Nov 24, 2007

என்னா ஆட்டங்கிறீங்க!!!


ஒரு வழியா... விழி பிதிங்கி போய் நேத்திக்கு பரிட்சை எல்லாம் முடிச்சாச்சு!! எனக்கு எப்போதுமே ஒரு பழக்கம் இருக்கு. பரிட்சை முடிஞ்ச அன்றைக்கே எதாச்சு ஜாலியா செஞ்சுடுனும். என் காலேஜில் இந்த வருடம் முதல் ஆண்டு படிக்கும் மாணவர்கள் காலேஜ் விட்டு போகும் சீனியர்களுக்கு கொடுக்கும் farwell partyக்கு என்னை அழைச்சு இருந்தாங்க. (நான் இந்த காலேஜில் மூன்று வருஷத்துக்கு முன்னாடி படிச்சு இருந்தேன். முன்னாள் மாணவி என்ற பெயரில் என்னை சிறப்பு விருந்தினர் என்ற வகையில் அழைச்சாங்க...)

இந்த ஜீனியர்கள் எல்லாம் என்னமா ஏற்பாடு செஞ்சு இருந்தாங்க. மெய் சிலிர்க்க வைத்துவிட்டார்கள். எல்லாமே அவர்களாகவே செய்தார்கள், எந்த ஆசிரியர் துணையும் இன்றி. பாட்டு என்ன, நடனம் என்ன, அதுல இரண்டு பொண்ணுங்க.. ஒரு 4 பாட்டுக்காவுச்சு ஆடி இருப்பாங்க... அப்பரம் ஒரு சைடுல இந்த நிகழ்ச்சியை வீடியோ எடுத்தாங்க.. அப்பரம் அவர்கள் செய்த காலேஜ் போட்டிகளின் சாதனையை powerpoint slide மூலமாக காண்பித்தார்கள். எவ்வளவோ technical விஷயங்கள் பயன்படுத்தி புதுமையா செய்யுதுங்க இந்த காலத்து சின்ன பசங்க. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அப்பரம் அவர்களாகவே எடுத்த ஒரு சிறு காமெடி திரைப்படம் ஒன்று காண்பித்தார்கள். நிக்ழ்ச்சி தொகுப்பாளர்களின் காமெடி கலக்கல்.


பிறகு, சிறு சிறு போட்டிகள். காமெடி போட்டிகள் தான்!! ஒரு பாட்டு போட்டு, அதுக்கு சீனியர்கள் வேறுவிதமாக ஆடனும்!!

முதல போகும் போது, மனசு லேசா இருந்துச்சு! ஆனா, எல்லாத்தையும் பார்த்துவிட்டு, மனசு சந்தோஷத்துல கனத்துபோச்சு!! என் காலேஜ் நாட்களை ஞாபகம் படுத்திவிட்டார்கள்!! எல்லாரும் போலவே என் காலேஜ் நினைவுகளை என்னால் மறக்கவே முடியாது. அடுத்த மாதம் 'கல்லூரி' என்ற படம் வரபோகுது...நான் ரொம்பவே ஆவலாய் எதிர்பார்க்கும் படம்!!

நிகழ்ச்சியின் கடைசியில் dance floor!! ஹாஹா.. நான் சத்தியமா ஆடல. அப்படியே அமைதியா ஒரு ஓரத்தில் உட்கார்ந்து ரசித்து பார்த்தேன். எல்லாருமே அப்படியே ஒரு சூப்பபர்ர்ர்ர்ர்ர்ர் ஆட்டம் போட்டார்கள்!! என்னா ஆட்டங்கிறீங்க!!!

Nov 21, 2007

எவண்டா அது!??


