Aug 29, 2008

நம்ம(என்) விஷாலுக்கு பிறந்தநாள்



இன்று (29/8) விஷாலுக்கு பிறந்தநாள்....

அவர் பிறந்த வருடம்.... 1977..இன்று அவர் தம் 31வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

வாழ்த்துகள் கூறி கொள்வது

- அகில உலக விஷால் ரசிகை மன்றம்

ஏஆர் ரகுமானின் ஆக இளைய ரசிகை!

Aug 25, 2008

போ என்ற வார்த்தையில் வா என்கிறாய்-சிறுகதை

"ஹாலோ ராகுல், என்ன ஆச்சு காலுக்கு.. ஏன் நொண்டி நொண்டி நடக்குறீங்க?" என்று கேட்டார் பக்கத்துவீட்டுக்காரர் தனது பைக்கை நிறுத்திவிட்டு.

"ஒன்னுமில்ல சார், ஆபிஸிலிருந்து வீட்டுக்கு கிளம்பும்போது, பைக்கை

கொஞ்ச வேகமாக ஸ்டார்ட் பண்ணிட்டேன்னு நினைக்குறேன். அதான், muscle pull மாதிரி இருக்கு." என்றேன் நான்.

"cooling spray இருந்தா, கால்ல spray பண்ணிக்குங்க...சரியாயிடும்." என்று பேசி கொண்டு இருவரும் மின் தூக்கியில் ஏறினோம். அவர் குழந்தைகள் எவ்வாறு இருக்கின்றனர், எப்படி படிக்கிறார்கள் என்பதை பற்றி கேட்டேன். பேசி முடிப்பதற்குள் நாங்கள் இறங்கும் இடம் வந்தது.

"sister நல்லா இருக்காங்களா..கேட்டதா சொல்லுங்க" என்று என் மனைவி ரேவதியை பற்றி நலம் விசாரித்தபடி, அவர் வீட்டை நோக்கி நடந்தார். நான் என் வீட்டை நோக்கி நடந்தேன்.

நேத்து எனக்கும் அவளுக்கும் பெரிய சண்டை. நேத்து 6 மணிக்கு கோயிலுக்கு போலாம்னு சொன்னாள். நானும் ஒகே என்று சொன்னேன். ஆனா, சாய்ந்தரம் 6 மணி வரைக்கும் மீட்டிங். ஆபிஸ் டென்ஷனில் ரேவதி சொன்னதை மறந்துவிட்டேன். செல்போனில் பேட்ரி சுத்தமா போச்சு. 18 மிஸ்ட் கால் கொடுத்திருந்தாள். வீட்டுக்கு வந்து தான் பார்த்தேன்.

அவள் ரொம்ப பாவம்! கோயில் வெளியே ஒரு மணி நேரமா காத்துகிட்டு இருந்தாளாம். எனக்காக காத்திருந்து காத்திருந்து மனம் நொந்து போனவள் வீட்டுக்கு வந்து பெரிய சண்டை போட்டாள்! நானும் என்ன செய்ய? என் மேல தப்பு தான். இருந்தாலும், மறந்துட்டேன். நேற்று ரொம்ப ஸ்பெஷ்ல் தினம். இரண்டு வருஷத்துக்கு முன்னாடி நாங்க இரண்டு பேரும் முதன் முதலா பாத்துகிட்ட நாள், பாத்துகிட்ட இடம்! அம்மா அப்பா நிச்சயிக்கப்பட்ட திருமணம். பொண்ண நாங்க பாத்துட்டோம், நீயும் போய் பாருடான்னு கோயிலுக்கு அனுப்பிவச்சாங்க. பார்த்தோம், பேசினோம், ரொம்ப பிடிச்சுபோச்சு எனக்கு! ரேவதிக்கும் தான்!

இரண்டு வருஷம் அதுக்குள்ள ஓடிபோச்சு. நானும் ரேவதியும் பார்த்துகொண்டு அதே கோயிலில், அதே நாளில் ஒவ்வொரு வருஷமும் போக வேண்டும் என்பது அவளது ஆசை! ஆனா, நேத்திக்கு நான் தான் சொதப்பிட்டேன். நிறைய விஷயங்களை எனக்காக விட்டு கொடுத்தவள். நானாவது நேத்திக்கு சண்ட போடாமல் இருந்திருக்கலாம்.

