Aug 28, 2007

இயக்குனர் சேரனுக்கும் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்திற்கு ஒரு கேள்வி!

ஆஸ்திரேலியா பல்கலை கழகம் ஒன்று இயக்குனர் சேரன் இயக்கிய 'தவமாய் தவமிருந்து' படத்தை பாடபகுதியில் சேர்த்துள்ளனர். ரொம்ப ரொம்ப சந்தோஷம் பட வேண்டிய விஷயம். ஒவ்வொரு தமிழனுக்கும் இதில் பெருமை உண்டு. கீழே உள்ள துணுக்கு செய்தியை பாருங்கள்:

"தமிழ்க் கலாச்சாரம் இந்தப் படத்தில் சிறப்பாக வெளிக்காட்டப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக அதிகாரிகள் என்னைப் பாராட்டினர். ஒவ்வொரு மனிதனுக்கும் இது ஒரு பாடம் என்றும் பாராட்டினர் என்றார் சேரன்."
( http://thatstamil.oneindia.in/specials/cinema/specials/australian-varsity-includes-cheran-film-in-syllabus-070824.html இருந்து எடுக்கப்பட்டது)

ஆனால் இதை பார்த்தவுடன் எனக்கு பகீர் என்றது. இப்படத்தில் சேரனும் பத்மபிரியா கதாபாத்திரங்களும் காதலிப்பார்கள். ஒரு சூழ்நிலையில் வரம்பு மீறி செய்ய கூடாத ஒன்றை செய்துவிடவார்கள். காதலித்தவளை பிறகுதான் கல்யாணம் செய்து கொள்வார் சேரன்! இதுவா அவர்கள் சொல்லும் தமிழ்க் கலாச்சாரம்??

அவர்கள் இப்படத்தை தேர்ந்தெடுக்க மற்ற பல காரணங்கள் இருக்கலாம். அதை நான் தவறு என்று கூறவரவில்லை. இருந்தபோதிலும் என் மனதில் திடிக்கிட்ட ஒரு சிந்தனை இது!

இப்படத்தை வைத்து பாடம் மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்கள் இதிலிருந்து தமிழ் கலாச்சாரத்தின் மீது தவறான எண்ணம் வருமா? வராதா?

எனக்கு தெரியல.... உங்களுக்கு தெரியுமா?
(முடிந்தவரை கருத்துகள் ஏதேனும் இருந்தால் சொல்லுங்க... நானும் தெரிஞ்சுகிறேன்)

Aug 26, 2007

என் மகள் காதலிக்கிறாள்!

21 வயதாகியும் அவள்
எனக்கு இன்னும்
கைபொம்மையோடு
விளையாடும்
கைகுழந்தை தான்!

வீட்டில் இரண்டு தொலைபேசிகள்
இருந்த போதிலும்
ஒரு 'cordless' போன் வேண்டும்
என்று அடம்பிடித்து
வாங்கினாள்.

ஜீன்ஸ் டீ-ஷர்ட்
விரும்பி போடும் அவள்
திடீரென்று சேலை மீது
ஆசை கொண்டாள்.

தொலைக்காட்சியில்
காதல் காட்சிகள் பார்க்கும்போது
சோபா 'குஷன்னை'
இறுக்கிக் கட்டிபிடித்து
கொள்கிறாள்.

சமையல் கற்றுகொள்கிறாள்
வெள்ளிக்கிழமை கோயில் செல்கிறாள்
சுடிதார் கலருக்கு ஏற்ற
வளையல் மாட்டி கொள்கிறாள்

குறுந்தகவல் வந்தால்
அவள் அறைக்கு சென்றுவிடுகிறாள்
அளவோடு சாப்பிடுகிறாள்
தமிழ் கவிதை வாசிக்கிறாள்

இதையெல்லாம் ரொம்ப
நாளாக கவனித்த
என் மனம்
புன்னகையித்தபடி
சொல்லியது
"ம்ம்ம்.. என் மகள் காதலிக்கிறாள்!"



Aug 20, 2007

தொட்டால் பூ மலரும்-விமர்சனம்

"துளியிலே ஆட வந்த வானத்து விண்விளக்கே" என்று சின்ன தம்பியில் சிறு குழந்தையாக வந்தவன் இன்று திரையில் ஆட்டம் போட வந்துவிட்டான். வேறு யாரு இல்லைங்க 'தொட்டால் பூ மலரும்' ஹீரோ சக்தி. சின்ன தம்பி, நடிகன் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவன். இயக்குனர் பி.வாசுவின் மகன் நடித்த படம் தான் 'தொட்டால் பூ மலரும்'.

அட நம்ம பார்த்து வளர்ந்த பையனா இவன் என்று ஆச்சரியம்படுத்தும் அளவுக்கு வளர்ந்துவிட்டான். உண்மையில் MBA படித்த முடித்து சினிமாவில் காலடி வைத்துவிட்டான் தன் அப்பாவின் உதவியால்.. சரி படத்துக்கு வருவோம். பி.வாசு தன் மகனுக்காகவே எடுத்த படம் போல தெரியுது. கதை, திரைக்கதையில் தன் மகனின் திறமைகளை வெளிபடுத்த வேண்டும் என்பதற்காக பல சண்டைகள் என்று திணித்துவிட்டார். இருப்பினும் 'காதலில் வென்றால் மட்டும்போதாது, வாழ்க்கையில் வெல்ல வேண்டும். அப்பதான் வருகின்ற காதலியை நிம்மதியாக வச்சுருக்க முடியும்' என்ற ஒரு வரி கதை தான் இந்த படம். கருத்து நல்லது தான். இருப்பினும் திரைக்கதை ஓட்டத்தை சரி செய்து இருக்கலாம்.

