May 28, 2008

tuitionக்கு போகாதே!

இந்த tuitionக்கும் போகும் பிள்ளைகள் ரொம்ப ரொம்ப பாவமான பிள்ளைகள்! எனக்கு இந்த மாணவர்கள் tuitionக்கு போற விஷயமே பிடிக்கல்ல. டியூஷன் என்ற பெயரில் அவர்கள் இன்னும் அதிகமான சுமையை தான் சுமக்கிறார்கள். பள்ளியில் சொல்லிகொடுக்கும் ஆசிரியர்கள் தான் டியூசன் எடுப்பார்கள். பள்ளியில் சரிவர சொல்லிகொடுக்காதவர்களா டியூஷனில் சொல்லி கொடுத்துவிட போகிறார்கள்?

நான் பள்ளி படிக்கும் காலத்தில் 1008 டியூஷனுக்கு சென்று நொந்து noodles ஆனது தான் மிச்சம். வார நாட்களில் 3 நாட்களுக்கு டியூஷன். சனிக்கிழமை காலையில் கணக்கு டியூஷன்.
ஞாயிற்றுகிழமை காலை 7 மணிக்கு physics டியூஷன். 9 மணிக்கு முடிந்துவிடும். 930 அடுத்த கணக்கு டியூஷனுக்கு ஓடனும். மதியம் 12 மணிக்கு தான் வீடு திரும்புவேன். அப்போது எல்லாம் நானே என் மனதில் நினைத்து கொள்வேன், "நீ ஏதோ போன ஜன்மத்துல பாவம் பண்ணியிருக்கே. அதான் இந்த ஜன்மத்துல அனுபவிக்கிற இப்படியலாம்."

அந்த காலத்தில் டியூஷனுக்கு சென்றால் மக்கு பிள்ளை என்பார்கள். ஆனால், இந்த காலத்தில் டியூஷனுக்கு போகாத பிள்ளைகளைதான் மக்கு பிள்ளை என்கிறார்கள். இது ஒரு மிகப்பெரிய பிரச்சனை என்று நான் கருதுகிறேன். அடிப்படையை சரி செய்ய வேண்டும். ஆசிரியர்கள் புரியும் வண்ணம் சொல்லி கொடுத்தாலே பாதி பிரச்சனை தீர்ந்துவிடும். அதற்கு, ஆசிரியர்கள் தான் முழு காரணம் என்று நான் சொல்லவரவில்லை.

உதாரணத்திற்கு ஒரு கேள்வி,

"மரம் வளர எது காரணம்?" என்றால் எப்படி பதில் சொல்வது... "எது" என்று கேட்டதால் ஒரே ஒரு காரணத்தை தான் கூறமுடியும். கேள்வி "எவை காரணங்கள்" என்று கேட்டிருந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களை கூறலாம். ஆனால் கேட்ட "எது" என்ற கேள்விக்கு அனைத்து காரணங்களையும் கூறவில்லை என்பதால் அந்த மாணவனுக்கு மதிப்பெண்களை குறைப்பது எந்த விதத்தில் நியாயமாகும்?

ஆக, இப்படி இருக்கும் மாணவர்கள் குறைவாக மதிப்பெண்களை வாங்க, இவர்களை டியூஷனுக்கு அனுப்பிவிடுகிறார்கள் பெற்றோர்கள். யாரோ செய்யும் தவறுக்கு மாணவர்கள் பலியாகுகிறார்கள்?
டியூஷனுக்கு போனால் தான் பிள்ளை நல்லா படிப்பான் என்று எண்ணம் கொண்டு பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகள் மீது கொஞ்சம் நம்பிக்கை வையுங்கள்!!

பிள்ளை ஒரு பரிட்சையில் fail ஆகிட்டான் என்றால் அவனை உடனே "டியூஷனுக்கு போனால் தான் நீ சரிப்பட்டு வருவே." என்று சொல்லி அவனை தள்ளிவிடாதீங்க. மற்ற பாடங்களில் அவன் நல்லா செய்திருப்பான். ஆக, அவன் முட்டாள் இல்லை. மற்ற எத்தனையோ திறமைகள் இருக்கும் அவனிடத்தில். ஆக அவன் மக்கு பையனும் இல்ல. இந்த ஒரு பாடம் அவனுக்கு சரியாக வரவில்லை என்றால் அதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். அதை மற்ற கோணங்களிலிருந்து பார்க்க வேண்டும்.

சிலர் சொல்வார்கள், பெற்றோர்களுக்கே தெரியவில்லை, சிலர் படிக்காதவர்கள், அப்படி இருக்கையில் டியூஷனுக்கு அனுப்புகிறோம் என்று. அப்பரம் எதற்கு பள்ளிகூடம்? அனைத்து மாணவர்களையும் சரிசமமான நிலையில் கொண்டு வருவதே ஒரு பள்ளியின் நோக்கமாகும். ஆனால், இன்றைய நிலையில் அது அப்படி உள்ளதா? ஆக, அடிப்படையே ஆட்டம் காண,நாம் அனைவரும் கோபுரத்திற்கு சாயம் பூசி கொண்டிருக்கிறோம்!!

இப்போது ஒரு வாசகம் புதிதாக முளைத்து உள்ளது, " i was born smart but education made me stupid." என்னிடம் கேட்டால், இது தான் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது!!

May 27, 2008

எனக்கு பயமா இருக்கு- பாகம் 3

பாகம் 1
பாகம் 2

எனக்கு கழிவறைக்கு போக வேண்டிய சூழல். நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடித்ததால் வந்த வினை இது! ராத்திரி நேரம்.. தனியே கழிவறைக்கு செல்ல வேண்டாம்னு சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. நான் சுஜியை எழுப்பினேன்.

ஆனால் அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். மற்ற வகுப்பு மாணவிகள் எவளும் எழும்பவில்லை. கடைசியாக ஒரு குரல் கொடுத்தேன்,



"நான் toiletக்கு போகனும். யாராச்சும் வர முடியுமா? it's urgent."



ஒருத்தி தூக்க மயக்கத்தில், "i love விஷால்.. u are so cute da..." என்று உளறினாள். அடச்சே அவசரம் புரியாமல் பேசுகிறாள் என்று நோந்து போனேன்.