நான் கோபத்தில் வார்த்தையைவிட, அவளுக்கும் கோபம் வர, அழுதுவிட்டாள். எனக்கு மனசு கஷ்டமா போச்சு. சாப்பிடாமலேயே தூங்கிவிட்டாள். இன்று காலையில் ஆபிஸ்க்கு சென்றுவிட்டு கிட்டதட்ட மூன்னு நாலு 'sorry' ஸ் எம் ஸ் அனுப்பி இருப்பேன். ஆனா, பதில் வரவில்லை. இப்ப இன்னும் கோபத்தில் இருக்கிறாளோ?

வீட்டின் கதவை திறந்தேன். அவள் dining tableலை துடைத்து கொண்டிருந்தாள்.


"hey dear எப்படி இருக்க? are u ok now?" என்று சதாரணமாய் வினாவினேன்.

ஒன்றும் பேசவில்லை ரேவதி. இன்னும் கோபமாய் தான் இருக்கிறாள். நான் மெதுவாய் நடந்து என் அறைக்குள் செல்லும்போது, ரேவதி என் காலையே பார்த்து கொண்டிருந்தாள்.

"என்ன ஆச்சு?" என்பது போல் அவளது கண்கள் பேசின.

நடந்தவற்றை சொன்னேன். அவள் கேட்டுகொண்டே தான் செய்துகொண்டிருந்த வேலையை தொடர்ந்தாள்.

அவள் கோபத்தை போக்க என்ன செய்யலாம் என்று யோசித்தவாறு குளித்து முடித்தேன். காலில் வலி ஏற்பட படுக்கையில் உட்கார்ந்தேன். ரேவதி அறையினுள் நுழைந்தாள் கையில் cooling spray bottleலோடு.

என் கால் அருகே வந்து, spray பண்ணிவிட்டாள் ஏதுவுமே பேசாமல். அவள் கைகளால் தடவி விட்டாள். cooling sprayயைவிட அவளது கைகள் இன்னும் கூலா இருந்துச்சு. அவள் காட்டிய அன்பும் அக்கறையும் நேற்று நான் செய்த முட்டாள்தனத்தை ஞாபகப்படுத்தி, குத்திகாட்டியது!

ரோஜாப்பூ போல் மென்மையான அவளது கைகளை தொட்டேன்,

" மா... சாரி... மா... இன்னும் கோபமா? ஐ எம் ரியலீ சாரி ரேவதி. என் தப்பு தான்... என்கிட்ட ஏதாச்சு பேசேன்.." சொல்லி முடிப்பதற்குள் என் கைகளை வெடுக்கென்று தட்டிவிட்டு சென்றாள்.

"ரேவா...ரேவா...ப்ளீஸ்...சொல்றத கேளு..."

கால் வலி பாதி குறைந்தது; ஆனால், அவள் என்னிடம் பேசமால் இருப்பது, என் மன வலியை அதிகரித்தது. என்ன செய்வது என்று புரியமால் உட்கார்ந்து கொண்டிருந்தபோது, மறுபடியும் உள்ளே வந்தாள். மடித்த துணிகளை அலமாரியில் அடுக்கி வைத்து கொண்டிருந்தாள்.

மெதுவாய் அவள் அருகே சென்று, பின்னாடியிலிருந்து அவளை கட்டி அணைத்து,

"டேய் பேசுடா செல்லம்.....என்கிட்ட பேச மாட்டீயா?" என்று அவள் கழுத்தோரமாய் முத்தமிட்டு கெஞ்சினேன். நான் செய்தது பிடிக்காதவளாய் என்னை தள்ளிவிட்டு அலமாரி கதவை ''படார்'ன்னு மூடிவிட்டு சென்றாள்.

"ச்சே, எதுக்குமே பிடி கொடுக்க மாட்டேங்குறா...சரி இனி இந்த கட்டிபிடி வைத்தியமெல்லாம் ஒன்னும் வேலைக்கு ஆகாது...வேற ஏதாச்சு யோசி ராகுல்" என்று என் மனசாட்சி சத்தமாய் சொன்னது.

இரவு சாப்பாட்டை dining tableலில் வைத்தாள். பொதுவா, நான் சோபாவில் உட்கார்ந்து டிவி பார்த்து கொண்டே சாப்பிடுவேன். அதில் அவளுக்கு இஷ்டம் இருக்காது. dining tableலில் தான் சாப்பிட வேண்டும் என்பது அவளது strict ஆர்டர்!

அந்தெந்த இடத்திற்கும் பொருளுக்கும் கொடுக்கவேண்டிய மரியாதையை கொடுக்கனும்னு அடிக்கடி சொல்வாள். நான் தான் சில நேரத்துல கேட்பதில்லை. இன்னிக்கு அவளுக்கு பிடித்த மாதிரி நடந்து கொண்டு, அவளை சமாதானம் செய்ய, அவள் இஷ்டப்படியே dining tableலில் அமர்ந்தேன்.

