Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Dec 20, 2017

சிம்பு கலந்து கொண்ட workshopல் நடந்தது என்ன?

கதவை திறந்தால், ஏசி குளிர் சுளீர் என்று முகத்தில் படர, சிம்பு உள்ளே நுழைந்தார். இருட்டாக இருந்த அறையில் switch எங்கே என தேடி அழுத்தியபோது, அரவிந்த்சாமி அறை ஓரத்தில் உட்கார்ந்து கையிலிருந்த fidget spinnerரோடு விளையாடி கொண்டிருந்தார்.



சிம்பு (பற்களை கடித்து கொண்டு, வாயை பாதிக்கு மேல் திறந்தும் திறக்காமலும்): சார், என்ன... சார்? இரு...ட்டு...லே இர்ர்ர்ர்கீ...ங்கா?

அரவிந்த்சாமி: வாங்க சிம்பு. என்ன இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க?

சிம்பு: நானும் சீக்கிரம் வரும் ஆளு தான் சார்.

அரவிந்த்சாமி தொடர்ந்து fidget spinnerல் விளையாடி கொண்டிருக்கிறார் வேறு எதுவும் பேசாமல்.

சிம்பு (முணுமுணுத்தபடி, தாடியை சொரிந்தவாறு): இப்ப புரியுது ஏன் காஜோல் இவர வேண்டாம்னு பிரபுதேவாகூட போனாங்கனு.

அப்போது உள்ளே நுழைந்தார் மணிரத்னமும் சுஹாசினியும். சுஹாசினி வலது கையில் மருந்து மாத்திரைகளும், இடது கையில் வசனங்கள் அடங்கிய தாட்களும் இருந்தன. மணிரத்னம் சிம்பு மற்றும் அரவிந்த் கைகளை குலுக்கி வரவேற்றார்.

மணி: i am happy you came.

சிம்பு: சார், i am happy you casted me in this film.

மணி ஒரு செண்டிமீட்டர் புன்னகையை வீசினார்.

சிம்பு: மேடம், அது என்ன மருந்து?

சுஹாசினி: நீ எப்போ மேடைல "மணி சாரும் என் fanஆ இருப்போரோ'னு சொன்னீயோ அப்போவே எனக்கு பயம் வந்துச்சு. அதான் for precaution. மணிக்கு ஏற்கனவே உடம்ப சரியில்ல.

சிம்பு: சார் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு செல்பி எடுத்தோம் சார்.

மணி: ஒகே.

சிம்பு: நன்றி சார்.

மணி: யாருக்கு அனுப்புறீங்க.

சிம்பு: என் ரசிகர்களுகிட்ட சொல்லி, இத மீடியாவுல போட சொல்றேன் சார். அப்ப தான் நம்புவாங்க எனக்கு வேலை கிடைச்சுருக்குனு.

மணி: ரசிகரா?

சிம்பு: அது ஒரு 10,15 பேர் இருக்காங்க. என் தீவிர ரசிகர்கூட்டம். அவங்க இல்லாம நான் இல்ல....

கைவிரல்களையும் கைகளையும் ஆட்டி பேசி கொண்டிருக்கையில் ஜோதிகா உள்ளே வந்தார். சுஹாசினியை கட்டிபிடித்து ஹாய் சொல்லிவிட்டு மணியிடம் வணக்கம் கூறினார்.

சிம்பு: ஹாய் ஜோ எப்படி இருக்கீங்க?

ஜோ: ஹாய் சிம்பு. am fine. நீங்க எப்படி இருக்கீங்க?

சிம்பு: நாச்சியார் டெர்ல்லர் பாத்தேன். செம்மங்க.... எனக்கே போட்டியா வருவீங்கனு நினைக்கல.  பீப் சாங் மாதிரி இந்த படத்துலயும் ஒன்னு இருக்கனும்னு கேட்போங்க. மணி சார் கண்டிப்பா ஒத்துப்பாரு. ஏனா அவர் என் fanங்க.

சின்ன பையன் ஆகாயத்தில் பட்டத்தை பறக்கவிட்டு அனாந்து பார்த்து சந்தோஷம்படுவதுபோல் குதித்தான் சிம்பு. எதுவும் பேசாமல் ஜோ சுஹாசினியிடம் சென்றார். ஐஸ்வர்யா ராஜேஷ் வந்தார்.

சிம்பு: ஹாய் ஐஸ்.

ஐஸ்வரியா: என் பெயர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

சிம்பு: கூட கொண்டு வரலயா?

ஐய்வரியா: மொக்க ஜோக்.

சிம்பு: உங்க பெயர் சொன்னா, எனக்கு பழைய ஞாபகமெல்லாம் வருது. but பர்ர்வால adjust பண்ணிக்கிறேன்.

மணி: ok ladies and gentlemen, எல்லாரும் செண்டர்ல உட்காருங்க.

சிம்பு: கீழயா?

சுஹாசினி: ஆமா.

சிம்பு: என்னங்க....நான் எவ்வளவு பெரிய ஸ்டார் தெரியுமா?

மற்றவர்கள் அனைவரும் தரையில் அமர்ந்துவிட்டு சிம்புவை பார்த்தனர்.

சிம்பு: ஓ...எல்லாரும் உட்காந்திட்டாங்களா. சரி பர்ர்வால நானும் உட்காரேன்.

மணியும் சுஹாசினியும் அனைவருக்கும் வசனத்தாளை கொடுத்தனர்.

சிம்பு: மணி சார். எங்க விஜய் சேதுபதியும் வாஃட் வசிலும்?

மணி: அவங்க இன்னிக்கு வரமாட்டாங்க.

சிம்பு: அவங்க வர்லனா எப்படி rehearsal பண்றது?
அவங்களுக்கு பதிலா VTV கணேஷம் மொட்டை ராஜேந்தரையும் போடுங்க சார்.

சுஹாசினி மணி காதில் மட்டும் விழும்படி: மணி, do you really want simbu to be in this film?

மணி ஒரு செண்டிமீட்டர் புன்னகையை வீசினார்.

மணி: ok this is scene 12. all characters are in the dense forest area in kashmir.....

அவர் சொல்லி முடிப்பதற்குள், அரவிந்த தரையில் சாய்ந்து புரண்டு, இல்லாத கொடி மேல உருண்டு கொண்டிருக்க, ஜோவும் ஐஸ்வர்யாவும் வாய் பிளந்து ஆச்சிரியம் அடைந்தனர்.

சுஹாசினி: அரவிந்த் எந்திரிங்க. காஷ்மீர்னாவே அது தானா?..... get up arvind. இது ரோஜா பார்ட் 2 இல்ல.

மணி: ok everyone listen. all characters are in the dense forest area in kashmir. you are the forest officers on a mission. you are there for a campfire night. and so this is the scene...சிம்பு நீங்க start பண்ணுங்க.

8 பக்கம் கொண்ட வசனத்தாளை புரட்டி புரட்டி பார்த்துவிட்டு முழித்தார் சிம்பு.

சிம்பு: எனக்கு என்ன பிரச்சனை-னா..... சார் ஒன்னுமே புரியல சார்.

சுஹாசினி: இது பாரதியார் கவித, சிம்பு. படிங்க.....

சிம்பு: காவென்று கத்திடுங் காக்கை......முட்டை 

ஜஸ்வர்யா: மேடம், என்னய கிண்டல் பண்றான் மேடம்.

சுஹாசினி: சிம்பு...ப்ளீஸ்.

சிம்பு: ஒகே ஒகே...  காவென்று கத்திடுங் காக்கை என்றன்
கண்ணுக் கினிய கருநிறக் காக்கை.


தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தார் ஜோ.

ஜஸ்வர்யா: ஏன் அலறீங்க?

ஜோ: வீட்டுல ராமாயணம் தொல்ல தாங்க முடியலனு தான் இந்த படத்த ஒத்துக்கிட்டேன். இங்கயும் புரியாத மொழில கவித அது இதுனா....... 

May 1, 2017

(பாகுபலி) படம் பார்க்க போன கதை.

வியாழக்கிழமை இரவு 27/4/2017. என் அறையில் இருந்த கடிகாரத்தை பார்த்தேன் . 8 மணி என காட்டியது.

 திரையரங்கு இணையதளத்தை கிளிக் செய்தேன்.
'28/4/2017. முதல் காட்சி மதியம் 1.20க்கு. பாகுபலி 2.'

ஆனா இந்தி பதிப்பு. சரி மறுபடியும் திரையரங்கு இணையதளத்தை refresh செய்து பார்த்தேன். தமிழ் காட்சிகள் உண்டு என்ற தகவல் மட்டுமே.



சரி இன்னும் கொஞ்சம் நேரத்தில தமிழ் காட்சி டிக்கெட்களை வெளியிடு செய்துவிடுவான் என்ற நம்பிக்கையில்எ, மடிக்கணினியில் முடிக்காமல் கிடக்கும் அலுவலக வேலையை செய்ய தொடங்கினேன்.

இரவு மணி 10.05. மறுபடியும் திரையரங்கு இணையதளத்தை பார்த்தேன். இன்னும் ஒன்னும் இல்லை.  ஒரு பத்து தடவ refresh செய்து இருப்பேன். நம்ம வாழ்க்கை மாதிரி அதுவும் எந்த மாற்றமும் இல்லாமல், காட்டியதையே மறுபடியும் காட்டியது. இன்னொரு திரையரங்கு இணையதளத்திற்கு சென்று பார்த்தால், அங்கும் இந்தி, தெலுங்குக்கு மட்டுமே டிக்கெட் இருக்கிறது.

இது என்ன டா தமிழுக்கு வந்த சோதனை!

பாகுபலியை, தமிழில் மட்டுமே பார்ப்பேன்.

இதுவே என் கட்டளை 
என் கட்டளையே 
என் சாசனம் 

அப்படினு ரம்யாகிருஷணன் மாதிரி மைண்ட் வாய்ஸ் தெறித்தது. டிவிட்டரில் தகவல் ஏதேனும் இருக்குமா என்று அங்க சென்றும் பார்த்தேன். ஒன்னும் சரிப்பட்டு வரவில்லை.