எனக்கு அப்படியே டென்ஷன் ஏறுதுங்க. இன்னிக்கு நடந்த கணக்கு பரிட்சையினால. பொதுவா பரிட்சை என்றால் டென்ஷன் தான்! அதுலயும் இது ரொம்ப ரொம்ப கஷ்டமான module. நரம்பு எல்லாம் நடன ஆடிட்டு நேத்திக்கு ராத்திரி. தூங்க முடியல... படிக்கவும் முடியல. ராத்திரி ஒரு மணி வரைக்கும் படிச்சேன். படிச்சது எல்லாம் மறந்து போன மாதிரியே ஒரு பீலிங். சரி ஒரு ப்ரேக் எடுத்துக்கலானு நினைச்சு, பாட்டு கேட்டா... அதே பாட்டு தான் மனசுல ஓடிக்கிட்டே இருந்துச்சு!! சரி மறுபடியும் வந்து படிக்கலாம்னு பார்த்தா... mind அப்படியே சூடாச்சு!! it was really killing me!! அப்பரம் இன்னிக்கு மதியம் பரிட்சை. ஆனா காலையில 4 மணிக்கு எல்லாம் தூக்கம் ஓடி போச்சு!!


அப்பரம், சாப்பிட முடியல. என்னடா இது... இதான் முதல் தடவ பரிட்சை எழுது போன பொண்ணு மாதிரி பேசுதுனு நினைக்கிறீங்க தானே... எத்தனையோ தடவ பரிட்சை வருது.. ஆனா இரண்டு நாளா செம்ம torture!!! ஏண்டா பரிட்சை எல்லாம் வைக்கிறாங்க? அப்படினு தோனுச்சு!! பரிட்சைய கண்டுபிடிச்சவனை செருப்பால அடிக்குனு என்று என் தோழி ஒருத்தி புலம்பிகிட்டு இருந்தா.. புண்பட்ட நெஞ்சை புகைவிட்டு ஆத்துனும், அப்படினு பல 'அறிஞர்கள்' சொல்லி இருக்காங்க... அது போல கஷ்டப்படுற மனச கவிதை எழுதி ஆத்தணும்...


எவண்டா அது?


பரிட்சை என்ன

பசங்களுக்கு கிடைத்த சாபமா?

இல்ல கடவுள்

எங்க மேல காட்டுற கோபமா?

தூங்க முடியல

சாப்பிட முடியல

சிரிக்க முடியல

அழுவகூட முடியல

காதல் அறிகுறியானு பார்த்த

கண்ராவி இது பரிட்சையின்

அறிகுறிகள்!!


பரிட்சை எழுதும்போது

பக்கத்துல பக்கம் பக்கமா

எழுதுறவன பார்த்தா

டென்ஷன்.

பரிட்சை முடிஞ்சு

உடனே எல்லாம் பதில்களையும்

பகிர்ந்து கொள்றவன பார்த்தா

டென்ஷன்.

இரண்டே இரண்டு மார்க்

கோட்டைவிட்டவன்

வருத்தப்படுறத பார்த்தா

மெகா டென்ஷன்!

இப்படி மென்ஷன் பண்ண

முடியாத டென்ஷன்!

இத பார்த்து மனசு

குமறியது,

"பரிட்சைய கண்டுபிடிச்சவன்,

எவண்டா அது?"


Nov 15, 2007

கொல்றான்! என்னை கொல்றானே!!
















ஹாஹா... என்ன தலைப்பை பார்த்து பயந்துட்டீங்களா? அழகுல கொல்றானு சொன்னேன். தன் அழகிய புன்னகையினால் கொல்றானேனு சொல்ல வந்தேன்.
கொன்ற இடம்: http://www.indiaglitz.com/
கொன்றவர்கள்: அழகிய பெங்களூர் மகன்கள்

Nov 14, 2007

காதல் வெட்டு!


சமையலறையில் உனக்கு

உதவியாய் நானும்

சில வேலைகளை

செய்ய,

காய்கறி வெட்டும்போது

தெரியாமல் கத்தி

லேசாய் என் கட்டைவிரலை

கீற

நீ துடித்துபோய் உடனே

ரத்தம் கொட்டாமல்

உன் வாயால் உருஞ்சி எடுத்தாய்



அட இது தெரிந்திருந்தால்

என் உதட்டில் கீறி

கொண்டிருப்பேனே...

