Oct 28, 2014

happy new year, கத்தி!

ஹாப்பி நியு யர்!

இந்த படம் பார்த்தால், புது வருடம் சந்தோஷம் வருமா-னு தெரியல.
ஆனா ஏண்டா இந்த வருட இப்படி ஒரு படத்த பார்த்தோம்-னு தோணும்.

வசூல் ராஜா படத்துல நாகேஷ் சொல்வாரே, உயிர உருவி எடுத்துட்டு போயிட்டானே!

அந்த மாதிரி ஹாப்பி நியூ யர் படம் பார்க்கும் போது, சிந்திக்கும் மூளையை கொஞ்சம் கொஞ்சம் உருவி எடுத்து வெளியே போட்டு விடும் படம்.

கதையில்லாமல் சுவாரஸ்சியமா போகும் எத்தனையோ படங்களை பார்த்து ரசித்து இருக்கேன். ஆனா, இந்த படம், யப்பா தாங்கல! சரி லாஜிக் தான் இல்ல, நடிப்பு, பாடல்கள், காமெடி இப்படி ஏதாச்சு இருந்தாகூட பரவாயில்ல!!

ம்கூம்....அத பத்தி எல்லாம் நான் யோசிக்கவே மாட்டேன் என அடம்பிடித்து இருக்கிறார் இயக்குனர் ஃவாரா கான் போலும்.




பெயர் பட்டியலில், முதல் பெயர் 'தீபிகா' என்ற போட்டது வரவேற்க தக்கது. ஆனால், அது மட்டும் போதுமா?

துபாய் ரொம்ப அழகாய் இருக்கு. அதை தவிர, வேறு எதுவும் என்னை கவரவில்லை.
     

happy new year  என்பதற்கு பதில்  happy வயிறு showing...அப்படினு தலைப்பு வச்சு இருக்கலாம். ஏனா பாதி நேரம் ஷாருக் கான் வயத்த காட்டுது! அப்பரம் சோனு சூட் வயித்த காட்டுது, மீச்ச நேரம் தீபிகா வயத்த காட்டுது.

படம் பார்த்ததில் ஒரே ஒரு சந்தோஷம்- gold classல் பார்த்து தான்!



அமரும் இருக்கையை படுக்கையாய் மாற்றி கொள்ளலாம். நல்லா தூங்கினேன் பாஸ்!!

******************************************************************

கத்தி

திருநீரை பூசி கொண்டு சாமி சிலை முன் ஆடி பாடும் அறிமுக காட்சி இல்ல.நான் உங்க சித்தப்பா, நீ என் பெரியப்பா என்று தேவையில்லாமல் உறவு முறை வைத்து பாடும் அறிமுக பாடல் இல்ல. முகத்தில் சந்தனத்தை அப்பி கொண்டு பேசும் பஞ் டயலாக் இல்லை. மொத்தத்தில் இது பழைய விஜய் படம் இல்ல. நண்பன், துப்பாக்கி போன்ற ரகத்தில் இது வேற மாதிரி படம். பழைய விஜயை பார்க்காமல் புதுசாய் பார்ப்பது போல் ஒரு விஜய் தெரிகிறார்.

அப்படினா....படம் சூப்பரா என்று கேட்பவர்களுக்கு.....

விஜயை ரசித்த அளவுக்கு என்னால் படத்தை ரசிக்க முடியவில்லை. இந்த வயசிலும் அழகாய் இருக்கிறார். அதைவிட அழகாய் ஆடுகிறார். ரொம்ப நல்லா நடித்து இருக்கிறார். ஆனா, படத்தில் ஒரு வகையில் விறுவிறுப்பு இல்லாதது போல் இருக்கிறது. காரணம், படத்தின் நீளம் என நினைக்கிறேன்.

யப்பா இயக்குனர்களே, போதும்ய்யா இந்த 3 மணி நேரம் படம் எல்லாம்! 2.5 மணி நேரத்துக்குள் கதை சொல்ல பாருங்க!!

பாடல்கள் அருமை. ஆனா, படத்தில் இடம்பெறும் போதும், கதைக்கு வெளியே நிக்குது பாடல்கள். selfie pulla பாடலின் நடனம் பெரிய ஏமாற்றம். horlicks bottleக்கு label சுத்தின மாதிரி, samantha தேவையில்லாம வந்து வந்து போகுது.

கத்தி, இன்னும் நல்லா தீட்டி இருக்கலாம்!


Sep 12, 2014

ஜஸ்ட் சும்மா (10/9/14)

விடுமுறை நாட்கள் என்பதால், இணையத்தில் ஏராளமான விஷயங்களை படிக்க நேரம் கிடைத்தது.


என்ன கொடுமை சார் இது என்று சொல்ல வைத்த ஒரு விஷயம் மேற்கொண்ட தளத்தில் இருக்கு.

வீட்டில் இருக்கும் பெண்களை கழுதைக்கு ஒப்பிட்டு ஒரு பாடப்புத்தகத்தில் இருக்குதாம்!

கொடுமை சார்!!

இதை படித்து வளரும் பிள்ளைகளுக்கு என்ன தான் கற்று கொடுக்கிறோம்?

'இனி பாட புத்தகத்தை படிக்க வேண்டாம்' னு சொல்ல தோணுது!

******************************************************************




எங்கள் தலைவி லட்சுமி மேனன் பாடும் பாடல்!

இப்பலாம் யார் பாடுறது வெவஸ்த்தையே இல்லேனு பேசுற உங்க mind-voice கேட்குது.

எங்க தலைவி பத்தி கிண்டல் பண்ணீங்க.....

(ek dho teen jaar ஒத்துகடி பாடலை போட்டு காட்டிடுவேன், சொல்லிட்டேன்!!)

***********************************************************

உலக அமைதிக்கான  படம் ஒன்று சமீபத்தில் பார்த்தேன். இதோ....

Displaying photo.JPG

Sep 10, 2014

டார்லிங் டம்மக்கு!

'உன் இன்மையை உணர்கிறேன்.'

இப்படிக்கு
நீச்சல் குளம் அருகே நிற்கும்
மிஸ்டர் அழகன்


என்று ஒரு சின்ன தாளில் கிறுக்கிவிட்டு, தாளை மடிக்கினான். நீச்சல் குளம் அருகே, பிள்ளைகள் விளையாடி கொண்டிருந்தனர். அவர்களில் ஊதா நிறம் சட்டை போட்டிருந்த குழந்தையை கூப்பிட்டான். அவள் பிஞ்சு கையில், எழுதிய கடிதத்தை மடக்கி ஒரு சாக்லெட்-யும் கொடுத்து, அவள் காதில் ஏதோ சொன்னான்.

அக்குழந்தையும் அவன் சொன்னதை கேட்டது. நீச்சல் குளம் முழுதும் சங்கீத் விழாவிற்காக  அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பலூன்கள் ஏராளமாய் கிடந்தன. கவனமாய் தாண்டிமெதுவாய் நடந்து சென்றது அக்குழந்தை. அழகாய் சென்று மருதாணி போட்டிருந்து கொண்டிருந்தவள் கையை இழுத்தது. அக்குழந்தையை தூக்கி முத்தமிட்டு என்ன என்று கேட்டாள் அமுதா. குழந்தை, கடிதத்தை கொடுத்துவிட்டு சிரித்தது. மறுபடியும் விளையாட ஓடிவிட்டது.