திரையரங்கிற்கு phonecall செய்தேன், "ஹாலோ சார்...." என்று முடிப்பதற்குள்,

 அவர் மறுமுனையில், "மேடம், பாகுபலி இன்னும் ரெண்டு மணி நேரத்துல டிக்கெட் வெளியிடுவோம்" னு வெடுக்கென்று, ஆங்கிலத்தில்  சொல்லிவிட்டு வைத்து விட்டார்.


எரிச்சல், கொஞ்சம் கோபம், ஆதங்கம்.
இந்தி காட்சி திரையரங்கு டிக்கெட் விற்பனை எப்படி இருக்குனு இணையதளத்துல போய் கண்ணோட்டமிட்டால், கிடுகிடுவென்று முக்கால்வாசி டிக்கெட்டுகள் விற்கப்பட்டு விட்டன.

தமிழுக்கு கிடைக்காத ஒன்று...ச்சே....ரோஜா படம் அரவிந்த்சாமி மாதிரி ஏதாச்சு தமிழ் கொடியில குதிச்சு நம்ம தமிழ் உணர்வ காட்டிடலாமானு வேறு தேவையில்லாத ஒரு யோசனை.

இரவு மணி கிட்டதட்ட 11 ஆகிவிட்டது. எந்த நல்ல செய்தியும் வரல. தூக்கம் வேற கண்ணுல சொக்குது. சரி, அலாரம் வைத்துவிட்டு சரியா நள்ளிரவு எழுந்து பார்க்கலாம்னு மெத்தையில் படுத்தேன்.

அட...ச்சே... ஒரு படத்துக்கா இவ்வளவு மனபோராட்டம் என்று அசைபோட்ட படி கிடந்தேன். சினிமா ஒரு பொழுது போக்கு மட்டும் இல்ல, இப்ப உள்ள சூழ்நிலையில் அது ஒரு escapism. மன உளைச்சல், சோகம், துக்கம், கவலை, வேலை, ஈமெயில்- இதை எல்லாத்தையும் தூக்கி போட்டு வேற ஒரு உலகத்துக்கு நம்மை அழைத்து செல்லும் ஒரு கருவி. சில நேரங்களில் மிக மிக அவசியமான கருவி.  

அப்படி ஒரு வெறித்தனமான சினிமா பார்க்கும் மோகம். முதல் மரியாதை சிவாஜி மாதிரி தான் நாமும். கவலைய மறக்க ராதாவிடம் செல்லும் சிவாஜியை தப்பா பார்க்க கூடாது. பார்க்க முடியாது. மீன் குழம்பும் மயில் இறகும் கொடுக்கும் சந்தோஷத்தை நாடி செல்லும் சிவாஜிபோல், சினிமா என்னும் 'குட்டி கழுதையை' தேடி செல்கிறேன். செல்கிறோம்.



அலாரம் மணி ஒலித்தது. வெள்ளிக்கிழமை விடியற்காலை 1 ஆனது. கைபேசியிலேயே, அரை தூக்கத்துடன், டிக்கெட் புக் பண்ணலாம்னு பார்த்தேன்....ம்ஹும். சென்னையில் முதல் இரண்டு காட்சிகள் திரையிட படாதுனு ஒரு செய்தி.  ஆஹா, இது தான் காரணமா இருக்குமோ. வெளியூர் காட்சிகளைப் பாதிக்குமா என்ன?  அட போங்கப்பா! சினிமா வியாபாரம் புரியாதவளாய், மறுபடியும் தூங்கிட்டேன்.

மறுபடியும் விடியற்காலை 4 மணிக்கு எழுந்து பார்த்தேன்.

"சார் எப்ப சார் கடைய திறப்பீங்க?"




வெளிக்கிழமை 28/4/17 காலை 9.30 ஆனது. அப்போது தான் தமிழ் காட்சிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது. எப்பாடா, கட்டப்பா!!

பொறு பொறு....என்னது? டிக்கெட் விலை $18 வெள்ளியா?
உலகம் முழுதும் 9000 திரையரங்குகளில் வெளியிட்டுமா ஒரு டிக்கெட்டின் விலை $18?

கபாலி, 4500 உலகதிரையரங்குகளில் வெளியிட்டபோது, $18.
நிறைய இடத்தில் திரையிட்டால், விலை குறையுனும் தானே!?
ஆட உங்க சினிமா வியாபாரம் எனக்கு மறுபடியும் புரியல!

பொதுவா, நான் தனியா தான் சினிமா பார்ப்பேன். அதுக்கே ஒரு கிட்னிய அடமானம் வைச்சு தான் பார்க்கனும். விலைவாசியும் நம்ம வருமானமும் அப்படிப்பட்ட ஒரு designல தவிக்குது. இந்த தடவ அம்மா அப்பா ரெண்டு பேர்க்கும் சேர்த்து டிக்கெட் எடுக்கனும். அவங்களும் வரனும்னு ஆசைப்பட்டாங்க. கிட்னிய அடமானம் வைக்கலாமா? இல்ல அம்மாகிட்ட அவங்க டிக்கெட்டுக்கு மட்டும் காசு கேட்கலாமா?

காசு கொடு ஆத்தா வையும்- சப்பாணி சொன்ன மாதிரி,
நான் போய் காசு கேட்டா தான், ஆத்தா வையும்!

சரி, ரெண்டு கிட்னிய வித்துட வேண்டியது தான்.

இரவு மணி காட்சிக்கு டிக்கெட் புக் பண்ணியாச்சு. ஒரே குதூகலம். பாகுபலி 1 எப்படி ரசிச்சு பார்த்தேனோ அப்படி இன்னொரு அனுபவம் கிடைக்க போகுதுனு ஒரே சந்தோஷம்.

*******************************
 வேலை முடிஞ்சு வீட்டுக்கு போயாச்சு.

நான்: அப்பா, night show. பாகுபலி2 பாக்க போறோம்.

ஊர்ல ரிலிஸ் ஆகுற எல்லா படத்தையும் பாத்துட்டு, வாய்கிழிய கருத்து சொல்லும் பிள்ளையாகிய நான், என்னுடைய அப்பா: பாகுபலியா? அன்னிக்கு சன் டிவில போட்டானே!

நான்: சன் டிவிலயா?

அப்பா: ஆமா பாகுபலி. விஜய் காட்டுக்குள்ள இருந்து மருந்து குடிப்பானே அதானே பாகுபலி?

நான்: அது, பாகுபலி இல்ல. அது புலி.

**************************************************

பாகுபலி பாகுபலி.
MA MA philosophy philosophy என்று அவருக்கு விளக்கம் கூறி, அதிகம் படம் பார்க்காத அவரை தயார் செய்யும் கடமையும் எனக்கு இருந்தது.  பாகுபலி1 என்ன, பிரபாஸ் யாரு, ராணா யாரு, அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷண்ன் என்ன பண்ணாங்க. எல்லாத்தையும் சொன்னேன்.   அம்மா, நிறைய படங்களை பார்த்து update செய்து கொள்வார். ஆக, ஒற்றை ஆளுக்கு மட்டும் பாகுபலி courseயை முடித்துகொண்டு கிளம்பினோம் திரையரங்கிற்கு.

முதல் நாள் பயங்கரம் கூட்டமா இருக்கும் என்பதால், அதிக கூட்டம் இல்லாத ஒரு அரங்கத்தில் தான் டிக்கெட் புக் செய்து இருந்தேன். ஆனா அந்த இடம் மகிழ்மதி ஏரியாவெல்லாம் தாண்டி ஒரு இடத்துல இருந்துச்சு. போய் சென்று அடைவதற்குள் போதும் போதும்னு ஆயிடுச்சு.

*********************************

படம் முடிந்து வெளியே வந்தபோது, ஒரு வெறுமை. என்ன டா இது! நமக்கு மட்டும் தான் இந்த உணர்வா?

பாகுபலி 1 அளவுக்கு இல்லையே! லிங்குசாமி சொன்னதுபோல் கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கி தள்ளிவிட்டார் ராஜமௌலி! VFX softwareல் இருக்கும் அனைத்து tools/options எல்லாத்தையும் பயன்படுத்தி இருக்கிறார் போல.

ஆனா, திரைக்கதையில் சறுக்கல். இப்படி சீரியஸான கட்டப்பா முதல் ஒரு மணி நேரம் காமெடி செய்ததெல்லாம் ஒத்துக்கொள்ளவே முடியாது. அதுக்கு அப்பரம் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என காராணம் சொன்ன போது என்னால் உணரவே முடியவில்லை (அப்போது முட்டியும் முதுகும்கூட உணர்ச்சியை இழந்தது, 3 மணி நேரம் உட்கார்ந்து இருந்தால் அப்படி தான்)



பாகுபலி 1ல், அறிவாளியாக திகழ்ந்த சிவகாமி இதில் ஆ வூனா அரசர் பதவியை எல்லாருக்கும் எடுத்து கொடுக்குது. முதலில் பாகுபலி தான் ராஜா! அப்பரம் தப்பு நடக்க, ராணா தான் ராஜா! அதுக்கு அப்பரம் குடும்ப பிரச்சன ஏற்பட, இல்ல இல்ல இந்த குழந்தை தான் ராஜானு சொன்னபோது,

"யம்மா சாமி! சட்டுபுட்டுனு ஒரு முடிவுக்கு வாங்க! முட்டி வலிக்குதுலே!"

போர் காட்சிகள் சில இடங்களில் 'bore' அடிக்க தொடங்கியது. ஆனா, எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்தது- படத்தின் வசனங்கள்! அழகு தமிழ்!

நன்றி, மதன் கார்க்கி அவர்களே! செம்ம போங்க!!!

அதுக்கு அப்பரம் பிரபாஸ் மற்றும் ராணா. தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள் பட்டியலில் நிச்சயம் இவர்கள் உண்டு.

பாகுபலி 1 பார்க்கும்போது, தோழிகளுடன் சென்றதால், "ராணா, நான் தான் உன் மைனா" என சத்தம்போட்டு கூவி எங்கள் அன்பை வெளிப்படுத்தினோம்.