ராஜ்கிரண், நாசர், சுகன்யா, கேஸ் ரவிகுமார் போன்ற பெரிய ஜாம்பவான்கள் பட்டாளம் ஓரளவுக்கு சுவார்ஸ்சியமாக கொண்டு சென்றனர் படத்தை. வடிவேலு காமெடி அவ்வளவு எடுப்படவில்லை. காதல் கதை என்பதால் கதாநாயகிக்கு நடிக்க வாய்ப்பு இருந்தது... இருந்தாலும் எங்க இப்ப வர புள்ளைங்க அத பயன்படுத்துதூங்க...!

ஒரு சில சுவார்ஸ்சியமான காட்சிகள் இருந்தாலும் அவை கதையோடு ஒன்றியதாக அமையவில்லை. எது எப்படி இருந்தாலும்... புது முக கதாநாயகன் சக்திக்கு நல்ல எதிர்காலம் உண்டு. கேமிராவுக்கு முன் ஒரு பதற்றம் இல்லாமல் நடிப்பது, நன்றாக ஆடுவது... என்று ஹீரோவுக்கு இருக்கவேண்டிய பல அம்சங்கள் கொண்டவராக இருக்கிறார் சக்தி. பார்க்க அப்படியே அவங்க அப்பா சாயல். குரல்கூட அப்படியே அவர் மாதிரியே.

படத்தின் பாடல்கள் அருமை! காட்சியமைப்பில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். சில வசனங்கள் நச்! கடைசி காட்சியில் கேஸ் ரவிகுமாரிடம் பணம் கொடுக்க வேண்டும் சக்தி. அப்ப சக்தி பணத்தை எடுத்து அவரிடம் கொடுக்கபோதும், ரவிகுமார் சொல்லுவார் 'இருக்கட்டும்பா, என் அட்வான்ஸா வச்சுக்கோ" என்பார். ரசித்து பார்த்த ஒரு காட்சி

நம்ம வீட்டு பையன் என்ற வகையில் படத்தை சக்திக்காக ஒரு முறை பார்க்கலாம்.... தியெட்டரில் ரசிக்க முடியாவிட்டாலும். சீடியில் குடும்பத்தோடு பார்க்கலாம்!

தொட்டால் பூ மலரும்-ஒரு சில இடங்களில் மட்டுமே!

Aug 13, 2007

ஜில்லுனு ஒரு காதல்



எனக்கு கருப்பு பிடிக்குமென்று
நீ மீசை வளர்த்தாய்
ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்பதால்
தாடி வளர்க்க ஆரம்பித்தாய்!

ஜன்னல் வெளியே ஒரே மழை
ரொம்ப நேரம் எட்டி பார்த்துவிட்டு
'சூடா' ஏதாச்சு வேண்டுமென்றாய்
'சரி பொறுடா, காபி போட்டு தாறேன்' என்றேன்
என் கையை இழுத்து,
'முத்தம் மட்டும் போதும்' என்றாய்.

குளித்துவிட்டு தலை துடைக்க
துண்டை தேடினாய்.
ரொம்ப நேரமாய் நான் கதவு பக்கத்தில்
நிற்கிறேனே,
தெரியவில்லையா உனக்கு
என் சேலை ஓரமே
நீ தேடும் துண்டு என்பதை!

குளியலறை கம்பியில் போட்டிருந்த
உன் கைகுட்டைப் பார்த்து
அங்கிருந்த கண்ணாடியில் ஒட்டியிருந்த
என் ஸ்டிக்கர் பொட்டுகூட
வெட்கப்பட்டது!

Aug 3, 2007

அஜித்த கவிழ்த்த விஜய்

எல்லாரும் அவங்கவங்க பங்குக்கு தலைய பத்தி பேசிதீர்த்துட்டாங்க. சரி.. அவ்வளவு மோசமாவா இருக்கு படம் கீரிடம்னு சொல்லி... ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்தேன். அப்பரம் தான் தெரிஞ்சுது பெரியவங்க பேச்ச கேட்கலைனா எப்படிப்பட்ட பின்விளைவுகள் எல்லாம் வருமுனு.... உஷ்ஷ்.... தாங்கல சாமி படம்!

கடைசி கிளைமெக்ஸ் மாத்துபோறாய்ங்களாம்....அட படத்தையே வேற மாதிரி எடுத்தா தேவலாம் போல இருக்கு. கிளைமெக்ஸ் காட்சியில் தல அழுவும்போது எப்ப்டி இருந்துச்சு தெரியுமா "நான் ஏன் இப்படிப்பட்ட படங்களையல்லாம் ஒத்துக்கிறேனே" அஜித் 'வீல்' (feel) பண்ணி...அழுவுற மாதிரி இருந்துச்சு. போதாதிற்கு ராஜ்கிரன் சரண்யா.. பெற்றோர்கள் ஜோடி. அட கொடுமைகளா..... எவ்வளவு!! (யப்பா....). இன்னும் எத்தனை தடவ! அஜித் எப்படியாவது ஜெயிச்சுடுனும் நினைக்கும்போதுலாம் இப்படி ஒரு படத்தை கொடுத்து அதுவே அது வாயில் மண்ண வாரி போட்டுகுது. (யம்மா ஷாலினி... சும்மா badminton விளையாட போகாமே...கொஞ்சம் தலைக்கு எடுத்து சொல்லுமா! )

படத்தின் இயக்குனர் பெயர் விஜய். அப்பவே தல உஷாரா இருந்திருக்க கூடாதா... கீரிடம் போடுறேனு இப்படி கவிழ்த்துப்புட்டான்ய்யா விஜய்!!
என்ன கொடுமை சார் இது!