கடிதத்தை பிரித்து படித்தாள் அமுதா. ஆனால், அதனை கண்டு கொள்ளாமல்
தனது தோழிக்கு மருதாணி போடும் வேலையை தொடர்ந்தாள்.

மறுபடியும், இன்னொரு கடிதம் எழுதினான்-

'நான் சிகரெட் பிடிக்க போறேன்.' :))))

இப்படிக்கு
உன் இன்மையை தாங்காத
மிஸ்டர் அழகன்


மறுபடியும் குழந்தையை தூதுவிட்டான். குழந்தைக்கும் இந்த விளையாட்டு பிடித்தவளாய், ஓடி வந்து அமுதாவிடம் கடிதத்தை கொடுத்தது. அவள் பிரித்து படித்தாள். கடிதம் மேல் இருந்த பார்வை அவனை தேடும் பணியில் இறங்கியது.

"எங்க அமு போற?" என்று கையில் மருதாணியுடன் கேட்ட  மணப்பெண்ணிடம்,

அமுதா, "கொஞ்சம் நேரம் வேட் பண்ணு." என்று சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு மெதுவாய் நகர்ந்தாள்.

"ஹாலோ மிஸ்டர் அழகன், என்ன இது?" என்றாள் அமுதா அவன் நிற்கும் இடத்தை கண்டுபிடித்தவுடன். யாருமே இல்லாத ஒதுக்குபுரமான இடம். நிலா வெளிச்சம் மட்டும் ஒளி வீசியது. 'டார்லிங் டம்மக்கு' இசை அரங்கத்தை நிரப்பியது.

புன்னகையித்தபடி நின்று கொண்டிருந்த விஜய், "காதல் கடிதம்."

"கண்றாவி!! அது என்ன இன்மை இன்மை....ஏதோ சின்மயி மாதிரி....." என்றாள் அமுதா, புருவங்களை சுருக்கி. அவள் பேசும்போது ஆடிய தோடும், குலுங்கிய பச்சை வளையல்களையும் கண்கொட்டாமல் பார்த்தான் விஜய்.

"நான் உன் இன்மையை உணர்கிறேன்-னா, i miss youனு அர்த்தம்." என கூறி கொண்டே அவளை நோக்கி நடந்தான்.

வாய்விட்டு சிரித்த அமுதா, "என்ன உனக்கு அதுக்குள்ள இன்மை, சின்மயி?? இங்க தானே இருக்கோம்."

"செம்ம boring di. " எரிச்சலுடன் விஜய் பேசிகொண்டே பின்தலையை சொரிந்தான்.

அமுதா, "this is our best friend's sangeet. how can you say it's boring?"

வேண்டுமென்றே மறுபடியும், விஜய் சற்று சத்தமாய், "boring" என அழுத்தி சொன்னான்.

அருகே சென்று அமுதா, அவனது கையை செல்லமாய் அடித்தபடி, "stop it vijay!"

"உனக்கு தான் indian functionsனா பிடிக்காத. அப்பரம் ஏன் வந்த?" என்றாள் அமுதா, புருவங்களை ஏற்றியவாறு.

இன்னும் பக்கத்தில் வந்த விஜய், "indian functions பிடிக்காது. ஆனா, indian girls பிடிக்கும். especially பச்சை வளையல் போட்டு இருந்தா..." என்றவாறு அமுதாவின் வலது கையை பிடித்து, அவளை சுவரோடு சாய்த்தான்.

"hoi! பொண்ணு கைய பிடிச்சு இழுத்துட்டான்னா, பஞ்சாயத்த கூப்பிடுவா?" புன்னகையித்து கொண்டே சொன்னாள் அமுதா.

ஒரு செண்டிமீட்டர் புன்னகையை பதிலாய் வீசினான் விஜய்.

அமுதா, "அது என்ன? சிகரெட் பிடிக்க போறேன்? சொன்ன promise எல்லாம் மறந்து போச்சா?

விஜய், "ஒரு கவித சொல்லட்டா?
                 smoking hot-aa நீ இருக்கும்போது
                 smoking எனக்கெதுக்கு?"


சொல்லி முடித்துவிட்டு சிரித்தான்.

அமுதா, "அட பாருடா!! fb statusஆ போடு மச்சி. லைக்ஸ் பிச்சிக்கும்!" என அவனது தலைமுடியை கலைத்தாள்.

அவனது சட்டை collarயை சரி செய்தவாறு, "இந்த லெட்டர்லாம் எழுதி இம்சை பண்ணாம, whatsapp me. இப்ப phoneல charge ஏறி இருக்கும்னு நினைக்குறேன்." என்றவுடன் அவ்விடத்தை விட்டு காலி செய்தாள்.

மறுபடியும்,

' ஐ லவ் யூ' என்று ஒரு தாளில் எழுதி, அக்குழந்தையிடம் கொடுத்தான்.

குழந்தை கடிதத்தை வாங்கி கொண்டு,

"அப்பா, i am tired. நீங்களே அம்மாகிட்ட கொடுத்திடுங்கோ" என்றது.


Sep 9, 2014

பாப்கான் காதல்






என் முழுங்கை 
உன் கையை லேசாய் இடித்து
என் விரல் 
உன் உள்ளங்கையோடு
உரசி 
தரப்படும்
பாப்கான்-கள்
அனுபவிக்கும்
சந்தோஷத்தை,
அப்படியே தூங்கி
கொடுக்கப்படும் பாப்கான் பாக்கெட்-டுக்கு
தெரிவதில்லை.



                                                                                   

                                                                                 
                                                                                    cheesecake கொண்டு 


வந்தவரிடம் 
இரண்டு கரண்டிகள்
வேண்டாம்
ஒன்று போதும்
என்று சொல்லிவிட்டு
என்னை பார்த்து
வீசிய புன்னகையை
மறுபடியும்
ரசிப்பதற்காகவே,
ஆர்டர் செய்வேன்
இரண்டு கரண்டிகளோடு 
இன்னொரு cheesecake! 



எனக்கு பிடித்த குறும்படம்- 5


1) ஆசை

எனக்கு ரொம்ப பிடிச்சதே குற்றவாளியாய் நடித்தவரின் நடிப்பு தான். ஒரு பக்க கதையை 5 நிமிடங்களில் படித்து முடித்த மாதிரி ஒரு உணர்வு. பார்த்து ரசியுங்கள்!


2) whatsapp kadhal





நகைச்சுவை குறும்படம். ஹீரோ நண்பனாக நடித்தவர் அருமையாக நடித்து இருக்கிறார். ஒரு வரியில் சொல்லிவிடும் கதை தான், ஆனால், வசனங்களும், காட்சிகளும் மற்றும் எடிட்டரின் கைவண்ணமும் படத்தை ரசிக்க வைத்துள்ளது!

3) இப்படிக்கு





பார்த்த மூன்று படங்களிலே, எனக்கு பிடிச்சது இது தான். கடிதம் எழுதும் பழக்கம் எவ்வளவு அற்புதமானது என்பதை சொல்லும் படம். அது இப்ப கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சுகிட்டு வரத பாத்தா, பயமா இருக்கு. கவலையா இருக்கு.

நேத்து பெய்த மழைல, முளைத்த காளான் மாதிரி இந்த இமெயில்களும் whatsappகளும் கம்பீரமாய் வலம் வருது.

ஆனா, கடிதம், போஸ்ட் ஆபிஸ், போஸ்ட் மேன்- இவங்கலாம் என்றைக்குமே classic!!

