Jul 26, 2009

ஜஸ்ட் சும்மா (26/7/09)

ப்ளாக் பக்கம் வந்து கிட்டதட்ட 3 வாரமா ஆச்சு! சில பேர் இமெயில் மூலமா தொடர்பு கொண்டு ஏன் ப்ளாக் பண்ணல்லன்னு கேட்டாங்க(இது தான் வாசகர் கடிதமோ) அவர்களுக்கு ரொம்ப நன்றி அக்கறை காட்டியதற்கு. வேலை பளு அதிகம்! ஆனா, இனி கொஞ்சம் குறைவாக தான் இருக்கு. அதனால், தொடரும் என் இம்சைகள்!
-----------------------------------------------------------------------------------

ப்ளாக் பக்கம் வராமல் இருந்தாலும், மற்ற வலைப்பூ பதிவுகளை படித்து வந்தேன். இப்போ புதுசா பிடிச்ச 10, பிடிக்காத 10 அப்படின்னு நிறைய பாக்குறேன். ஹாஹா...h1n1 காய்ச்சல் மாதிரி ரொம்ப வேகமாவே பரவுது!!
----------------------------------------------------------------------------------------
அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை பார்க்க நேரம் கிடைத்துவிட்டது. உடனே போய் பார்க்கலாம்னு நினைக்கிறேன்.
-----------------------------------------------------------------------------------------

ரொம்ப நாளாச்சா பதிவு எழுதி...... நிறைய எழுத வரமாட்டேங்குது!:)

Jul 7, 2009

ஜஸ்ட் சும்மா(7/7/09)

நேத்திக்கு நியூ யோர்க் ஹிந்தி படத்தை பார்த்தேன்.simply superb. படம் பட்டைய கிளப்பிட்டு! ரொம்ம்ம்ம்ம்ப பிடிச்சு இருந்துச்சு. john abrahamக்கு அழகு இருக்குன்னு தெரியும் ஆனா...இவ்வளவு சூப்பரா நடிப்பாருன்னு கொஞ்சம்கூட எதிர்பாக்கல! அப்பரம் நித்தின் முக்கேஷ்....oh my god.... he is brilliant!

நான் 6 பேருடன் படம் பார்க்க போனேன்.அதில் 4 பேருக்கு படம் பிடிச்சு இருந்துச்சு. எங்களுடன் வந்த என் அக்காவுக்கு தான் படம் சுத்தமா பிடிக்கல! இன்னொரு தோழிக்கும் பிடிக்கல! என்ன பொண்ணுங்களோ இவங்க..... மதியம் படம் பார்த்துவிட்டு வீடு திரும்பினோம். இரவில் ஒருத்தி ஸ் எம் ஸ் அனுப்பினாள். "மச்சி, john abraham என் கண்ணுக்குள்ளயே இருக்குறான்."

நான் பதில் அனுப்பினேன், "உன் கண்ணுக்குள்ளயுமா இருக்குறான்?"
_________________________________________________________________

வேலை பளு அதிகமா போச்சு! மன உளைச்சலால் கிட்டதட்ட 1.5 கிலோ உடல் எடை குறைந்துவிட்டது 5 நாட்களில்! என்னமோ போங்க.....
________________________________________________________________

வாமனன் படத்தில் வரும் "ஒரு தேவதை" பாடல் அருமை!!! கேட்டு கொண்டே இருக்கலாம்னு தோணுது.
_______________________________________________________________

இன்று பேருந்தில் வரும் போது மனதில் தோன்றியது, "ஏய், நம்ம கவிதை எழுதி ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளாச்சுல?"

Jul 4, 2009

தண்ணிக்குள்ள மீன் அழுதா, கரைக்கொரு தகவலும் வருவதில்லை!

10.00pm

இன்னும் சந்தோஷ் வீடு திரும்பவில்லை. வீட்டில் உள்ளவர்கள் அவனது கைபேசிக்கு தொடர்பு கொண்டு பார்த்தார்கள். ஆனால், அவன் எடுக்கவில்லை. வீட்டில் இருக்கும் அவனது அப்பா, சந்தோஷ் நண்பர்களின் தொடர்பு எண்ணங்களை தேடி கொண்டிருந்தார். அம்மா அழுது கொண்டிருந்தார்.

"அவன் கொஞ்ச நாளாவே சரியிலேங்க...." என்றார் அம்மா.

"அண்ணனுக்கு வேலை பிடிக்கலமா. என்கிட்ட ரெண்டு நாளுக்கு முன்னாடி சொல்லிகிட்டு இருந்துச்சு..... சொல்லும்போது ரொம்ப பாவமா இருந்துச்சு. he is really depressed. " தங்கை சோகத்துடன்.

"அவன் என்ன சின்ன பிள்ளையா? எதாச்சுன்னா வாய தொறந்து பேச வேண்டியது தானே...சும்மா....உம்முன்னா மூஞ்சி மாதிரி வச்சு இருந்தா....யாருக்கும் என்ன புரியும்?" கடிந்து கொட்டினார் அப்பா.