பயத்தை புதைத்து, தைரியத்தை வரவழைத்து என் torchlightயை எடுத்து கொண்டு புறப்பட்டேன். பெண்கள் விடுதியிலிருந்து கழிவறை கட்டடத்திற்கு செல்ல 10 நிமிடங்களாகும். எனக்கு தெரிந்த எல்லா சாமி பாடல்களை மனதில் பாடி கொண்டே சென்றேன்.



இருட்டு ரொம்பவே இருட்டாக இருந்தது!

தவளைகளின் சத்தம்!

பனித்துளி இடி மாதிரி தலையில் விழுவதுபோல் இருந்தது.

திடீரென்று torchlightலில் உள்ள வெளிச்சம் மங்களாக போனது. battery இன்னும் கொஞ்சம் நேரம் வரைக்கும் தான் தாக்குபிடிக்கும் என்பதை நான் அறிந்து கொண்டேன். என் நடை வேகத்தை அதிகரித்தேன். வேகமாக நடக்க நடக்க மனம் இன்னும் அதிகமாக பயத்தினால் அடித்தது.



நான் கழிவறை கட்டடத்தை வந்த அடைய, battery முற்றிலும் போனது. திரும்பி எப்படி போவது என்று அடுத்த பயம் மனதிற்குள் புகுந்தது. கட்டடத்தின் கடைசியில் தான் கழிவறை. சத்தமில்லாமல் காலடியை ஒவ்வொன்றுமாக மெதுவாய் எடுத்து வைத்தேன். கழிவறையில் வெளிச்சம் தெரிந்தது. யாரோ அங்கே இருக்கிறார்கள். அருகே செல்ல செல்ல பெண்களின் குரல் கேட்டது.

"யப்பாடா, நம்ம பெண்ணுங்க எவளோ இருக்கிறா. " என்று மனம் தைரியமானது.

உள்ளே நுழைந்தேன். மூன்று பெண்கள் தண்ணீர் துளிகளை ஒருவர் மீது இன்னொருவர்மேல் அள்ளி வீசி விளையாடி கொண்டிருந்தனர்.

"hi girls, என்ன toiletக்கு வந்தீங்களா?" என்றேன்.

"இல்ல இல்ல, படம் பார்க்க வந்தோம்" என்றார்கள். சரி நான் கேட்ட முட்டாள்தனமான கேள்விக்கு பதில் இப்படி தான் வரும்.

"நீங்கலாம் எந்த department?" என்று கழிவறைக்கு போய்விட்டு tap தண்ணீரில் கை கழுவி கொண்டே கேட்டேன்.

மூவரும் கோர்ஸாக, "நாங்க physics department" என்றனர்.

"இவ ராணி, நான் மாலா, இவ ரோகினி." என்றாள் மாலா.

"ஒகே, nice names." என்றேன் நான்.

"சரி நான் first போகவா? இல்ல உங்களுக்காக wait பண்ணவா?" என்றேன். இருந்தாலும் எல்லாரும் ஒன்றாக போக வேண்டும் என்பதே என் ஆசை. நம் பயத்தை மற்றவர்களிடம் காட்டிக்ககூடாது என்பதற்காக அந்த கேள்வி.

"நோ.. நோ.. நம்ம எல்லாம் ஒன்னாவே போவோம்." என்றனர் மூவரும்.

யாரிடமும் torchlight கிடையாது. ஆக, ஒருவருக்கொருவர் கைகளை பிடித்து கொண்டு பத்திரமாக நடந்தோம். யாரும் பேசாமல் வந்தனர்.

"யாராச்சும் பேசலாமே?" என்றேன் அமைதியான குரலில்.

"பேசலாமே. hiking நல்லா இருந்துச்சுல. நம்ம nightல போய் இருந்தா சூப்பரா இருந்திருக்கும்." என்றாள் மாலா.

"அட நீங்க வேற, பகல போனதுக்கே பயங்கரமா இருந்துச்சு.. இதுல வேற night effect கேட்குதா உங்களுக்கு." என்றேன்.

"நாங்க எல்லாம் யாரு. புலி வந்தாகூட மடியில் தூக்கிவச்சிகிட்டு புலிக்கு புல்லு ஊட்டிவிடுவோம்ல." என்றாள் ரோகினி தங்களது தைரியத்தை பற்றி.

அவர்கள் பேசுவது காமெடியாக இருந்தது. ரசித்து கேட்டு கொண்டு வந்தேன். பெண்கள் விடுதியை அடைந்துவிட்டோம். அப்போது சாப்பிடும் இடத்தில் இருந்த பெஞ்சில் ஷீலா மேடம் தனியாக உட்கார்ந்து இருந்தாள். இவர்கள் மூவரும் ஷீலா மேடத்தை நோக்கி சென்றனர்.

"நாளைக்கு plan பத்தி discuss பண்ணனும்." என்றாள் ராணி. அவர்கள் ஷீலா மேடத்திடம் பேசினர். நான் சிறிது நேரம் மறைந்து நின்று கேட்டு கொண்டிருந்தேன்.

"good.ராணி, நான் சொன்ன மாதிரி இன்னிக்கு boys toiletலை lock பண்ணிட்டே..." என்றார் ஷீலா மேடம்.

எனக்கு மிக பெரிய அதிர்ச்சி!!

அதற்கு பிறகு அவர்கள் பேசியது என் காதுகளில் கேட்கவில்லை. ரொம்ப அமைதியான குரலில் பேசியதால் சரியாக கேட்க முடியவில்லை. அதனால், நான் என் இடத்திற்கு சென்று தூங்க முயற்சி செய்தேன். ஆனால், தூக்கம் வரவில்லை. ஷீலா மேடம், toilet lock, ராணி, மோகினி, மாலா என்ற பெயர்கள் லட்சம் முறை மண்டையில் சுற்றி வந்தன.

யோசித்து யோசித்து என்னை அறியாமலேயே தூங்கிவிட்டேன். காலை மணி 6க்கு சுஜி எழுப்பினாள். நானும் கண் விழித்தேன் மெதுவாய்.

"get ready soon. எல்லாரும் ரெடி." என்றாள் சுஜி. அவளிடம் நேற்று இரவு நடந்ததை இப்பவே சொல்லவேண்டாம் என்றது என் மனம்.

சோம்பலாக இருந்ததால் ஜன்னல் வழியே சற்று எட்டி பார்த்தேன். சிறிது நேரம் கழித்து திரும்பி பார்க்கையில் என் வகுப்பு மாணவி ஒருத்தியின் பையில், முகாமிற்கு வந்த நாள் அன்று வாங்கிய செய்தித்தாள் இருந்தது.
சும்மா அதை புரட்டி பார்த்து கொண்டிருந்தபோது என் கண்களில் தென்பட்டது,

'ராணி, மாலா, மோகினி.
5ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி'.

