான் தான் வேண்டாம்னு சொல்லியிருக்கேன். இந்த கண்ணாடி பீசுக்கு நான் pay பண்ணுறேன். do you accept credit card?"

"நோ மேடம். system out of order. so cash only."

"damn it....என்ன கடை வச்சு நடத்துற...." என்றவள் மறுபடியும் கைபேசியை எடுத்து பேசினாள். அப்போது தூரத்தில் இரண்டு துபாய் ஷேக்குகள் கடை வீதியை சுற்றி பார்த்து கொண்டிருந்தனர்.

கலா நிர்வாகியிடம், "பணத்த உடனே கொண்டு வர சொல்லிட்டேன். என் அப்பாவோட assistants தான் அவங்க..." என்றவள் அந்த இரண்டு ஷேக்குகளை பார்த்து கை நீட்டி காட்டினாள்.

"அவங்ககிட்ட பணத்த வாங்கிக்கோ மேன்....." என்றவள் நைஸா நால்வரையும் கூட்டி கொண்டு வெளியே வந்துவிட்டாள். சற்று தூரம் நடந்தவர்கள் பின்னர் ஓட ஆரம்பித்தனர். ரொம்ப தூரம் ஓடினர். கால் வலி ஏற்பட ஒரு juice கடையில் juice வாங்கி கொண்டனர்.

"எனக்கு ஆபிள் ஜுஸ் வேணும்..." என்றாள் சுதா.

"இவ கெட்ட கேட்டுக்கு ஆபிள் ஜுஸா..." என்று கையில் இருந்த பையை கொண்டு சுதாவின் மண்டையில் அடித்தாள்.

"யாரு மேன் துபாய்லேந்து பேசினா...உனக்கு ஆஸ்கார் அவார்ட் கொடுக்கலாம் மச்சி." என்றாள் விஜி.

"யாருக்கு தெரியும்...ஏதோ ஒரு நம்பர்...அது எங்கேயோ போச்சு. arabic language மாதிரி பேசினாங்க....அதான் துபாய்ன்னு சொல்லிட்டேன். வாழ்க துபாய்!" என்றால் கலா ஜுஸை குடித்து கொண்டே.

"thanks கலா! நீ இல்லேன்னா...." என்றாள் சசி.

"கண்டிப்பா record dance தான் ஆடி இருக்கோனும் ...." என்று நக்கல் அடித்தாள் கலா.

மற்றவர்கள் சிரித்து பேசிகொண்டிருந்த வேளை சுதா தனது பையில் ஏதோ ஒன்றை தீவிரமாக தேடி கொண்டிருந்தாள். திடீரென்று கத்த ஆரம்பித்தாள், "oh shit... i lost my handphone!!!"

(தொடரும்...)

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Sunday, June 21, 2009

தடை போட யாருமில்ல- 4

பகுதி 1 பகுதி 2 பகுதி 3

கண்ணாடி கடைக்குள் ஒவ்வொருத்தியும் ஒவ்வொரு contact lensயை எடுத்து பார்த்து கொண்டிருந்தாள். சசி, "ஏண்டி இதலாம். இந்த கண்ணாடியே போட்டு போனால் என்ன?"

சுதா, "சும்மா இரு மேன். contact lens gives you a glamorous look."

சசி, "அடியே நான் என்ன நமீதாவுக்கு போட்டியா போக போறேன். எனக்கு என்னமோ, நீங்களாம் என்னைய வச்சு காமெடி பண்ணுற மாதிரியே இருக்கு."

சசி சொன்னதை கலா கேட்டுவிட்டாள். கையிலிருந்தவற்றை போட்டுவிட்டு கலா,

"சரி வாங்க...போவோம். சசியே பாத்துகிட்டும்." என்றவுடன் சசி,

"ஏய் ஏய்...சரி சரி...." என்று பவ்யிமாக பதுங்கி போனாள்.

விஜி சிரித்து கொண்டே," அப்படி வா வழிக்கு."

சசி, "ஐஸ்வர்யா ராய் கண்ணு கலரு பச்சை தானே. பச்சை கலரு லென்ஸ் எடுக்கலாமா?" என்றாள்.அவள் பேசியதை கேட்டு மற்ற மூவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

கலா, "ஒரு படத்துல சத்யராஜ் சொல்வாரு நான் வேணும்னா படிச்சு ஒரு டாக்டராவோ எஞ்ஜினியராவோ ஆகிடுவான்னு. அதுக்கு கவுண்டமணி, அது எப்படி மாப்பிள்ள கொஞ்சம்கூட வெட்கப்படமா பேசிட்டேன்னு. அந்த மாதிரி இருக்கு நீ பேசுறது சசி. அது எப்படி உன்னையும் ஐஸ்வர்யாவையும் compare பண்ணி பேசுற?"

அவர்கள் சசிக்கு ஒரு colourless lensயை தேர்ந்தெடுத்தனர்.

சுதா, "நெக்ஸ்ட் என்ன?"

விஜி, "ஆள் பாதி ஆடை பாதி!"

கலா, "அப்போ சசி பாதி டிரஸோட தான் போகுமா?"

சசி, "அடியே!"

நால்வரும் சாரா பேஷன் கடைக்குள் சென்றனர். சசி மூவரையும் தடுத்து நிறுத்தி ஒரு முக்கியமான கேள்வியை கேட்டாள்,

"ஏய்....நான் இதையெல்லாம் வீட்டுக்கு எடுத்துகிட்டு போனா....ஏன் இப்போ இதையெல்லாம் வாங்கினேன்னு கேட்டாங்ளா என்ன சொல்ல?"

இப்படி ஒரு கேள்வியை கேட்டவுடன் சுதாவும் விஜியும் ஆச்சிரியத்தில் நின்றனர். யாரும் இதை யோசிக்கவில்லையே!

சசிக்கு பயம் கவிகொண்டது, முகத்தில் அச்சம் படர, "என்ன மேன் செய்யுறது?" படபடப்புடன் கேட்டாள்.

