Mar 27, 2017

கடுகு- சிறுத்தாலும் காரம் குறையாது .

"யாராச்சு நம்மகிட்ட ஹாய்...  சாப்பிட்டீயா? தூங்கினீயா?னு கேட்க மாட்டாங்களானு ஏங்குறோம். அதனால தான் இந்த facebook whatsappலலாம் அவ்வளவு கூட்டம்"

ஏன் என்று தெரியவில்லை. படத்தில் இந்த வசனம் வந்த மறுநொடியே என் கண்களிலிருந்து கண்ணீர் பொல பொலவென்று வழிந்தது. இப்படி மனசை தொடும், வருடும் பல வசனங்களை தூவி விட்டு இருக்கிறார் இயக்குனர் விஜய் மில்டன்.




பிழைப்பதற்காக கிட்டதட்ட ஒரு எடுபிடி போல் காவலதிகாரியுடன் இன்னொரு ஊருக்கு வரும் புலிபாண்டி (ராஜ்குமார்) வாழ்க்கையில் என்ன நடக்கிறது என ஒரு வரியில் சொல்ல கூடிய கடுகு அளவு கதையில் மிக பெரிய பலமே இயக்குனர் தேர்வு செய்த நடிகர்கள் தான். இப்படி ஒரு நடிகர் தேர்வை கனவில்கூட எதிர்பார்த்து இருக்க மாட்டோம். ஆனா, இவர் தான் இதுக்கு பொருத்தமா இருப்பார் என்று அசூர அளவு நம்பிக்கை வைத்த இயக்குனர் விஜய் மில்டனை பாராட்ட வார்த்தை இல்லை.

'character-driven' கதையில் நடிகர்கள் கொஞ்சம் சொதப்பினால்கூட அவ்வளவு தான். அப்படி நேர்கோட்டில் பயணம் செய்த ராஜ்குமாரும் சரி, பரத்தும் சரி மிக துல்லியமாக தனது வேலையை பார்த்து இருக்கிறார்கள். ராஜ்குமார் நடித்த புலிபாண்டி கதாபாத்திரத்தில் வேறு யாரும் பொருந்தமா இருந்திருப்பார்களா என்ற கேள்வியை கேட்கும்படி அவரது நடிப்பு மிலிர்கிறது படத்தில்.

Image result for great acting quotes"ஏய்யா தப்பு பண்ணல தப்பு பண்ணல சொல்றதே பெரிய தப்பு தான்ய்யா!" என ராஜ்குமார் வாய்விட்டு அழும்போது, இவரையா நான் கிண்டல் செய்து எழுதியிருந்தேன் (திருமதி தமிழ் படத்திற்காக) என்று அறையாமல் அறைந்துவிட்டு சென்று இருக்கிறார்.  இயல்பு நடிப்பு என்பதே ஏதோ ஒரு வகையில் நமது உண்மையான சுபாவத்தை வெளிகொண்டு வருவது தான். அதனை கண்டு அறிந்து திரையில் விருந்து அளித்து இருக்கிறார் ராஜ்குமார்.


ஏதோ ஒரு விமர்சனத்தில் படித்தேன்- "புலிபாண்டி, இப்படியா ஒருத்தர் ரொம்ப நல்லவரா இருப்பார். அது தான் கொஞ்சம் நெருடலா இருக்கு."

எனக்கு ஆச்சிரியமா இருந்தது. நல்லவனை அதுவும் புலிபாண்டி போல் நல்லவனை இருப்பதுகூட இவ்வுலகில் அதிசயமா போயிவிட்டதா?  பரத் கதாபாத்திரம் போல் சூழ்நிலை கைதியாய் வாழும் அனைவருக்கும் புலிபாண்டி ஒரு அதிசயம் தான்.



பரத்- காதல் படத்திற்கு அப்பரம், ஒரு நல்ல படம். இந்த மாதிரி நடிங்க பாஸ்! உங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு.

எனக்கு மிகவும் பிடிச்சு இன்னொரு விஷயம், விஜய் மில்டன் இசைவெளியிட்டு விழாவில், எளிய மனிதர்களை வரவழைத்து அவர்களை பேச வைத்தது தான்.