 நமக்க எப்பயாச்சும் ஒரு தடவ தான் 'good hair day' நிகழும். பாகுபலி 2ல், பிரபாஸின் முடி காற்றில் பறக்கும்போதெல்லாம், என்னால் ஒன்னும் சொல்ல முடியவில்லை, இடது பக்கம் பார்வதியும், வலது பக்கம் சிவனும் இருந்ததால்.

அதிகமாய் ஜொள்ளுவிட முடியாமல் தவித்தேன்.



*************************************

அம்மா, "கட்டப்பா பாகுபலிய குத்தும்போது அழுதுட்டேன்" என்று படம் பிடித்து இருந்தது என அவரின் கருத்தை சொல்ல, அப்பா மட்டும் ஒன்றுமே சொல்லாமல் இருந்தார். அவர் செய்த வேலை அப்படி.

இந்த படக்குழுவினர் அனைவருமே ஒன்று கூடி தேம்பி தேம்பி அழது இருப்பாங்க- அப்படி ஒரு காரியம்.

படம் பார்த்து கொண்டு இருந்தேன். படம் ஆரம்பித்த 40வது நிமிடத்தில் வலது பக்கம் திரும்பி பார்த்தேன், அப்பா நன்றாக தூங்கி கொண்டு இருந்தார்!


May 15, 2013

மூன்று பேர் மூன்று காதல்களின் எதிர்நீச்சல்!

எதிர்நீச்சல் மற்றும் மூன்று பேர்.......ஐயோ...அந்த படத்தை தான் பார்த்தேன்!

1) எதிர்நீச்சல்


எதிர்பார்த்த மாதிரி படம் ஆஹா ஓஹோனு எனக்கு தோணல. இரட்டை வசனம்இல்லாத (பெயரை வச்சு வந்த காமெடி எல்லாம்?)....ம்ம்ம்...... குத்து பாடல்கள் இல்லாத(தனுஷும் நயனும் ஆடியது எல்லாம்??)...ம்ம்ம்....  சரி ஒரு முறை பார்க்கலாம். குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் படமாய் அமையாவிட்டாலும் சிவ கார்த்திகேயனின் கல்லாபெட்டியில் சில்லறை குலுங்கி குலுங்கி விழ வைத்த படம்.

முதல் பாதி ஒரு கதை போலவும். இரண்டாம் பாதி வேறு கதை போலவும் இருப்பதால், அவ்வளவாய் ரசிக முடியவில்லை. இருந்தாலும், marathonக்கு பயிற்சி எடுக்கும் சில காட்சிகள் எல்லாம் சுவாரஸியமாய் இருந்துச்சு:)

2) மூன்று பேர் மூன்று காதல்

ஹாஹாஹாஹாஹாஹா....ஐயோ குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்த படம்! ஐயோ முடியலங்க!

அர்ஜுன் தாத்தா,
சேரன் பெரியப்பா
விமல் மாமா

சேர்ந்து நடித்த மூன்று பேர் முதியோர் காதல் படம் சூப்பர்!!! 

விமல் 'chartered accountant' (நான் எதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சேனு தோணிச்சு)
சேரன் cambridgeல் படித்த வாலிபன் அதுவும் PHD முடித்தவன் (வேலையை நிறுத்திட்டு ஏங்காச்சு பூ விக்க போகலாம்னு தோணிச்சு)
 அப்பரம் நம்ம கிச்சா அப்பளம் அர்ஜுன் நீச்சல் சொல்லி கொடுப்பவர். இது கொஞ்சம் பரவாயில்ல!

விமலும் சத்தியனும் அடிக்கடி 'ஒரு chartered accountant' ஆன நம்ம.... என கூறும்போது குபீர் சிரிப்பு தான் வந்துச்சு!

அர்ஜுன், காதல் காட்சிகளில் எல்லாம், ஐயோ ராமா (கவுண்டமணி பாணியில் படிக்கவும்) என்ற உணர்வை தருகிறார்.

கமல், ரஜினி கூட தான் காதல் காட்சிகளில் நடிக்குறாங்க. அவங்கள எல்லாம் நீ ஒன்னும் சொல்றது இல்ல. அப்படினு நீங்க கேட்கலாம். என்ன தான் அவங்க வயசுக்கு அது கொஞ்சம் ஒரு மாதிரியாய் இருந்தாலும், திரையில் பார்க்கும்போது அழகாய் காட்டிவிடுகிறார்கள் இயக்குனர்கள்!



           
(பானு இதற்கு முன்னால்,           இப்போது)

மூன்று ஹீரோயின்கள் வேற! பானு தவிர மற்ற இருவரும், கடைசி பஸ புடிச்சு ஊருக்கு போயிடலாம்! அதிலும் விமலின் ஜோடி....ஆஹா ஆஹா...விமலுக்கு ஏற்ற ஜோடி. விமலும் இந்த புள்ளயும் 'நான் நடிக்க மாட்டேன். நீங்க வேணும்னா நடிச்சுங்கோ' என்று அடம்பிடித்து இருக்கிறார்கள். அது ஒவ்வொரு காட்சியிலும் வந்த என்னை ப்ளார் ப்ளார்னு அறைந்துவிட்டு போனது.

தப்பு செய்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கனும் என்ற கருத்து எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. இயக்குனர், இதை மட்டும் மையமாய் வைத்து பின்னி பெடல் எடுத்து இருக்கலாமே!

இயக்குனரின் மகன் 'ஸ்டாப் தி பாட்டு' என்ற பாடலுக்கு ஆடுகிறார்.
அழகாய் சிரிக்கிறார்,
அழகாய் இருக்கிறார்,
அழகாய் பார்க்கிறார்.



ஆனால், முகத்தில் எந்த ஒரு பாவனையும் இல்லாமல் ஆடுகிறார். (விடுங்க பாஸ், அந்த காலத்துல விஜய்க்கும் ஆட வராதாம்!)  நல்லா ஆட கத்துங்க சார்! அப்ப தான் பெரிய ஹீரோவா வர முடியும்! (ம்ம்ம்...விஜய் சேதுபதி ஒரு பாட்டுக்கு கூட ஆடலயே, எப்படி பெரிய ஹீரோவானாரு?? ம்ம்ம்...)

அப்ப  இந்த படமும் அவுட்டா? என்று கேட்பவர்களுக்கு. குடும்பத்தோடு அல்லது நண்பர்களோடு சேர்ந்து உட்கார்த்து கமெண்ட் அடித்து படம் பார்க்க வேண்டுமா?- இதுவே சிறந்த படம்!

*************************************************************

எனக்கு சிரிக்கனும்- 'திருமதி தமிழ்' பாக்கனும்னு ஆசையா இருக்கு!!!

Mar 15, 2013

என்னது பாலா அடிச்சாரா?

பரதேசி! (யோவ்..உங்கள திட்டலையா? படத்த பெயர சொன்னேன்)

பரதேசி படத்தின் teaser ஒன்று வெளியாகி, அதில் நடிப்பவர்களை போட்டு அடிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.


 

இதற்கு பலவித எதிர்ப்புகள்! முக்கியமா இந்த டிவிட்டர் பக்கமா போனால்...சக நடிகர்கள்/இயக்குனர்கள் காட்டிய எதிர்ப்புகள்:

 Actor : Siddharth"A video of a director hitting his actors in the name of reality is going viral.Can we please have one of actors beating the hell out of him?"

 Director : Balaji Mohan"Paradesi 'reality' teaser sets a bad example to young future filmmakers who consider Bala sir as an idol. This isnt the way to make films."

 Actor-producer : Udhayanidhi Stalin"I decided not 2 watch the reality muvi! I shud b building temples for directors Rajesh S.R.Prabhakaran sir!"

எனக்கு சிரிப்பு தான் வந்தது இவர்களின் எதிர்ப்புகளை பார்த்து! பாலாவுக்கு தெரியாதா- இது விளம்பர யுத்தி என்று?

இதுக்கு தானே ஆசைப்பாட்டாய் குமாரா? என்பதுபோல் எதிர்வினை விளம்பர தானே இன்றைய 'விஸ்வரூப' வெற்றியை நிர்ணயிக்கின்றது!!  தப்போ சரியோ? படம் நல்லாயிருக்குதுனு நிறைய பேர் சொல்றாங்க! இயக்குனர் பாலாவின் ரசிகை நான் என்று சொல்ல முடியாது. வித்தியாசமான படங்களை கொடுத்து இருக்கிறார்! படம் ஓடினால் சரி! ஆனால், இவரிடம் பிடிக்காத விஷயம்- அழகானவர்களை அழுக்காய் அலங்காரம் செய்வது!

http://filmy365.com/tamil/files/2012/11/Atharva-02.jpg             http://moviegalleri.net/wp-content/gallery/paradesi-movie-stills/bala_in_paradesi_movie_stills_adharvaa_murali_6dba4ba.jpg

அதர்வா எவ்வளவு அழகு!! ச்சே போங்க பாஸ்...மனசே சரியில்லை! அடுத்து, விஜய் இவரிடம் படம் பண்ண போவதாய் செய்தி!!! தல!!!!!!!!!! இது நமக்கு தேவையா தல? நம்மகிட்ட இருக்கும் ஒரே அம்சம்- அந்த அழகான சிரிப்பு தான்! பார்த்து சுதார்ச்சிக்கோ தல!
             
                           https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUGlBeZ6AfqWZ0fsOwfe9sfFBFOExgjnq0vPMy81C7_qDPsvTQgEu8cV3UsTZOhRM9pNKFnTQeYEysjSzwv_kiFqFtt26GBXJ627g43WbE7sjFuhyphenhyphenwupHamYYypxHlJy-B_x6BK-Q5mBzV/s1600/smile.jpg


சரி பாலா அடிச்சதுக்கே இப்படினா? சின்ன வயசுல, நம்ம அப்பாக்கள் நம்மள தூக்கிபோட்டு மிதிச்சு அடி இடி மாதிரி விழுந்த கதையை reality teaser போட்டால், பூகம்பமே கிளம்புமா பாஸ்?? உஷ்ஷ்ஷ்ஷ....யப்பா!!!