Nov 13, 2007

எனக்கு விஷால் மாதிரி மாப்பிள்ள வேணும்!

" எனக்கு விஷால் மாதிரி மாப்பிள்ள வேணும்?" இந்த டையலாக் இப்ப ரொம்பவே பிரபலம் ஆச்சு. எந்த படத்துல வந்தது என்று யோசிக்கிறீங்களா? எந்த படத்தலையும் வரல. இவ்வரிக்கு சொந்தக்காரி விஜ்ய் தொலைக்காட்சியில் வரும் 'நீயா நானா' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு தாயின் வார்த்தைகள். 'நீயா நானா'வில் பரபரப்புக்கு பஞ்சமே இல்ல. அதுவோட இது போன்ற காமெடிக்கு பஞ்சமே இல்ல.

சென்ற வாரத்தின் தலைப்பு 'திருமணத்தை பற்றி பிள்ளைகளின் கனவுகள் மற்றும் பெற்றோரின் எதிர்ப்பார்ப்புகள்". ஒரு பக்கம் இளையர்கள், இன்னொரு பக்கம் பெற்றோர்கள். இதை பற்றி ஏற்கனவே ஒரு அன்பர் அவரது வலைப்பக்கத்தில் போட்டுவிட்டடர். இருப்பினும் நிகழ்ச்சியை பார்த்தவுடன் 'ஏய், கண்டிப்பா இத பத்தி வலைப்பூவில் போடு' என்று தமிழ்மாங்கனியின் உள்மனசு சொன்னுச்சு!!

வயசுக்கும்( என்னை போன்றவர்கள்:)) இந்த தலைப்புக்கும் கொஞ்சம் தொடர்பு இருப்பதால், ஆர்வமாய் பார்க்க ஆரம்பித்தேன். பெற்றோர்கள் பக்கத்தில் இருந்த ஒரு தாய், எனக்கு நடிகர் விஷால் மாதிரி மருமகன் வேணும் என்று சொன்னது தான் ஆச்சிரியமாகவும் இருந்தது அதே சமயம் செம்ம காமெடியாக இருந்தது. அதற்கு நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் ரசித்து கைதட்டி சிரித்தது அதைவிட அழகாய் இருந்தது! (ஆஹா... தமிழ்மாங்கனி... வழியாதே வழியாதே!!:))

நடிகர் விஷால் மாதிரி மாப்பிள்ள வேணுமாம்!! அட, இத விஷால் கேட்டுச்சுனா எவ்வளவு 'வீல்' பண்ணும்! விஷால் எதிர்காலம் என்னவாகும்?? ஹஹஹா... நகைச்சுவை ஒரு பக்கம் இருக்க... நிகழ்ச்சியில் சொல்லப்பட்ட சில கருத்துகள் என்னை சிந்திக்க வைத்தது. சமுதாயம் இன்னும் சில விஷயங்களில் மாறவில்லை. நிகழ்ச்சியின் வந்தவர்கள் ஒட்டுமொத்த சமுதாயத்தின் குரலாக இருக்காவிட்டாலும், அவர்க்ளின் சிந்தனை சமுதாயத்தை ஓரளவுக்கு பிரதிபலிக்கின்றன என நினைக்கிறேன்.
ஆண்கள் பொதுவாகவே சிவப்பாக இருக்கும் பெண்கள் வேண்டும் என்று சொன்னது.... 'எனக்கு சிநேகா மாதிரி கலருல வேண்டும். எனக்கு பூமிகா மாதிரி பொண்ணு வேண்டும்' என்று சொல்வது சிவப்பு நிறத்துக்கே அதிக மவுசு என்பதை காட்டியது. ஆனால் சில பெண்கள் 'எங்களுக்கு கலர் கொஞ்சம் கம்மியாக இருக்கும் ஆளு தான்' வேண்டும் என்பது ஆச்சிரியமாக இருந்தது.