"இன்னிக்கு என்ன டிபன்?" என்று பேச்சு கொடுத்தேன். இரண்டு தோசையை என் தட்டில் போட்டாள்.

"ஓ இட்லியா?" என்று கிண்டலடித்தேன்.

"என்ன நக்கலா?" என்று சொல்வாள் என்று எதிர்பார்த்தேன். அப்படியாவது பேசுவாள் என்று நினைத்தேன். ம்ஹும்..ஒன்னும் பேசவில்லை.

ரொம்ப நாளாச்சு, நாங்கள் இப்படி இருவரும் அருகருகே உட்கார்ந்து இருப்பது என்பதை அப்போது தான் உணர்ந்தேன். அவளுக்காக அதிக நேரத்தை ஒதுக்க முடியவில்லையே என்று வேதனை ஒரு புரம் பாய்ந்தது.

விரிந்த கூந்தல், வசீகரிக்கும் கண்கள், கிள்ளிபார்க்க துடிக்கும் கன்னங்கள், காந்தம்போல் ஈர்க்கும் உதடுகள்-அனைத்தையும் ரசித்தேன் அவள் சாப்பிடும் அழகையும் சேர்த்தே. தட்டுக்கு வலிக்காமல் தோசையை பூ போல் மெதுவாய் எடுத்து...வாவ்...எவ்வளவு அழகா சாப்பிட்டாள்! நானும் இருக்கேனே, ஏதோ பயல்வான் மாதிரி 5 தோசையை அப்படியே முழுங்கிட்டு போற ஜன்மம்!

அவளை ரசித்த ஒவ்வொரு நொடியும் எனக்கு புத்துணர்ச்சியை தந்தது.

"ஏய் நீ ரொம்ப அழகா இருக்க" என்று சொல்ல வார்த்தைகள் தொண்டை வரைக்கும் வந்தது. ஆனால், நான் சொல்ல போக, அவள் கண்ணகி கடைசி பேத்தி போல் கண்களாலே என்னை எரித்துவிடுவாளோ என்ற அச்சம் மேலோங்கியது. அவளது கோபத்தை அதிகரிக்க வேண்டாம் என்று தொண்டையில் நின்ற வார்த்தைகள் reverse gear போட்டு பின்னால் சென்றன.


அவளும் சாப்பிட்டு முடித்து எழுந்து சென்றாள்.

இரவு 930 மணியானது. அவளுக்கு பிடித்த ஹிந்தி சீரியல் ஒன்று போடுவான் 930 அளவில். சீரியல் எனக்கு பிடிக்காது. இருப்பினும் அவளுக்காகவே டிவியை ஆன் செய்து சத்த அளவை அதிகமாய் வைத்து பார்க்க தொடங்கினேன். அறைக்குள் இருந்த அவள் வெளியே வேகமாய் வந்தாள்.

அவளும் உட்கார்ந்து பார்ப்பாள். ஏதாச்சு அப்படியே மெதுவாய் பேசி, அவளை கோபத்தை குறைக்கலாம்னு நினைத்தேன். அவள் வந்தாள், டிவி remoteயை என் கையிலிருந்து வெடுக்கென்று எடுத்தாள், எனக்கு பிடித்த கிரிக்கெட் channelலில் மாற்றிவிட்டு சோபாவில் remoteயை எறிந்துவிட்டு அறையினுள் சென்றாள்.

"உனக்கு பிடிச்சதே நீ பண்ணு!" என்பதுபோல் இருந்தது அவள் செயல். ஒரு குழந்தை கோச்சிக்கிட்டு போனால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. அச்சமயம் அவள் முகத்தில் தெரிந்த கோபம்கூட அழகாய் இருந்தது. அவள்மீது கோபம் வரவில்லை. அவளை புரிந்த கொள்ளாமல் அவளை வேதனைபடுத்தி விட்டோமே என்று என் மேல் தான் எனக்கு கோபம்!

டிவி பார்க்கும் மூட் இல்லை. அறைக்குள் என்ன செய்கிறாள் என்று பார்த்தேன். படுத்து இருந்தாள். யாரும் இல்லாத போர்க்களத்தில் நின்று என்ன பயன் என நினைக்க, நானும் படுக்க சென்றேன். என் முகத்தை பார்க்க


பிடிக்காதவளாய், திரும்பி படுத்திருந்தாள். கடைசியா ஒரு தடவ 'சாரி' கேட்டு முயற்சி செய்து பார்ப்போமே என்ற எண்ணம் தோன்றியது.

