Nov 30, 2011

photo (தொடர்கதை)-2

சமையல் அறையிலிருந்து வந்த அஞ்சலி, "less sugar for you." புன்னகையித்து கொண்டு அஷ்வினுக்கு கலக்கிய காபியை மேசையில் அவன் அருகே வைத்தாள்.

தனது காபியை அருந்தியபடி அஞ்சலி, "அஷ்வின், how's your work? உன் office main buildingகிட்ட புதுசா railway track வர போகுதுனு அன்னிக்கு newspaper படிச்சேன். is that true?"

அவளது கேள்வி அவனது காதுகளில் விழுந்தாலும், அவன் மனதில் ஏறவில்லை. அவள் முகத்தையே பார்த்தான்.


"இந்த டிவி, முன்னாடி இந்த சோபா இருக்கும் இடத்துல தான் இருந்துச்சு?" என்றான் அஷ்வின். இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்த காலத்தில் இருந்ததை நினைவுகூர்ந்தான். பழையனவற்றை ஞாபகப்படுத்த, அஞ்சலி எதுவும் பேசவில்லை.

"ஏன், பழைய ஞாபகம் வேண்டாம்னு மாத்திட்டீயா?" அவன் கேட்க அதற்கு அஞ்சலி,

"பழைய ஞாபகம் வேண்டாம்னு நினைச்சு இருந்தா, வீட்டையே மாத்தி இருப்பேன்." என்று வார்த்தை சாட்டையால் அடித்தாள். அமைதியாக இருந்த சூழல் இப்போது சற்று சூடாக கிளம்ப ஆரம்பித்தது.

"அப்பரம் ஏன் மாத்தல்ல?" அஷ்வினும் விடவில்லை.

"that's my choice, ashwin." அவன் கேட்ட கேள்விகள் அனைத்தும் அஞ்சலியை வெறுப்பேத்தியது.

"life எல்லாமே உன் choice படி தானே நடக்கனும்னு ஆசைப்படுவ!" அவன் குரலின் சத்தம் சற்று உயர்ந்தது. அவன் பழையதை மனதில் வைத்து கொண்டு கோபமாக பேசுகிறான் என்பதை அறிந்த அஞ்சலி,

"அஷ்வின், காபி ஆறி போயிட போது. drink that first."

"எதையும் மறக்க முடியல அஞ்சலி. i still love you very much." அவன் கோபம் தணிய, குரல் மங்கியது. பெருமூச்சுவிட்ட அஞ்சலி,

"let's not talk about it anymore."

"why? அவ்வளவு தானா நம்ம relationship. இன்னொரு chance கொடு." கோபமாக இருந்தவன் இப்போது கெஞ்சினான்.

"அஷ்வின், சின்ன புள்ள மாதிரி அடம்பிடிக்காத. நமக்கு divorce முடிஞ்சு ஒரு வருஷம் ஆச்சு. it's over! let's move on, அஷ்வின். அது தான் நமக்கு நல்லது." தனது காபியை அருந்தியபடி அஞ்சலி.

"எப்படி அஞ்சலி, உன்னால மட்டும் எல்லாத்தையும் மறந்துட்டு ஒன்னுமே நடக்காத மாதிரி இருக்க முடியுது?"

"அஷ்வின், mind your words."

அஷ்வின் மறுபடியும் கோபஏணியில் ஏறுகிறான் என்பது தெளிவாக புரிந்தது.

"ok ashwin, நீ நல்ல மூட்ல இல்ல. இன்னிக்கு பேச வேண்டாம். நீ கிளம்பு. i will call you later."

"no. முடியாது. ஒரு வருஷம்....1 year, அஞ்சலி. தினமும் இத நினைச்சு நினைச்சு...வலிக்குது அஞ்சலி!"

அவள் அமைதி காத்தாள்.

அஞ்சலி, "அஷ்வின், நீ கிளம்பு!"

அஷ்வின், "stop chasing me away from your life.” என்றவன் சினம்கொண்டு எழுந்து நின்றான். நின்றவன் தனது ஆள்காட்டி விரலை நீட்டி, “ஒன்னு மட்டும் புரிஞ்சிக்கோ அஞ்சலி, no matter what, I still love you.”

அவன் ‘லவ்’ என்ற வார்த்தையை அடிக்கடி சொல்ல, அஞ்சலிக்கு அறுவறுப்பாய் இருந்தது.

“stop it ashwin. what do you mean by love? சும்மா லவ் லவ்னு சொல்றதுனால நீ செஞ்சது எல்லாம் தப்பு இல்லன்னு ஆகாது.”