இன்று காலையில் கலாய்த்து வந்த ஒரு டிவிட் படித்தேன் - "பாலா படத்த விக்ரமன் எடுத்த மாதிரி இருக்கு கடுகு"

நம்மூரில் ஒரு நல்ல படம் எடுத்தாலும், கிண்டல் செய்யும் ஆட்கள் இருக்கவே செய்கிறார்கள். அதையெல்லாம் பொருட்படுத்தாமல், தொடர்ந்து நல்ல சினிமாவை கொடுக்க விரும்பும் ஒரு சில இயக்குனர்களில் விஜய் மில்டனும் இப்போது வந்துவிட்டார்.

இப்படி மக்களுக்காகவும், மக்களின் மனதிற்கு பிடித்த மாதிரி படம் எடுத்த இந்த குழுவுக்கு, கடுகளவு இல்லை, கடலளவு நன்றி!


Mar 14, 2017

மொட்ட சிவா கெட்ட சிவா டா- இவன் முத்துராமலிங்கத்தோட அப்பா டா

(இன்று முதல் உங்கள் Makkal Reviewer என்று பெயரில் பதிவுகள் எழுதப்படும்!)

டூயட் படத்துல ஒரு காட்சி வரும். பிரபுவிற்கு ஹீரோயின் தான் கடிதம் அனுப்பி இருக்கிறார் என்று நினைத்து கொண்டு, எழுத்துக்களை 'வாசி வாசி' என்று, பிரபு வரிசைப்படுத்தி இருப்பார். ஆனா, அது வாசி வாசி, இல்ல 'சிவா சிவா' என்று அவரின் சித்தி சீதாம்மா விளக்குவார்.

அது போல  மக்கள் சூப்பர்ஸ்டார் ராகவா லாரண்ஸ் நடித்த இப்படம், வெறும்  சிவா சிவா என பொருள் எடுத்து கொள்ளக் கூடாது. அதையும் தாண்டி ஒன்னு இருக்கு. காதல் காட்சிகளால் நம்  Oxytocin எனும் love hormoneனை தீண்டி இருக்கிறார். சண்டை காட்சிகளால் நம்  neurotransmittersயை நோண்டி இருக்கிறார். நடன காட்சிகளால் நம் இதயத்தில் பாண்டி ஆடியிருக்கிறார். செண்டிமெண்ட் காட்சிகளால் நம் உள்ளத்தை இரண்டாய் பிளந்து இந்த பக்கமும் அந்த பக்கமும் தாண்டி விளையாடி இருக்கிறார்.

ஹீரோ intro காட்சியில், மக்கள் சூப்பர்ஸ்டார் ஜீப்பில் வருகிறார். அப்போது 'ஒருவன் ஒருவன் முதலாளி' பாடல் ரேடியோவில் ஒலிப்பரப்பாகிறது. தனது அரசியல் ஆசையை தெரிவிக்க இதைவிட ஒரு சிறந்த வழி யாராலும் கண்டுபிடித்து இருக்க முடியாது.  இலைகள் பறக்க, காற்று திசை மாற, அருவி கொட்ட, slow motionல அவர் நடந்து வர, ஐம்பூதங்களும் எப்படி அவருக்கு அடிமை ஆகிறதோ அப்படியே நாமும் ஐம்புலன்களையும் அவர் காலடியில் வைக்கிறோம் படம் ஆரம்பித்து 10 நிமிடங்களில். உலகத்தை மறந்து இப்படத்தை ரசிக்க தொடங்குகிறோம்.

காவல் அதிகாரியாக சேர்ந்தவுடன் முதல் கடமையாக hero introduction பாடலுக்கு செவ்வனே ஆடி முடிக்கிறார். முடித்தவுடன், நாட்டுக்கு ரொம்ப அவசியமான அடுத்த கடமையை செய்கிறார். காதல் வயப்படுகிறார் ஹீரோயின் மேல. காமெடியன் சதீஷ், "அப்படியே ஒரு மணிரத்னம் frame போட்டு வெயிட் பண்ணா, பொண்ணு வந்திட போகுது." என்று கூறுகையில் ஹீரோவுக்கு ஒரு நல்லது நடந்துவிடதா என்று மனம் ஏங்குகிறது. திருப்பதிக்கு வந்து மொட்ட போட்டு கொள்கிறேன் சாமி! என்று நம் மனம் பிரத்தனையில் ஈடுபடுகிறது.


