Showing posts with label ஆதங்கம். Show all posts
Showing posts with label ஆதங்கம். Show all posts

Apr 28, 2015

கண்ண தொறக்கனும் சாமி.......

சமீபத்தில் கோயிலுக்கு சென்றபோது நான் பார்த்த சில விஷயங்கள் ரொம்ப நெருடலா இருந்துச்சு. இப்படி தான் நம்ம சாமி கும்பிடுறோமா என யோசிக்கும்போது சிரிப்பா இருக்கு!



1) சாமி கும்பிடாதே, பிச்சை எடு!நான் சின்ன வயதில் (ரெண்டு, மூணு வயதில்), மெழுகுவத்தி எரிவதை பார்த்தால், உடனே கை கூப்பி 'சாமி கும்பிடுறேன்' என கண்களை மூடி கொள்வேன். உண்மையிலேயே சாமியிடம் எப்படி கும்பிடுவது, என்ன செய்ய வேண்டும் என பெற்றோர்கள் அவர்களது பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்கிறார்களா என தெரிவதில்லை.

சில நேரங்களில், பெற்றோர்களுக்கே உண்மையான வழிபாடு முறைகள் தெரிவதில்லை. 


போன வாரம், கோயிலுக்கு சென்றபோது நான் பார்த்த ஒரு சம்பவம். ஒரு அம்மா, தனது பிள்ளையிடம் (அவனுக்கு கிட்டதட்ட 11 அல்லது 12 வயது இருக்கும்)..."சரியா கும்பிடு" என்றார். 

பிள்ளை: எப்படி மா கும்பிடுறது?

அம்மா: நான் நல்லா இருக்கனும். பரிட்சையில நல்லா செய்யனும். நல்லா மார்க் வாங்கனும். அடுத்த வருஷம் நல்ல ஸ்கூலுக்கு போகனும்-னு கும்பிடு டா!


நமது பிள்ளைகளிடம் ஏன் பிச்சை எடுக்க கத்து கொடுக்குறோம்?? 


2) இது நம்ம ஏரியா, உள்ள வராதே!

இத பத்தி ஏற்கனவே ஒரு தடவ சொல்லி இருக்கேனு நினைக்குறேன். கோயில்களில் ஏன் 'tourists are not allowed beyond this point" என்ற அறிவிப்பு பலுகை இருக்குனு தெரியல. போன வாரம் சென்ற கோயிலில் இல்லை. ஆனா, சில கோயில் வாசலிலே இருக்கு. சில கோயிலில் சாமி சிலை வரைக்கும் போகலாமா அதுக்கு அப்பரம் போக கூடாதாம்.


நம்ம தானே 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' னு பெருமையா மார்தட்டி கொள்கிறோம்.
எம்மதமும் சம்மதம் என்றும் நம்ம தானே சொல்லிகிட்டு இருக்கோம். அப்பரம் ஏன் இந்த பாகுபாடு.
உன் தண்ணி என் தண்ணி, உன் காற்று என் காற்று, உன் சாமி என் சாமி-னு சொல்லி ஏன் இந்த பிரிவினை?? எனக்கு புரியல.


- "ஓ அவங்க சுத்தமா குளிச்சிட்டு வந்து இருக்காங்களானு தெரியாது... அதனால உள்ள விட முடியாது?" அப்படினு ஒரு ஐயர் என்னிடம் பதில் சொன்னார்.  (வழிபடும் போகும் இந்துக்கள் அனைவரும் குளிச்சுட்டு வந்தாங்கனு உங்களால சொல்ல முடியுமா?)-


"ஓ....அவங்க கால் தெரியுற மாதிரி காற்சட்டை போட்டு வருவாங்க...." (நம்ம பொண்ணுக்கு முழு முதுகு தெரியுற மாதிரி சேலை அணிந்து வந்தால் தப்பு இல்ல??)

- "ஓ....அவங்க கண்டபடி புகைப்படம் எடுப்பாங்க." (யோவ், நம்ம ஆளுங்க, முழு படமே ரிலிஸ் பண்ணற அளவுக்கு கைபேசியில் வீடியோ எடுக்கலாம்....அது தப்பு இல்ல??)