கலா, "இந்த கலா இருக்க பயம் ஏன்? நம்ம classல படிக்குறான்ல செந்தில். அவனோட wedding receptionக்கு தான் இந்த புது டிரஸ்ன்னு சொல்லு."

சுதா, "எப்ப டி அவனுக்கு கல்யாணம் ஆனுச்சு?"

கலா, "பொய் மச்சி, பொய்! ஹாஹா...."

விஜி, "நம்ம போதைக்கு மத்தவன் ஊறுகாயா? ம்ம்...நடத்துவோம் நடத்துவோம்!"

கடைக்குள் நின்ற ஒரு பொம்மை போட்டிருந்த உடையை பார்த்து சிரித்து கொண்டிருந்தாள் சுதா. விஜி மற்ற உடைகளை பார்த்து கொண்டிருந்தாள். சுதா,

"இந்த பொம்மை போட்டிருக்கிற டிரஸ் மாதிரி நம்ம சசிக்கு வாங்கி கொடுப்போமா?"

கலா, "அதுக்கு ஏண்டி காசு கொடுத்து வாங்கனும்? சசி குளிச்சிட்டு துண்ட கட்டிகிட்டு அப்படியே போ சொல்லு. ஒரு செலவும் இல்லாமல் போயிடும்!"

பக்கத்தில் நின்று கொண்டிருந்த சசி கலாவின் கையை கிள்ளினாள்.

“first date போகும்போது ரொம்ப revealing clothes போடகூடாது. அதே நேரத்துல இழுத்து போத்திட்டும் போககூடாது. நல்ல பொண்ணு மாதிரி இருக்ககூடாது, அதே நேரத்துல கெட்ட பொண்ணு மாதிரியும் இருக்ககூடாது….” கலா தனக்குள் ஒளிந்திருந்த ஸ் ஜெ சூர்யாவை தட்டி எழுப்பினாள்.

“ஓ மை காட்….என்ன மேன் சொல்ல வர நீ?” சுதாவின் கண்கள் ஆச்சிரியத்தில் விரிந்தன.

“எல்லாம் பசங்க சைக்காலஜி. அவங்க மனசு நல்லா இருந்தாலும். அவங்க கண்ணு அலைபாயும். சோ, அதுக்கு ஏத்த மாதிரி டிரஸ் இருக்கனும்.” கலா விளக்கினாள்.

“எப்படி?” விஜி கேட்டாள். கலா பேசுவது பிடிக்காதவள் போல் சசி மற்ற உடைகளை பார்த்து கொண்டிருந்தாலும், கலா என்ன சொல்கிறாள் என்பதை கூர்ந்து கவனித்தாள்.

“no spaghetti , no tube top! short-sleeve dress will be the best. கொஞ்ச low neckஆ இருந்தா போதும்!” என்று கண்களை சிமிட்டினாள் கலா. காலில் விழாத குறையா சுதா,

“தலிவா, கலக்குற!”

தேவையான பொருட்களை வாங்கி கொண்டனர். சனிக்கிழமை அன்று தான் வாங்கிய புதிய உடையை போட்டு எப்படி இருப்போம் என்று கற்பனையில் மிதந்தாள் சசி. புதிய உடையில் நடந்து போவதுபோல் கற்பனை செய்தாள், பின்னாடி இளையராஜா பின்னனி இசையுடன்.

தன்னை கிண்டல் செய்வார்கள் என்றும் நினைக்காமல் வெகுளித்தனமாய், “ஏய் கேள்ர்ஸ்….இவ்வளவு தானா?” என்றாள். மற்ற மூவரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து கொண்டனர்.

“வேற என்ன வேணும் செல்லம்?” கலா சசியின் தோளில் கை போட்டாள்.

“இந்த waxing, threading….இதெல்லாம் இல்லையா?” சசி தயக்கத்துடன்.

கலா விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள். கலா, “சசி, தேரிட்ட மச்சி!”

ஒரு அழகு நிலையத்திற்குள் சென்றனர். அங்கே நின்று கொண்டிருந்தார் ஒரு ஆண்ட்டி. விஜி, “ஆண்ட்டி, இந்த பொண்ணுக்கு…..” என்று ஆரம்பித்தவள் செய்ய வேண்டிய விஷயங்களை விளக்கினாள்.

“ஒரு குரங்க எப்படி கிளியா மாத்துறீங்கன்னு நான் பாக்குறேன்.” என்றாள் கலா. உள்ளே சென்ற சசி வெளியே வந்தாள் ஒரு மணி நேரம் கழித்து.

மற்ற மூவரும், “வாவ்!!!!” என்றனர்.

“என்னை கொஞ்சம் மாற்றி...” என்று பாட தொடங்கினாள் விஜி சசியை பார்த்து. சசிக்கு கொஞ்சம் வெட்கமாக இருந்தது. ஆனால், எல்லாரும் பூரிப்பு அடையும் விதத்தில் தான் இருப்பதை நினைத்து சந்தோஷம் அடைந்தாள்.

விஜி தொடர்ந்தாள், "இப்படியே போனே, உன் குடும்பத்துக்கே உன்னைய அடையாளம் தெரியாம போயிடும்! ஹாஹா..."

பிறகு, நால்வரும் வீட்டிற்கு கிளம்பலாம் என்று முடிவு எடுத்தபோது, சுதா கத்தினாள்,

"ஏய் பேப்ஸ்..we forget one important thing!!"

என்ன என்பது போல் மற்றவர்கள் சுதாவை பார்த்தனர்.

"make-up items....eyeliner, lipstick...இதெல்லாம் இருக்கா சசி உன்கிட்ட?" என்றாள் சுதா.

"இருக்கு... சின்ன வயசுல fancy dress competitionக்காக வாங்கி வச்சது" என்றாள் சசி.

" ஏன் உங்க பாட்டி சின்ன வயசா இருந்தபோ வாங்கி வச்சதுன்னு சொல்ல வேண்டியது தானே....வா போய் புதுசா வாங்கலாம்!" என்றாள் சுதா.

