Showing posts with label என் டைரி. Show all posts
Showing posts with label என் டைரி. Show all posts

Jul 10, 2011

வெள்ளிக்கிழமை என்பது...




வேலைக்கு போன பிறகு தான் புரியது 'வெள்ளிக்கிழமை' மீது இருக்கும் காதல்! ஐயோ எப்ப டா வார இறுதி வரும்னு 'வைதேகி காத்திருந்தாள்' விஜய்காந்த் மாதிரி காத்து இருப்பேன். அதுவும் சரியா, என்னைய(மற்ற பலரையும்) வெறுப்பேத்தும் வகையில் வெள்ளிக்கிழை மதியம் மீட்டிங் வைப்பார் பாஸ்! மதியம் ஆரம்பித்து மூன்று மணி நேரம் கதிகலங்க பேசுவார் பேசுவார் பேசிகொண்டே இருப்பார்.

மீட்டிங் பேசப்படும் எந்த ஒரு விஷயம் எனக்கும் என் வாழ்க்கையிலும் எந்த ஒரு நன்மையையும் கொடுக்கபோவதில்லை. இருந்தாலும் உட்கார்ந்து கேட்கனும். சில நேரத்தில் கொடுமையாய் கொடூரமாய் இருக்கும். போன மீட்டிங் போது பேசியதை மறுபடியும் பேசுவதற்கு ஒரு மீட்டிங். 'போட்டு தள்ளிடலாம்'னு வரும்!! வெள்ளிக்கிழமை அன்று இப்படி அறுத்தால்?? உச்சி முதல் பாதம் வரை வலிக்கும்! மனசு ரெம்ம்ம்ம்ம்ம்ப வலிக்கும்

அப்பரம் மீட்டிங் முடிஞ்சு கேபினுக்குள் வந்து உட்கார்ந்து ஒரு பெருமூச்சு விடுவோம் பாருங்க, மேசையில் இருக்கும் பேப்பர் எல்லாம் பறக்கும்! எங்க மறுபடியும் கூப்பிடுவாரோனு பயந்து அவசர அவசரமாய் மடிகணினியை எடுத்து drawerவில் வைத்துவிட்டு, மேசையில் கிடக்கும் walletயையும் phoneயையும் எடுத்து பையில் போட்டுகொண்டு சீனியர் ஆபிசர் கண்ணில் படாமல் விறுவிறு என்று ஓடி போய் பேருந்து நிறுத்தும் இடத்தில் நின்றால் வரும் சந்தோஷம் இருக்குதே- யப்பா!!!!!!!!!!! கோச்சிகிட்டு போன boyfriend (அல்லது உங்க girlfriend) கிட்ட வந்து நம்மள பார்த்து smile பண்ற மாதிரி இருக்கும்.

வெள்ளிக்கிழமையே, ஐ லவ் யூ!! வேலைக்கு போன பிறகு, உன் அருமை புரியுது!

(ஞாயிற்றுகிழமை இரவு என்பது பிடிக்காத மாமியர் வீட்டுக்கு வர மாதிரி!! மறுநாள் திங்கள் ஆச்சே!!!!!!:(((((((((((

May 15, 2009

biggest loser-எந்த கடையில நான் அரிசி வாங்கினேன்?-3

உடற்பயிற்சியுடன் டையட்டும் முக்கியம். மூன்று இட்லிகள் சாப்பிடும் நேரத்தில் இரண்டை சாப்பிட ஆரம்பித்தேன். இப்படி பாதி அளவு சாப்பாட்டை குறைத்தேன். ஆரம்ப காலங்களில் கஷ்டமாக தான் இருந்துச்சு. chocolates, pepsi, coke, ice cream, biscuits, snacks, முறுக்கு, மற்ற பலகாரங்களை முற்றிலும் தவிர்த்தேன். அந்த நேரங்களில் தான் வீட்டில் உள்ளவர்கள் kfc, macdonald's, pizza, burger இப்படி ஏதாச்சு வாங்கி வருவார்கள். ஆனால், எதையும் தொட மாட்டேன். சில சமயங்களில் ஏக்கம் வரும்.

இவர்கள் வாங்கி கொண்டு வரும் நேரம் குறிப்பா இரவு நேரங்களில் தான் இருக்கும். ஏக்கத்தை தவிர்ப்பதற்கே நான் இரவு 7 மணிக்கெல்லாம் தூங்கிவிடுவேன். முழித்து இருந்தால், அவற்றை சாப்பிட்டு விடுவேனோ என்ற பயம். இரவு நேரங்களில் சாதம் சாப்பிடுவதை முற்றிலுமாக கைவிட்டேன். நாம் அதிகபடியாக சாதம் சாப்பிடுவதே நம் உடல் பருமனாக இருக்க காரணம். இரவு நேரங்களில், பழங்கள் அல்லது சப்பாத்தி என்று உணவு பழக்கம் மாறியது. சாப்பிடும்போது பாதி வயிறு நிரம்பும் வரை தான் சாப்பிட வேண்டும்.

பின்னர், aerobics, hip hop வகுப்புகளுக்கு சென்றேன். பயிற்சிவிப்பாளர் ஆடும்போது அது ஹிப்-ஹாப், அதே ஸ்டப்புகளை நம்ம போடும்போது, ஏதோ டப்பாங்குத்து மாதிரி இருக்கும். ஆமா.. சரியா ஆடி நம்ம என்ன உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சிக்கா போக போறோம். கை கால்களை அசைத்து, வேர்வை வெளியாகி, caloriesகளை குறைப்பதே எனது நோக்கம்.

இப்படி செய்ய, 9 மாதங்களில் 66 கிலோவில் இருந்த நான் 53 கிலோவிற்கு வந்தேன். பெரிய பெரிய சாதனை. பார்த்தவர்கள் நிறைய பேர், ரொம்ப இளைச்சுட்டே என்று சொல்லும்போது என்னுள் எழுந்த பெருமிதம் வானளவு!
காலேஜில் நிறைய பேர், "ஏய் என்னடி... செஞ்சே...you look good...you lost so much of weight.." என்று பாராட்டினர்.

போட முடியாத சட்டைகள் பல அதற்கு அப்பரமும் போட முடியவில்லை.
காரணம்?
அவை இப்போது பெரியாதாய் இருந்தன.ஹாஹாஹா.... நிறைய உடைகளை alter செய்து தான் போட்டுகொண்டேன்.

வீட்டில் ஒரு digital weighing machine வாங்கினேன். அதில் தினமும் காலையில் எடை பார்த்தபிறகு தான் மறுவேலை நடக்கும்.

எனக்கு ஒரு ஆசை, பேராசைகூட வைத்து கொள்ளலாம். 53 கிலோவில் இருக்கும் நான், 50க்கு வர வேண்டும் என்பதே! எல்லாரும் 50 கேஜி தாஜ்மகால்ன்னு சொல்றாங்களே, அப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்பதே ஒரு முறை உணர்ந்து பார்க்க வேண்டும்.

சிரமம் எடையை குறைப்பது என்றால் அதைவிட சிரமம் 53விலே maintain செய்வது.

பரிட்சையில் தோல்வி அடைந்தவன் வெற்றி பெற்றுவிடுவான் அடுத்த முறை. ஆனால் இந்த 99 மார்க் வாங்கினவன் 100 மார்க் எடுக்க ரொம்ப ரொம்ப கஷ்டப்படுவான். இந்த நிலைமையில் தான் நான் இருக்கிறேன். 9 மாதங்களில் 53க்கு வந்த நான், 53லிருந்து 50க்கு வர ரொம்ப கஷ்டமாக இருக்கு!:)

May 14, 2009

biggest loser- எந்த கடையில நான் அரிசி வாங்கினேன் - 2

பகுதி 1

நீச்சல் வகுப்பில் நானும் இன்னொரு சீன பெண் தான். அவங்க சீனியர். பல வித ஸ்டைல்கள் தெரியும். நான் beginner. பயிற்சிவிப்பாளர் வந்தார். புகைப்பிடிப்பவர். புகை நாற்றம் வயிற்றை பிரட்டியது. வாந்தி வருவது போல் இருந்தாலும் கட்டுபடுத்தி கொண்டேன். முதல் வகுப்பு என்பதால் ரொம்ம்ப பேசினார். lecture அடித்தார்.

'பொதுவா இந்தியர்களுக்கு நீச்சல் வராது." என்றார். முறைத்தேன்.

"இல்ல இல்ல...அவர்கள் ஓடுவதில் தான் experts" என்று சமாளித்தார்.

பக்கத்தில் 2, 3 வயது குழந்தைகள் சுலபமாக நீந்துவதை பார்த்து பொறாமை வந்தது. சின்ன வயதிலேயே நீச்சல் கற்று இருக்கலாமே என்ற ஏக்கம். அப்போது வசதி இல்லை, பெற்றோர்கள் அழைத்து செல்வதற்கு நேரம் இல்லை.

முதல் வகுப்பு முடிந்தது. எப்படி float செய்வது என்பதை கற்றேன். ஒவ்வொரு செவ்வாய்கிழமை தான் வகுப்பு. இருந்தாலும், அடுத்த செவ்வாய் வருவதற்கு முன்னாலே மூன்று அல்லது நான்கு முறை நானாகவே நீச்சல் குளத்திற்கு சென்று பயிற்சி செய்தேன். அதன் காரணமாக மூன்றாவது வகுப்பிலேயே முதன் முதலாக 50 மீட்டர் நீந்தினேன் எந்த இடத்திலும் நிறுத்தாமல்! வாழ்க்கையில் நான் செய்த ஒருசில சாதனைகளில் இதுவும் ஒன்று. மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

"நீ ரொம்ப வேகமா கத்துக்கிற" என்றார் பயிற்சிவிப்பாளர்.

நான்காவது வகுப்பு முடிந்த பிறகு, வகுப்பிற்கு போவதை நிறுத்திவிட்டேன். நீச்சல் தெரிந்தவுடன் நானாகவே சென்று 10 laps அல்லது 20 laps(கிட்டதட்ட 1 km) நீந்தினேன்.உடல் எடையை குறைப்பதற்காக இந்த முயற்சி. நீச்சல் செய்தால் thigh fats குறையும்.

இப்படி ஒரு பக்கம் சென்றது.