ஆம் நான் பார்த்த அதே மூன்று பெண்கள்!!! என் இதயமே வெடித்துவிட்டது. அப்படி என்றால் நேற்று நான் பார்த்தது பேய்யா??

நான் என்ன செய்வது என்று தெரியாமல், அடுத்த அறையில் இருந்த ஷீலா மேடத்திடம் ஓடினேன். செய்தித்தாளை காட்டி, நடந்தவற்றை கூறினேன்.

"what nonsense? நான் இவங்ககிட்ட பேசிகிட்டு இருந்தேனா? don't blabber like this. போய் ரெடியாகு. நீ நேத்திக்கு எதாச்சு கனவு கண்டு இருப்பே! i got to go to the assemble area now." என்று சொல்லிவிட்டு தன் பையில் இருந்த ஏதோ ஒரு மாத்திரையை வாயில் போட்டார். தண்ணீரை அருந்திவிட்டு சென்றார் என் பேச்சை பொருட்படுத்தாமல். அவர் மாத்திரை பாட்டிலை பார்த்தேன். அதில் எழுதி இருந்தது,

'split personality disorder. take one tablet in the morning and one tablet at night.'

****முற்றும்****

May 23, 2008

எனக்கு பயமா இருக்கு- பாகம் 2

பாகம் 1

"ஏய் ரவீன், உன் ஆளு சுஜி ரொம்ப சோகமா இருக்கா.. என்ன மேட்டர்னு தெரியுமா?" என்றேன்.

"தெரியும்ப்பா. சுஜிக்கு இந்த இடம் பிடிக்கல. பேய் அப்படி இப்படினு சொல்லிக்கிட்டு இருந்தா. நான் அவ்வளவுக்கு எத்தன தடவையே சொல்லிட்டேன். ஆனா கேட்க மாட்டேங்கறா. i am totally disturbed too. i don't know what to do man!" என்றான் சற்று வெறுப்புடன்.

ஆஹா அப்படி என்றால் ரவீனாலும் இந்த விஷயத்துக்கு தீர்வு காண முடியாது என்று தெரிந்துவிட்டது. என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டே காலை உணவுக்காக வரிசையில் நின்றேன்.

திடீரென்று "ஐயோ!! ரத்தம்! ரத்தம்!" என்று அலறல் சத்தம். பெண்கள் விடுதியிலிருந்து தான் அந்த சத்தம் வந்தது. அனைவரும் பதறி அடித்துகொண்டு அங்கே ஓடினோம். அறையில் சுஜி மட்டும் தான் இருந்தாள். அவள் முகம் முழுக்க பயத்தால் கொட்டிய வேர்வை. கண்கள் சிவப்பாக மாறி இருந்தன. எதையோ பார்த்து பயந்துவிட்டாள் என்பது மட்டும் அனைவருக்கும் புரிந்தது.

"என்ன ஆச்சு சுஜி" என்றார் ஷீலா மேடம்.

"மேடம்...ரத்தம்.... ரத்தம்." என்று வார்த்தைகள் வர மறுக்க பதற்றமாகவே கூறினாள், ஜன்னல் ஓரத்தில் ஒழிகி இருந்த ரத்தத்தை பார்த்து.

அங்கே ரத்தம் எப்படி வந்தது? ஏன்? யாரு? என்று அனைவரின் மனதில் பயம் அலைகள் பாய்ந்தன.

மற்ற ஆண் மாணவர்கள் சுற்றி நின்று ஒருவருக்கொருவர் என்ன நடந்திருக்கும் என்று பேசி கொண்டிருந்தனர். ரவீன் சுஜியை சமாதானம் செய்து கொண்டிருந்தான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அப்ப, உண்மையாகவே பேய் இருக்கா?? பேயின் வேலையா இது?


குளித்துவிட்டு ஒரு பெண் அறைக்குள் நுழைந்தாள். கூட்டமாக இருந்ததை பார்த்து, " என்ன மேன், ஒரே கூட்டம்? what happened?" என்று வினாவினாள். நடந்ததை கூறினேன் நான். சொல்லி முடிப்பதற்குள் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டாள். அவள்,


"ஏய் fools, இது ரத்தமா? நான் நேத்திக்கு burger சாப்பிடும்போது chilli sauce கொட்டிட்டு. நாளைக்கு தொடச்சிக்கலாம்னு விட்டுட்டேன்... அதுக்குள்ளே இப்படி சீன் create பண்ணிட்டீயே?" என்றாள் அவள் சுஜியைப் பார்த்து.


அங்கே உள்ள பலர் நடந்த கூத்தை பார்த்து சிரிக்க தொடங்கினர். சுஜிக்கு சற்று ஒரு மாதிரியாக போய்விட்டது. எப்படி react செய்வது என்று தெரியாமல் முழித்தாள். ரவீனுக்கு கோபம் ஒரு புரம், அவமானம் ஒரு புரம். ஒன்னும் இல்லாத விஷயத்துக்கு ஏன் இப்படி செய்கிறாள் என்று ரவீன் நினைக்க, அறையைவிட்டு வெளியேறினான்.


"ஒகே students, leave the matter. எல்லாரும் hikingக்கு கிளம்புங்க" என்றார் ஷீலா மேடம். ரவீன் கோபமாக இருக்கிறான் என்பதை புரிந்து கொண்ட சுஜி, அவனிடம் மன்னிப்பு கேட்க ஓடினாள். காலையின் ஆரம்பமே இப்படி இருக்கிறதே என்று என் மனம் யோசித்தது. இன்னும் 10 நிமிடங்களில் திடலில் assemble ஆகவேண்டும் என்ற ஒரு அறிவிப்பு ஒலிக்க, நாங்கள் அனைவரும் hikingக்கு தேவையான பொருட்களை எடுத்து கொண்டு திடலுக்கு சென்றோம்.

physics, maths, biology, history department என்று பல departmentகள் வாரியாக நாங்கள் குழு அமைத்தோம். ஒவ்வொரு குழுக்கு ஏற்ற பொறுப்பாசிரியர்கள் hikingக்கு உரிய குறிப்புகளை கூறினர். பின்னர் மலைப்பகுதிக்குள் சென்றோம். அன்றைக்கு முடிக்கவேண்டிய நடவடிக்கைகளை முடித்தோம்.