படத்தை பார்த்தபிறகு, எனக்கு தோன்றியது இது தான்! நம்ம ஏன் ஒருத்தருக்கு கடிதம் எழுத கூடாதுன்னு?

Displaying image.jpeg


தோழிக்கு கடிதம் எழுதி போட்டுவிட்டேன். கடிதம் எழுதும் சந்தோஷத்தை மறுபடியும் கொடுத்த இக்குறும்படத்துக்கு நன்றி!!

Sep 7, 2014

தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்-29



இவர் யார்னு தெரியலையா? அட நல்லா பாருங்க!

காளிதாஸ் ஜெய்ராம் (நடிகர் ஜெய்ராமின் மகன்)

கண்கள் ஆயிரம் பேசுது சொல்ல வைக்கும் கண்கள் இவருக்கு!  அதவிட கொஞ்சம் நல்லாவே மிமிக்ரி செய்ய தெரிஞ்ச பையன் என்பதால் இன்றைய 'சைட்' இவர்!

'ஒரு பக்க கதை' என்ற தமிழ் படத்தில் நடிக்க போவதாக தகவல். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் படத்தின் இயக்குனர் கைவண்ணத்தில் காளிதாஸும் தமிழ் சினிமாவின் ஒரு பக்கமாக ஆக போகிறார்.

இவருக்காக நான் எழுதிய கவித கவித....

நீ காளிதாஸா?
இல்ல
என்னை
காலியாக்கும் தாஸா?






Aug 11, 2014

சதுரங்க ஜிகர்தண்டா

1) சதுரங்க வேட்டை

படம் ஆரம்பிச்ச 10 நிமிடத்திலயே படம் என்னை அவ்வளவு ஈர்த்துவிட்டது. கதைக்குள்ள நேராக சென்று உண்மையிலேயே திரைக்கதையில் வேட்டையாடி இருக்கிறார் இயக்குனர்.

intervalல் climax வச்சு, ஹீரோ மாட்டி கொள்கிறார். இதுக்கு அப்பரம் எப்படிதான் கதை போகும் என்ற சுவாரசியத்தை உண்டாக்கி ஒரு நல்ல படம் கொடுத்த இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும்.

நடித்த ஹீரோ நடராஜன் செம்மயா புகுந்து விளையாடி இருக்கிறார். ஹீரோயின் குரல் தான் அவருக்கும் பலம். நடித்தவர்கள் அனைவருமே டாப் கிளாஸ் நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.



வசனங்கள பத்தி சொல்லியே ஆகனும்.

- கோழி மேல பரிதாபம் பட்டால், சிக்கன் 65 சாப்பிட முடியாது.
- பொய் சொல்லும்போது, அதுல கொஞ்சம் உண்மையும் கலந்து சொல்லனும். அப்ப தான் அது உண்மை மாதிரி இருக்கும்.


இது போல படம் முழுதும் கைதட்டி வரவேற்கும் வசனங்கள் ஏராளம்.


ரொம்ப நாளைக்கு அப்பரம் ஒரு நல்ல தமிழ் படம்.

2) ஜிகர்தண்டா

இது கொரியன் படம் ஆச்சே! இது ஜப்பானிய படம் ஆச்சே என்று புலம்பி கொண்டிருப்பவர்களே,

விடுங்க பாஸ்! காபி அடிச்சது தப்போ சரியோ,

நல்லா காபி அடிச்சாங்களா! அத பார்ப்போம்.



நமக்கே தெரியும் உள்ளூர் சினிமாவை காபி அடிச்சு, மொக்கை வாங்கறதுக்கு பதிலா, ஏதோ ஒரு நல்ல உலக சினிமாவை பார்த்து, புதுசா கொடுத்து இருக்காங்க-னு தான் சொல்லனும்.

ரசிச்சு ரசிச்சு பார்த்த படங்களின் பட்டியலில் இது கண்டிப்பா இருக்கும். இசை, திரைக்கதை, வசனம், நடிப்பு என்று அனைத்துமே ஒரு நல்ல வெற்றி படத்துக்கு ஏற்றாற்போல் இருந்துச்சு.

climax மட்டும் இன்னும் நல்லா யோசிச்சு ( இல்லேன்னா இன்னும் ரெண்டும் மூனு கொரிய படங்கள பாத்து) எடுத்து இருந்திருக்கலாம்.



பரவாயில்ல, என் ஆளு விஜய் சேதுபதி வருவதால், அந்த குறை தெரியவில்லை.

செம்ம வேட்டைக்கு போயிட்டு, ஒரு பெரிய க்ளாஸ் கூல் ஜிகர்தண்டா குடிச்சு ஒரு உணர்வு, இந்த ஜாலியான ரெண்டு படங்கள் பார்த்த பிறகு.


(முக்கியமா இந்த ஜிகர்தண்டா நம்பிக்கை ஊட்டும் படம்?
எப்படி?

எப்படியா??

சித்தார்த் 'பாய்ஸ்' படத்துல அறிமுகம் ஆனபோது, லட்சுமி மேனன் மூணாவது படிச்சுகிட்டு இருந்த புள்ள.

இப்ப சொல்லுங்க?
நம்பிக்கை வருதா இல்லையா?)



Aug 4, 2014

தமிழ் சோறு போடுமா?



தமிழ் சோறு போடுமா?
அட போங்க! அது சோறு போடுமானு தெரியாது. ஆனா, கண்டிப்பா ஐயர்லாந்து கூட்டிட்டு போகும்!

என்னது ஐயர்லாந்தா???

இப்படி தான் எனக்கும் தூக்கி வாரி போட்டது முதன் முதலில் செய்தியைக் கேட்டபோது.

போன வருடம் கதை எழுதும் போட்டியில் கலந்து கொண்டேன். நான்கு மொழி பிரிவில், என் கதை தமிழ் பிரிவில் ஜெயித்தது. முதல் பரிசாக கொஞ்சம் பணமும், ஐயர்லாந்தில் நடந்த கதை எழுதும் பயிலரங்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.

வேலை, இம்சை, திங்கட்கிழம பத்தி கவலை, மீட்டிங் என எல்லாத்தையும் தூக்கி போட்டு விட்டு, புது புது அரத்தங்கள் ரகுமான் போல் ஜாலியான  ஒரு escape!!




ஒரு மாத விடுதி செலவு, சாப்பாட்டு செலவு, மத்த செலவுகள் அனைத்தும் sponsored!! கடவுள் இருக்கான்-டா!!

விடுதி என சொல்ல கூடாதுஇவ்விடத்தை. ஒரு அழகான வீடு. வீட்டிற்கு பின்னால், அருவி, கொஞ்சம் தொலைவில் கடல், மரம், ஆறு என இயற்கை நிறைந்த இடம். 15 நாடுகளிலிருந்து வந்திருந்தவர்கள் ஒன்றுகூடி பயிலரங்கில் கலந்து கொண்டோம்.

வழி நடத்தியவர்,  டேவிட். இவர் அமெரிக்காவை சேர்ந்தவர். பயிலரங்கு என கூட சொல்லமுடியாது. அப்படி ஒரு ஜாலி gathering. ஆங்கிலத்தில் நடந்த இந்த பயிலரங்கு காலையில் ஆரம்பித்தால் மதியம் 12 முடிந்துவிடும். டேவிட், கதை எழுதும் உத்திகள் பலவற்றை சொல்லி தந்தார்.

மதிய உணவுக்கு பின்னர், நமக்கு பிடித்ததை செய்யலாம்.