அஞ்சலியின் ஆத்திரம் அவன் புருவங்களை சுருங்க வைத்தது.

அஞ்சலி தொடர்ந்தாள், “you can’t just love a person like that. you must love her habits, her interests, her ambitions, her goals….எல்லாமே! கல்யாணத்துக்கு அப்பரம் வேலைக்கு போக கூடாதுனு சொன்னே. ஒகே fine. வீட்டுலேந்து business பண்ணலாம்னு கேட்டேன். அதுக்கும் no. friendsகூட வெளியே போகனும்னா உன்கிட்ட permission கேட்கறது fine. ஆனா, உன் familyகிட்டயே கேட்கனும்னு எதிர்பார்க்குறது….it’s ridiculous, ashwin. எனக்கு பிடிச்ச சுடிதார் போட முடியாது. உனக்கு பிடிச்ச கலர்ல தான் போடனும். எல்லாத்துக்கும், மத்தவங்ககிட்ட கேட்டு கேட்டு….ashwin…it’s hell man!”

அமைதியாக இருந்தான் அஷ்வின்.

அஞ்சலி, “எந்த ஒரு expectations இல்லாம வாழனும் அஷ்வின். அப்படி இல்லன்னா, no point sticking on to that relationship.”

அஷ்வின், “compromises are essential in life. அப்ப தான் சந்தோஷமா இருக்க முடியும்.”

அஞ்சலி, “compromise பண்ண நான் ரெடி. ஆனா, sacrifice பண்ண என்னால முடியாது. நம்ம வாழ்ந்த வாழ்க்கைக்கு பெயரு compromise இல்ல.”

அதற்கு மேல அஷ்வினால் எதுவும் சொல்ல முடியவில்லை.

அஞ்சலி, “போதும் அஷ்வின். நிறைய சண்டை. நிறைய அழுகை. உனக்கும் கஷ்டம் தான். leave it. let’s be just good friends.”

அஷ்வின், “இன்னொரு கல்யாணம் பண்ணிக்க மாட்டீயா?”

அஞ்சலி, “never. that’s not my cup of tea!” என்றவள் தனது காபி குவளையை எடுத்து மீதியிருந்த காபியை குடித்து முடித்தாள். மாலை 6 மணி ஆக, அஞ்சலி தனது யோகா வகுப்பிற்கு கிளம்பினாள்.

“அஷ்வின், I have to leave soon. so….”

புரிந்து கொண்ட அஷ்வின் வாசல்கதவை நோக்கி சென்றான். வழி அனுப்பி வைக்க நின்றாள் அஞ்சலி. அவளை ஒரு முறை பார்த்தவன்,

“வீட்டுல, அம்மா எனக்கு பொண்ணு பாக்க ஆரம்பிச்சுட்டாங்க. நான் என்ன சொல்ல?”

*முற்றும்*

Nov 28, 2011

மயக்கம் என்ன- பிடிச்ச மயக்கம்!




ரொம்ப நாளைக்கு அப்பரம், first day first show பார்த்த படம்- இந்த 'மயக்கம் என்ன'.
மத்தவங்களுக்கு ஏன் இந்த படம் பிடிக்கலைன்னு சொல்லிடுறேன் - மெதுவாய் சென்ற திரைக்கதை, இரண்டாம் பகுதியில் சில குழப்பங்கள், 'silent' background score, செல்வராகவனின் அரைத்த மாவை திருப்பி அரைத்தவிதம்.

இருப்பினும், எனக்கும் படம் ரொம்ப பிடித்து இருந்தது. காரணம்- எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போய் பார்த்த படம். (ஏற்கனவே rockstar பார்த்து நொந்து போனதால் என்னவோ), இந்த படம் ரொம்பவே பிடித்து இருந்தது. பாடல்கள் வந்து இடம், கதாநாயகியினி நடிப்பு- முக்கியமா சொல்ல போனால், ஒரு காட்சியில் வெறிகொண்டு ஆத்திரம் அடைவார் கதாநாயகி. அந்த நடிப்பு- oh my god, awesome!!

அப்பரம் வசனங்கள்:

1) பிடிச்ச வேலைய பாக்க முடியலன்னா, செத்து போய்டனும்!! (என் மனசாட்சி தினமும் என்னை வாட்டி எடுக்கும் ஒரு டயலாக்!)

2) தவறாக நடந்துகொள்ளும் நண்பனிடம், "ஆம்பள புத்தி. அப்படி தான்." என்று கதாநாயகி ஆர்ப்பாட்டம் இல்லாமல் சொல்லும்போது...ஐயோ!!! செம்ம செம்ம செம்ம!!