"வேண்டாம்ய்யா...i can manage with the ones i have at home. if not i can borrow from you guys." பதில் அளித்தாள் சசி.

"இங்க பாரு...இது என்ன பக்கத்து வீட்டில காபி தூள் வாங்குற மாதிரி நினைச்சீயா? nothing doing....வா மேன்..." என்று வலுகட்டாயமாக இழுத்து கொண்டு சென்றாள் சுதா சசியை.

சசி, " ஐயோ ஏண்டி....விடு... நான் வரேன்." என்று உள்ளே நடந்தாள். விஜியும் கலாவும் சாவகாசமாக நடந்து வந்தனர். சுதாவும் சசியும் முதலில் கடைக்குள் சென்றனர். ஆனால் கடையின் நுழைவாயில் சிறியதாக இருந்ததால், இருவரும் ஒருவரை ஒருவர் தள்ளிகொண்டு விளையாடிய படியே நடந்தனர்.

அவர்கள் பக்கத்தில் ஒரு கண்ணாடி பூ தொட்டி இருந்தது 3 அடி உயரத்தில். சுதாவும் சசியும் அதை கவனிக்கவில்லை. சுதாவின் கை அதை லேசாக தான் தொட்டது.

விளையாடிய விளையாட்டு வினையாய் போனது! கண்ணாடி பூ தொட்டி தொப்பென்று விழுந்து நொறுங்கியது.

(பகுதி 5)

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

இந்த மானக்கெட்ட பொழப்பு தேவையா?

விஜய் டீவி அவார்ட்ஸ் நிகழ்ச்சிய பார்த்தபிறகு....சாரி சாரி, அந்த சூர்யா family function நிகழ்ச்சியை பார்த்தபிறகு எனக்கு தோன்றியது தான் இப்பதிவின் தலைப்பு!

உளறல்கள்:

அது எப்படி, தமிழ் சினிமாக்காரர்கள் உளறுவதில் இப்படி கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. கமல் முதல் மனோரமா வரை எல்லாரும் ஏதோ சம்மந்தம் இல்லாமல் பேசியது சிப்பா இருந்துச்சு! அதுவும் சிவாகுமார் பேசியது நகைச்சுவையிலும் நகைச்சுவை!! அண்ணன் பையனுக்காக கமல் தான் சூர்யாவுக்காக விருதை விட்டுகொடுத்தது என்று கூறுகையில்......... என்னால முடியல்ல!!!

மடத்தனம்:

காமெடி என்ற பெயரில் பார்த்திபன் சொன்னது. ஐயோ...... மடத்தனத்தின் மன்னன் அவரே! "அவார்ட்ஸ் முத்தம் மாதிரி. கொடுக்கும்போதும் சந்தோஷம் வாங்கும்போதும் சந்தோஷம்...." அதுக்கு அப்பரம் அவார்ட்ட சிநேகாவிடம் கொடுத்தது....யப்பா நான் இதுக்கு மேலேயும் எதுவும் சொல்லல....அப்பரம் ஏதாச்சு சென்சார் போர்ட் பிரச்சனை வந்திட போது!

எரிச்சல்ஸ்:

டிடி வந்தவர்களிடம் அவர்கள் அணிந்திருந்த உடைகளை எங்கே வாங்கினீர்கள் என்று கேட்டது சலிப்பை தந்தது. எரிச்சலாக இருந்தது. ஆனால், சிலர் போட்டு வந்த உடைகள், அப்படியே தூங்கி எந்திரிச்சு வந்த மாதிரியே இருந்துச்சு!! (வெங்கட் பிரபு, பிரேம் ஜி.....தூங்கிட்டீங்களா?)

சின்னப்புள்ளத்தனம்:

கௌதம் மேனன் ஹாரிஸிடம் விருதை கொடுத்துவிட்டு மேடையை விட்டு விழுந்து அடிச்சு பின்னால் ஓடியது....ஹாஹா..... அதுவும் கோபி அவரை வலுக்கட்டாயமாக கேள்வி கேட்டு மடக்கியது..... ஹாஹா......

அடுத்த அரசியல் தலைவர்:
விருது பெற்றால் சரி, காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொள்ளலாம். விருது பெற்றவரிடம் ஏன் யா விழுவுற? விஜய் கமலிடம் விருதை கொடுத்துவிட்டு காலில் விழுந்தார். விஜய் அரசியலுக்கு போக போகிறார் என்பதை நிருபித்துவிட்டார். அதுவும் மைக்கை பிடித்து அவ்வளவு நேரம் விஜய் பேசியது வியப்பாக இருந்துச்சு.

குடும்ப நிகழ்ச்சி:

என்னை மிகவும் ஆத்திரம் அடைய செய்தது சூர்யாவின் செயல் தான். ஆசிர்வாதம் வாங்கி கொள்வது வேறு, ஒருத்தன் காலில் விழுவது வேறு! சூர்யா சார், ஏன் இப்படி உணர்ச்சிவசப்பட்டீங்க? இதுக்கு முன்னாடி எத்தனையோ விருதுகளை பெற்றபோது, இப்படி தான் குடும்பத்தையே மேடைக்கு அழைச்சீங்களா?இல்லை இப்படி தான் யோசிக்காமல் காலில் விழுந்தீங்களா? நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபி செய்த கூத்து ஒரு காரணம்! தேவையில்லாமல் சூர்யாவின் குடும்பத்தினரை மேடைக்கு வர சொன்னது, ஒரு பரபரப்பை ஏற்படுத்துவதற்காக என்பது அப்பட்டமாக தெரிந்தது.

இப்படி ஒரு பொழப்பு தேவையா?