"ஒவ்வொரு தடவையும் அண்ணா வந்து தனக்கு வேலை பிடிக்கலைன்னு சொல்லும்போதெல்லாம் அப்படி தான் இருக்கும்...அப்படி தான் இருக்கும்னு சொன்னீங்க தவிர அண்ணனோட feelingsஎ புரிஞ்சுக்க முயற்சி பண்ணவே இல்லையே நீங்க?" தங்கை அப்பாவின் குற்ற உணர்ச்சியின் வலியை ஏற்றினாள்.

சற்று முறைத்தார் அப்பா.

அன்று மாலை 7pm.

சந்தோஷ் தன் நண்பன் ரவியுடன் தொலைபேசியில் பேசி கொண்டிருந்தான். ஆபிஸில் இருந்த சந்தோஷ்,

"ம்ம்..சொல்லுடா?"

மறுமுனையில் ரவி, "என்னடா புது வேலையில join பண்ணியிருக்க...ஒரு உற்சாகமும் இல்ல குரல...."

"பிடிக்கலடா"

"என்னடா பிடிக்கல?" ரவி அக்கறையுடன்.

"வேலை பிடிக்கல...."

"ஏண்டா?"

"ரவி, உனக்கு தான் தெரியும்ல... எனக்கு ஆரம்பத்துலேந்து இந்த படிப்பும் வேலையும் பிடிக்கல..... chartered accountantஆ தான் வரும்னு எங்கப்பா ஒத்து கால நின்னாங்க.... எனக்கு சுத்தமா பிடிக்கல?"

ரவி,"அப்பரம் உன் aim தான் என்னடா?"

"டான்ஸ்! i want to learn different forms of dance. i want to start my own dance company." ஏக்கத்துடன் சந்தோஷ்.

"இத பத்தி வீட்டுல பேசினீயா?" என்று கேட்டான் ரவி.

"இல்ல! பேச பிடிக்கல. என் வீட்டுல யாருக்கிட்டயும் நான் பேசுறது இல்ல. எனக்கு stressஆ இருக்குன்னு சொன்னா....என் அம்மாவும் அப்பாவும்... நீ என்ன சின்னபுள்ளையா... டான்ஸ கத்துகிட்டு நீ என்ன பண்ண போற... என் மகன் ஒரு கூத்தாடின்னு சொல்ல சொல்றீயான்னு கேட்குறாங்க....அவங்க சொல்ற ஒவ்வொரு வார்த்தையும்....ச்சே...." மனம் நொந்து பேசினான் சந்தோஷ்.

"டேய் விடுடா..... கொஞ்ச நாள்ல சரியா போயிடும்!"

"நான் வாழ்ந்த இந்த 25 வருஷமா அப்படி தான் நினைச்சுகிட்டு வாழ்ந்துகிட்டு இருக்கேன்.... வருஷம் போக போக.... சோகம் தான் மிஞ்சுது.... முடியலடா...." தழுதழுத்த சந்தோஷ்.

"டேய்.... என்னடா நீ.... நல்ல நக்கல் அடிச்சு...எல்லாரையும் கலாய்ச்சு...பேசிகிட்டு இருக்குற நீ...இப்படி மனசு உடைஞ்சு பேசாத டா....உன்னைய இப்படி பாக்குறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. cheer up!" ஆறுதல் பேசினான்.

தொடர்ந்தான் ரவி, "நான் வேணும்னா அங்கிள்கிட்ட பேசிபாக்கவா?"

சந்தோஷ், "வேண்டாம்.... நீ பேசினா...எங்கப்பா...ஓ கூட்டாளியோட கூட்டு சேந்துகிட்டு பேச வைக்குறீயா? என்ன ரவுடியா நீ அப்படி இப்படின்னு தேவையில்லாம பேசுவாரு....."

"ஐயோ... அப்பரம் எப்படி டா? டேய்... உனக்கு கல்யாணம் ஆனா பிறகு... உன் ambitionஎ தொடரலாமே?"

"எப்படிடா முடியும்? வரபோற பொண்ணுகிட்ட நான் கல்யாணத்துக்கு அப்பரம் வேலைய விட்டுடுவேன் டான்ஸரா போவேன்னு எப்படி சொல்ல முடியும்? நல்லா இருக்காதுடா. என் வாழ்க்கையே நான் முழுசா ஒரு நாள்கூட வாழ்ந்தது கிடையாது. இதுல இன்னொருத்தியா.....அதெல்லாம் நடக்காத காரியம்." என்றான் சந்தோஷ்.

ரவி, "டேய் அப்படி சொல்லாதடா..... வாழ்க்கையில முத பாதி கஷ்டம் படுறவங்க, இரண்டாவது பாதில நிம்மதியா இருப்பாங்க. உன்னைய புரிஞ்சிக்கிற மாதிரி ஒரு பொண்ணு வருவா டா?"

சந்தோஷ் வருத்தமாய், "சினிமாவுல மட்டும் தான் அதலாம் நடக்கும்."