தனஷின் நடிப்புக்கு நல்ல தீனி போட்ட படம். தமிழ் தெரியாவிட்டாலும், நடிப்பில் கலக்கிய புது கதாநாயகி. நண்பனாய் வரும் 'சுந்தர்'- அவரின் காமெடி! எனக்கு படத்தில் பிடித்த காட்சி- தனஷ் எடுத்த படம் அட்டைபடமாய் வந்த குமுதம் இதழ் அந்த ஆபிஸ் முழுக்க பல பேரின் கைகளுக்கு சென்று கடைசியாய் போக வேண்டிய இடத்திற்கு செல்லும். அதற்கு அப்பரம் தான் தனுஷ் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்படும்! - இக்காட்சி எனக்கு தந்த நம்பிக்கை. எப்படியாச்சு நமக்கு ஒரு நல்லது நடக்கும், நமக்கு பிடிச்ச வேலைய பார்க்கும் ஒரு நாள் வரும் அப்படின்னு எனக்கு நம்பிக்கை தந்த படம்!!!!

மொக்கை காட்சிகள் சில இருந்தாலும், படம் என்னை கவர்ந்து இருக்கிறது.

மசாலா தோசை ஆர்டர் செய்ய போய், வெறும் plain தோசை சாப்பிடும் ஒரு உணர்வு ஏற்பட்டாலும் கூடவே புதுசா freshஆ இருந்த தக்காளி சட்னியும் புதினா சட்னியும் வெறும் தோசையையும் ரசிக்க, ருசிக்க வைத்தது!!:))))))))))))

மயக்கம் என்ன- எனக்கு பிடிச்சிருக்க இந்த மயக்கம்

Nov 24, 2011

photo (தொடர்கதை)- 1

அஷ்வின், அஞ்சலி, பிரியா ஆகியோர் பல மாதங்களுக்கு பிறகு ஒன்றாக சந்தித்தனர். மூவரும் KFC கடையில் உட்கார்ந்து அளவளாவி கொண்டிருந்தபோது தான் குகன் வந்து சேர்ந்தான்.

" sorry guys. கொஞ்சம் lateஆயிட்டு." என்றவன் பையை கழட்டிவிட்டு பிரியா பக்கத்தில் உட்கார்ந்தான். பக்கத்தில் உட்கார்ந்தவனை பார்த்து,

"சார், இதுக்கு பெயர் கொஞ்சம் lateஆ?" என்று நக்கலாய் கேட்டாள் பிரியா, தனது கைகடிகாரத்தை காட்டி.

குகன், "oh god, என்ன பிரியா இவ்வளவு வேகமா ஓடுற watch எல்லாம் போடாதே. இல்லாத brain affect ஆயிடும்." பிரியாவின் நக்கலுக்கு பதில் அடி கொடுத்தான். சிரித்தனர் நால்வரும்.

அஷ்வின், "seriously, I miss you guys! எத்தன நாள் ஆச்சு ஒன்னா மீட் பண்ணி. கடைசியா எப்போ பாத்துகிட்டோம்?" என அஷ்வின் கேட்க, அதற்கு,

"ம்ம்... i think about one year ago?" என்றாள் அஞ்சலி.

"நாங்க எல்லாம் அடிக்கடி facebookல updatedஆ தான் இருக்கோம். நீ தான் missing in action. ஆமாடா, நீ ஏன் facebook, twitter எல்லாம் வச்சு இல்ல?" கேள்வி கேட்டான் குகன்.

அஷ்வினின் கைபேசி அலறியது. "sorry guys, excuse me." என்று கூறி கொண்டு கடைக்கு வெளியே சென்று ஃபோன் பேசினான். அதற்குள் சாப்பாட்டை வாங்கி மேசையில் வைத்தனர் குகனும் பிரியாவும். ரொம்ப நேரம் அஷ்வின் பேசி கொண்டு இருப்பதை கடையின் கண்ணாடி கதவு வழி மூவரும் பார்த்து கொண்டிருந்தனர்.

"ஹாலோ ladies, நீங்க வேணும்னா அவனுக்கு வேட் பண்ணுங்க. எனக்கு பசி உயிர் போகுது!" என கூறிய குகன் burgerயை வாயில் 'insert' செய்தான். ஒரு வழியாய் அஷ்வினும் உள்ளே நுழைந்தான்.

"இப்போ தெரியுதாடா ஏன் எனக்கு fb, twitterக்கு எல்லாம் நேரம் இல்லேன்னு?" அவனுக்கு வைத்திருந்த cokeயை எடுத்து குடித்தான்.

