Dec 31, 2008

சந்தோஷமா இருந்துச்சுப்பா....

சென்ற சனிக்கிழமை நெருங்கிய தோழியின் பிறந்தநாள். ஒரு மாசத்துக்கு முன்பே ஃபோன் செய்திருந்தாள்.


தோழி: ஏய் காயு, 27th அன்னிக்கு ஒரு mini bthday celebration வச்சுருக்கேன். வந்துடு தெரியுமா. அப்பரம் ஒரு small request. நீ எதாச்சு performance போடனும்.


நான்: performanceஆ??? என்ன செய்யனும்?


தோழி: ஏதாச்சு பண்ணு.

நான்: ஏதாச்சுன்னு, கோழி பிரியாணி எப்படி செய்யனும்னு காட்டவா?


தோழி: ஆண்டவா!! இந்த புள்ளைக்கு நல்ல புத்திய குடு!


நான்: சரி சரி, அதலாம் இப்ப stockல இல்ல....



தோழி: டேய், உன் கவிதைய ஒன்னு வாசி. super performanceaa இருக்கும்!



அவள் சொன்னது முதல் எனக்கு வயிறு கலக்கல்ஸ் ஆரம்பித்துவிட்டது. எழுத சொன்னால் எழுதிவிடுவேன். ஆனா அதை பல பேர் முன்னிலையில் படித்து காட்டுவது எல்லாம் வாழ்க்கையில் செய்யாத ஒன்று. சரி முயற்சி செஞ்சு பார்ப்போம் என்று கிளம்பினேன் 27th அன்று. முதல் நிகழ்ச்சியே என்னுடையது தான். அதற்கு பிறகு தான் மத்த நண்பர்களின் பாடல், ஆடல்.


குரல் சற்று தயக்கத்துடனும், கைகால் ஒருவித படபடப்புடனும் மைக்கை பிடித்தேன். 50 மக்களின் பார்வைபட தொடங்கினேன்,



அழகான கவிதை ஒன்று
எழுத சொன்னால்
எழுதியிருப்பேன்
அழுகுக்கு ஒரு கவிதை
எழுத சொன்னால்
என்ன எழுதுவேன்?


உன்னை பற்றி எழுத தமிழில்
வார்த்தைகள் பஞ்சம்
எனினும் இயற்றுகிறேன்
என்னால் இயன்ற கொஞ்சம்.



சூர்யா ஜோதிகாவுக்கு
நீ எத்தனையாவது
ரசிகை என்று
எனக்கு தெரியாது
ஆனால்
உன்னுடைய முதல் ரசிகை
நான்!


நான் தூளாக துவண்டிருந்தபோது
எனக்கு தூணாக துணையாயிருந்தாய்
இந்த தேவதையை உலகிற்கு அனுப்பிய
இறைவனுக்கு
பல கோடி நன்றிகள்



வள்ளுவன் இருந்திருந்தால்
உன்னை பார்த்தபிறகு
1330 குறட்களையும் உதறிவிட்டு
உன்னை பற்றியே பல லட்சம்
குறட்களை எழுதியிருப்பான்


கம்பன் இருந்திருந்தால்
உன்னை கண்ட பிறகு
பல்லாயிரம் காவியங்களை
படைத்திருப்பான்.


அவர்கள் பாவம் செய்தவர்கள்
உன்னை பற்றி எழுதமுடியவில்லை.
நான் புண்ணியம் செய்தவள்
இங்கு உன்னை பற்றி மட்டுமே
எழுதுகிறேன்.



நண்பர்கள் டாப் 10 வரிசையில் இனி
உனக்கும் எனக்கும் மட்டுமே
முதல் இடம்!
நட்பின் ஆஸ்கார் விருது உனக்கே
உனக்கு!



தளபதி ரஜினி மம்மூட்டி
நட்புக்காக விஜயகுமார் சரத்குமார்
காதல் தேசம் அப்பாஸ் வினித்
பட்டியல் ஆர்யா பரத்,
இப்படி நட்புக்காக வாழ்ந்தவர்கள்
வரிசையில்
உன் பெயரையும்
என் பெயரையும்
சேர்த்து கொள்வோம்!


அம்மா அடித்தால் வலிக்கும்
அப்பா அடித்தால் வலிக்கும்
அண்ணன் அடித்தாலும் வலிக்கும்
‘சைட்’ அடித்தால் வலிக்காது
என்ற தாரக மந்திரத்தை
எனக்கு கற்றுகொடுத்த
குருவே,
நீ வாழ்க!
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

சொல்லிமுடிப்பதற்குள் எல்லாரும் கைதட்டி விசில் எல்லாம் அடிச்சாங்கப்பா! தோழியின் அம்மா ஓடி வந்து கட்டிபிடித்து பாராட்டி தள்ளிட்டாங்க! வாழ்க்கையில என் கவிதைக்கு இப்படி ஒரு நேரடி பாராட்டு கிடைத்தது இதுவே முதல் முறை. வலைஉலகில் மட்டுமே திரிந்து கொண்டிருந்த என் கவிதைக்கு இந்த பாராட்டுகளுக்கு என்னை பிரமிக்க வைத்தது!

Dec 29, 2008

என்னை ஏமாத்திய கஜினி

ஹிந்தி கஜினி, ஆஹா ஓஹோ என்று முருகதாஸ் ஒரு பக்கம், அமீர் கான் ஒரு பக்கம் படத்தை promote பண்ணியதால் படத்தை பார்க்கும் ஆர்வம் அதிகமானது. நானும் என் தோழிகள் இருவரும் போனோம்.



என்னை ஏமாத்திவிட்டார் அமீர் கான். படம் சுத்த bore! தமிழில் ஏற்கனவே பார்த்துவிட்டதால் என்னவோ, படம் கொஞ்ச நேரத்திலேயே எனக்கு போர் அடித்தது. பாடல்கள் சும்மார் ரகம். ஏ ஆர், kya? என்ன ஆச்சு? ஒரே ஒரு பாடல் மட்டும் தான் நல்லா இருக்கு.



அமீர் கானுக்கும் அசினுக்கும் chemistryயே இல்ல!! அசின் இனி பாலிவுட்டில் பெயர் போடுவது கஷ்டம்! இன்னும் நிறையவே எதிர்பார்த்தேன். காமெடி சீன்களில் அதிகபடியாக நடித்து இருக்கலாம்! என்னமோ போங்க... இந்த வருஷத்த ஒரு நல்ல படம் பார்த்து முடிக்கலாம்னு பார்த்தா இப்படி போச்சு.

ஹிந்தி தெரிந்த ஒரு இயக்குனர் படத்தை இயக்கி இருந்தால், நல்ல இருந்திருக்கும் என்பது எங்கள் கருத்து(தோழிகளும் நானும்). நயன் ரோலில் ஜியா கான்...ஐயோ... நயனே பரவாயில்ல! இயக்குனர், கேமிராமேன், ஹீரோயின், இசையமைப்பாளர் என்று தமிழர்கள் சேர்ந்து ஒரு சூப்பர் ஹிட் படம் கொடுத்திருக்க வேண்டாமா!

தமிழிலுள்ள லாஜிக் இடித்தல்களை சரிசெய்ய வேண்டும் என்று நினைத்து திரைக்கதையை சற்று மாற்றி, மெதுவாக நகர்த்திவிட்டார். இந்த படத்தை தான் 2 வருடமா எடுத்தாரா என்று கேள்விகுறியுடன் தியெட்டரிலிருந்து வெளியேறினோம். கிளைமெக்ஸை மாற்றி அமைத்து, கதைக்கு வலுபெறாமல் போனது.

