Feb 28, 2007

எப்போதும், ஏன்?

கூட்ட நெரிசல்
எவ்வளவு இருந்தாலும்
கண்கள் அலை பாயும்!

நமக்கு ஏற்ற வயது பையன்களை
விட்டு வைப்பதில்லை நமது பார்வை
காரில் பயணம்
கண்ணாடி வழி
காதல்!

பேருந்தில் பயணம்
பக்கத்து சீட்டில்
காதல்!

இரயிலில் பயணம்
கம்பி பிடித்து
காதல்!

சாலை கடந்து போகையில்
திரும்பி பார்க்க வைக்கும்
காதல்!

நிலைமை

சல்மான் கான்
விவேக் ஒப்ராய்
இதற்கு பின்பு தான்
அமிஷேக் பச்சனே
ஐஸ்வர்யா ராயுக்கு!

முதல் காதல் உடைய
இரண்டாம் காதல் கரைய
முன்றாவது முறைதான் முழு நிலவாய்!
உலக அழகிக்கே இந்நிலைமை
உள்ளூர்வாசி நமக்கு எந்நிலைமையோ?

Feb 18, 2007

தீபாவளி- படவிமர்சனம்

பொங்கலுக்கு வராத தீபாவளி போன வாரம் வந்தது! இந்த படத்துக்கு நிறைய எதிர்பார்ப்பு வச்சுருந்தேன். ம்கூம்.. எல்லாம் புஷ்பவனவெடி மாதிரி புஷ்னு போச்சு!

hero- jayam ravi
heroine- bhavana
director-ezhil
producer- llingusamy
music-yuvan shankar raja

கதையினு பார்த்தா.. மூன்றாம் பிறை கதைய கொஞ்சம் பிச்சி போட்டு colourful dance, youthful actors போன்ற மசாலா கலவைய போட்டு செஞ்ச ஒரு படம். திரைக்கதையில் எந்த ஒரு புதுமையும் இல்லை. சென்னை ராயபுரம் ஏரியாவை மையமா வச்சு கதை எழுதுனாங்களாம். ஆனா, அந்த ராயபுரம் இடத்துக்கு எந்த ஒரு சீனிலையும் முக்கியத்துவம் கொடுத்த மாதிரி தெரியல. இதுல வேற.. இந்த படக்கதையை கேட்டவுடன் ஜெயம் ரவி உடனே ஒகே பண்ணிட்டாறாம்.. வேற எந்த படத்தையும் ஒப்புக் கொள்ளவில்லையாம். (யோவ், ஏன்ய்யா, உனக்கு இந்த அவசர புத்தி... அது சரி, உன் தலைஎழுத்த யாரு மாத்த முடியும்)

படம் ஆரம்பித்தவுடனே, கதை தெரிந்தவிட்டது. 1st half படு போர்! 2nd half கொஞ்ச எதோ பரவாயில்ல. climax எதிர்பார்த்தது போலவே! புதுமை ஒன்னுமே இல்ல. எப்படா படம் முடியுமுனு இருந்துச்சு. தெரியாத்தனமா வந்துடோமேனு ஒரே feeling வேற....

அதவாது.. படம் பார்க்க் வர நாங்களாம் கேனு பயபுள்ளைங்கனு இந்த படம் எடுத்தவன் நினைச்சுரு பாருங்க.. அதான் என்னால தாங்க முடியல. logic இல்லாமலேயே படம் போகுது. அப்பா விஜய்குமாருக்கும், மகன் ரவிக்கும் அந்த ஏரியா மக்களே உயிரை கொடுக்க இருக்காங்க! எதுக்குனே தெரியல...
ரகுவரன் டாக்டரா வராரு! பவானவுக்கு உள்ள வியாதியை விளக்கும்போது.. சிரிப்பு வருது... மூன்று வருஷமா நடந்தது மறந்துடுச்சு.. ஆனா ஞாபகம் திருப்பி வந்தா இப்போ 6 மாசம் நடக்குறது மறந்துடுமாம்!! ( மொத்தில் எப்படி பார்த்தாலும் வியாதி வியாதி தான்... ஐயோ தாங்கல சாமி)