வீட்டின் கீழ் தாளத்தில் உடற்பயிற்சி செய்ய சின்ன இடம் இருக்கிறது. காலை நேரங்களில் சென்று skipping செய்தேன். 100 முறை ஸ்கிப் செய்துவிட்டு 13 மாடி ஏறுவேன். மறுபடியும் கீழே வந்து இன்னொரு 100 முறை ஸ்கிப் செய்வேன். மறுபடியும் மாடி ஏறுவேன். இப்படி 5 முறை செய்வேன். வேர்த்து கொட்டும். கால்களிலுள்ள தசைகள் வலிக்கும். உயிர் போவது போல் இருக்கும்.

ஆனால், என் மனதில் இருந்தது ஒன்றே ஒன்று தான் - உடம்பை குறைக்க வேண்டும்!

உடம்பை குறைப்பது என்பது....
it is not a struggle in the body. it is the battle between the heart and the mind!

இது போதாது என்று, ஜிம்மிற்கு போக ஆரம்பித்தேன். முதன் முதலாக ஜிம் போகும்போது கொஞ்சம் கூச்சமாக இருந்தது. அங்கே உள்ளவர்கள் நம்மை பார்ப்பார்களோ, என்ன நினைப்பார்களோ என்று பல சிந்தனைகள். அங்கு சென்று பார்த்தபிறகு ஒரு புதிய தன்னம்பிக்கை.

வயது 40, 50 இருக்கும் பெண்கள் அவ்வளவு சுறுசுறுப்பாக பயிற்சி செய்வதை பார்த்து எனக்கு பெருமையாக இருந்தது. அவர்களை பார்த்து நிறைய கற்றுகொண்டேன்.

முதன் முதலாக ஆரம்பித்த போது threadmill 10 நிமிடங்கள் நடக்கவே ரொம்ப கஷ்டமாக இருக்கும். stamina பத்தாது! பத்தி நிமிடங்கள் நடந்தவுடன் உட்கார்ந்து கொள்வேன். இப்படி பயிற்சி செய்து என்னிக்கு நம்ம உடம்ப குறைப்பது என்ற சோகம்! சில சமயங்களில் சோர்ந்து நொந்து போயிவிடுவேன். ஆனால், ஏதோ ஒன்று மனதில் சொல்லும்-உன்னால் முடியும் என்று!

staminaவை முன்னேற்றி கொண்டாலே போதும்! அதற்கு தொடர்ந்து ஜிம்-மிற்கு சென்றேன்.
threadmillலில் 20 நிமிடங்கள் நடக்க ஆரம்பித்து, பிறகு ஓட ஆரம்பித்தேன்.
mini-weights தூக்கினேன்.
cycling machineலில் 25 நிமிடங்கள் பயிற்சி செய்தேன்.

ஒவ்வொரு முறையும் நான் அன்று ஜிம்மில் என்ன செய்தேன், எவ்வளவு calories குறைத்தேன் என்பதை டைரியில் எழுதினேன். 100 caloriesலில் ஆரம்பித்து, உச்சகட்டமாக 1200 calories வரையிலும் சென்றுள்ளேன். அதாவது ஒரு நாளில் 1200 calories குறைப்பது என்பது கிட்டதட்ட மூன்று மணி நேர உழைப்பு!

அங்குள்ள weighing machineலில் எடையை பார்த்தபோது, ஒவ்வொரு வாரமும் குறைந்து கொண்டே வந்தது. சந்தோஷம் தாங்க முடியவில்லை. கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே....

என் சூழ்நிலைக்கு ஒத்துவராத பொன்மொழி!

பயிற்சி செய்தால் மட்டும் போதாது, சாப்பாட்டின் அளவையும் குறைக்க வேண்டும்...

ஆனால்...

(தொடரும்)

May 13, 2009

biggest loser- எந்த கடையில நான் அரிசி வாங்கினேன்?-1

biggest loser நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்தபோது, பழைய நினைவுகள் என்னை தீண்டின.

2007 மே மாதம்.

காலேஜ் முதலாம் ஆண்டு முடியும் வேளை. காலேஜ் வாழ்க்கையில் settle ஆக ரொம்ப கஷ்டப்பட்டேன். படிப்பு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. நிறைய தேர்வு, assignment. பள்ளி நண்பர்களிடம் பேச கூட நேரம் இல்லை. வெளியே போகவில்லை. கிட்டதட்ட பைத்தியம்போல் இருந்த காலம். அதிகபடியான மன உளைச்சலால் நிறைய சாப்பிட ஆரம்பித்தேன். அதன் விளைவு. obesity பிரச்சனை! என் உயரத்திற்கு நான் 49-52.9 கிலோக்குள் தான் இருக்க வேண்டும். ஆனால் 66 கிலோ இடையில் இருந்தேன். மருத்தவர் எச்சரித்தார், "நீங்க இப்படியே போய்கிட்டு இருந்தீங்கன்னா, சின்ன வயசுலே diabetics, heart problem வர வாய்ப்பு இருக்கு."

அப்போதுகூட நான் அதை சீரியஸாக எடுத்துகொள்ளவில்லை. அதற்கு அப்பரம் நடந்த இரண்டு சம்பவங்கள்.

1) என் மாமா மகள், வயது 5 தான் இருக்கும். அவர்கள் வீட்டில் ஃபோட்டா எடுத்தோம் ஒருநாள். ஃபோட்டாவில் நான், அக்கா, அவள். ஃபோட்டாவை பார்த்து அவள் என்னிடம் சொன்னாள், "நீங்க ஏன் இவ்வளவு பெரிசா இருக்கீங்க? ஃபோட்டா முழுசா நீங்க தான்..." என்று சொல்லிவிட்டு சிரித்தாள்.
எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவள்கூட சேர்ந்து சிரிப்பதா. இல்ல, ஒரு சின்ன புள்ள நம்மள பாத்து சொல்லிட்டேன்னு அழுவதான்னு ஒன்னும் புரியல்ல....மனசுக்குள் ஒரு மணி அடித்தது.

2) இன்னொரு முறை, நானும் என் அப்பாவும் மின்தூக்கிக்காக காத்திருந்தபோது, அவர் என்னை பார்த்து ஒன்று சொன்னார். (ரொம்ப மோசமான கமெண்ட்...அதை இங்கே சொல்ல முடியாது.) என்னடா இது இவர் இப்படி நம்மை பார்த்து சொல்லிட்டாரேன்னு அன்று இரவு முழுசும் ஒரே கவலை. நம்ம என்ன அப்படி குண்டாவா இருக்கிறோம் என்று மனம் நொந்து போனது.

கண்ணாடியில் பார்த்தேன். உண்மை சுட்டது! என்னிடம் ஒரு பத்து சட்டைகள் இருந்தால், அதில் இரண்டு மட்டுமே போட முடியும். அந்த அளவுக்கு நிலைமை இருந்தது. உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தேன். ஒரு முடிவு எடுத்தேன். உடல் இடை குறைக்கும் ஒரு நிறுவனத்திற்கு சென்றேன். அங்கே ஒரு கணிசமான தொகையை செலுத்தி, இயந்திரங்கள் உதவியால் beltகளை வயிற்று பகுதி, கால் பகுதியில் சுற்றி வைப்பார்கள்.

அரை மணி நேரத்திற்கு அவை உடம்போடு ஒட்டி இருக்கும். ஆனால், அதிலிருந்து சூடு வரும். அந்த சூட்டினால் உடல் இடை குறையுமாம்! நானும் நம்பி போனேன். சொல்ல முடியாத வலி! அரை மணி நேரம் முடியும் முன்னே கத்திவிட்டேன். என்னை விட்டுவிடும்படி சொல்லி கிளம்பிவிட்டேன். அதுக்கு அப்பரம் நடக்கவே முடியல.

வாத்துக்கு piles வந்தா எப்படி நடக்குமோ, அப்படி நடந்தேன். கட்டடத்தின் கீழ் தளத்தில் உட்கார்ந்து ஒரு மணி நேரம் அழுது இருப்பேன். சூட்டினால் ஏற்பட்ட வலி, உடல் பருமனாக இருக்கிறேனே என்ற வலி, மற்றவர்கள் கிண்டல் செய்கிறார்களே என்ற வலி, நமக்கு பிடித்த ஆடைகளை போட முடியவில்லையே என்ற வலி, இந்த சின்ன வயசுல ஏன் எனக்கு இந்த கஷ்டம் என்ற வலி....என்று வலிகளின் பட்டியல் நீண்டு கொண்டே சென்றது.

அழுது முடித்தேன். இந்த இடத்திற்கு மீண்டும் வந்தால் என்னை உயிரோடு சமாதிகட்டிவிடுவார்கள். பணத்தை கட்டிவிட்டோம், அப்பணம் பழனி உண்டியலில் போட்டதாக நினைத்து கொண்டேன். ஆக, சொந்த முயற்சியில் இறங்கினேன். அம்மா என்னை நீச்சல் வகுப்பில் சேர்த்துவிட்டார்.

நீச்சல் வகுப்பில்.....

(பகுதி 2)

ஜஸ்ட் சும்மா(13/5/09)

காலேஜ் இருக்கும்போது, அம்புட்டு வேலை இருக்கும். ஆனா எழுதுறதுக்கு 1008 விஷயங்கள் தோணும். இப்போ லீவு தானே.. ஆனா இந்த (மர)மண்டையில ஒரு மண்ணும் தோண மாட்டேங்குது... அது ஏன்னு தெரியல.... லீவுல தான் நிறைய எழுதுறதுக்கு நேரம் கிடைக்கும்.ஆனா ஒன்னுமே எழுத தோணல...எழுத வரல...அதான் இப்படி ஜஸ்ட் சும்மா....