ஆனால், மனசாட்சி" ரேவதிய நிம்மதியா தூங்க விடு. நாளைக்கு பேசிக்கலாம்" என்றது. நானும் ஒப்பு கொண்டு கண் அசர போன போது, திடீரென்று ரேவதி என் பக்கம் திரும்பி என் நெஞ்சில் அவள் முகம் சாய்த்து அழ ஆரம்பித்தாள்.

அவள் விட்ட மூச்சுகாற்று, அவள் சிந்திய கண்ணீர், அவள் கன்னத்தின் ஸ்பரிசம்-மூன்றும் என் நெஞ்சின் வழியாய் உடல் முழுவதும் சென்று, என்னை புதிதாய் பிறக்க செய்தது ஒரு உணர்வு.

"ஐ எம் சாரி ராகுல்... என்னால முடியல. உன்கிட்ட இன்னிக்கு பேசவே கூடாதுன்னு தான் நினைச்சேன்... ஆனா என்னால முடியல... ஐ எம் சாரி ராகுல் for everything." என்று என்னை கட்டி அணைத்து அழுதாள்.

"ஏய்...என்ன ரேவா... நான் தான் நேத்திக்கு கோபத்துல பேசிட்டேன். நான் தான் சாரி கேட்கனும். நீ போய் எதுக்குமா..." என்று அவள் தலை கோதி சமாதானப்படுத்தினேன்.

"இங்க பாரு...look at me.." என்றேன். அவளும் என்னை பார்த்தாள். கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்தேன்.

"அழ கூடாது...இனிமே இப்படி நடக்காது. ஒகே.

ஆபிஸ்ல இன்னொரு phone charger வாங்கிவச்சிட்டேன்... இனி battery charge இல்லன்னு சொல்ல மாட்டேன்..."

சண்டை சமாதானத்தில் முடிந்ததது என்பதற்கு முற்றுப்புள்ளியாய் நெற்றியிலும் கன்னத்திலும் முத்தமிட்டாள்.

அக்கறை பார்வையுடன் ரேவதி "ராகுல், இப்ப கால் எப்படி இருக்குடா...next time பார்த்து பைக்க ஸ்டார்ட் பண்ணுடா"

அதுக்கு நான், "முன்பு spray போட்டபோது பாதி வலி போச்சு. இப்ப கொடுத்தியே ரெண்டு கிஸ், அதுல எல்லா வலியும் போச்சு" என்று கண் சிமிட்டினேன்.

"ச்சீ...போடா" என்று என் கன்னத்தில் செல்லமாய் அடித்தாள்.

"நான் ஒன்னு சொல்லவா?" என்றேன்.

"என்னடா?" என்றாள்.

"நீ ரொம்ப அழகா இருக்க.." என்றேன். வெட்கப்பட்டு புன்னகையித்தவளாய் என் தோளில் சாய்ந்து கொண்டாள்.

*****முற்றும்*********

Aug 24, 2008

ரொம்ப நாளாச்சு

இப்ப தான் திவ்ஸ் பின்னோட்டத்தை படித்தேன். ரொம்ப நாளா ப்ளாக்ல ஒன்னும் எழுதவில்லை என்பதை உணர்ந்தேன். நிறைய காரணங்கள் இருக்கு...

இந்த 'படிப்பு' என்ற விஷயத்தை கண்டுபிடித்தவனை தீவிரமா தேடிகிட்டு இருக்கேன் கொலைவெறியோட!!

இரண்டு வாரத்துக்கு முன்னாடி, கிரிக்கெட் பயிற்சியின் போது muscle pull ஆச்சு. கொஞ்ச நாள்ல சரியாயிடும் என்று பார்த்தால் வலி அதிகரித்துவிட்டது இரண்டு கால்களிலுமே. டாக்டர்கிட்ட போனேன்.

"your muscle fibre is torn. u should not train for 3 weeks." என்ற பெரிய குண்டை என் தலையில் போட்டார். அதிக நேரம் நடக்க கூடாதாம். நிக்க கூடாதாம். கனமான பொருட்களை தூக்க கூடாதாம். கால்களில் 4 மணி நேரத்துக்கு ஒருமுறை icepack வைக்கனுமாம்.

அவர் 'no training' என்ற சொன்னபோது, எனக்கு அழுகையே வந்துச்சு. இப்ப தான் main teamல விளையாட ஆள் select பண்றாங்க. இந்த நேரத்துல இப்படி ஆச்சுன்னு மனசு நொந்துபோச்சு.. அடுத்த வாரம் என் முதல் match விளையாட வேண்டியது....ஆனா போகமுடியாது!!!