எங்களை முட்டாளாக்கிய விதம்:

ஏ ஆர் ரகுமான் வரவில்லை. ஆனால் அவருக்கு விருது கொடுத்தது போல் காட்டினீர்கள். சிம்ரன் best supporting actress விருது கிடைத்தது. அவர் வரவில்லை என்பதால் இவ்விருது கொடுக்கப்படாது என்று கோபி கூறினார். என்னடா நிகழ்ச்சி பண்ணுறீங்க? ஒரு standard procedure வேண்டமா?

பாம்பே ஜெய்ஸ்ரீ வரவில்லை. ஆனால், அவர் சார்பா விருதை திருமதி ஹாரிஸ் ஜெய்ராஜ் வாங்கி கொண்டார்.

????? என்னங்கடா நிகழ்ச்சி இது?
கமல் கமல் கமல்:

இந்த நிகழ்ச்சியை பொருட்செலவு இல்லாமல் செய்து இருக்கலாம். கமலின் வீட்டின் பூங்காவில் இந்நிகழ்ச்சியை simpleஆ முடித்து இருக்கலாம்! ரசிகர் வாக்குகள், நாக்குகள், மூக்குகள் என்று எங்களை ஏமாற்றுவதை, நிறுத்தவேண்டும்.

வருத்தம்:

அபியும் நானும் ஒரு விருதுகூட பெறாதது!

மெகா வருத்தம்:

ஏகன் படத்துக்கு எந்த விருதும் கிடைக்காதது!(ஹிஹிஹி...)

போங்கடா நீங்களும் உங்க அவார்ட் ஷோவும்!

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Wednesday, June 17, 2009

தடை போட யாருமில்ல-3

பகுதி 1
பகுதி 2

"எப்படி இருக்கே சசி? exams எல்லாம் நல்லா செஞ்சியிருக்கீயா?" என்றான் சித்தார்த். சசி பதிலே பேசவில்லை. என்ன பேசுவது என்று தெரியவில்லை.

"சசி, are you there?"

சசியின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த முப்பெரும் தேவிகள் 'பேசு' என்பதுபோல் சசியிடம் சைகை காட்டினர்.

"ah..yes...yes...how are you?" வார்த்தைகள் மெதுஓட்டம் ஓடின.

"என்ன busyயா? கொஞ்சம் disturbed ah இருக்குற மாதிரி பேசுற? are you alright?" என்றான் சித்தார்த்.

"yes yes alright." இப்போது வார்த்தைகள் marathon ஓடின.

"சும்மா தான் ஃபோன் பண்ணேன்...அப்பரம்...லீவுல என்ன plans?"

பக்கத்திலிருந்து சசியின் தோழிகள், சித்தார்த் என்ன சொல்கிறான் என்பதை கேட்க சசியின் கைபேசி அருகே தங்களது காதுகளை வைத்தனர். இருந்தாலும் ஒன்றும் கேட்கவில்லை அவர்களுக்கு.

"nothing...." சசிக்கு வேர்த்து கொட்ட ஆரம்பித்தது. பேச்சை உடனடியாக முடித்துகொள்ளவேண்டும் என்பதற்காக ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள்.

"no plans ah? அப்போ...free தான் சொல்லுங்க?"

"yes!" யோசிக்காமல் பதிலை செப்பினாள்.

"so நம்ம ரெண்டு பேரும் வெளியே போலாமா?"

நேற்று சாப்பிட்ட சிக்கன் பிரியாணி வாந்தியாய் வெளியே வருவதுபோல் இருந்தது சசிக்கு. கொஞ்சம் மயக்கமும் வந்தது.

"நான் வெளியே ஃபிரண்ட்ஸ்கூட இருக்கேன்...." என்று சொல்லி பேச்சை முடிக்க முற்பட்டாள்.

சித்தார்த், "ஐயோ சாரி சாரி...முன்னாடியே சொல்லியிருக்கலாமே! சாரி....you enjoy. நான் அப்பரம் ஃபோன் பண்ணுறேன்....take care sasi." என்று கூறி முடித்தான்.

கைபேசியை கீழே வைத்த சசி மேசையில் இருந்த தண்ணீரை எடுத்து மளமளவென்று குடித்தாள்.

சுதா, "என்ன சொன்னான்?"

விஜி, "எதுக்கு ஃபோன் பண்ணான்?"

கலா, "ஏன் திடீரென்னு இன்னிக்கு ஃபோன் பண்ணான்?"

கேள்வி மேல் கேள்விகளை கேட்டுனர். சசிக்கு தலை சுற்றியது. ஒரு பாட்டில் தண்ணீரை முடித்தவள், வாயை துடைத்துகொண்டு,

"வெளியே போலாமான்னு கேட்டான்?"

மூவரும், "என்னாது???"

விஜி, "எங்க?"

கலா, "அவங்க குடும்பமும் இவ குடும்பமும் குலதெய்வ கோயிலுக்கு மாவிளக்கு போடறதுக்கு கூப்பிட்டு இருப்பான்.....யாரடி இவ..... ஏய் விஜி, இது கண்டிப்பா அது தான்."

விஜி, "confirmஆ அது தானா?"

கலா, "confirm."

சசிக்கு ஒன்றுமே புரியவில்லை. "என்னய்யா சொல்றீங்க. அவன் outing கூப்பிட்டதுக்கு ஏன் இப்படி என்னைய போட்டு குழப்புறீங்க?"

கலா, "ஏய் ஏய் ஏய்....இந்த டக்கால்ட்டி வேலையெல்லாம் வேணாம் கண்ணு. எல்லாரும் காதுல பூ சுத்துவாங்க...நீ பெரிய ipodட்டே சுத்துற!! கூட்டமா போனா தான் அதுக்கு பெயரு outing. ரெண்டு பேரு மட்டும் போனா அதுக்கு பெயரு dating. dating.dating. dating." என்று dating என்ற வார்த்தையை மூன்று தடவை எதிரோலி போல் சொன்னாள்.