அமீர் கான் 8 pack மட்டுமே பிரமிக்க வைக்கிறது. அதுகூட கதைக்கு எந்த வகையிலும் வலு சேர்க்கவில்லை. தன் கதாபாத்திரத்தை இன்னுமே உள்வாங்கி நடித்துஇருக்காலம் அமீர்! ஆனா, அவர் ஆத்திரத்தில் அழும்போது ரொம்பவே பாவமா இருந்துச்சு!

தோழி தெலுங்கு பொண்ணு. ஆக, இந்த படத்த தெலுங்கில் எடுத்தால் எப்படி இருக்கும் என்பதை பாதி படத்திலிருந்து discuss பண்ணி காமெடி செய்து கொண்டிருந்தோம்!

கஜினி- கொல்றீங்க எல்லாரையும்!

Dec 28, 2008

சிலம்பாட்டம் Vs பூ

சிலம்பாட்டம்- அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அவ்வ்வ்வ்வ்...யோவ் என்னைய கொஞ்ச நேரம் அழுக விடுங்கய்யா....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

என்னால முடியலடா, ரீலு அந்து போச்சுடா சாமி!

சென்னைக்கு போயிட்டு வந்த அம்மாவும் அப்பாவும் அங்க இந்த படத்த பாத்து இருக்காங்க. 'யப்படி இருந்துச்சும்மா'ன்னு கேட்டேன்.

"காயத்ரி, this is simbu's best movie. சிம்பு அவ்வளவு அருமையா நடிச்சுருக்கான். தசாவதாரம் மாதிரி இருக்கு'ன்னு சொன்னாங்க. சிம்புவே பிடிக்காத எங்க அம்மா இப்படி சொல்லிட்டாங்களேன்னு நம்பி போனேன்..... அவ்வ்வ்வ்வ்வ்வ்..

என்னைய மறுபடியும் கொஞ்ச நேரம் அழுக விடுங்க....அவ்வ்வ்வ்....

ஏன் எப்படி எதனால அம்மா அப்படி சொன்னாங்கன்னு இது வரைக்கும் தெரியல? படத்த போய் நானும் பார்த்தேன். கொலைவெறிய ஏத்திவிட்டார் சிம்பு! ஒன்னுமே இல்லாத படத்திற்கு எங்க அம்மா போன்றவர்கள் கொடுக்கும் ceritificate என்னால தாங்க முடியல...

டான்ஸ் என்ற பெயரில் உடற்பயிற்சிகள், இரட்டை அர்த்தம் கொண்ட வசனங்கள். வாதி எடுக்க வைக்கும் கெட்ட வார்த்தைகள். பேதி போகும் அளவிற்கு காமெடி என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். 10 டாலருக்கு படம் பார்த்து 20 டாலருக்கு மருந்து வாங்கி சாப்பிட்டேன். சின்ன தல என்று தனக்கு தானே மகுடம் சூட்டி கொள்ளும் சிம்புவே, தமிழ் மக்களை விட்டுவிடுங்கள். ஒரு காட்சியில் அவர் ஹிந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு என்று பல மொழி பேசுவார்..... யப்பா....முடியல்ல...
சினேகாவின் கதாபாத்திரம் பெயர் காயத்ரி. இதுக்காகவே நான் high court வரைக்கும் போவேன். அது என்ன, சீரியலயும் சரி, படத்தலயும் சரி, எப்படியாச்சும் ஒரு புள்ள பெயரு காயத்ரினு வந்திடுது. அதுவும் பாத்தீங்கன்னா, ஓடிபோனவ, வழுக்கி விழுந்தவ...இப்படிப்பட்ட பொண்ணுங்க பெயர் தான் காயத்ரி! நான் இத வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்த படத்துக்கு censor board என்ன பண்ணிக்கிட்டு இருந்தாங்கன்னு தெரியல.

---------
பூ. நல்ல படம் தான். கதை இருந்துச்சு. நாவலின் அடிப்படையாக எடுத்த படம். ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் படம் பார்த்தேன். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. திரைக்கதையில் இன்னும் அழுத்தம் கொடுத்திருக்கலாம். கிளைமெக்ஸை மாற்றி இருக்கலாம். கடைசியில் மாரி(ஹீரோயின் பெயர்) சத்தம் போட்டு அழுவதற்கு காரணம் பெரிதாக இல்லை. ஆக, ஒரு நல்ல கதையை இப்படி சாதாரணமாக எடுத்துட்டாங்களேன் என்று வருத்தம் தான் மிஞ்சியது.

கடைசியில் ஹீரோவின் மனைவி ஒரு ஊனமுற்றவராகவோ, அல்லது அவர்களின் குழந்தைக்கு ஏதேனும் ஒரு நோய் என்று காட்டியிருந்து, அதை கண்டு மாரி அழுது இருந்தால்..படம் கண்டிப்பா என்னை உருக வைத்து இருக்கும். இப்படி எதுவுமே இல்லாமல் போனது!

பூ- எதிர்பார்த்ததைவிட குறைவு!

சிலம்பாட்டம்- யப்பா சாமி...இப்படி நான் எதிர்பாக்கவே இல்லபா! மிஞ்சியது மனதில் தளும்பாட்டம் தான்!

Dec 23, 2008

rab ne bana di jodi- அனுபவிக்கனும்!

rab ne bana di jodi- நேத்திக்கு பார்த்தேன். பார்த்தேனு சொல்லகூடாது. ஒவ்வொரு காட்சியையும் அனுபவித்தேன். ரசித்து ரசித்து பார்த்தேன். படம் பார்க்க செல்லும் முன் சில விமர்சனங்களை படித்தேன். படம் அவ்வளவு பிரமாதமாக இல்லை என்பதே பொதுவான கருத்தாக இருந்தது. ஆனா, என்னை பொருத்தவரை படம் ரொம்பவே என்னை கவர்ந்துவிட்டது.

காரணங்கள்- ஷாருக்கானின் subtle way of acting. புதுமுகம் அனுஷ்கா, பாடல்கள், கதையிலிருந்து சொல்ல வந்த கருத்து. வசனங்கள். ஷாருக்கான் hairstyle மாற்றியுடன் மனைவிக்கே அடையாளம் காணமுடியவில்லை என்பதில் லாஜிக் இடித்தாலும் படம் போக போக அது ஒன்னும் பெரிதாக தெரியவில்லை. படம் எல்லாம் நாடுகளில் சக்கை போடு போடுகிறது!

நமக்குள் ஒருவித போராட்டம் இருக்கு.

"the person that we are." Vs "the person that we want to be."

இந்த இரண்டுக்கும் நடக்கும் போராட்டம் தான் படத்தின் கதை. கடைசியில் ஜெயிப்பது முதல் வகை தான்! படத்தில் மட்டும் இல்லை, நிஜ வாழ்க்கையிலும் அது தான் ஜெயிக்கும். படத்தின் இரண்டாம் பாதியில் நிறைய emotions, யதார்த்தமான வசனங்கள். i could easily relate with the film என்று ஒரு வரியில் சொல்லலாம்.

கதையாக இருந்தாலும் சரி, நிஜத்தில் இருந்தாலும் சரி, in every ordinary love jodi, there is always an extraordinary love story. படம் பார்க்கும்போது அது புரியும்.

என்னை பிரமிக்க வைத்தது ஷாருக்கானின் தைரியம். அவருக்கு இருக்கும் பெரிய stardom, market value ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் இப்படி ஒரு படத்தில் நடிக்க முன் வந்தது படத்தின் வெற்றிக்கு முதல் காரணம் என்றே கூறலாம். அப்பரம், girl-next-door போன்ற முக அமைப்பில் இருக்கும் புதுமுகம் அனுஷ்கா.