கஷ்டம் singleலா வராது. கூட்டமா தான் வரும்! அதுக்கு அப்பரம், கையில ஒரு பெரிய கட்டி மாதிரி வந்து இருக்கு. என்னவென்றே தெரியல! கைய தூக்க முடியல....

கொடுமைக்கு மேல் கொடுமை!

ப்ளாக்ல எழுதும் ஆசையும் உற்சாகமும் இல்லாமல் போய்விட்டது. அதான் இங்க தலைக்காட்ட முடியல.

Aug 15, 2008

காதல் எனப்படுவது....யாதெனில்

இந்த தொடர் பதிவோட்டத்தில் என்னை இணைத்த திவ்யாவுக்கு நன்றி! எழுத முடியுமா? என்று கேட்டபோது, சரி என்று தைரியமாக சொன்னேன். ஆனால், எழுத உட்காரும்போது, வார்த்தைகள் வர அடம்பிடிக்குது. முக்கியமான போஸ்ட்கள் (அதாவது, இது போன்றவை) எழுதும்போது, ஆழ்ந்த சிந்தனை தேவை. ஆக, பக்கத்து தெருவில் இருக்கும் பார்க் சென்றுவிடுவேன். அங்க உட்கார்ந்து யோசிச்சாவது, ஏதாச்சு தோணுமான்னு தான்! இதற்கு முன்னால் எழுதியவர்களின் சிலர் பதிவுகளை பார்த்து மிரண்டுவிட்டேன்! சரி கவிதையா எழுதிவிடுவோம் என்று வெள்ளை ஜிப்பா போடாத வைரமுத்து போல யோசித்தேன்...



காதல் எனப்படுவது
காட்டுத்தீயாக இருந்தால்
வா,
நாம் இருவரும்
குளிர்க்காய்வோம்!



காதல் எனப்படுவது
கானல் நீராக இருந்தால்
வா,
நாம் இருவரும்
அதில் மறைந்துபோவோம்!

காதல் எனப்படுவது
கரிசல்காடாக இருந்தால்
வா,
நாம் இருவரும்
அதில் நடந்து செல்வோம்!

காதல் எனப்படுவது
புயல் காற்றாக இருந்தால்
வா,
நாம் இருவரும்
கைகோர்த்து பறந்து செல்வோம்!

காதல் எனப்படுவது
ஆகாய சந்தையாக இருந்தால்
வா,
உன் கண்களைபோல் இருக்கும்
நட்சத்திரங்களையும்
உன் முகம்போல் இருக்கும்
நிலாவையும்
வாங்கி வருவோம்!

எழுதிமுடிப்பதற்கு,2 கிலோ மீட்டர் ஓடி முடித்ததுபோல் ரொம்ப tiredaa போயிட்டேன். இதை எழுதுவது கஷ்டம், ஆனா, அடுத்து யாரை கூப்பிடலாம் என்பது ரொம்ப ஈசி!! தற்போது கவிதைகளா கொட்டி தீர்க்கும் கார்த்திக் அவர்களை அடுத்து அழைக்கிறேன்... வாங்கப்பா மின்னல்...!!:)

Aug 13, 2008

ஜோ & சூர்யாவின் மகளுக்கு ஒரு வயசு

ஆகஸ்ட் 10 தேதி தியாவின் முதல் வயசு பிறந்தநாள். புள்ள ரொம்ம்பப cutaa இருக்கு!!



உலகத்துல 7 பேரு ஒரு மாதிரி இருப்பாங்களாம். அது உண்மை தான் நினைக்குறேன். என் பக்கத்துவீட்டு சீன பையனுக்கு 2 வயசு தான் ஆகுது. அவனும் அசல் தியா மாதிரியே இருக்கான்! ம்ம்ம்...குழந்தைகள் என்றாலே ரொம்ம்பப cute தான் போல.

(படத்தில்- நக்மா, நக்மாவின் தந்தை, சிவக்குமார், சூர்யாவின் அம்மா, தியாவை தூக்கி வைத்திருப்பது சூர்யாவின் தங்கை, சூர்யா, ஜோ)
ஆமா, கல்யாணம் ஆனாலே, பொண்ணுங்க ஏன் இப்படி குண்டாபோயிடுறாங்க...ஜோ எப்படி இருந்துச்சு...இப்ப...ம்ம்ம்ம்ம்....
(படங்கள்- www.indiagltiz.com)

Aug 12, 2008

அக்காவுக்கு பிடிக்காத நடிகர்

போன வாரம் நான், என் அக்கா, எங்க தோழன் மூவரும் அஞ்சப்பர் கடைக்கு சாப்பிட போனோம். அவங்க இரண்டு பேரும் தான் சாப்பாடு ஆர்டர் பண்ணாங்க... எனக்கு இருந்த பசி மயக்கத்துல ஒன்னும் புரியல்ல...