குகன் வாயில் ஒழுகிய chilli sauceயை tissue பேப்பரால் துடைத்தபடி, "புரியுது மச்சி. ஒபாமாவுக்கு கூட ஓய்வு இருக்கு. ஆனா உனக்கு இல்லேன்னு நினைக்கும்போது பெத்த வயிறு பத்தி ஏரியுது!" என முகத்தை விளையாட்டாய் வைத்து கொண்டு சொன்னான்.

"டேய்!!!" குகனின் முகத்தில், துடைத்து போட்டிருந்த tissue பேப்பரை, வீசினான். அஷ்வினுக்கு வாங்கி வைத்திருந்த chicken spicy burgerயை பார்த்து, "hey peeps, என்னோட favourite எதுன்னு மறக்காம இருக்கீங்க! very impressive!"

பிரியா, "அஞ்சலி தான் உனக்கு ஆர்டர் பண்ணினா."

அஷ்வின் அஞ்சலியை பார்த்து, "thank you."

புன்னகையுடன் அஞ்சலி, "you're most welcome!"

அவர்கள் அனைவரும் பேசி கொண்டிருக்க, வெளியில் மழை கொட்ட தொடங்கியது. அதை பார்த்த பிரியா, "ஓ காட்! சீக்கிரம் வீட்டுக்கு போனும்னு இருந்தேன். ச்சே...."

குகன், "கவலைப்படாதே மச்சி! நீ ஒரே ஒரு திருக்குறள அழகா தமிழ்ல சொல்லிடு, மழை இந்த ஜென்மத்துல பெய்யாது! try பண்ணி பாரேன்!"

பிரியா குகனின் கையை அடித்தாள்.

சிரித்து கொண்டே அஞ்சலி, "guys! guys! don't worry. வீட்டுள்ள கொஞ்ச நேரம் இருந்துட்டு போகலாம்."

அஞ்சலி வீட்டிற்கு சென்றனர். அஞ்சலியின் வீடு அழகாய் சின்னதாய் இருந்தது. நற்மணம் வீசியது! சுவரின் வண்ணம், அடுக்கி வைக்கப்படிருந்த புத்தகங்கள், வரிசையாய் போட்டு வைத்திருந்த cushionகள்- அனைத்தும் அருமையாய் இருக்க, குகன், "செம்ம museum அஞ்சலி!"

அஞ்சலி, "what?!!"

குகன், "இல்ல மச்சி! பார்த்திபன் கனவு ஸ்ரீகாந்த் சொல்லுமே, கலைஞ்சு இருந்தா தான் வீடு. அப்படியே இருந்தா museum. அந்த மாதிரி சொன்னேன்."

பிரியா, "தனியாவே இருக்கீயா? பயம் இல்லையா?" cushionயை மடியில் வைத்து கொண்டாள் அவள்.

குகன், "உன்னையவே friendஆ வச்சு இருக்கும்போது இது எல்லாம் என்ன பயம்?" கிண்டல் செய்தான்.

மடியில் இருந்த cushionயை குகன் மேல் போட்டாள் பிரியா. அப்போது பிரியாவுக்கு கைபேசி அழைப்பு வந்தது.

"ஓ..நோ!really. ok அத்தை..நான் இப்பவே வரேன்." என்று பிரியா கூற, நடந்ததை குகன், அஞ்சலி, அஷ்வினிடம் சொன்னாள். அவள் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது.

"sorry guys, i have to go. he's not in town too...." என்றவள் முகத்தில் சற்று சோகம் படர, அஞ்சலி அவளுக்கு ஆறுதுல் அணைப்பு கொடுத்து வழி அனுப்பி வைத்தாள். call taxi வந்தது. போகும் வழியில், குகனும் அவன் வீட்டில் இறங்கி கொண்டேன்.

அஞ்சலி வீட்டில் அஞ்சலியும் அஷ்வினும்.

மழை நின்றது. ஒரே அமைதி, ஒருவித இருள். ஹாலில் இருந்த aircon காற்று மட்டும் தான் அங்கிருந்த ஒரே சப்தம்! ரொம்ப அமைதியாகவே இருக்க அஷ்வின்,

"so..anjali...how have you been?"

"good." என்று ஒற்ற வார்த்தை பதில். அதற்கு மேல் அவளும் ஒன்னும் கேட்கவில்லை. மறுபடியும் அதே அமைதி. அதை களைக்கும் வகையில் அஞ்சலி,

"ம்ம்... coffee?"