மலை ஏறுதல், massage, அருவிக்கு போகலாம், அது ஒரு சின்ன கிராமம் என்பதால், நடக்க வசதியான இடங்கள் நிறைய உண்டு.

 நான் தங்கியிருந்த அறை.



 படுக்கைக்கு மேல் அடிக்கி வைக்கப்பட்ட புத்தகங்கள்.

 தினமும் கூடும் இடம். இது தான் meeting இடம். (முதல் சில நாட்கள் எனக்கு ஆனந்த கண்ணீரே வந்துருச்சு. வேலையிட மீட்டிங் அறையை நினைத்து பார்த்து. )

 ஐயர்லாந்தில் இரவு 9 மணிக்கு தான் பொழுது சாயும். இரவு உணவு முடிந்து, அனைவரும் ஒன்றாக படம் பார்ப்போம்.


(கீழ் படம்: நாங்கள் தங்கியிருந்து வீட்டிற்கு முன்னால் இருந்த வீடு.)



 இரவு உணவு உண்ணும்போது, பாடல் ஆடல் என ஐயர்லாந்து கலாச்சாரத்தை பத்தி நிறைய தெரிந்து கொண்டோம்.

ஒரு மாதம், இதோ ஒரு வேறு உலகத்துக்கு போயிட்டு வந்த மாதிரி ஒரு உணர்வு. இந்த வலைப்பக்கம் ஆரம்பிக்கும்போது, கதை கவிதை என எதுவுமே எழுத தெரியாது. இப்ப 8 வருஷம் ஆச்சு வலைப்பூ ஆரம்பிச்சு. ஏதோ கொஞ்சம் கதை, கவித எழுத தைரியம் வந்து இருக்கு. நீங்க சொல்லும் கருத்துகள் வச்சு தான் எனக்கு ஊக்கமே வந்துச்சு.

வாசகர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். ஐயர்லாந்து கனவு எல்லாம் நினைச்சு கூட பார்க்காத ஒன்று. கடவுள், பெத்தவங்க செஞ்ச புண்ணியம், அப்பரம் வாசகர்களாகிய உங்க ஊக்கம் தான் காரணம். தனஷ் சொல்வதுபோல், "இது என் கனவு திவ்யா!" என்று இப்ப நினைச்சாலும் கண்கள் சந்தோஷ கண்ணீர் வடிக்கும்.

 கோடி நன்றிகள்!

தமிழ் சோறு போடுமா?
கண்டிப்பா போடும். ஏனா ஐயர்லாந்தில் பல நாள் தயிர் சாதம்கூட கிடைத்தது!

Jul 14, 2014

தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள்- 28 (உலக கிண்ணம் ஸ்பேஷல்)

எல்லாருமே அழகான ஆட்டக்காரர்களை ரசித்து கொண்டிருந்த வேளையில், யாராச்சும் ஆட்டம் நடுவே ஓடிகொண்டிருந்த காற்பந்து நடுவர்களை 'சைட்' அடித்தீர்களா?

ஆம், என்றால்....
மச்சி, நீ என் நண்பண்டா!!

"விளையாட்டு வீரர்கள் எத்தனையோ பேர் இருக்கும்போது, நான் ஏன் நடுவர்களை பார்த்தேன்," 
அப்படினு விண்ணை தாண்டி வருவாயா கார்த்திக் ஜெசிய பார்த்து கேட்ட கேள்விய நானே எனக்குள்ள கேட்டுகிட்டேன்.

போட்டி போடும் ரெண்டு அணிகள் பந்தை சுற்றி ஓடறதுள்ள ஒரு நியாயம் இருக்கு. ஆனா, பாவம் மவராசன்-கள்! இவங்க ஏன் ஓடனும்?

அதனால தான், இவங்க மேல தனி மரியாதையும் பின்னர் 'அதுவும்'.

3) ben williams- australia

இவர் 'இவன் சிரிச்சா போச்சு' type. சிரித்த முகம் கொண்டவங்கள எப்படி
சைட் அடிக்காம இருக்க முடியும்??


சிறப்பு அம்சம்: புன்சிரிப்பு


2) sandro ricci- brazil


 'பார்த்துகிட்ட இருக்காலம்' type இவர். கடவுள் செதுக்கி இருக்கார்!

சிறப்பு அம்சம்: கண்














1) nicola rizzoli- italy


  

எட்டாவது அதிசயத்தை பாருங்கோ!

சிறப்பு அம்சம்: முகம்


இவங்க எல்லாரையும் ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுவேன். 
இவங்களவிட இன்னொரு விஷயத்த ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுவேன்.
கோதாவரி, வீட்டுக்கு நடுவே கோட்ட போடு என்று விசு போல், கோடு கிழிக்கும் நடுவர்களின் ஸ்டைலை ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுவேன்!!

  


Jul 7, 2014

அழுதால், தப்பா மச்சி?




ஆட்டம் ஆரம்பிக்கும்போது, அழுகை
ஆட்டம் நடுவே, அழுகை.
ஆட்டம் முடிக்கும்போது, அழுகை.
தேசிய கீதம் பாடும்போது, அழுகை.

இப்படி அழுதால், எப்படி உலக கிண்ணத்தை ஜெயிக்க முடியும் என பெரிய கேள்வி அம்பு பிரேசில் நாட்டு ஆட்டக்காரர்களின் பாய்ந்து உள்ளது.

நிறத்தனும். எல்லாத்தையும் நிறுத்தனும்-னு சொல்ற மாதிரி இந்த அழுகையையும் நிறுத்த சொல்லுது இவ்வுலகம். எனக்கு என்னமோ இது பெரிய விஷயமா தெரியல.

நீங்களே யோசிச்சு பாருங்க! 22 வயசுல, மிகப் பெரிய பொறுப்பை உங்க தல மேல வச்சா எப்படி இருப்பீங்க? கொஞ்சம்  கூட்டநெரிசலில் நடந்து போனாவே, எனக்கெல்லாம் கை கால் நடுங்கும். அப்படி இருக்கும்போது, சின்ன பசங்கள உலக அரங்கில் இறக்கிவிட்டு, விளையாட சொன்னால், அது மிக பெரிய போராட்டம் தான்.

மன அழுத்தம் தாங்க முடியாமல், அறையில் ஒளிந்து கொண்டு நம்ம அழுதால் தப்பில்லை. ஆனா, எல்லாருக்கும் முன் அவங்க அழுதால் தப்பா, மச்சி?

அழுகை ஒன்னும் கோழைத்தனம் இல்லை.
அழுகை ஒரு வகையான வீரம் தான்!

 நேமார் மீது உள்ள கண்மூடித்தனமான காதலினால், இத சொல்லல. ஜெயிக்க வேண்டும் என பசியால் அழுபவனுக்கு, அந்த அழுகை வீரம் தான்! பிறக்கும்போது அழுகிறோம், இறக்கும்போது அழுகிறோம், இதுக்கு நடுவே கொஞ்சம் அழுகிறோம்- இத தப்பு-னு சொல்ற உலகத்த புரிஞ்சிக்க முடியல.

அழுகை இயற்கையான ஒரு விஷயம். கொஞ்சம் அழுதுட்டு, ஒரு குட்டி தூக்கம் போட்டுட்டு எழுந்து பாருங்க. எல்லாமே சரியா போன மாதிரி இருக்கும். அழுகைக்கு அப்படி ஒரு சக்தி உண்டு. அதனால, இந்த பசங்கள அழ வேண்டாம்-னு சொல்றது, முட்டாள்தனம்!