ஆனந்த தாண்டவம் படத்தில் இடம்பெற்ற கனா காண்கிறேன் பாடலை ஒரு நாளைக்கு 10 தடவைக்கு மேல கேட்குறேன். சமீப காலத்தில் வந்த பாடல்களில் என்னை கவர்ந்த ஒரு பாடல் இதுவே!! பாடல் வரிகள் ரொம்ம்ப நல்லா இருக்கும்.
-------------------------------------------------------------------------------------------

biggest loser என்ற அமெரிக்கா நிகழ்ச்சி ஒன்று, அதை தினமும் பார்த்து கொண்டு வருகிறேன். இந்த நிகழ்ச்சி குண்டா இருப்பவர்கள் 15 வாரங்களில் எப்படி தங்களது இடையை குறைக்கிறார்கள் என்பதை பற்றி. ஒவ்வொரு ஆளும் எடுக்கும் முயற்சியை பார்க்கும்போது ரொம்ம்ப வியப்பா இருக்கும். என்னையே நான் பார்த்த மாதிரி ஒரு உணர்வு... ஏன் என்றால் ஒரு காலத்தில் நானும் குண்டா இருந்து, நிறைய கஷ்டப்பட்டு 13 கிலோ குறைத்தேன். அந்த 'இரத்த கண்ணீர்' கதையை விரைவில் எழுதுகிறேன்:(
----------------------------------------------------------------------------------------

1988 ஆம் ஆண்டு சச்சின் 10வது வகுப்பு தேர்வில் தோல்வி. ஆனால் 2008 பத்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் முதல் பாடமே சச்சினை பற்றி தான்! முயற்சியே பலம்- இப்படி ஒரு குறுந்தகவல் வந்தது. அன்றே சச்சின்- ஒரு சுனாமியின் சரித்திரம் என்னும் புத்தகத்தை இரவல் வாங்கி படித்தேன். ஓ மை காட்ட்ட்ட்ட்ட்ட்ட், சச்சின் இஸ் சிம்பிலி சூப்ப்ப்ப்ப்ப்ர்ப்ப்!! எத்தன சங்கடங்கள், சோதனைகள், சாதனைகள், கஷ்டங்கள், கேப்டனாக தோல்வி, சக விளையாட்டர்களின் பொறாமை, பகைமை, கிரிக்கெட் வாரியம் செய்தவை.... அவரின் வாழ்க்கையை படம்பிடித்து காட்டியது அப்புத்தகம். அதை படித்தவுடன் ஏதோ ஒரு புத்துணர்ச்சி!!
-------------------------------------------------------------------------------------

நேற்று சன் டிவில காதல் படத்த போட்டான். நானும் அக்காவும் பார்த்து கொண்டிருந்தோம். சந்தியாவின் வண்டி கோளாறு ஆனவுடன் பரத் கடைக்கு எடுத்து செல்வார்கள். அப்போது சந்தியாவின் தோழி, "வண்டிய நீங்க தான் பாக்கனுமா? வண்டி ஆசைப்படுது." என்பாள். ஆனால் நேற்று 'வண்டி ஆசைப்படுது' என்ற ஷாட்டை கட் செய்துவிட்டான்.
நான் உடனே, "அக்கா, ஒரு டயலாக்க கட் பண்ணிட்டான் பாவி பய."

அக்கா ஒரு மாதிரியாய் என்னை பார்த்து, "ஆமா.. நீ எத்தன தடவ இந்த படத்த பாத்துருக்க... இவ்வளவு கரெக்ட்டா சொல்றே."

நான் அசட்டு சிரிப்பு சிரித்தேன்:)
---------------------------------------------------------------------------------------
பசங்க படத்தை பார்க்கனும்னு ரொம்ப ஆர்வமா இருக்கு. ஆனா எங்க ஊர்ல இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. ஆன்லைனிலும் தேடி பார்த்தேன். ஒன்றும் சரியா கிடைக்கவில்லை.:(
---------------------------------------------------------------------------------------

குறிப்பு: அவியல், குவியல் அப்படின்னு சீனியர்கள் எழுதுகிறார்கள். நானும் இப்பதிவுக்கு பொரியல் என்று தலைப்பு வைக்கலாம்னு இருந்தேன். ஆனால் அப்படி வைத்தால், சீனியர்களை கிண்டல் செய்வதுபோல் இருப்பதாக மக்கள் நினைக்கலாம். ஆகவே தான் தலைப்பை மாற்றினேன்:)

Apr 8, 2009

ஓட்டுபோட்ட எல்லாருக்கும் நன்றி!


கொஞ்ச நாளைக்கு முன்னாடி, நாங்க ஒரு வீடியோ போட்டில கலந்து கொண்டு உங்களிடம் ஓட்டு போட சொன்னோம்ல, அதுக்கு மூன்றாவது பரிசு கிடைச்சுருக்கு அக்காவுக்கு. ஒரு ipod. உங்களது பொன்னான வாக்குகளை செலுத்தி வெற்றி பெற செய்த அனைவருக்கும் கோடி நன்றிகள்!:) நீங்க போட்ட ஒவ்வொரு வாக்குகளும் இப்போ இசையா மாறியிருக்க. அத கேட்கபோறேன்னு நினைச்சா கண்ணு கலங்குது...(feelings of singapore, india, srilanka...வேற எங்கிருந்தோ ஓட்டு போட்டீங்களோ அந்த ஊரையலாம் சேர்த்துக்குங்க..அவ்வ்வ்)

இலவச டிவிடி பிளேயர், வேட்டி சட்டை, பட்டுபுடவை, 10 பவுன் தங்க சங்கிலி, ஒரு வைர மோதிரம்...இப்படி உங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று ஆசை தான். ஆனா...பட்ஜெட் இடிப்பதால், அடுத்த முறை செயல்படுத்த முயற்சிக்கிறோம்! :)

இதுல இன்னொரு காமெடி என்னென்னா.... இந்த ipodட்ட எப்படி ஆப்ரேஷன் செய்வது என்று..ச்சி..ஐ மின் எப்படி ஆப்ரேட் செய்வது என்று தெரியவில்லை. 'எடிசனின்' கடைசி பேத்தி என்ற முறையில் நான் தற்சமயம் இந்த 'ஆப்ரேஷனில்' தீவிரமாக உள்ளேன். பல முயற்சிகளை செய்துவருகிறேன்.

நேற்று பரிசளிப்பு விழா. எந்த ஒரு பரிசளிப்பு விழாவுக்கு போனாலும் எனக்கு இந்த மன்னன் படத்தில் வந்த ரஜினி-கவுண்டர் காமெடி நினைப்புக்கு வந்துவிடும். அவர்கள் தங்க சங்கிலியும், மோதிரமும் வாங்க போகும் காட்சி கண்முன்னே வந்துவிடும். அப்படி தான் நேற்றுக்கும் போய் உட்கார்ந்தவுடனே எனக்குள்ளே ஒரு சிரிப்பு! அந்த உரை, இவர் பேச்சு, அந்த பேச்சு... என்று கொலை அறுவை...உஷ்ஷ்ஷ.... எப்படா விடுவாங்கன்னு இருந்துச்சு.

ஏகப்பட்ட பேட்டி, புகைப்படம் எடுத்து கொள்வது என்று அக்காவை சுற்றி ஏராளமான மக்கள். நான் அக்காவின் பையை தூக்கி கொண்டு ஒரு ஓரத்தில் நின்றேன். இப்ப தான் தெரியுது.. ஏன் இயக்குனர்கள் எல்லாம் நடிகர்களாகிறார்கள் என்று! ஹாஹாஹா....:)

பரிசளிப்பு விழா நடந்த இடம் raffles place. night lifeக்கு உகந்த ஒரு ஏரியா..... ஒரு உணவகத்தின் வெளியில drums வாசிச்சாங்க பாருங்க.... அங்கேயே கொஞ்ச நேரம் நின்று பார்த்துட்டு இருந்தேன். இந்த இடத்துக்கு எல்லாம் அடிக்கடி போக முடியாது என்பதால் நான் அக்காவிடம்

"அக்கா...கொஞ்ச நேரம் இங்கேயே சுத்திட்டு போலாமா?" என்றேன். அவரும் ஒகே என்றுவிட்டார்! நாங்கள் நடக்க ஆரம்பித்தோம். அந்த இடம், வெளிச்சம் குறைவாக இருந்தாலும், அதில் இருந்த அழகு, ஏகப்பட்ட நடவடிக்கைகள், சாப்பாட்டுகடைகள், நிறைய வெள்ளக்காரன்ஸ்...

எத பாக்குறது...எத விடுறதுன்னு தெரியாம முழிச்சேன்(ஐயோ....நான் சாப்பாட்டு கடைகள சொன்னேன்....முறைக்காதீங்க:) இடம் ரொம்ப பிடிச்சுபோச்சு.

இந்த பதிவை எழுதிகொண்டிருக்கும்போது, ipodட்ட எப்படி ஆப்ரேட் செய்வது என்று googleலில் கண்டுபிடித்துவிட்டேன். சரி நான் போய் இசையில் சங்கமம் ஆகிறேன். .....

Apr 1, 2009

முட்டாள்கள் தினம்- எங்களுக்கு தீபாவளி மாதிரில!

முட்டாள்கள் தினம் வந்தாலே, யாரையாவது முட்டாளாக்க வேண்டும் என்று மனம் துடிக்கும்(அவ்வ்வ்வ்வ்வ்...) சென்ற ஆண்டு தொடங்கிய இந்த 'வியாதி' இந்த ஆண்டு வரை நீடிக்கிறது. சென்ற ஆண்டு ஒரே கதையை வைத்து 4 நண்பர்களை ஏமாற்றினேன். (இதலாம் ஒரு பொழப்பா அப்படின்னு நீங்க சொல்றது என் காதுல விழுந்தாலும்... விழாத மாதிரி இருந்துகிறேன்)


எத்தனையோ கதை எழுதுறோம்(ஓ... நீ எழுதுவதற்கு பெயர் கதையா.. சரி ரைட்டு), நமக்காக ஒரு கதைய அவிழ்த்துவிடுவோமே என்று ஆரம்பித்தேன். ஏப்ரல் 1ஆம் தேதி அன்று நிறைய பேர் உஷாராக இருப்பதால், ஒரு வாரத்திற்கு முன்பே என் வேட்டையை ஆரம்பித்துவிட்டேன். இப்போது எல்லாம் ஏப்ரல் 1ஆம் தேதி அன்று யாருமே ஃபோனைகூட எடுப்பதில்லை! ஹிஹி.... சரி நம்ம கதைக்கு வருவோம். இந்த வருடம் target அப்பாவி 5 நண்பர்கள்.


1) தோழனிடம் ஒரு வாரத்திற்கு முன் பேசி கொண்டிருந்தபோது, அவன் என்னை கிண்டல் செய்து பேசிய போது நான் சொன்னேன், " ஏய் இப்படி பேசாதே...என் bf கேட்டாருன்னா தப்பா நினைப்பார்." என்று பொய் சொன்னேன். அவன் அதிர்ச்சியாய், "என்னது bf? எப்போ இதலாம் நடந்துச்சு?" என்று ஆரம்பித்தவனிடம் ஒரு மெகா மகா பொய் கதையை கூறினேன். கொஞ்ச நாள்கள் கழித்து, bf என்னிடம் சண்டை போட்டதாகவும், நாங்க பிரிந்துவிட்டோம் என்பதாகவும் சொன்னேன். ஒரு வாரம் ஓடிய கதை, இன்று தான் உண்மையை போட்டு உடைத்து, இந்த உலகில் நீயும் ஒரு முட்டாள் தான் என்று மகுடம் சூடி பாராட்டினேன். :) பையன் கோபத்துல கொந்தளிச்சுகிட்டு இருக்கான்!!