சுவாரஸ்சியமாக இருந்தாலும் அனைவருக்கும் களைப்பாக இருந்தது. திரும்பி விடுதிக்கு வர இரவு 7 மணி ஆகிவிட்டது. 8 மணிக்கு இரவு உணவு என்று ஆசிரியர்கள் கூறினர். ஆக, அனைத்து மாணவர்களும் சீக்கிரமாக குளித்துவிட்டு இரவு உணவுக்காக தயாராகினர். அன்று மலைப்பகுதியில் hiking சென்றபோது எப்படியோ சுஜியும் ரவீனும் சமாதானம் ஆகினர். இருவரும் சற்று நேரம் விடுதியின் கீழ்தளத்தில் நின்று பேசி கொண்டிருந்தனர். கடைசியாகதான் ரவீன் குளிக்க சென்றான். கிட்டதட்ட அனைத்து மாணவர்களும் சாப்பிடும் இடத்திற்கு வந்தனர். சுஜியும் குளித்துவிட்டு வந்தாள். நானும் அவளும் அங்கே சென்றோம்.

நாங்கள் அளவளாவி கொண்டிருந்தபோது, ஒரு பயங்கர கதறல் சத்தம், "டேய், ரவீன் is missing!!" என்றான் ஒரு மாணவன். சுஜிக்கு கண்ணீர் தாரை தாரையாக கொட்ட, நான் அவளிடம், " ஏய் சுஜி, control yourself. please.. please" என்றேன் அவள் கைகளை பிடித்து கொண்டு.

யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. எனக்கு காலையில் நடந்த சம்பவம் மனதில் உதிக்க, என்னுள் உள்ள பயம் அதிகமாகியது. ஆசிரியர்கள் ஒரு பக்கம் தேட, மற்ற மாணவர்கள் இன்னொரு பக்கம் தேட. சில பெண் மாணவர்கள் சுஜிக்கு ஆறுதல் கூறினர்.

"மக்கள்ஸ், ரவீன் toiletல மாட்டிகிட்டான்." என்றான் ஒருவன்.

ரவீன் குளிக்கும்போது யாரோ அவனின் கழிவறை கதவை பூட்டிவிட்டான்.

ரவீனை காப்பாற்றி வெளியே கொண்டு வந்தபிறகு தான் சுஜிக்கு போன உயிர் திரும்பி வந்தது.

"யார் கதவை பூட்டியிருந்திருப்பார்கள்?" என்றேன் நான்.

"காலையில chilli sauce ஊத்தன புள்ளையா இருக்கும்!" என்று பாலா கிண்டலடித்தான்.

"உனக்கு கிண்டலடிக்க வேறு நேரமே கிடையாதா?" என்றான் ரவீன்.

"students, இது யாரோ செஞ்ச prank மாதிரி தான் தெரியுது. யாரா இருந்தாலும் please own up. " என்று எச்சரிக்கைவிட்டார் தலைமையாசிரியர்.

சுஜி என் காதுகளுக்கு மட்டும் கேட்கும் அளவில் என் அருகே வந்து, " இது பேய் செஞ்ச வேலையாதான் டி இருக்கும்!" என்றாள்.

இரவு உணவை முடித்து கொண்டு நாங்கள் உறங்க சென்றோம். சுஜி சாப்பிடவில்லை. ரவீன் பயப்படவில்லை. இருந்தாலும் யார் செய்த வேலையாக இருக்கும் என்ற குழப்பத்தில் இருந்தான். சுஜி தூங்காமல், தன் பையில் இருந்த முருகன் சாமி படத்தை எடுத்து வைத்து கொண்டு சாமிகும்பிட்டாள்.

எனக்கு தூக்கம் வரவில்லை. இரவு 1030 ஆகிவிட்டது. மற்ற மாணவிகள் சிலர் பேசி கொண்டிருந்தனர். சிலர் தலையணைகளை தூக்கி வீசி விளையாடினர். சிலர் ipodலில் பாட்டு கேட்டு கொண்டிருந்தனர். பக்கத்தில் அறையிலிருந்து வந்த ஷீலா மேடம் எங்கள் அறைக்குள் வந்து, "girls, டைம் ஆயிட்டு. lights off. sleep now." என்று சொல்லிவிட்டு அறையின் விளக்கை off செய்தார்.

என் கைப்பேசியை திறந்து பார்த்தேன். மணி நள்ளிரவு 12.....

(பயம் தொடரும்)

பாகம் 3

எனக்கு பயமா இருக்கு- பாகம் 1

(இது நிஜம் அல்ல, வெறும் கதை தான்..:))
college camping & hiking என்ற banner ஒன்றை பேருந்தில் கட்டினார் தலைமையாசிரியர். எங்கள் காலேஜ் மூன்றாவது ஆண்டு படிக்கும் 274 மாணவர்களும் இந்த முகாமில் கலந்து கொண்டனர். எங்கள் காலேஜிலிருந்து 103 கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு மலை இருக்கிறது.

அந்த மலை அடியில் முகாம் அமைக்கப்பட்டிருக்கும், அங்கு தான் நாங்கள் அனைவரும் சென்றோம். மாணவர்களும் மற்ற ஆசிரியர்களும் பேருந்துகளில் கிளம்பி சென்றோம். இப்படிப்பட்ட ஒரு முகாம் நடவடிக்கையை ஆண்டுதோறும் நடத்திவந்தனர் எங்கள் காலேஜ் நிறுவாகம்.


மாணவர்கள் ரொம்ப குஷியாகவும் உற்சாகமாகவும் பேருந்தில் ஆடி பாடி மகிழ்ந்தனர். ஆனால் சுஜி மட்டும் ரொம்ப சோகமாக இருந்தாள். " கத்தாழ கண்ணால" பாடலுக்கு ஆடி கொண்டிருந்தோம் நாங்கள்.
சுஜியை பார்த்தவுடன் அவள் அருகே சென்று 'என்ன ஆச்சு' என்பதுபோல் தலையை அசைத்து கேட்டேன் பாடலுக்கு ஆடி கொண்டே. அவள் பதில் சொல்லாமல் சன்னல் வழியே பார்த்து கொண்டிருந்தாள். ஆஹா பொண்ணு ரொம்ப சீரியஸா இருக்கு என்று மனம் சொல்ல அவள் அருகிலுள்ள இருக்கையில் உட்கார்ந்து அவள் முகத்தை என் பக்கம் திருப்பி,


"என்ன சுஜி, என்ன ஆச்சு? ஏன் ஒரே சோகம்ஸ்?" என்றேன் நான்.