Mar 14, 2013

office- அப்பளம்னா எப்படி இருக்கனும்?

என்னைய மாதிரி ஒரு sales executive இது தான் அப்பளம்னா எப்படி வியாபாரம் ஆகும்? அப்பளம்னா எப்படி இருக்கனும்? கும்பலா, பொன்நிறமா, சும்மா வின்ன்ன்ன்ன்னு ஒரு பொடுப்போட இருக்க வேண்டாம்!- கவுண்டர் அப்பளம் விக்கும் காமெடியை பார்த்தபிறகு, எனக்கு ஆபிஸ் விஷயங்கள் ஞாபகத்திற்கு வந்துவிட்டது.

http://sphotos-a.xx.fbcdn.net/hphotos-snc6/205376_317819421640663_1052643186_n.jpg

ஆபிஸ் போன பிறகு தான் 'விடுகதையா இந்த வாழ்க்கை' என்று ரஜினி ரத்த கறையோடு போகும் வலி புரிந்தது. கொடுமைகள் ஒருபுரம் நடந்தாலும், அதிலும் சில காமெடிகள் நடக்கும்.

மீட்டிங் என்னும் காமெடி கொடுமை: கோபம் வர மாதிரி காமெடி செய்வதில் ஆபிஸ் ஆட்களை அடித்து கொள்ள ஆள் இல்லை! வீட்டிற்கு போகும் நேரத்தில் மீட்டிங். வாழ்க்கைக்கு ஒரு நாளும் தேவையில்லாத விஷயத்தை பத்தி பேச ஒரு மீட்டிங்.
http://i.ytimg.com/vi/0nlTPkSC8gI/2.jpg
பட்ட பெயர் வைக்கும் காமெடிகள். மண்டையன், வழுக்க மண்டையன், 'சின்ன வீடு', பைத்தியக்காரி, ' 7 ஸ்டார் கிங்' போன்றவை என் ஆபிஸில் நாங்க வைத்து கொள்ளும் 'code word' பட்ட பெயர்கள்.  ஆபிஸ் security officer ஒருத்தர் இருக்கிறார். அவருக்கு இந்த பெரிய ஆபிசர்களின் நற்பெயரை வாங்க வேண்டும் என்பதற்காக என்ன வேண்டும் என்றாலும் செய்வார். ஒரு நாள், ஏதோ, சாதாரண விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள். அதை வளைத்து வளைத்து ஃபோட்டோ எடுத்து அனைவருக்கும்,



"these photos are for your memorial." என்று அனுப்பிவிட்டார். அன்று முதல் இவர் காமெடி தான் ஒரு வாரம் ஓடியது.

பெரிய ஆபிசர் ஒருத்தர் இருக்கிறார். அவர் மூச்சுக்கு மூணூறு தடவ 'chief security officer' என்ற வார்த்தையை பயன்படுத்தி விட்டு தான் அடுத்த வாக்கியத்தை தொடருவார்! ஐப்பா கேட்டு கேட்டு....ரீலு அந்துபோச்சு டா சாமி!

இன்று காலையில் விஜய் டிவியின் புதிய தொடரை பார்த்துவிட்டு, இந்த போஸ்ட் எழுதவேண்டும் என்று தோன்றியது.


அடுத்த போஸ்ட்...ம்ம்.... தற்போது சைட் அடிக்கப்பட்டுகொண்டிருப்பவர்களுக்கு நிறைய வாய்ப்பு இருக்குனு நினைக்குறேன்!!

Mar 13, 2013

நீ தானே என் appetiser!

'கூகல் கூகல் பண்ணி பாத்தேன் உலகத்திலே' என்று பாடல் தொலைக்காட்சியில் ஓடியது. அந்த பாடலை முணுமுணுத்தபடியே வருண் ஹால் மேசைக்கு வந்தான். தண்ணீர் குவளையில் தண்ணீர் முடிந்துவிட்டதால் சமையலறையில் இருக்கும் குளிர்சாதன பெட்டியை நோக்கி நடந்தான். அதிலிருந்து தண்ணீர் நிரப்பினான் குவளையில்.

நித்யா  ரொம்ப கஷ்டப்பட்டு பூரிகட்டையை உருட்டிகொண்டிருந்தாள். இரண்டு நிமிடங்கள் அவளையே பார்த்தான் வருண். கட்டிய கூந்தலில் இருந்து நெற்றியில் கலைந்து விழுந்த முடி, புதிதாய் சின்னதாய் கன்னத்தில் முளைத்த முக பரு, மின்னிய அவளது உதடுகள், உடம்போடு ஒட்டிய சட்டை- அனைத்தையும் ரசித்தான்.

புன்னகையித்து கொண்டே அவள் அருகே சென்ற வருண், "நித்யா, எனக்கு ஒரு கவிதை தோணுது, சொல்லவா?"

அவனை கண்டு கொள்ளாமல் பூரிகட்டை மேல் கவனத்தை செலுத்தியிருந்த நித்யா, "என்ன சொல்லு?" என்றபடி பூரி மாவை எடுத்தாள்.

வருண், " இது வரை பார்த்ததில்லை
                    ஒரு கட்டை
                    இன்னொரு கட்டையை
                     உருட்டுவதை!
"

சொல்லிவிட்டு புன்னகையித்தான்.

முறைத்தாள் நித்யா. "பூரி வேணுமா? அடி வேணுமா?"

மெதுவாய், அவளை இடுப்போடு அணைத்தபடி வருண், "வேற options இல்லையா மா?"

நித்யா, "விடு வருண்.... நான் ரொம்ப டென்ஷன்ல இருக்கேன்." என்றபடி அவனை தள்ளிவிட்டு, நெற்றியில் விழுந்த முடியை விரல்களால் காதுமடல் பின்னால் சொருகினாள். மீண்டும் சமையலை தொடர்ந்தாள்.

வருண் அவள் பின்னாலிருந்து கட்டிபிடித்து, அவளது தோள்பட்டையில் தாடையை வைத்தவாறு, "ஏன் மா டென்ஷன்?"

"சரியா வர மாட்டேங்குது. பூரி மாவ சரியா தான் பிசைஞேன். ஆனா...ப்ச்ச்..." பெருமூச்சு விட்டாள் நித்யா.

வருண், "it's ok ma. நான் பூரி கேட்டேனா?"

நித்யா, "உனக்கு செய்றேனு யாரு சொன்னா? எனக்கு இன்னிக்கு பூரி சாப்பிடனும்னு ஆசையா இருந்துச்சு. அதான் செய்றேன்!" விடாமுயற்சியை கைவிடவில்லை அவள்.

"சரி. நான் help பண்றேன்" என்ற வருண் பூரிமாவை பிசைய ஆரம்பித்தான்.

ஓரக்கண்ணால் பார்த்த நித்யா, "என்ன பண்றே?"

வருண், "பூரிமாவ பிசையுறேன் டார்லிங்" என்றான்.

நித்யா, "அது என் விரலு."

வருண் சிரித்தபடி, "ஓ...சாரி மா. ரெண்டுமே ரொம்ப softaa இருந்துச்சா. அதான் குழம்பிட்டேன்."

நித்யா, "என்னைய விடு" என்று மறுபடியும் பின்னாடி தள்ளிவிட்டாள்.

தொடர்ந்தாள், "disturb பண்ணாம மரியாதையா போயிடு, எனக்கு கோபம் வரதுக்குள்ள." 

வருண், "அப்பரம் நான் என்ன செய்ய?"

நித்யா, "போய், டீவி பாரு. அதான் ஆயிரத்து எட்டு channel இருக்கே!"

வருண், "நான் பாக்கனும்னு நினைக்குற channel கிச்சன்ல இருக்கே!" என்றான் கண் சிமிட்டியவாறு.

நித்யாவுக்கு சிரிப்பு வந்தது. இருந்தாலும் நித்யா, "வருண், மொக்கை ஜோக் அடிக்காம, பேசாம போயிடு!"

வருண், "ஐ...யாருகிட்ட!! மனசுக்குள்ள புடிச்சுருக்கு. ஆனா வெளியே தான் சிரிக்க மாட்டேங்கற"

நித்யா, "பிடிக்கல. போ டா" என்று தொடர்ந்து 'மாவே மாவே பூரி போடு' என்று மாவுடன் மன்றாடி கொண்டிருந்தாள். சுட்ட பூரி, கல் போல் இருந்ததால் மேலும் கோபமாக இருந்தாள் நித்யா.  அவள் இன்னொரு பூரியை சுட்டாள். ஆனால் அதுவும் சரியாக வரவில்லை. வருண் அவளை பார்ப்பதை பார்த்து, நித்யா, "என்ன?" என்று அவளது இடுப்பில் கைவைத்து முறைத்தாள்.

புன்னகையுடன் வருண், " இன்னொரு கவிதை தோணுது?"

நித்யா, "எங்க அந்த பூரி கட்ட" என்று சொல்ல வருண் அலறி அடித்து கொண்டு ஹாலுக்கு ஓடினான்.

சிறிது நேரம் கழித்து ஹாலுக்கு வந்த நித்யா சோபாவில் விழுந்தாள் களைப்புடன்.
"சிக்சர்!!!!!!!!!!!" என்று கத்தினான் வருண் தொலைக்காட்சியில் ஓடிகொண்டிருந்த கிரிக்கெட் ஆட்டத்தை பார்த்து. 

நித்யா, "வருண்...." என்றபோது, அவனது கைபேசி ஒலி எழுப்பியது.

வருண் கைபேசியில், "டேய்! சொல்லுடா. ஆமா...பாத்துகிட்டு இருக்கேன். சூப்பர் சிக்சர்! இந்த தடவ நம்ம தான் ஜெயிக்கிறோம்......" என்று பேசிகொண்டிருந்தவனை பார்த்து முறைத்து கொண்டிருந்தாள் நித்யா. அதை கவனித்த வருண் வேண்டுமென்றே அதிக நேரம் பேசினான்.