2) வூட்டுல மாப்பிள்ள பாக்குறாங்கன்னு இன்னொரு கதை, இது சிட்னியில் படிக்கும் என் பள்ளி தோழிக்கு இமெயில் மூலம் அனுப்பினேன். பொண்ணு பயந்து, மிரண்டு போய், அட்வைஸ் மேல் அட்வைஸ் அனுப்பி அதன் பாச மழையை பொழிந்துவிட்டது. என்ன தான் சொல்லுங்க... நமக்கு ஒரு கஷ்டம் வந்தா... இந்த பாசக்கார புள்ளைங்க ரொம்ம்ப தவிச்சுடுறாங்கப்பா!! எப்படி ஓடியது என்பதை காண இங்க செல்லலாம்! இமெயில் கலாட்டா

பிறகு, அவளிடம் உண்மையை போட்டு உடைத்து, எனது இரண்டாவது சதத்தை அடித்தேன்.


3) இது மூன்றாவது பந்து, கண்டிப்பாக hatrick அடித்துவிட வேண்டும் என்று தோன்றியது. ஆக, மேல் சொன்ன இரண்டாவது கதையை குறுந்தகவல் மூலம் அனுப்பினேன் ஒரு தோழியிடம்.அவளும் ஓரளவுக்கு ஏமாந்துவிட்டாள்.


4) குறந்தகவல், இமெயில்....ஒகே. யாரு யாரோ கண்டுபிடித்ததை பயன்படுத்தினாயே, ஏன் நான் கண்டுபிடித்ததை பயன்படுத்தவில்லை என்று alexander grahambell கேட்டுவிடகூடாது பாருங்க. ஆக, நேற்று என் கல்லூரி தோழியிடம் ஃபோன் செய்து , "என் ஆண்ட்டி ஒருத்தர் ஒரு film production company வச்சு இருக்காங்க. அவங்க ஒரு குறும்படம் எடுக்க போறாங்க. உன்னைய நியூ இயிர் பார்ட்டில பாத்தாங்க. உன் ஃபோட்டா காட்டுனாங்க. நான் சொன்னே இந்த பொண்ணு என் தோழி தானு. என்னைய உன்கிட்ட பேசி பாக்க சொன்னாங்க. அதுல உன்னைய நடிக்க கூப்பிடுறாங்க. அந்த படம் ஒரு இளையர பத்தி.' என்றேன். பொண்ணு ரொம்ப fitness conscious. ஒல்லியா இருப்பா. அதனால நான் சொன்னேன் ," இந்த படத்துக்காக நீ ஒரு 20 கிலோ வேட் போடனும்." என்றதும் ஆச்சிரியத்தின் உச்சிக்கு போய்விட்டாள்.

அதுக்கு அப்பரம் உண்மை தெரிந்தபிறகு, என்னை பாராட்டிய ஒரே ஜீவன் இவள் தான். சிரித்து கொண்டே அவள், "உனக்கு எப்படி இப்படிலாம் தோணுது. very innovative idea."

5) இன்னொரு கல்லூரி தோழியிடம் assignment due date நாளைக்கு என்றதும் பதறிவிட்டாள். அவள் எனக்கு பாராட்டு விழா எடுக்க போவதாக சொல்லியிருக்கிறாள். ஹிஹி...

ஆமா... எல்லாரையும் ஏமாற்றுகிறோமே. நம்மை ஏன் யாருமே ஏமாற்றுவதில்லை?? :)))

Jan 28, 2009

9 வருஷ நட்பு இன்னும் தொடரனும்.

பள்ளி நண்பர்களின் சந்திப்பு- 26/01/09

ஒவ்வொரு வருஷமும் குறைந்தது இரு முறையாவது சந்தித்து கொள்வோம். போன வருஷம் அதிகமாகவே இருந்தது. காரணம் எல்லாரும் தங்களது 21வது பிறந்தநாள் கொண்டாடத்தை கொண்டாடினர். ஒவ்வொரு நண்பரின் பிறந்த நாளுக்கும் போய்விடுவோம் (பரிசு பொருட்கள் வாங்கி கொடுத்தே...பட்ஜெட் சங்கர் படம் அளவுக்கு ஏறிபோச்சு...அத வேற கதை..)


மதியம் 12 மணிக்கு வந்துடுங்க என்று தோழி ஸ் எம் ஸ் செய்தாள் அதற்கு முன் தினம். எங்களை ஒன்று திரட்டி ஏற்பாடு செய்த தோழிக்கு பெரிய கட் அவுட் வைக்கனும். ஏன்னா, ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்வது எவ்வளவு கஷ்டம் என்று எல்லாருக்கும் தெரியும். இதை ஒரு மாதம் முன்பே, தொடங்கிவிட்டாள். கெட்டிக்காரி! (என் ஃபிரண்டாச்சே..:)


அக்காவுக்கும் என் பள்ளி நண்பர்களை நன்கு தெரியும் என்பதால், அக்காவும் வந்தாங்க. நானும் அக்காவும் தான் சொன்ன நேரத்திற்கு சென்றோம். அதுக்கு அப்பரம் ஒவ்வொரு ஆளா வந்து சேர்ந்தாங்க. ஒவ்வொருவரும் ஒரு சாப்பாடு ஐட்டம் கொண்டு வரனும். mee goreng (noodles வகை மாதிரி ஒன்னு), egg fried rice, sambal chicken, sardine fish curry, chicken nuggets, egg masala,chips, biscuits, coke, miranda...என்று பலவகையான சாப்பாடு.

இவ்வளவு வந்துவிடும் என்று தெரியாது. தெரிந்து இருந்தால், இரண்டு நாள் பட்டினியா இருந்திருப்பேன்!:)


நண்பர் விக்கி என்பவர் பாவம். கால்ல ஆப்ரேஷன் அவனுக்கு. இருந்தாலும் பதினாறு வயதினிலே சப்பானி மாதிரி வந்து சேர்ந்துட்டான். எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் இவங்க எல்லார்கிட்டயும்- என்ன நடந்தாலும் சரி, சந்திப்பு என்றால் கண்டிப்பா வந்துடுவாங்க.

இன்னொரு தோழியின் தங்கையோட பிறந்தநாள். அப்படி இருந்தும் அன்று, தோழி இங்கு வந்தாள். சாப்பாடு வயிற்றை நிரப்பியது. இவர்கள் பாசம் மனசை நிரப்பியது (ஃபீலிங்ஸ் ஆஃ தளபதி ரஜினி, மம்மூட்டி)

பொங்கலுக்கே வெடி வெடிப்போம். தீபாவளி வந்தா சும்மா விடுவோமா! ஒருத்தர் இரண்டு பேர சந்திச்சுக்கிட்டாலே, முடிஞ்சுது. இதுல பத்து பேரு நாங்க, சும்மா இருப்போமா...கேலிக்கும் கூத்துக்கும் பஞ்சமே இல்ல!

இங்க குரூப்ல இங்களவிட கொஞ்ச வயது அதிகம் முத்து என்னும் நண்பருக்கு தான். அவருக்கு கூடிய சீக்கிரத்தில் கல்யாணம் ஆக போகுது, புது வீடு வாங்கிவிட்டார்- இப்படி அவர் சொந்த கதைய சொல்ல, நாங்க கிண்டல் பண்ண...டைம் போனதே தெரியல.

அப்பரம் இன்னொரு தோழி இருக்கா. சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவள், 1008 தடவ ஃபோன் வரும் அவளுக்கு. சென்னையில் மாமா மகன் ஒருத்தர் இருக்கார் அவளுக்கு. இவளுக்கும் இந்த மாமா மகனுக்கு கல்யாணம் ஆக போகுது. ஆக, இத வச்சே இவள கன்னாபின்னான்னு கிண்டல் அடிப்போம்.

அவள் ஃபோன் attend பண்ணிட்டு வந்தாள்.

அக்கா: ஏய், can u come and eat first? who was that on the line?
அவள்: overseas call...
நான்: அப்பரம், அத்தான் சாப்பிட்டார? மாமியார் சாப்பிட்டாங்களா? மாமனார் சாப்பிட்டாங்களா?
இவங்களாம் சாப்பிட்டு பிறகு தான் இவ சாப்பிடுவாள். இவங்க சாப்பிடலன்னா, பச்சை தண்ணிகூட பல்லுல படாது பாப்பாவுக்கு!

என்று சொல்லி முடிப்பதற்குள் என்னைய அடிக்க ஓடி வர, நானும் ESCAPE!

அப்பரம் உலக கதை, சொந்த கதை, சோக கதை. sydneyயில் படித்து கொண்டிருக்கிறாள் இன்னொரு தோழி. அவளை 'sydney-return' என்று கிண்டல் அடிப்போம். ஏன் என்றால் அவள் இட்லியைகூட spoon/forkல் தான் சாப்பிடுவாள்.

ஏதோ ஒன்னு பேசிகிட்டு இருந்தபோது, ஆஸ்பித்திரி என்ற வார்த்தை வந்துவிட்டது. உடனே அக்கா, "ஏய் guys, எனக்கு ஒரு கவிதை தோனுது."

எல்லாரும் ஆர்வமாய் அவள் சொல்வதை கேட்க,

"ஆஸ்பித்திரி போனா ஒரு கற்பஸ்திரி
புள்ள பொறந்த பிறகு தெரிஞ்சுது
அவள் history!"

என்றாள்.

பக்கத்திலுள்ள கல்ல எடுத்து தூக்கிபோட்டனர் சிலர். ஆஹா ஓஹோ என்று பாராட்டினர் சிலர். இதுக்கு என்ன அர்த்தம் என்று புரியாமல் குழம்பி இருந்தனர் சிலர்.

அதற்கு அப்பரம், guessing-the-movie-name விளையாட்டை விளையாடினோம். இரு குழுக்களாய் பிரித்தோம். ஒரு படத்தின் தலைப்பை பாவனை செய்து தன் குழுவை அத்தலைப்பை சொல்ல வைக்கனும். கேள்வி படாத பட பெயர்லாம் வந்துச்சு... செம்ம காமெடியா போச்சு. எல்லாருக்குள்ளயும் ஒரு நடிப்பு திறமை இருக்குப்பா!