22 வயசுல உலகமே திரும்பி பார்க்குற அளவுக்கு அவங்க இருக்காங்க! 22 வயசுல, நம்ம எத கிழிச்சோம்-னு பார்த்தா, வூட்டுல உள்ள calendar தேதிய கூட கிழிச்சு இருக்க மாட்டோம்!

சமீபத்தில், பயிற்சியின் போது, பிரேசில் நாட்டை சேர்ந்த ஊனமுற்ற சிறுவன் ஒருவன் எழுதிய கடிதம், ஆட்டக்காரர்கள் அனைவரையும் நெகிழ வைத்தது!

மனித நேயம் இருக்கிறது என்பதற்கு ஒரே சாட்சி- கண்ணீர் தான்.

இந்த அழுகை, தப்பு என்றால்......

இருந்துட்டு போகட்டும்!

Jul 4, 2014

நீயும் நானும் வேலு நாய்க்கர்!

நாயகன் படத்துல ஒரு சூப்பர் சீன் வரும். ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி கமல்ஹாசனை தேடி வந்து சொந்த கதை சோக கதையல்லாம் சொல்வாங்க! அத கேட்டுட்டு கமல் சொல்வார், "சரி இதலாம் ஏன் என் கிட்ட சொல்றீங்க?"

அதுக்கு, பக்கத்துல நிக்கும் ஜனகராஜ், கமல் கையைப் பிடித்து, "நாய்க்கரே, இனி அப்படி தான்" என்பார்.


கிட்டதட்ட நம்ம அனைவரும் ஒரு வகையில் வேலு நாய்க்கர் தான்! என்னிக்கு, இந்த SMARTPHONE நம்மகிட்ட கதை கதையா பேச ஆரம்பிச்சுதோ அன்று முதல் ஒரு மாதிரி ரவுடியா தான் வாழ்ந்துகிட்டு இருக்கிறோம்.

எதையோ தேடி, எதையோ தொலைத்த கதையாக வாழ்க்கை போகுது.

whatsapp messageகளுக்கு அடிமை
இதுல நமக்கு என்ன பெருமை?

இரும்பினால், ஒரு whatsapp group.தும்பினால் ஒரு whatsapp group,

என எதுக்கு எடுத்தாலும், செய்திகளை 24 மணி நேரமும் சொல்லி கொண்டே இருப்பதால், பைத்தியம் போல் இருக்கிறோம்.

இந்த smartphone வைத்து இருப்பது fast food உணவை தினமும் திண்பதுபோல். சுவையாக தெரிவது பின்னர், வாந்தி எடுக்க காரணமாக அமையும்.

மண்டை வலி, குண்டை வலி, தொண்டை வலி வருவது தான் மிச்சம். whatsapp இல்லமால் தொடர்ந்தாற்போல் நாலு நாளைக்கு நிம்மதியா இருக்க முடியல! என்னடா வாழ்க்கை இது!


'உனக்கு என்ன திடீர் அக்கறை?' என்று நீங்க கேட்பது எனக்கு கேட்குது.

'நானே பாதிக்கபட்டேன். நேரடியாக பாதிக்கப்பட்டேன்.'

வேலு நாய்க்கருக்கு கடைசில ஏற்பட்ட நிலைமை நமக்கும் ஏற்பட்டுவிடுமோ-னு ஒரு அச்சம். கையில் நாம் எடுத்தது, நம்மை அழிக்கும் சக்தியாகி விடுமோ-னு பயமா இருக்கு.

May 30, 2014

ஜஸ்ட் சும்மா (30/5/14)

டிடிக்கு கல்யாணமாம்!! காலையில எழுந்த டிவிட்டர் பக்கம் போனால், பசங்கெல்லாம் நெஞ்சு வலிக்கு மருத்துவமனை போகும் செய்தி இருக்கு.

So here I hav an answer atlst. Al ur blessings r vry important to us. Weddin wil b durin end of june. This is him

May 29, 2014

எனக்கு பிடித்த குறும்படம்-4

இந்த வாரம் கிட்டதட்ட 30 குறும்படங்களாவது பார்த்து இருப்பேன். முழு நீள படங்களை காட்டிலும் இக்குறும்படங்கள் உண்மையான நிறைவை தருகிறது. அப்படி தந்த நிறைவான படங்கள் சில இங்கே.

1) கசப்பு இனிப்பு


ஒரே இடத்தில் நடக்கும் வெவ்வேறு காதல்கள். இப்படி ஒரு வரியில் சொல்லகூடிய கதையாக இருந்தாலும், வசனங்களும், காட்சி அமைப்பும், முக்கியமா சொல்லனும்னா நடிகர்களின் அபார நடிப்பும் டாப் கிளாஸ்!!


2) the first kiss




காதல் கதைக்கான சரியான தலைப்பாக இருந்தாலும், படத்தின் கதை வேறு. ரொம்ப ரொம்ப யதார்த்தமான கதை. இம்மாதிரியான படங்களில் நடிகர்களின் தேர்வு ரொம்ப முக்கியம். அதை சரியாக செய்து ஒரு நிறைவான படத்தை தந்துள்ளது இயக்குனருக்கு பாராட்டுகள்!!

3) வியூகம்



படம் ( 1.43-17.46)

முகநூல்...அதாங்க இந்த கிரேககககம் புடிச்ச facebook! அத பத்தி ஒரு கதை. நான் பார்த்த குறும்படங்களிலே ஒரு செம்ம 'rich feel' கொடுத்த படம் இது தான். ஹீரோவாக நடித்தவருக்கு பெரிய எதிர்காலம் உண்டு.


(அப்படியே நம்ம 'தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள்' பட்டியலிலும் இடம்பெற வாய்ப்பு உண்டு)

May 26, 2014

இசை கேட்டா அழுகை வருமா, மச்சி? எனக்கு வந்துச்சு, மச்சி!

வலது கண் சிமிட்டினால் காதல் வருமா, இடது கண் சிமிட்டினால் காதல் வருமா என்ற வகையில் மொக்கையான தலைப்பில் சில நேரங்களில் நிகழ்ச்சி நடத்தும் நீயா நானா, நேற்று நடத்திய 1.5 மணி இசை விருந்து மெய்சிலிர்க்க வைத்து விட்டது. (london star nite இல்லங்க.)

கோபி இங்கிலீஷில் சொல்ல போனால், "no words to say" எனலாம். ரொம்ப நாளைக்கு அப்பரம் ரசித்து பார்த்த நீயா நானா நிகழ்ச்சி.

இந்திய பண்பாட்டில் இருக்கும் இசையும், இசை கருவிகளும் அதை செய்பவர்களை பற்றியும் ரொம்ப ஜாலியாக போன நிகழ்ச்சி. 

இசை கலைஞர்கள் பலரும் கஷ்டப்பட்டு கொண்டிருப்பதை லேசாக சுட்டிக்காட்டி விட்டு போனது இன்னொரு சிறப்பு. அதை வைத்து அழுகாச்சி நிகழ்ச்சி செய்யாமல் போனதற்கு, மிக பெரிய நன்றி விஜய் டீவி!
நாதஸ்வரம் வாசித்த தம்பதியினரே, அருமை அருமை! மெய்சிலிர்த்து, கண்கள் கலங்கியது எனக்கு! 