படத்தில் இன்னும் காமெடி அளவை கூட்டியிருக்கலாம். ஆனா, படத்துக்கு ஒரு serious tone maintain பண்ண வேண்டும் என்ற காரணத்தால் என்னவோ, காமெடி சில இடங்களில் மட்டுமே இருக்கிறது. இருந்தாலும், என்னை பொருத்தவரை

rab ne bana di jodi- every couple's mirror!

Dec 18, 2008

அலைபாயுதே-(2)

ஷீலாவிடம் பேசிவிட்டு ஆபிஸுக்கு வந்தான் ரோஹித். மனதில் உள்ளதை பேசிய பின்பும் அவனுக்கு ஏதோ ஒரு மாதிரியாக இருந்தது. ஆபிஸில் சரியாக கவனிக்கமுடியவில்லை வேலையை. staff lounge areaவுக்கு சென்று coffee dispenserலிருந்து ஒரு காபியை குடித்தான். அவனது நினைவு அலைகள் இரண்டு வருடங்களுக்கு முன்னால் சென்றது. ஷீலாவை பெண் பார்த்தது, கல்யாணம், honeymoon, எத்தனையோ இனிமையான நினைவுகள், அவளின் friendly approach, mannerisms-இவ்வாறு ஒவ்வொன்றையும் நினைத்தான்.


யாரோ ஒருவரின் கை அவன் தோள்பட்டையில் பட்டது. பின்னால் திரும்பி பார்த்தான். boss நிற்கிறார்.

“யோ மேன், என்னாச்சு? என்ன இந்த நேரத்துல...இங்க? any problem?" என்றார்.

“இல்ல சார்... ஒன்னுமில்ல.”

“பொண்ணுங்க ஒன்னுமில்லன்னு சொன்னா அதுல ஏதோ இருக்கு. பசங்க ஒன்னுமில்லன்னு சொன்னா...” என்று நிறுத்திவிட்டு மறுபடியும் தொடங்கினார் பாஸ்,
“அதுலையும் ஏதோ இருக்கு!” என்று தான் அடித்த ஜோக்குக்கு அவரே சத்தம் போட்டு சிரித்தார்.

ரோஹித்துக்கு சிந்தனையெல்லாம் அவள் மீது.

“ரோஹித், are you alright? என்ன சிரிக்காம இருக்கீங்க?ம்ம்ம்....i know i know....something is terribly wrong with you."

ரோஹித் அமைதியாய் இருந்தான், காபியை குடித்து கொண்டு.
“office is going on well...so problem is somewhere else. என்ன ரோஹித்....ஷீலாகூட பிரச்சனையா?” என்று ஒரு தோழன் போல் கேட்டார்.

தயங்கிய குரலில் “என்ன ஆச்சுன்னு தெரியல.... கொஞ்ச நாள்ல அவ என்கூட....” என்று தொடங்கியவன் நடந்தவற்றை கூறினான் ரோஹித்.
பாஸ் சில நேரங்களில் முட்டாள்தனமாக ஜோக்கு அடித்தாலும், தன் ஊழியர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அவர்களுக்க முடிந்த வரை உதவி செய்வார். ரோஹித் சொன்னதை கவனமாக கேட்ட அவர்,
“ம்ம்ம்....பொண்ணுங்க அப்படி தான். they need time. ஷீலா is a brilliant girl. u don't worry....she will definitely be alright."
“thanks sir....நான் cabinக்கு போறேன்.... அந்த report முடிச்சுட்டேன். நீங்க ஒரு தடவ பாத்துட்டீங்கன்னா...we can send to the authorities."

“nothing doing rohit. உனக்கு rest தேவை. நீ வீட்டுக்கு கிளம்பு. மத்ததை அப்பரம் பாத்துக்கலாம்.” என்ற பாஸ் ரோஹித்தை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

மணி அப்போது தான் 330pm. வீட்டுக்குள் நுழைந்தவனுக்கு அதிர்ச்சி. ஷீலா சோபாவில் உட்கார்ந்து இருந்தாள் அழுது கொண்டு. ரோஹித்தை பார்த்தவுடன் ஓடிவந்து அவனை இறுக்க கட்டிகொண்டு தேம்பி தேம்பி அழுதாள்.

ஒன்றுமே புரியவில்லை ரோஹித்துக்கு.
"என்னமா ஆச்சு?...என்ன இவ்வளவு சீக்கிரம் வந்துட்டே....ஏன் அழுவுற?” என்றான் படபடப்புடன்.

“ரோஹித், i am sorry. guilt is killing me."
"என்னமா சொல்ற.” என்றவன் அவள் தலைமுடியை கோதிவிட்டு சமாதானப்படுத்த முயன்றான். இருவரும் சோபாவில் உட்கார்ந்தனர். தன் கைகளால் அவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டான்.
“ok relax... what happened?" என்றான் ரோஹித் அவள் கண்களை பார்த்து.

அவன் நெஞ்சில் தன் தலையை சாய்த்த ஷீலா “நான் இத உன்கிட்ட முன்னாடியே சொல்லியிருக்க வேணும். நான் செஞ்ச தப்பு.” என்றாள் அழுகையின் இடையே.


தொடர்ந்தாள் “நான் காலேஜ்ல படிச்சபோ விமல்ன்னு ஒரு பையன் இருந்தான். முதல friendshipஆ தான் ஆரம்பிச்சுது. அதுக்கு அப்பரம்...அவன் ஒரு நாள் என்கிட்ட love propose பண்ணிட்டான். எனக்கும் அவன பிடிச்சு இருந்துச்சு... நாங்க 2 வருஷம் லவ் பண்ணோம். ரொம்ப சின்சியரா லவ் பண்ணோம்.... ஆனா 2nd இயர்ல அவன் வேற ஊருக்கு போயிட்டான்... ஏதோ அவங்க அப்பா வேலை transfer அப்படின்னு சொல்லிகிட்டாங்க.... நானும் கொஞ்ச நாளா அவனை பத்தி விசாரிச்சு பாத்தேன். ஆனா ஒரு contactக்கும் கிடைக்கல.... அப்பரம் நானும் விட்டுட்டேன்.... final year exam, அப்பா இறந்த விஷயம், அதுக்கு அப்பரம் நடந்த அண்ணா கல்யாணம்....நாங்க இங்க வந்தது...இப்படி அவன பத்தி totalஆ மறந்துட்டேன்.”

அவள் பேசும்போது கீழேயே தலைகுனிந்து இருந்தாள். அவனின் முகத்தை பார்க்க விருப்பமில்லை. தைரியம் இல்லை.

“ஒரு வாரத்துக்கு முன்னாடி புதுசா ஒரு மேனேஜர் எங்க ஆபிஸ்ல வந்து இருக்கிறார்...விமல் தான் அவர்” என்று தயங்கினாள்.

“நம்ம கல்யாணம் அப்பவே சொல்லனும்னு இருந்தேன்.... ஆனா friendsலாம் வேணாம்னு சொல்லிட்டாங்க.... வரபோறவரு எப்படி எடுத்து பாரு....life spoil ஆயிடும்....அப்படி இப்படின்னு பயபுறுத்தி விட்டாங்க....that's why rohit...am sorry. i didn't want to hide it from you purposely. sorry..." என்று ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டாள்.