சாப்பாடு வந்துடுச்சு... நான் என் வேலைய ஆரம்பித்தேன். சாப்பிட்டு கொண்டிருந்தபோது, தோழன் திடீரென்னு கேட்டேன் "என்ன காயத்ரி,3 வருஷமா காலேஜ் படிக்குற.. boyfriend எவனாச்சு இருக்கானா?" என்று கேட்டான்.

நான் வாயில் கோழியை அமுக்கி கொண்டே "ஆமா, இருக்கான்" என்றேன். அக்காவுக்கு ஒரே ஷாக்!

"விஷால் தான் என் boyfriend" என்றேன் நான்.

"அட த்தூதூதூ...." என்று ஒரு சத்தம் கேட்க, தட்டில் இருந்த என் பார்வை எதிரில் உட்கார்ந்து இருந்த என் அக்காவிடன் சென்றது. அக்கா தான் துப்பினாள்.

"என்ன ஆச்சு"

"எனக்கு பிடிக்காத ஒரு நடிகன்னா, அது விஷால் தான்" என்றாள் அக்கா! இப்போ எனக்கு ஒரே ஷாக்! விஷால பிடிக்காத ஒரு பொண்ணா???

பிடிக்காததற்கு காரணங்களை அடுக்கி கொண்டே போனாள்.

எனக்கு பிடித்ததற்கு காரணங்களை அடுக்கி கொண்டே போனேன்.

தோழன் எங்க சண்டையை ரசித்து பார்த்து கொண்டிருந்தான்.....

Aug 11, 2008

சுப்பரமணியபுர சுவாதி- ஒன்னும் சொல்றதுக்கு இல்ல

எல்லாரும் சுப்பரமணியபுரம் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்த தள்ள,சரி என்ன தான் படத்த எடுத்துவச்சு இருக்காய்ங்கன்னு பாக்க போனேன்.சும்மா சொல்ல கூடாது.. மிரட்டலான படம் தான்!படத்த பத்தி நிறைய பேரு சொல்லிட்டாங்க...ஆக நான் விமர்சனம் போட வரல்ல... ஆனா ஒன்னே ஒன்னு! ஜெயின் voice modulation சில இடங்களில் இன்னும் அதிக கவன செலுத்தி இருக்கலாம். சென்னை 28ல் பேசியது மாதிரி இருந்துச்சு...சரி அத விடுங்க..ஆனா அவர் நடிப்பு...ம்ம்ம்..பின்னிட்டாரு!

இப்போ மேட்டர் என்னன்னா... அந்த புள்ள பேரு என்னா...ஆ..சுவாதி!

என் தோழன் ஏற்கனவே படத்த பாத்துவிட்டு, சுவாதி சுவாதின்னு இரண்டு மூன்னு நாளா உலறிகிட்டு இருந்தான்...புள்ள ஏதோ சூப்பரா பண்ணியிருக்குன்னு நம்பி போனேன்...

ஐயோ ஐயோ ஒன்னும் சொல்றதுக்கு இல்ல! ஏங்க, அதான் வெட்கமா? வெட்கப்படற மாதிரி பாக்க சொன்னா, ஏதோ வெத்தல பெட்டி டப்பாவ திருடிக்கிட்டு போற மாதிரி ஒரு பார்வை. இயக்குனர் சசிகுமார் சொல்லி கொடுத்த மாதிரியே இருந்துச்சு!!!! காதல் படத்துல சந்தியா கிளைமெக்ஸ் சீன்ல அழுத மாதிரியே இருந்துச்சு சுவாதியின் நடிப்பு இப்படத்தின் கிளைமெக்ஸ் சீன்லையும்.

ஆனா என்ன, நல்ல தமிழ் பொண்ணு மாதிரி தெரிஞ்சுச்சு படத்துல. எதிர்காலம் இருக்கு! ஆனா, நடிப்புல இன்னும் தேறனும்! ரொம்ம்பப எதிர்பார்த்துட்டேனு நினைக்கிறேன், அதுனால தான் சுவாதி நடிப்பு அவ்வளவாக ரசிக்க முடியல. காதல் சந்தியா மாதிரி முதல் படத்துல பின்னி எடுத்து இருக்கும்னு நினைச்சேன். ஆனா...ம்ம்ம்...