இசை வேறு பாடல் வேறு என சொன்ன கருத்தும் ரொம்ப யதார்த்தமாய் இருந்தது. பாடல் என்று வரும்போது, கேட்பவரின் 'freedom of interpretation' அடங்கி போகும். ஆனால், இசை என்பது தானே ஒருவர் ஓவியம் வரைவது போல, அவர் தம் கற்பனைக்கு ஏற்றாற்போல அமைத்து கொள்ளலாம போன்ற கருத்துகள் அனைத்தும் எனக்கு புதிதாய் தெரிந்தது. 

அப்படியே ஒரு இசை விருந்துக்கு சென்று வந்ததை போல் ஓர் உணர்வு. ஒவ்வொரு முறையும் இசை கலைஞர்கள் வாசிக்கும்போது, என்னை அறியாமலேயே ஒரு வித சந்தோஷம் கண்ணீரை வரவழைத்தது. 

சில விஷயங்களையும், சில மக்களையும் பார்க்கும்போது தான் தோன்றும், "இவங்க நல்லா இருக்கனும். இதவிட பெரிய இடத்துக்கு போகனும்' அப்படி 1.5 மணி நேரமாய் தோன்றியது! 



May 24, 2014

தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள்-27

ipl seasonல இந்த போஸ்ட் போடாம இருக்க முடியுமா!

1) ஜேடேஜா (சென்னை சூப்பர் கிங்ஸ்)

அந்த முறுக்கு மீசை தாங்கோ!




2) ஷீக்கர் டவான் (சன் ரைசர்ஸ்)

அதே அதே மீசை....

May 23, 2014

எனக்கு பிடித்த குறும்படம்-3

1) மானே தேனே பொன்மானே



படத்தின் தூண்கள்- நடிப்பு, இசை, ஒளிப்பதிவு.
ரொம்ப இயல்பா நடித்தவர்களும், பிண்ணனி இசையும் மிக அருமை. ஹீரோ ஹீரோயின் வரும் காட்சிகளில் எல்லாம் இருளை வைத்து மாயம் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்!


2) பிறை தேடும் இரவு.



தலைப்பை பார்த்தவுடன் ஏதோ காதல் கதை என நினைத்தேன். ஆனா, படத்தை பார்த்தபிறகு புரிந்தது, இத்தலைப்பை தவிர வேறு எதுவும் பொருத்தமாக இருந்திருக்காது என்று.

இப்படத்தில் பிடித்த விஷயங்கள்- பிண்ணனி இசை, இயல்பான நடிப்பு. கதை ரொம்ப simple. ஆனா திரைக்கதையும், படம் எடுத்த விதமும் ரசிக்கும் வண்ணம் இருந்தது. ஹீரோவைவிட நண்பனாய் நடித்தவர் இன்னும் ரொம்ப இயல்பாய் நடித்து இருக்கிறார். காவலர் சொல்லும் சில வசனங்கள் எல்லாம் ரொம்ப இயல்பாய் அமைந்திருந்தது!

இயக்குனருக்கு, சபாஷ்!!

3) மீசை



மிரள வைக்கும் படம் என்றால் இதுவாக தான் இருக்க முடியும். மிச்சத்தை நீங்களே பார்த்து தெரிஞ்சுக்குங்க!!


May 20, 2014

இது தாலி இல்ல, தங்க பதக்கம். (சிறுகதை)

இனி ஒரு நிமிடம்கூட நித்யாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கை பையிலிருந்த கைபேசியை எடுத்தாள். உடனே கௌதமிற்கு whatsapp message அனுப்பிவிட்டு தூக்கி எறிந்தாள் கைபேசியை.


நித்யா: this is not happening. I can't take this anymore!
கண்ணாடி முன்னாடி நின்று தன்னை பார்த்தாள். கைபேசி அலறியது. கௌதமிடமிருந்து பதில் வந்தது.

கௌதம்: என்ன ஆச்சு?

நித்யா: என்னால முடியல. i can’t even walk properly.

நித்யாவிற்கும் கௌதமிற்கும் இன்று கல்யாணம்.

இருவரின் குடும்பங்களின் மூன்றாம் தலைமுறையில் நடக்கும் முதல் கல்யாணம். ஆக, தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், தெருவில் நடந்தவன், வழுக்கி விழுந்தவன், ஊட்டிக்கு போனவன், ஊட்டிவிட்டவன் என்று பாதி ஊரையே அழைத்து இருந்தனர் வீட்டின் பெரியவர்கள். 

ஜோடா அக்மர் படத்தின் செட்-களை தூக்கி சாப்பிடும் அளவுக்கு கல்யாண மண்டபம் அலங்காரத்தால் ஜொலித்தது. அழைப்பு அட்டையில் முகூர்த்தம் 7.30-8.30pm என்று தெளிவாக அச்சிடப்பட்டது. அதன்படி விருந்தினர் கூட்டம் தாமதிக்காமல் சரியாக இரவு மணி 8.25க்கு வர ஆரம்பித்தனர்.


கௌதமின் குறுந்தகவல்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தது.

கௌதம்: கொஞ்சம் adjust பண்ணிக்கோ.

நித்யா: this saree and accessories are literally killing me. Why the hell must I wear my great-grandma’s ottiyaanam? And I can’t even walk properly! Arggh!

கௌதம்: கொஞ்சம் நேரத்துக்கு தானே...

நித்யா: முடியாது! நீ மட்டும் வசதியா ஜிப்பாவுல இருக்க? தமிழ் கலச்சாரமா அது?

கௌதம்: சாரி! அடுத்த தடவ கல்யாணம் பண்ணிக்கும்போது, தமிழ் கலாச்சாரத்த காப்பாத்துறேன்!

நித்யா:
J J J you are crazy!! நானும் அடுத்த தடவ, netball shortsல கல்யாணம் பண்ணிப்பேன்.

கௌதம்: கொஞ்சம் decentஆ....??

நித்யா: ஒகே,
basketball shorts then.

கௌதம்: hahaha you are going crazy! Love you nitya!

********************************************************************

நமக்கு ஒரு நல்ல விஷயம் நடக்க போவது என்றால் மனதார வாழ்த்தி உண்மையாக ஆசிர்வாதம் செய்பவர்கள் குடும்ப உறுப்பினர்களை சேர்த்து மொத்தமாக 10 பேராக தான் இருக்க முடியும். மற்றவர்கள் எல்லாம் உணவுக்காகவும், வாங்கிய புதிய தங்க வளையலை காட்டவும், சைட் அடிக்கவும், தனது facebook profile pictureக்கு புகைப்படம் எடுத்து கொள்ளவும் தான் வந்து இருப்பார்கள்.

கல்யாண மண்டப மேடையில் பூஜைகள் ஆரம்பித்தன. இரண்டு மணி நேரமாக புகைக்கு முன்னால் உட்கார்ந்து இருக்க முடியவில்லை நித்யாவுக்கு. முதல் இரண்டு வரிசையில் உட்கார்ந்திருந்தவர்களுக்கும் அதே கதி தான்!! ஆர்வத்துடன் வந்த நித்யாவின் வெள்ளைக்கார தோழிகள் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார்கள். தேவைக்கு அதிகமான புகைப்படங்களை எடுத்து முடித்த தோழிகள் ‘நாங்க கிளம்புறோம்’ என்று கை சைகயினால் நித்யாவுக்கு தகவல் சொன்னார்கள். தலையை மட்டும் ஆட்டினாள் நித்யா. பாவம்! இறும்பி கொண்டே சென்றனர் தோழிகள்.

