இந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்தவர் srivats. சார், என்னை பழிக்கு பழி வாங்கிவிட்டார்!!:) கீழ்வரும் கேள்விகளுக்கு பதில் சொல்லனுமாம்!
1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
இரண்டு மூனு பெயரை சின்ன பேப்பரில் எழுதி போட்டு கடவுள் முன் வைத்தார்களாம். என் அக்கா தான் ஒரு பெயரை எடுத்தாள். அந்த பெயர்-காயத்ரி. அப்பரம் வலைப்பூ ஆரம்பிக்கும்போது, புனைபெயரில் எழுத வேண்டும் என்ற ஆசை(பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் புனைபெயரில் எழுதுவதால் வந்த தாக்கம்...ஹிஹி...) ஆக ரொம்ப யோசிச்சு தமிழ்மாங்கனின்னு வச்சேன்.(மாம்பழம் பிடிக்கும் என்பதால்)
ஆக, எனக்கு 2 பெயருமே ரொம்ப பிடிக்கும். அப்பரம் காயத்ரி என்ற பெயர் பிடித்தமைக்கு இன்னொரு காரணம் சிம்ரன். ஆமாங்க....நான் அகில உலக சிம்ரன் ரசிகர் மன்றத்தின் தலைவர்!! சிம்ரன் நடித்த ஜோடி மற்றும் சேவல் படங்களில் அவரது பெயர் 'காயத்ரி'!!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
2. கடைசியாக அழுதது எப்பொழுது?
நேத்து....
3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
பிடிக்கும்.
4. பிடித்த மதிய உணவு என்ன?
கோழி பிரியாணி, கோழி சுக்கா, கோழி வறுவல்....
5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
ம்ம்ம்...மனசுக்கு தோணிச்சுன்னா, கண்டிப்பா நண்பரா ஆயிடுவேன்.
6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
கழிவறையில் குளிக்க பிடிக்கும்! என்னய்யா கேள்வி இது......
7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
முகத்தை.
8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்சது: ரொம்ப லொள்ளு பேசுவேன். கொஞ்சம் நல்லா எழுதுவேன்.நிறைய கனவுகள் காண்பது
பிடிக்காதது: கோபம், too sensitive
9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
இந்த கேள்விக்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்!pass!
10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
அப்படி யாரும் இல்ல. தனிமை ரொம்ப பிடிக்கும்.
11. இதை எழுதும் போது என்ன வண்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
நீல கலர்.
12. என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
பார்பது : வேற என்ன? கணிணிதான் :)
கேட்பது: ஒன்னுமில்ல.
13. வண்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
orange. my favourite colour!!!!!!
14. பிடித்த மணம்?
தமிழ்மணம்(அட்ரா அட்ரா அட்ரா......) ஹாஹா...சரி சரி, பிடித்த மணம்....கோழி குழம்பு வாசம்.
15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
கோபி: நிறைய எழுத ஆசைப்படுபவர். நல்ல உற்சாகம் கொடுப்பவர்.::)
16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
அவர் ஒரு ஆங்கில கவிதை எழுதினார். simply superbbb!! http://stavirs007.blogspot.com/2009/06/us-that-never-was.html
17. பிடித்த விளையாட்டு?
கிரிக்கெட். we eat, drink, talk,breathe cricket.(not like dhoni) ஆஹா...என்னை அறியாமல் வந்துவிட்டது:)
18. கண்ணாடி அணிபவரா?
perfect eyesight எனக்கு.
19. எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?
romantic comedies, thriller, suspense, இந்தி படங்கள் எப்படி இருந்தாலும், பார்த்துவிடுவேன்.
20. கடைசியாகப் பார்த்த படம்?
drag me to hell- வயிறு, கண் எல்லாம் கலங்கிபோச்சு. பேய் படம்ங்க அது! ராத்திரி தூக்கம் வரல!
21. பிடித்த பருவ காலம் எது?
பள்ளி காலம் தான்!
22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
self-made man by norah vincent.
23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
இல்லை.
24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்தது: சத்தம்.... எப்படிங்க பிடிக்கும்?
பிடிக்காதது: போக்குவரத்து சத்தம்
25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
new zealand.
26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
சுடு தண்ணி சூப்பரா போடுவேன். அப்பரம் என்னய்யா கேள்வி இது...தனித்திறமை...keyboard வாசிப்பேன்...:)
27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
ஆண்களின் ஆதிக்கம்
28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
ஈகோ தான்!