இதுல டாப் காமெடி என்னவென்றால் 'sydney-return' அடிக்கும் கூத்து தான். எல்லா படத்துக்கு ஒரே மாதிரியான பாவனை செய்து காட்டி எங்களை கொலைவெறிக்கு ஆளாக்கினாள்!!!

நேரம் 430 ஆகிவிட்டது. சில புகைபடங்களை எடுத்து கொண்டு வீடு திரும்பினோம்.

அடிச்சு போட்ட மாதிரி உடல் சோர்வு ஏற்பட்டது. இத்தனைக்கும் நாங்க அதிகமா ஒன்னுமே பண்ணல!???!!! :)

Jan 23, 2009

கடைசி நாளாக இருந்திருக்கும்...

வெள்ளிக்கிழமை மாலை 4 மணி. அம்மா ஃபோன் செய்தார்.

"காயத்ரி. வேலை முடிஞ்சுட்டு...அழைக்க வரீயா?"

"சரி மா" என்று சொல்லி முடித்து கார் சாவியை எடுத்து கொண்டேன்.

4.10 ஆகிவிட்டது. அம்மா வேலை இடத்திற்கு செல்ல இரண்டு வழிகள் உண்டு. expressway மற்றும் normal ரோட். normal ரோட் வழியாக செல்லலாம் என்று மனசு சொல்லியது. ஆனால் ஏனோ தெரியவில்லை expressway பக்கம் திருப்பினேன். கொஞ்ச தூரம் சென்றேன். இடது பக்கம் திரும்புவதற்காக slip roadல் நிறுத்தி main roadல் ஏதேனும் கார் வருதா என்று பார்த்தேன்.

மணி 4.20

நிறுத்தி இருக்கும் வேலையில் பின்னால் இருந்து ஒரு மினி வேன் 'படார்' என்று என் காரை மோதி தள்ளியது! வந்த வேகத்தில் கார் ஒரு குலுங்கு குலுங்கியது!

தூக்கி வாரி போட்டது என் மனம், என் உயிர்!

ஒரு நிமிஷம் ஆடி போயிட்டேன்!

சீட் பெல்ட் போட்டு இருந்தேன். இல்லையெனில் கண்ணாடியை உடைத்து கொண்டு வெளியே தூக்கி ஏறியப்பட்டிருந்திருப்பேன்.

steering wheelலை டக்கென்று பிடித்து கொண்டேன். இல்லை என்றால், மூக்கு, வாய், பல் எல்லாம் போயிருக்கும்!

ஷாக், கோபம், ஏரிச்சல், படபடப்பு என்று லட்ச உணர்வுகள் ஒரே சமயத்தில்!

காரிலிருந்து இறங்கி வேன் ஓட்டுனரை பார்த்தேன். அவரும் அவரது காரிலிருந்து வெளியே வந்தார். வயது 65வது இருக்கும். அந்த சின்ன slip roadல் எதுக்கு அவருக்கு இந்த வேகம்?

என் கார் பின் பகுதி உடைந்து போனது.
அதை பார்த்தவுடன்
ஏரிமலை போல் கோபம் கொப்பளிக்க "don't you know how to drive? %&*#*#(#"

கெட்ட வார்த்தை அருவி போல் கொட்டியது.
கொஞ்சம் கோபம் தணிந்தது போல் உணர்ந்தேன்.

போலிஸுக்கு ஃபோன் செய்து நடந்தவற்றை கூறினேன்.

"மேடம், யாருக்காச்சு அடிப்பட்டு இருக்கா?"

"இல்லை"

"அப்போ, நீங்க அவரோட கார் நம்பரை மட்டும் எடுத்துங்கோ, insurance claim பண்ணிடுலாம். " என்று முடித்துவிட்டார்.

"what the *(#&#@#$%?"

எனக்கு உதவி தேவைய்யா!! தனியா நின்னு தவிச்சுகிட்டு இருக்கேன்!

உடனே அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஃபோன் செய்தேன்.

அதற்குள், வேன் டிரைவர் அவசரப்படுத்தினான். 'why are you wasting my time?' என்று அவர் என்னை பார்த்து கேட்டார். கோபம் மலையையும் தாண்டிவிட்டது. அவர் தண்ணி அடித்து இருக்கிறார் என்பதை புரிந்து கொண்டேன். உலற ஆரம்பித்தார், ஒரு இடத்தில் இல்லாமல் அங்கயும் இங்கயும் திரிந்தார். கண்கள் சிவப்பா இருந்துச்சு.

நண்பர் ஒருவருக்கு ஃபோன் செய்தேன். "ஹாய் வீரா...." என்று ஆரம்பித்து நடந்தவற்றை கூறினேன். அவன் ரொம்ப உதவி செய்தான். அவன் சொன்னதுபோல் செய்தேன்.

மறுபடியும் ஃபோன் செய்தேன் காவலர்களுக்கு.

நான்: இங்க ஒரு accident. வேன் டிரைவர் என் வண்டியை இடித்துவிட்டான். ஆனா, இங்க சத்தம் போட்டு கொண்டு இருக்கிறார். சண்டை போடுகிறார். தண்ணி அடிச்சுட்டு ஓட்டி இருக்கிறார் என்று சந்தேகபடுறேன்.

(நண்பர் கொடுத்த ஐடியா படி நடந்தேன்.)

உடனே காவலர்கள் வந்தார்கள். அப்பா, அம்மா வந்துவிட்டார்கள். நான் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மட்டும் தான் ஃபோன் செய்தேன். வீட்டிலுள்ள அக்காவுக்கு விஷயத்தை சொல்லவில்லை. ஆனா, அதற்குள் அம்மா ஃபோன் செய்து "காயத்ரிக்கு accident" என்று முழுவிவரத்தையும் சொல்லாமல் விட்டார்.

அக்கா பாவம்! பயந்துபோய் ஓடி வந்தார்.

காவலர்கள் வந்தார்கள். என்னுடைய details எடுத்து கொண்டு, என்னிடம் கேட்டார்.

"உங்களுக்கு அவர் குடித்து இருக்கிறார் என்று எப்படி தெரியும்?"

உள்மனசு: ம்ம்...அவருக்கு நான் தான் ஊத்தி கொடுத்தேன்.

எனக்கு ஆச்சிரியமாக இருந்தது அவர் கேள்வி. "madam, i didn't say he was drunk. i reported that he might be drunk. i said i just suspect so."

என் பதிலை கேட்டு விட்டு அவரிடம் சென்றார். ஏதோ details எடுத்து கொண்டார்.

கொஞ்ச நேரம் விசாரணைக்கு பிறகு, வேன் டிரைவர் எங்கள் காரை சரி செய்து கொடுக்கிறார் என்று வாக்குறுதி கொடுத்தார்.

உடனே கார் workshopக்கு சென்றோம். அங்கே அவர் என்ன செய்தார் தெரியுமா?

mechanicக்கிடம் சென்று "bumperர சும்மா glue போட்டு ஒட்டி கொடு" என்றார்.

இவரை என்ன செய்வது என்று புரியவில்லை. ஆனால், mechanic நியாயமானவர். உண்மையை சொல்லிவிட்டார். ஒழுங்கான முறையில் எல்லாவற்றையும் செய்தார்.

car bumper, car sensor light, boot area என்று பல இடங்களில் உடைந்துகிடந்தவற்றை சரிசெய்து கொடுத்தார்.
வேன் டிரைவர் அப்பரம் வந்து என் அப்பாவிடன் 'you happy, i happy. everything ok." என்று சொல்லிவிட்டு கைகுலுக்கிவிட்டு சென்றார்.

என்னிடமும் வந்து கை கொடுத்தார். நான் கண்டுகொள்ளாமல் நின்றேன்!

வீட்டிற்கு வந்து சேர்ந்தபோது, அம்மாவுக்கு மனசு சரியில்லை.

"அப்பவே ஜோசியக்காரன் சொன்னான்..." என்று ஆரம்பித்தார்.

"சட்னி அரைக்கும்போது, கீழே விழுந்துட்டு jar... அப்பவே நினைச்சேன்.." என்றார்.

ஆஹா... இத கேட்ட பிறகு, வேன் டிரைவர் இடித்ததால் கொடுத்த ஷாக் எவ்வளவோ பெட்டர் என்று தோன்றியது!

Jan 13, 2009

என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுபாடு-200வது பதிவு

பொங்கல் திருநாள் வாழ்த்துகள் அனைவருக்கும். மாட்டு பொங்கல் வாழ்த்துகள் சிலருக்கும்! :)
பொங்கல் பொங்கி வரும் வேளையில் உதிக்கும் சந்தோஷம் எவ்வளவு பெரியதோ, அதே அளவு சந்தோஷம் இந்த வலைப்பூவிற்கும் உண்டு. இன்று தனது 200வது பதிவை தொட்டுவிட்டது.

ஆமாங்க... கடந்த 4 வருஷமா ஓடிகிட்டு இருக்கும் பயணத்தில் ஒரு மையக்கல். நிறைய மொக்கையான விஷயங்களுக்கு இடையில் சில நல்ல பதிவுகளை தந்து உள்ளேன் என்ற மகிழ்ச்சி மேலோங்கி இருக்கிறது.

எந்த தடையும் இன்றி, இன்னும் நிறைய பதிவுகளை தாங்கி நிற்க வேண்டும் என்று என் வலைப்பூவை நான் வாழ்த்துகிறேன்!:)

Jan 6, 2009

புதிய பாதை

இந்த வருஷம் முதல் நான் indian classical keyboard கத்துக்க போறேன். இது வரைக்கும் western படிச்சுகிட்டு இருந்தேன்... இப்ப புதிய பாதையில் பயணிக்க இந்த ஏற்பாடு. இந்த வாரம் புது வகுப்பு ஆரம்பிக்க போகுது. ரொம்ம்ப ஆர்வமா இருக்கு...ஆனா அதே சமயம் கொஞ்சம் nervousaa இருக்கு.... :(

இந்த வருஷத்தின் தீர்மானம்/பெரிய கனவு, ஆசை என்னவென்றால் ஒரு இசை கச்சேரி செய்ய வேண்டும் என்பதே. நான் கீபோர்ட், அக்கா கித்தார் வாசிக்க கத்துக்க போறாங்க. என்னொரு தோழியும் கித்தார் வாசிப்பா. அப்படியே தங்கச்சிய ஒரு பாட்டு பாட சொல்லி, நாங்க ஒரு performance பண்ணனும்னு எனக்கு ஆசை! நிறைவேறினால், என் வரலாற்றில் நான் எழுதி கொள்வேன்ய்யா!!:)

Jan 2, 2009

மாப்பிள்ள பாக்க வேண்டிய வயசுல.... என்னை போய்.....