தமிழ் கலாச்சாரப்படி நடக்கும் கல்யாணத்தில் புரியாத மொழியில் ஐயர் பூஜைகளை செய்து கொண்டிருந்தார். 30 பேருக்கு மேல் நிற்க முடியாத மண்டப மேடையில் 65 பேர் நின்றனர். மேடையில் யார் இருக்க வேண்டும் என்று இரு குடும்பங்களில் இடையே ஒரு போராட்டமே நடந்தது.

புகை மூட்டம் நித்யாவின் கண்களை குளமாக்கியது. நித்யா, தனது முழங்கையால் கௌதமின் கையை லேசாக இடித்தாள். Marathon பந்தயத்தில் ஓடுபவனைப் போல் வேர்த்து கொட்டிய கௌதம், அவள் பக்கம் திரும்பி பார்த்து ‘என்ன’ என்பதுபோல் கண்களால் கேட்டான். அவனது காது அருகே சென்ற நித்யா, “ this smoke is killing me. I need goggles.”
நித்யாவின் ‘ஷாருக் கான்’, ரோஜா படத்தின் தீவிரவாதி வாஸிம் கானை நேரில் பார்த்ததுபோல், கண்கள் ஆச்சிரியத்தில் விரிந்தன.

சிட்டி ரோபா போல ஒவ்வொரு பகுதியையும் செய்து அவளது உடம்பில் ஒட்டி வைத்ததுபோல் உணர்ந்தாள் நித்யா. தனது கழுத்தை மெதுவாய் திருப்பி சுற்றும் முற்றும் பார்த்தாள். தனது அம்மாவை தேடினாள் நித்யா. மேடையில் எங்குமே இல்லை.

விருந்தினர்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் தேடியது நித்யாவின் கண்கள். அங்கும் இல்லை. தேடிய காரணத்தை கௌதமிடம் சொல்லலாம் என்று முடிவு எடுத்தவள், மறுபடியும் அவனது கையை இடிக்க முற்பட்ட போது, காதுகளை பிளக்கும் அளவுக்கு ஒரு இரும்பல் சத்தம்!

அந்த கூட்ட நேரிசலிலும் முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த ஒரு பாட்டியின் இரும்பல் சத்தம் அனைவரையும் திகைக்க வைத்தது. விசு படங்களில் தோன்றும் பாட்டிபோல்,  இரும்பலுடன் போராடி கொண்டிருந்தார் அந்த பாட்டி.

நித்யாவின் அம்மா மேடைக்கு வந்தார். முகம் சோர்வாக காணப்பட்டது. குழப்பமாகவும் தோன்றியது அவரது முகம். என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என நித்யாவின் மனம் புரண்டது. நித்யாவும், அம்மாவிடம் ஒன்று சொல்ல வேண்டும் என துடித்து கொண்டிருந்தாள். முதல் வரிசையில் இருந்த பாட்டியையும் காணவில்லை. ஒருவேளை பாட்டிக்கு ஏதோ ஆச்சோ என்று நினைத்து அவளின் மனம் தேவையில்லா சிந்தனைகளால் பந்தாடப்பட்டது.

பக்கத்தில் நின்று கொண்டிருந்த அம்மாவின் கால்களை தட்டினாள் நித்யா.
குனிந்தார் அவர். அவளின் அம்மா, “என்ன?” என்று கேட்டதும் அவரின் குரல் தழுதழுத்தது.

“என்ன ஆச்சு? ஏன் கண்ணு கலங்குது?” என வினாவினாள் நித்யா.

நித்யாவின் அம்மா, “ஆஸ்திரேலியா சித்தி....” என்று இழுத்தார். கண்ணீர் தாழை தாழையாக ஊற்றியது.

“என்ன ஆச்சு ஆஸ்திரேலியா சித்திக்கு?” மனம் படபடத்தது நித்யாவுக்கு. இருதயம் நின்று போவதுபோல் உணர்ந்தாள்.

நித்யாவின் அம்மா கண்ணீரை துடைத்து கொண்டு, “ ஆஸ்திரேலியா சித்திக்குFlight delay ஆச்சு. அவ இல்லாம இந்த கல்யாணம் நடக்குது....”

பெருமூச்சுவிட்ட நித்யா சுற்றி பார்த்தாள். அங்கு நின்று கொண்டிருந்த 65 பேர்களில் பாதி கூட்டம்-அவளது அம்மாவின் 5 தம்பிகளும், 4 தங்கைகளும் அவர்களதும் குடும்பங்களும். இதில் ஆஸ்திரேலியா சித்தி வரவில்லை என்ற கவலை! ஐயோ ராமா, இந்த கூட்டத்துல ஏன் என்னைய சேர்த்த என்று கவுண்டமணி போல் கத்த வேண்டும் என்று இருந்தது நித்யாவுக்கு.

தான் சொல்ல நினைப்பதை அம்மாவிடம் சொல்ல முடியாமல் தவித்த நித்யா, கௌதம் பக்கம் மறுபடியும் திரும்பினாள். ஐயர் சொல்லும் சில மந்திரங்களை மாப்பிள்ளையும் சேர்ந்து சொல்ல வேண்டும். அதனை பாதி புரியாமல் உளறிகொண்டிருந்த கௌதமை பார்த்ததும் சிரிப்பை அடக்க முடியவில்லை நித்யாவுக்கு.

*******************************************************************************************************

கெட்டி மேளம் கொட்ட, ஆலங்கட்டி மழை கார் ஜன்னலில் விழுவதுபோல், விழுந்த அரிசியின் நடுவே, தாலி கட்டப்பட்டது. பிரசவ வலியில் 12 மணி நேரம் துடித்து, இரட்டை குழந்தைகளை பெற்று எடுத்த தாய் போல் கௌதமின் முகம் வாடியிருந்தது. அந்த வாடிய முகத்தில் சின்னதாய் ஒரு புன்னகை. அதை கண்ட நித்யாவும் புன்னகையித்தாள்.

இத்தனை போராட்டங்களுக்கு இடையே நடந்த சம்பவத்தை எண்ணி பார்த்த நித்யா, கழுத்தில் தொங்கிய தாலியை தொட்டாள்.....
இது தாலி இல்ல. தங்க பதக்கம்!


காலில் விழுந்து கும்பிட்டு ஆசிர்வாதம் பெறும் பழக்கத்தை எவன் கண்டுபிடித்தான் என்று மனதில் திட்டிகொண்டே 23வது முறையாக குனிந்து எழுந்தாள் நித்யா. வாழ்த்து கூறவும், மொய் பணம் கொடுக்கவும் காத்திருந்த வரிசையை சற்று எட்டி பார்த்தாள். ரஜினி படத்துக்கு முதல் நாள் டிக்கெட் வாங்கும் வரிசைபோல் நீண்டு இருந்தது. அவளுக்கு கால் வலி ஆரம்பித்தது. தப்பித்து போகவும் முடியவில்லை.

அங்கிருந்த தொலைக்காட்சி பெட்டியில் உணவு பரிமாறும் இடத்திலிருந்து நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. அங்கேயும் அவ்வளவு கூட்டம். சாப்பாட்டுக்கு போகாமல் மண்டப்பத்தில் நின்று கூட்டத்தின் மேல் ஒரு தனி மரியாதை வந்தது நித்யாவுக்கு. வந்திருந்த சொந்தாக்கார்கள் பலர் யார் என்று தெரியாமலேயே சிரித்து முகத்துடன் புகைப்படத்துக்கு போஸ் கொடுக்க வேண்டிய அவநிலையில் நித்யாவும் கௌதமும் நின்றனர். அதில் சிலர், நித்யாவை பிறந்த போது பார்த்ததாக கூறிவிட்டு, அவளது கன்னங்களை கிள்ளியதோடு அப்படியே பாதி make upயையும் அள்ளிவிட்டு சென்றனர்.