"எனக்கு பயமா இருக்கு.." என்றாள் சுஜி.


அதற்குள் ஆடி கொண்டிருந்த பாலா பக்கத்தில் வந்துவிட்டான் ஆட்டத்தை நிறுத்தாமல்


"என்ன சுஜி, டல்லா இருக்கே? உன் ஆளு வேற பஸ்ல வறான்னு சோகமா.." என்று கலாய்த்துவிட்டு அவன் பாட்டுக்கு சென்றுவிட்டான்.


"ச்சே.. சரியான லூசு இவன்." என்று திட்டினாள் சுஜி.


"என்ன matterனு சொல்லுப்பா" என்றேன் நான்.


"எனக்கு பயமா இருக்கு. நம்ம போக போற இடத்த நினைச்சு பயமா இருக்கு." என்றாள் சுஜி கண்களில் பதற்றத்துடனும், கை நடுக்கத்துடனும்.


தொடர்ந்தாள் சுஜி, "ஆமாடி, என் வீட்டுபக்கத்து தெருவுல இரண்டு வருஷத்துக்கு முன்னாடி நம்ம காலேஜுல படிச்ச சீனியர் ஒருத்தி இருக்கா. அவ போயிட்டு வந்துருக்கா இந்த முகாமுக்கு. வந்து கதை கதையா சொன்னா, பயந்து போயிட்டேன். அங்க நைட்ல பேய் வருமாம்!!!! அவளோட போன ஒருத்தி கண்ணால பார்த்து இருக்கா பேய்ய. அதான் ரொம்ப பயமா இருக்கு. எனக்கு இதுக்கு வரவே பிடிக்கல. ஆனா நீங்கலாம் compel பண்ணதுனால வந்தேன்." என்று சொல்லவே அவள் முகம் வாடியது.


நான் பதில் சொல்வதற்குள் பாலா வந்து சுஜி பேசியதை அறைகுறையாக கேட்டுவிட்டு, " என்ன பேய்? யாரு பேய்? கோபால் கோபால்னு ஒரு painter இருக்கான். அவன் நாலு மணிக்கலாம் போயிடுவான்" என்று சந்திரமுகி வடிவேல் காமெடியை சொல்லி அவனே சிரித்து கொண்டான்.


சுஜி, பாலா செய்யும் லூசுத்தனம் பிடிக்காமல்,


"மரியாதை போயிடு. don't irritate me bala!" என்று கத்தினாள்.


பையன் பயந்து பறந்துபோய் கடைசி சீட்டில் உட்கார்ந்து கொண்டான்.


"ச்சே அப்படிலாம் ஒன்னும் இருக்காது டி. இந்த காலத்துல வந்து பேய்யாவது பிஸாசாவது! u don't worry. don't be scared! எங்களோடவே இருந்துகோ. that's all." என்று சொல்லி முடிப்பதற்குள் 'குட்டி பிசாஸே குட்டி பிசாஸே' பாடல் ஒலிக்க, நான் மற்றவர்களுடன் சேர்ந்து ஆட தொடங்கினேன். பயப்பட வேண்டும் என்று சுஜிக்கு ஆறுதல் சொன்னாலும், என் மனத்திற்குள் எதோ ஒரு சின்ன பயம், சஞ்சலம்!


பேருந்து இடத்தை வந்து அடைந்தது. மாணவர்கள் அனைவரும் திடலில் வரிசையாக நிற்க சொல்லி ஆசிரியர்கள் ஆர்டர் போட்டனர். பின்னர் ஒவ்வொரு மாணவருக்கும் instruction sheet கொடுக்கப்பட்டன.


மூன்று நாளுக்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் ஒரு முறை ஆசிரியர்கள் எங்களுக்கு நினைவுப்படுத்தினர்.



அங்கு ஒரு பெரிய கட்டடம் இருந்தது. அதில் கீழ் தளத்தில் ஆண்களுக்கு ஒதுக்குப்பட்ட படுக்கும் மற்றும் குளியல் அறை வசதிகள். பெண்களுக்கு இரண்டாவது மாடியில்.



ஆனால், அக்கட்டடத்தில் பெண்கள் குளியல் அறைகளோ கழிவறைகளோ கிடையாது. ஆக, கொஞ்ச தூரத்தில் இருந்த இன்னொரு கட்டடத்தில் தான் எங்களுக்குரிய குளியல் மற்றும் கழிவறை வசதிகள் இருந்தன. எனவே, எங்களுக்கு சொன்ன முதல் அறிவுரை



'கொஞ்ச மறைவில் அந்த கட்டடம் இருப்பதால், யாரும் தனியே அங்க செல்ல வேண்டாம். குறிப்பாக ராத்திரியில். முடிந்தால் இரண்டு பேராகவோ அல்லது கூட்டமாகவோ செல்லுங்கள்.'


பெண்கள் நாங்கள் எங்கள் இடத்தில் சென்று பெட்டிகளை வைத்தோம். எங்களில் ஒருத்தி, 'this is unfair. guys have everything. we need to go so far for the toilets. what kodumai is this?" என்ற ஆங்கிலத்தில் ஆதங்கத்தை கொட்ட.


இன்னொத்தி, " நிறுத்து உன் பீட்டர. இங்கிலீஷல் கொஞ்சம் மிச்சமீதி வை!" என்று கிண்டலடித்தாள்.


நான் பீட்டர் புள்ளைய பார்த்து, " ஓவரா சீன் போடாத. உனக்கு ஈசியா போச்சு. இதையே சாக்கா வச்சு, குளிக்காம இருந்துடுவே." என்று சொல்ல, பெண்கள் அனைவரும் கைதட்டி சிரித்தனர்.


சுஜி என் கிளாஸ் பெண்களோடு பேசிகொண்டு இருந்தாள். ஆனால் முகத்தில் பயம் கலந்த ஒரு சோகம்.


என் மனதில் "சரி முதல இவள சரிபடுத்தனும். இவ ஆளுகிட்ட சொன்னாதான் சரிவரும்..."


(பயம் தொடரும்)

May 13, 2008

சும்மா... அரட்டை!

வேலை வெட்டி இல்லாத நானும் என் தோழியும் அடிச்ச அரட்டைய பாருங்க. எனக்கும் என் தோழிக்கும் நடந்த online chat பேச்சு ...