2009 வின் புது வரவு!

8 வருஷமா எங்க வீட்டுல வேலை செஞ்ச பணிப்பெண் இந்த வருஷத்தோட ஊருக்கு போறாங்க. அவங்களுக்கு கல்யாணமாம். திருப்பி வர மாட்டாங்க. பணிப்பெண் என்றாலும் எங்க குடும்பத்துல அவரும் ஒருத்தர். அக்கா, தங்கச்சி, எனக்கும் நல்ல தோழி! அவங்க கிளம்புறது கொஞ்ச கஷ்டமா இருக்கு.... இருந்தாலும் என்ன செய்ய....

சிங்கையில பொதுவா பணிப்பெண்கள் இருந்தால் தான் குடும்ப வண்டி ஓடும். அதுவும் எங்க வீட்டுல கட்டாயம் தேவையான ஒன்று. ஆக, ஒரு புது பணிப்பெண் தேடனும். சென்ற வாரம், ஒரு maid agencyக்கு போனாங்க அம்மாவும் அப்பாவும். எனக்கு தெரியாது இந்த மாதிரி maid agencyகிட்ட 4 மாசத்துக்கு முன்னாடி register பண்ணிவச்சாங்க அப்படி இப்படின்னு.

ஏன் இந்த மாதிரி முக்கியமான விஷயங்கள எங்கிட்ட சொல்லாம விட்டுடீங்கன்னு சரியான கோபத்துல இருந்தேன். கார் ஓட்டிகொண்டே

“ஆமா, ஆமா முக்கியமான விஷயத்துலாம் சொல்லிடாதீங்க. அப்பரம் வீட்டுல ஏதாச்சு நடந்தா...உனக்கு தெரியாதா...நீயும் இந்த வீடுல தானே இருக்கேனு...ஒன்னு சொல்வீங்க...” என்றேன் கோபத்துடன்.

அம்மா: சொல்லிட்டேனு நினைச்சேன்....

நான்: அது எப்படி நினைக்க முடியும்...மறந்துட்டேனு சொல்லுங்க...

maid agency வந்து அடைந்தோம். அவர்கள் இருவரும் மட்டுமே உள்ளே சென்றனர். கார் பார்க் செய்ய இடமில்லாததால் நான் வேறு இடத்திற்கு சென்று கார் நிறுத்தினேன். காரில் நான் உட்கார்ந்து தோழிக்கு ஸ் எம் ஸ் அனுப்பி கொண்டிருந்தேன்.

25 நிமிடம் கழித்து அம்மா ஃபோனில் அழைத்தார்....

அம்மா: காயத்ரி, கார அங்க எங்கயாச்சும் பார்க் பண்ணிட்டு இங்க வா.

நான்: why?

அம்மா: இங்க ஒரு பொண்ணு இருக்கா....வந்து இந்த பொண்ண பாரு.

எனது மனம்: ஆஹா, மாப்பிள்ள பாக்க வேண்டிய வயசுல என்னைய போய் பொண்ண பாக்க வைக்குறாங்களே! என்ன கொடுமை விநாயகா இது!

நான்: பொண்ணா? நானா? நீங்களே decide பண்ணுங்க...நான் வந்து என்னதான் பண்ண போறேன்.

ஃபோனை வைத்துவிட்டேன். 2 நிமிடம் கழித்து அப்பா அழைத்தார். சரி இந்த தடவையும் ‘பிகு’ பண்ணா, சோறு கிடைக்காது என்று நினைத்து.. அவர்கள் சொன்ன இடத்திற்கு சென்றேன். ஒருத்தர் நின்று கொண்டிருந்தார். ரொம்ப சின்ன பொண்ணு மாதிரி இருந்தாங்க..

அம்மா: இவங்க தான். நீ ஏதாச்சு கேள்வி கேட்கனும்னா கேட்டுக்கோ.

அந்த பொண்ணை பார்த்து

“நீங்க எந்த ஹீரோவோட ரசிகர்?” என்று கேட்க வாய் துடித்தது. ஆனால் சொற்களை முழுங்கி கொண்டு

நான்: ஐயோ நான் என்ன கேட்க.... ஒன்னுமில்ல...

என்று சொல்லியபடி அவரை பார்த்து சிரித்து வைத்தேன். பதிலுக்கு அந்த பொண்ணும் சிரித்தார்.

வீட்டில் எத்தனையோ துடைக்க வேண்டிய fanகள் இருந்தாலும், அசைக்க முடியாத மூன்று fanகள் உள்ளன

அஜித் fan- என் அக்கா
விஜய் fan- நான்
சிம்பு fan- என் தங்கச்சி...

புதுசா வரவங்க எந்த கட்சியில சேர போறாங்கன்னு தெரியல...let's wait and watch :)

Jan 1, 2009

Ups & Downs of my 2008

சென்ற வருஷத்துல கொஞ்ச சாதனை, கொஞ்ச கஷ்டங்கள். படிப்புன்னு சொல்ல போனால், எப்பவுமே கில்லி தான். இதே மாதிரி செஞ்சுட்டு வந்தா, நல்லா இருக்கும். என்ன ஒன்னு, அதுக்கு ரொம்ப ரொம்ப கஷ்டபடுனும். இந்த பரிட்சை நேரத்த நினைச்சாவே, படு காண்டாக்கீதுப்பா!

சந்தோஷமான தருணங்கள்-
2008ல நான் சாதிச்சது பாத்தீங்கன்னா... 150வது போஸ்ட் வலைப்பூவில். keyboard கத்துகொண்டது. யோகா செய்ய தொடங்கியது. அப்பரம்....ம்ம்ம்... வாழ்க்கையில செமையா கொண்டாடிய என் தோழி ஒருத்தியின் பிறந்தநாள் கொண்டாட்டம். என் weightயை சீராக வைத்திருப்பது. தேசிய கிரிக்கெட் அணியில் சேர்ந்தது....

கஷ்டமான தருணங்கள்:
காலில் muscle fibre torn ஆனது. கை வலி. இப்படி நிறைய உடல்நல குறை ஏற்பட்டது. ஆபரேஷன் வரையில் செல்ல வேண்டியதா போச்சு. ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன். நிறைய மாதங்கள் வலைப்பூ பக்கமே வரவே இல்ல! வீட்டில் பல கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு, அதனால் நிறைய பிரச்சனைகள், மனவேதனைகள். இதனாலேயே, கிரிக்கெட் அணியிலிருந்து என்னை விலக சொன்னார்கள். இப்படி நான் ஆசைப்பட்டது என் கையைவிட்டு போனது.

எல்லாம் வருடமும் நல்லா இருக்கவேண்டும் என்பதே ஆசை. அத்தனைக்கும் ஆசைபடுவோமே! :) புத்தாண்டு வாழ்த்துகள் என் வலைப்பூவுக்கு... உங்களுக்கும்!

Dec 31, 2008

சந்தோஷமா இருந்துச்சுப்பா....

சென்ற சனிக்கிழமை நெருங்கிய தோழியின் பிறந்தநாள். ஒரு மாசத்துக்கு முன்பே ஃபோன் செய்திருந்தாள்.


தோழி: ஏய் காயு, 27th அன்னிக்கு ஒரு mini bthday celebration வச்சுருக்கேன். வந்துடு தெரியுமா. அப்பரம் ஒரு small request. நீ எதாச்சு performance போடனும்.


நான்: performanceஆ??? என்ன செய்யனும்?


தோழி: ஏதாச்சு பண்ணு.

நான்: ஏதாச்சுன்னு, கோழி பிரியாணி எப்படி செய்யனும்னு காட்டவா?


தோழி: ஆண்டவா!! இந்த புள்ளைக்கு நல்ல புத்திய குடு!


நான்: சரி சரி, அதலாம் இப்ப stockல இல்ல....



தோழி: டேய், உன் கவிதைய ஒன்னு வாசி. super performanceaa இருக்கும்!



அவள் சொன்னது முதல் எனக்கு வயிறு கலக்கல்ஸ் ஆரம்பித்துவிட்டது. எழுத சொன்னால் எழுதிவிடுவேன். ஆனா அதை பல பேர் முன்னிலையில் படித்து காட்டுவது எல்லாம் வாழ்க்கையில் செய்யாத ஒன்று. சரி முயற்சி செஞ்சு பார்ப்போம் என்று கிளம்பினேன் 27th அன்று. முதல் நிகழ்ச்சியே என்னுடையது தான். அதற்கு பிறகு தான் மத்த நண்பர்களின் பாடல், ஆடல்.


குரல் சற்று தயக்கத்துடனும், கைகால் ஒருவித படபடப்புடனும் மைக்கை பிடித்தேன். 50 மக்களின் பார்வைபட தொடங்கினேன்,



அழகான கவிதை ஒன்று
எழுத சொன்னால்
எழுதியிருப்பேன்
அழுகுக்கு ஒரு கவிதை
எழுத சொன்னால்
என்ன எழுதுவேன்?


உன்னை பற்றி எழுத தமிழில்
வார்த்தைகள் பஞ்சம்
எனினும் இயற்றுகிறேன்
என்னால் இயன்ற கொஞ்சம்.



சூர்யா ஜோதிகாவுக்கு
நீ எத்தனையாவது
ரசிகை என்று
எனக்கு தெரியாது
ஆனால்
உன்னுடைய முதல் ரசிகை
நான்!


நான் தூளாக துவண்டிருந்தபோது
எனக்கு தூணாக துணையாயிருந்தாய்
இந்த தேவதையை உலகிற்கு அனுப்பிய
இறைவனுக்கு
பல கோடி நன்றிகள்



வள்ளுவன் இருந்திருந்தால்
உன்னை பார்த்தபிறகு
1330 குறட்களையும் உதறிவிட்டு
உன்னை பற்றியே பல லட்சம்
குறட்களை எழுதியிருப்பான்


கம்பன் இருந்திருந்தால்
உன்னை கண்ட பிறகு
பல்லாயிரம் காவியங்களை
படைத்திருப்பான்.


அவர்கள் பாவம் செய்தவர்கள்
உன்னை பற்றி எழுதமுடியவில்லை.
நான் புண்ணியம் செய்தவள்
இங்கு உன்னை பற்றி மட்டுமே
எழுதுகிறேன்.