“விமல் வந்த பிறகு, i was totally stunned. ஒன்னுமே புரியல. i was totally confused. அவர்கிட்டையும் பேச முடியல.... உன்கிட்டையும் எப்படி சொல்றதுன்னு....என்னால முடியலடா....” என்றவள் தன் நெற்றியில் அடித்துகொண்டாள்.

எல்லாவற்றையும் அமைதியாய் கேட்டவன், “என்னைய பாரு” என்று கத்தினான்!!!

மிரண்டு போன ஷீலா பயந்துபோய் அவன் முகத்தை பார்த்தாள்.

மழையில் நனைந்த பூனைக்குட்டி போல் நடுங்கிய அவளை பார்த்து ‘குபீர்’ என்று சிரித்துவிட்டான் ரோஹித்.

“ஹாஹா... பயந்துட்டீயா? ஹாஹா....oh my god இதுக்கு தான் இந்த mood outஆ? crazy girl...." என்று கைதட்டி சிரிப்பை தொடர்ந்தான்.

என்ன நடக்குமா என்று பயந்து கொண்டிருந்த ஷீலாவுக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. எல்லாவற்றையும் சொல்லிவிட்டோம் என்று மனம் சற்று அமைதியடைந்தாலும் ஒரு பக்கம் குழப்பமாகவே இருந்தது.

“ரோஹித்...aren't u angry with me?"

"angry? எதுக்கு இதுக்கா....hey u mad woman...college love எல்லாம் ரொம்ப natural. இப்பலாம் 3 லவ் பண்ணிட்டு, கடைசில 4வது பொண்ண பாத்து கல்யாணம் பண்ணிக்கிறாங்க...நம்ம ஆட்டோகராப் படம் பாத்தது இல்ல...அந்த மாதிரி!” என்றவன் அவள் மடியில் கைவைத்து

“இங்க பாருமா...i understand your situation. காலேஜ்ன்னா அப்படி தான் இருக்கும்.one side-love, love letters, sight அடிக்குறது.... இப்படி எத்தனையோ...அதலாம் enjoy பண்ணாதான் life! கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாருக்கும் ஒரு past இருக்கும். அது ஒரு sweet memoryயா மனசுல வச்சுக்கனும். போட்டு குழப்பிக்க கூடாது.”

ரோஹித் பேசியது ஷீலாவின் குழப்பத்திற்கு ஒரு புற்றுபுள்ளி வைத்தது. மனம் நிம்மதி அடைந்தது. அவன்மீது அதிகம் மரியாதை எழுந்தது.

“கல்யாணத்துக்கு அப்பரம் வாழ்க்கைய எப்படி lead பண்றோம்.. அது தான் முக்கியம். i know you really love me lots...எனக்கு தெரியும். அது போதும்.”

ஷீலா “இருந்தாலும்....” என்றாள்.


“ஷீலா, இதலாம் part and parcel of life. என்கிட்ட இதலாம் முன்னாடி share பண்ணியிருக்கலாம்.. அதுக்கு போய் எத்தன டென்ஷன்...எத்தன சோகம்... யப்பா.... ஆனா என் ஷீலாவுக்கு லவ் பண்ண தெரியும்னு நினைக்கும்போது... மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது” என்று அவளை கிண்டல் செய்தான். சிரித்த ஷீலா அவன் கையில் செல்லமாக அடித்தாள்.


“ஷீலா...சொல்லுமா...எப்படி ஆரம்பிச்சுது உங்க love story.” என்று ஆர்வமாய் வினாவிய ரோஹித்திடம் ஷீலா தன் காதல் கதையை சொன்னாள். அவள் சொன்னதை கேட்டுகொண்டிருந்தான். நடந்ததை ஒவ்வொன்றையும் கேட்ட ரோஹித்

“oh my god... you were such a sweet angel... பாவம் விமலுக்கு தான் கொடுத்து வைக்கல...” என்று புன்னகையுடன் கண் சிமிட்டினான்.

“ஒகே ஷீலா, hope u r completely relieved now...let's go out for dinner tonight" என்று சொல்லியபடி hyaat உணவகத்தில் இரண்டு சீட் புக் பண்ண ஃபோன் செய்ய போனான்.

எழுந்தவனின் கையை பிடித்து “thanks dear!" என்றாள் ஷீலா.


“you are most welcome. by the way உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன்....next week நம்ம வீட்டுல ஒரு small gathering பண்ணலாம்னு இருக்குறேன். let it be a mini christmas celebration too. ரொம்ப நாளாச்சு நம்ம வீட்டுல gathering வச்சுல.... உன் friends, colleagues எல்லாரையும் invite பண்ணு.... and don't forget to invite விமல்!” என்றான் ரோஹித்.

அவன் அசைவுகளை கண்கொட்டாமல் பார்த்த ஷீலா தனக்குள்ளே சொல்லி கொண்டாள், “i love this crazy fellow."

*முற்றும்*

அலைபாயுதே-(1)

இடியும் மின்னலுமாய் மழை பயங்கரமாக பெய்து கொண்டிருந்தது. மாலை மணி 6 தான். இருப்பினும் இருட்டாக காட்சியளித்தன மேகங்கள். அப்போது தான் ரோஹித் தன் வீட்டுக்குள் நுழைந்தான். வேலை பளுவால் களைப்பாக இருந்த ரோஹித் தன் அறைக்குள் சென்று படுக்கையில் தொப்பென்று விழுந்தான். அவன் கை படுக்கை பக்கத்திலிருந்த photoframeமை தொட்டது. கையில் அதை எடுத்து ரசிக்க தொடங்கினான்.



படத்தில் ரோஹித்தும் அவன் அன்பு மனைவி ஷீலாவும்!


"i miss you sheela" என்று சொல்லிகொண்டே ஷீலாவின் படத்திற்கு முத்தமிட்டான்.


திடிக்கிட்டு எழுந்தான் இடி சத்தத்தை கேட்டு. ஜன்னல் அருகே வந்து மழையின் அட்டகாசத்தை கண்டான். தன் சட்டையில் இருந்த கைபேசியை எடுத்து ஷீலாவுக்கு ஸ் எம் ஸ் அனுப்பினான்.


hi ma, ரொம்ப மழையா இருக்கு. பத்திரமா வா. நான் வேணும்னா வந்து pickup பண்ணட்டா?


வேணாம் என்று பதில் வந்தது. குளித்து முடித்துவிட்டு ரோஹித் தன் லேப்டாப் பையில் இருந்த receipe புத்தகத்தை எடுத்தான். பக்கம் 26க்கு திருப்பி ஜெய்பூர் கோழியும் மிளகு ரசமும் வைக்க ஆரம்பித்தான். ஷீலாவுக்கு மிளகு ரசம் ரொம்ப பிடிக்கும்.



மணி 745 ஆகிவிட்டது. ஒலித்தது வீட்டின் அழைப்பு மணி . வாசலில் ஷீலா.


ஷீலாவின் லேப்டாப் பையை வாங்கி கொண்ட ரோஹித், “என்னமா, நனைஞ்சுட்டீயா?”


ஷீலாவின் பதில் “friend lift கொடுத்தா.”


சமையலைறையிலிருந்து வந்த வாசத்தை நுகர்ந்த ஷீலா “மிளகு ரசமா?” என்றாள்.


“ஆமா ஷீலா. இன்னிக்கு ஆபிஸ்ல பிரியா ஒரு புது receipe புக் கொடுத்தா. அத பாத்து செஞ்சேன். வாசம்லாம் ஒகே. சாப்ட்டு பாத்தா தான் தெரியும்.” என்று சிரித்து கொண்டு மேசையில் தான் சமைத்ததை எடுத்து வைத்தான்.