பேசி முடித்த வருண், தொடர்ந்து தொலைக்காட்சி பார்த்தான். அவன்  பேசாமல் இருந்தது நித்யாவுக்கு எரிச்சலை உண்டாக்கியது. உடனே, ரிமோட்-டை எடுத்து தொலைக்காட்சி பெட்டியை off செய்தாள்.

வருண், "நித்யா, என்ன பண்ணுற?" என்றவன் மறுபடியும் தொலைக்காட்சியை on செய்தான்.

தொடர்ந்தான் வருண், "உனக்கு வேணும்னா வேற channel பாரு. அதுக்கு ஏன் off பண்ணுற?"

நித்யா, அவனை முறைத்தவாறு, "நான் பாக்கனும்னு நினைக்குற channel என்னைய பாக்க மாட்டேங்குதே!" என்றாள். வருணுக்கு புருவங்கள் ஆச்சிரியத்தில் விரிந்தன.

"ஓ....பாத்துட்டா போச்சு" என்றவன் அவள் அருகே நகர்ந்து உட்கார்ந்தான்.

அவன் மீசையில் ஏதோ ஒட்டியிருக்க, அதை துடைத்தபடி நித்யா, "sorry pa, இன்னொரு நாளைக்கு பூரி செஞ்சு தரேன்."

வருண், "பரவாயில்ல விடு."

நித்யா, "டின்னருக்கு என்னடா பண்றது?"

வருண், "நான் ஆர்டர் பண்ணிட்டேன்..."

நித்யா, "எப்போ?"

வருண், "நீ கிச்சன்குள்ள போராடிகிட்டு இருந்தீயே...அப்பவே!"

கண்களால் சிரித்த நித்யா, அவனது கன்னம் அருகே செல்ல, வருண் தடுத்தான்.

"ஹாலோ! nothing doing. என்னோட கவிதைய பிடிக்கலனு சொன்னீயே! கண்டிப்பா பெரிய punishment இருக்கு." என்றான் வருண்.

புரியாதவளாய் நித்யா, "என்ன punishment?" என்றாள்.

அவள் காது அருகே சென்று ஏதோ அவன் சொல்ல, "ச்சீ..bad boy!" என்று அவனை தள்ளிவிட்டாள் நித்யா.

"இப்ப...நோ..."

"நோ... எனக்கு வேணும்..."

என்று பேசிகொண்டிருக்கும் வேளையில் வீட்டு அழைப்பு மணி ஒலித்தது.

"சாப்பாடு வந்துட்டு. யப்பா escape!!" என்றவளிடம், வருண்,

"நீ தான் appetiser. அதுக்கு அப்பரம் தான் சாப்பாடு."

"உலறாம போய் கதவ திற..." என்றாள் நித்யா புன்னகையித்தபடி.

கதவை திறந்தவுடன் இரண்டு சிறுவர்கள் வேகமாய் ஓடி வந்து தொலைக்காட்சி முன்னாடி உட்கார்ந்து கொண்டனர்.

சாப்பாடு கொண்டு வந்தவர், "சார் address தெரியாம வந்தேன். அந்த பசங்க தான் அழைச்சுகிட்டு வந்தாங்க..."

சின்ன பையன், "வருண் அங்கிள், எங்க தெருவுல கரண்டு போச்சு. நான் இங்க மேட்ச் பாத்துகிறேன். என்ன ஆர்டர் பண்ணீங்க? french fries வாசம் அடிக்குது....இங்க கொண்டு வாங்க...."

*முற்றும்*

Jan 3, 2013

நடுவுல கொஞ்சம் 2012 காணும்!!

என்ன ஆச்சு!
2012 calendar வாங்கினேன்.
கிழிச்சேன்.
ஓ..ஓ..ஓ....அப்படி பறந்து போச்சே!!
ஒகே ஒகே ஒகே

*************************************************************
2012 இவ்வளவு சீக்கிரம் பறந்து போகும்னு நினைக்கல! அப்படி 2012 என்ன தான் பண்ணோம்னு யோசிச்சு பார்த்தா...ம்ம்ம்....எதையும் அப்படி ஒன்னும் பெரிசா பண்ணியிருக்க மாட்டே நீ அப்படினு நீங்க சொன்னீங்கன்னா அது தப்பு!

ஐரோப்பா பயணம்


டிசம்பர் மாதம் 13 நாள் சென்ற பயணம்! வாழ்க்கைல மறக்க முடியாத பயணம். அந்த 13 நாட்கள் அப்படினு ஒரு புத்தகமே எழுதலாம்!!! குளிர் காற்று, பனி, சாப்பாடு...ச்சே...இதலாம் திரும்பி வரவே வராது!!

குறும்படம்

சும்மா ஒரு பேச்சுக்கு ஆரம்பிச்சு, கடைசில உண்மையாகவே ஒரு குறும்படத்த எடுத்தோம் நானும் எனது 3 நண்பர்களும். சும்மா ஜாலிக்காக எடுத்த படம் தான். 3 மணி நேரத்தில் எடுத்த படமாக இருந்தாலும், அதுக்கு அப்பரம் நடந்த எடிட்டிங் வேலை இருக்கே!!! யப்பா!!! வேலை செய்யும் இடத்தில் இந்த ஆர்வத்தை காட்டியிருந்தால் இந்நேரம் promotion கிடைச்சு இருக்கும். :(((( சரி விடுங்க அந்த சோக கதை இப்ப வேணாம்.
 (குறும்படம் சீக்கிரம் வெளியிட படும்)


தோழியின் கல்யாணம்+ பார்ட்டி

நெருங்கிய தோழியின் கல்யாணம்! நல்ல படியாய் முடிந்தது! மாலை reception முடிஞ்சு விடிய விடிய ஆடிய ஆட்டம் மறக்கவே முடியாது!!! அதிலும் இன்னொரு தோழன் masters graduation முடித்தவன். அதற்கும் சேர்த்து கொண்டாட்டம்! மறக்க முடியாத ஒரு நாள்!

எந்த கடையில நீ அரிசி வாங்குற?

என் வலைப்பூவை தொடர்ந்து படித்தவர்களுக்கு தெரியும்....3 ஆண்டுகளுக்கு முன்பு தீவிரமாய் 13கிலோ குறைத்தேன். அதுக்கு அப்பரம் வேலைக்கு போனபிறகு 10கிலோ இடை கூடியது!:(((( இந்த 2.5 வருடங்களில் 10கிலோ அதிகரிப்பு!!! ச்சே என்னடா வாழ்க்கை இதுனு நினைச்சு, இப்ப மறுபடியும் தீவிரமாய் 'கோதா'வில் இறங்கிவிட்டேன்.

கடந்த 4 மாதங்களில் 5கிலோ குறைத்துவிட்டேன். தினமும் 3கிலோ மீட்டர் ஓட்டம், இரவு சாப்பாடு அளவை குறைத்துவிட்டேன். நமக்கு புடிச்ச ஜீன்ஸகூட போட முடியாமல் இருக்கும்போது மனசு வலிக்குதே!!! ஆக, இன்னும் 4 கிலோவை குறைத்தால் போதும்!!! so once கோதாவுல இறங்கிட்டோம், நம்ம தாதா தான்!!

இன்று அதற்கு பிள்ளையார் சுழியாய், 5 கிலோ மீட்டர் ஓடினேன் 35 நிமிடங்களில்!!!

#நம்பிக்கை தான் வாழ்க்கை#

எல்லா வருஷமும் நல்ல வருஷம் தான்! ஆனா, அதுல மண்ணு அள்ளி போடுற மாதிரி சில ஆசாமிகள் இருப்பாங்க....அவங்கள சமாளிச்சு, இந்த 2013 வருஷத்தை நல்ல வருஷமாக அமைத்து கொள்ள எல்லாருக்கும் வாழ்த்துகளை சொல்லி கொள்கிறேன்.

Sep 7, 2012

காபி வித் கடவுள்

(இது சும்மா காமெடி போஸ்ட். இன்று காலையில் அதிசயமாய் கோயிலுக்கு போக நேர்ந்தது. அப்போது தோன்றிய வடிவம் தான் இது! இது யார் மனதையோ புண்படுத்த அல்ல, ரொம்ப நாள் சிரிக்காம இருப்பவர்களின் மனங்களை பண்படுத்தவே!! ச்சே...ஆரம்பமே அசத்தலா இருக்குல!:)))))


மழை சாரல் அடிக்க, நான் என் ஜன்னல் கதவை மூடினேன். அப்போது, திடீரென்று ஒரு ஒளி தெரிந்தது ஜன்னல் வெளியே. ஒரு உருவம் கொஞ்சம் கொஞ்சமாய் தெரிந்தது. பல படங்களில் அப்பா கதாபாத்திரத்தில் வருவாரே..ம்ம்.. அலைபாயுதே ஷாலினிக்கு அப்பாவாக நடித்தவர் போல் இருந்தது அந்த உருவம். அந்த உருவம் கொஞ்சம் கொஞ்சமாய் அறைக்குள் வந்தது.

நான்: யோவ் யாரு மேன் நீ?

உருவம்(வெள்ளை ஒளி லேசாக மறைந்து சாதாரண மனிதனாய் தெரிந்தார்): நான் கடவுள்

நான்: என்ன ஆர்யாவுக்கு போட்டியா? ஆர்யாவுக்கு அப்பா மாதிரி இருந்துகிட்டு, கடவுளா கடவுள்!? எங்க, அந்த படத்துல ஆர்யா தலகீழா நிக்குமே அந்த மாதிரி நில்லு பார்ப்போம்?

கடவுள் (புன்னகையித்தார்): எந்த கடவுளும் தலகீழா நிக்காது. கடவுள்கிட்ட அருள் கேட்டு மனுஷன் தான் சில சமயத்துல தலகீழா நிப்பான்.

நான்: என்ன நக்கலா? சரி அதவிடு, எதுக்கு மழையில நனைஞ்சுகிட்டு வர?

கடவுள்: வாக்கிங் போய்கிட்டு இருந்தேன். மழை வந்துச்சு. அதான் இங்க ஒதுங்கிட்டேன்.

நான்: இன்னும் நம்ப முடியலய்யா?