நான்: hey hello, எப்படி இருக்கே?

தோழி: ya me fine. ஏய் காயு, am lookin for a part time job!

நான்: ஓ எனக்கு ஒரு வேலை தெரியும்டி


தோழி: oh என்னது

நான்: 2000 bucks per month, pubல நின்னு குடிச்சிட்டு ஆடுறவங்கள, கீழே விழாம பிடிச்சிக்கனும். contact டுபாகூர் company, துபாய், துபாய் main road, துபாய் bus stand


நான்: lol.............. hahahahahahahahhahahahahahhahahahahahhahahha


தோழி: hahhaha

தோழி: ஐயோ ஐயோ நக்கல்டி உனக்கு!

நான்: hahaha... அப்பரம் என்ன.. நான் என்னமோ employment exchange office வச்சு நடத்துற மாதிரி பேசுற.


தோழி: ஹாஹா.. சரி சரி விடு!


நான்: சரி சரி.. நீ எந்த மாதிரி வேலைய எதிர்பாக்குறே?

தோழி: hey முக்கியமான செய்தி


நான்: சொல்ல்லுலுலு!


தோழி: i highlighted my hair.veri veri obvious colour

நான்: hahah அட மக்கா.....!!!
ஏன்? எதுக்கு? (read in manirathnam's movie style)
என்ன கலரு?

தோழி: oh to light brown
actually its called copper. ஆனா, கொஞ்சம் கேவலமாதான் இருக்கு.

நான்: ஏன் கேவலமா இருக்கு?

தோழி: கடையில இருந்த அந்த லூசு லேடி சொன்னுச்சு it will be dark..ஆனா இப்ப பாத்தா அப்படி இல்ல. ரொம்ப பளிச்சுன்னு தெரியுதுடி.


நான்: haha... அதுக்கு உன் வீட்டுல செஞ்ச கார குழம்ப தலையில போட்டுருக்கலாம்.

தோழி: கண்ணாடில என் தலமுடிய பாத்தபிறகு ஷாக் ஆயிட்டேன்.

தோழி: நேத்திக்கு என்னால சரியாகூட தூங்க முடியல.

நான்: உங்க அம்மா என்ன சொன்னாங்க?

தோழி: மொத்தத்துல என் hairstyleலே மாறிபோச்சு. ஐயோ..

தோழி: நான் வீட்டுக்குள்ள வந்தேன்னா, என் அண்ணே வீட்ட விட்ட வெளிய போக சொல்லிடுச்சு.

நான்: hahahahahaha....


தோழி: என்னைய அடையாளம் தெரியல அதுக்கு. என்னைய பாத்து யாருன்னு கேட்டுச்சு?

நான்: உண்மையாவா?

தோழி: எங்க அப்பா அவ்வளவா கண்டுக்கல.. ஆனா எங்க அம்மா தான். ஏதோ என் முடிக்கு disease வந்த மாதிரி பாத்துக்கிட்டு இருக்காங்க.

நான்: haha...damn funny la u!

நான்: hahha... அப்பான்னா இப்படி தான் இருக்கனும்.


தோழி: எங்க அம்மா ரொம்ப என்னைய திட்டிட்டாங்க, ஏன் இப்படி பண்ணிட்டே அப்படி இப்படின்னு. அடுத்த வாரம் ஒரு கல்யாணம் இருக்காம். அதுக்கு போகும்போது நாலு பேரு கேட்டா நான் என்ன சொல்வேன் அப்படின்னு திட்டுறாங்க..



நான்:நாலு பேரு கேட்டாலும் சரி, அஞ்சு பேரு கேட்டாலும் சரி, இது chicago styleனு சொல்லு.

நான்: கவலைப்படாத, நாளைக்கு என் வீட்டு பக்கத்துல புதுசா ரோடு போடுறாங்க, அங்க நிறைய 'தார்' இருக்கும். நீ வந்து தலைய கொஞ்ச காட்டிட்டு போனா, திருப்பி கருப்பா போயிடும். hahaha...

தோழி: நான் கஷ்டத்துல இருக்கேன். உனக்கு கிண்டலா இருக்கா..

நான்: இல்ல சுண்டால இருக்கு. அடி போ டி. நீ இப்படி சிவாஜி படத்துல வர ரஜினி மாதிரி கலரு அடிச்சுகிட்டு வந்தா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்!

நான்: ஓகே, cool cool. don't worry. கொஞ்ச நாள்ல எல்லாம் சரியா போயிடும். அம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்க. இப்ப நான் போய் சாப்பிட போறேன். catch up with u later.

தோழி: போடி போடி, உனக்கு தெரிஞ்ச ஒரே வேலைய correctaa பண்ணு போ!! :)

...........

May 12, 2008

எனக்காக..

கால் நடக்க முடியாத என்னை
காலையில் எழுப்பி
குளிக்க வைத்து
காலை உணவு ஊட்டிவிட்டு
என்னுடன் பேசிகொண்டே

சமையல் வேலைகளை பார்த்து
என் பேர குழந்தைகளை
பள்ளிக்கு அனுப்பிவைக்கிறாள்
மதியம் 2 மணி நேரம் என்னை
உறங்கவைத்து

மாலையில் ஒரு மணி நேரம்
வீட்டு அருகே இருக்கும்
பூங்காவில் நடை பயிற்சி செய்ய
சக்கரநாற்காலியில் என்னை
அழைத்து செல்கிறாள்.

நான் சிந்திவிடும் உணவை
சுத்தம் செய்து
முகம் சுழிக்காமல்
என்னை கவனித்து கொள்கிறாள்
நான் பெறாத மகள்-
என் வீட்டு பணிப்பெண்!

May 6, 2008

காக்க காக்க- செம்ம காமெடி வீடியோ

இந்த வீடியோவை பார்த்து சிரித்து வயிறு புண்ணாகபோனால் நான் காரணம் இல்லேங்கோ!!

part 1


part 2


part 3

May 5, 2008

பச்ச தண்ணி with பறக்கும் 'குருவி' விஜய்

coffee with anu மாதிரி பச்ச தண்ணி with பறக்கும் 'குருவி' விஜய் பேட்டி தான் இந்த வார special. (இது சிரிப்பதற்காக மட்டும் தான். சீரியஸா எடுத்துக்காதீங்க..)