ஷீலா எதற்குமே ஆர்வம் காட்டாமல் இருந்தாள்.


“சரி மா, போய் குளிச்சுட்டு வா. சேந்து சாப்பிடலாம். தனியா சாப்பிட பயமா இருக்கு” என்று புன்னகையத்தபடி தன் சமையலை தானே கிண்டலடித்து கொண்டான்.

ரோஹித்தின் பொழுது போக்கு என்றால் பலவித உணவுகளை சமைப்பதுதான். நன்றாக சமைப்பான். இருந்தாலும் எப்போதுமே தன் சமையலை பற்றி கிண்டலடிப்பது அவன் வழக்கம். கொஞ்சம் தன்னடக்கம் என்றே சொல்லலாம். இந்த மாதிரி பல முறை வித்தியாசமாக சமைத்து ஷீலாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறான். அவள் ரசித்து உண்டு மகிழ்ந்திருக்கிறாள்.


“ரோஹித்.......ம்ம்ம்...எனக்கு பசிக்கல... நீ சாப்பிடு.” என்றாள் ஷீலா. ஷீலா ஆபிஸ் முடிந்து வந்தபிறகு அதிகமாய் பேசாததை கவனித்தான் ரோஹித். எப்போதுமே கலகலப்பாகவும், கிண்டல் அடித்து கொண்டு, ஆபிஸில் நடந்ததை ஒவ்வொன்றையும் நடித்தே காட்டுவாள். ஆனால் ஒரு வாரமாக அவள் அவளாகவே இல்லை.


ஏதோ வேலை டென்ஷன் என்று ரோஹித் அதை பற்றி கேட்காமல் இருந்தான். ‘இந்த இரண்டு வருட கல்யாண வாழ்க்கையில் ஷீலா இப்படி நடந்து கொண்டதே இல்லையே. இப்ப என்ன ஆச்சு. shall i ask her’ என்று ஒரு பக்கம் குழப்பத்திலும் இன்னொரு பக்கம் அவள்மீது கொண்ட அக்கறையிலும் மனம் பந்தாடி கொண்டிருந்தது.



“இல்ல மா, கொஞ்சமா...சாப்பிடு. ஒன்னுமே சாப்பிடாம....” என்று தன் வாக்கியத்தை முடிப்பதற்குள் ஷீலா


“ரோஹித், am not a child to be nagged at. எனக்கு வேண்டாம்ன்னா விட்டுடேன்...எதுக்கு torture பண்ணுறே!” என்று கத்தினாள். அறை கதவை ‘படார்’ன்னு சாத்திவிட்டு தூங்க சென்றாள்.


ரோஹித்துக்கு தூக்கம் போனது. செஞ்ச சாப்பாடும் வேஸ்ட்டா போனது. அவனும் சாப்பிடவில்லை. அவன் மனம் குழப்பமாக இருக்கும்போதெல்லாம் டைரி எழுதுவான்.


அன்று டைரிக்கும் பேனாவுக்கும் வேலை வந்தது. எழுத தொடங்கினான்,




ஷீலாவுக்கு ஏதோ பிரச்சனை இருக்கு. அது மட்டும் புரியது. அவ என்னிக்குமே சத்தம் போட்டது கிடையாது. எனக்கு அவ மேல கோபம் வரது. சத்தம் போட்டதுக்காக இல்ல... ஆனா அவ பிரச்சனைய ஏன் என்கிட்ட share பண்ணிக்காம இருக்கா, அதுக்கு தான். எனக்கு ஆபிஸ்ல எத்தனையோ கஷ்டம் வந்தப்போ, எனக்காக பக்கபலமா இருந்தா. such a bold woman she is. ஆனா அந்த தைரியமெல்லாம் இப்போ எங்க போச்சு?

no, whatever it is, i need to help her. i hav to help her. god, pls be my support!


i love you sheela.


மறுநாள் காலையில் அவனுக்கு முன்பே அவள் கிளம்பி வேலைக்கு சென்றுவிட்டாள்.

இன்று எப்படியும் பேசிவிட வேண்டும் என்று ரோஹித் lunch break நேரத்தில் ஷீலாவின் ஆபிஸ் பக்கத்திலுள்ள காபி ஷாப் கடையிலிருந்து ஃபோன் செய்தான் அவளுக்கு.


நம்பரை பார்த்ததும் அவள் கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து 10 முறை ஃபோன் செய்தான். 11வது முறை தான் எடுத்தாள் ஷீலா.

மறுமுனையில் “ஷீலா, listen to me. don't cut the line. sorry to disturb u. நீ பிஸியா இருப்பேன்னு தெரியும். but i have to talk to you. கொஞ்சம் காபி ஷாப்புக்கு வர முடியுமா? உன் ஆபிஸ் பக்கத்துல உள்ள கடையில தான் வேட் பண்ணுறேன். i won't take much of your time. just 5 mins. 5 mins only. pleaseee......" என்று கெஞ்சி கேட்டான் ரோஹித்.


போலாமா வேண்டாமா என்ற குழப்பத்தை தவிர்த்து 20 நிமிடம் கழித்து சென்றாள்.


புன்னகை மாறாத அவன் முகத்தில் அப்போது தெரிந்த சோகம் அவளை அதிகம் காயப்படுத்தியது.


”காபி ஏதேச்சு வேணுமா? sorry to disturb u. but இத உன்கிட்ட பேசியே ஆகனும்.” ரோஹித் தொடங்கினான்.


“ஒரு வாரமா ஆச்சு. என் ஷீலாவ பாத்து! ஏதோ...something....something has been disturbing you. அது என்னன்னு கேட்டு நான் தொல்லை பண்ண மாட்டேன். உனக்குன்ன ஒரு personal space கண்டிப்பா இருக்கு. இருக்கனும். நீ என்கிட்ட share பண்ணனும்னு அவசியமில்ல.... உன் office colleauges, friends....பக்கத்துவீட்டு மீனாட்சி ஆண்ட்டி, இல்ல உன் அம்மா, sister....இப்படி யாருக்கிட்டையாவது சொல்லி உன் மனசுல இருக்குற பாரத்த இரக்கி வை மா. problems வந்துட்டாலே அதுக்கு கண்டிப்பா solutions இருக்கும். நீ யாருக்கிட்டையும் சொல்லாம இருந்தா... உனக்கு தான் பாதிப்பு வரும். இப்படி சாப்பிடாம, யாருக்கிட்டையும் பேசாம.... ரொம்ப கஷ்டமா இருக்கு உன்னைய இப்படி பாக்க....” என்று தன் மனதில் பட்டதை அவன் கொட்டினான். கண்களில் ஒருவித தவிப்பு, உதடுகளில் ஒருவித படபடப்பு.


“யோசிச்சு பாரு மா....ok...5 mins ஆச்சு.... நான் கிளம்புறேன். take care ma."



" i love u sheela" என்றவன் ஆறுதலாய் அவள் நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்து மேசையிலிருந்த கைபேசியையும் கார் சாவியையும் எடுத்து கொண்டு சென்றான். வாசலின் கண்ணாடி கதவை திறந்து கொண்டு காரில் ஏறி செல்லும்வரை அவனையே பார்த்து கொண்டிருந்தாள் ஷீலா.


குழப்பம், அவள்மீது அவளுக்கு இருந்த கோபம், கொன்றுகொண்டிருந்த மனசாட்சி, ரோஹித்தின் அன்பு வார்த்தைகள், அவன் காட்டிய பரிவு, சொன்ன சொல், கொடுத்த காதல் முத்தம்-இப்படி அனைத்தும் அவளை பலமுனைகளில் நின்று குத்தியது. கண்களிலிருந்து வழிந்தது கண்ணீர் அருவிகள்.....