சரி நடிப்பு பொறுத்த அளவில்.. பாவனா பரவாயில்ல.. அழுகும்போது நல்லா நடிக்குது புள்ள! அப்பரம்.. ஒரு டயலாக் சொல்லும் " சரி வாடா, தப்பு பண்ணலாமா?" இந்த இடத்தில் பாவனா அந்த cute and naughty expression கொடுத்து நல்லா நடிச்சு இருந்துச்சு! ஜெயம் ரவி நடிப்பு... சொல்லும்படி ஒன்னுமில்ல. சென்னை தமிழ் பேசுகிறார். ஒரு சமயம் சென்னை தமிழ், மற்ற நேரத்துல.. சதாரண தமிழ் பேசுகிறார். ஒரு சீரோட்டம் இல்லாத டயலாக் delivery! not good! ஆனா ஒரே ஒரு ஆறுதல், (பாவனா கதாபாத்திரம் பெயர் சுசி), ஜெயம் ரவி பாவனாவை "சுசி, சுசி" என்று கூப்பிடும்போது... ரொம்ப அழகா இருக்கு கேட்பதற்கு!

பாடல்கள்... அவ்வளவு பிரமாதமில்ல.. "போகாதே, போகாதே" பாடல் மட்டுமே படம் பார்த்து முடித்துவிட்டு வரும்போது முணுமுணுத்து கொண்டே இருந்தேன். யுவன் பாடிய பாடல். கேட்க ரொம்ப அருமையா இருக்கு. பாடல் வரிகள் அப்படியே ஒரு நல்ல கவிதை மாதிரி இருக்கு. இங்க ஒரு வரி வரும் 'உயிரே, உயிர் போகுதடி"! இந்த வரியை பாடும்போது யுவன் ஒரு feel கொடுத்து இருப்பாரு பாருங்க... உருகிபுட்டேன் நான்!!

மற்றபடி, வில்லன், காமெடி... சிறப்பா இல்ல. லுங்குசாமி தயாரித்த படம். ஆனாலும் இவர் படங்களில் வரும் வில்லன் பாணியே இப்படத்தில் இருக்கு... எனக்கு என்ன புரியலைனா.. படம் வருவதற்கு முன்னாடி, ஒரு செய்தித்தாளில் படித்தேன் இந்த படத்தை பற்றி " இப்படம், இன்னொரு கஜினி மாதிரி இருக்கும்! என்று. (அட பாவிகளா.. இந்த விஷயம் சூர்யா கேட்டா இவ்வளவு பீல் பண்ணுவாரு!! )

உங்களுக்கு எந்த வேல வெட்டி இல்லை என்றால் மட்டுமே இப்படத்தை போய் பாருங்க. நல்ல படம் பார்க்கனும் என்று நினைப்பவங்க, தப்பி தவறிகூட போய்டாதீங்க...இப்படி சொல்லியும் நீங்க போனிங்கனா... அப்பரம் உங்க வாயில நீங்களே acid ஊத்திக்கிறீங்கனு அர்த்தம்.

மொத்ததில் தீபாவளி- தீராத தலைவலி
(பட பேஜாராகீதுப்பா!!)

Feb 14, 2007

பிப்ரவரவி 14

மற்றவர்கள் அனுப்பிய
அன்பர் தின வாழ்த்துகளிடையே
நீ அனுப்பிய காதலர் தின வாழ்த்து
அழகாய் தெரிந்தது
எனது செல்போனில்.
--------------------------------------**-----------------------------------

அது என்ன
இன்றைக்கு மட்டும்
நீயும் நானும்
அதிகமாய் நேசிக்கப்படுகிறோம்
என்றது
ரோஜா பூக்களும்
வாழ்த்து அட்டைகளும்!!
-----------------------------------**-------------------------------------

நீ காதலிப்பவனுடன் வாழ்ந்தால்
பிப்ரவரவி 14 மட்டும்தான் காதலர் தினம்
உன்னை காதலிப்பவனுடன் வாழ்ந்தால்
என்றென்றும் காதல் தினம் தான்!
------------------------------**-----------------------------------------
காகிதத்தில் முத்துமுத்தாய்
நீ எனக்கு எழுதிய
கவிதைகளைவிட
கன்னத்தில்
முத்தமாய் இட்ட
கவிதையே இனிக்கிறது!!
-------------------------------**-----------------------------------------