முதல் வரிசையிலிருந்து காணமல் போன பாட்டி மொய் கொடுக்க வந்தார். கட்டிப் பிடித்தார் நித்யாவை! ‘ஐயோ!’ என்று கத்த கூட முடியாமல் சமாளித்தார் நித்யா. ரொம்ப நேரமாய் அம்மாவிடம் சொல்ல நினைத்தது, அப்போது குத்தியது- சேலையில் உடைத்திருந்த இரண்டு safety pinகள் நறுக்கென்று குத்தியது நித்யாவின் இடுப்பில்.

பாட்டி, “நித்யா, அடிக்கடி மாப்பிள்ளைய இடிச்சுகிட்டு இருந்தே. கள்ளி! இப்படியே அன்னோனியமா இருக்கனும்” என்றார்.

நித்யா, “அன்னோனியமாவா? நான் இங்க அந்நியன் மாதிரி குமறிக்கிட்டு இருக்கேன் பாட்டி” என்று சொல்ல வேண்டும் என அவளின் மனம் கதறியது.

இருந்தாலும் சமாளித்த நித்யா, "சாப்பிட்டு போங்க பாட்டி!"

பாட்டி, "சாப்பிட்டு தான் மேல வந்தேன்." என்றவர் மறுபடியும் கன்னத்தை கிள்ளினார். 

‘என்னைய தாத்தாவா ஆக்கிடு.
என்னைய அத்தையா ஆக்கிடு.
என்னைய பாட்டியா ஆக்கிடு.’ என்று பல அநாகீரிய வாழ்த்துகளை செவிசாய்த்தனர் புதுமண தம்பிதியினர்.

நித்யாவுக்கு பசி வயிற்றை கிள்ளியது.

அதிகாலை மணி 1 என கடிகாரம் காட்டியது. 75 safety pinகளையும் கழற்றிபோட்டுவிட்டு சோபாவில் விழுந்தாள் நித்யா. தனது முட்டியில் போட்டிருந்த knee guardயை அவிழ்த்தாள். அதனைப் பார்த்த கௌதம், “எய் நிஜமா, knee guard போட்டு இருந்தீயா?” என்று சொல்லிவிட்டு சிரித்தான்.

மண்டபத்தில் உணவு தீர்ந்துவிட்டது. நித்யாவுக்கும் கௌதமுக்கு பழத்தை மட்டும் கொடுத்து புது வீட்டுக்கு அனுப்பினார்கள். சாப்பாடு கிடைக்காத கோபத்திலும் இருந்த நித்யா, “பேசாத நீ!! I hate everyone. I hate the relatives. I hate the safety pins. I hate you.” என கத்தினாள்.

தொடர்ந்தாள் நித்யா, “அவன் அவன் எப்படி தான் ரெண்டு மூனு கல்யாணம் பண்றானோ? இனி சத்தியமா கல்யாணம் பண்ண மாட்டேன்.” என்று கோபங்களைக் கொட்டிவிட்டு, facebookல் குவிந்திருந்த 147 notificationsகளை பார்த்தாள்.

கௌதம், “நான் இன்னொரு தடவ பண்ணிப்பேன்.”

முறைத்தாள் நித்யா.

கௌதம், “பொண்ணு நீயா இருந்தா, இன்னொரு தடவ பண்ணிப்பேன்.” என கூறிவிட்டு புன்னகையித்தான்.

facebookல் இருந்த அவளது பார்வை அவன்மீது பாய்ந்தது. அவளும் பதில் புன்னகை வீசி, கௌதம் கன்னத்தில் ‘இச்’ வைத்தாள்.

அவளது கைபேசி மணி எழுப்பியது. அதனைப் பார்த்த நித்யா கதற ஆரம்பித்தாள். ஆஸ்திரேலியா சித்தியிடமிருந்து குறுந்தகவல்.

சித்தி: எய் புது பொண்ணு! நாங்க இப்ப தான் வந்து இறங்கி இருக்கோம். உன் வீட்டுக்கு இன்னும் கொஞ்சம் நேரத்துல வந்துடுவோம்.

“என்னால முடியாது! என்னால முடியாது! உன்னைய அப்பவே flight ticket 2 மணிக்கு எடுக்க சொன்னேன்.” என்றாள் நித்யா. அன்று அதிகாலை 5 மணிக்கு இருவரும் honeymoon போக இருந்தனர்.

“இந்த சொந்தக்காரன் விருந்து. மருந்து வேணாம்னு தான் கல்யாணம் முடிஞ்ச கையோட honeymoon கிளம்புறோம்!” என்று நெற்றியைச் சொரிந்தாள். சித்தி பேச ஆரம்பித்தார் என்றால், அவ்வளவு தான்.

கௌதம், “கல்யாணம் முடிஞ்சு வரத்துக்கு ஒரு மணி ஆகிடும். அதனால தான் 5 மணிக்கு டிக்கெட் புக் பண்ணேன். உன் சித்தி வருவாங்கனு எனக்கு எப்படி தெரியும்!” என்று சொன்னதும் நித்யா உடனே,

why are you arguing now?”

யாரு நானு?” என்று கௌதம் பதில் அளித்தபோது வீட்டின் வாசல் மணி ஒலித்தது.

 “oh shit!! சரி போய் கதவ தொற” என்றாள் நித்யா.
அவசரத்தில் இருவருக்குமே என்ன செய்வது என்று தெரியவில்லை. கௌதம், மேசையிலிருந்து champagne பாட்டில்களை அள்ளிகொண்டு குப்பை தொட்டியில் போட்டான்.

“கௌதம், ப்லீஸ் கோ!!!” என்றாள்.

“அவங்க உன் சித்தி. நீ போ!” என்றான்.

வாசல் மணி மறுபடியும் ஒலித்தது.

நித்யா, “உன் சித்தினு, பிரிச்சு பேசுற?”

கௌதம், “ஐயோ! உன் சித்திய உன் சித்தினு சொல்லாம. என் சித்தினா சொல்ல முடியும்??"

இம்முறை வாசல் மணி மூன்று முறை தொடர்ந்தாற்போல் அடித்தது.

மேசையில் கிடந்த செய்தித்தாளை அவன்மீது கோபமாய் வீசிவிட்டு கதவை திறக்க சென்றாள் நித்யா. கதவு ஓட்டை வழி பார்த்தாள் நித்யா.

அங்கு சித்திக்கு பதிலாய், வேறு ஒருவர் நின்று கொண்டிருந்தார். குழம்பினாள் நித்யா. கதவை திறந்தாள்.

சிவப்பு சட்டையில் இருந்தவர், “coming from pizza delivery. 2 large chicken pizzas.”

*****************************************************************************
நள்ளிரவு.

உணவு சாப்பிட கீழே இறங்கிய போது, கடைசியாய் சாப்பிட்டு வெளியே வந்த ஒருவன், “சாப்பாடு எல்லாம் முடிஞ்சுட்டு.” என சொல்லிவிட்டு ஏப்பம்விட்டு சென்றான்.

அப்போது உடனே பிட்சாவுக்கு ஃபோன் போட்டான் கௌதம்!


*முற்றும்*