3) முடி இல்ல, முடிவு எடுத்தேன். 

ரெண்டு  பக்தர்கள். 55 வயது ஆண்ட்டிஸ். தனது மகளின் திருமண பற்றி 'அனுமான்' சாமி பக்கத்துல நின்னு பேசிகிட்டு இருந்தாங்க.....இருந்துச்சுங்க!



ஆண்ட்டி 1: என் பொண்ணுக்கு மாப்பிள்ள பார்த்தோம்.

ஆண்ட்டி 2: from?

ஆண்ட்டி 1: பையன் கனடாவுல இருக்கான் (குரலில் சற்று பெருமை)

ஆண்ட்டி 2: முடிவு ஆச்சா?

ஆண்ட்டி 1: no, we rejected it.

ஆண்ட்டி 2: oh no. why?

ஆண்ட்டி 1: பையனுக்கு முடி இல்ல.

********************************************************************************
 கண்ண தொறக்கனும் சாமி இவங்க எல்லாரும் ஏன் இப்படி இருக்காங்க???
நல்ல புத்தியை கொடு சாமி. கண்ண சீக்கிரம் தொறங்க சாமி! 

Mar 15, 2013

என்னது பாலா அடிச்சாரா?

பரதேசி! (யோவ்..உங்கள திட்டலையா? படத்த பெயர சொன்னேன்)

பரதேசி படத்தின் teaser ஒன்று வெளியாகி, அதில் நடிப்பவர்களை போட்டு அடிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.


 

இதற்கு பலவித எதிர்ப்புகள்! முக்கியமா இந்த டிவிட்டர் பக்கமா போனால்...சக நடிகர்கள்/இயக்குனர்கள் காட்டிய எதிர்ப்புகள்:

 Actor : Siddharth"A video of a director hitting his actors in the name of reality is going viral.Can we please have one of actors beating the hell out of him?"

 Director : Balaji Mohan"Paradesi 'reality' teaser sets a bad example to young future filmmakers who consider Bala sir as an idol. This isnt the way to make films."

 Actor-producer : Udhayanidhi Stalin"I decided not 2 watch the reality muvi! I shud b building temples for directors Rajesh S.R.Prabhakaran sir!"

எனக்கு சிரிப்பு தான் வந்தது இவர்களின் எதிர்ப்புகளை பார்த்து! பாலாவுக்கு தெரியாதா- இது விளம்பர யுத்தி என்று?

இதுக்கு தானே ஆசைப்பாட்டாய் குமாரா? என்பதுபோல் எதிர்வினை விளம்பர தானே இன்றைய 'விஸ்வரூப' வெற்றியை நிர்ணயிக்கின்றது!!  தப்போ சரியோ? படம் நல்லாயிருக்குதுனு நிறைய பேர் சொல்றாங்க! இயக்குனர் பாலாவின் ரசிகை நான் என்று சொல்ல முடியாது. வித்தியாசமான படங்களை கொடுத்து இருக்கிறார்! படம் ஓடினால் சரி! ஆனால், இவரிடம் பிடிக்காத விஷயம்- அழகானவர்களை அழுக்காய் அலங்காரம் செய்வது!

http://filmy365.com/tamil/files/2012/11/Atharva-02.jpg             http://moviegalleri.net/wp-content/gallery/paradesi-movie-stills/bala_in_paradesi_movie_stills_adharvaa_murali_6dba4ba.jpg

அதர்வா எவ்வளவு அழகு!! ச்சே போங்க பாஸ்...மனசே சரியில்லை! அடுத்து, விஜய் இவரிடம் படம் பண்ண போவதாய் செய்தி!!! தல!!!!!!!!!! இது நமக்கு தேவையா தல? நம்மகிட்ட இருக்கும் ஒரே அம்சம்- அந்த அழகான சிரிப்பு தான்! பார்த்து சுதார்ச்சிக்கோ தல!
             
