Apr 28, 2015

கண்ண தொறக்கனும் சாமி.......

சமீபத்தில் கோயிலுக்கு சென்றபோது நான் பார்த்த சில விஷயங்கள் ரொம்ப நெருடலா இருந்துச்சு. இப்படி தான் நம்ம சாமி கும்பிடுறோமா என யோசிக்கும்போது சிரிப்பா இருக்கு!



1) சாமி கும்பிடாதே, பிச்சை எடு!நான் சின்ன வயதில் (ரெண்டு, மூணு வயதில்), மெழுகுவத்தி எரிவதை பார்த்தால், உடனே கை கூப்பி 'சாமி கும்பிடுறேன்' என கண்களை மூடி கொள்வேன். உண்மையிலேயே சாமியிடம் எப்படி கும்பிடுவது, என்ன செய்ய வேண்டும் என பெற்றோர்கள் அவர்களது பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்கிறார்களா என தெரிவதில்லை.

சில நேரங்களில், பெற்றோர்களுக்கே உண்மையான வழிபாடு முறைகள் தெரிவதில்லை. 


போன வாரம், கோயிலுக்கு சென்றபோது நான் பார்த்த ஒரு சம்பவம். ஒரு அம்மா, தனது பிள்ளையிடம் (அவனுக்கு கிட்டதட்ட 11 அல்லது 12 வயது இருக்கும்)..."சரியா கும்பிடு" என்றார். 

பிள்ளை: எப்படி மா கும்பிடுறது?

அம்மா: நான் நல்லா இருக்கனும். பரிட்சையில நல்லா செய்யனும். நல்லா மார்க் வாங்கனும். அடுத்த வருஷம் நல்ல ஸ்கூலுக்கு போகனும்-னு கும்பிடு டா!


நமது பிள்ளைகளிடம் ஏன் பிச்சை எடுக்க கத்து கொடுக்குறோம்?? 


2) இது நம்ம ஏரியா, உள்ள வராதே!

இத பத்தி ஏற்கனவே ஒரு தடவ சொல்லி இருக்கேனு நினைக்குறேன். கோயில்களில் ஏன் 'tourists are not allowed beyond this point" என்ற அறிவிப்பு பலுகை இருக்குனு தெரியல. போன வாரம் சென்ற கோயிலில் இல்லை. ஆனா, சில கோயில் வாசலிலே இருக்கு. சில கோயிலில் சாமி சிலை வரைக்கும் போகலாமா அதுக்கு அப்பரம் போக கூடாதாம்.


நம்ம தானே 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' னு பெருமையா மார்தட்டி கொள்கிறோம்.
எம்மதமும் சம்மதம் என்றும் நம்ம தானே சொல்லிகிட்டு இருக்கோம். அப்பரம் ஏன் இந்த பாகுபாடு.
உன் தண்ணி என் தண்ணி, உன் காற்று என் காற்று, உன் சாமி என் சாமி-னு சொல்லி ஏன் இந்த பிரிவினை?? எனக்கு புரியல.


- "ஓ அவங்க சுத்தமா குளிச்சிட்டு வந்து இருக்காங்களானு தெரியாது... அதனால உள்ள விட முடியாது?" அப்படினு ஒரு ஐயர் என்னிடம் பதில் சொன்னார்.  (வழிபடும் போகும் இந்துக்கள் அனைவரும் குளிச்சுட்டு வந்தாங்கனு உங்களால சொல்ல முடியுமா?)-


"ஓ....அவங்க கால் தெரியுற மாதிரி காற்சட்டை போட்டு வருவாங்க...." (நம்ம பொண்ணுக்கு முழு முதுகு தெரியுற மாதிரி சேலை அணிந்து வந்தால் தப்பு இல்ல??)

- "ஓ....அவங்க கண்டபடி புகைப்படம் எடுப்பாங்க." (யோவ், நம்ம ஆளுங்க, முழு படமே ரிலிஸ் பண்ணற அளவுக்கு கைபேசியில் வீடியோ எடுக்கலாம்....அது தப்பு இல்ல??)




3) முடி இல்ல, முடிவு எடுத்தேன். 

ரெண்டு  பக்தர்கள். 55 வயது ஆண்ட்டிஸ். தனது மகளின் திருமண பற்றி 'அனுமான்' சாமி பக்கத்துல நின்னு பேசிகிட்டு இருந்தாங்க.....இருந்துச்சுங்க!



ஆண்ட்டி 1: என் பொண்ணுக்கு மாப்பிள்ள பார்த்தோம்.

ஆண்ட்டி 2: from?

ஆண்ட்டி 1: பையன் கனடாவுல இருக்கான் (குரலில் சற்று பெருமை)

ஆண்ட்டி 2: முடிவு ஆச்சா?

ஆண்ட்டி 1: no, we rejected it.

ஆண்ட்டி 2: oh no. why?

ஆண்ட்டி 1: பையனுக்கு முடி இல்ல.