அவர் ஆபிஸுல ஒரு மணி நேரமா காத்திருந்தேன். அங்கு அவரது குழந்தைகளின் படம் எதுவும் இல்ல. இத பத்தி தான் முதல கேட்க வேண்டும் என்று நினைத்தேன். விஜய் உள்ளே நுழைந்தார்..



விஜய்: வணக்கம்-ண்ணா, ரொம்ப நேரமா wait பண்ணிக்கிட்டு இருந்தீங்களா..

நான்: ஐயோ விஜய், நான் அண்ணா இல்ல. உங்களுக்கு தங்கச்சி மாதிரி இருக்குற என்னை பாத்து அண்ணான்னு சொல்லுறீங்க.

விஜய்: ஓ சாரி சாரி, எப்ப பாத்தாலும் அண்ணா அண்ணா சொல்லி சொல்லி பழக்கமா போச்சு. (சிரித்து கொண்டே)

நான்: சரி சரி உங்க முதல் கேள்வி. அது என்ன உங்க ஆபிஸுல உங்க பிள்ளைங்க படமே காணும்.

விஜய்: (ரொம்ப நேரம் யோசிக்கிறார்)...

நான்: இப்ப நான் என்ன கேட்டேன்னு இவ்வளவு நேரமா யோசிக்கிறீங்க..
விஜய்: இளைய தளபதின்னா யோசிச்சு நிதானமா தான் பேசுவாருன்னு ஒரு image இருக்கு. அத தான் maintain பண்ணுறேன்.
நான்: ???? சரி நீங்க யோசிச்சு சொல்லி அனுப்புங்க.. நான் நாளைக்கு வரேன்.

விஜய்: நோ நோ.. வேட்.. சொல்லுறேன். பிள்ளைங்க படத்த வச்சா உங்கள மாதிரி வரவங்க அத எடுத்து பத்திரிக்கையில போட்டுவிடுவாங்க... அத தவிர்க்க தான் இப்படி.



நான்: அதுனால தான் நீங்க public functionக்குகூட உங்க பிள்ளைங்கள அழைச்சுட்டு வருது இல்லையோ..ம்ம்ம்.. ஆனா இப்போ chennai cricket matchல உங்க மகன் சஞ்சய தூக்கிகிட்டு ஆடுன photo எல்லாம் newspaperல பாத்தேனே?

விஜய்: ஓ அப்படியா..(என்று சொல்லி கொண்டே தன் அப்பாவுக்கு phone போட்டு விஷயத்தை சொன்னார்.)

நான்: என்ன விஜய் ஆச்சு?

விஜய்: ஒன்னுமில்ல அந்த படங்களை போட்ட பத்திரிக்கைக்காரங்களை கவனிக்க சொல்லிட்டேன்!!

நான்: ஐயோ...!! சரி சரி நம்ம அடுத்த கேள்விக்கு போயிடுவோம். நீங்க வித்தியாசமான படங்களில் நடிக்காதது ஏன்?

விஜய்: அட ஏங்க நீங்க வேற அடிப்பட்ட இடத்துல ஆசிட் ஊத்துறீங்க.. நான் வித்தியாசமா நடிச்ச படம் தான் 'அழகிய தமிழ் மகன்' ... என்ன பண்ணாங்க மக்கள். படத்த flop ஆகிட்டாங்க. கொஞ்சம் வேற மாதிரி நடிச்சா எங்க ஏத்துக்குறாங்க.

நான்: அழகிய தமிழ் மகன் படத்துல வித்தியாசமான நடிப்பா? எத சொல்லுறீங்க?

விஜய்: கொஞ்சம் mental disorder மாதிரி... அப்படிகூட சொல்லிட முடியாது... ஒரு மாதிரியான அபூர்வ சக்தி கொண்ட ஆள் மாதிரி நடிச்சேனே. அது தான். பைத்தியம் மாதிரி சேது விக்ரம் நடிச்சா ஓகே, லூசு மாதிரி காதல் கொண்டேன் தனுஷ் நடிச்சா ஓகே, எல்லாத்தை மறந்து பண்ண கஜினி சூர்யா ஓகே, ராம் ஜீவாவும் ஓகே... அதுவே நான் பண்ணா not ok!ன்னு சொல்லுறாங்க ஜனங்க. (ரொம்ப அமைதியாக இருந்தார்.) இதுல வேற double hero. வித்தியாசம் தானே இது.
நான்: உங்களுக்குள்ளே இவ்வளவு சோகமா?

விஜய்: சோகம் இல்ல வேகம். இந்த வேகம் தான் அடுத்த படத்த உடனே முடிக்க வச்சுது. குருவி பாத்தீங்களா?

நான்: பாத்தேங்க.. காலையில சன்னல் வழியா இரண்டு குருவிய பாத்தேன்.

விஜய்: அத சொல்லல்ல. என் படம் குருவிய பாத்தீங்களா?



நான்: பாத்தேன் பாத்தேன். especially அந்த poster stillகள் எல்லாம் ஏன் ஒன்னு முதல்வன் அர்ஜுன் மாதிரி சேத்துல விழுந்த மாதிரி, அப்பரம் கார் ரேசர் அஜித் மாதிரி? ஏன் இப்படி?

விஜய்: (அமைதியாகவே இருக்கிறார்) அது ஒன்னும் இல்லங்க... நான் செஞ்ச முந்திய படங்களைவிட இந்த படத்துல வித்தியாசமா இருக்கனும் அப்படின்னு யோசிச்சு நான், director, producer எல்லாரும் எடுத்து முடிவு தான் இது.

நான்:- ஒரு முக்கியமான கேள்வி. இந்த படத்துக்கு குருவின்னு ஏன் தலைப்பு வச்சீங்க?

விஜய்: ஏன் நல்லா இல்லையா?
நான்: இல்ல... இந்த படத்துக்கு 'தாவி'ன்னு வச்சுருக்கலாம்!!
விஜய்: தாவியா? ஏன்?

நான்: பாதி நேரம் நீங்க தாவி தாவி குதிச்சு ஓடிகிட்டுதான் இருக்கீங்க படத்துல.. அதான் சொன்னேன்.
(விஜய் மூன்று முறை தாவி தாவி தாவி என்று சொல்லி பாக்குறார். உடனே phone எடுத்து, அப்பாவுக்கு அழைக்கிறார்.)


விஜய்: அப்பா, 'தாவி' அப்படின்னு என் அடுத்த படத்துக்கு title வச்சா சூப்பரா இருக்கும். வேற யாரும் வைக்கறதுக்கு முன்னாடி இந்த தலைப்ப register பண்ணிடுங்க. (என்று சொல்லி முடிக்கிறார். மறுபடியும் என் பக்கம் திரும்பி..)