கடவுள்:  எத?

நான்: நீ கடவுள்கிறத?

கடவுள்: ஏன்?

நான்: அம்மன் படத்துல வர ரம்யா கிருஷணன் மாதிரியும் இல்ல. பாளையத்து அம்மன் படத்துல் வர மீனா மாதிரியும் இல்ல.  அறை எண் 306ல வர பிரகாஷ்ராஜ் மாதிரியும் இல்ல. அப்பரம் எத வச்சு நான், உன்னைய கடவுள்னு நம்புறது?

கடவுள்: நம்ப வேண்டாம்.

நான்: கடவுளே, கடவுள நம்ப வேண்டாம்ங்குது! ஹாஹாஹா...காமெடி போ நீ.

கடவுள்: யார் அம்மன்? பாளையத்து அம்மன்?

நான்: எல்லாம் உன் சொந்தங்காரங்க தான்?

கடவுள்: சொந்தமா?

நான்: ஹாஹா...என்ன உனக்கும் சொந்தங்காரங்கனா அலர்ஜீயா?

கடவுள்: இல்ல, சத்தியமா எனக்கு சொந்தம் கிடையாது.

நான்: உன் பெயர் என்ன?

கடவுள் (மீண்டும் புன்னகை): ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி கூப்பிடுவாங்க.

நான்: ஐயோ கடவுளே!!

கடவுள்: yes, speaking!!

நான்: நீ கமல்ஹாசன் fan தானே? உண்மைய சொல்லு!! செமயா குழப்புற.

கடவுள்: சாரி, நான் குழப்புல. பதில் சொன்னேன்.

நான்: சரி விடு. காபி குடிக்குறீயா?

கடவுள்: இல்ல வேணாம். மனஷன் கண்டுபுடிச்ச எல்லாத்திலும் ஒரு கெட்டது இருக்கும்.

நான்: நீ ஓவரா எங்கள கலாய்க்கிற. அப்பரம் விரதம், பால் ஊத்துறது, பூ போடுறது, இது எல்லாம் serviceயை நிறத்திடுவோம்.

கடவுள்: இதலாம் எனக்கு என்னிக்கு பண்ணியிருக்கீங்க?

நான்: அட பாவி!!! உலகமே தினமும் கோயில இத தானே பண்ணிகிட்டு இருக்கோம்!!

கடவுள்: கல்லுக்கு போடறது எல்லாம் கடவுளுக்கு தானு யார் சொன்னது?

நான்: தூணிலும் இருப்பார் துறம்பிலும் இருப்பார்-னு சொன்னாங்க!

கடவுள்: நான் சொன்னேனா??

நான்: நல்லா தான் பேசுற?? (என் laptopல் வேலையை பார்த்தேன்)

கடவுள்: என்ன செய்யுற?

நான்: வேலை தான்! அடுத்த வாரத்துக்குள்ள இத கொடுத்து ஆகனும்.

கடவுள்: உன் வேலை உனக்கு பிடிக்காதுல.

நான் (ஆச்சிரியத்துடன்): உனக்கு எப்படியா தெரியும்?

கடவுள்: உலகத்துக்கே தெரியுமே! உன் பேஸ்புக்-ல தினமும் இத தானே கொட்டி தீர்க்குற!

நான்: அட நீயும் பேஸ்புக் வச்சு இருக்கீங்களா? friend request அனுப்புறேன்?

கடவுள்: மனசாட்சிக்கு உண்மையா நடந்தா, friend request accept பண்ண மாதிரி தான்.

நான்: ஹாஹாஹா இது வேறயா! இப்பலாம் யார் மனசாட்சி படி நடக்குறாங்க. ஆபிஸ் வந்து பாரு!! நீ எமன பாத்து இருக்கீயா? பாஸ்-னு பேர்ல ஒரு எமன்!

கடவுள்: சிலர் அப்படி தான்.

நான்: நீ தான் படைச்ச. ஏன்? ஏன்? எல்லாத்தையும் நிறத்தனும்.

கடவுள்: ஹாஹா...நான் ஒன்னும் நாயகன் படம் வேலு நாய்க்கர் இல்ல.

நான்: ஜோக் அடிக்காத மேன். பதில் சொல்லு. ஏன் சிலருக்கு மூளையே இல்லாம படைச்ச.

கடவுள்: சில நேரத்துல நானும் தப்பு பண்ணுவேன்.

நான்: உண்மைய ஒத்துகிட்ட பாத்தியா!! GOD IS GREAT!

கடவுள்: மன கஷ்டபடுறவங்களுக்கு எப்படியாச்சு ஒரு வழியே தேடி கொடுப்பேன். GOD PROMISE!

நான்: பாப்போம் பாப்போம்! அந்த நம்பிக்கை எல்லாம் போச்சு. உலகத்துல எத்தனையோ பேர் கஷ்டம் படுறாங்க. சாப்பாடு இல்ல. வீடு இல்ல. நோய், வறுமை. the damage has been done. it's too late..

கடவுள்: மனுஷன தான் நான் படைச்சேன். தப்ப நீங்க தான் படைச்சுகிட்டீங்க.

நான்: என்னமோ போ! உலகம் அழிஞ்சு இன்னொரு உலகம் வர போறதுனு சொல்றாங்களே? உண்மையா?

கடவுள்: நீங்க செஞ்ச தப்புக்கு தண்டனை வேணுமா?

நான்: எதாச்சு செஞ்சு உலகத்த காப்பாத்து!

கடவுள்: உனக்கு இந்த உலகம் மேல அவ்வளவு அக்கறையா?

நான்: அப்படிலாம் ஒன்னுமில்ல.உலகம் அழியறத்துக்கு முன்னாடி எனக்கு ஒரே ஒரு ஆசை.

கடவுள்: என்னது?

நான்: இந்த கோச்சடையான் படத்த மட்டும் earlyயா release பண்ணிடேன்!!

கடவுள்: ஹாஹா உலகம் அழிஞ்சாலும், மனிதன் திருந்த மாட்டான்!

நான்: நாங்க திருந்திட்டா, உனக்கு வேலை இல்லாம போயிடுமே, கடவுள்!!

*முற்றும்*




Jan 8, 2009

ஒரு நாள்- இயக்குனர் ஆனேன்

என் இனிய தமிழ்மக்களே, உங்கள் பாசத்திற்குரிய பாரதிரோஜா பேசுகிறேன். மொக்கை, மகா மொக்கை, காதல் கவிதை, காலேஜ் கலாட்டா என்று உங்கள் கண்களுக்கு இதுவரைக்கும் வெறும் மருந்து கொடுத்து கொண்டிருந்த நான் இனி மண்வாசனை மாறாத ஒரு விருந்து கொண்டுக்க வந்துள்ளேன்.ஏதோ கள்ளிப்பால் கொடுக்காமல்.......(cut)......

யப்பா...கொஞ்ச அப்படியே பாரதிராஜா மாதிரி பேச முயற்சி செஞ்சு பாத்தேன்...முடியல...ஹாஹா....சரி எதுக்கு இந்த லீடு சீன்னா... இரண்டு குறும்படம் இயக்கியுள்ளேன். பொறுங்க பொறுங்க...ரொம்பலாம் கற்பனை வேணாம்...ஒரு போட்டிக்காக இந்த வீடியோ செய்தோம்.

இரண்டு நிமிடங்களுக்குள் இந்த வீடியோ இருக்க வேண்டும். கொடுத்த தலைப்பு “ஏதேனும் பூகம்பமோ, இயற்கை பேரிடரோ, அல்லது வேறு ஏதேனும் அவசர காலத்தில், நீங்க எதை பாதுகாக்க நினைப்பீர்கள்?”

ஒரு பெரிய தல, நடு தல, சின்ன தல- அதாங்க அக்கா, நான், தங்கச்சியும் யோசிக்க ஆரம்பித்தோம். முதல் வீடியோ

மூலக்கதை- அக்கா
கதை, வசனம், நடிப்பு- தங்கச்சி
திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவாளர்,எடிட்டிங்- நான் தான் (டி ஆர முந்திகொள்ள ஆசையில்ல...)

வீட்டின் அறை தான் லொக்கேஷன். இரண்டே இரண்டு ஷாட் தான். ஆக, முதலே ஒத்திகை பார்த்து கொண்டோம். காட்சி இப்படி போகும்....தங்கச்சி கோபத்துடன் அறையின் கதவை படார்னு சாத்தனும். இரண்டு மூனு முறை அதையே ஒத்திகை பார்க்க, எங்க வீட்டு பணிப்பெண் சமையலறையிலிருந்து “ஏய் என்னங்கடி கதவ போட்டு உடைக்கிறீங்க.... அமைதியாவே இருக்க மாட்டீங்களா?” என்று கத்தினார்.

சரி சரி, வளரும் கலைஞர்களுக்கு எதிர்ப்பு வர தான் செய்யும். அதையும் தாண்டி நாங்க வீடியோவை எடுத்து முடித்தோம். ஒரு கட்டத்தில் பூகம்பம் வந்தது போல் மேசை ஆட வேண்டும். அதற்காக அக்கா மேசை கீழ் உட்கார்ந்து மேசையை அசைத்து அசத்திவிட்டார். உண்மையிலேயே பூகம்பம் வந்ததுபோல் இருந்துச்சு! அதுக்கு அப்பரம் என்ன நடந்ததுன்னு வீடியோவ பார்த்து தெரிஞ்சிக்குங்கோ....

இரண்டாவது குறும்படம். அதே தலைப்பு ஆனால் விஷயம் வேற. எங்களது பள்ளியை பாதுகாக்க ஆசைப்படுகிறோம் என்பது தான் விஷயம். அக்கா பேசுவார். இதற்காக மூடப்பட்ட பள்ளிக்கு சென்றோம். பள்ளி 5 வருடங்களுக்கு முன்னால் மூடப்பட்டது. அங்கு சென்று வேலையை முடித்தோம்.