சரி என்பதுபோல் சற்று தலையை ஆட்டினான். அவள் சமையலறைக்குள் செல்ல, அவன் ஹால் முழுவதும் 'scan' செய்தான். எங்கேயும் தென்படுவில்லை!

அஞ்சலி அஷ்வின் விவாகரத்து செய்து கொண்டு ஒரு வருடம் ஆகிவிட்டது. அவர்களின் திருமண ஃபோட்டோ எங்கேயும் தென்படுவில்லை ஹாலில்.

(தொடரும்)

ஜஸ்ட் சும்மா (24/11/11)

rockstar, oh my friend, mere brother ki dulhan and pyaar ka punchnama ஆகிய படங்களை இந்த ஒரே வாரத்தில் பார்த்தேன். (வேலைக்கு எல்லாம் போகலயா? என்று நீங்க கேட்பது புரியுது)

'லீவு' ஆரம்பித்துவிட்டது, மச்சி!!!

ஓகே, back to story. rockstar- ஹிந்தி படத்தை திரையரங்கில் பார்த்தேன். பத்து நிமிடங்களுக்கு அப்பரம் தூங்கிவிட்டு இரண்டு மணி நேரம் கழித்து தான் கண் விழித்தேன். மொக்கை, மரண மொக்கை. இவ்வளவு காசு கொடுத்து படம் பார்க்கும் பெண்களுக்கு, பெரிய ஏமாற்றம்- ஒரு தடவ கூட சட்டையை கழட்டுவில்லை ரன்பீர்!!! இது அநியாயம்! மத்தபடி, திரைக்கதையில் குழப்பங்கள். ஏர் ஆர்மானுக்கு காசு கொடுக்கவில்லை என்னவோ தெரியவில்லை, முதல் பாதியில் background musicக்கே இல்லை! தூக்கம் நல்லவே வந்துட்டு!!

oh my friend- தெலுங்கு படம். ரொம்ப சாதாரணமான கதை! ஆனால், ஸ்ருதிஹாசன் பின்னிட்டாங்க! 7ஆம் அறிவு படத்துக்கு அப்பரம், அவ்வளவு தான் அவங்க கதைன்னு நினைச்சேன்! ஆனா, ஸ்ருதி..ம்ம்ம்... பெரிய எதிர்காலம் இருக்கு (சொந்த குரலில் பேசி நடிக்காத வரை...தூள் கிளப்புங்க!)

mere brother ki dulhan- சொந்த அண்ணனுக்கு பெண் பார்க்கிறார் இம்ரான். ஆனால், கடைசியில் அந்த பெண்ணையே காதலிக்கிறார். இது எல்லாம் ஒரு கதையா? என்று நீங்க நினைக்க வேண்டாம். படம்- அம்புட்டு காமெடி! காட்சிகள், இசை, இம்ரான் மற்றும் கத்ரீனா நடிப்பு அருமையிலும் அருமை! பார்த்து, ரசித்து, சிரித்து மகிழலாம்!

pyaar ka hunchnama- மூன்று இளையர்கள் மூன்று பெண்களை காதலிக்கிறார்கள். அவர்கள் படும் பாடு! நல்ல கதை. கொஞ்சம் slow and raw! இருந்தாலும் யதார்த்தமான கதை. இந்த புத்திகெட்ட பெண்களிடம்(சிலர்) மாட்டி கொண்டு பாடுபடும் ஆண்களை நினைத்தால் ரொம்ப பாவமா இருக்கிறது. சில பெண்கள் உண்மையாகவே ராட்சசிதான்! பாவம்ங்க பசங்க!:(((((

*********************************************************************

மயக்கம் என்ன? படமும் dezi boys படமும் எப்போ வரும்னு காத்து கொண்டு இருக்கிறேன்!!

**********************************************************************

ம்ம்ம்....அடுத்த என்ன கதை எழுதலாம்!!?? ம்ம்ம்......

Nov 22, 2011

சிம்பு தனுஷின் 'கொலவெறி[கள்




release ஆன மூன்று நாட்களில் பல லட்சம் ஹிட்கள் 'why this kolaveri di' பாடலுக்கு. முதலில் கேட்ட போது, 'ஏன் டா இந்த கொலவெறி' என்று இருந்தது. ஆனால், 'making of the song' வீடியோவில் தனஷ் இப்படி ஒரு பாடலை ரசித்து பாடிய விதம் தான் பல ஹிட்கள் வருவதற்கு காரணம். நானும் இப்பாடலுக்கு 'அடிமை' ஆகிவிட்டேன். பாடல் மொக்கை, அது தெரியும். ஆனாலும் பாடலில் ஒரு ஈர்ப்பு சக்தி! ஆமா, இப்படி எல்லாம் எப்படி யோசிக்குது தனுஷ். தனஷே எழுதிய பாடலாம்! (முதல் வரியை எடுத்து கொடுத்தது அப்படத்தின் இயக்குனர், அவர் மனைவி- ஜஸ்வர்யா!)