நான்: என்ன விஜய்... இப்படி சொன்னதுக்கா உடனே register பண்ணிட்டீங்க.

விஜய்:- actually இந்த குருவி தலைப்பும் இப்படி வந்ததுதான்!

நான்: (ஆச்சிரியத்தில் முழித்தேன்) நீங்களா திருந்தவே மாட்டீங்களா?
விஜய்: உங்களுக்கு குருவி படத்துல ரொம்ப பிடிச்சது?

நான்: உங்க கடமையுணர்வு!

விஜய்: கடமையுணர்வா? யூ மின் அப்பாவை போய் காப்பாத்துறது?

நான்: இல்லங்க.. திரிஷாவை வில்லன்கிட்டருந்து காப்பாத்தி அவங்கள இழுத்துகிட்டு ஓடுறீங்களே, கில்லி படத்திலிருந்து இதே கடமைதான். அத சொன்னேன்.

விஜய்:( லேசாக சிரிக்கிறார்)

நான்: விஜய், இந்த படத்துல நான் நடிச்சு இருந்திருக்கனும்.

விஜய்: நீங்களா? ஏன்? அவ்வளவு பிடிச்சிருக்கா படம்?

நான்: நோ அது இல்ல... நீங்களும் திரிஷாவும் ஓடுன ஓட்டத்துக்கு ஒரு 5 கிலோவாவது உடம்பு குறைஞ்சிருக்கும். நான் நடிச்சிருந்தா, நானும் ஓடி weight குறைச்சிருப்பேன்ல. ரொம்ப நாளா weight குறைக்க try பண்ணறேன். முடியல.
விஜய்:(லேசா முறைக்கிறார்)

நான்:(உஷாராக நான் அடுத்த கேள்விக்கு தாவினேன்.) விஜய், எப்படி இப்படி சூப்பரா ஆடுறீங்க? உங்க intro பாட்டுல விழுந்து விழுந்து ஆடினீங்க. அப்பரம் அந்த மொழ மொழன்னு பாட்டுல கால விசிறி மாதிரி அசைக்குறீங்க.. எப்படி?

விஜய்: எனக்கு நல்லா வரதே அது ஒன்னு தான். அதனால extra effort போட்டு டான்ஸ் விஷயத்த செய்வோம்.

நான்: அப்படியா விஷயம்..ம்ம்ம்.. சரி இந்த ரீமெக் படங்களை பத்தி என்ன நினைக்குறீங்க? நீங்க நடிப்பீங்களா?

விஜய்: (எப்போதும் போல உதடுகளை அவ்வளவாக திறக்காமல்) எனக்கு இத பத்தி சொல்ல ஒன்னும் இல்ல.

நான்: என்னங்க இப்படி சொல்லிட்டீங்க... சரி தளபதி படத்த ரீமெக் பண்ணுறாங்க. உங்களையும் அஜித்தையும் வச்சு பண்ணலாம்னு நினைச்சா நீங்க என்ன பண்ணுவீங்க?


விஜய்: (என்ன சொல்வது என்று புரியாமல் முழிக்கிறார்.) ரசிகர்கள் பொறுத்து தான் எல்லாம் இருக்கு


நான்:- இப்படி நடந்தா உங்க இரண்டு பேர் ரசிகர்கள் சமாதானமா போவாங்களா இல்ல பிரச்சனை ஏதாச்சு வருமா?

விஜய்: நம்ம அடுத்த கேள்விக்கு போலாமா? (சற்று கடுப்புடன்)

நான்: ஓகே ஒகே கூல் கூல்... நீங்க ஏன் multi hero subject படங்கள நடிக்க கூடாது. இப்ப ஹிந்தி படங்கள வர மாதிரி.. ஒரு kabhi kushi kabhi kham படம் மாதிரி நடிச்சா ரொம்ப வித்தியாசமா இருக்கும்ல.

விஜய்: வேற ஈசியான கேள்வி இருக்கா?
நான்: என்னது, நான் என்ன maths examaa நடத்துறேன். ஈசியா கேக்க.. பதில சொல்லுங்க.

( கொஞ்சம் விட்டா அழுதுவிடுவார் போல தெரிந்தது)

நான்: பரவாயில்ல, அடுத்த கேள்வி. body building, health இந்த விஷயத்த பத்தி என்ன நினைக்குறீங்க. இப்ப நம்ம சூர்யாவா பாருங்க. அடையளம் தெரியாத மாதிரி போயிட்டாரு.

விஜய்: health ரொம்ப முக்கியம்ங்க. நான்கூட குருவி படத்துல 2nd halfல ஒரு fightல சட்டைய கழட்டி fight பண்ணிருப்பேனே.. நல்லா இருந்துச்சுல?

(நான் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டேன்.)

விஜய்: ஏன் சிரிக்குறீங்க?

நான்: படத்துல அதான் டாப் காமெடி சீன்!! பொல்லாதவன் கிளைமெக்ஸுல வர தனுஷ் மாதிரி செம்ம காமெடிங்க அது!

விஜய்: என்னைய ரொம்ப கலாய்க்கிற நீ?

நான்: இதுக்கே இப்படின்னா, தமிழ்மணத்தில் வந்து பாருங்க, மானம் போகுது! சரி சரி, பீல் பண்ணாதீங்க.

( ரொம்ப பாவமான, பரிதாபமான நிலையில் இருந்தார்...)

நான்: விஜய், கடைசியா ஒரு கேள்வி.

விஜய்: இன்னுமா? சரி, சொல்லுங்க.


நான்: உங்க குருவி படம் முதல் நாள் அன்னிக்கு உங்க ரசிகர்கள் 101 குருவிகள பறக்கவிட்டாங்களாம்.


விஜய்: ஆமா, என்னோட தீவிர ரசிகர்கள் (என்றார் பெருமையுடன்)
நான்: உங்க அடுத்த படம் தலைப்பு 'சிங்கம்'ன்னு கேள்விப்பட்டேன். அப்போ release அன்னிக்கு என்னத்த விடுவாங்கண்ண்ண்ண்ணாணாணா!! அவ்வ்வ்வ்...

(சொல்லி முடிப்பதற்குள் விஜய்க்கு கோபம் வர, நான் இடத்த விட்டு ஒரே escape தான்! ஜூட்!!)