நான் கற்று கொண்டது தெளிவான ஒலிப்பதிவுக்கு மைக் பயன்படுத்த வேண்டும் அல்லது re-recording செய்ய வேண்டும். இரண்டுமே செய்ய முடியவில்லை. பட்ஜெட் பற்றாக்குறை மற்றும் படத்தை உடனே ரிலிஸ் செய்ய வேண்டும் என்று sun pictures...ச்சி...ஐ மின் akka pictures (எங்க அக்காவின் தொல்லை காரணமாக...) கேட்டு கொண்டதால் செய்ய முடியவில்லை.

இப்போ வாசகர்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் வீடியோவிற்கு சென்று உங்கள் பொன்னான முத்திரைகளை போட வேண்டும். pls vote for the videos by clicking on the right side of the 5th star. அதுக்கு தான் 5-ஸ்டார் ரேட்டிங். நிறைய வோட்ஸ் இருந்தால், பரிசு கொடுப்பார்கள்....:)

கண்டிப்பாக வோட்ஸ் போடுங்கோ! கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும் ஏன்னா இது வித்தியாசமான படம் (எல்லாரும் சொல்றாங்களே...அதான் நானும் சொல்றேன்:)

* ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டிருக்க இப்படங்கள்!

links for the video

http://www.razor.tv/site/servlet/segment/main/whatwillyoudefend/18560.html


http://www.razor.tv/site/servlet/segment/main/whatwillyoudefend/18498.html

Sep 2, 2008

யாருக்குய்யா வேணும் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம், இங்க பாருங்க அடுத்த சூர்யா ரெடி!

சிறு பிள்ளைகள், வயதானவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்! (எச்சரிக்கை)




(குறிப்பா நிமிடம் 1.02 கேளுங்க... "he is holding his hands") ஹாஹா....

ஆங்கிலம் இனி மெல்ல சாகும்!

கீழ் உள்ள வீடியோவில் (குறிப்பா நிமிடம் 2.25 கேளுங்க)

May 13, 2008

சும்மா... அரட்டை!

வேலை வெட்டி இல்லாத நானும் என் தோழியும் அடிச்ச அரட்டைய பாருங்க. எனக்கும் என் தோழிக்கும் நடந்த online chat பேச்சு ...

நான்: hey hello, எப்படி இருக்கே?

தோழி: ya me fine. ஏய் காயு, am lookin for a part time job!

நான்: ஓ எனக்கு ஒரு வேலை தெரியும்டி


தோழி: oh என்னது

நான்: 2000 bucks per month, pubல நின்னு குடிச்சிட்டு ஆடுறவங்கள, கீழே விழாம பிடிச்சிக்கனும். contact டுபாகூர் company, துபாய், துபாய் main road, துபாய் bus stand


நான்: lol.............. hahahahahahahahhahahahahahhahahahahahhahahha


தோழி: hahhaha

தோழி: ஐயோ ஐயோ நக்கல்டி உனக்கு!

நான்: hahaha... அப்பரம் என்ன.. நான் என்னமோ employment exchange office வச்சு நடத்துற மாதிரி பேசுற.


தோழி: ஹாஹா.. சரி சரி விடு!


நான்: சரி சரி.. நீ எந்த மாதிரி வேலைய எதிர்பாக்குறே?

தோழி: hey முக்கியமான செய்தி


நான்: சொல்ல்லுலுலு!


தோழி: i highlighted my hair.veri veri obvious colour

நான்: hahah அட மக்கா.....!!!
ஏன்? எதுக்கு? (read in manirathnam's movie style)
என்ன கலரு?

தோழி: oh to light brown
actually its called copper. ஆனா, கொஞ்சம் கேவலமாதான் இருக்கு.

நான்: ஏன் கேவலமா இருக்கு?

தோழி: கடையில இருந்த அந்த லூசு லேடி சொன்னுச்சு it will be dark..ஆனா இப்ப பாத்தா அப்படி இல்ல. ரொம்ப பளிச்சுன்னு தெரியுதுடி.


நான்: haha... அதுக்கு உன் வீட்டுல செஞ்ச கார குழம்ப தலையில போட்டுருக்கலாம்.

தோழி: கண்ணாடில என் தலமுடிய பாத்தபிறகு ஷாக் ஆயிட்டேன்.

தோழி: நேத்திக்கு என்னால சரியாகூட தூங்க முடியல.

நான்: உங்க அம்மா என்ன சொன்னாங்க?

தோழி: மொத்தத்துல என் hairstyleலே மாறிபோச்சு. ஐயோ..

தோழி: நான் வீட்டுக்குள்ள வந்தேன்னா, என் அண்ணே வீட்ட விட்ட வெளிய போக சொல்லிடுச்சு.

நான்: hahahahahaha....


தோழி: என்னைய அடையாளம் தெரியல அதுக்கு. என்னைய பாத்து யாருன்னு கேட்டுச்சு?

நான்: உண்மையாவா?

தோழி: எங்க அப்பா அவ்வளவா கண்டுக்கல.. ஆனா எங்க அம்மா தான். ஏதோ என் முடிக்கு disease வந்த மாதிரி பாத்துக்கிட்டு இருக்காங்க.

நான்: haha...damn funny la u!

நான்: hahha... அப்பான்னா இப்படி தான் இருக்கனும்.


தோழி: எங்க அம்மா ரொம்ப என்னைய திட்டிட்டாங்க, ஏன் இப்படி பண்ணிட்டே அப்படி இப்படின்னு. அடுத்த வாரம் ஒரு கல்யாணம் இருக்காம். அதுக்கு போகும்போது நாலு பேரு கேட்டா நான் என்ன சொல்வேன் அப்படின்னு திட்டுறாங்க..



நான்:நாலு பேரு கேட்டாலும் சரி, அஞ்சு பேரு கேட்டாலும் சரி, இது chicago styleனு சொல்லு.

நான்: கவலைப்படாத, நாளைக்கு என் வீட்டு பக்கத்துல புதுசா ரோடு போடுறாங்க, அங்க நிறைய 'தார்' இருக்கும். நீ வந்து தலைய கொஞ்ச காட்டிட்டு போனா, திருப்பி கருப்பா போயிடும். hahaha...

தோழி: நான் கஷ்டத்துல இருக்கேன். உனக்கு கிண்டலா இருக்கா..

நான்: இல்ல சுண்டால இருக்கு. அடி போ டி. நீ இப்படி சிவாஜி படத்துல வர ரஜினி மாதிரி கலரு அடிச்சுகிட்டு வந்தா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்!

நான்: ஓகே, cool cool. don't worry. கொஞ்ச நாள்ல எல்லாம் சரியா போயிடும். அம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்க. இப்ப நான் போய் சாப்பிட போறேன். catch up with u later.

தோழி: போடி போடி, உனக்கு தெரிஞ்ச ஒரே வேலைய correctaa பண்ணு போ!! :)

...........

May 6, 2008

காக்க காக்க- செம்ம காமெடி வீடியோ

இந்த வீடியோவை பார்த்து சிரித்து வயிறு புண்ணாகபோனால் நான் காரணம் இல்லேங்கோ!!

part 1


part 2


part 3

May 5, 2008

பச்ச தண்ணி with பறக்கும் 'குருவி' விஜய்

coffee with anu மாதிரி பச்ச தண்ணி with பறக்கும் 'குருவி' விஜய் பேட்டி தான் இந்த வார special. (இது சிரிப்பதற்காக மட்டும் தான். சீரியஸா எடுத்துக்காதீங்க..)

அவர் ஆபிஸுல ஒரு மணி நேரமா காத்திருந்தேன். அங்கு அவரது குழந்தைகளின் படம் எதுவும் இல்ல. இத பத்தி தான் முதல கேட்க வேண்டும் என்று நினைத்தேன். விஜய் உள்ளே நுழைந்தார்..



விஜய்: வணக்கம்-ண்ணா, ரொம்ப நேரமா wait பண்ணிக்கிட்டு இருந்தீங்களா..

நான்: ஐயோ விஜய், நான் அண்ணா இல்ல. உங்களுக்கு தங்கச்சி மாதிரி இருக்குற என்னை பாத்து அண்ணான்னு சொல்லுறீங்க.

விஜய்: ஓ சாரி சாரி, எப்ப பாத்தாலும் அண்ணா அண்ணா சொல்லி சொல்லி பழக்கமா போச்சு. (சிரித்து கொண்டே)

நான்: சரி சரி உங்க முதல் கேள்வி. அது என்ன உங்க ஆபிஸுல உங்க பிள்ளைங்க படமே காணும்.

விஜய்: (ரொம்ப நேரம் யோசிக்கிறார்)...

நான்: இப்ப நான் என்ன கேட்டேன்னு இவ்வளவு நேரமா யோசிக்கிறீங்க..
விஜய்: இளைய தளபதின்னா யோசிச்சு நிதானமா தான் பேசுவாருன்னு ஒரு image இருக்கு. அத தான் maintain பண்ணுறேன்.
நான்: ???? சரி நீங்க யோசிச்சு சொல்லி அனுப்புங்க.. நான் நாளைக்கு வரேன்.

விஜய்: நோ நோ.. வேட்.. சொல்லுறேன். பிள்ளைங்க படத்த வச்சா உங்கள மாதிரி வரவங்க அத எடுத்து பத்திரிக்கையில போட்டுவிடுவாங்க... அத தவிர்க்க தான் இப்படி.



நான்: அதுனால தான் நீங்க public functionக்குகூட உங்க பிள்ளைங்கள அழைச்சுட்டு வருது இல்லையோ..ம்ம்ம்.. ஆனா இப்போ chennai cricket matchல உங்க மகன் சஞ்சய தூக்கிகிட்டு ஆடுன photo எல்லாம் newspaperல பாத்தேனே?

விஜய்: ஓ அப்படியா..(என்று சொல்லி கொண்டே தன் அப்பாவுக்கு phone போட்டு விஷயத்தை சொன்னார்.)

நான்: என்ன விஜய் ஆச்சு?

விஜய்: ஒன்னுமில்ல அந்த படங்களை போட்ட பத்திரிக்கைக்காரங்களை கவனிக்க சொல்லிட்டேன்!!