அதிலும் ஒரு பொண்ணு 'எனக்கு வரும் ஆளுக்கு, கொஞ்சம் ரவுடி லுக் இருக்கணும்' என்று சொல்லியது ரொம்பவே பயங்கரமா இருந்துச்சு. (அப்படினா புதுப்பேட்டை தனஷ், போக்கிரி விஜய், கொக்கி கரண்... இந்தமாதிரி ஆளுங்க... ஓகேவா, பொண்ணு?))

இதை சொன்ன பெண் தான் எனக்கு தாலி, மெட்டி போன்ற விஷயங்களில் ஈடுபாடு இல்லை. கல்யாணத்தில் இதலாம் தேவையில்லை என்றார். தனது கருத்துகளை கொஞ்சம் அதிகமான தைரியத்தோட சொன்னது நல்லா இருந்துச்சு. உண்மையில் 'குடும்பவிளக்கு' காவியத்தில் இது போன்ற சடங்குகள் எதுவும் இல்லாமல் தான் ஒரு கல்யாணம் நடந்ததாக இருக்கு.

இது போன்ற கருத்துகள் தெரிவித்த அந்த பெண் பாரதி கண்ட புதுமை பெண்ணாக இருந்தாலும், இவளை போன்ற ஒரு பெண் உங்க வீட்டுக்கு மருமகளாக வந்தால் ஏற்று கொள்வீங்களா என்று கோபிநாத் கேட்ட கேள்விக்கு பெற்றோர்கள் பக்கத்தில் இருந்து, ' எங்களுக்கு இது மாதிரி மருமகள் வேணாம்' என்று பட்டென்று சொன்னது ரொம்பவே அதிரிச்சியாக இருந்தது. அந்த பொண்ணு மனசு கஷ்டப்பட்டு இருக்குமா இல்லையா? என்று என் மனசு கேட்டது.

என்னவோ....மொத்தத்தில் நல்ல சிந்தனைக்கு தீனி போட்டது இந்நிகழ்ச்சி எனலாம். மற்றபடி பெற்றோர்கள் ஜாதி மதம் மாறி கல்யாணம் செய்வதில் இஷ்டம் இல்லை என்பது, பிள்ளைகள் அவர்கள் கல்யாணத்தை பத்திரிக்கை கூட இல்லாமல் குறுந்தகவல் மூலமோ அல்லது ஈமெயில் மூலமோ கல்யாண செய்தியை அனுப்புவார்கள் என்று சொன்னது புதுமையாக இருந்தது. ஒவ்வொரு கருத்தும் சொல்லும்போது.. நான் அப்படியே ஓரக்கண்ணால் என் பெற்றோர்களை பார்த்தேன். எந்த கருத்துக்கு அவங்க சரி என்கிறார்கள் எந்த கருத்துக்கு சரியில்ல என்கிறார்கள் என்பதை பாத்துவச்சுகிட்டோம்ல!! ஹாஹா... .

ஆனா ஒன்னு... நிகழ்ச்சி நடத்தும் கோபிநாத் மாதிரி ஒரு மாப்பிள்ள, எல்லாம் வீட்டுலையும் இருந்தா நல்லா இருக்கும்.. ஏனா.. பிரச்சனன அவரே ஆரம்பித்து அவரே சுமூகமா முடித்துவைப்பாரு!!

Nov 9, 2007

தீபாவளிக்கு என் வீட்டுக்கு விஜய் வந்தாரு!

pre deepavali என்றால் தீபாவளிக்கு முன்னால் செய்தவை. முறுக்கு சுட்டது, வீடு சுத்தம் செஞ்சது எல்லாம்.post deepavali என்றால் தீபாவளிக்கு மறுநாள் என்னவெல்லாம் செய்கிறோம் என்பது. இப்போ நான் செஞ்சுகிட்டு இருப்பதுகூட postdeepavali நடவடிக்கை தான். அதாவது இதை எழுதுவதை தான் சொன்னேன். தீபாவளி அன்று எங்கவீட்டுல அவ்வளவு பிரமாண்டமாக ஒன்னும் செய்ய மாட்டோம். சாப்பிடுவோம், தொலைக்காட்சி தொடர்ந்து பார்ப்போம்! தீபாவளி அன்றுதான் என்றைக்குமே கிடைக்காத ஒரு தூக்கம் வரும். அதை நல்லா அனுபவிப்போம்.