அது என்ன, பட தலைப்புல சுப்பரமணின்னு வார்த்தை இருந்தா ஹீரோயின்களுக்கு சரியான நடிப்பு வராதா... (என்ன முழிக்கிறீங்க...) இந்த படத்துல இவங்க இப்படி..

சந்தோஷ் சுப்பரமணியம் படத்துல ஜெனிலியா...5 ரூபாய்க்கு நடிக்க சொன்ன 5.50 ரூபாய்க்கு நடிச்சது.சாரி சாரி.. நடிக்கல...பறந்துச்சு! ஏன்னா..முக்காவாசி நேரம் அந்த புள்ள டையலாக் பேசும்போது குதிச்சு குதிச்சு தானே பேசுனுச்சு!:)))))))

(இத படிச்சுபுட்டு, சுவாதி மற்றும் ஜெனிலியாவின் fans, iron boards, tables, washing machines, electric cookers...இப்படி யாரா இருந்தாலும் கோப படகூடாது!)

Aug 9, 2008

நல்லா வேணும் உனக்கு!!

என் தோழன் ஒருத்தன் இருக்கான். பள்ளி நண்பன். விதவிதமான ஸ் எம் ஸ் அனுப்புவதில் கிள்ளாடி!

பெருமாள் கோயிலிருந்து ஒரு ஸ் எம் ஸ். இது பெருமாள் சொன்ன விஷயம். இதை அடுத்த 15 நிமிடத்துக்குள் 9 பேருக்கு அனுப்பிவிடனும். அப்படி இப்படின்னு சில நேரங்களில் தேவையில்லாத ஸ் எம் ஸ் அனுப்புவான்! இப்படி ஸ் எம் ஸ் வந்தாலே, நான் செம்ம காண்டாயிடுவேன்!

இப்படிப்பட்டவனாய் நேற்றுக்கு பழி வாங்க சரியான ஒரு சந்தர்ப்பம் கிடைச்சுது. நேத்திக்கு பையன் ஒரு ஸ் எம் ஸ் அனுப்பினான்...

"என்னைய பத்தி உனக்கு எவ்வளவு தெரியுதுன்னு பாப்போம்?
1) பிறந்ததேதி-

2)நான் அதிகமா பயன்படுத்தும் வார்த்தை-

3) நான் விரும்புவது-

4) நான் வெறுப்பது-

5) என் கெட்ட குணம்-

6) என் நல்ல குணம்-

7)நான் உனக்கு யாரு?-

8)என் திறமை-

9) என்னிடம் உனக்கு பிடிச்சது-

10) பிடிக்காதது-

11) நான் உன்னை காயப்படுத்தி இருக்கேனா?-

12) என்னைய உனக்கு எவ்வளவு பிடிக்கும்?-

13) எனக்காக நீ வேண்டிகொள்வது-


இதுக்கு என் பதில்...என்ன தெரியுமா?

1) பிறந்ததேதி- feb 31st

2)நான் அதிகமா பயன்படுத்தும் வார்த்தை- பண்ணாட

3) நான் விரும்புவது- திரிஷா

4) நான் வெறுப்பது- மும்தாஸ்

5) என் கெட்ட குணம்- கஞ்சா அடிப்பது

6) என் நல்ல குணம்- சிகரெட் பிடிப்பது

7)நான் உனக்கு யாரு?- வெட்டி ஆபிசர்

8)என் திறமை- தண்ணி அடிப்பது

9) என்னிடம் உனக்கு பிடிச்சது- உன் கலரு...

10) பிடிக்காதது- உன் weight...

11) நான் உன்னை காயப்படுத்தி இருக்கேனா?- ஆமா..இப்படி ஸ் எம் ஸ் அனுப்பி...

12) என்னைய உனக்கு எவ்வளவு பிடிக்கும்?- u mean pyaar?? நோ.. நான் உன் எதிரி!

13) எனக்காக நீ வேண்டிகொள்வது- இந்த பதில்களை படிக்கும்போது, அழகூடாதுன்னு!

பழிவாங்கிய சந்தோஷத்தில் நிம்மதியா தூங்கினேன்! பையன் அதுக்கு அப்பரம் காண போயிட்டான்..

நேத்திக்கு அதுவா?

நேத்திக்கு தேதி என்ன?
என்ன?

என்ன?

என்ன?(echo effect)

நேத்து, 8/8/08.

எல்லாம் 8!

ஏதோ தெரியல்ல.. பாத்தபோது ஆச்சிரியமா இருந்துச்சு! காரணம் சொல்ல தெரியல்ல...