நான்: ஐயோ...!! சரி சரி நம்ம அடுத்த கேள்விக்கு போயிடுவோம். நீங்க வித்தியாசமான படங்களில் நடிக்காதது ஏன்?

விஜய்: அட ஏங்க நீங்க வேற அடிப்பட்ட இடத்துல ஆசிட் ஊத்துறீங்க.. நான் வித்தியாசமா நடிச்ச படம் தான் 'அழகிய தமிழ் மகன்' ... என்ன பண்ணாங்க மக்கள். படத்த flop ஆகிட்டாங்க. கொஞ்சம் வேற மாதிரி நடிச்சா எங்க ஏத்துக்குறாங்க.

நான்: அழகிய தமிழ் மகன் படத்துல வித்தியாசமான நடிப்பா? எத சொல்லுறீங்க?

விஜய்: கொஞ்சம் mental disorder மாதிரி... அப்படிகூட சொல்லிட முடியாது... ஒரு மாதிரியான அபூர்வ சக்தி கொண்ட ஆள் மாதிரி நடிச்சேனே. அது தான். பைத்தியம் மாதிரி சேது விக்ரம் நடிச்சா ஓகே, லூசு மாதிரி காதல் கொண்டேன் தனுஷ் நடிச்சா ஓகே, எல்லாத்தை மறந்து பண்ண கஜினி சூர்யா ஓகே, ராம் ஜீவாவும் ஓகே... அதுவே நான் பண்ணா not ok!ன்னு சொல்லுறாங்க ஜனங்க. (ரொம்ப அமைதியாக இருந்தார்.) இதுல வேற double hero. வித்தியாசம் தானே இது.
நான்: உங்களுக்குள்ளே இவ்வளவு சோகமா?

விஜய்: சோகம் இல்ல வேகம். இந்த வேகம் தான் அடுத்த படத்த உடனே முடிக்க வச்சுது. குருவி பாத்தீங்களா?

நான்: பாத்தேங்க.. காலையில சன்னல் வழியா இரண்டு குருவிய பாத்தேன்.

விஜய்: அத சொல்லல்ல. என் படம் குருவிய பாத்தீங்களா?



நான்: பாத்தேன் பாத்தேன். especially அந்த poster stillகள் எல்லாம் ஏன் ஒன்னு முதல்வன் அர்ஜுன் மாதிரி சேத்துல விழுந்த மாதிரி, அப்பரம் கார் ரேசர் அஜித் மாதிரி? ஏன் இப்படி?

விஜய்: (அமைதியாகவே இருக்கிறார்) அது ஒன்னும் இல்லங்க... நான் செஞ்ச முந்திய படங்களைவிட இந்த படத்துல வித்தியாசமா இருக்கனும் அப்படின்னு யோசிச்சு நான், director, producer எல்லாரும் எடுத்து முடிவு தான் இது.

நான்:- ஒரு முக்கியமான கேள்வி. இந்த படத்துக்கு குருவின்னு ஏன் தலைப்பு வச்சீங்க?

விஜய்: ஏன் நல்லா இல்லையா?
நான்: இல்ல... இந்த படத்துக்கு 'தாவி'ன்னு வச்சுருக்கலாம்!!
விஜய்: தாவியா? ஏன்?

நான்: பாதி நேரம் நீங்க தாவி தாவி குதிச்சு ஓடிகிட்டுதான் இருக்கீங்க படத்துல.. அதான் சொன்னேன்.
(விஜய் மூன்று முறை தாவி தாவி தாவி என்று சொல்லி பாக்குறார். உடனே phone எடுத்து, அப்பாவுக்கு அழைக்கிறார்.)


விஜய்: அப்பா, 'தாவி' அப்படின்னு என் அடுத்த படத்துக்கு title வச்சா சூப்பரா இருக்கும். வேற யாரும் வைக்கறதுக்கு முன்னாடி இந்த தலைப்ப register பண்ணிடுங்க. (என்று சொல்லி முடிக்கிறார். மறுபடியும் என் பக்கம் திரும்பி..)

நான்: என்ன விஜய்... இப்படி சொன்னதுக்கா உடனே register பண்ணிட்டீங்க.

விஜய்:- actually இந்த குருவி தலைப்பும் இப்படி வந்ததுதான்!

நான்: (ஆச்சிரியத்தில் முழித்தேன்) நீங்களா திருந்தவே மாட்டீங்களா?
விஜய்: உங்களுக்கு குருவி படத்துல ரொம்ப பிடிச்சது?

நான்: உங்க கடமையுணர்வு!

விஜய்: கடமையுணர்வா? யூ மின் அப்பாவை போய் காப்பாத்துறது?

நான்: இல்லங்க.. திரிஷாவை வில்லன்கிட்டருந்து காப்பாத்தி அவங்கள இழுத்துகிட்டு ஓடுறீங்களே, கில்லி படத்திலிருந்து இதே கடமைதான். அத சொன்னேன்.

விஜய்:( லேசாக சிரிக்கிறார்)

நான்: விஜய், இந்த படத்துல நான் நடிச்சு இருந்திருக்கனும்.

விஜய்: நீங்களா? ஏன்? அவ்வளவு பிடிச்சிருக்கா படம்?

நான்: நோ அது இல்ல... நீங்களும் திரிஷாவும் ஓடுன ஓட்டத்துக்கு ஒரு 5 கிலோவாவது உடம்பு குறைஞ்சிருக்கும். நான் நடிச்சிருந்தா, நானும் ஓடி weight குறைச்சிருப்பேன்ல. ரொம்ப நாளா weight குறைக்க try பண்ணறேன். முடியல.
விஜய்:(லேசா முறைக்கிறார்)

நான்:(உஷாராக நான் அடுத்த கேள்விக்கு தாவினேன்.) விஜய், எப்படி இப்படி சூப்பரா ஆடுறீங்க? உங்க intro பாட்டுல விழுந்து விழுந்து ஆடினீங்க. அப்பரம் அந்த மொழ மொழன்னு பாட்டுல கால விசிறி மாதிரி அசைக்குறீங்க.. எப்படி?

விஜய்: எனக்கு நல்லா வரதே அது ஒன்னு தான். அதனால extra effort போட்டு டான்ஸ் விஷயத்த செய்வோம்.

நான்: அப்படியா விஷயம்..ம்ம்ம்.. சரி இந்த ரீமெக் படங்களை பத்தி என்ன நினைக்குறீங்க? நீங்க நடிப்பீங்களா?

விஜய்: (எப்போதும் போல உதடுகளை அவ்வளவாக திறக்காமல்) எனக்கு இத பத்தி சொல்ல ஒன்னும் இல்ல.

நான்: என்னங்க இப்படி சொல்லிட்டீங்க... சரி தளபதி படத்த ரீமெக் பண்ணுறாங்க. உங்களையும் அஜித்தையும் வச்சு பண்ணலாம்னு நினைச்சா நீங்க என்ன பண்ணுவீங்க?


விஜய்: (என்ன சொல்வது என்று புரியாமல் முழிக்கிறார்.) ரசிகர்கள் பொறுத்து தான் எல்லாம் இருக்கு


நான்:- இப்படி நடந்தா உங்க இரண்டு பேர் ரசிகர்கள் சமாதானமா போவாங்களா இல்ல பிரச்சனை ஏதாச்சு வருமா?

விஜய்: நம்ம அடுத்த கேள்விக்கு போலாமா? (சற்று கடுப்புடன்)

நான்: ஓகே ஒகே கூல் கூல்... நீங்க ஏன் multi hero subject படங்கள நடிக்க கூடாது. இப்ப ஹிந்தி படங்கள வர மாதிரி.. ஒரு kabhi kushi kabhi kham படம் மாதிரி நடிச்சா ரொம்ப வித்தியாசமா இருக்கும்ல.

விஜய்: வேற ஈசியான கேள்வி இருக்கா?
நான்: என்னது, நான் என்ன maths examaa நடத்துறேன். ஈசியா கேக்க.. பதில சொல்லுங்க.

( கொஞ்சம் விட்டா அழுதுவிடுவார் போல தெரிந்தது)

நான்: பரவாயில்ல, அடுத்த கேள்வி. body building, health இந்த விஷயத்த பத்தி என்ன நினைக்குறீங்க. இப்ப நம்ம சூர்யாவா பாருங்க. அடையளம் தெரியாத மாதிரி போயிட்டாரு.

விஜய்: health ரொம்ப முக்கியம்ங்க. நான்கூட குருவி படத்துல 2nd halfல ஒரு fightல சட்டைய கழட்டி fight பண்ணிருப்பேனே.. நல்லா இருந்துச்சுல?

(நான் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டேன்.)

விஜய்: ஏன் சிரிக்குறீங்க?

நான்: படத்துல அதான் டாப் காமெடி சீன்!! பொல்லாதவன் கிளைமெக்ஸுல வர தனுஷ் மாதிரி செம்ம காமெடிங்க அது!

விஜய்: என்னைய ரொம்ப கலாய்க்கிற நீ?

நான்: இதுக்கே இப்படின்னா, தமிழ்மணத்தில் வந்து பாருங்க, மானம் போகுது! சரி சரி, பீல் பண்ணாதீங்க.

( ரொம்ப பாவமான, பரிதாபமான நிலையில் இருந்தார்...)

நான்: விஜய், கடைசியா ஒரு கேள்வி.

விஜய்: இன்னுமா? சரி, சொல்லுங்க.


நான்: உங்க குருவி படம் முதல் நாள் அன்னிக்கு உங்க ரசிகர்கள் 101 குருவிகள பறக்கவிட்டாங்களாம்.


விஜய்: ஆமா, என்னோட தீவிர ரசிகர்கள் (என்றார் பெருமையுடன்)
நான்: உங்க அடுத்த படம் தலைப்பு 'சிங்கம்'ன்னு கேள்விப்பட்டேன். அப்போ release அன்னிக்கு என்னத்த விடுவாங்கண்ண்ண்ண்ணாணாணா!! அவ்வ்வ்வ்...

(சொல்லி முடிப்பதற்குள் விஜய்க்கு கோபம் வர, நான் இடத்த விட்டு ஒரே escape தான்! ஜூட்!!)