இந்த வருஷம் தீபாவளியும் அப்படிதான் போனுச்சு. பக்கத்துவீட்டு சீன அண்டைவீட்டாருக்கு பலகாரம் கொடுத்தேன். வருஷம் வருஷம் அவங்க கேட்குற அதே கேள்வி "ஓ.. தீபாவளி உங்களோட new year மாதிரியா?"
அதுக்கு நான் சொல்லும் பதில், "இல்ல... அது வேற இது வேற"
ஒவ்வொரு வருஷமும் நான் சொல்லி சொல்லி அலுத்துபோச்சு. அப்பரம் பலகாரம் கொடுக்கவந்த இடத்துல அவங்ககிட்டு தீபாவளி கதை பத்தி சொல்லிக்கிட்டு இருக்க முடியுமா? அதுவும் அவங்களுக்கு அவ்வளவா ஆங்கிலம் தெரியாதுவேற...

சரி ஒரு வீட்டுல கொடுத்துட்டேன். இன்னொரு வீட்டுக்கு போனேன். இங்கதான் செம காமெடி. இந்த வீட்டு aunty தான் கொஞ்சம் தெரிந்தவங்க. அவரோட கணவர் என்னை பார்த்துஇல்லை. நான் அவங்க வீட்டு கதவை தட்டியதும் அவர் கணவர்தான் திறந்தார். அவர் என்னை பார்த்தார். அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. ரொம்ப குழம்பியவர் போல் தெரிந்தார். நான் கையில் ஒரு பெரிய தாம்பாலத்தில் பலகாரத்தை தூக்கி கொண்டு நின்றேன். "தீபாவளி sweets" என்று சொன்னதும், அவர் நினைத்து கொண்டார் நான் ஸ்வீட் விற்க வந்திருக்கும் salesgirl என்று! அவர் முகத்திலிருந்தே அதை அறிந்து கொண்டேன். "வேண்டாம், இதலாம் நாங்க சாப்பிட மாட்டோம்" என்று அவர் கண்கள் சொல்லியது! என்னால் சிரிப்பு தாங்க முடியவில்லை. சரி சரி அவர் நம்மை துரத்தி அடிப்பதற்கு நான் உடனே ," aunty, எங்க? இன்னிக்கு தீபாவளி. நான் அங்கிட்டு மேல் மாடியில் குடியிருக்கிறோம்? என்று சுருக்க சொன்னேன் ஆங்கிலத்தில். அவருக்கு லேசாக புரிந்திருக்கும் நினைக்கிறேன். நல்ல வேளை aunty வந்துட்டாங்க. அவங்ககிட்டு கொடுத்துவிட்டு நான் ஓரே ஓட்டமா வீட்டுக்கு வந்துட்டேன்.

அப்பரம் தொடர்ந்து தொலைக்காட்சி தான். காலையில் ஆரம்பிச்சு ராத்திரி வரைக்கும் விஜய் எங்கவீட்டுல இருந்தாரு. ஏனா... எல்லாம் நிகழ்ச்சிலையும் அவர் தான். படமும் அவர் படம் தான் (கில்லி). எங்க உள்ளூர் தொலைக்காட்சிலையும் அவர் படம் தான்! அதனால கிட்டுதட்ட விஜய் வீட்டுக்கு வந்த மாதிரி இருந்துச்சு! (கொஞ்சம் bore ஆச்சு.ஹிஹிஹி)

சாய்ங்காலம், அப்படியே தோழி வீட்டுல் கொஞ்சம் கூத்தடிச்சுட்டு, வந்து வீட்டுல தூங்கிட்டேன்...
அம்முட்டுதாங்க!!!