29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
queenstown in new zealand. ஆனால் நீண்ட நாள் கனவு- mumbai and new york செல்ல வேண்டும் என்று!
30. எப்படி இருக்கணும்னு ஆசை?
bmw car, three-storey bungalow house with mini theatre, swimming pool and a mini gym. mthly income generated: US$30,000
ஹாஹா...எப்படி?
31. மனைவி/கணவன் இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
நான் இப்ப தான் எல் கே ஜி முடிஞ்சு யூகேஜி போறேன்.:)
32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
ஒரு வரியில் சொல்ல முடியாதது தான் வாழ்க்கை
(எப்படி காயத்ரி உனக்கு மட்டும் இப்படிலாம் தோணுது....அட்ரா அட்ரா அட்ரா!! ஹிஹி)
Showing posts with label தொடர்பதிவு. Show all posts
Showing posts with label தொடர்பதிவு. Show all posts
Jun 16, 2009
Jun 9, 2009
கனா கண்ட காலங்கள்(தொடர் பதிவு)
இந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்த வானவில் வீதி கார்த்திக் அவருக்கு ஒரு நன்றி. விடுமுறை நாட்களில் நடந்த சுவாரஸ்சியமான நிகழ்ச்சிகள், விளையாடிய விளையாட்டுகள் பத்தி எழுதவேண்டுமாம். என்னை பொருத்தவரை விடுமுறையில் ஜாலியாக செலவழித்த காலம் நிறைய உண்டு. அது எப்போது என்றால்? ஒவ்வொரு முறையும் பெற்றோர்கள் வெளிநாடு செல்லும்போது தான். ஹாஹாஹா.... அது என்னமோ தெரியலைங்க..... ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாலி,இந்தியா, மலேசியா போன்ற நாடுகளுக்கு சென்று இருந்தாலும்,
"டாடி மம்மீ வீட்டில் இல்ல" காலம் தான் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். உண்மையை சொல்லிட்டேன் அவ்வளவு தான்! அதிகபடியான சுதந்திரம் கிடைக்கும். நாள் முழுவதும் டீவி, கணினி, படங்கள் என்று ஜாலியாக இருக்கலாம். பணம் கொடுத்துவிட்டு போவார்கள். ஆக, எங்க வேண்டும் என்றாலும் போய் நல்லா வாங்கி சாப்பிடலாம்!
குறிப்பா, நண்பர்களோடு வெளியே செல்லலாம் எந்த ஒரு permission வாங்கும் session இல்லாமல்.
------------------------------------------------------------------------------
இந்தியாவிற்கு போன சில பயணங்கள் ஜாலியாக இருந்தது. சின்ன வயதாக இருக்கும்போது ஜாலியாக இருக்கும், ஏன் என்றால் நம்மை அதிகமாய் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். இப்போது போனால் அவ்வளவு தான், நம்ம வயசை தெரிந்த மறுநொடியே வெறுப்பேத்தும் அந்த கேள்வியை கேட்பார்கள். :(
சின்ன வயதாக இருந்தபோது, மாமா மகள், அவள் தம்பி, என் அக்கா, பக்கத்து வீட்டு பசங்களுடன் கில்லி, கிரிக்கேட் ஆடிய காலம் எல்லாம் உண்டு. சில சமயங்களில் கிரிக்கேட் பந்து பக்கத்து வீட்டில் விழுந்துவிடும். அவர்களிடம் கெஞ்சி கூத்தாடி மறுபடியும் பந்தை வாங்குவோம். மறுபடியும் அவ்வாறே நடக்கும். ஒரு சில சமயம் அவர்களுக்கு எரிச்சல் வந்து பந்தை தரமாட்டார்கள். பந்து இல்லாமல் கொட்டாங்குச்சி வச்சு விளையாடுவோம்!:)
------------------------------------------------------------------------------------------
ஒரு முறை அப்பாவின் நண்பர் குடும்பத்தோடு மலேசியா சென்றோம். அப்போது எனக்கு 8 வயது இருக்கும். எங்களது அறைகளில் ஒரு விளையாட்டு விளையாடினோம். பேப்பர்களில் சில விஷயங்களை எழுதுவோம். அதை செய்து காட்ட வேண்டும். நான் எடுத்த பேப்பரில்- "ஆட வேண்டும்" என்று இருந்தது. எனக்கு ரொம்ப ஒரு மாதிரியாய் போச்சு. ரொம்ப கூச்சமா இருந்துச்சு. அடம்பிடித்தேன் ஆட மாட்டேன் என்று. கடைசியில் அனைவரின் கண்களை மூட சொன்னேன்... 5 வினாடி ஆடிய பிறகு உட்கார்ந்து கொண்டு, "நான் ஆடி முடிஞ்சுட்டேன். கண்ண திறங்க." என்றேன்:)
------------------------------------------------------------------------------------------
மற்றபடி விடுமுறைகளில் நிறைய படம் பார்ப்பேன். இந்த விடுமுறையில் கிட்டதட்ட 10த்துக்கு மேற்பட்ட ஹிந்தி படங்களை பார்த்து இருப்பேன்:)
-----------------------------------------------------------------------------------------
இத்தொடர்பதிவுக்கு கோபி, srivats, மற்றும் ரீனா அவர்களை அழைக்கிறேன்....வாங்கோ வாங்கோ வாங்கோ....