                           https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUGlBeZ6AfqWZ0fsOwfe9sfFBFOExgjnq0vPMy81C7_qDPsvTQgEu8cV3UsTZOhRM9pNKFnTQeYEysjSzwv_kiFqFtt26GBXJ627g43WbE7sjFuhyphenhyphenwupHamYYypxHlJy-B_x6BK-Q5mBzV/s1600/smile.jpg


சரி பாலா அடிச்சதுக்கே இப்படினா? சின்ன வயசுல, நம்ம அப்பாக்கள் நம்மள தூக்கிபோட்டு மிதிச்சு அடி இடி மாதிரி விழுந்த கதையை reality teaser போட்டால், பூகம்பமே கிளம்புமா பாஸ்?? உஷ்ஷ்ஷ்ஷ....யப்பா!!!

Mar 14, 2013

office- அப்பளம்னா எப்படி இருக்கனும்?

என்னைய மாதிரி ஒரு sales executive இது தான் அப்பளம்னா எப்படி வியாபாரம் ஆகும்? அப்பளம்னா எப்படி இருக்கனும்? கும்பலா, பொன்நிறமா, சும்மா வின்ன்ன்ன்ன்னு ஒரு பொடுப்போட இருக்க வேண்டாம்!- கவுண்டர் அப்பளம் விக்கும் காமெடியை பார்த்தபிறகு, எனக்கு ஆபிஸ் விஷயங்கள் ஞாபகத்திற்கு வந்துவிட்டது.

http://sphotos-a.xx.fbcdn.net/hphotos-snc6/205376_317819421640663_1052643186_n.jpg

ஆபிஸ் போன பிறகு தான் 'விடுகதையா இந்த வாழ்க்கை' என்று ரஜினி ரத்த கறையோடு போகும் வலி புரிந்தது. கொடுமைகள் ஒருபுரம் நடந்தாலும், அதிலும் சில காமெடிகள் நடக்கும்.

மீட்டிங் என்னும் காமெடி கொடுமை: கோபம் வர மாதிரி காமெடி செய்வதில் ஆபிஸ் ஆட்களை அடித்து கொள்ள ஆள் இல்லை! வீட்டிற்கு போகும் நேரத்தில் மீட்டிங். வாழ்க்கைக்கு ஒரு நாளும் தேவையில்லாத விஷயத்தை பத்தி பேச ஒரு மீட்டிங்.
http://i.ytimg.com/vi/0nlTPkSC8gI/2.jpg
பட்ட பெயர் வைக்கும் காமெடிகள். மண்டையன், வழுக்க மண்டையன், 'சின்ன வீடு', பைத்தியக்காரி, ' 7 ஸ்டார் கிங்' போன்றவை என் ஆபிஸில் நாங்க வைத்து கொள்ளும் 'code word' பட்ட பெயர்கள்.  ஆபிஸ் security officer ஒருத்தர் இருக்கிறார். அவருக்கு இந்த பெரிய ஆபிசர்களின் நற்பெயரை வாங்க வேண்டும் என்பதற்காக என்ன வேண்டும் என்றாலும் செய்வார். ஒரு நாள், ஏதோ, சாதாரண விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள். அதை வளைத்து வளைத்து ஃபோட்டோ எடுத்து அனைவருக்கும்,



"these photos are for your memorial." என்று அனுப்பிவிட்டார். அன்று முதல் இவர் காமெடி தான் ஒரு வாரம் ஓடியது.

பெரிய ஆபிசர் ஒருத்தர் இருக்கிறார். அவர் மூச்சுக்கு மூணூறு தடவ 'chief security officer' என்ற வார்த்தையை பயன்படுத்தி விட்டு தான் அடுத்த வாக்கியத்தை தொடருவார்! ஐப்பா கேட்டு கேட்டு....ரீலு அந்துபோச்சு டா சாமி!

இன்று காலையில் விஜய் டிவியின் புதிய தொடரை பார்த்துவிட்டு, இந்த போஸ்ட் எழுதவேண்டும் என்று தோன்றியது.


அடுத்த போஸ்ட்...ம்ம்.... தற்போது சைட் அடிக்கப்பட்டுகொண்டிருப்பவர்களுக்கு நிறைய வாய்ப்பு இருக்குனு நினைக்குறேன்!!