நம் பிரத்தனை உடனே நிறைவேற்றி வைக்கிறார் நம்மை கைவிடாத ராகவேந்திரா சாமி. 30 வினாடிகளில் காதலில் விழுவது எப்படி என்று புத்தகத்தையே இயக்குனர் எழுதி இருப்பார் போலும். நிக்கி கல்ராணி ஓடி வருகையில் ராகவா லாரண்ஸுக்கு காதல் வந்துவிடுகிறது. "என்னைய காப்பாத்துங்க" என நிக்கி பயந்து அழ, மறுபடியும் ராகவாவிற்கு  காதல். காமத்துபால் அனைத்தையும் அள்ளி பருகும் விதமாக ஒரு பிண்ணனி இசை வரும் பாருங்க. அதை கேட்டதும், உங்களுக்கு எந்த காதல் உணர்ச்சியும் ஏற்படவில்லை என்றால், நீங்கள் ஒரு ஜடம்.




வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை கண்ணாடி

என்று கண்ணாடி இப்படத்தில் 2nd heroவாக வளம் வந்து இருக்கிறது. கடைசி வரைக்கும் கண்ணாடி, ஹீரோவிடமிருந்து எக்காரணத்துக்கும் பிரிந்து செல்லவில்லை. அதிலும் ஒரு புதுமையை இயக்குனர் புகுத்தியிருக்கிறார் பாருங்க. ஹீரோவின் உள்பனியன் வண்ணத்திலே கண்ணாடி! அகத்தின் அழகு முகத்தில் தெரியும். பனியனின் கலர் கண்ணாடியில் தெரியும் என பழமொழியையே மாற்றி அமைத்திருக்கிறார் மக்கள் இயக்குனர் சாய் ரமணி.

கண்ணாடிக்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்பு உங்களுக்கு இன்னும் புரியவில்லையா? அத்தனைக்கும் ஆசைபடவில்லையா?

இசையமைப்பாளர் அமரேஷ் வீட்டின் வெளியே பாவமாய் கிடந்தன மென்மையான இசை கருவிகளான புல்லாங்குழல், வைலீன் ஆகியவை. drums சிவமணிக்கே சவால் விட்ட மாதிரி இசை முழுக்க 'டக்கு டக்கு டண்டனக்கா டக்கு டக்கு டண்டனக்கா' என்று தான் இருந்தது. ஒரு கட்டத்தில், என் கபாலத்தில் தான் யாரோ இசை மீட்டுகிறார்கள் என்று நினைத்துவிட்டேன். இசை நெஞ்சை தழுவலாம், இங்கே மண்டையே போட்டு தழுவியது.

'ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பது தான் சுகம் சுகம்' பாடலை கேட்டு சமாதியிலிருந்து எம் ஜி ஆர் ஆத்மாவே வெளியே வருவதாக திடிகிடும் தகவல்கள் பல. பாடல் ஆரம்பிக்கும்போது, 'பொழட்சி' என ஒரு சொல் வரும். எந்த இலக்கியவாதியும் பயன்படுத்தாத சொல். இதுக்கு என்ன அர்த்தம் என்று ஆராய்ச்சி செய்கையில் தான் புரிந்தது 'புரட்சி' என்பதை தான் அப்படி பாடியிருக்கிறார் பாடகர். சுக்விந்தர் சிங்-க்குகே சுறுக்குனு குத்தியிருக்கும்.

தொட்டு ஆடலாம். ஆனால், இங்க மக்கள் சூப்பர்ஸ்டார், ஹீரோயினை அடித்து ஆடியிருக்கிறார். அவர் அடித்த அடிகளுக்கு, நிக்கி கல்ராணிக்கு பதில், கொஞ்ச மாவும் தண்ணீரும் வைத்திருந்தால், 547 பூரிகள் நமக்கு கிடைத்திருக்கும்.

கதை திரைக்கதை, காட்சியமைப்பு, நடிப்பு என்று அனைத்தும் ராகவா நடனம் போல் வழுக்கினே போகுது. அதை தொடர்ந்து நாமும் செல்ல, கடைசியில் நமக்கு என்ன ஆகிறது? என்பது தான் இப்படம் நம் அறிவை எட்டி உதைத்து கற்று தந்த பாடம்.

'காருக்கு எதுக்கு அச்சாணி' என வடிவேலு சொன்னதுபோல், இப்படத்துக்கு சத்தியராஜ், கோவை சரளா, சதீஷ், தேவதர்ஷினி என காமெடி பட்டாளம் எதுக்கு? humorக்கே tumor வந்ததுபோல் இருந்த நகைச்சுவைக்கு தான் சமாதி கட்டி, அதுக்கு முன் நாம் அனைவரும் தியானம் செய்வோமாக!