(தொடரும்)

Dec 17, 2008

6 வயதில் ’கண்கள் இரண்டால்’....

நேத்திக்கு keyboard வகுப்புக்கு போயிட்டு வந்து ரொம்ப demotivated ஆயிட்டேன். நான் ரொம்ப slow learner தான். ஒத்துக்கிறேன். டீச்சர் உனக்கு "ரிதமே வராது” அப்படின்னு சொல்லிட்டு கிளம்பிபோயிட்டாங்க. music pieces எல்லாமே முன்னாலே கத்துகிட்டு வந்து அப்பரம் அவங்கிட்ட வாசிக்கனுமாம். அதுக்கு எதுக்கு டீச்சர்!

சரி அவங்க ஏதோ கோபத்துல பேசிட்டாங்கன்னு நானும் வீட்டுக்கு கிளம்பிவந்து விட்டேன். நான் எனக்கே inspiration தேடி கொள்வது youtube வீடியோக்களை பார்த்து தான்!

அந்த 6 வயசு பாலாஜி வாசிப்பை பார்த்து, எனக்குள்

“ச்சே....நீ கத்துக்கு வேண்டியது நிறைய இருக்கு. இந்த ஜன்மத்துக்குள்ள grade 8 வாங்கி ஒரு கலக்கு கலக்குற!” என்றது மனசு.:)

Dec 16, 2008

தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்(2)


தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்:


அஜ்மல் மற்றும் குளிர் 100டிகிரி பட நாயகர்கள்.

அஜ்மல், அஞ்சாதே படத்தில் நரேனின் நண்பராக நடித்தவர். அப்போ ஏதோ ஒன்னும் attract பண்ணவில்லை. படமே இருட்டா இருந்துச்சு. சரி அத விடுங்க... ஆனா அன்னிக்கு ஏதோ ஒரு புது படத்தின் துவக்க விழா புகைப்படங்களை பார்த்து “அட” என்று மனம் சொல்லியது.


சமீபத்தில் இந்த குளிர் 100டிகிரி புகைப்படங்களை பார்த்தேன். பார்த்தவுடனே மனம் hot 0 டிகிரி ஆகிவிட்டது :)


(3rd & 4th from left)

Dec 15, 2008

விடுமுறை to நியூசிலந்து (2)



துளசி கோபால், ஹாலோ.....!! நான் அங்க சென்றது 5 ஊர்களுக்கு- auckland, christchurch, queenstown, dunedin and rotoura. நீங்க எங்க இருந்தீங்க? தேடி தேடி பார்த்தேன், ஆள காணும்! (அவ்வ்வ்....escape)

சரி முந்திய பகுதியில் மௌரி கலாச்சாரத்தை பத்தி சொல்லி கொண்டிருந்தேன்ல. ஆமாங்கோ ரொம்ப வித்தியாசமான ஒரு கலாச்சாரம். அதுல எனக்கு பிடிச்சது என்னவென்றால் அங்க உள்ளவர்கள் அந்த கலாச்சாரத்தை அவ்வளவு பெருமையாக எண்ணுகிறார்கள். (நம்மில் பலர் பார்த்து பின்பற்ற வேண்டிய விஷயம்:)

அவர்கள் கலாச்சாரத்தில் வணக்கம் சொல்லும்விதம்- இருவரும் வணக்கம் சொல்லவேண்டும் என்றால், இருவரின் மூக்குகளை உரசி கொள்ள வேண்டும். அவர்களுக்கு என்று ஒரு வீர நடனம், பாடல். இப்படி வீரம் நிரம்பிய அவர்களது நடனத்தை ஆடுவதற்கு காரணம், காட்டில் வாழும்போது எதிரிகளை துரத்துவதற்காம்.



ஆகவே தான் இன்றைய நிலையிலும்கூட ஒவ்வொரு rugby போட்டி நடக்கும்முன்பு நியூசிலந்து குழுவினர் தங்களது மௌரி நடனத்தை (haka) ஆடுவார்களாம். ஆம், இந்தியாவிற்கு எப்படி கிரிக்கெட்டோ அப்படி தான் rugby நியூசிலந்துக்கு. அந்நாட்டின் பொருளாதாரத்தையே மாற்றகூடிய வல்லமை கொண்டது அவ்விளையாட்டு.

lord of the rings, narnia போன்ற படங்கள் நியூசிலந்தில் உள்ள மலைபகுதிகளில் எடுத்ததாம். ரொம்ப பிரமிப்பா இருந்துச்சு! sheep shearing farm(agrodome) மற்றும் rabbit shearing இடங்களுக்கு சென்றோம். எப்படி sheep shearing செய்கிறார்கள் என்பதை கண் முன் காட்டினர். அந்த ஆடுகளை மெய்க்க நாய்கள் இருக்கின்றனர். அந்த நாய்கள் ஆடுகளை திடல்களில் மெய்க்க விட்டு திரும்பி கொண்டு வருமாம். அந்த நாய்கள் பாதுகாப்பாக ஆடுகளை கொண்டு வர பல பயற்சிகள் எடுத்துள்ளன. குரைக்காதாம்! ஆனால் கண்களாலே ஆடுகளை மிரட்டுமாம்!!



அங்கு சென்று பார்த்தபிறகு என் மனதில் தோன்றியது “ஆடுகளை/மாடுகளை பார்த்து கொள்வது ஒரு கலை!”. ஆனா நம்ம ஊருல என்ன சொல்றோம்,படிப்பு வரலன்னா ‘மாடு மெய்க்க தான் நீ லைக்கு’. !! :)


பின்னர், mrs jones அவர்களின் பூந்தோட்டத்திற்கும் பழ தோட்டத்திற்கும் சென்றோம். அடேங்கப்பா.... எவ்வளவு பூக்கள்! அங்க போய் வளைச்சு வளைச்சு நானும் அக்காவும், தங்கையும் பல படங்களை எடுத்தோம். jump shot, boys ale ale shot, பூ பக்கத்துல நிக்கிற மாதிரி, பின்னாடி நிக்கிற மாதிரி, அந்த காலத்து பாரதிராஜா படங்களில் வந்த மாதிரி- இப்படி சில பல படங்களை எடுத்து கொண்டோம்.



பிரமாண்டமான இன்னொரு இடம் ‘milford sound' என்ற இடம். நீர்வீழ்ச்சி, மலைகள் என்று இயற்கை அழகு நிரம்பி வழியும் இடம். இந்த இடத்துக்கு செல்ல 5 மணி நேரம் பயணம் செய்ய வேண்டு. காலை உணவு முடித்தவுடனே கிளம்பிவிட்டோம்.

எனக்கு பஸ் பயணம் ஒத்துவராது என்பதை அன்று தான் புரிந்து கொண்டேன். வாந்தி வாந்தியா வர மாதிரி ஒரு உணர்வு. ஆனால் வெளியே வர மாட்டேங்குது! சரி முழிச்சு இருந்தால்தானே இந்த பிரச்சனை, ஆக சட்டென்று தூங்கிவிட்டேன். அதுக்கு அப்பரம் பரவாயில்லை.