சிரிக்க ஆரம்பித்தனர் சுதாவும் விஜியும். சசி கலாவை பார்த்து முறைத்தாள். தன்னை இதிலிருந்து காப்பாற்றுமாறு தோழிகளிடம் கெஞ்சி கொண்டிருந்தாள். அப்போது சித்தார்த்திடமிருந்து ஒரு குறுந்தகவல்,

சசி, இந்த சனிக்கிழமை போவோமா? evening 5. இடம், உன்னுடைய சாய்ஸ்?:)

இக்குறுந்தகவலை படித்த கலா, "இங்க பாருடி சாய்ஸ் கொடுக்குறாரு? இது பெரிய question paper பாரு? ஹாஹா...."

விஜி, " சும்மா போயிட்டு வா. இதுக்கு என்ன பயம்?"

சசி, "வீட்டுல தெரிஞ்சு கொன்னுடுவாங்க...."

சுதா, "யாருக்கும் தெரியாம போயிட்டு வா...."

கலா, "hey babe, it's very simple. எங்களோட வெளியே வரபோறேன்னு சொல்லிட்டு போயிட்டு வா....enjoy machi...ஆனா ஒன்னு மட்டும் புரியலை...அது எப்படி இந்த மாதிரி நல்ல விஷயங்கெல்லாம் உன்னைய மாதிரி அப்பாவி பொண்ணுங்களுக்கே நடக்குது."

கலா சுதா விஜி ஆகியோர் கைதட்டி சிரித்தனர்.

"அப்ப நான் ஓகே சொல்லிடவா?" அப்பாவியான முகத்துடன் சசி.

"ஓகேன்னு அனுப்பு. எங்க போலாம்னு முடிவு பண்ணி, அதையும் அனுப்பு." சுதா கூறினாள்.

"எங்க போறது?" சசிக்கு ஒரு சரியான இடத்தை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டது.

"i have got an idea. இந்த சினிமா, பீச் எல்லாம் சுத்த போர்! நீங்க ரெண்டு பேரும் billiards விளையாட போங்க. அதுக்கு அப்பரம் டினர் போங்க." கலா தனது கருத்தை முன்வைத்தாள்.

"எனக்கு billiards விளையாட தெரியாதே...." சசி பதில் அளித்தாள்.

"சித்தார்த் கத்து தருவான் டி." என்று விஜி கூற, சுதாவும் கலாவும் சிரித்தனர்.

"அவனுக்கும் தெரியலைன்னா?" சசி கேள்வி கேட்டாள்.

"ரெண்டு பேரும் குச்சிய வச்சு, உப்பு கருவாடு ஊறவச்ச சோறுன்னு டான்ஸ் ஆடுங்க...யாரடி இவ....கண்டிப்பா சித்தார்த்துக்கு தெரிஞ்சு இருக்கும்.... நீ மெசேஜ் போட்டு கேட்டு பாரு. " என்றாள் கலா.

சசி உடனே குறுந்தகவல் அனுப்பினாள் சித்தார்த்திற்கு,
ஹாய் சித்தார்த். சனிக்கிழமை how about playing billiards and dinner?

அதற்கு உடனே பதில் வந்தது,
வாவ், நைஸ் சாய்ஸ்! ஐ லவ் billiards. gr8...see you then. can't wait for saturday.

சுதா, "பையன் ரொம்ப தான் குஷியா இருக்கான்?"

சாப்பிட்டு முடித்தார்கள் நால்வரும். அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தனர்.

விஜி, "ok now let's prepare for sasi's dating....we will do a makeover for her."

சசி, "மேக் ஓவரா?"

கலா, "அதுக்கு ஏண்டி hangover ஆக போற மாதிரி கத்துற....."

முதலில் சசியின் கண்ணாடியை மாற்றுவதற்காக ஒரு கண்ணாடி கடையினுள் நுழைந்தனர்....

(பகுதி 4)

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

தடை போட யாருமில்ல-2

பகுதி 1

சசி பட போஸ்ட்டர்களை பார்த்து கொண்டிருந்தாள். விஜி,சுதா, கலா வருவதை பார்க்கவில்லை. ஆனால் இவர்கள் சசியை பார்த்துவிட்டார்கள். மெதுவாக பூனைபோல் சென்று, பயம் காட்டுவதற்காக சசியின் தோள்பட்டையை குலுக்கினர் பின்னாடியிலிருந்து. சசி சற்று பயந்துவிட்டாள்.

கலா சிரித்தவாறு, "யாரோ சொன்னாங்க....இந்த மாதிரி படத்துகெல்லாம் வரமாட்டாங்கன்னு!"

சுதா, "நீ வேற, சசி நேத்திக்கே இங்க வந்திருப்பா. அவ பைய check பண்ணு, toothpaste, brush எல்லாம் வச்சுயிருப்பா...ஹிஹிஹி..."

அவர்கள் கிண்டல் செய்வதை சசியும் ரசித்து சிரித்தாள்.

"ஒகே கேர்ள்ஸ்....சீக்கிரம் டிக்கெட் வாங்குவோம்....படம் ஆரம்பிச்சுட போகுது." விஜி அவசரப்படுத்தினாள். நால்வரும் டிக்கெட்டுகளை வாங்கினர். பாப்கார்ன், கோக், சிப்ஸ் போன்ற நொறுக்கு தீனிகளையும் சேர்த்துவாங்கி கொண்டனர்.
வாரநாட்கள் என்பதால் கூட்டம் அவ்வளவாக இல்லை. பெயர் போட ஆரம்பித்தனர். ஃபிரெஞ்சு படம் என்பதால் ஆங்கிலம் subtitleலுடன் படம் ஆரம்பித்தது.

2 மணி நேரம் படம் முடிந்தபிறகு, வெளியே வந்த நால்வரும் பக்கத்தில் இருந்த KFC கடைக்குள் சென்றனர். பையை மேசையில் வைத்த கலா, "ஐயோ படம் சுத்த போர். waste movie man! இதுக்கு போய் என்னாத்துக்கு m18 rating எல்லாம்?"
விஜியும் ஆம் என்பதுபோல் தலையாட்டினாள்.