Mar 2, 2013

கல்யாணமெல்லாம் இப்ப என்ன ரேஞ்ல போய்கிட்டு இருக்கு தெரியுமா?



 

படிப்பெல்லாம் இப்ப என்ன ரேஞ்ல போய்கிட்டு இருக்கு தெரியுமா? என்று கவுண்டர் சொன்னது தான் ஞாபகத்திற்கு வருது?

ஏன்? என்று நீங்கள் கேட்பது புரியது!

ஒரு காலத்தில் 21வது பிறந்தநாள் கொண்டாட்டம் சீசன் இருந்துச்சு. இப்ப அவ அவ வயசாகி கல்யாணம் சீசன் வந்துருச்சு!! யப்பா சாமி!!! எம்புட்டு செலவு?

கல்யாணமெல்லாம் இப்ப என்ன ரேஞ்ல போய்கிட்டு இருக்கு தெரியுமா?

ஒவ்வொரு கல்யாணத்திற்கு சென்று மொய் பணம் ஈயாய் போனது தான் மிச்சம்! அந்த காலத்தில் கல்யாண விழா ஒரு தடவையோடு முடிந்துவிடும்.

இப்போது,

1)நிச்சயதார்த்தம்
2)bacherolette party
3)சங்கீத்
4)வளையல் விழா

5)கல்யாணம்
6)reception

சில நேரங்களில் யாருக்கு கல்யாணம், இது என்ன function என்ன நடக்குது எங்க போறோம், அப்படினு யோசிச்சு குழம்பி போன சமயம் எல்லாம் உண்டு.

"உனக்கு என்ன வந்துச்சு. அவங்களுக்கு பணம் இருக்கு. செலவு பண்றாங்க?" என்று நீங்கள் கேட்பது புரியது. பல் இருப்பவன் பக்கோடா சாப்பிடட்டும்! பக்கத்துல நிக்குறவனை ஏன் வாங்கி தர சொல்றீங்க?

சமீபத்தில் ஒரு தோழி (நெருங்கிய தோழி அல்ல) கல்யாணத்துக்கு கூப்பிட்டாள்..இல்ல அது receptionனு நினைக்குறேன்...wait wait..அதுவா..ம்ம்... சரி ஏதோ ஒன்னு! அதுக்கு கூப்பிட்டால், போக முடியவில்லை. அதற்கு பெரிய சண்டை! அட பாவிகளா! என்ன கொடுமையா இது!

இந்த facebook பல விஷயங்களில் உதவியாக இருந்தாலும், சில நேரங்களில் பெரும் தொல்லையாக உள்ளது. 'event' என்று ஒன்றை ஆரம்பித்து அவர்கள் பட்டியலில் இருக்கும் 2034 பேரையும் கூப்பிடுவார்கள். சும்மா என்றோ ஒரு முறை 'ஹாய்' சொன்னவர்களெல்லாம் கூப்பிட்டால், என்ன பா நியாயம் இது! சரி, அவர்களை ஏன் நீ 'friend'ஆக சேர்த்துகிட்ட, அப்படினு கேட்குறீங்களா?

சரி தான் சரி தான்! என்னைய உதைக்கனும்!:((



வீட்டில் கச்சிதமாய் கொண்டாடும் பழக்கம் இருந்தாலும் பரவாயில்ல!! ஆ..ஊனா...ஹோட்டல்! மாளிகை! இப்போதைய trend- கப்பலில் கொண்டாடுவது! சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்தேன். அதில் சங்கீத் விழா கொண்டாடப்பட்டது (இது வடஇந்திய கலாச்சாரம், எப்போது நம்ம கடன் வாங்கி கொண்டோம்னு தெரியல)