"டாடி மம்மீ வீட்டில் இல்ல" காலம் தான் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். உண்மையை சொல்லிட்டேன் அவ்வளவு தான்! அதிகபடியான சுதந்திரம் கிடைக்கும். நாள் முழுவதும் டீவி, கணினி, படங்கள் என்று ஜாலியாக இருக்கலாம். பணம் கொடுத்துவிட்டு போவார்கள். ஆக, எங்க வேண்டும் என்றாலும் போய் நல்லா வாங்கி சாப்பிடலாம்!
குறிப்பா, நண்பர்களோடு வெளியே செல்லலாம் எந்த ஒரு permission வாங்கும் session இல்லாமல்.
------------------------------------------------------------------------------
இந்தியாவிற்கு போன சில பயணங்கள் ஜாலியாக இருந்தது. சின்ன வயதாக இருக்கும்போது ஜாலியாக இருக்கும், ஏன் என்றால் நம்மை அதிகமாய் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். இப்போது போனால் அவ்வளவு தான், நம்ம வயசை தெரிந்த மறுநொடியே வெறுப்பேத்தும் அந்த கேள்வியை கேட்பார்கள். :(
சின்ன வயதாக இருந்தபோது, மாமா மகள், அவள் தம்பி, என் அக்கா, பக்கத்து வீட்டு பசங்களுடன் கில்லி, கிரிக்கேட் ஆடிய காலம் எல்லாம் உண்டு. சில சமயங்களில் கிரிக்கேட் பந்து பக்கத்து வீட்டில் விழுந்துவிடும். அவர்களிடம் கெஞ்சி கூத்தாடி மறுபடியும் பந்தை வாங்குவோம். மறுபடியும் அவ்வாறே நடக்கும். ஒரு சில சமயம் அவர்களுக்கு எரிச்சல் வந்து பந்தை தரமாட்டார்கள். பந்து இல்லாமல் கொட்டாங்குச்சி வச்சு விளையாடுவோம்!:)
------------------------------------------------------------------------------------------
ஒரு முறை அப்பாவின் நண்பர் குடும்பத்தோடு மலேசியா சென்றோம். அப்போது எனக்கு 8 வயது இருக்கும். எங்களது அறைகளில் ஒரு விளையாட்டு விளையாடினோம். பேப்பர்களில் சில விஷயங்களை எழுதுவோம். அதை செய்து காட்ட வேண்டும். நான் எடுத்த பேப்பரில்- "ஆட வேண்டும்" என்று இருந்தது. எனக்கு ரொம்ப ஒரு மாதிரியாய் போச்சு. ரொம்ப கூச்சமா இருந்துச்சு. அடம்பிடித்தேன் ஆட மாட்டேன் என்று. கடைசியில் அனைவரின் கண்களை மூட சொன்னேன்... 5 வினாடி ஆடிய பிறகு உட்கார்ந்து கொண்டு, "நான் ஆடி முடிஞ்சுட்டேன். கண்ண திறங்க." என்றேன்:)
------------------------------------------------------------------------------------------
மற்றபடி விடுமுறைகளில் நிறைய படம் பார்ப்பேன். இந்த விடுமுறையில் கிட்டதட்ட 10த்துக்கு மேற்பட்ட ஹிந்தி படங்களை பார்த்து இருப்பேன்:)
-----------------------------------------------------------------------------------------
இத்தொடர்பதிவுக்கு கோபி, srivats, மற்றும் ரீனா அவர்களை அழைக்கிறேன்....வாங்கோ வாங்கோ வாங்கோ....
Subscribe to:
Posts (Atom)