நண்பர்கள் டாப் 10 வரிசையில் இனி
உனக்கும் எனக்கும் மட்டுமே
முதல் இடம்!
நட்பின் ஆஸ்கார் விருது உனக்கே
உனக்கு!



தளபதி ரஜினி மம்மூட்டி
நட்புக்காக விஜயகுமார் சரத்குமார்
காதல் தேசம் அப்பாஸ் வினித்
பட்டியல் ஆர்யா பரத்,
இப்படி நட்புக்காக வாழ்ந்தவர்கள்
வரிசையில்
உன் பெயரையும்
என் பெயரையும்
சேர்த்து கொள்வோம்!


அம்மா அடித்தால் வலிக்கும்
அப்பா அடித்தால் வலிக்கும்
அண்ணன் அடித்தாலும் வலிக்கும்
‘சைட்’ அடித்தால் வலிக்காது
என்ற தாரக மந்திரத்தை
எனக்கு கற்றுகொடுத்த
குருவே,
நீ வாழ்க!
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

சொல்லிமுடிப்பதற்குள் எல்லாரும் கைதட்டி விசில் எல்லாம் அடிச்சாங்கப்பா! தோழியின் அம்மா ஓடி வந்து கட்டிபிடித்து பாராட்டி தள்ளிட்டாங்க! வாழ்க்கையில என் கவிதைக்கு இப்படி ஒரு நேரடி பாராட்டு கிடைத்தது இதுவே முதல் முறை. வலைஉலகில் மட்டுமே திரிந்து கொண்டிருந்த என் கவிதைக்கு இந்த பாராட்டுகளுக்கு என்னை பிரமிக்க வைத்தது!

Dec 17, 2008

6 வயதில் ’கண்கள் இரண்டால்’....

நேத்திக்கு keyboard வகுப்புக்கு போயிட்டு வந்து ரொம்ப demotivated ஆயிட்டேன். நான் ரொம்ப slow learner தான். ஒத்துக்கிறேன். டீச்சர் உனக்கு "ரிதமே வராது” அப்படின்னு சொல்லிட்டு கிளம்பிபோயிட்டாங்க. music pieces எல்லாமே முன்னாலே கத்துகிட்டு வந்து அப்பரம் அவங்கிட்ட வாசிக்கனுமாம். அதுக்கு எதுக்கு டீச்சர்!

சரி அவங்க ஏதோ கோபத்துல பேசிட்டாங்கன்னு நானும் வீட்டுக்கு கிளம்பிவந்து விட்டேன். நான் எனக்கே inspiration தேடி கொள்வது youtube வீடியோக்களை பார்த்து தான்!

அந்த 6 வயசு பாலாஜி வாசிப்பை பார்த்து, எனக்குள்

“ச்சே....நீ கத்துக்கு வேண்டியது நிறைய இருக்கு. இந்த ஜன்மத்துக்குள்ள grade 8 வாங்கி ஒரு கலக்கு கலக்குற!” என்றது மனசு.:)

Aug 12, 2008

அக்காவுக்கு பிடிக்காத நடிகர்

போன வாரம் நான், என் அக்கா, எங்க தோழன் மூவரும் அஞ்சப்பர் கடைக்கு சாப்பிட போனோம். அவங்க இரண்டு பேரும் தான் சாப்பாடு ஆர்டர் பண்ணாங்க... எனக்கு இருந்த பசி மயக்கத்துல ஒன்னும் புரியல்ல...

சாப்பாடு வந்துடுச்சு... நான் என் வேலைய ஆரம்பித்தேன். சாப்பிட்டு கொண்டிருந்தபோது, தோழன் திடீரென்னு கேட்டேன் "என்ன காயத்ரி,3 வருஷமா காலேஜ் படிக்குற.. boyfriend எவனாச்சு இருக்கானா?" என்று கேட்டான்.

நான் வாயில் கோழியை அமுக்கி கொண்டே "ஆமா, இருக்கான்" என்றேன். அக்காவுக்கு ஒரே ஷாக்!

"விஷால் தான் என் boyfriend" என்றேன் நான்.

"அட த்தூதூதூ...." என்று ஒரு சத்தம் கேட்க, தட்டில் இருந்த என் பார்வை எதிரில் உட்கார்ந்து இருந்த என் அக்காவிடன் சென்றது. அக்கா தான் துப்பினாள்.

"என்ன ஆச்சு"

"எனக்கு பிடிக்காத ஒரு நடிகன்னா, அது விஷால் தான்" என்றாள் அக்கா! இப்போ எனக்கு ஒரே ஷாக்! விஷால பிடிக்காத ஒரு பொண்ணா???

பிடிக்காததற்கு காரணங்களை அடுக்கி கொண்டே போனாள்.

எனக்கு பிடித்ததற்கு காரணங்களை அடுக்கி கொண்டே போனேன்.

தோழன் எங்க சண்டையை ரசித்து பார்த்து கொண்டிருந்தான்.....

Aug 4, 2008

மாப்பு, வச்சுட்டாங்கய்யா ஆப்பு!

இந்த வாரம் புது timetable. நிறைய மாற்றங்களுடன்! திங்கட்கிழமை அன்றைக்கே எனக்கு ஆப்பு starting... காலையில 1030 முதல் மதியம் 330 வரைக்கும் வகுப்புகள்... எந்த ஒரு break இல்லாமல்! எப்படிய்யா முடியும்?
அப்ப நான் எத்தன மணிக்கு சாப்பிடுறது?? என்ன கொடுமை சார் இது?

வியாழக்கிழமை காலை 1130 முதல் மாலை 530 வரைக்கும் வகுப்புகள்! நான் யாருக்கு என்ன பாவம் செஞ்சேனோ!! உஷ்.... யப்பா!! முடியல என்னால...

Jul 29, 2008

அடுப்பூதும் பெண்களுக்கு கிரிக்கெட் எதுக்கு?


நான் கிரிக்கெட் விளையாடுறேனுங்கோ!!!!!!!!!!!!!!!!!


ஒரு மாதமா training போயிகிட்டு இருக்கேன். ரொம்ப நாளா ஒரு குழுவுல சேர்ந்து கிரிக்கெட் விளையாடனும்னு ஆசை! ஆறாவது படிக்கும்போதே, என் மாமா இந்த விளையாட்டை பத்தி என்கிட்ட சொன்னார். அன்று முதல் இந்த விளையாட்டின் மீது அவ்வளவு ஆசை! badminton/shuttle cock விளையாடும்போது, அதை வைத்து கிரிக்கெட் விளையாடி பார்ப்பேன் சரியான பேட் இல்லாமல்.

அதுக்கு அப்பரம் 9வது படிக்கும்போது, காற்பந்து விளையாட மோகம் ஏற்பட்டது. டேவிட் பெக்கம் மீது பயங்கர craze. அப்போது காற்பந்து உலக கோப்பை நடந்தது, bend it like beckham படம் வெளியானது. இப்படி போக, பள்ளியில் எங்க வகுப்பு மாணவிகள் அனைவரும் பள்ளி முடிந்து காற்பந்து விளையாட தொடங்கினோம். அப்போது
சிங்கை பெண்கள் காற்பந்து அணியில் சேர வாய்ப்பு கிடைக்க, என் வகுப்பு மாணவிகள் 5,6 பேர் கிளம்பினோம். கொஞ்ச நாள் தான் போக முடிந்தது. அதுக்கு மேல் தொடர வேண்டாம், படிப்பு கெட்டு போகும் என்று பெற்றோர்கள் நினைக்க, அதை விட்டுவிட்டேன்.

இப்போது, சிங்கை பெண்கள் கிரிக்கெட் அணியில் சேர்ந்து ஆடும் ஒரு நல்ல வாய்ப்பு வந்துள்ளது.கடந்த ஒரு மாதமா training போய்கிட்டு இருக்கேன்.ரொம்ம்ம்பபப சூப்பரா போகுது. அங்கு வந்து பாக்கனுமே, நம்ம இந்திய பெண்கள் எல்லாம் என்னமா அருமையா விளையாடுறாங்க.

முதல் நாள் அங்கு சென்று பிரமித்துபோனேன். பெண்களுக்குள் இப்படிப்பட்ட அற்புதமான திறமையா என்று நினைத்து பெருமைப்பட்டேன். off spinner நான். ஆக அதுக்கு ஏற்றாற்போல் சில பயிற்சிகளை பயிற்சிவிப்பாளர் சொல்லி கொடுத்தார். சக விளையாட்டாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை இருக்கு.


லட்சுமி என்று ஒருவர் இருக்கிறார். இங்கு சிங்கையில் கொஞ்ச காலமாக வேலை பார்த்துவருகிறார்.இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட் அணியில் இருந்தவராம். சூப்பர்ர்ர்ர் spin bowler. ரொம்ப நல்ல நுனக்கமான விஷயங்களை அறிந்தவர். எங்களுக்கு சொல்லி கொடுக்கும் விதமும் நல்லா இருக்கும். angela என்பவர் ஒருவர் இருக்கிறார். இவர் part time lecturer. இரண்டு குழந்தைகளுக்கு அம்மா! பார்த்தால் அப்படி தெரியாது. ஏதோ காலேஜ் இரண்டாம் ஆண்டு படிக்கும் பொண்ணு மாதிரி இருப்பாங்க. அப்பரம் 14 வயது பொண்ணு, தனம், ரொம்ம்ம்பப innocent. ஆனா fast bowling போடுவா பாருங்க... பயங்கர வேகத்தில் போடுவாள்!

கிரிக்கெட் விளையாடுவது ஒரு பக்கம் இருக்க, நிதானமாக விளையாடும் ஆற்றல் வேண்டும். அதைவிட கிட்டதட்ட 20 ஓவர்களுக்கு fielding செய்யும் உடல்வலிமை தேவை. அதற்கு fitness level அதிகமாக இருக்கவேண்டும். இப்படி பல விஷயங்களை கற்று கொண்டு வருகிறேன். நிறைய சர்வதேச அளவில் பெண்கள் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளில் நடக்கின்றன (நிறைய பேருக்கு இது தெரிவது இல்ல)மலேசியாவில், தாய்லாந்தில், சீனாவில் என பல போட்டிகள் நடைபெறுகின்றன.

நானும் நாளைக்கே ஒரு போட்டியில கலந்துகிட்டு hatrick எடுத்து, woman of the match ஜெயிச்சு, டீவி, பேப்பர்ல நம்ம போட்டோ வந்து, 10 பேரு autograph வாங்கும் நிலை வரும். அப்பரம்.. என் பேரும் வரலாற்றுல இடம்பெற வேண்டாமா!