"ஆமா கலா, ரொம்ப disappointing, கதையும் இல்ல ஒரு மண்ணும் இல்ல." சுதா தனது கருத்தை தெரிவித்தாள்.

கலா,"இதுக்கு நம்ம ஏதாச்சு தமிழ் படத்துக்கு போய் இருந்தாகூட நல்ல R21 காட்சிகள பாத்து இருக்கலாம்..." விழுந்து விழுந்து சிரித்தாள்.

சசிக்குள் தூங்கி கொண்டிருந்த தமிழச்சி, "ஏய், உனக்கு தமிழ் படம்ன்னா அவ்வளவு கேவலமா போச்சா?" அடுப்பில் வைத்த பால் போல் பொங்கி எழுந்தாள் சசி.

விஜி தனது கைபையிலிருந்து பணத்தை எடுத்து கொண்டு உணவு வாங்க சென்றுவிட்டாள்.

கலா, "ஏய் தோடா இங்க பாரு, பாரதிராஜா பெரியம்மா பொண்ணுக்கு வர கோபத்த...." என்று சசியை இன்னும் சீண்டினாள்.

சசி தொடர்ந்தாள், "நம்மளே நம்ம படத்த பத்தி இப்படி சொன்னா.....it's very bad man. தமிழ் படங்கள சில நல்ல படமும் இருக்கு."

கலா தன் கைபேசியை மேசையில் உருட்டியபடி, "ம்ம்ம்....சுஜாதா சொன்னது சரி தான்!"

இவர்கள் போடும் வாக்குவாதத்தை அமைதியாக கேட்டு கொண்டிருந்த சுதா, "சுஜாதாவா? யாரு அது? என்னா சொன்னாங்க?

"writer sujatha, yea! ஆயுத எழுத்து படத்துல சொன்னாரு.....உன்னைய மாதிரி பொண்ணுங்க இருக்குறதுனால தான் மோசமான தமிழ் படம்கூட நல்லா ஓடுது" என்று கலா சொல்லி கொண்டே சசியை முறைத்து பார்த்தாள்.

சுதா சத்தம் போட்டு சிரித்தாள்.

"உண்மைய தான் சொல்றேன், தமிழ் படத்துல காட்டுற டபுல் மீனிங் விஷயங்க மாதிரி வேற எங்கயும் பாக்க முடியாது...யப்பா....right from scenes to song lyrics...ஐயோ...." கலா தன் வெறுப்பை காட்டினாள்.

கலா ஆள்காட்டி விரலை நீட்டி, "you know what sutha, காமசூத்ராவ எழுதியதே நம்ம தான்..."

கலா இப்படி பேசுவதை கேட்ட விஜி வாயை பிளந்தாள். அவளுக்கு அதிர்ச்சி!
உணவை வாங்கிகொண்டு வந்த விஜி அதற்குள், "நம்ம எப்ப டி அத எழுதுனோம்?"

கலா, "hey loosu. நம்மன்னா நம்ம இல்ல. பொதுவா சொன்னேன். i mean indians. an indian wrote kamasutra. but look at what indian cinema has done.... they have all vulgarised the whole concept of sex."

இதற்கு மேல் பொறுமை இல்லாத விஜி, "kala, just shut up." என்று காதுகளை மூடி கொண்டாள்.

கலா, "இங்க பாருங்க. this is exactly what i meant. இப்படி பேசுறது தப்புன்னு நிறைய பேருக்கு தோணும். அதுக்கு காரணம் இந்த மாதிரி தமிழ் சினிமா.....எல்லாரையும் கெடுத்து வச்சுயிருக்கு. படத்துல சூர்யா சட்டைய கழட்டிபோட்டு வந்தாலோ, இல்ல நமீதா வந்தாலோ பட்டிக்காட்டான் பஞ்சுமுட்டாய பாக்குற மாதிரி பாப்பாங்க விஜி மாதிரி ஆளுங்க....ஆனா என்னைய மாதிரி ஆளுங்க உண்மைய சொன்னா காத பொத்திப்பாங்க....என்ன உலகம்டா இது!"

சசிக்கு கோபம் தலைக்கு ஏற, "ஓய் என்னைய எதுக்கு டி இழுக்குற...நான் என்ன பண்ணேன்?"

சுதா, "ஐயோ ராமா....நிறுத்துங்க. ஏன் கலா, சசிய இப்படி கிண்டல் பண்ணுற?"

கலா, "விரிச்சு போடாத பாயும், சசியை கிண்டல் பண்ணாத வாயும் நல்லா இருந்ததா சரித்தரமே இல்ல!"

"ஹாஹா, தலிவா கலக்குற!" சுதா கலாவின் கையை குலுக்கினாள்.

விஜியும் சிரித்து கொண்டே, "அடியே அழகுகளா, ஸ்டாப் தி சண்டை! சாப்பாடுங்கப்பா, ஆறிபோச்சு..." என்று விஜி சொல்ல, ஒரு burger பொட்டலத்தை கலாவிடம் கொடுத்தாள். அந்நேரம் சசியின் கைபேசி மணி ஒலித்தது. கைபேசியில் காட்டிய நம்பரை பார்த்தாள். புதிய நம்பர் அது.

"ஹாலோ சசி speaking." என்றாள்.

"ஹாலோ சசி, நான் தான் சித்தார்த் பேசுறேன்."

சற்றும் எதிர்பார்க்கவே இல்லை சசி. அதிர்ச்சியில் வாயில் இருந்த burgerயை துப்ப, அந்த சிறுதுண்டு burger கலாவின் முகத்தில் விழுந்தது. கலா துடைத்தவாறு, "லூசா நீ!"

"சித்தார்த்????" என்றாள் சசி புருவங்களை உயர்த்தி.

"சித்தார்த்?????" என்றனர் மற்ற மூவரும் கோரஸாக.