இன்னொரு விஷயம். நிறைய நாட்கள், பஸில் தான் அதிக நேரம் பயணம் செய்தோம். தூக்கமா வரும். நானும் என் தங்கையும் ‘பஸில் எப்படி தூங்குவது” அப்படின்னு ஒரு புத்தகம் எழுத போறோம். எங்க அனுபவங்களில், பல varietyயான தூங்கும் techniqueக்களை கண்டுபிடித்துவிட்டோம்ல:)

milford sound இடத்தை அடைந்துவிட்டோம். cruiseலில் சுற்றி பார்க்கலாம். எனக்கு cruiseலில் செல்வது பிடிக்கும். ரொம்ப குளிர் காற்று அடித்தது. ரொம்ப நல்லா இருந்தது!


நியூசிலந்திலில் உள்ளவர்கள் விரும்பி ஈடுபடுவது சாகச விளையாட்டு. அப்படி ஒரு விளையாட்டு தான் jetboat ride. 60km/hr வேகத்தில் போகும் boat. அது 360degree சுற்றும் வேற. இதுக்கு தனியா காசு கட்டனும். NZ$90. milford sound (NZ$225) இடத்துக்கும் தனியா காசு கட்டனும். இரண்டுமே optional tour.
என்பதால். ஏற்கனவே ஏகப்பட்ட செலவு. ஆக நான் போகவில்லை என்றுவிட்டேன்.

jetboat rideக்கு அக்கா, தங்கச்சி மற்ற சுற்றுலா உறுப்பினர்கள் சிலர் சென்றனர். NZ$90 காசுக்கு சிங்கையில் நான் 7 plates of chicken rice அல்லது 8 plates of mutton briyani அல்லது 9 movie tickets வாங்கலாம் என்று மனதில் கணக்கு போட்டு கொண்டிருந்த போது அம்மா என்னிடம் NZ$100 பணத்தை நீட்டி,

“அப்பரம் மேல shopping போக டைம் கொடுப்பாங்களாம். உனக்கு என்ன விருப்பமோ அத வாங்கிக்கோ’ என்றார்.

ஆஹா....!!

இப்படி ஒன்னு நடக்கனும்னு தெரிஞ்சி இருந்தா, அக்காவையும் தங்கச்சியும் போக வேண்டாம்னு சொல்லி NZ$300 collection பண்ணி இருக்கலாமே! அம்மா கொடுத்த NZ$100 சிங்கைக்கு வந்து இங்க பணத்தை மாற்றி இங்கு செலவு பண்ணலாம்னு ப்ளான்.

என் அம்மா என் பொறந்த நாள் அன்னிக்கு பணம் கொடுப்பாங்க. ஆனா மறுநாளே marketல things வாங்கனும், அத வாங்கனும், இத வாங்கனும் சொல்லி பணத்த திருப்பி வாங்கிட்டு போயிடுவாங்க. அந்த மாதிரி இந்த NZ$100 ஆயிவிடுமோன்னு அந்த பணத்தை பத்திரமா வைச்சுருக்கேன் என் கைபையில்.

அக்காவும் தங்கச்சியும் boat ride முடித்துவிட்டு வந்தனர்.

அப்பரம் cadbury chocolate factoryக்கு சென்றோம். எப்படி அதை தயார் செய்கிறார்கள், அதன் வரலாறு பற்றி கூறி factory tourக்கு அழைத்து சென்றனர். ரொம்ப சூப்பரா இருந்துச்சு!! அங்கேயே இருக்கலாம்னு தோணுச்சு. அதில் ஒரு அறை உண்டு- sensory evaluation room. அதில் புதிய சாக்கெலட்களை ருசி பார்ப்பதற்கு ஆட்கள் வருவார்களாம். அது அதன் அவர்கள் முழு நேர வேலையாம்! அந்த வேலைக்கு யாருச்சு போக விரும்புறீங்களா? :)

நியூசிலந்தில் எந்த ஒரு சின்ன town மாதிரி இருந்தாலும், அங்க எப்படியாவது ஒரு north indian உணவகம் இருந்துவிடும்! இந்தியன் உலகம் முழுவதும் இருக்கிறான் என்று நினைக்கையில் பெருமையாக உள்ளது.

நான் பார்த்த இடங்களில் எனக்கு பிடித்த ஊர் -queenstown. சின்ன நகரம் தான். ஆனா குளிர் காற்றும் அந்த மலை சார்ந்த பகுதியும் simply superb! the most romantic place என்றுகூட சொல்லலாம்!:)

வெளியூர் போனாலே souvenirs வாங்க வேண்டும். நெருங்கிய இரண்டு நண்பர்களுக்கு மட்டும் chocolates மற்றும் new zealand cap வாங்கினேன்.

நான் செய்த சாதனை பற்றி சொல்லியே ஆக வேண்டும். dunedin என்ற ஊரில் தான் world's steepest street உண்டு. அது 33 degree அளவில் இருக்கும். அதில் நடக்க வேண்டும். கொஞ்ச கஷ்டமா தான் இருந்துச்சு. சாலையில் இரு பக்கமே வீடுகள். இந்த வீடுகளில் இருப்பவர்கள் எப்படி தான் ஒவ்வொரு நாளும் கீழேயும் மேலேயும் இறங்கிபோறாங்களோ.

அந்த சாலையில் ஏறிமுடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். எனக்கும் ஒன்னு கிடைத்தது.:)

christchurchல் தான் கடைசி நாள் தங்கினோம். ஞாயிற்றுகிழமை என்பதால் தெருக்களில் கூட்டமே இல்லை- ஒரு சில குண்டர் கும்பல்களை தவிர! ஆமாங்கோ! கொஞ்சம் ஒரு மாதிரியா இருந்துச்சு. தண்ணி அடித்துவிட்டு ஒரு கும்பல் எங்களை பார்த்து ஏதோ சொல்லிகொண்டு சென்றனர். உங்க ஊர்ல நீங்க ரவுடின்னா, எங்க ஊருல நாங்களும் பெரிய ரவுடி தான் என்ற முகபாவத்தோடு நடந்து சென்றோம்.

சாலையை கடக்கும்போது பேருந்தில் பஸ் ட்ரைவர் ஒருவர் எங்க அப்பாவை பார்த்து சிரித்தார். அருகில் சென்றுபார்த்த போது தெரிந்தது அவரும் ஒரு தமிழர் என்று!

நல்ல பல நினைவுகளுடன் வீடு திரும்பினோம். சிங்கையிலிருந்து வரும்போது விமானத்தில் இருந்த குறை போகும்போது இல்லை. திரும்பி வந்த விமானத்தில் நிறைய ஆண் flight attendant இருந்தாங்க (அதுவும் அழகா..) ஹாஹாஹா....

Dec 13, 2008

விடுமுறை to நியூசிலந்து(1)



நியூசிலந்தின் செந்தேன் மலரே
தமிழ் மகனின் பொன்னே சிலையே....

அட ச்சே ரிமெக்ஸ் பண்ணி பண்ணி எத எழுதுனாலும் அதுவே வருது..:)

ஆமாங்கோ... நியூசிலந்துக்கு 10 நாள் சுற்றுலா பயணம் சென்றேன் குடும்பத்துடன். டூர் குரூப் ஏற்பாடு மூலம் தான் சென்றோம். எனினும் எனக்கு free and easy tour(சொந்தமாக போவது) போல் செல்வது தான் பிடிக்கும். நாமே நம்ம route ப்ளான் பண்ணி செல்லலாம். சொந்தமா டிரைவ் பண்ணி செல்லலாம். ஜாலியா இருக்கும். ஆனா குடும்பத்தோடு செல்லும்போது சரிபட்டு வராது. அப்பா northல போக சொன்னால், அம்மா இல்ல இல்ல southல route போகும் என்பார், நான் நடுவில் நின்று கொண்டு இல்ல இல்ல eastல தான் போகனும் என்று சொல்வேன். ஆக, இது சரிபட்டு வராது.