இருந்தாலும்,அம்மாவுக்கு இதுல அவ்வளவா உடன்பாடு இல்ல! training இரண்டு நாள். டைம வேஸ்ட் பண்ணுறே என்றார்கள். காலேஜ், படிப்பு கெட்டுபோயிடும் என்கிறார்கள். "நம்ம இந்திய பிள்ளைகளுக்கு படிப்பையும், விளையாட்டையும் balance பண்ண தெரியாது. விளையாட்டுன்னு போனா, படிப்புல கவனம் இல்லாம போயிடுங்க" என்றார். ம்ம்ம்ம்... என்னத்த சொல்ல,அடுப்பூதும் பெண்களுக்கு கிரிக்கெட் எதுக்கு? என்று நினைக்கிறார்கள் என்னவோ.

Jul 20, 2008

அடங்க மாட்டீயா நீ- என் 150வது பதிவு

"ஏய், அடங்க மாட்டீயா நீ!" என்றது என் உள்மனம் உற்சாகத்திலும் சந்தோஷத்திலும். இது என் 150வது பதிவு!! என்னமோ பெரிய சாதனை செய்துவிட்டதாக நான் பெருமிதத்தில் தத்தளிக்க, என் மனம் என்னை அடக்கியது! :)) இது அவ்வளவு பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம் பலருக்கு. ஆனால், என்னை பொறுத்தவரை நான் வாழ்க்கையில் உருப்படியாக செய்து மிக சில விஷயங்களில் இதுவும் ஒன்று!

சற்று வரலாற்றை புரட்டி பார்த்தால்(சரி முறைக்காதீங்க.... ), நான் எப்படி இந்த வலைப்பூ உலகிற்குள் வந்தேன்? என்று எனக்கே சற்று வியப்பாகத்தான் உள்ளது. முதன்முதலில் என் தோழி (australiaவில் படித்து கொண்டிருக்கிறாள்..) 4 வருஷத்துக்கு முன்னாடி இருக்கும்....

MSN chatல் பேசி கொண்டிருக்கையில் ப்ளாக் பற்றி சொன்னாள். என்னையும் எழுத சொன்னாள்.

எனக்கு அதில் விருப்பம் இல்ல. என்னத்த எழுதி அத மத்தவங்க படிச்சு.. என்று நான் ஆர்வம் காட்டவில்லை. அப்பரம் அவள் ரொம்பவே கட்டாயப்படுத்தி எழுத சொன்னதால், ஒரு வலைப்பூவை ஆரம்பித்தேன் ஆங்கிலத்தில். எப்பவாவது ஒரு முறை எழுதுவேன். பிறகு, ஒரு நாள் முற்றிலுமாக மூடிவிட்டேன். எழுதுவதை நிறுத்திவிட்டேன்.

மறுபடியும் அவள் ஆரம்பித்தாள். அப்போது நான் +2 முடித்த காலக்கட்டம். அந்த வருஷத்தில் ரொம்ப பெரிய வேதனைகள், சோகங்கள். என் மனத்திற்கு ஒரு வடிகால் தேவைப்பட்டது.. டைரி எழுத ஆரம்பித்தேன். அதையே வலைப்பூவில் எழுதினேன் ஆங்கிலத்தில். அதன் பிறகுதான் வலைப்பூவை ரசிக்க ஆரம்பித்தேன்.

ப்ரியன் நட்பு கிடைத்தது. அதுவரைக்கும் தமிழ் இணைய உலகம் பற்றி தெரியாது.அவர் மூலம் அன்புடன் குழுமத்தில் அறிமுகமானேன். அப்பரம் பல தமிழ் இணையதளங்கள், தமிழ் வலைப்பூக்களை படிக்க ஆரம்பித்தேன். என் சிந்தனை விரிவடைந்தது.


நம்ம ஏன் தமிழ் வலைப்பூ ஒன்றை ஆரம்பிக்ககூடாது என்று என் மனம் கேட்டது. சரி எழுதி பார்ப்போம் என்று தொடர்ந்தேன். அங்க ஆரம்பித்த பயணம் இதுவரைக்கும் நீடித்து இருக்கு. இதன் இடையில் எத்தனையோ முகம் தெரியாத நட்புகள், பாசத்தை காட்டும் அண்ணன்கள், அக்கறை கொண்ட அக்காக்கள், என்னைய கிண்டலடித்து உற்சாகம் ஊட்டும் சித்தப்பாக்கள்... என்று எனக்கென்று ஒரு இணையகுடும்பம்/நண்பர்கள் இன்றைய அளவில் இருக்கிறார்கள் என்று நினைக்கையில் மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.

ப்ளாக் எழுத தூண்டிய தோழிக்கும், தமிழ் இணைய உலகிற்கு அறிமுகம் செய்துவைத்த ப்ரியனுக்கும், அன்புடன் குழுமத்திற்கும் நான் ரொம்பவே நன்றிகடன் பட்டிருக்கிறேன்!! :)) உங்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி!!

என் வலைப்பூவை படிக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள்! நான் எழுதுவதை ரசித்து என்னை ப.பா சங்கத்தில் சேர்த்த மை ஃபிரண்ட்க்கு என் நன்றிகள்!


இப்போ சமீபத்தில் புதுசா ஜோக்ஸ்களுக்காகவென்றே ஒரு வலைப்பூ ஆரம்பித்து உள்ளேன். இப்படி ஒவ்வொரு முன்னேற்றித்திருக்கும் தூணாக நின்றவர்களுக்கு கோடி நன்றிகள்!::)

முக்கியமா என் பள்ளி, கல்லூரி நண்பர்களுக்கு என் நன்றிகள்! நான் கிறுக்கிய கவிதைகளை புத்தகமா போடுறேண்டி என்று சபதம் எடுத்து கொண்டு திரியும் ஒரு பள்ளி தோழி இருக்கிறாள், அவளுக்கும் என் நன்றிகள். இத்தனை இருந்தாலும்... ஏதோ ஒரு சின்ன வருத்தம்.


நான் எழுதுவது என் வீட்டில் யாருக்கும் தெரியாது. இன்றைய அளவிலும்கூட chatting, blogging, orkut என்பது கெட்ட விஷயங்களாகவே நினைத்து கொண்டிருக்கையில் நான் எழுதுவதை பலமுறை சொல்லமுற்பட்டு பயத்தால் சொல்லாமலேயே இருந்துவிட்டேன். கவிதை/கதை எழுதுவதுகூட தெரியாது. :((

அப்பரம் பொண்ணு காதல் கவிதை எழுதுறான்னு தெரிஞ்சு அவங்க என்ன ஃபீல் பண்ணுவாங்க... எப்போ சொல்வேன் என்று தெரியவில்லை. ஒரு வேளை 40 வருடம் கழித்து

"டேய் பசங்களா இங்க வாங்க... this is ur grandma's blog" என்று என் பேரன் பேத்திகளிடம் சொல்வேனோ என்னவோ!:))

------------------------------------------

சரி இருக்கட்டும். நடப்பதே நடக்கட்டும்!:)

150 போஸ்ட்களில் எனக்கு பிடித்த 7 போஸ்ட்கள் :

1) மாமோய்-குட்டி கிறுக்கல்கள்


2) ஜில்லுனு ஒரு காதல்


3) நான் நியூட்டனா புத்தனா?


4) நான் எழுதியதில் எனக்கு பிடித்த கதை- அத்தை மகன் சிவா

5) என்னை கொள்ளையடித்த கள்வனே

6) பச்சை தண்ணி வித் பறக்கும் குருவி விஜய்

7) தேனீர் வித் வைரமுத்து

Jul 1, 2008

போகாதே நண்பா!

இன்று காலையில் நண்பன் லீவுக்காக துபாய் சென்றுவிட்டான். அவன் தந்தை அங்க வேலை பார்க்கிறார். நண்பனும் அவன் அம்மாவும் இன்று காலையில் சென்றனர். மூன்று வாரம் அங்க இருப்பான். நேத்திக்கு ஃபோன் பண்ணி, "happy holidays. happy journey." என்று சொன்னேன். கொஞ்சம் சோகமா போயிட்டேன். என்னோட best fren, best pal, என்கூட பிறக்காத தம்பி என்றே சொல்லலாம்.

எனக்கு தம்பி இல்லையே என்று நான் எண்ணியதுண்டு. ஆனா, +1 படிக்க போனபிறகு, அந்த குறையை தீர்த்து வைத்தவன். ரொம்ப நல்லவன்! அவனை எனக்கு +1 முதல் தெரியும். ஒன்றை நான் அடிக்கடி சொல்வேன் - எனக்கு தமிழில் ஆர்வம் வந்ததற்கு காரணமே தோழன் தான். ஒரு நாள் பள்ளிக்கு அவன் எழுதிய சில தமிழ் கவிதைகளை கொண்டு வந்து கொடுத்தான். படித்து பார்த்து பிரமித்துவிட்டேன். சீரியஸான விஷயங்களை காமெடியாக எழுதியிருந்தான் அழகு தமிழில். அட நம்ம நண்பனா, கவிஞன் என்று ஆச்சிரியப்பட்டேன். நம்மகூடவே சும்மா அரட்டை அடிச்சு சுத்தி திரிஞ்சுகிட்டு இருந்தவனுக்குள்ள இப்படி ஒரு திறமையா என்று வியந்துவிட்டேன்.

அப்போது அவன் சொன்னான் "ஏன் நீயும் எதாச்சு எழுது, உனக்கும் நல்லா வரும்." என்று சொன்னதால், நான் போய் அன்றிரவே ஏதோ ஒன்று எழுதினேன். அப்படி ஆரம்பித்தது என் முதல் கவிதையும் எனக்குள் இருந்த தமிழும். எனக்கு குரு அவன் தான்!

அதுக்கு அப்பரம் எத்தனையோ சமயங்களில் எனக்கு ஊக்கம் கொடுத்திருக்கிறான்.. செம்ம ஜாலியான ஆளு. இரண்டு நாளைக்கு ஒரு தடவ ஃபோன் பண்ணி பேசுவான். சொல்ல போனால் என்னோட energy booster அவன் தான்! அப்படி ஒரு தோழனை மூன்று வாரம் பார்க்க முடியாது என்று நினைக்கையில் கொஞ்சம் கஷ்டமா இருக்கு... ம்ம்ம்...