(பகுதி 3)

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Tuesday, June 16, 2009

கேள்வி கேட்குறது ரொம்ப ஈஸி, பதில் சொல்றது தான் ரொம்ப கஷ்டம்

இந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்தவர் srivats. சார், என்னை பழிக்கு பழி வாங்கிவிட்டார்!!:) கீழ்வரும் கேள்விகளுக்கு பதில் சொல்லனுமாம்!

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

இரண்டு மூனு பெயரை சின்ன பேப்பரில் எழுதி போட்டு கடவுள் முன் வைத்தார்களாம். என் அக்கா தான் ஒரு பெயரை எடுத்தாள். அந்த பெயர்-காயத்ரி. அப்பரம் வலைப்பூ ஆரம்பிக்கும்போது, புனைபெயரில் எழுத வேண்டும் என்ற ஆசை(பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் புனைபெயரில் எழுதுவதால் வந்த தாக்கம்...ஹிஹி...) ஆக ரொம்ப யோசிச்சு தமிழ்மாங்கனின்னு வச்சேன்.(மாம்பழம் பிடிக்கும் என்பதால்)

ஆக, எனக்கு 2 பெயருமே ரொம்ப பிடிக்கும். அப்பரம் காயத்ரி என்ற பெயர் பிடித்தமைக்கு இன்னொரு காரணம் சிம்ரன். ஆமாங்க....நான் அகில உலக சிம்ரன் ரசிகர் மன்றத்தின் தலைவர்!! சிம்ரன் நடித்த ஜோடி மற்றும் சேவல் படங்களில் அவரது பெயர் 'காயத்ரி'!!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

நேத்து....

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

பிடிக்கும்.

4. பிடித்த மதிய உணவு என்ன?

கோழி பிரியாணி, கோழி சுக்கா, கோழி வறுவல்....

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

ம்ம்ம்...மனசுக்கு தோணிச்சுன்னா, கண்டிப்பா நண்பரா ஆயிடுவேன்.

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

கழிவறையில் குளிக்க பிடிக்கும்! என்னய்யா கேள்வி இது......

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முகத்தை.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச‌து: ரொம்ப லொள்ளு பேசுவேன். கொஞ்சம் நல்லா எழுதுவேன்.நிறைய கனவுகள் காண்பது
பிடிக்காத‌து: கோபம், too sensitive

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

இந்த கேள்விக்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்!pass!

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

அப்படி யாரும் இல்ல. தனிமை ரொம்ப பிடிக்கும்.

11. இதை எழுதும் போது என்ன வண்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
நீல கலர்.

12. என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

பார்ப‌து : வேற‌ என்ன‌? க‌ணிணிதான் :)
கேட்ப‌து: ஒன்னுமில்ல.

13. வண்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

orange. my favourite colour!!!!!!

14. பிடித்த மணம்?

தமிழ்மணம்(அட்ரா அட்ரா அட்ரா......) ஹாஹா...சரி சரி, பிடித்த மணம்....கோழி குழம்பு வாசம்.

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

கோபி: நிறைய எழுத ஆசைப்படுபவர். நல்ல உற்சாகம் கொடுப்பவர்.::)

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

அவர் ஒரு ஆங்கில கவிதை எழுதினார். simply superbbb!! http://stavirs007.blogspot.com/2009/06/us-that-never-was.html

17. பிடித்த விளையாட்டு?

கிரிக்கெட். we eat, drink, talk,breathe cricket.(not like dhoni) ஆஹா...என்னை அறியாமல் வந்துவிட்டது:)

18. கண்ணாடி அணிபவரா?

perfect eyesight எனக்கு.

19. எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

romantic comedies, thriller, suspense, இந்தி படங்கள் எப்படி இருந்தாலும், பார்த்துவிடுவேன்.

20. கடைசியாகப் பார்த்த படம்?
drag me to hell- வயிறு, கண் எல்லாம் கலங்கிபோச்சு. பேய் படம்ங்க அது! ராத்திரி தூக்கம் வரல!

21. பிடித்த பருவ காலம் எது?

பள்ளி காலம் தான்!

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

self-made man by norah vincent.

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

இல்லை.

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த‌து: சத்தம்.... எப்படிங்க பிடிக்கும்?

பிடிக்காத‌து: போக்குவரத்து சத்தம்

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
new zealand.

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

சுடு தண்ணி சூப்பரா போடுவேன். அப்பரம் என்னய்யா கேள்வி இது...தனித்திறமை...keyboard வாசிப்பேன்...:)

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

ஆண்களின் ஆதிக்கம்

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

ஈகோ தான்!

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

queenstown in new zealand. ஆனால் நீண்ட நாள் கனவு- mumbai and new york செல்ல வேண்டும் என்று!

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

bmw car, three-storey bungalow house with mini theatre, swimming pool and a mini gym. mthly income generated: US$30,000
ஹாஹா...எப்படி?

31. மனைவி/கணவன் இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

நான் இப்ப தான் எல் கே ஜி முடிஞ்சு யூகேஜி போறேன்.:)

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
ஒரு வரியில் சொல்ல முடியாதது தான் வாழ்க்கை

(எப்படி காயத்ரி உனக்கு மட்டும் இப்படிலாம் தோணுது....அட்ரா அட்ரா அட்ரா!! ஹிஹி)

மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)

Wednesday, June 10, 2009

daddy mummy வீட்டில் இல்ல- தடை போட யாருமில்ல(பகுதி 1)

daddy mummy வீட்டில் இல்ல தொடர்கதையை தொடர்ந்து அதன் season 2 வந்துவிட்டது. அதாவது sequel 2. தெளிவாக சொல்லபோனால், 5 பாகங்களை கொண்டது அத்தொடர்கதை. அதன் தொடர்ச்சியாக அடுத்தெடுத்த பாகங்கள் வரும். என்னமோ தெரியல்ல, எனக்கே இந்த 'daddy mummy வீட்டில் இல்ல' கதை ரொம்ப பிடிச்சு போச்சு.(பொதுவா நான் எழுதிய கதைகளை மறுபடியும் நான் படிக்க மாட்டேன்...:)