Mar 5, 2017

தமிழ் படம் (குற்றம் 23) ஈரானிய படம் (the salesman)




குற்றம் 23:

கவசகுண்டலத்துடன் பிறந்த கர்ணனையை போல் விஜயகுமார் appointment order கடிதத்துடன் பிறந்தவர் போல. எந்த காவல் அதிகாரி வந்தாலும், கடிதத்தை  நீட்டி, "நீங்க தான் இந்த கேஸ எடுக்கனும்." என சொல்கிறார். 

என்ன சம்பவம்? ஏன் இந்த கொலை நடக்குது? சொந்த அண்ணியே இதில் பாதிக்கபட்டு இருக்கிறார் என்றால்? என்ன நடந்து இருக்கும் என்பதையெல்லாம் காவல் அதிகாரி அருண்விஜய்  கண்டுபிடிக்கிறாரா இல்லையா என்பதே medical crime thriller 'குற்றம் 23' படத்தின் கதை.

பேய் படங்கள் சீசன் முடிஞ்சு இப்போ crime thriller  படங்கள் சீசன் மாதிரி தெரியுது. வரிசையாய் நல்ல படங்கள்- தனி ஒருவன், துருவங்கள் 16. அந்த வரிசையில் ஒரு நல்ல படம். பயங்கரமான திருப்பங்கள் இல்லை என்றாலும், விறுவிறுப்பா நகர்கிறது படம்.

 கிரைம் திரில்லர் வல்லுநர் ராஜேஷ் குமாரின் கைவண்ணத்தில் வந்தது. இப்போதான் கூகல் செய்து பார்த்தேன். 1700 கதைகள் எழுதி இருக்காராம். 450 கதைகள் மட்டும் பாக்கெட் நாவல்களாம். 'குற்றம் 23' படம் பார்க்கும்போது படித்தால் கிடைக்கும் சுவாரஸ்சியம் அப்படியே தெரிந்தது. கதையை, திரைக்கதையாக மாற்றிய இயக்குனர் அறிவழகனுக்கு சபாஷ்! இப்படத்தை 'decent film' என்ற பிரிவில் வகைப்படுத்தலாம். அதிகம் யூகிக்க வேண்டிய காட்சிகள் இல்லை என்றாலும் அவ்வபோது 'அட' என்ற போட வைத்துள்ளார்.

Image result for kuttram 23 scene

அருண் விஜய் ஒரு மொட்டை மாடி காட்சியில் கோபத்துடன் ஒரு மாதிரியா கண்கலங்கி நிப்பார் பாருங்க. அருண் விஜய்க்கு இனியாவது நல்ல படம் வரட்டும், வெற்றி வரனும். கதாநாயகி, காக்க காக்க மாயா போல் இருந்தாலும் (இங்கயும் ஆசிரியர் தான், ஹீரோவிடம் லவ் சொல்வார் ஜீப் பக்கத்தில் நின்று கொண்டு)

அமித், அமிநயா நடிப்பெல்லாம் பிரமாதம். எந்த குறையுமே சொல்ல முடியாத அளவுக்கு நடிகர்களின் தேர்வு.

 பொதுவா லூசு ஹீரோயின்களை தான் தமிழ் படங்களில் பார்ப்போம். லூசு போலீஸ் என்று ஒரு பிரிவு இருக்குதுனா அதுக்கு காரணம் தம்பி ராமய்யா! நகைச்சுவை என்ற பெயரில் முடிந்தவரை சிரிக்க வைக்கிறார்.

கிளைமெக்ஸ் நெருங்கும்போது வரும் 'evidence evidence  சொல்லிதான் இவனுங்களையெல்லாம் விட்டு வைக்குறோம். எதுக்கு?"னு கத்தி ஆவேசப்படும்போது, செம்மயா இருந்துச்சு. ஆனா, வில்லன் ஏன் கொலை பண்றான்னு இன்னும் அழுத்தமா சொல்லியிருக்கலாம். அப்பரம் சில இடத்துல நிறைய 'telling'. கதை எழுதும்போது வாசகர்களுக்கும் சரி, படம் பார்ப்பவர்களுக்கும் 'don't tell. show!' அப்படினு ஒரு விஷயம் இருக்கு.

'குற்றம் 23' என்னதான் சில இடங்களில் பிரமாதமாய் 'show' இருந்தாலும், பாதி நேரம் விசாரணை என்ற பெயரில் வசனம் பேசி கொண்டே இருப்பதால், சற்று சலிப்பு வருவதை தடுக்க முடியவில்லை.