இதுக்கு சீனியர் சிம்பு எனலாம். எவன் டி உன்னை பெத்தேன். லூசு பெண்ணே போன்ற பாடல்களில் எளிமையான வார்த்தைகள், ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தி இருப்பார். யார் கேட்டாலும் (அதாவது, இளையர்கள்) பிடித்து போகும் வகையில் பாடல்கள் அமைவது இப்போதைய புது trend!

இப்படி கேவலமான பாட்டுக்கு ஏன் இப்படியலாம் ஆதரவு இருக்கு என்று யாரும் குழம்ப வேண்டிய அவசியமில்லை. என்னதான் pizza, burger என்று வெளியே சாப்பிட்டாலும், வீட்டுக்கு வந்து அம்மாவின் சாம்பாரையும் சாப்பிடுவோம், மறக்க மாட்டோம்! ஏனா, அதுக்கு ஈடு இணையில்லை!

இப்போதைக்கு, இப் 'போதை!'- why this kolaveri kolaveri di!!!!!!!!

Nov 14, 2011

இச் இச் இச் இச் கொடு

"மேடம், 11 மணி ஆச்சு...ஆபிஸ close பண்ணனும்..." என்றான் security guard. அவன் சொன்ன பிறகு தான் ஷாமினிக்கு தெரிந்தது மணி 11 என்று. இன்னும் வேலை முடிந்த பாடு இல்லை. அவசரமாக fileகளை எடுத்து தனது பையில் போட்டாள். கணினியில் இருந்த documentகளை thumbdriveல் save செய்தாள். ஆபிஸில் அவள்கூட இன்னும் 4 பேர் மும்முரமாக வேலை பார்த்து கொண்டிருந்தனர். ஒவ்வொருவரையும் security guard விரட்டினான்.

கார் நிறுத்திய இடத்தில் ஷாமினி கூட வேலை பார்க்கும் தோழி, " என்ன ஷாமு பொழப்பு இது. காலையில 8 மணிக்கு வந்தா....ராத்திரி 11 மணிக்கு தான் வீட்டுக்கு போறோம். i feel extremely tired. there's no life at all!" கோபமும் சலிப்பும் தெரிந்தது அவளது குரலில். அவளைவிட ஷாமினிக்கு இன்னும் களைப்பு. பதில்கூட சொல்ல முடியாமல் தோழியின் தோள்பட்டையில் தட்டி கொடுத்தாள்.

வண்டியை start செய்தாள். இரவு குளிர், காரில் உள்ள குளிர், தனிமையில் கார் பயணம், வானொலியில் காதல் பாடல்கள்- இவை அனைத்தும் வாசு இப்போது என்ன செய்து கொண்டிருப்பான் என அவள் மனதில் சிந்தனைகளை ஓட விட்டது. அவனை அளவுக்கு அதிகமாக காதலித்தவள் இப்போது வேலை பளுவினால் அளவுக்கு அதிகமாய் 'மிஸ்' செய்தாள்.

வீட்டிற்குள் நுழைந்ததும், ஒரு அற்புத வாசனை வீசியது. வைத்த பொருட்கள் வைத்த இடத்தில் இருந்தன. அனைத்தும் வாசு சுத்தம் செய்து வைத்திருந்தான். அறைக்குள் சென்றவள், வாசு தூங்கி கொண்டிருந்ததால், படுக்கை பக்கத்தில் இருந்த சிறு விளக்கை மட்டும் போட்டாள்.

அந்த சிறு வெளிச்சத்தில்கூட அவனது முகம் பிரகாசமாய் தெரிந்தது. கார் சாவியையும் பையையும் கீழே வைத்தாள். அவன் அருகே படுக்கையில் உட்கார்ந்தாள்.

வாசுவை கண் சிமிட்டாமல் பார்த்து கொண்டிருந்தாள். தனது வலது கைவிரல்களால் அவனது முடியை மெர்துவாய் கோதிவிட்டாள். அவளது விரல்கள் அவனது கன்னத்தையும் வருடியது. இந்த கணம் தான் அவள் உணர்ந்தாள் அவனிடம் நன்று பேசி, சிரித்து 2 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது என்பதை. ஞாயிற்றுகிழமைகளில்கூட அவள் வேலை பார்க்க நேரிட்ட தருவாயிலும் வாசு அவளது வேலை சுமையை நன்கு புரிந்து கொண்டான். ஒருபோதும் அவள் மீது கோபம் கொண்டது இல்லை.