பிடித்து போனதால், தான் இதை தொடர வேண்டும் என்ற ஆவலும் வந்தது. so sequel 2 gonna start...start musik! இந்த சீசன் 2க்கு தலைப்பு- தடை போட யாருமில்ல! (எப்படி...?)

daddy mummy வீட்டில் இல்ல கதையை படிக்க: http://enpoems.blogspot.com/2009/04/daddy-mummy-1_13.html
------------------------------------------------------------------------------------------
தடைபோட யாருமில்ல-1

"ஏய் நான் இப்போ என்னடி செய்ய?" சசி குழம்பினாள். பாவமாகவும் இருந்தது பார்ப்பதற்கு. சசிக்கு பயமாக இருந்தது. மெத்தையில் விழுந்து புரண்டு சிரித்து கொண்டிருந்த விஜி,

"கவலைப்படாதே சசி, பரிசம் போட்டுட வேண்டியது தான்!" மறுபடியும் சிரிக்க ஆரம்பித்தாள். தன்னை அனைவரும் கிண்டல் செய்கிறார்கள் என்பதை தாங்கி கொள்ள முடியாமல் சசி, "நான் கிளம்புறேன்."

சிரித்து கொண்டிருந்த சுதாவிற்கு சசியின் கோபம் புரிந்தது. "ஏய், என்ன சசி நீ, நாங்க சும்மா சிரிச்சோம்.. இதுக்கு போய் கோச்சிக்கிட்ட....சரி ஃபிரியா விடு! just don't reply him anything for now. exams எல்லாம் முடியட்டும். அப்பரம் இத பத்தி பாத்துக்கலாம்."

சுதா சற்று சீரியஸா பேசியது சசிக்கு ஆறுதலாக இருந்தது. ஆனால், கலா தன் பங்கு கிண்டலை கொட்டினாள். "காதல் வந்தா சொல்லியனுப்பு, உயிரோடு இருந்தால் வருகிறேன்...." என்ற அழகான பாடலை ஆங்கிலம் கலந்த தமிழில் வேண்டுமென்றே பாடி சசியை நக்கல் அடித்தாள்.

ஒரு வாரம் ஓடியது. தேர்வுகளும் முடிந்துவிட்டன. கடைசி தேர்வு முடிந்து அனைவரும் சசி வீட்டிற்கு சென்றனர். அவளது தம்பி ஹாலில் உட்கார்ந்து விடியோ கேம்ஸ் விளையாடி கொண்டு இருந்தான்.சசியின் அம்மா சோபாவில் உட்கார்ந்து ஏதோ கணக்கு வழக்குகளை புரட்டி கொண்டிருந்தாள். சசியும் அவள் தோழிகளும் வீட்டிற்குள் நுழைந்தார்கள்.

சசியின் அம்மா, "வாங்கடியம்மா....என்ன பரிட்சையெல்லாம் pass பண்ணிடுவீங்களா?"

அதற்கு கலா, "என்ன ஆண்ட்டி எங்கள பாத்து இப்படி கேட்டுடீங்க? உங்க பெயர காப்பாத்தீயே தீருவோம். இது சசி மேல சத்தியம்." என்று பக்கத்தில் நின்று கொண்டிருந்த சசியின் தலையில் அடித்தாள். அனைவரும் சிரித்தனர். சிரித்து கொண்டிருந்த சசியின் அம்மாவின் முகம் சற்று மாறியது கையிலிருந்த billலை பார்த்தபிறகு.

அவர், "என்ன சசி, உன் mobile phone பில் ஏன் இவ்வளவு அதிகமா வந்து இருக்கு?"

சசிக்கு பயம் கவி கொண்டது. சசி அம்மா கையில் இருந்த பில்லை வெடுக்கென்று பிடிங்கி அதைப் பார்த்தாள். ஆம், அளவுக்கு அதிகமாக தான் இருந்தது. சசிக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. பொங்கலுக்கே வெடி வெடிக்கும் கலா, தீபாவளி வந்தால் சும்மா இருப்பாளா? சதாரணமாகவே சசியை கிண்டல் செய்யும் கலா, இச்சமயம் சசியின் நிலைமை கண்டு உற்சாகம் அடைந்தாள். கிண்டல் செய்ய தக்க தருணம்!

"அது ஒன்னுமில்ல ஆண்ட்டி....சித்தார்த்....." என்று கலா வாயை திறந்தாள்.

"who siddarth, boys movie hero siddarth?" வீடியோ கேம்ஸ் விளையாடி கொண்டிருந்த தம்பி அவர்களிடம் கேட்டான். கேள்வியை கேட்டுவிட்டு மறுபடியும் விளையாட்டில் மூழ்கிவிட்டான்.

கலா, சசியை இப்படி மாட்டிவிட்டது விஜிக்கும் சுதாவிற்கும் ஆச்சிரியமா இருந்தது. சசிக்கு அதிர்ச்சி. கலா முடிப்பதற்குள் சசி,

"ஒன்னுமில்ல மா, இன்னிக்கு சித்தார்த்தனந்தா சாமிகள பத்தி டீவில போடறத்த பத்தி சொல்லுறா?" சமாளித்தாள்.

"நான் என்ன கேட்குறேன், நீ என்ன சொல்லுற?" அம்மா தன் புருவங்களை சுருக்கினார்.

"இந்த மாசம், exams time. கிளாஸ்மேட்ஸ் நிறைய பேரு doubts கேட்க ஃபோன் பண்ணாங்க, நானும் ஃபோன் பண்ண வேண்டியதா இருந்துச்சு." என்ற உண்மையை சொன்னாள். அம்மாவும் சரி சரி என்று தலையாட்டினார். இருந்தாலும் ஒரு எச்சரிக்கையுடன், "அடுத்த மாசம்...." என்று ஆரம்பிக்கும்போதே சசிக்கு புரிந்துவிட்டது அம்மாவின் ஆர்டர்