இருப்பினும், 'குற்றம் 23'- படத்தை பார்த்தால், நிச்சயம் ரசிப்பீர்கள் என்பதில் ஐயம் இல்லை.

அப்பர்ம, இந்த படத்தின் promo.



************************************************************************

The salesman:

வேறு மொழிகள் திரைப்படங்கள் பிரிவில் இவ்வருடத்திற்கான ஆஸ்கர் விருதை பெற்ற ஈரானி படம் தான் 'The salesman.' எழுத்து இயக்கம்- Asghar Farhadi. மொத்தமே 11 படங்கள் தான் எடுத்து இருக்கிறார். அதில் இரண்டு படங்கள் ஆஸ்கர் விருது பெற்றவை (விருது பெற்ற இன்னொரு படம் separation- 2011)

குற்றம் 23 போலவே இதிலும் ஹீரோ குற்றவாளியை தேடி போகிறார். ஹீரோ அவ்வூரில் ஒரு ஆசிரியர். பகுதி நேரமாக மேடை நாடக நடிகராக இருப்பார். அவரது மனைவி ஒரு மேடை நாடக நடிகை. இருவரும் புது வாடகை வீட்டுக்கு செல்வார்கள். ஒரு நாள், ஒரு பயங்கரமான சம்பவம் நடந்துவிடும்.

ஹீரோ வெளியே சென்றுவிடுவார். கதவு ஒலி கேட்கும். கணவன் தான் வந்துவிட்டார் என கதவை லேசாக திறந்துவிட்டு,  குளிக்க போவார். யாரோ ஒருவர் வீடு புகுந்துவிட்டு, அந்த நபர் குளியலறைக்கு சென்றுவிடுவார்.
Image result for the salesman iran film
என்ன நடந்தது என்பதை கொடூரமான காட்சிகளால் காட்டாமல்விட்ட இயக்குனருக்கு ஆஸ்கர் விருது கொடுத்ததில் எந்த ஆச்சிரியமும் இல்லை. 'she was assaulted' என்று தான் குற்றவாளியை கண்டுபிடிக்கும்வரை இருக்கும். பாதிக்கப்பட்டவருக்கு தலையிலும் அடி. அதற்கு பிறகு வரும் காட்சிகளில், இவருக்கு என்ன தான் உண்மையில் நடந்து இருக்கும் என படம் பார்ப்பவர்களுக்கு தெரியும். கதாபாத்திரங்களுக்கும் தெரியும். ஆனா, அதை வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள். அந்த ஒரு உணர்வு பாலம்- அற்புதமான திரைக்கதை.

 ஈரானிய படங்கள், பல, ரொம்ப மெதுவா நகரும். பிண்ணனி இசை எதுவுமே இல்லாமல் இருக்கும்.

Image result for the salesman scene
இந்திய படங்களை பார்த்து கெட்டு போன மனசும் புத்தியும், இந்த இடத்துல பிண்ணனி இசையை போட்டிருக்கும்னு வேதாந்தம் பேசியது.  'queen' இந்தி படத்தில் Kangana Ranaut Parisல் இருக்கும்போது இத்தாலிய உணவில் மிளகாய் காரம் சேர்ப்பார். அதற்கு கடைக்காரர் கத்துவார்- எல்லாத்தை இந்திய உணவாய் மாற்றுவது ஏன்?

அப்படி தான் எனக்கு இருந்துச்சு. இசையில்லாமல் படம் எடுப்பது ஈரானிய படம் பாணி. அப்படி இசையே இல்லாம இருந்ததது தான் 'the salesman' படத்தின் வெற்றி. காட்சிகள் பலவும் மனதை பதைபதைக்க வைத்தது. கடைசியில் குற்றவாளியை கண்டு பிடித்துவிடுவார் கணவர். அதில் ஒரு சின்ன திருப்பம்.
இவரா குற்றவாளி என தெரிந்தது எந்த கூச்சலும் இல்லை கத்தலும் இல்லை. ஆனா, படம் பார்ப்பவர்களுக்கும் கட்டாயம் கோபம் வரும் குற்றவாளி மேல். கூடவே பரிதாபம் ஏற்படும்.

இப்படிதான் நடிப்பு, கதையமைப்பு, காட்சிகள், முக்கியமா வசனங்கள் (subtitles) அனைத்தும் உலக சினிமா வரலாற்று பக்கத்தில் கட்டாயம் இடம்பெறும்.