இந்த டூர் குருப்ல 34 பேர். 10 குடும்பங்கள் மொத்தம். தன் வயதான பெற்றோருடன் வந்தார் ஒரு பெண்மணி. ரொம்ப friendly type. அப்பரம் இன்னொரு குடும்பம்- ஒரு பொண்ணு. அவருக்கு இரட்டை குழந்தைகள(15 வயசு). இன்னும் இரண்டு பஞ்சாபி குடும்பத்தினர்-அண்ணன் குடும்பமும் தம்பி குடும்பமும். இந்த சகோதரர்களின் கடைசி தம்பி எங்க வீட்டு apartmentலில் தான் இருக்கிறார். பேசும்போது தெரிந்து கொண்டோம். அப்பரம் இன்னொரு சீன குடும்பம்- இரண்டு பெண் குழந்தைகளுடன். குடும்ப தலைவர் படுஅமைதி. நானே கேட்டுவிட்டேன் “ஏன் அங்கிள், நீங்க எப்போதுமே இப்படி தானா?” அவர் அமைதி பிடித்திருந்தது. பிறகு இன்னொரு குடும்பம்- 5 வயது பையனுடன். அவன் வாயை திறந்தால் எட்டூருக்கும் பேசுவான்!! இப்படி பலவித மக்கள்.

டூர் சிறப்பாக சென்றதிற்கு முதல் காரணம் எங்களின் அருமையான சுற்றுலா வழிகாட்டி. ரொம்ப ரொம்ப நல்லவர், ரொம்ப friendly, எல்லாருக்கும் எந்த குறையும் வராத அளவுக்கு பார்த்து கொண்டார்.

சிங்கையிலிருந்து நியூசிலந்துக்கு 10 மணி நேரம் விமான பயணம். விமான டிவியில் சமீபத்தில் வந்த ஹிந்தி படங்கள், தமிழ் படங்கள், korean, arabic இப்படி பல படங்களை பார்த்து 10 மணி நேரத்தை ஓட்டினேன். எங்கள் முதல் சுற்றுலா தடம் auckland. மதிய வேளை என்றதால் சற்று வெயிலாக இருந்தது. ஆனால் சொன்ன அளவு “பயங்கரமா குளிரும்” என்பதுபோல் ஒன்றும் இல்லை. அடடே இவங்கள நம்பி நான் 2 சட்டை போட்டிருந்தேன்.

ஆனா, எங்களது சுற்றுலா லீடர் சொன்னது சரி தான். இரவு நேரங்களில் 12degree celsius. சிங்கையில் 32 degree celsiusல் இருந்த எங்களை ஏதோ fridgeக்குள் வைத்தது போல் உணர்ந்தோம். aucklandல் பல இடங்களுக்கு சென்றோம்.

நியூசிலந்தின் சிறப்பு என்றால், இயற்கை தான்! அடேங்கப்பா எத்தன மலைகள், எத்தன ஏரிகள். எத்தன மலர்கள்... தமிழ் சினிமா பாடல்களின் அபிமான பல இடங்கள். சந்தோஷ் சுப்பரமணியம் படத்தில் வந்த சில பாடல்களை அங்குதான் எடுத்தார்களாம்.

சரி சாப்பாடு விஷயத்துக்கு வருவோம். scrambled eggs, bread toast, chips, sausages, becan, hashbrown, tomatoe இப்படி காலை உணவு! முதல் 3 நாள் நல்லா இருந்துச்சு. ஒரு ‘america america london london' feel நம்மளுக்கு இருந்துச்சு. நாலாவது நாளு நாக்கு செத்து போச்சு. அடக்கம் பண்ண முடியாம அல்லோலப்பட்டு கொண்டிருந்தோம். வீட்டுல இட்லி, தோசை சுட்டு வச்சு சாப்பிட சொல்லி அம்மா கெஞ்சி கேட்கும்போது macdonald'sக்கு போய் சாப்பிட்ட வாய் தானே எனது. எனக்கு நல்லா வேணும் என்று நினைத்து கொண்டு மீதி நாட்களை கஷ்டத்துடன் கழித்தேன்! எதுவுமே நம்ம கிட்ட இருக்கும்போது அதோட அருமைய தெரிஞ்சிக்க மாட்டோம்,

காலை உணவாக இருந்தாலும் சரி
காதலா இருந்தாலும் சரி!
(அவ்வ்வ்வ்...ஐயோ காயு என்ன ஒரு philosophy.பின்னிட்டேள், பிச்சிட்டேள்)

ok back to the new zealand trip. நியூசிலந்தில் சில சிறப்புகள் உண்டு.
tip-top ஐஸ்கீரிம், cadbury chocolates, waterfalls, sheeps, rabbit, milford sound, jetboatting, luge ride,sky diving, sky jump, bungee jumping, lakes. இப்படி நிறைய உண்டு.

குறிப்பா சொல்லபோனால் நியூசிலந்து மக்கள் பெருமையாக எண்ணும் அவர்களது maori கலாச்சாரம். அதை பத்தி அடுத்த பகுதியில் சொல்லுறேன்...

kia Ora ( maori மொழியில் goodbye என்று அர்த்தம்)

அடுத்த பகுதி

Dec 11, 2008

all day jolly day

அம்மா அப்பா ஊருக்கு போனால்...

அகக அகக....

என்ன ஒரு சொர்க்கம்!! அம்மா அப்பா ஊருக்கு சென்று இருப்பதால் அடுத்த 10 நாளுக்கு தினம் தினம் “where is the party tonight?" தான். சென்ற வருடம் இவ்வாறு நடந்தது. வீட்டில் ஒரு குட்டி gathering. all gals' party. இதுல என்ன விசேஷம்ன்னா.. இவங்க ஊருக்கு போனால், உலகத்திலேயே சந்தோஷம்படுவது எங்க குரூப் பசங்க தான். அன்னிக்கு தான் ஸ் எம் ஸ் பண்ணேன் தோழிக்கு

நான்: hey my parents are gg for a 10-day trip to india.

தோழி: wen?

நான்: thursday

தோழி: சரி, வெள்ளிக்கிழமை காலையில பெட்டி படுக்கையோட வந்துடுறேன்..

exam hallல தேடி வந்த.....

தன்னானா தன்னானனா தானா!
தன்னானா தன்னானனா தானா!

ஏய்! தன்னானா தன்னானனா தானா!
தன்னானா தன்னானனா தானா!

ஏய்! exam hallல தேடி வந்த கன்னுக்குட்டி நான்!
ஏ! exam hallல தேடி வந்த கன்னுக்குட்டி நான்!

இந்த காலு வழுக்கி chairல் உட்காந்தது மாமி - என்
கண்ணைக் கட்டி hallல விட்டது சாமி சாமி சாமி!

மார்க்க அள்ளி போடு! உங்க புண்ணியத்த கூட்டு!
மார்க்க அள்ளி போடு! உங்க புண்ணியத்த கூட்டு!

ஏய்! exam hallல தேடி வந்த கன்னுக்குட்டி நான்!
ஏ! exam hallல தேடி வந்த கன்னுக்குட்டி நான்!

internet தொட்டதாலே... படிக்க மறந்து போனேன்!
டிவிய கொண்டா... உன்னையும் பாத்துகிறேன்!

அடடா algebra வந்தா அழுகை வரும் நண்பா...!
இதுவும் பத்தாதம்மா ஊத்திக்கோ தெம்பா!


november 14 தேர்வு முடிச்சாச்சு. அதுக்கு அப்பரம் எழுதியதுதான் இது....