அவளுக்குள் சிந்தனைகள் ஓட, வாசு கண் விழித்தான்.

"ஏ... ஷாமினி... வந்துட்டீயா?" சிறு குழந்தை அம்மா வாங்கி வந்த lollilopயை கண்டு மகிழ்ச்சி அடைந்ததுபோல் புன்னகையித்தான்.

"sorry." என்றாள் அமைதியாய்.

"ச்சே, எழுப்பிவிட்டதக்கா? பரவாயில்ல டா...how was your day? என்று சொல்லிகொண்டு எழுந்து உட்கார்ந்தான் கட்டிலில். ஷாமினி பேசவில்லை.

"are you ok?" படுக்கையில் வைத்திருந்த அவள் கைமேல் அவன் கைவைத்து கேட்டான்.

"sorry. எல்லாத்துக்கும். I feel very tired. I feel very lonely. உன்னைய விட்டு ரொம்ப தூரம் விலகி போன மாதிரி இருக்கு." ஷாமினி அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

"என்ன மா சொல்ற. ஏன் ஒரு மாதிரியா இருக்கே? any problem at office?" அவன் கேட்டான்.

சாய்ந்திருந்த ஷாமினி எழுந்து அவன் முகத்தைப் பார்த்தாள். அவனது கண்களைப் பார்த்து, " i really really miss you vasu. காலையில ஆபிஸ் போனா, late night தான் வரேன். மறுபடியும் காலையில எழுந்துச்சு போயிடுறேன். weekends முழுக்க வேலை தான் மறுபடியும். especially இந்த ரெண்டு மாசம்.... முடியலடா."

அவள் பேசி முடிக்கும்வரை அமைதியாய் கேட்டு கொண்டிருந்தான். அவள் குரலில் தெரிந்த சோகம் அவனுக்கு புரிந்தது. "என்ன மா, இதுக்கு போய் feel பண்ணுற. எனக்கே வேலை அதிகமா இருந்துச்சுன்னு, ஆபிஸ் முடிஞ்சு எவ்வளவு லேட்டா வந்து இருக்கேன்?"

"உன்னைய கவனிச்சுக்க முடியலன்னு... i feel guilty டா." அவனது முகத்தை பார்க்க தயங்கினாள்.

புன்னகையித்தபடி வாசு, " ஐயோ ஷாமினி. என்ன மா? ரொம்ப சீரியஸா ஆகுற. இது எல்லாம் ஒரு பிரச்சனையா? absence makes the heart fonder. வாழ்க்கைல கொஞ்சம் இப்படி 'மிஸ்' பண்ணதான் love அதிகமாகும்."

தொடர்ந்தான் வாசு, " இது ரொம்ப simple. இப்போ ஏதோ ஒரு முக்கியமான project போயிகிட்டு இருக்குனு சொன்னீயே... அது எப்ப முடியும்?"

சலித்தகொண்டே ஷாமினி, "அது இன்னும் 3 வாரம் ஆகும்."

கொஞ்சம் யோசித்த வாசு, "ok great. அப்போ அடுத்த மாசம் முதல் வாரத்துக்குள்ள முடிஞ்சுடும். cool.... முடிஞ்ச கையோட நீயும் நானும் 2nd honeymoon போறோம். செம்மயா enjoy பண்ணுறோம். அப்பரம் உனக்கு எந்த guilty feelingsம் இருக்காது. ஒன்னா சேர்ந்த மாதிரியும் இருக்கும், work எல்லாம் தள்ளிவச்சுட்டு ஒரு holiday போயிட்டு வந்த மாதிரியும் இருக்கும். என்ன ஓகேவா?" என்றான்.

அவன் முகத்தில் பார்த்த ஆனந்தம் அவளுக்கு பிடித்து இருந்தது, "ம்ம்..ஒகே. உன் விருப்பம்."

புன்னகையித்த கொண்டே, படுக்கையில் அமர்ந்து இருந்த வாசு, அவள் இடுப்பை சேர்ந்து அணைந்து கொண்டான். புருவம் சுழித்த வாசு, "ரொம்ப இளச்சு போயிட்ட மா... நீ சாப்புடுறீயா இல்லையா?" என கேட்டான்.