அந்த விழாவில் மாப்பிள்ளை வீட்டார் 'flashmob' செய்தார்கள். அதவாது திடீரென்று நின்னு ஆடுவார்கள். பார்க்கும்போது எனக்கு 'குபீர்' சிரிப்பு தான் வந்துச்சு. நீங்க, சந்தோஷமா செய்யுங்க! தப்பில்ல. ஆனால், ஆடம்பர செலவை குறைத்து கொண்டால் நல்லா இருக்கும். அதற்கு பதில், ஏழைகளுக்கு உதவலாமே....(ஓ அது, நடிகர் நடிகைகள் பிறந்த நாள் அன்று செய்வாங்களா?)
http://farm4.static.flickr.com/3257/3140568438_b0628505e0.jpg?v=0
அப்பரம் அந்த நிகழ்ச்சில பேசிய பாட்டி சொன்னது, "மாப்பிள்ளையும் பொண்ணும் சந்தோஷமா இருக்கனும். ஆசைக்கு ஒன்னு. ஆஸ்திக்கு ஒன்னு பெத்துக்கனும். ஏனா...என்ன தான் இருந்தாலும், பையன் வேணும். அப்ப தான் சொத்து விட்டு போகாது..." என்றார்.

ஹாஹாஹாஹாஹா.... பாட்டி போங்க பாட்டி! கோபம் வர மாதிரி காமெடி பண்ணாதீங்க!!

Feb 19, 2013

"நான் இப்ப என்ன செய்ய?"- தம்பி மாதவனின் தங்கச்சி

நம்ம சமுதாயத்துல......ஐயோ அது பெரிய வார்த்தையோ?
சரி விடுங்க...
நம்மில் பல பேர் இன்னும் தேவையற்ற விழாக்களை கொண்டாடுகிறோம்.

அதில் ஒன்று தான் - இந்த 'மஞ்சள் நீராட்டு விழா'. ஐயோ இன்னுமா இந்த உலகம் இப்படிலாம் பண்ணுதுனு நினைக்கும்போது....
Madhavan

"நான் இப்ப என்ன செய்ய?"

இது கலாச்சாரம்னு நிறைய பேர் நினைக்குறாங்க. இல்லேனு சொன்னா, அடி இடி மாதிரி வருது!! இது போன்ற வழக்கங்கள் அந்த காலம் பழக்கம். அதை இப்ப வரைக்கும் தொடர தேவையில்ல. போன வாரம், இப்படிப்பட்ட ஒரு விழாவுக்கு போக நேர்ந்தது. எனக்கு இதில் சுத்தமாக ஆர்வமில்லை. கோபம் தான் வந்தது. சென்ற எனக்கு ரொம்ப முக்கியமான பொறுப்பு வேற- பொண்ணு தோளில் வைக்கப்பட்டிருக்கும் 'அடையை' கீழே விழாமல் பாத்துக்கனும்!! what a great insult!!! பாவம் அந்த சின்ன புள்ள, என்ன நடக்குது-னுகூட புரியல!:((

என்னமோ போங்க!! நம்ம பல விஷயங்களில் முன்னேறியுள்ளோம் என்று சொன்னாலும் இது போன்ற நேரங்களில் அறிவில்லாதவர்களாய் நடந்து கொள்கிறோம் என நினைக்கும்போது...

"நான் இப்ப என்ன செய்ய?"

*************************************************************************

இந்த விஷ்வரூபம் காய்ச்சல் குறையவில்லை. வீட்டுக்கு வருபவர்களுக்கு கிடைத்துள்ளது மிக பெரிய 'நீயா நானா' தலைப்பு- விஷ்வரூபம் படம் நல்லா இருக்கா இல்லையா என்பது தான்.  கருத்தை சொன்னால், அது எப்படி நீ அப்படி சொல்ல முடியும்! இது ஒரு காவியம், செதுக்கிய ஓவியம். உலக சினிமா அப்படி இப்படினு சொல்றாங்க!!

அடுத்து கடல் படம் பற்றி பேச்சு வந்துச்சு.
 என் reaction.... "YES, YES, THANK YOU!"



கடைசில என்னையும் அரசியல்வாதி ஆகிட்டாங்களே, "நான் இப்ப என்ன செய்ய?"
******************************************************************************

அடுத்த வார சனிக்கிழமைல 'மீட்டிங்' இருக்குதாம்!! சனிக்கிழமையையே அசிங்கப்படுத்துறாங்களே,

"நான் இப்ப என்ன செய்ய?"

******************************************************************************