ஆனால், சீனர்களிடையே இந்த தேதியை அதிர்ஷ்ட தினமாக நினைக்கிறார்கள். சீனர்களின் அதிர்ஷ்ட எண் 8 என்பதால் இந்த பரபரப்பு! நேற்று நிறைய சீனர்களின் திருமணங்கள் நடைபெற்றதாக தகவல்! அதனால் என்னவோ நேற்று தான் சீனாவில் ஒலிம்பிக்ஸ் ஆரம்பிக்கப்பட்டது!

Aug 4, 2008

மாப்பு, வச்சுட்டாங்கய்யா ஆப்பு!

இந்த வாரம் புது timetable. நிறைய மாற்றங்களுடன்! திங்கட்கிழமை அன்றைக்கே எனக்கு ஆப்பு starting... காலையில 1030 முதல் மதியம் 330 வரைக்கும் வகுப்புகள்... எந்த ஒரு break இல்லாமல்! எப்படிய்யா முடியும்?
அப்ப நான் எத்தன மணிக்கு சாப்பிடுறது?? என்ன கொடுமை சார் இது?

வியாழக்கிழமை காலை 1130 முதல் மாலை 530 வரைக்கும் வகுப்புகள்! நான் யாருக்கு என்ன பாவம் செஞ்சேனோ!! உஷ்.... யப்பா!! முடியல என்னால...

Aug 2, 2008

குசேலன் - சூப்பரோ சூப்பர்!!

குசேலன் - சூப்பரோ சூப்பர்!

oops..sorry for the spelling mistake.. குசேலன் - ரப்பரோ ரப்பர்!!என்னால முடியல...
ஏன்?
எதுக்கு?
எப்படி?
ஏன் இப்படிலாம்?

-மீனாவின் மூத்த பொண்ணு பத்தாவது படிக்குதாம்!!! அதுவே மீனா வயசு இருக்கும் போல தெரியுது..

- ஏழை குடும்பத்துல இருக்குற மூத்த பொண்ணு hairstyleல பாருங்க..straighten பண்ணி வச்சுருக்கு!!! arrrrrrrrgggggggggghhhhhhhh!

-வடிவேலு பண்ணது காமெடியா? பிரபு பண்ணது தான் காமெடி!!
y blood?
sameeeeeeee blood???

தெருவுல போற சனியன பனியன்குள்ள விட்ட கதையை நான் கேட்டு இருக்குறேன்... நீங்க அத முழுசா அனுப்பவிக்கனுமா.. குசேலன் படத்த பாருங்க!!:(((((((((((((((((

Aug 1, 2008

சிங்கையில் தாதியர் தினம்

உலக தாதியர் தினம் மே 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆனால், சிங்கையில் இன்று (ஆக்ஸ்ட் 1ஆம் தேதி) கொண்டாடப்படுவதின் நோக்கம் தாதியர் வளர்ச்சி மன்றம் இன்றைய தினம் தான் 1885ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு முன் தாதியர்கள் அவ்வளவாக கிடையாது. நோயாளிகளை பார்த்து கொள்ள தாதியர்கள் தேவை என்று அறிவிக்கப்பட்டது 1885ஆம் ஆண்டு தான்.



அப்போது இருந்த உள்ளூர் french convent மூலம் நிறைய தாதியர்கள் வேலையில் சேர்ந்தனர். ஆகவே தான் அந்த தினத்தை சிங்கையில் தாதியர் தினமாக கொண்டாடப்படுகிறது. உலகளவில் மே 12ஆம் தேதி கொண்டாடப்படுவதின் காராணம், அன்று தான் florence nightingale அவர்களின் பிறந்த நாளாம்.



இன்று சிங்கையில் வேலை பார்க்கும் அனைத்து தாதியர்களுக்கும் என் வாழ்த்துகள்! நன்றிகள்! என்னுடைய தோழிகள் சிலர் தாதியராக வேலை செய்கின்றனர். அவர்களுக்கு முக்கியமாக என் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். தாதி என்று சொன்னவுடன் எனக்கு ஒன்னு ஞாபகத்துக்கு வரும். 'மனதில் உறுதி வேண்டும்' படமும் அப்படத்தில் நடித்த சுஹாசினியும்!! the movie is simply gr8!!! ஒரு பேட்டியில் அப்படத்தின் இயக்குனர் பாலச்சந்தர் சொன்னார் தான் இப்படத்தை எடுத்ததற்கு காரணம் தனக்கு உடல் நலம் மோசமான நிலையில் இருந்தபோது பார்த்து கொண்ட தாதி ஒருவர் தான் இப்படத்துக்கு inspiration என்று.



இவ்வாறு மற்றவர்களின் நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொரு தாதியருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!::))