படுக்கையிலிருந்து எழுந்த ஷாமினி, காதுகளில் போட்டிருந்த தோடுகளை கழற்றி மேசையில் வைத்தாள். குளிக்க செல்வதற்காக, அலமாரியில் துண்டை எடுக்க சென்றாள்.

" lunch என்ன சாப்பிட்ட?" என்றான் வாசு.

"meeting இருந்துச்சு டா." என்று பதில் அளித்தபடி அலமாரியில் இருந்த 3வது அடுக்கில் தனது துண்டை தேடினாள்.

"tea break?" மறுபடியும் கேள்வியை கேட்டான்.

"அதுக்கு எல்லாம் எங்கடா டைம் இருக்கு. i was at the HQ."

தேடி கண்டுபிடித்த துண்டை கையில் எடுத்தவாறு அலமாரியை சாத்தினாள், அதே சமயம் வாசுவும் அவளை, அலமாரி கதவு அருகே இழுத்து கொண்டான்.

"so, இன்னிக்கு நாள் முழுக்க சாப்பிடல?"

"டைம் இல்ல டா..."

"உன்னைய நல்லா பாத்துப்பேனு சொல்லி உங்க அம்மா அப்பாகிட்ட promise பண்ணியிருக்கேன். நாளைக்கே வந்து என் இப்படி இளச்சு போயிட்டேனு கேட்டா, நான் என் மூஞ்சிய எங்க வச்சுகிறது. " என்றான் வாசு.

வாய்விட்டு சத்தம் சிரித்த ஷாமினி, "இந்த புதியமுகம் படத்துல வர மாதிரி முகத்த surgery பண்ணி மாத்திக்க."

"எனக்கு அவ்வளவு அசிகமான மூஞ்சி எல்லாம் வேண்டாம். சரி நீ போய் குளிச்சுட்டு வா. சாப்பிட்டு படு."

ஷாமினி, "வாசு, வேண்டாம் டா. late night ஆச்சு. எனக்கு பசிக்கல."

வாசு, "எனக்கு பசிக்குதே."

அவள் புரியாமல் முழித்தாள், "நீ இன்னும் சாப்பிடலயா?"

வாசு, "இல்ல மா."

ஷாமினி, "ஏன் டா?"

வாசு, "உன்கூட சேர்ந்து சாப்பிடலாம்னு wait பண்ணேன்."

ஷாமினி, "எனக்குதான் லேட் ஆகும்னு உனக்கு தெரியுமே."

வாசு, "அது அல்ல ஷாமினி. இன்னிக்கு special day."

ஷாமினி இன்னும் குழம்பி போனாள். ஷாமினி, " special day??mmm...." யோசித்தாள்.
யோசித்தவள், "இன்னிக்கு உன் birthdayயும் இல்ல. எனக்கும் இல்ல. நம்ம wedding dayயும் இல்ல. engagement dayயும் இல்ல....அப்பரம் என்னடா special?"

வாசு, "இன்னிக்கு தான் முதல் தடவ நீ எனக்கு 'ஐ லவ் யூ' னு மெசேஜ் அனுப்புச்ச நாள். நமக்கு engagement முடிஞ்சு ஒரு நாள் சினிமா போயிட்டு வந்தோம். அன்னிக்கு நைட் நான் மெசேஜ் அனுப்பிச்சு கேட்டேன் என்னைய பிடிச்சுருக்கானு. அதுக்கு 'ஐ லவ் யூ'னு reply போட்டு இருந்தீயே. இன்னும் அத என் mobileல வச்சுருக்கேன்," என்று கூறி முடிக்க,

ஷாமினி கண்களில் பூரிப்பு. அந்த பூரிப்பு கலந்த சந்தோஷத்தில், ஒரு துளி ஆனந்த கண்ணீர்.

"என்னைய கொல்றடா!" என்றவள் அவனைக் கட்டி அணைந்து கொண்டாள். நெற்றியில் முத்தம் கொடுத்தவளிடம் வாசு,

"எனக்கு அங்க வேணாம். எனக்கு இங்க வேணும்." என்றவன் அவளது ஆள்காட்டி விரலை தனது உதடுகள் மேல் வைத்தான். அவளையே குறுகுறுப்பான விழிகளால் ஊடுருவிய அவனுடைய பார்வை, புரியாத பல உணர்வுகளை பிரதிபலிக்க அவளுக்குள் கூச்சம் கூரைக்குள் ஒளிந்துகொண்டது. அவன் முகத்தில் விரவிய வசீகரப் புன்னகை அவள் உலகையே மறக்க செய்தது.

*முற்றும்*