********************************************************************************
 கண்ண தொறக்கனும் சாமி இவங்க எல்லாரும் ஏன் இப்படி இருக்காங்க???
நல்ல புத்தியை கொடு சாமி. கண்ண சீக்கிரம் தொறங்க சாமி! 

Apr 13, 2015

சுஹாசினி பேச்சும், பாலு தேவர் மூச்சும்

சுஹாசினி சமீபத்தில் செய்தியாளர்கள் முன்னாடி பேசிய பேச்சு, எனக்கு பாலு தேவர் காட்சியை கண் முன் கொண்டு வந்தது.


அந்த சின்ன பையன் கேள்வி கேட்டதை போல்,
மவுசுங்கறது நீங்க கையில பிடிச்சது.
விமர்சனங்கறது நீங்க படிச்சு வாங்கின பட்டமா?? என்று அறைந்தார்.

விமர்சனம் எழுத என்ன தகுதி எனக்கு, என்று நானே ஒரு மூலையில் உட்கார்ந்து மூளையை கசக்கி யோசித்தேன்.


1) மணிரத்னம் படத்தை அவர் promo செய்தாரோ இல்லையோ இணையம் வழி நாங்க அதிகமாகவே promo செய்து இருப்போம். (கடல், ராவணன் படங்கள் உட்பட)

2) இன்றைக்குகூட மணிரத்னம் படத்தை டிவியில் போட்டால், மத்த எல்லாம் வேலையையும் அப்படியே போட்ட படி விட்டுவிட்டு, முழு படத்தையும் உட்கார்ந்து பார்ப்போம். தளபதி, அஞ்சலி, நாயகன், ரோஜா படங்கள் சில உதாரணம்

3) இன்றுகூட காலையில் தினமும் கேட்கும் சில பாடல்களில், 'ராசாத்தி...' (திருடா திருடி) மற்றும் காதல் சடுகுடு (அலைபாயுதே) சில.

4) எத்தனையோ தோல்வி படங்கள் கொடுத்த பிறகும், இப்ப உள்ள பசங்க குறும்படம் எடுப்பதாக இருந்தால்கூட... "ஹேய் மச்சான், நம்ம மணிரத்னம் மாதிரி படம் எடுக்கணும்'னு சொல்லும் அளவுக்கு உயர்த்தி வைத்தவர்களில் சிலர் இந்த மவுசு பிடிக்க தெரிந்தவர்கள் தான்.


so.... புரிந்ததா kanmani?

Apr 11, 2015

எனக்கென்ன யாருமில்லையே!- காதல் தோல்வி கவிதை

மழை காலத்தில்
'ஐ மிஸ் யூ' மெசெஜ்கள்
குவியும் அவள் கைபேசியில்
இப்போது வெறும் மழை சாரல்
மட்டும் பட்டு பட்டு போனது!
கைகோர்த்து தோள் சாய்ந்து
படம் பார்த்த நினைவுகளெல்லாம்
திரையரங்கு தரையில் கிடக்கும்
பாப்கான் போல சிதறி போனது!
மனம்
மண்ணுக்குள் புதைந்த
கல்லறையாக
கண்ட காதல்
மண்ணில்
விழுந்த சில்லறையாக
வாழ்கிறாள் தாடி இல்லா
பெண் தேவதாஸாக!

ஜஸ்ட் சும்மா (11/4/15)

சமீபத்தில் பார்த்த ஒரு படத்தின் போஸ்டர். சிரிப்பு தாங்கல. என்னய்யா தலைப்பு இது??



வெத்து வேட்டு!!! ஹாஹாஹா....... தமிழ் இனி மெல்ல 'பொழைச்சுக்கும்'

*******************************************************************

ஒகே கண்மணி பாடல்களை கேட்டு ஆஹா ஓஹோ-னு பாராட்டுகிறார்கள். ஆனால், எனக்கு என்னமோ தல இப்ப வர பாடல்களில் நிறைய இந்த கம்பியூட்டர் இசையை புகுத்தி...ம்ச்....என்னமோ போங்க!

மனசுல பச்சக்கு-னு பதியில்ல.

ஆனால், டிரெய்லர் பார்த்த பிறகு அதே பழைய அலைபாயுதே உணர்வு. ஏப்ரல் 17க்காக காத்திருப்போம்.
***********************************************************************
தீபிகா படுகோன் நடித்த பெண்கள் உரிமை விளம்பர படம் 'வெத்து வேட்டு' ரகமாக இருந்தாலும், அவர் 'மன சோர்வு' சம்பந்தப்பட்ட நேர்காணல் ஒன்று பார்த்தேன். அவரே மன நிம்மதி இல்லாமல் ஒரு வருஷம் கஷ்டப்பட்டேன் என்றபோது, ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது. அவர் சொல்லும் பல கருத்துகள் நாமே பல நேரங்களில் அனுபவித்து இருக்கோம். நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களோ அப்படி இருந்தால், சும்மா,..." cheer up" என்று சொல்லி உதாசினம் படுத்தாதீங்க!!! சரியான சிகிச்சை பெறுங்க!