ரவி, "இதுக்கு வேற வழியே கிடையாதா?"

சந்தோஷ், "மரணம் தான் ஒரே வழி."

ஆச்சிரியம் அடைந்தான் ரவி. "டேய், just shut up man! சும்மா இப்படிலாம் பேசாத... நீ இப்ப வீட்டுக்குபோய் நல்லா படுத்து தூங்கு. கண்டத பத்தி நினைக்காத. சரியா?"

ம்ம்... என்றபடி ஃபோனை வைத்தான் சந்தோஷ். சந்தோஷின் குரலும் அவன் பேசிய கடைசி வார்த்தையும் ரவிக்கு நெருடலாய் இருந்தது. கொஞ்ச நேரம் கழித்து ஒரு ஸ் எம் ஸ் அனுப்பினான் ரவி, "hey dude, are you okay? do you want to meet up somewhere?"

உடனே பதில் அளித்தான் சந்தோஷ், "i am ok da. am really tired and stressed out. office work is really piling up. i need rest. i am back home. will call you soon. thanks da."

இப்படி பதில் அளித்து கொண்டிருந்த சந்தோஷ் உட்கார்ந்திருந்த இடம்- பீச்!

மணி 9.30 pm.

கடல் அலைகள் அவனை வா வா என்று அழைப்பதுபோல் உணர்ந்தான். கைபேசி அலறியது. displayயில் வீட்டு நம்பர் தெரிந்தது. அவன் எடுக்கவில்லை.

அவன் வாழ்க்கையில் நடந்த பலசம்பவங்களை நினைத்துபார்த்தான். நான்காம் வகுப்பில் கணக்கு வராததால் பக்கத்துவீட்டு பையனோட ஓப்பிட்டு பார்த்து அவர் அப்பா சொன்ன வார்த்தை, "அவனோட மூத்தரத்த குடி!" ஞாபகம் வந்தது.

ஏழாம் வகுப்பு படிக்கும்போது ஒரு நாள் வெளியே சென்றபோது தெரியாமல் காலணி கிழிந்துவிட்டது. அதற்கு அவன் அப்பா, "நீ வாழ்க்கைல உருபுட மாட்டே.. ஒரு செப்பல கூட சரியா போட தெரியுல." என்று அந்த கிழிந்த செருப்பாலே தெருவில் அடித்தார்.

காலேஜ் படிக்கும்போது cultural show practice முடிந்து தாமதாய் வீட்டிற்கு வந்தபோது "இவனுக்கு சாப்பாடு போடாத. அப்ப தான் சூ** கொழுப்பு குறையும்."என்றார் அவன் அப்பா.

சந்தோஷிற்கு இஷ்டமான காரியத்தில் அவனை ஈடுபட ஊக்கம் அளித்ததே கிடையாது. விரக்தி, நிம்மதியில்லாத உறக்கம், வீட்டில் பேசுவதை குறைத்தது, இப்படி அவன் வாழ்க்கை ஒரு திசையில் திசைமாறி சென்றதை எண்ணி பீச் மணலில்

"i hate my life.i want to die." என்று கிறுக்கி கொண்டிருந்தான்.

இரவு மணி 10.00

வாழ்க்கையை முடித்துகொள்ள முடிவு எடுத்தான். கடலை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவனது கால்கள் நனைந்தன. நடந்தான். முட்டி வரை தண்ணீர் வந்தது. நடந்தான். மரணத்தின் வாசல் கதவை தட்டினான்.

இரவு மணி 1045.

சந்தோஷ் காணவில்லை என்று போலிஸில் ரீப்போர்ட் கொடுக்க சென்றனர் அவனது பெற்றோர்களும் தங்கையும். போலிஸுக்கு ஒரு ஃபோன் வந்தது.

போலீஸ், "இதோ வரேன்!" என்றவர் சந்தோஷ் குடும்பத்தினரிடம், "சார், ஒரு dead body கிடைச்சுருக்கு. ஒரு வேளை...."

என்று முடிப்பதற்குள் சந்தோஷின் அம்மா கதறி அழ ஆரம்பித்தாள். தங்கைக்கு துக்கம் தாங்கமுடியவில்லை.

"அவன் ஒரு சனியன் பிடிச்சவன் சார், எங்களுக்கு நிம்மதியே கொடுக்க மாட்டான்." என்று தலையில் அடித்து கொண்டார் அவன் அப்பா.

இரவு மணி 11.00

சந்தோஷுக்கு வாழ பிடிக்கவில்லை என்றால் அவனுக்கு மரணம்கூட பிடிக்கவில்லை. முழுதாய் நனைந்தவன் ஈரத்துடன் மணலில் உட்கார்ந்து கிறுக்கினான், "i hate to live and i hate to die!"

*முற்றும்*

(பிள்ளைகளுக்கு நல்லது பண்றேன் நல்லது பண்றேன் என்று அவர்களது வாழ்க்கையை கெடுத்த, கெடுத்து கொண்டிருக்கும், கெடுக்க போகும் பெற்றோர்களே, உஷார்ர்ர்ர்ர்!)